Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label கொடைக்கானல். Show all posts
Showing posts with label கொடைக்கானல். Show all posts

பேசும் படம் - தொடர்கிறது... 23

அதிரைநிருபர் பதிப்பகம் | September 11, 2014 | , , ,

அதிரைநிருபர் அவ்வப்போது அசைபோடும் அழகியலோடு அதன் தனித் தன்மையான மூன்றாம் கண்களோடு பேசும் கலைக்கும் மேடை அமைத்துக் கொடுத்து அவைகள் ஒவ்வொன்றுக்கும் கிரீடமே (கிரவ்ன்) வைத்துப் பார்ப்பதில் உவகை கொள்கிறது...!

அந்த வரிசையில் விழியால் மொழி மாற்றம் செய்து தனக்கு பிடித்த இடங்களை இடமாற்றம் செய்யாமல் இதயத்தில் இருப்பிடம் கொடுக்க வைக்கும் அற்புதமான கைவண்ணத்திற்கு சொந்தக் காரரான அதிரைநிருபரின் 'மூண்றாம் கண்' Sஹமீத் அவர்களின் கிளிக்ஸ் இனி தொடர்கிறது..


அனல் பறக்கும் கோடைச் சூடு அரபுநாடுகளை விட்டு அகல மறுக்கும் இந்த சூழலில் குளிருக்கு முன்னரே குளிர் காய ஏற்ற தீப்பிழம்பு எப்படி எழுந்து நிற்க வேண்டுமென்று சொல்லிக் காட்டுகிறது.


மொட்டுக்கள் குத்தி வைத்திருக்கும் அழகு காது குடையச் சொல்லும் ரீங்காரம்.


மலைகளின் இடுக்கில் தவழும் தண்ணீர், அந்த வானாமோ அதனை தனது அழகை சரிபார்த்துக்கொள்ள விரிக்கப்பட கண்ணாடியாக்கிக் கொண்டது ! சாரலும் சத்தமில்லாமல் சம்மதம் தெரிவிக்கிறது.


குளிருக்கு ஆவி புடிக்க போர்த்திய வெள்ளிப் போர்வையை கழட்டி வீசிவிட்டு ஆசுவாசப் படுத்திக் கொள்கிறது....


ஆகாயம், மலை, இலைகளில்லாத குச்சிகள், மரம், புல் இதெல்லம் கவிஞர்களுக்குத்தான் கருவறையைத் காட்டும்.


அழகிய குடில், ஆயிரம் ஏசி போட்டு அடுக்கு மாடியில் படுத்து உறங்கினாலும் அங்கே வராத தூக்கமும் சுகமும் இங்கே மண்டியிட்டு மயக்கியெடுக்கும்...

'புகை' படங்கள் : Sஹமீது

'காக்கை'யாரின் ஆசை நிறைவேறியது ! [பேசும் படம்] 12

அதிரைநிருபர் பதிப்பகம் | August 11, 2014 | , , , , ,

இயற்கையோடும் இயல்போடும் இருந்து வந்த மானிடன், இயலாமையை பறைசாற்ற ஆயிரம் காரணங்களை அள்ளி வீசிக் கொண்டுதான் இருக்கிறான் ! அழகை ரசிக்க பெருங்கூட்டம் பாலினம் மட்டுமே சரி என்று மூழ்கியிருக்கும் இன்றையச் சூழலில் இறைவனின் படைப்புகளில் ஏராளமான அழகியலை ரசிக்க பொறுமையும் தெளிந்த சிந்தனையும் வேண்டும்.

மீண்டும் பேசும் படம் தொடர்கிறது....


ஒரே இடத்தில் நின்று கொண்டு மனித இனம் வாழ பிராண வாயுவை இந்த மரங்கள் அள்ளி வழங்கிக் கொண்டுள்ளது மனிதன் பல இடங்களுக்கும்  நடமாடிக்கொண்டு மரங்களை அழித்துக் கொண்டு வருகின்றான்.


இதுபோன்ற இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் அதிரைநிருபரின் இதமான வாசகர்கள் அனைவரும் ஒரு நாளைக்கு ஒன்று கூட  வேண்டும்.


வியக்க வைக்கும் மலையும், மழை மேகங்களும் கண்ணுக்கு மட்டும் குளிர்ச்சி அல்ல உடம்புக்கும் குளிர்ச்சிதான்.


மணிப்புறா  இங்கே  மாடப்புறா எங்கே (யாரோ சுட்டுட்டாங்கலாம் )!


"எல்லாத்துக்கும் குளோசப்  ஷாட் போடுறீங்க எங்களுக்கு ஒரு குளோசப் ஷாட் போட்டா என்னான்னு" 'காக்கை'கள் சங்கத்தில்  இருந்து  ஒரு கோரிக்கை வந்தது கோரிக்கையை நிவர்த்தி செய்தாச்சு.

Sஹமீது

பேசும்படம் :: பூக்களை கொல்லாதீர் ! 22

அதிரைநிருபர் பதிப்பகம் | July 30, 2013 | , , , ,

அதிரைநிருபரின் எழில் எடுத்துவைத்த கருத்தாடல் ஒன்றில், 'எழுதுவது ஒரு கலை, அதனை சிலர் செய்வதோ கொலை' என்றார். எழுதுவதில் மட்டுமா ? எடுக்கும் படங்களையும் கலை என்று சொல்லி 'கொல்லும்' படங்களையும் பார்க்கத்தான் செய்கிறோம் ! சற்றே இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் பூக்களை எடுத்து கவிஞர்களுக்கும், கட்டுரையாளார்களுக்கும், வாசகர்களுக்குக்கும் அவர்களின்  பார்வையோடு இருக்க விருந்தொன்று பகிர்ந்தளிக்கிறேன் இஃப்தாருக்குப் பின்னரே, இனி உங்கள் சாய்ஸ் !



காகிதப் பூக்களை கசக்கிப் போடவைக்கும் கொசுவங்களுடன், யார் வீட்டு முற்றத்திற்கு இப்படி வெளிச்சம் போடுகிறது... !


சொட்டும் துளிர் நீருடன் மொட்டும் கொள்ளும் திட்டு முட்டு !




இப்பொழுதெல்லாம் வண்டுகள் பூக்களை விட்டுவிட்டு தீன் எனும் தேன் தேடிச் சென்று விட்டன போலும் ஈக்கள்தான் பூக்களின் மீது அமர்ந்து நாங்களும் தேன் குடிப்போம்ல என்று பாவனை செய்கிறது !




தலையில் வைக்க தலைவியை தேடும் தலைவன் இருந்தது அந்தக்காலம் இப்போதெல்லாம் அப்படி இல்லைங்க ! மாறாக தலைவியின் காலில்தான் போடுகிறார்கள் !




எங்களை கிள்ளி கூஜா தேடிச் சொருகும் மனிதன் பின்னர் அதனை மட்டும் தூக்காமல் இருந்தால் சரி.



பூவடை சுட்டு நடுவில் வைத்தது போன்ற இந்த பூவின் சாடை எப்படி !?



பார்வையை சீவியெடுக்கும் பரவசமான பூவின் தோற்றம் !





பூவுக்குத் தெரியுமா மூன்றாம் கண் படம் பிடிப்பது !?




51:58   إِنَّ اللَّهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِينُ
51:58. நிச்சயமாக அல்லாஹ்தான் உணவு அளித்துக் கொண்டிருப்பவன்; பலம் மிக்கவன்; உறுதியானவன்.





 41:10   وَجَعَلَ فِيهَا رَوَاسِيَ مِن فَوْقِهَا وَبَارَكَ فِيهَا وَقَدَّرَ فِيهَا أَقْوَاتَهَا فِي أَرْبَعَةِ أَيَّامٍ سَوَاءً لِّلسَّائِلِينَ

41:10. அவனே, அதன் மேலிருந்து உயரமான மலைகளை அமைத்தான்; அதன் மீது (சகல விதமான) பாக்கியங்களையும் பொழிந்தான்; இன்னும், அதில் அவற்றின் உணவுகளை நான்கு நாட்களில் சீராக நிர்ணயித்தான்; (இதைப் பற்றி) கேட்கக் கூடியவர்களுக்கு (இதுவே விளக்கமாகும்).









இனி உங்களனைவரின் ரசனைக்கு விட்டுவிடுகிறேன் இனி அதனை என்னைப் போன்றோரின் வாசிப்புக்கும் வாரி வழங்குங்கள்.

Sஹமீது


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு