Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label மீராஷாஹிப் UPSC. Show all posts
Showing posts with label மீராஷாஹிப் UPSC. Show all posts

அதிரைச் சகோதரர் ஐ.ஏ.எஸ். ஆகிறார் (இன்ஷா அல்லாஹ்) 17

அதிரைநிருபர் பதிப்பகம் | September 25, 2013 | , , , , ,

அதிரை மக்களின் உயர்கல்வி, அரசு வேலைவாய்ப்பு என்ற நீண்டதொரு திட்டத்தை மையமாக கொண்டு அதிரைநிருபர் வலைத்தளம் இரண்டு வருடங்களுக்கு முன்னர் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடத்தியது அடுத்தடுத்த வருடங்களில் சகோதர அமைப்புகள் அதனை முன்னெடுத்துச் சென்றனர்.

நமது கனவு நனவாகும் தருணம் கைகூடி இருக்கிறது இந்தச் சிறப்பினை தந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் (அல்ஹம்துலில்லாஹ்) !

சென்னை மவுன்ட்ரோட்டில் அமைந்திருக்கும் மக்கா மஸ்ஜித் நிர்வாகத்தால் நடத்தப்படும் அழகிய கடன் அறக்கட்டளை எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் நமது சமுதாய மக்களுக்கென்று அரசு உயர் பதவிகளுக்கான பயிற்சியை 2012ம் வருடம் முதலே அளித்து வருவதை நாம் நன்கறிவோம்.

சென்னை புரசைவாக்கத்தில் வசிக்கும் பொறியியல் பட்டதாரியான அதிரை சகோதரர் J.முஹம்மது மீராஷாஹிப் (தகப்பனார் பெயர் : M.ஜமால் முஹம்மது) அழகிய கடன் ஐ.ஏ.எஸ் அகடமியில் பயிற்சி பெற்ற இவர் UPSC மற்றும் TNPSC Group-1 தேர்வுகளில் தேர்ச்சி பெற்று இருக்கிறார். அடுத்த வருடம் 2014 நமதூர் சகோதரர் I.A.S.ஆக இருக்கிறார் இன்ஷா அல்லாஹ் !

The Hindu ஆங்கில நாளிதழ் செய்தி : http://www.thehindu.com/todays-paper/mosque-helps-students-crack-ias-exam/article5143672.ece

NDTV ஆங்கில செய்தி தொலைகாட்சி காணொளி : http://www.ndtv.com/video/player/news/a-mosque-in-chennai-which-helps-muslim-men-fulfill-the-ias-dream/291261

வாழ்த்தி வரவேற்போம் ! மேலும் வெற்றிகள் தொடரவும், நம் சமுதாய நலனுக்கு எல்லா வகையிலும் பயனளிக்கும் சேவைகள் செய்ய எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக !

அதிரைநிருபர் பதிப்பகம்
பரிந்துரை : குதுபுதீன் அஹ்மது ஜலீல் (குதுப்)


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு