Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மலையடிவாரத்தில் ஒரு மலர்ச் சோலை... 5

அதிரைநிருபர் பதிப்பகம் | November 30, 2014 | , ,


ஆண்டுத்  தேர்வை  முடித்த  நாங்கள்
ஆர்வத்  தோடே   எதிர்பார்த்துத்
தூண்டிக்  கொண்டே  இருந்த  ஊட்டித்
துரிதப்  பயணம்  மேற்கொண்டோம்!

சின்னப்  பிள்ளைக்  கூட்டத் தோடு
‘சிக்சிக்’  என்று  புகைவண்டி
முன்னும்  பின்னும்  எஞ்சின்  கோர்த்து
முன்னே  றிற்று  மலைமேலே!

கண்ணுக்  கினிய  இயற்கை  எழிலின்
காட்சிகள்  எல்லாம்  பாதையிலே
எண்ணக்  குறையா  அளவில்  எங்கள்
இதயம்  மகிழச்  செய்தனவே!

கூட்டிக்  கொண்டே  மலைமேல்  ஏறிக்
கூவிச்  சென்ற  புகைவண்டி
ஊட்டிஸ்  டேஷன்  வரவே  எம்மை
உவகை  கொள்ளச்  செய்ததுவே!

கண்ணைக்  கவரும்  மலர்க்கண்  காட்சி
கண்டு  மகிழ்ந்தோம்  ஊட்டியிலே
வண்ணக்  கலவைத்  தூரிகை  கொண்டு
வல்லோன்  வரைந்த  படமாகும்!

வீட்டை  நினைத்தோம்  எம்மை  மறந்தோம்
வெளிச்சம்  குறைந்த  நேரத்தில்
ஊட்டியை  விட்டுப்  புகைவண்  டியிலே
உடனே  ஏறிப்  புறப்பட்டோம்!

அதிரை அஹ்மது

வரலாறுகள்! வழக்குகள்! வல்லரசுகள்! வடிக்கப்படும் இரத்தம்!

பாலஸ்தீனம்...

18

அதிரைநிருபர் பதிப்பகம் | November 29, 2014 | , , ,

தொடர் - பகுதி பதினெட்டு

ஒரு சிறிய இடைவேளையில் பாலஸ்தீனப் பகுதிகள் துருக்கியின் கைகளை விட்டுப் போய்விட்டு மீண்டும் துருக்கியின் கைகளுக்குள் வந்த செய்தியை கடந்த அத்தியாயத்தில் கண்டோம்.

அதே நேரம், பாலஸ்தீன ஆதிக்கப் போட்டியின் நாடகத்தில் தலை காட்டியது மட்டுமல்லாமல் பல அழிக்க முடியாத அடையாளங்களையும் விட்டுப் போன எகிப்தின் மன்னர் முகமது அலியின் வீரதீரங்களும் வெளிஉலகுக்கு- குறிப்பாக ஐரோப்பிய அரசுகளுக்குத் தெரிய ஆரம்பித்தன. அவரைக் கொஞ்சம் தலையில் தட்டி வைக்காவிட்டால் இன்னொரு சலாஹுதீன் உருவாகிவிடுவார் என்ற அச்சமும் துருக்கிக்கும் அதற்கு ஆதரவாக இந்த ஆதிக்கப் போட்டியில் தலைகாட்டிய பிரிட்டிஷ் அரசுக்கும் ஏற்பட்டது. 

திடீரென்று ஐரோப்பிய அரசுகளுக்கு பாலஸ்தீனத்தின் மீது ஒரு வித ஈர்ப்பு வர என்ன காரணம்? 

இடையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக, பாலஸ்தீனை விட்டு வெளியேறிய யூதர்கள் பிரிட்டனுக்கும், பிரான்சுக்கும் , ரஷ்யாவுக்கும் சென்றார்கள். யூதர்கள் எங்கே போனாலும் அங்கெல்லாம் அந்நாட்டின் ஆட்சியாளர்களின் கவனத்தைக் கவரும் வகையில் தங்களின் நடவடிக்கைகளை அமைத்துக் கொள்வது அவர்களின் இரத்தத்தில் ஊறிய விஷயம்; விஷம். 

அதுமட்டுமல்லாமல், அவர்கள் சென்ற நாடுகளிலெல்லாம் தங்களுக்கு குடியுரிமை பெற்றுக் கொள்வதற்காக அரசின் அங்கங்களுக்கு பணத்தை தாராளமாக வாரி இறைத்தார்கள். விசாவுக்குப் பணம் கொடுக்கும் பழக்கத்தை ஆரம்பித்து வைத்தவர்களே யூதர்கள்தானோ? உலக வரலாறு கணக்கிட்டுச் சொல்கிறது உலகிலேயே அரசு அதிகாரிகளை பணம் கொடுத்து வாங்கும் வழக்கத்தை ஆரம்பித்து வைத்தவர்களே யூதர்கள்தானாம். காரணம் அவர்களுக்குத் தேவை அது எந்த நாடாக இருந்தாலும் வாழ்வதற்கு ஒரு இடம். இதன் காரணமாக இவர்கள் குடியேறிய நாடுகளிலெல்லாம் சமுதாயத்திலும் அரசியலிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டன.

தனது நாடு பிடிக்கும் ஆசையின் அடிப்படைக் காரணத்தை மனதில் வைத்து யூதர்களை, ஆதரிக்கத் தொடங்கினார் ஒருவர் - அவர் ஒரு மாவீரர் - அவர் பெயர் நெப்போலியன். பிரான்சு நாட்டின் சர்வாதிகாரியாகத் திகழ்ந்த அதே நெப்போலியன்தான். குடியேற்ற உரிமை –வழிபாட்டு உரிமை ஆகியவை அனைத்தும் யூதர்களுக்கு வழங்கப் பட்டாலும் யூதர்களை National என்கிற அந்தஸ்து கொடுக்காமல் Aliens என்கிற பிற நாட்டிலிருந்து பிழைக்க வந்தவர்கள் என்கிற அந்தஸ்தையே நெப்போலியன் கொடுத்தார். 

ஆனாலும் அவர்களின் தாய்நாட்டைக் குறிப்பிடும்போது அவர்கள் பாலஸ்தீனர்கள் என்கிற தகவல் அரசு ஆவணங்களில் குறிப்பிடப்பட்டது. உண்மையில் யூதர்களை Stateless என்கிற அந்தஸ்திலேதான் குறிப்பிடப்பட்டு இருக்க வேண்டும். யூதர்களை பாலஸ்தீனத்திலிருந்து வந்தவர்கள் என்று நெப்போலியனின் பிரான்சு அரசு குறிப்பிட்டது மனரீதியாக யூதர்களுக்கு ஒரு பலத்தைக் கொடுத்தது. தங்களுக்காக படைக்கப்பட்டதாக தங்களின் வேதங்கள் கூறுவதை பிரான்சு அரசாங்கம் ஆவணப் படுத்தி அங்கீகாரம் தந்ததாக யூதர்கள் உணர்ந்தார்கள். இந்தச் செயல் அவர்களுக்கு ஒரு மனத்தளவில் துணிச்சலைக் கொடுத்தது. 

உலகில் தாங்கள் உதைபடாத இடங்களே இல்லை என்ற நிலையில் அன்னியர் என்றாவது நெப்போலியன் தந்த அடைக்கலம் ஒருபுறம் ; அந்த அடைக்கலத்தின் பின்னணியில் தங்களுக்கும் ஒரு நாடு உலகில் உண்டு என்று ஒரு வலுவான நாடு ஒப்புக் கொண்ட நிலை ஒருபுறமாக யூதர்கள் தங்களின் மகிழ்ச்சிப் பக்கத்தை திறந்து வைத்தார்கள். 

அதே நேரம் நெப்போலியனுக்கும் ஒரு உள் நோக்கம் இருந்தது. அது என்னவோ தெரியவில்லை ஜெருசலத்தின் மீது அனைவருக்கும் காரணங்கள் நிரம்பிய காதல் என்றால் நெப்போலியனுக்கு ஏக்ர் என்கிற சிரியாவின் பகுதியைச் சேர்ந்த ஒரு கோட்டையின் மீது ஆசை. ( இந்த ஏக்ர் பற்றி சிலுவைப் போர்கள் பற்றி நாம் படித்த போது பார்த்து இருக்கிறோம். சலாஹுதீன் அய்யூபி அவர்கள் ஒரு கட்டத்தில் இந்தக் கேட்டையை விட்டுக் கொடுத்து கிருத்துவர்களுடன் சமாதான உடன்படிக்கை செய்துள்ளார் என்று பார்த்து இருக்கிறோம் ) 

இந்த ஏக்ர் கோட்டையை வெற்றி கொள்வதற்கு நெப்போலியனுக்கு ஏதோ ஒரு திட்டம் இருந்தது. அந்த திட்டம் மற்றும் ஆசையின் அடிப்படை ஜெருசலம்தான். ஏக்ர் கோட்டையை முதலில் கைப்பற்றி அங்கு இடத்தைப் பிடித்துவிட்டால் ஜெருசலத்தின் மடத்தையும் சுலபமாகப் பிடித்து பிரான்சுடன் இணைத்துக் கொள்ளலாம் என்பது நெப்போலியனின் நினைப்பு. 

தனது இந்த ஆசைக்கு யூதர்கள் உதவுவார்கள் என்பது நெப்போலியன் போட்ட கணக்கு. இதற்காக யூதர்களுக்கும் நெப்போலியனுக்கும் ஒரு கொடுக்கல் வாங்கல் கணக்கு இன்றைய அரசியல் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு கூட்டணி போல ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது. என்னவென்றால் சிரியா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் தன்மைகளை அறிந்த யூதர்கள் நெப்போலியனுக்கு படையெடுப்புக்கு உதவ வேண்டும்; அதற்கு பதிலாக அவர்களது சொந்த நிலத்தை துருக்கியர்களிடமிருந்து மீட்டுத்தர நெப்போலியன் உதவுவார் என்பதே அந்தத் தொகுதி உடன்பாடு. உண்மையில் ஜெருசலம் மீட்கப்பட்டால் அங்கு யூதர்களை குடியமர்த்திவிட்டு அதை பிரான்சின் கட்டுப் பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டுமென்பதே நெப்போலியனின் உள்மனதில் அடித்துக் கொண்டிருந்த ஆசை அலைகள்.

ஆகவே, பாலஸ்தீனம் யூதர்களின் சொந்த நிலம் என்பதும் அதை மீட்டு உலகெங்கும் சிதறிக் கிடக்கும் அவர்களை தங்களது சொந்த நிலத்தில் குடியமர்த்த வேண்டும் என்கிற கருத்துகளுக்கான அரிச்சுவடிக்கு ஆனா ஆவன்னா போட்டது நெப்போலியனின் பிரான்சு அரசு.

நெப்போலியன் திட்டமிட்டபடி, சிரியாவின் எல்லைக்குட்பட்ட பகுதிகளின் மீது படையெடுத்து ஏக்ர் கோட்டையைக் கைப்பற்ற வந்தார். யூதர்களுக்கு நெப்போலியன் போட்ட பிஸ்கட்டுத் துண்டுகளுக்கு வாலாட்டி, அவரது படையில் பல ஆயிரம் யூதர்களும் அணிவகுத்து வந்தனர். அவர்கள் எதிர்த்து நின்றது யாரை? எந்த துருக்கிய அரசு யூதர்களுக்குத் துன்பம் வந்த நேரத்தில் அவர்களை அரவணைத்துக் காப்பாற்றியதோ அந்தத் துருக்கிய அரசை.

என்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டு; உய்வில்லை 
செய்நன்றி கொன்ற மகற்கு.

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உணடல்லவா? துருக்கி அரசு தனக்கு ஆதரவு கேட்டு பிரிட்டனை அணுகியது. 

ஒரு புறம் நெப்போலியன் – யூதக் கூட்டணி அடங்கிய தேசிய ஜனநாயக முன்னணி ; மறுபுறம் துருக்கி மற்றும் பிரிட்டிஷ் படைகள் அடங்கிய ஐக்கிய முன்னணி. போரின் விளைவு துரோகிகளுக்குத் தோல்வி. நெஞ்சை நிமிர்த்திவந்த மாவீரன் நெப்போலியன் சூடு கண்ட பூனையாக வாலைச் சுருட்டிக் கொண்டு ஓடவேண்டிய நிலை ஏற்பட்டது. பாலஸ்தீனத்தின் இந்த வரலாற்றில் இப்போதுதான் பிரிட்டனின் தோற்றத்தை (Appearance) நாம் குறிப்பிட்டு இருக்கிறோம்.

ஆம்! இந்த நெடிய வரலாற்றின் சகுனியாகவும் சூத்திரதாரியாகவும் இனி மாற இருக்கிற பிரிட்டன் இப்போது நெப்போலியனைத் தோற்கடிக்கவே துருக்கிக்குத் துணை நின்றது. நெப்போலியனை வென்று வீழ்த்தியும் காட்டியது. 

தோற்று பிரான்சுக்கு ஓடிய நெப்போலியனுக்கு இனி சிரியாவும் ஏகர் கோட்டையும் ஒரு நிறைவேறாத கனவாகத் தோன்றியது. அதனால் அவர் இதுவரை யூதர்களுக்கு செய்துவந்த உதவிகள் படிப்படியாக நிறுத்தப்பட்டன. ஆகவே யூதர்களின் நிலைமை ‘ உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணா’ என்கிற நிலைமைதான். 

அடுத்து மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு எங்கே போகலாமென்று எண்ணி இருந்த யூதர்களின் இரத்தம் ரஷ்யாவிலும் சிந்தப் பட வேண்டுமென்பது இறைவன் அவர்களுக்கு விதித்திருந்தவிதியோ என்னவோ ரஷ்யாவை ஆண்ட ஜார் மன்னர்களின் இளவரசர் ரஷ்யாவின் சில குறிப்பிட்ட பகுதிகளில் யூதர்கள் வந்து குடியேறி விவசாயத்தை வளப்படுத்த வரலாமென்று அழைப்பு விடுத்தார். 

இப்படி ரஷ்யாவும் யூதர்களை அழைக்கக் காரணமும் உள்நோக்கமும் இருந்தது. அந்த உள்நோக்கமும் வேறொன்றுமல்ல. ஜெருசலம்தான். நாம் ஏற்கனவே குறிப்பிட்டபடி உலகின் ஒவ்வொரு நாடும் ஜெருசலத்தை தங்களுடன் இணைத்துவைத்துக் கொள்ளவேண்டுமென்று ஆசைப்பட்டன. காரணம் உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஜெருசலம் என்பது ஒரு வாடாத மலர். அந்த மலரைத் தங்களின் மகுடத்தில் சூட்டிக் கொள்ள ஒவ்வொரு நாடுகளும் தங்களின் அரசியல் சதுரங்கத்தின் காய்களை நகர்த்தின.

இந்த வரலாற்றில் இப்போது யூதர்களை அரவணைப்பது ரஷ்யர்களின் காலம். தங்களது இராணுவத்தின் ஒரு படைப் பரிவுக்கு இஸ்ரேல் இராணுவப் படைப்பிரிவு என்று பெயரிட்டு அதற்கான பேட்ஜ்களை தங்களின் சட்டைப் பைகளின் மேல் குத்தி அழகு பார்த்தார்கள். அவர்களின் ஒரு படைப் பரிவின் தலைவருக்கும் அந்தப் பெயரை சூட்டி மகிழ்ந்தார்கள். அதோடு நிற்காமல் துருக்கியின் வசம் இருந்த பாலஸ்தீனம் உட்பட்ட பகுதிகளை தங்களின் ரஷ்ய சாம்ராஜ்யத்துடன் இணைத்துக் கொள்ள இரண்டு போர்களை நடத்தினார்கள்.

இந்தப் போர்களில் ரஷ்யர்களுக்கு யூதர்கள் வால் பிடித்தார்கள்; துருக்கியர்களுக்கெதிராக வாளெடுத்தார்கள்; தோள்கொடுத்தார்கள். ஆனால் கி.பி. 1768 முதல் 1774 வரை நடந்த போரிலும் அதன்பின் 1787 முதல் 1792 வரை நடைபெற்ற இருபோர்களிலும் துரதிஷ்டவசமாக துருக்கியர்கள் ரஷ்யாவுக்குத் தோல்வியையே கொடுத்தார்கள். தோள் கொடுத்து வாளெடுத்த யூதர்கள் துவண்டதே மிச்சம். அதுமட்டும் மிச்சமல்ல அதற்கடுத்து ரஷ்யா வழங்கிய மறக்க முடியாத மரணப்பரிசுகளும் யூதர்களின் வரலாற்றில் மிச்சம்தான். 

நெப்போலியனுடனும் ரஷ்யாவுடனும் யூதர்கள் கூட்டுச் சேர்ந்து கொண்டு துருக்கியர்களை எதிர்த்துப் படை நடத்தியதால் யூதர்களின் துரோகங்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போனது. இவ்வளவு நன்றி கெட்ட ஜென்மங்களா இவர்களென்ற நினைப்பு ஒட்டு மொத்த அரபு சமுதாயத்திடம் வேரூன்றியது. வெறுப்புணர்வுகள் விதை போடாமலேயே வளர்ந்தது. 

இறைவன் தனது திருமறையில் இவர்கள் செய்த நன்றிகெட்ட தனங்களின் பட்டியலை பாருக்கு அறிவிக்கிறான். எத்தனயோ நூற்றாண்டுகளுக்கு முன் நடைபெற்ற நிகழ்வுகளை திருமறை வரிசையாக எடுத்து வைக்கிறது.

“நாம் நமது வேதத்தில் இஸ்ராயீலின் வழித் தோன்றல்களுக்கு ‘ திண்ணமாக நீங்கள் பூமியில் இருதடவை பெரும் குழப்பம் விளைவிப்பீர்கள் ‘ என்றும் பெரிதும் அக்கிரமம் புரிவீர்களென்றும் முன்பே அறிவித்திருந்தோம் இவ்வாறு குழப்பத்திற்கான முதல் சந்தப்பம் வந்தபோது மிகவும் சக்திவாய்ந்த நம்முடைய அடிமைகளை உங்களுக்கு எதிராக நாம் எழச் செய்தோம். அவர்கள் உங்கள் நாட்டில் ஊடுருவி , எல்லாத்திசைகளிலும் பகுதிகளிலும் பரவினார்கள். இது நிறைவேற்றப் படவேண்டிய வாக்குறுதியாகவே இருந்தது. அதன் பின்னர் அவர்களை வெற்றி கொள்ளும் வாய்ப்பினை உங்களுக்கு நாம் வழங்கினோம். மேலும் பொருள் , செல்வங்கள், மக்கள் செல்வங்கள் மூலமும் உங்களுக்கு உதவி செய்தோம் . நீங்கள் நன்மை செய்த போது அது உங்களுக்கு நன்மையாக இருந்தது. தீமை செய்தபோது அது உங்களுக்குத் தீமையாக இருந்தது. பிறகு , இரண்டாவது சந்தர்ப்பம் வந்தபோது, வேறு பகைவர்களை உங்கள் மீது நாம் சாட்டினோம்- அவர்கள் உங்கள் முகங்களை உருக்குலைத்திட வேண்டும்; மேலும், முந்தைய பகைவர்கள் எவ்வாறு (பைத்துல் முக்கத்தஸ்) பள்ளியில் நுழைந்தார்களோ அவ்வாறு இவர்களும் அங்கே நுழைந்து தங்கள் கைக்கு எட்டியவைகளை எல்லாம் அழித்துவிட வேண்டுமென்பதற்காக . நாமும் மீண்டும் உங்களை தண்டிப்போம். மேலும், நன்றி கொன்ற மக்களுக்காக நரகத்தை சிறையாக நாம் ஆக்கி வைத்துள்ளோம்" (பனு இஸ்ராயீல் அத்தியாயம் 17 : 4- 7 ) என்று இறைவன் திருமறையில் கூறுகிறான்.

நவீன வரலாற்று காலத்தில் கூட யூதர்கள் திருந்தவில்லை என்பதற்கான உதாரணங்கள்தான் மேலே நாம் குறிப்பிட்ட நெப்போலியன் மற்றும் ரஷ்யர்களுடன் கூட்டணி வைத்து, துருக்கியர்களுக்கெதிராக அணிவகுத்தது.

மேலும் யூதர்களின் இயல்பான துரோகம் அவர்களைத் துரத்தித் துரத்தி அடித்தது. துருக்கியுடன் ஏற்பட்ட போரின் தோல்விகளுக்குப் பிறகு ரஷ்யர்கள் யூதர்களை எக்ஸ்ட்ரா லக்கேஜாக எண்ணினார்கள். வெறுப்புக் காட்டத்தொடங்கினார்கள். அத்துடன் இந்த யூதர்கள்தான் இயேசு கிறிஸ்துவைக் கொன்ற கொலைகாரர்கள் என்ற வெறுப்பும் ரஷ்ய மக்களிடம் பரவலாகப் பரவியது. 

அத்துடன் இன்னொரு அரசியல் நிகழ்வாக போலந்து நாடு ரஷ்யாவிலிருந்து பிரிந்த சமயத்தில் போலந்து நாட்டின் பல பகுதிகளை யூதர்கள் விலைக்கு வாங்கினார்கள். அகதிகளாக வந்தவர்கள் தங்களுடன் இருந்து பிரிந்த நாட்டின் பகுதிகளை விலைக்கு வாங்கியதும் ரஷ்யர்களின் கோபத்தை அதிகப்படுத்தியது. 'வந்தா வரத்தார்கள் என்ற பிளவு மனப்பான்மை அன்றும் இருந்தது; இன்றும் இருக்கிறது.

மேலும் எவ்வளவுதான் ரஷ்யர்கள் புகலிடம் கொடுத்து வைத்திருந்தாலும் தங்களை ரஷ்யர்கள் என்று சொல்லிக் கொள்ள யூதர்கள் வெட்கப்பட்ட நிகழ்வுகளையும் ரஷ்யர்கள் கவனித்தார்கள். யூதர்களை விரட்டியடிக்க காலத்தை எதிர்நோக்கி கத்திகளை தீட்டி வைத்து இருந்தார்கள். யூதர்களை அழித்தொழிக்க சந்தர்ப்ப எப்போது வருமென்று எதிர்நோக்கிய நேரத்தில் , ரஷ்யாவின் அலெக்சாந்தர்- இரண்டு என்ற ஜார் மன்னர் யாராலோ கொலை செய்யப்பட்டார். இந்தக் இந்தக் கொலைச் சதிக்கு யூதர்களும் உடந்தை என்ற வதந்தி ஊரெங்கும் பரவியது. 

முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது டில்லியில் சீக்கியர்கள் எவ்வாறு சூறையாடப்பட்டார்களோ அவ்வாறே யூதக் குடியிருப்புகள் நொறுக்கப்பட்டன. யூதர்கள் கூட்டம் கூட்டமாக கண்ட இடங்களிலெல்லாம் வெட்டபட்டார்கள்; வேட்டையாடபட்டார்கள். யூதப் பிணங்கள் குவியத் தொடங்கின. பிணங்களை எடுத்து புதைக்கக்கூட ரஷ்ய மக்களுக்கு மனம் வரவில்லை. 

இப்படி பலநாட்டு மக்களின் கரங்களிலும் சிக்கி சீரழிந்த இந்த யூத இனத்துக்கும் அந்த இனத்தின் மீது கூட அனுதாபமும் இரக்கமும் காட்டும் எண்ணம் படைத்த நடுநிலை நாடுகளுக்கும் யூதர்களுக்கென்று ஒரு நாடு இருந்தால் அவர்கள் வாழ்ந்து கொள்வார்களே என்ற எண்ணம் மேலோங்கத் தொடங்கியது. யூதர்கள் பக்கம் அனுதாப அலை அடிக்கத் தொடங்கியது. சட்டத்தால் நிருபிக்கப்பட்டு தண்டனை வழங்கபட்டாலும் அனுதாபப்பட்டு பால் குடமும் பன்னீர் குடமும் எடுத்து, அங்கப் பிதிஷ்டமும் செய்து, மண்சோறு சாப்பிட்டு, ஆணி செருப்பு போட்டு நடந்து அனுதாபம் காட்டும் மக்கள் எங்கும் இருக்கவே செய்கிறார்கள். இப்படி ஒரு அனுதாபத்தை யூதர்கள் தங்கள் கணக்கில் வரவு வைக்கத் தொடங்கினார்கள். 

இன்ஷா அல்லாஹ் தொடரும். 

=========================================================
( நன்றி : குர் ஆனில் ஜெருசலம் இம்ரான் என். ஹுசைன் பக்கம் 58).

இபுராஹிம் அன்சாரி

ஒரு மார்க்க(மான) விவாதம் ! 11

அதிரைநிருபர் பதிப்பகம் | November 27, 2014 | , , , ,

அதிரை பேரன் சோஃபாவில் உட்கார்ந்து மடிக்கணினியில் எதையோ ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருக்க, குடையை மடக்கியபடி உள்ளே வருகிறார் அதிரையின் அப்பா.

“அஸ்ஸலாமு அலைக்கும்”

“அலைக்குமுஸ்ஸலாம் அப்பா”

“என்ன பேராண்டி, தூண்டி போட்டுட்டு மெதப்புக்கட்டயப் பாக்ற மாதிரி உத்துப் பாத்துக்கிட்டு ஈக்கிறிய?’

“வாங்கப்பா. சாணி ஏதும் மிதிச்சிட்டு வந்தியலோ, நாறுதே அப்பா?’

“வெளியே வாசப்படில செருப்ப நல்லா தேச்சிட்டுத்தானே வந்தேன். அத உடுங்க பேராண்டி. நீங்க என்னத்த பாக்றிய?’

“இதெல்லாம் உங்களுக்கு வெளங்காது அப்பா. உங்க காலத்ல இதெல்லாம் கெடையாது.’

“அது சரி. சும்மா காட்டுங்களேன் வாப்பா. நானுந்தான் பார்க்றேன்.”

“சொன்னா கேக்க மாட்டியலே அப்பா….”

“(பார்த்துக் கொண்டே) என்ன நம்ம புள்ளைவ்ளா உட்காந்து பேசிக்கிட்டிருக்காஹ. இதுல என்ன புதுமை?”

“அப்பா, இதுக்குப் பேரு விவாதம்.  வாயால அடிச்சிக்கிட்டு உழுவுறது.”

“எதப்பத்தி விவாதமாம் பேராண்டி?”

“அதப்பத்தித்தான் அப்பா.”

“எதப்பத்தி டாப்பா?

“அதான் ஆதார பூர்வமா சொன்னேனே...அதப்பத்தித்தான் அப்பா.”

“என்ன பேராண்டி.. ஒன்னுமே சொல்லாம சொல்லிட்டேன் சொல்லிட்டேங்கிறியல?”

“அதான் விவாதம் அப்பா. உங்களுக்கு வெளங்காதுன்டு சொன்னா கேக்றியலா?”

அவ்வமையம் அதிரை பேராண்டியின் தோஸ்த் பேராண்டியும் ஸலாத்தோடு உள்ளே நுழைய, அப்பா அவனிடம் தொடர்கிறார்

“அஸ்ஸலாமுஅலைக்கும்”

“வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ. வா தம்பி, உன் தோழனுக்கு என்னாச்சுன்னு தெரியலே. ஒரு மாதிரியா பேசுது. என்னெண்டு கேளேன்.”

“ஏன்...என்னெண்டு பேசுறான்? விவாதம் ஏதும் பார்த்தானா அப்பா?”

“அட, என்ன இப்டிப் போட்டு ஒடக்கிறிய! ஆமா. அதத்தான் பார்க்றான்.”

“அப்பா, உங்களுக்கு வெளங்காது. விவாதம் பார்த்தா அப்டித்தான் பேசுவான். இவன் மட்டுமில்ல, விவாதம் பார்க்ற ஒவ்வொருத்தரும் ஒரு நாலைஞ்சு நாளைக்கும் மந்திரிச்சி வுட்ட மாத்ரித்தான் பொலம்புவாங்க. நீங்க ஒன்னும் கவல படாதிய.”

“தோளபுள்ள பேராண்டி, நீயாவது சொல்லுப்பா. விவாதம்னா என்னா?”

“அப்பா, விவாதம்னா... மொத மொதல்ல நேராவோ மீடியா மூலியமாவோ யாரையாவது வாய்க்கு வந்த மாதிரி கன்னாபின்னான்னு திட்டுவாங்க. திட்டு வாங்கிட்டு அமைதியா இருந்தா உட்றுவாங்க.  ஏண்டா திட்றியன்னு கேட்டா கடுப்பாகி மேலும் கேவலமாவும் அசிங்கமாவும் திட்டுவாங்க.  சரி, திட்டாதிய. பேசித்தீர்த்துக்கலாம் என்று கூப்பிட்டா, மேடை போட்டு மைக் வச்சி, விடியோவெல்லாம் எடுத்து பரஸ்பரம் திட்டிக்குவாங்க இந்த சனியனத்தான் விவாதம்பாங்க. “

“எல்லாம் நம்மூட்டு புள்ளைவோ மாதிரித்தானே தெரியுது. யாராவது பெரிய மனுஷன்ட்ட சொன்னா இவங்க பிரச்னையைத்தீர்த்து வைக்க மாட்டாங்களா பேராண்டிங்களா?”

“நீங்க வேற அப்பா. பெரிய மனுஷன் யாராவது தலையிட்டா போச்சு, அந்தாள படு கேவலமாவும் அந்தரங்கமாவும் திட்டுவாங்க. பாலியல் குத்தமோ பொருளாதார கையாடலோ சுமத்தி ஓச்சுடுவாங்க.  இவிங்க சல்லியம் தாங்க முடியாம ஒவ்வொரு பெரிய மனுஷனும் அவங்கவங்க தனியா கடைய விரிக்க ஆரம்பிச்சிடுவாங்க. ஒரே வார்த்த/ ஒரே வசனத்துக்கு ஆளாலுக்கு அர்த்தம் சொல்லி அவங்கவங்க சொல்றதுதான் சரின்னு ஒத்துக்கச் சொல்லுவாங்க.  ஒத்துக்கலயா? திட்டுவாங்க. விவாதத்தை ஆரம்பிக்கக்கூட ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுக்க மாட்டாங்க. கிரிக்கெட் டாஸ் போட்டுத்தான் முடிவெடுப்பாங்க.”

“கிரிக்கெட் டாஸா? அதென்ன பேராண்டிங்களா?”

(அப்பாட பேராண்டி குறுக்கிட்டு) “அட அத வுட்றா. இட்ஸ் கெட்டிங் இண்ட்டு ட்டூ ட்டெக்னிக்கல்.”

“என்ன சொல்றான்? தோழப்புள்ள எங்கிட்ட சொல்ல வேணாம்றானா?”

“இல்லப்பா, உங்களுக்கு வெளங்காதுன்றான்.”

“அவன் கெடக்றான். நீ சொல்லு தோழப்புள்ள பேராண்டி. டாஸ் தெரியும். அதென்ன கிரிக்கெட் டாஸ்?”

“அது...வந்து... எனக்கு கிரிக்கெட் தெரியாதே தாத்தா. அவன்ட்ட கேளுங்க. அவந்தான் ஃபோர் சிக்ஸ்ண்டெல்லாம் உளறிக்கிட்டு இருப்பான். டேய் நீயே சொல்லு.”

“அது... அப்பா, எனக்குக் கிரிக்கெட்டும் தெரியும் டாஸும் தெரியும் ஆனா கிரிக்கெட் டாஸில் என்ன சூட்சமம் இருக்குன்னு தெரியாது அப்பா.”

“அப்டீன்னா என்னான்னு அவங்கள்ட்டே கேட்க வேண்டியதுதானே?”

“அத கேட்டா வெளக்கஞ்சொல்லியே விடிய வச்சிடுவாங்க.  வுட்டுப்பாருங்க, எது நேர்மையானது கிரிக்கெட் டாஸா… ஹாக்கி டாஸான்னு ஒரு விவாதம் வச்சாலும் நாலு நாளைக்குப் பேசற அளவுக்கு வெவெரமானவங்க.”

“நாலு நாளைக்கா?”

“ஆமா அப்பா, அதொன்னும் செரமம் இல்ல. ஒரே சேதிய திருப்பி திருப்பி சொல்லியே இழுப்பாங்க. விவாதப் பொருளைப் பத்தி ஒரு நிமிஷம் பேசிட்டு, விவாதிப்பவரைப் பத்தி அவர் வேட்டி சட்டயப் பத்தி தொப்பியப் பத்தி ஒரு மணி நேரம் வேணும்னாலும் பேசுவாங்க.”

“எதப்பத்தி பேசுறாங்கலாம்?”

“யாருக்குத் தெரியும்?. எத்ப்பத்தி பேசினாலும் ஏதோ சூனியம் வச்ச மாதிரி ஒரே சேதியத்தான் சுத்திச்சுத்தி வருவாங்க. அவங்களத் திட்னதுபோக மீதி நேரத்ல அவங்க கேள்விக்கு பதில் சொல்வாங்க அப்பா.”

“என்ன கேள்விங்க பேராண்டி?”

“என்ன கேள்வியா இருந்தாலும் பதில் ஒன்னுதானே அப்பா.”

“அதெப்டி?”

“’கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் சொல்ட்டோம்’னுதான் எல்லா கேள்விக்கும் பதில் சொல்வாங்க அப்பா.”

“இதையா இப்டி உழுந்து உழுந்து இவன் பார்க்றான்?”

“டேய் வாடா போலாம். அப்புறம் கொருத்துப் போட்டுட்டா ஆட்ட்த்ல சேர்க்க மாட்டாங்க”

இருவரும் புறப்பட்டு ஃபுட்பால் ஆட போகிறார்கள்.

(திரை)

மு.கு.: வழக்கமான அப்பா பேரன் படைப்பாளிக்கும் இதற்கும் தொடர்பில்லை... !

அதிரைநிருபர் பதிப்பகம்

ப ழ ழ ழ மொழி ! 5

அதிரைநிருபர் பதிப்பகம் | November 26, 2014 | , , , ,

வலைத்தளத்தில் எந்தப் பக்கம் பார்த்தாலும் சவாலும் எதிர் சவாலும் ஒரு முஸ்லிமை பார்த்து இன்னொரு முஸ்லிம் நீ முஸ்லிமே இல்லை என்பதும் அவர் இவரை பார்த்து நீ  வழிகேட்டில் இருக்கின்றாய் என்று வசைபாடுவதும் வாடிக்கையாய் போச்சு என்னதான் நடக்குது என்று கொஞ்சம் ஆழ்ந்து படித்துப் பார்த்தால் மிஞ்சுவது குழப்பம்தான் ஆகையால் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்க வலைத்தளத்தில் இருந்து பழமொழிகளை கா.பே. (தி.கூ பாஷையில்) செய்து சின்ன சின்னதாய் சிவப்பு வண்ணம் கொடுத்து பிரச்சாரம் செய்துள்ளேன்.


நொங்கு தின்னவன் போயிட்டான்
நோண்டி தின்னவன் அம்புட்டுக்கிட்டான்

நொங்கை எப்படி நோண்டாமல் திங்க முடியும் 

குமறுன்னு இல்லாம வாக்கப்பட்டேன்
மலடுன்னு இல்லாம பிள்ளப் பெத்துக்கிட்டேன்
அதுக்கு மேல ஒண்ணுமில்ல

அதுக்கு மேல ஒண்ணுமில்லன்னு சொல்லிப்புட்டு காலம் பூரா ஏதாவது சொல்லி கிட்டேதானே`இருக்கீங்க 

எட்டி எட்டிப் பாத்தவளுக்கு
எட்டுப் பணியாரம்
மூட்டுத் தேயச் சுட்டவளுக்கு
மூணு பணியாரம்

ஒருவேலை மூட்டு தேய சுட்டவளுக்கு ஸுகர் கம்ப்ளைன்ட் இருக்குமோ!

வட்டிக்கு வாங்கி அட்டிகை வாங்கினாளாம்
அட்டிகையை வித்து வட்டி கட்டினாளாம்

வட்டியின் கொடுமையை வட்டியும் மொதலுமா சொல்லிட்டாங்க  

கழுதையின்  கோபம்
கத்துனா தீரும்

கழுதைக்கு சொன்ன மாதிரி மனுசனுக்கும் ஒரு வழி சொல்லிருங்களேன் 

கழுதப் புண்ணுக்கு
தெருப் புழுதிதான் மருந்து

அரசு மருத்துவமனையை போல் கால்நடை மருத்துவமனையும் டாக்டர் இல்லாமல் பூட்டியோ இருக்குமோ!

அயிரைமீனுக்கு  எதுக்கு
விலாங்கு மீன் சேட்டை

எந்த மீனோட சேட்டையும் அதிராம்பட்டினத்தில் செல்லாது!

கழுத்துப் பிடி கொடுத்தாலும்
எழுத்துப் பிடி கொடுக்காதே 

இது படிச்சவங்களுக்கு. கைநாட்டுக்கு யாராச்சும் ஒரு பழமொழி சொல்லுங்களேன்  

நார்த்தங்காய்க்குப் போடுகிற உப்பும்,
நாத்தனாருக்குப் போடுகிற சோறும் வீண்போகாது

சோறு மட்டும் போட்டா பத்தாது கொஞ்சம் மீனானமும் ஊத்துங்கோ!

குறத்தி பிள்ளை பெற்றாளாம் 
குறவன் மருந்து சாப்பிட்டானாம்

என்ன டாஸ் மாக் மருந்தா ?

தூக்கணாங்குருவி குரங்குக்குப் 
புத்தி சொல்லியதாம் 

குருவி எப்படி பேசும் என்று லாஜிக் பேசிராதிய 

நிலம் இல்லையென்று
முற்றத்தை உழுதானாம்

இருந்த விளை நிலத்தை எல்லாம் மனைக்கட்டு போட்டா   அப்பறம் எங்க இருந்துவரும் நிலம் உழுவதற்கு 

பேய்க்கு வாக்குப்பட்டால் புளியமரத்தில் 
ஏறித்தான் ஆகவேண்டும்

ஓ இதைதான் வைத்துளே புளியை கரைக்குதுன்னு சொல்றாங்களா!

கடல் மீனுக்கு கண்ணுல சூடு 

ஆனா தமிழ் நாட்டிலே  மீன் பிடிக்க போறவங்களையும் சுடுறாங்களே 

பருத்திக்கு உழும் முன்னே தம்பிக்கு எட்டு முழம்

அதாங்க தொலைநோக்கு பார்வை 

Sஹமீது

பொறியியல் பட்டதாரி திருடனாக பிடிபட்டார் - கல்வியும் சமுகமும்! 2

அதிரைநிருபர் பதிப்பகம் | November 24, 2014 | , , , , , ,

ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தைச் சேர்ந்தவர் சீனியய்யா சுந்தர் (28). எலக்டிரிக்கல் எலக்ட்ரானிக் என்ஜினீயரிங் படித்த பி.டெக் மாணவர். இவர் வேலை தேடி ஐதராபாத் வந்தார். அமீர் பேட்டையில் உறவினர் ஒருவர் வீட்டில் தங்கி இருந்து வேலை தேடினார். ஆனால் வேலை கிடைக்கவில்லை.

இந்த நிலையில் அதடு என்ற சினிமா படத்தை பார்த்தார். அதில் வீடுகளில் நூதன முறையில் கொள்ளையடிப்பது எப்படி என்பதை அறிந்தார்.

அதன் மூலம் கட்டிங் பிளேயர் மூலம் பூட்டி கிடக்கும் வீடுகளில் புகுந்து கொள்ளையடித்தான். குறிப்பாக அவர் லேப்–டாப், செல்போன் போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள், நகைகள் என கைக்குள் அடங்கும் பொருட்களையே கொள்ளையடித்து வந்தான். கடந்த 1½ ஆண்டில் மட்டும் இவன் 35 வீடுகளில் கொள்ளையடித்து உள்ளான்.

தனலட்சுமி சர்க்கிள் பகுதியில் நேற்று இவன் லேப்–டாப் ஒன்றுடன் சென்றான். அவனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில் அவனிடம் பூட்டுகளை உடைக்கும் கட்டிங்பிளேயர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

சந்தேகத்தின் பேரில் அவனை கைது செய்த போலீசார் அவன் தங்கிய வீட்டில் சோதனை செய்தனர். அங்கு 59 லேப்–டாப் இருந்தது. அதனையும் ரூ.27 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளையும் போலீசார் கைப்பற்றினார்கள்.

திருடிய பொருட்களை அவன் தனது உறவினர்களிடமே விற்பனை செய்து உள்ளான். ஜாலி வாழ்க்கைகாக திருட்டில் ஈடுபட்டதாக சீனியய்யா சுந்தர் தெரிவித்தான்.

இப்படியாக - மாலை மலர் செய்தி

சிந்திக்க !

மேற்கண்ட செய்தியில் கண்ட இன்றைய நடப்புகள் போன்றே நிறைய பட்டதாரி இளைஞர்கள் பலர் படித்து வேலை இல்லாததால் தங்கள் வயிற்று பசிக்காகவும் தினசரி வாழ்க்கைக்காகவும் திருடர்களாகவும் இன்ன பிற குற்றவாளிகளாகவும் மாறிவரும் அவலம் இந்தியாவில் அரங்கேறி வருகிறது.

சிறு வயதில் இருந்து நன்றாக படிக்க வைத்து பல லட்சங்களுக்கு மேல் செலவழித்து ஒரு இஞ்சினிரியராக அந்த இளைஞரை ஆளாக்கிய பெற்றோர் இன்று திருடனாக தன்மகனை பார்க்கும் அவலத்தை என்னவென்று சொல்வது.

இது போன்று வேலையில்லா பட்டதாரி இளைஞர்கள் பலர் தங்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக பல குற்ற செயல்களில் ஈடுபட்டும் வருகின்றனர். இந்தியாவில் நடக்கும் பல சைபர் க்ரைம் குற்றங்கள், ஏ டி எம் கொள்ளைகள், பேங்க் கொள்ளைகள், வெடிகுண்டு தயாரித்தல், போதை மருந்துகள் கடத்தல் போன்ற பல கொடிய குற்றங்களை வேலையில்லா பட்டதாரிகள் தான் பெரும்பாலும் செய்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

இதனை வைத்து பார்க்கும் போது வேலையில்லா அப்பாவி பட்டதாரிகளுக்கு ஒரு நல்ல வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவது அரசாங்கத்தின் கடமை.

மேலும் ஒரு நல்ல கல்வி அந்த மாணவருக்கு திருடுவது தவறு என்று உணர்த்தவில்லை. இன்றைய கல்வியை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள், பள்ளி கல்லூரிகள் அனைத்துமே மதிப்பெண்கள் மட்டுமே மையமாக வைத்து பாடம் நடத்துகின்றன. இதனால் மாணவர்கள் அந்த மதிப்பெண்களையே முறைகேடாக பெறுவதற்கு முயற்சிகின்றனர்.

"ஐந்தில் வலையாதது ஐம்பதில் வலையாது" என்றதொரு பழமொழியை கேள்பட்டிருப்போம். இப்படி படிக்கும் காலத்திலேயே முறைகேடாக மதிப்பெண்கள் பெற நினைக்கும் மாணவன் பிற்காலத்தில் எப்படி நேர்மையாக சம்பாதிக்க நினைப்பான். 

"ஏட்டுச் சுரைக்காய் கூட்டுக்கு உதவாது" என்பார்கள் அதுபோல மதிப்பெண்களை மையமாக வைத்துக்கொண்டு படித்து வெளியில் வரும் மாணவர்கள் சாதிப்பது கடினமே. இப்படி  தான் அந்த இளைஞருக்கு தவறு எது நல்லது எது என்று படிக்கும் பருவத்திலேயே அவரது கல்வி உணர்தியிருந்தால் இவர் இப்படி ஒரு திருடனாக மாறியிருக்கமாட்டார்.

அந்த இளைஞரும் தன் படிப்புக்கு ஏற்ற வேலை தான் வேண்டும் என்றில்லாமல் தினசரி செலவிற்காக வேறு ஒரு கிடைத்த வேலை செய்திருக்காலாம். அதை விட்டுவிட்டு திருடனாக மாறி தனக்கும் தன் குடும்பத்துக்கும் தான் படித்த கல்லூரிக்கும் மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த சம்பவத்தின் மூலம் நாம் அறிந்துக்கொள்ள வேண்டிய விசயம் இன்னொன்றும் உள்ளது. ஒரு சினிமா ஒரு இஞ்சினியரை திருடனாக மாற்றியுள்ளது. இது போன்று பல சினிமாக்கள் மற்றும் சீரியல்களினால் இளைஞர்கள் மற்றும் குடும்ப பெண்கள் பல தவறுகளை செய்து வருகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை!

நூருல் இப்னு ஜஹபர் அலி
நன்றி : அதிரைபிறை

சோலையும் பாலையும்...! 2

அதிரைநிருபர் பதிப்பகம் | November 23, 2014 | , , ,

எங்கும் பசுமை நிறைந்துள்ள
                  எழிலைப் பெற்றுச் சிறந்தோங்கும்
எங்கள் இந்தியப் பதிவிட்டே
                  ஏறிச் சென்றோம் விமானத்தில்.

காடும் மலையும் ஆறுகளும்
                  கடலும் கரையும் பல்வேறு
நாடும் நகரும் தாண்டிமிக
                  நன்றாய் ஊர்தி பறந்ததுவே.

சிலமணி நேரப் பயணத்தால்
                  சில்லென் றரபு துபைவந்தோம்
நலமுடன் வந்து சேர்ந்ததனால்
                  நாயன் அருளைப் புகழ்ந்தோமே.

ஃபஹிமா ஃபஹ்மிதா மச்சிகளும்
                  ஃபவ்வாஸ் மச்சான் தாஜ்மாமா
வெகுபேர் மைமுனா மாமியுடன்
                  விமான நிலையம் வந்தார்கள்

காரில் ஏறிப் புறப்பட்டோம்
                  கடிதாய்ப் பறந்தது வாகனமும்
நேரில் கண்டோம் பாலைவனம்
                  நெஞ்சில் ஆர்வம் கொண்டோமே

எங்கும் மணலின் மலைக்கூட்டம்
                  எரியும் வெயிலின் சதிராட்டம்
பொங்கும் கடலின் அலையோசை
                  புரியும் அழகுப் பாதையிலே

துபையைக் கடந்து ஷார்ஜாவில்
                  துரிதாய்ச் சென்று அஜ்மானில்
சுபமாய் நுழைந்து வீட்டுக்குள்
                  சுகமாய் வந்து சேர்ந்தோமே

பாலை நிலத்தை அற்புதமாய்ப்
                  பார்ப்ப தற்குக் கண்குளிரச்
சோலை வனமாய் மாற்றியுளார்!
                  சுகமாய்ச் சென்று பாருங்கள்!

அதிரை அஹ்மது

வரலாறுகள்! வழக்குகள்! வல்லரசுகள்! வடிக்கப்படும் இரத்தம்!

பாலஸ்தீனம்...

19

அதிரைநிருபர் பதிப்பகம் | November 22, 2014 | , , ,

தொடர் : பகுதி பதினேழு

கடந்த அத்தியாயத்தை நிறைவு செய்யும்போது அடுத்த காட்சி மாற்றங்கள் என்று குறிப்பிட்டோம். உண்மையில் அவை காட்சிகளை மட்டும் மாற்றவில்லை ஆட்சியையும் மாற்றியது. ஆட்சிமாற்றம் என்றால் உஸ்மானியா துருக்கிய ஆட்சி மாற்றப்பட்டது என்கிறீர்களா என்று கேட்பீர்கள். ஆமாம்! அதுதான் உண்மை! 1830 – ஆம் ஆண்டு, முகமது அலி என்கிற எகிப்திய மன்னர் தனது ஆட்சியை விரிவு படுத்துவதற்காக எடுத்த ஒரு படையெடுப்பு பாலஸ்தீனத்தை துருக்கியர்களிடமிருந்து பறித்து எகிப்தின் சரித்திரத்தில் ஏற்றமிகு இடம் வகிக்கும் ஒரு மன்னராக குறிப்பிடப்படும் முகமது அலி (Muhammad Ali Pasha al-Mas'ud ibn Agha ) அவர்களின் ஆட்சியின் கீழ் ஒரு எட்டு ஆண்டுகள் உட்பட்டு இருந்தது. 

பாலஸ்தீனத்தின் மீது அனைத்து நாடுகளுக்கும் ஒருவித ஈர்ப்பு - காதல் என்று கூடச் சொல்லலாம் - இருந்தது என்றும் நாம் சொல்லலாம். ஏறக் குறைய நானூறு ஆண்டுகள் உஸ்மானியா துருக்கியப் பேரசின் ஒரு அங்கமாகத் பாலஸ்தீனம் திகழ்ந்தது . அதாவது 1517 ஆண்டு முதல் 1918 வரை உஸ்மானியா துருக்கியின் ஒரு அலங்காரமாகத் திகழ்ந்த பாலஸ்தீனப் பகுதி காரமாகத் தொடங்கிய முகமது அலி அவர்களின் தனது அரசை விரிவு படுத்தும் முயற்சியின் வெற்றியின் விளைவாக, இடையில் 1831 முதல் 1840 வரை உஸ்மானியா துருக்கியின் அரசிடமிருந்து தற்காலிகமாக பறிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்டது என்பதையும் நாம் வரலாற்றில் காண்கிறோம். 

1840 க்குப் பிறகு மீண்டும் உஸ்மானியா துருக்கி அரசிடமே கன்றுக் குட்டி தாயிடம் துள்ளி ஓடுவதுபோல் துள்ளிச் சென்றது பாலஸ்தீனம். தான் கைப்பற்றிய பகுதியை அப்படித் தாரைவார்த்த முகமது அலி என்று இந்த அத்தியாயத்தில் நாம் வரைந்து காட்டப் போகும் இன்னொரு மாவீரனின் வரலாறு ஒன்றும் சாதாரணமானதல்ல. ஆனாலும் முதன் முதலாக பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா போன்ற நாடுகளும் பாலஸ்தீனம் மற்றும் அதனை சுற்றி இருந்த சிரியா லெபனான் எகிப்து ஆகிய நாடுகளின் அரசியல், ஆட்சி மற்றும் ஆளும் பகுதிகளின் மீது ஆசைப்பட்டதால் அதனுடைய விளைவாக மீண்டும் துருக்கியிடம் பாலஸ்தீனத்தை ஒப்படைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் முகமது அலி. எகிப்திலும் தனது ஆளுமைக்குட்பட்ட பகுதிகளிலும் பல விந்தைகளையும் வித்தைகளையும் செய்த வரலாற்றின் வீரத் திருமகன்களில் ஒருவராகிய முகமது அலி அவர்களை வரலாற்றின் பக்கங்கள் புகழ்ந்து தள்ளுகின்றன. 

அவற்றை ஒரு சுற்று பார்ப்பதற்கு முன், எந்த நாடாக இருந்தாலும் பாலஸ்தீனத்தை தங்களுடன் இணைத்து வைத்துக் கொள்ள வேண்டுமென்பது எல்லா நாடுகளின் ஆசையாகவும் இருந்தது என்பதை நாம் கவனிக்க வேண்டும். 

ஒரு வகையில் பார்த்தால் பாலஸ்தீனம் என்ற நாடு தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்தில் அளவுக்குக் கூட இருக்காது. லெபனான் நாட்டுத் தலைநகர் பெய்ரூட்டில் காலை பஜ்ர் தொழுகைக்குப் பிறகு நாம் வசிக்கும் அறையில் இருந்து ஒரு காரில் கிளம்பினால், லெபனான் நாட்டின் எல்லாப்பகுதிகளையும் சுற்றித் தடம் பதித்து விட்டு இரவு இஷா தொழுவதற்குள் பெய்ரூட்டில் இருக்கும். நமது அறைக்கு திரும்பி வந்துவிட இயலும் என்பது சொந்த அனுபவம். 

ஏறக்குறைய அதே அளவு எல்லைப் பரப்பளவுகளைக் கொண்ட சின்னஞ்சிறு நாடுதான் பாலஸ்தீனமும். ஆனாலும் இந்த நாட்டை தங்களின் அரசியல் அமைப்பில் இடம்பெறச் செய்து கொள்வது பல நாடுகளுக்கு ஒரு கெளரவமாக இருந்தது. பல பணக்காரர்கள் தாங்கள் அணிந்து இருக்கும் கோட்டில் ஒரு தங்கச் சங்கிலியை கோர்த்து அணிந்து கொள்வார்களே அதே போலத்தான் பாலஸ்தீனமும் உலகோரால் கருதப்பட்டது. 

ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். உலகெங்கும் குறிப்பாக ஐரோப்பாவில் யூதர்களுக்கெதிரான இயக்கங்களும் வெறுப்பான செயல்களும் கூட்டுக் கொலைகளும் அரங்கேறிக் கொண்டிருந்த நேரத்தில் உஸ்மானிய துருக்கிய அரசாக இருந்தாலும் சரி, அவர்களிடமிருந்து இடைக் காலத்தில் கைப்பற்றிய முகமது அலி அவர்களுடைய ஆட்சியாக இருந்தாலும் சரி பாலஸ்தீனத்தில் யூதர்களின் நிலைமைகளில் அரசியல் ரீதியாக எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை; அவர்களது சுதந்திரமான நடவடிக்கைகளில் இந்த அரசுகள் கைவைத்துப் பறிக்கவில்லை. 

ஆனால், அதே நேரம் ட்ஜ்வி உடைய சம்பவத்துக்குப் பிறகும் ஐரோப்பாவில் தொடர்ந்து தங்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துப் படுவதையும் கவனித்த யூதர்களில் ஒரு பகுதியினர் பாலஸ்தீனத்திலிருந்து வெளியேறவும் செய்தார்கள் என்பதையும் நாம் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். 

தான் பாலஸ்தீனத்தை ஆண்ட குறுகிய காலத்திலும் மதச் சகிப்புதன்மையுடன் நடந்து கொண்டார் முகமது அலி என்பதை அறிகிறோம். முஸ்லிம்கள், கிருத்தவர்கள், யூதர்கள் என்கிற எவ்விதப் பாகுபாடுமின்றி தனது ஆட்சிக் காலத்தில் மதச்சார்பின்மைக் கொள்கையை கடைபிடித்தார் மன்னர் முஹமது அலி. 

பாலஸ்தீன மண்ணின் முக்கிய அம்சம் அங்கிருந்த புனித ஜெருசலம் மட்டுமல்ல; அந்த மண்ணின் விவசாய வளமும்தான். இன்றும் கூட இஸ்ரேலின் பிடியில் இருக்கும் பாலஸ்தீனின் பாகுதிகளில் விவசாயம் பேணி வளர்க்கப்படுகிறது. புதிய புதிய ஆய்வுகள் அங்கிருந்து அறிமுகப்படுத்தபட்டு உலக நாடுகள் அவற்றை கடைப் பிடிக்கின்றன என்பதை அறிகிறோம். விதையில்லாத பழ வகைகள் போன்ற ஆய்வுகள் அங்கிருந்துதான் வெளிப்பட்டு இன்று அவற்றிற்கான உலகக் காப்பீட்டு உரிமைகள் யூதர்களிடம்தான் இருக்கின்றன என்பதையும் நாம் மனதில் நிருத்திக் கொள்ள வேண்டும். இன்று இஸ்ரேலின் விவசாய வளர்ச்சிக்கு விதை ஊன்றியவர் முகமது அலி என்பதுதான் நாம் இங்கு குறிப்பிட விரும்பும் வரலாற்றுச் செய்தியாகும். மரம் வைத்து தண்ணீர் விட்டவன் ஒருத்தன் அதன் பலனை அனுபவிப்பவன் இன்னொருத்தன் என்பதுதான் இன்று நடந்து கொண்டு இருக்கிறது. 

பாலஸ்தீனப் பகுதிளில் யூதர்கள் விவசாயப் பண்ணைகள் அமைத்தது போக எஞ்சி இருந்த ஏராளமான மலடாகப் போடப்பட்ட தரிசு நிலங்களை கண்டறிந்து ‘சும்மா கிடந்த நிலத்தை கொத்தி சோம்பலில்லாமல் ஏர் நடத்தி கண்மாய்க் கரையை உசத்திக் கட்டி கரும்புக் கொல்லையும் வாய்க்கால் வெட்டி சம்பாப்பயிரை பறிச்சு நட்டு தகுந்த முறையில் தண்ணீர் விட்டு’ விவசாயப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர முகமது அலி அவர்கள் உத்தரவிட்டு அந்தப் பணிகளை நிறைவேற்றினார். பயிர் சுழற்சி முறையும் ஏற்ற மண்ணுக்கு ஏற்ற பயிரிடுதல் போன்ற முறைகளையும் முகமது அலி அறிமுகப்படுத்தினார். பெருநிலக் கிழார்களானாலும் சிறு விவசாயிகளானாலும் நில உடைமையை சமத்துவமாக்கப்பட்டது. அனைவருக்கும் சமமான உரிமையும் அரசின் ஆதரவும் வழங்கப்பட்டது. இன்றைக்குப் பேச்சளவில் விவசாயம் நாட்டின் முதுகெலும்பு என்று சொல்லிக் கொண்டு விவசாயிகளின் முதுகெலும்புகளை ஒடிக்கும் வண்ணம் காவிரிப் படுக்கையை பாலைவனமாக்கும் பன்னாட்டுத் திட்டங்களுக்கும் உலக வங்கியின் ஊரை அடித்து உலையில் போடும் திட்டங்களுக்கும் பலியாக்குகிறார்களே என்கிற ஆதங்கத்தையும் இங்கு நாம் பதிவு செய்ய வேண்டி இருக்கிறது. 

விவசாயத்தில் மட்டுமல்ல கல்வி வளர்ச்சியிலும் தனது ஆளுமைக்குட்பட்ட பகுதிகளை உயர்த்திக் காட்டுவதில் முகமது அலி அவர்கள் சளைத்தவராக இல்லை என்று அவரது சாதனைப் பட்டியல் நீளுகிறது. ஆரம்பக் கல்வியில் தொடங்கி பல்கலைக் கழகப் படிப்புவரை அவற்றின் அவசியத்தை உணர்ந்து கல்வி வளர்ச்சிக்காக தேவையான அரசின் உதவிகளை செய்வதில் முகமது அலி முன்னணியில் நின்று இருக்கிறார். வாள் முனையில் மட்டும் அவர் சாதிக்கவில்லை பேனா முனையிலும் அவர் சாதித்து இருக்கிறார். கற்றாரைக் காமுற்று உலகெங்கிலுமிருந்து அறிஞர்களை தனது ஆட்சிப் பகுதிகளுக்கு வரவழைத்து பாடம் கேட்பதிலாகட்டும் உலகப் பல்கலைக் கழகங்களுக்கு தந்து மாணவர்களை அரசு உதவியுடன் அனுப்பி வைத்து பயிற்றுவிப்பதிலாகட்டும் முகமது அலி அவர்கள் சிறந்த பணி ஆற்றியிருப்பதாக வரலாற்றாசிரியர்கள் வரைந்து காட்டுகிறார்கள்.

நிலச் சீர்திருத்தங்கள், கல்வி வளர்ச்சி, தொழிற்சாலைகள், வேலை வாய்ப்புக்கள், உற்பத்தி ஆகிய துறைகளில் சிறந்த ஆட்சியைத் தந்து கொண்டிருந்த முகமது அலி அவர்களின் ஒரு இடைக்கால வசந்தம், மீண்டும் அந்தப் பகுதிகளை உஸ்மானியா துருக்கி அரசு கைப்பற்றியதன் மூலம் நின்று போனது. முகமது அலி அவர்களின் வரலாறும் ஒரு நீண்ட நெடிய வரலாறுதான். அவருடைய வரலாற்றில் பிரான்சின் சர்வாதிகாரியாக இருந்த நெப்போலியன் , ரஷ்யா மற்றும் பிரிட்டிஷ் அரசுகளின் வரலாறுகளும் கலந்து இருக்கிறது. இந்தப் பேசு பொருளில் அவைகளைப் பற்றி அதிகம் விவரிக்க வேண்டியதில்லை என்பதால் முகமது அலி என்ற ஒரு மக்கள் நலம் பேணும் மன்னரும் தனது வளையாத செங்கோலால் பாலஸ்தீனத்தை நுகர்ந்து இருக்கிறார் என்பதை மட்டும் சொல்லிச் செல்வோம். ஆக, 1840 ஆம் ஆண்டு மீண்டும் உஸ்மானிய துருக்கிய ஆட்சி பாலஸ்தீனத்தில் ஏற்பட்டது. 

இடையில் ஆட்சி பறிபோய் மீண்டும் துருக்கிய ஆட்சி ஏற்பட்டதும் இதற்கு முதலில் யூதர்கள் அனுபவித்த முழுமையான சுதந்திரத்தை அவர்களால் உணர முடியவில்லை. துருக்கிய அரசும் யூதர்களின் தன்மைகளை ஆராய்ந்து அறிந்து அவர்களைப் பொருத்தவரை சற்று கவனமான அரசியல் கொள்கைகளை ஆராய ஆரம்பித்தது. இடையில் முகமது அலி உடைய ஆட்சி ஏற்பட்ட போதே யூதர்கள் பாலஸ்தீனத்திலிருந்து வெளியேற ஆரம்பித்தார்கள் என்பது ஒரு புறம் இருந்தாலும் அரபுகளுக்கும் யூதர்களுக்கும் சில உரசல்கள் வேறுபாடுகள் ஏற்பட்டன. இவற்றை அரபு இனத்தோரும் உணரத் தலைப் பட்டனர். அரபு இனத்தோர் இடையே யூதர்களைப் பற்றிய ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டது. ஆகவே தட்டிக் கேட்க ஆளில்லாத இடத்தில் தம்பி சண்டப் பிரசண்டன் என்பார்களே அவ்விதம் யூதர்கள் போட்ட ஆட்டங்கள் மற்றும் காய் நகர்த்தல்கள் துருக்கிய அரசு முதல் அரபு இன மக்களின் கவனத்தைக் கவர ஆரம்பித்தன. துருக்கிய அரசு முன்பு ‘கதவைத் திறந்து வை! காற்று வரும்’ என்ற கொள்கையைப் பின்பற்றியது போல் இப்போது பின்பற்றத் தயாராக இல்லை. நெருக்கடிகள் உண்டாயின. இதை யூதர்களும் உணர்ந்தார்கள். பாலஸ்தீனத்தில் இடையில் முகமது அலி உடைய ஆட்சி ஏற்பட்டு மீண்டும் துருக்கிய ஆட்சி ஏற்பட்டதன் விளைவு இது.

பாலஸ்தீனத்தில் வாழ்ந்த முஸ்லிம்களின் கண்கள் திறக்கத் தொடங்கின. யூதர்கள் தங்களையும் தங்களது செல்வங்களை எப்படி எல்லாம் சுரண்டி சூறையாடி இருக்கிறார்கள் என்பதை தாமதமாக ஆனாலும் இப்போது உணரத் தொடங்கினார்கள். 

வரலாற்று ஆசிரியர் ஹசன் தாபித் என்பவர் யூதர்கள், முஸ்லிம்களுக்கு மூட்டைப் பூச்சியாய் இழைத்த தொல்லைகளை விவரிக்கிறார். முஸ்லிம்கள் நெருக்கமாக வாழ்ந்த பகுதிகளின் நிலங்களை எல்லாம் அரசு அதிகாரிகளுக்கு கையூட்டுக் கொடுத்தேனும் அபகரித்துக் கொண்டது -அநியாயமான வட்டிக்குப் பணம் கொடுத்து அதற்கான பண பரிவர்த்தனைப் பத்திரங்களில் கடுமையான விதிகளைப் புகுத்தி எழுதி பணத்தை திருப்பித்தர அவகாசம் தராமல் அபகரிப்பது - அரபு இன சிறுவர்களையும் சிறுமிகளையும் கொத்தடிமைகளாய் விவசாயம் மற்றும் வீட்டு வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொள்வது - முஸ்லிம்களின் சிறு குறு பெருந்தொழில்களுக்குப் போட்டியாக ஒப்பந்தங்களை இலஞ்சம் கொடுத்துப் பெற்று வாழ்வாதாரங்களைப் பறிப்பது - ஏற்றுமதி உட்பட்ட வணிகங்களில் முஸ்லிம்களின் தொழில்களை நஷ்டம் அடையச் செய்ய திட்டமிட்டு விலைகளை கூட்டிக் குறைத்து சதிகளை அரங்கேற்றுவது - முஸ்லிம்களை சமூகத்தில் தாழ்ந்தவர்களாக கருத்தும் மனப்பான்மை - முஸ்லிம்களின் இரு பெருநாள் தினங்களில் தங்களது வீடுகளை அடைத்து சாத்தி துக்க தினங்களாக அனுசரிக்கும் அதிகபட்ச இனத்திமிர் ஆகியவற்றை ஹசன் தாபித் குறிப்பிடுகிறார். 

இவற்றை முஸ்லிம்கள் இப்போதுதான் உணரத் தொடங்கினர். எல்லாவற்றுக்கும் மேலாக தங்களின் வழிபாட்டு இடங்களில் பெருமானார் (ஸல்) அவர்களையும் கலிபாக்களையும் சஹாபாக்களையும் இழிவு படுத்திப் பேசுவதையும் வழக்கமாகவும் கொண்டிருந்தார்கள் என்பதை முஸ்லிம்களும் துருக்கிய அரசும் கோபமாக உணரத் தொடங்கியது.

இதே துருக்கிய அரசுதான், வேலியில் போன யூத ஓணானைத் தூக்கி தனது மடியில் போட்டுக் கொண்டது என்பதையும் வானத்தில் போன சனியனை ஏணி வைத்து இறக்கியது என்பதையும் நாம் இந்தக் கட்டத்தில் நினைவு கொள்வோம். 

யூதர்கள் முஸ்லிம்களை வேறுபடுத்திப் பார்ப்பதற்குறிய துணிவு யூதர்களுக்கு வருவதற்கு முஸ்லிம்களே காரணமாக இருந்து இருக்கிறார்கள் என்பதுதான் வேதனை. ஹஜரத் உமர் ரலி அவர்கள் காலத்தில் வெல்லப்பட்ட பாலஸ்தீனத்தில் - சலாஹுதீன் (ரலி) அவர்களால் வெற்றிகரமாக ஆளப்பட்ட பாலஸ்தீனத்தில் - தாங்களாவே வெளியேறிய யூதர்களை துருக்கிய அரசு , கப்பல் அனுப்பி வெற்றிலை பாக்கு வைத்து அழைத்து வந்து அவர்களுக்கு சமமான அந்தஸ்தும் சுதந்திரமும் கொடுத்ததின் விளைவை அரபு உலகம் தாமதமாகப் புரிந்து கொண்டது. 

அதே நேரம் கொடிய வட்டிக்கு யூதர்களிடமிருந்து கடன் வாங்கும் நிலையிலும் அதற்காக தங்களின் நிலங்களை இழக்கும் நிலையிலும் தங்களின் குழந்தைகளை யூதர்களின் வீடுகளுக்கு எடுபிடி வேலைகளுக்கு அனுப்பும் இழிவான நிலையிலும்தான் ஆண்டாண்டுகாலமாக பாலஸ்தீன மண்ணை ஆண்ட முஸ்லிம்கள் இருந்தார்கள் என்பதையும் வேதனையுடன் குறித்துக் கொள்ள வேண்டும். எங்கெங்கிருந்தோ உயிருக்கு பயந்து ஓடிவந்த யூதர்கள் கொழித்தார்கள் ; மண்ணை ஆண்ட மைந்தர்களை பலவகைகளிலும் அழித்தார்கள். 

அதைவிட வேதனையான இன்னொரு விஷயம் என்னவென்றால், 

யூதர்களை பாலஸ்தீனத்துக்குள் துருக்கி அனுமதித்த காலத்தில் குடியேறியவர்கள் பத்திலிருந்து பனிரெண்டாயிரம் பேர்கள்தான். இந்த எண்ணிக்கை வெகுவிரைவில் ஒரு இலட்சத்தைத் தாண்டியது. இப்படி யூதக் குடியேற்றங்கள் ஏற்றம் கண்டுகொண்டே போவதை ஏதோ எறும்புக் கூட்டங்கள் தங்கள் தலைகளில் தேங்காய்ப்பூவை சுமந்து போவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு சீட்டாடிக் கொண்டு இருந்தது பாலஸ்தீனத்து அரபு இனம். 

நிலம் போன்ற வாழ்வாதாரங்களை வாழ்க்கைச் செலவுக்காக யூதர்களிடம் தொலைத்து விட்டு ஆட்டுக் கறியும் மாட்டுக் கறியும் வாங்கி ருசித்து ருசித்து சாப்பிட்டுக் கொண்டே அரபுகள் பொழுது போக்கினார்கள். ஒரு இனம் தன் தலையில் தானே எப்படி மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வது என்பதை பாலஸ்தீனத்தில் அன்று வாழ்ந்த முஸ்லிம்களைப் பார்த்துத்தான் தெரிந்து கொள்ளவேண்டும். அவைகள் வெறும் படம் அல்ல; பாடம். அப்படிப் பார்த்தால் இன்று அவர்கள் அனுபவிக்கும் அனைத்து இன்னல்களுக்கும் அவர்கள் அருகதையானவர்களே.

இன்ஷா அல்லாஹ் தொடரும். 

இபுராஹிம் அன்சாரி

கந்துரிக்கு தடைவிதிக்க - அதிரை தாருத் தவ்ஹீத் அதிரடி நடவடிக்கைகள் ! 6

அதிரைநிருபர் பதிப்பகம் | November 21, 2014 | , , , , ,

பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில்...!

அதிரையின் கடற்கரைத் தெருவில் நடைபெறவிருக்கும் கந்தூரி தொடர்பாக இன்று (21.11.2014) வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு, பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு, கடற்கரைத் தெரு கந்தூரிக் கமிட்டியினர் வந்திருந்தனர்.

அதிரை தாருத் தவ்ஹீத் சார்பாக

1. அதிரை அஹ்மது (தலைவர்)
2. ஜமாலுத்தீன் புகாரீ (துணைத் தலைவர்)
3. ஜமீல் முஹம்மது ஸாலிஹ் (செயலாளர்)
4. அப்துர் ரஹ்மான் (துணைச் செயலாளர்)
5. நிஜாமுத்தீன் (பொருளாளர்)
6. அஹ்மது ஹாஜா (உறுப்பினர்)
7. கமாலுத்தீன் (உறுப்பினர்)

ஆகியோர் கலந்துகொண்டோம்.

கந்தூரி வழிபாடும் ஊர்வலமும் இஸ்லாத்துக்கு எதிரானவை என்பதை அழுத்தமாகப் பதிவு செய்ததோடு, அவற்றில் எங்களுக்கு எவ்வித உடன்பாடும் இல்லை என்பதை, கூட்ட நடவடிக்கைக் குறிப்பில் எழுத வைத்தோம்.

வழக்கமாக அமர்வுக் கூட்டத்தை வழிநடத்திச் செல்லவேண்டிய கோட்டாட்சியரும் உள்ளூர் நடப்புகளை விவரிக்கக்கூடிய அதிரை நகரக் காவல்துறை ஆய்வாளரும் இல்லாமல் அமர்வு தொடங்கியது. மூன்று நாட்களுக்கு முன்னரே நமதூருக்குப் பதவியேற்று வந்திருக்கும் காவல்துறை உதவி ஆய்வாளருக்கு நமதூர் நிலவரங்களைப் பற்றி ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. உருப்படியாக அழைப்பாணை தயாரித்து அனுப்பத் தெரியாமல் கந்தூரிக் கமிட்டியினரைப் பற்றியே குறிப்பிடாமல் அழைப்பாணை வந்தது. ஆவணமாகப் பதிவாகிவிட்ட அழைப்பாணையை மாற்றவேண்டும் என்றுகூடத் தெரியாதவராக வட்டாட்சியர் செயல்பட்டார். மாவட்ட ஆட்சியாளருக்கு நாம் அனுப்பிய வேண்டுகோள் மனுவைக்கூட அவர் படித்துப் பார்க்கவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது.

நகரக் காவல்துறை ஆய்வாளர் அனுப்பியிருந்த குறிப்புகளின் அடிப்படையில் கீழ்க்காணும் 4 நிபந்தனைகளைக் கந்தூரிக் கமிட்டியினர் ஏற்றுக்கொண்டு கையொப்பமிட்டனர்:

1. கந்தூரி ஊர்வலம் செல்லும் வழி: ஹாஜா நகர், ஈஸிஆர் ரோடு, தக்வாப் பள்ளி, கீழத் தெரு, (பாக்கியாத் பகுதி நீங்கலாக) மேலத் தெரு, பெரிய நெசவுக்காரத் தெரு, சிறிய நெசவுக்காரத் தெரு, மெயின் ரோடு, தரகர் தெரு, பள்ளிவாசல் தெரு வழியாக மட்டும் ஊர்வலம் செல்ல அனுமதி.

2. ஊர்வலத்தில் 6 வண்டிகள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகிறது.

3. ஊர்வலத்தை மாலை 4:30 முதல் இரவு 7:30 மணிக்குள் முடித்துக் கொள்ளவும்.

4. ஊர்வலம் புறப்படும் இடத்தில் மட்டும் குறைந்த அளவாக வாணவேடிக்கைகள் நடத்திக் கொள்ளலாம்.

--------------0O0O00O0O00O0O00O0O0-------------

மின்வாரிய விதிமுறைகள் மீறப்பட வேண்டாம்

அதிரை உதவி மின் பொறியாளர் அவர்களுக்கு 20.11.2014 தேதியிட்டு எழுதிய கடிதம்.


--------------0O0O00O0O00O0O00O0O0-------------

கந்தூரிகளுக்குத் தடை வேண்டும்!

கந்தூரிகளுக்குத் தடை வேண்டி, மாவட்ட ஆட்சியருக்குக் கடந்த 17.11.2014 அன்று கூரியரிலும் மின்னஞ்சலிலும் அனுப்பிய வேண்டுகோள் மனு:



பகிர்வு : ADT

தர்ஹா வாதி! 17

அதிரைநிருபர் பதிப்பகம் | November 21, 2014 | , , , , , , , ,


தர்க்க வாதி!
சமூக  குதர்க்க வாதி!
ஓர் இறைக்கொள்கையை
தகர்க்கும் வியாதி!

இவர்கள்
இறை நேசிப்பாளருக்கும்
இறை மறுப்பாளருக்கும்
இடையே இருக்கும் மூடர்கள் !
இல்லாத ஆசிரியருக்கு சீடர்கள்!

அமைதிக்குச் சாமாதி கட்டுபவர்கள்!
அடக்கஸ்தலத்தின் மேல்
அபரீத  அன்பு கொள்பவர்கள்!
அடங்காதவர்கள்!

சடங்கின் போது
மூர்ச்சை இழந்தாலும்!
அதையும்
நேர்ச்சை என
கட்(சி)சை கட்டுபவர்கள்!

உயிர் இழந்தவர்கள்
உயிருடன் இருப்பதாய் வாதிப்பவர்கள்!
உயிர் இழந்தவருக்காய்
உயிரை இழந்து சாதிப்பவர்கள்!

இவர்கள்
உயிர் ஜடங்கள்!
விளங்காத ஊமைப்படங்கள்!

மண்ணறைக்காய் இறை வழிபாடை
மண்ணுள் புதைத்தவர்கள் -நாளை
பாடையில்(சந்தூக்கு) போகப்போவது அந்த
மண்ணறை என்பதை மறந்த மடையர்கள்!

கல்லறைச் சிறையில்
சில்லறை அரசியல்
இவர்கள் மூலதனம்!

இவர்கள்
நல்லது விளங்காத
செவிட்டு இனம்!

CROWN

அதிரையின் ஆட்டோ விளம்பரங்கள் - ஓர் அலசல் 10

அதிரைநிருபர் பதிப்பகம் | November 20, 2014 | , ,

எண்பதுகளில் சஊதியின் தலைநகர் ரியாதில் இருந்தபோது, நாங்கள் அமைத்த ஒரு சிறு அமைப்பான அதிரை நலச் சங்கத்திற்கு ஊரிலிருந்து விண்ணப்பம் ஒன்று வந்தது           - கீழத் தெருவைச் சேர்ந்த  அஹ்மது முஹிதீன் என்ற இளங்குருத்துக்குக் கண் பார்வை இழந்து போய்க்கொண்டிருப்பதாக. கமால் ஹுசைன், ஷரபுத்தீன் ஆகியோரின் தங்குமிடத்தில் ஒன்றுகூடினோம். அன்றையச் சூழ்நிலையில் பத்தாயிரம் சேர்ந்தது. உடனே அதை அனுப்பி, மேல்மருத்துவம் செய்யக் கோரினோம். பணத்தைப் பெற்றுக்கொண்டோர் செய்தார்கள் போலும். இறைவனின் நாட்டம் வேறு விதமாக இருந்துள்ளது; அச்சகோதரர் குணம் பெறவில்லை; கண் பார்வை அற்றவராகிவிட்டார்!

அவர்தான், நம்மூரின் ஆட்டோ விளம்பர மன்னன், 'அதிரையின் அற்புதம்', கீழத்தெரு அஹ்மது! இவருடைய கணீர்க்குரலை அதிரையின் தெருக்களில் கேட்கும்போது, காது கொடுத்துக் கேட்கவேண்டும் போல் இருக்கின்றது.

அதிரை பைத்துல்மாலின் நிரந்தர அறிவிப்பாளர் இவர். இவருக்கு பைத்துல்மால், 'வாழ்நாள் சாதனையாளர் விருது' இதுவரை கொடுத்திருப்பார்கள் என்றே நம்புகின்றேன்; எனக்குத் தெரியாது; கொடுத்திராவிட்டால், இனியாவது கொடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கின்றேன். எழுதிக் கொடுக்கும் விளம்பரத்தை வாசிக்கக் கேட்டு, அப்படியே மனத்தில் பதிய வைத்து, அட்சரம் மாறாமல் அதையே தனது கணீர்க் குரலில் ஊர் மக்கள் கேட்க உரத்துக் கூறுவார்.

பேரூராட்சியின் அடாவடி விளம்பரங்களும் இவர் மூலமே கொடுக்கப்படுகின்றன. வீட்டுவரி, தண்ணீர்வரி, சொத்துவரி என்று அதிரையின் குறிப்பிட்ட சில தெருவாசிகளிடமிருந்து மட்டும் கறக்கும் பணம் எங்கே செல்கின்றது என்று நமக்குத் தெரியாது. இதில், கொடுத்தவர்களே மீண்டும் கொடுக்கும் அப்பாவித்தனம் வேறு. மனிதர்களின் மறதியைத் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் அலுவலர்களின் அடாவடித் தனம்!

ஒரு முறை என் வீட்டுக்கு இருவர் வந்து வீட்டுவரி கேட்டார்கள். கொடுத்ததும் கொடுக்காததும் எனக்குத் தெரியாது. அதனால், "லிஸ்ட்டைப் பார்த்து, எவ்வளவு என்று சொல்லுங்கள்" என்றேன். "போன தடவை எவ்வளவு கொடுத்தீர்களோ, அதுதான்" என்றார் வந்தவர் கூலாக. "அது எனக்குத் தெரியாது; கையிலிருக்கும் பட்டியலைப் பார்த்துச் சொல்லுங்கள்" என்றேன். தன் கையிலிருந்த பட்டியலில் தேடுவதுபோல் பாசாங்கு செய்துவிட்டு, இடையில் நான், "ஏன், இல்லையா?" என்று கேட்டபோது, "உங்க கீழ்புரம் லிஸ்ட் கொண்டுவரலீங்கோ" என்றார் அந்த 'அதிகாரி'. "பின்னே என்ன சிரைக்கவா வந்தாய்?" என்று கேட்கத் தோன்றியது; ஆனால், கேட்கவில்லை. அசடு வழியத் திரும்பிச் சென்றனர். வெளியில் சென்றிருந்த என் இல்லாள் திரும்பி வந்தபோது, நடந்ததைக் கூறினேன். "அதுதான் கட்டிவிட்டோமே!" என்று கூறி, பணம் கட்டிய ரசீதை எடுத்துக் காட்டினாள்.

சரி; இனி மற்ற ஆட்டோ விளம்பரங்களுக்கு வருவோம். அஹ்மதின் விளம்பரங்களுள் பெரும்பாலானவை, 'கமர்ஷியல்' விளம்பரங்கள்தாம். "லைலாத்தி, லைலாத்தி" - இது அடிக்கடிக் கேட்கும் விளம்பரம். 'சல்மான்ஸ்', 'லுக்மான்ஸ்' என்று கூறி, "உங்களுக்குப் பிடித்த வண்ண வண்ண ஆடைகளை வாங்கிச் செல்லுங்கள்" என்று அறிவிப்பார் அஹ்மது. "இலவசம், இலவசம், இலவசம்!" என்று கூறி, மக்களின் கவனத்தை ஈர்ப்பார். அதற்குப் பின்னணியில் செலவு இருக்கும்; அது வேறு கதை. அன்று காலை (29-07-2010) ஒரு புதிய அறிவிப்பு: "தமீம் இறைச்சிக் கடை!" இன்று முதல், நோன்பு 27 வரை சிறப்புத் தள்ளுபடியில் இறைச்சி விற்பனையாம். ஏற்கனவே 'கொலஸ்ட்ரால்', BP என்று நோய்கள் கூடி இருக்கும்போது, இறைச்சி விற்பனையில் 'ப்ரமோஷன்' வேறா?

மக்களுக்குப் பயனுள்ள விளம்பரங்கள் ஒரு சில. ஆனால், அவற்றை மக்கள் எந்த அளவுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று நமக்குத் தெரியாது. 'ஷிஃபா' மருத்துவமனையின் சிறப்புச் சிகிச்சை அறிவிப்புகள், மாணவ மாணவிகளின் பள்ளிச் சீருடைகள் தயாரிப்பு, கல்வி நிறுவனங்களின் அறிவிப்பு முதலானவை.

விளம்பர அறிவிப்புகளுள், வட்டியை ஆதாரமாகக் கொண்ட வங்கிகள், இன்ஸ்யூரென்ஸ், மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் போன்றவையும் அடங்கும். "MGR ஐஸ்கிரீம்" வண்டி தவறாமல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வந்து, பிள்ளைகளை அடம்பிடிக்க வைக்கும்.

வேண்டுமென்றே மக்களின் வெறுப்பைத் தேடிக்கொள்வதற்காக, பிறமத அன்பர்கள் சிலர் அம்பாசிடர் கார்களில் இடையிடையே நம் பகுதிக்குள் வந்து, தம்மைச் சார்ந்தோரின் மரண அறிவிப்புகளைச் செய்கின்றனர். இதில், நம்மூரின் சுற்று வட்டாரங்கள், பட்டுக்கோட்டை போன்ற இடங்களின் மாற்று மத அன்பர்கள் வந்து தொல்லை கொடுக்கின்றார்கள். தேவையற்ற இத்தகைய அறிவிப்புகள் அத்துமீறல்கள் என்பதை 'பேரூராட்சியின் ஆளுநர்கள்' சிந்திப்பார்களா?

நமதூர் ஆட்டோ விளம்பர நிலவரத்தை விரைவாக அலச நினைத்தபோது, எனது சிந்தனையில் வந்தவை இவைதாம். இதில், யாரையும் சாடுவதோ, அளவுக்கு மீறிப் புகழ்வதோ எனது நோக்கமன்று. பின்னூட்டமிடுபவர்களின் மனப்பாசறைகளில் இன்னும் ஏராளம் இருக்கலாம். பகிர்ந்துகொள்ளுங்கள், பார்ப்போம்.

அதிரை அஹ்மது
29.07.10

கரை ஏறுங்கள் 'கறை' நீங்கும் ! 19

அதிரைநிருபர் பதிப்பகம் | November 18, 2014 | , , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய கடற்'கரை'த் தெரு சகோதரர்களுக்கு,

இப்படி ஒரு கடிதம் எழுத வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு.  இதன் விளைவு சாதகமா பாதகமா என்பதைப் பற்றி என்னால் கணிக்க முடியவில்லை. இருப்பினும், இனியும் தாமதித்தால் அதனால் ஏற்படும் குற்ற உணர்ச்சி என்னை வதைக்கும்.

நான் அதிரை வாசி.  கடற்'கரை'த்தெரு என் பிறப்பிடம். வளர்ந்தது படித்தது என்று என் சிறு பிராயத்து மற்றும் இளமைக் காலத்து சந்தோஷங்கள் எல்லாம் எனக்கு அள்ளித் தந்தது கடற்'கரை'த் தெருவின் பாரம்பர்யம் மிக்க வாழ்க்கை முறை. 

ஒரு பிரச்னை என்று வந்துவிட்டால் யாரையும் விட்டுக் கொடுக்காமல் ஒன்று சேர்ந்து கொள்ளும் ஒற்றுமை; யாரையும் ஏமாற்றத் தெரியாமல் உழைப்பைக் கொண்டு மட்டுமே உயரும் ஆண்மை மிக்க ஆண்கள்; புறத்து ஆண்களால் அதிகம் அறியப்படாத மார்க்கம் பேணும் பெண்கள், மொத்த தெருவும் ஒரே குடும்பம் என்னும் பாங்கினாலான அன்பு, பாசம், தோழமை. சகோதரத் தெருக்களுக்குத் தீய சக்திகளால் ஏதும் பிரச்னை என்றால் ஆதரவாக வரிந்து கட்டிக்கொண்டு களம் இறங்கும் துணிவு என்று மகிழ்ச்சியான சமூக அமைப்பு என்றுமே நம் தெருவை சிறப்பாகவும் வித்தியாசப்படுத்தியும் காட்டும். இத்தனை சிறப்பு வாய்ந்த நம் தெருவின் அவமானமாகச் சின்னமாக, பலரது கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாக வைத்திருக்கும் விஷயத்தைப்பற்றிதான் இக்கடிதம். 

என் சிறுபிராயத்தில் நம் தெருவில் எனக்கு மிகவும் பிடித்தவற்றில் முக்கியமானவை இரயில் நிலையம், கடற்'கரை', கஸ்டம்ஸ் கட்டடங்கள், உப்பளங்கள், ஏரி, ஏரியின் வடிகால்களான சிற்றோடைகள், குளங்கள், புளிய மர மேடைகள், பள்ளிவாசல் மற்றும் தர்ஹா. 

மற்ற விஷயங்களைப் பற்றி பிறிதொரு சமயத்தில் பேசலாம். ஏனெனில், இக்கடிதம் எழுதக் காரணமாக அமைந்த தர்ஹாவைப்பற்றி மட்டும் பேசவே இதை இந்தச் சமயத்தில் எழுதுகிறேன்.

சொல்வதற்கு சற்று மிகையே என்றாலும், அரேபியாவின் ஜாஹிலியாவைப் போன்றே என் வயதையொத்த பலரது அதிரை தினங்கள் கழிந்தன. என் பிள்ளைப்பிராயத்து நினைவுகள் என்றுமே என்னிடம் பசுமையாக நினைவில் நிற்கும்.  ஹந்தூரி காலம் வந்துவிட்டால் தெருவே கலை கட்டும்.  நம் தெருவுக்கு இது மூன்றாவது பெருநாளோ என்று சொல்லும் அளவுக்கு ஹந்தூரி ஏற்பாடுகள் மிக சிரத்தையாக மேற்கொள்ளப்படும்.  ஹந்தூரி படு விமர்சையாக அமைய வேண்டும் என்கிற ஆசை நம் தெரு வாசிகள் எல்லோர் நெஞ்சிலும் நிலைத்து இருக்கும். 

கொடிமரம் ஏற்றும் நாளிலிருந்து கூட்டு இரவு வரை நம் தெருவாசிகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் அழ்ந்து போவார்கள்.  ஏதோ அல்லாஹ்வின் கட்டளையை இனிதே நிறைவேற்றிவிட்டதுபோல் திருப்தி மனதில் நிலவும். வாப்பா உம்மா மற்றும் உஸ்தாது கற்றுத் தந்த மார்க்கத்தில், வேறு எந்த மதத்திற்கும் குறைவில்லாத அளவுக்கு கேளிக்கைகளும் கூத்தும் கும்மாளமும் நம் தெருவில் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் நடந்தேறும்.

எல்லாம் ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரை எனக்கும் மகிழ்ச்சியான கொண்டாட்டங்களாகத்தான் பட்டன. பெரியவர்கள் வழியைப் பின்பற்றுதலே இஸ்லாம் என்று மூளைச் சலவை செய்யப்பட்ட சந்ததியாகவே நாங்கள் வளர்க்கப்பட்டோம். காலங்கள் செல்லச் செல்ல் நான் வளர என்னோடு சேர்ந்த இயல்பாகவே அறிவும் வளர்ந்தது. மொழிபெயர்க்கப்பட்ட குர் ஆன், ஹதீஸ் தொகுப்புகள் வாசிக்கக் கிடைத்தன. ஏன் எதற்கு என்று கேள்விகள் பிறந்தன. எல்லாவற்றிலும் இணைவைப்பின் தீமை பற்றி மிக விளக்கமாகச் சொல்லப்பட்டிருந்தது.  தர்ஹா இணைவைப்பின் அடையாளம் என்பது விளங்கிற்று.  எனக்குத் தெரிந்ததை என் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் சுலபமாக எத்தி வைத்து அவர்களிடம் மாற்றம் கொணற முடிந்தது. ஆனால், வயதில் மூத்தவர்களில் பலர் தர்ஹா கலாச்சாரத்திலிருந்து வெளிவர விரும்பவில்லை.  அதை ஒரு அங்கீகரிக்கப்பட்ட மார்க்க கிரியையாகவே கண்டனர்.  அதனால், அறியாமல் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்.  கால ஓட்டத்தில் ஹந்தூரி தீவிரவாதிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வந்தாலும் இன்னும் முழுமையாக இல்லாமல் போகவில்லை.

பெருத்த வணிகமாகிவிட்ட நாகூர் அஜ்மீர் போன்ற தர்ஹாக்களை அனுகுவதே பெரும் சவாலாக இருக்கின்ற இக்காலகட்டத்தில் ஒரு சமுதாயச் சீர்திருத்தத்திற்கான புரட்சி வித்தாக நம் தெருவின் ஹந்தூரியை நடத்த விடாமல் நிறுத்த வேண்டும்.  முடியவில்லை என்றால் குறைந்த பட்சம் அதற்கு ஆதரவு கொடுக்காமல் எதிர்க்க வேண்டும்.  

என் சகோதரா,  ஹந்தூரி ஒரு இஸ்லாமியச் சமூகத்தின் கலாச்சாரச் சீர்கேடு என்பதை அறிந்து கொள். கேளிக்கைகளின்மீதான மனிதனின் இச்சையை வெளிப்படுத்தும் ஒரு அலங்கோலம் ஹந்தூரி. ஒரு சில சுயநலமிகளின் பொருளாதாரத் தேவைகளுக்காக நடத்தப்படும் நாடகம் ஹந்தூரி. நரக நெருப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் ஹந்தூரியிலிருந்து உன்னைக் காப்பாற்றிக்கொள்.

அவுலியாவிடம் உன் வேண்டுதல் – அது
முகவரி தவறிய கடிதமே
தீர்வுகள் வேண்டிய இறைஞ்சலை – நீ
தீர்ப்பவன் இடமே கேட்கவும்!

அன்புடன்,
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

நண்டும் நரியும் 10

அதிரைநிருபர் பதிப்பகம் | November 17, 2014 | , ,

நீலக்  கடலின்  அலையோசை - எம்
  நெஞ்சக்  கதவைத்  தட்டியபின்
காலைக்  கழுவித்  தூய்மையுடன் - மண்
  கரையில்  வந்து  நின்றோமே.

கரையில்  நின்ற  பாத்திம்மா - தன்
  கண்ணில்  பட்ட  நண்டொன்றை
அருகில்  கண்டு  பதறிப்போய் - ஓடி
  அணைத்துக்  கொண்டாள்  உம்மாவை.

தண்ணீ  ருக்குள்  ஓடாமல் - போய்த்
  தரையில்  கண்ட  பொந்துக்குள்
மண்ணே  தனது  வீடென்று - தான்
  மறைந்த  நண்டைக்  கண்டோமே.

“நண்டின்  கதியை  அறிவீரோ? - ஒரு
  நரியொன்  றுக்கது  விருந்தாகும்
வண்டி கிளம்பிச் சென்றவுடன்–நரி
  வந்து  திரிந்தே  இரைதேடும்.

“அந்தி  வேளை   யானவுடன் - அது
  அமைதி  யாக  வந்தந்தப்
பொந்துக்  குள்ளே  வால்விட்டுத் - தன்
  பொறுமை  காக்கும்  தந்திரமாய்.

“வானைப்  பார்த்த  சிறுநண்டோ – தன்
  வாயால்  கவ்விப்  பிடித்துவிடும்
தேனை  உண்ட  மகிழ்வோடு - நரி
  திடுமென  வாலை  வெளியாக்கும்.

“அச்சம்  ஊட்டிய  நண்டதனை - நரி
  அடித்து  நொறுக்கித்  தின்றுவிடும்
இச்சிறு  வாழ்வின்  நிலையிதுதான்” - என
  எடுத்துச்   சொன்னார்  வாப்பாவும்.

அதிரை அஹ்மது

சூனியம் வைக்கத் தூண்டியது யார் ? - காணொளி 7

அதிரைநிருபர் பதிப்பகம் | November 16, 2014 | , , ,

அதிரையில் அமைதியாக நிகழ்ந்தேறிய ADT v/s TNTJ விவாதத்தின் கருப் பொருளை முடக்க முயன்றவர்களின் சூழ்சிக்கும் அவர்களின் எதிர்பார்ப்புக்கும் சவுக்கடி கொடுக்கும் விதமாக அமைந்ததை காணொளிகள் அனைத்தும் வெளியான பின்னர் அனைவரும் அறிந்து கொண்டனர்.

விவாதக்களத்தின் முன்றாவது நாள் அதிரை தாருத் தவ்ஹீத் செயலாளர் சகோ ஜமீல் M.ஸாலிஹ் அவர்களின் தெளிவான அறிவிப்பும் எழுப்பப்பட்ட வேள்விகளுமே இந்த கணொளிப் பதிவின் தலைப்பு விடுக்கும் வினாவிற்கான விடையும் உள்ளடக்கியிருப்பதை அனைவரும் நன்கறிந்து கொண்டனர் - அல்ஹம்துலில்லாஹ் !


அதிரைநிருபர் பதிப்பகம்

வரலாறுகள்! வழக்குகள்! வல்லரசுகள்! வடிக்கப்படும் இரத்தம்!

பாலஸ்தீனம்...

17

அதிரைநிருபர் பதிப்பகம் | November 15, 2014 | , , ,

தொடர் : பகுதி பதினாறு

கடந்த சில அத்தியாயங்களில் யூதர்களின் அறிவுக் கூர்மை மற்றும் ஆற்றல்களைப் பற்றி புகழ்ந்து பேசினோம். அப்படிப்பட்ட யூதர்களையே நசுவினி ஆற்றுக்குக் கூட்டிப் போய் தண்ணீர் காட்டினார் ஒருவர். அவரின் பெயர் ஷாப்பேடை ட்ஜ்வி. Shabbetai Tzvi. இந்த அத்தியாயத்தில் இவரைப் பற்றி பேசக் காரணம் யூதர்களும் எந்நாளும் புத்திசாலிகளல்ல அவர்களிலும் ரசிகர் மன்றங்கள் அமைக்கும் அளவுக்கு உற்சாக மடையர்களும் இருந்தார்கள் என்பதை சுட்டிக் காட்டத்தான். 

அது மட்டுமல்லாமல், யூதர்களை சீராட்டித் தாலாட்டி பாலூட்டிய உஸ்மானிய துருக்கி சுல்தான் கோபப்படும் அளவுக்கு நாம் குறிப்பிட்டு இருக்கிற ஷாப்பேடை ட்ஜ்வி Shabbetai Tzvi யுடன் சேர்ந்து யூதர்கள் அடித்த கூத்தையும் இஸ்லாத்துக்கு மாறுபாடான நிகழ்வுகளையும் நினைவுபடுத்தவும் இஸ்லாத்துக்கு மாறுபாடு செய்வதாக எண்ணிக் கொண்டு தங்களின் தலைகளில் தாங்களே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்ட யூதர்களையும் சுட்டிக் காட்டத்தான். 

விஷயத்துக்கு வரலாம். 

யூதர்களின் வரலாறு பல வெற்றிகரமான கதாநாயகர்களையும் பல வில்லன்களையும் காட்டித்தந்து இருக்கிறது. அவர்களுக்கிடையில் ஒரு கோமாளியும் குதித்தான் என்பது மட்டும் செய்தியல்ல அந்த கோமாளியை நாட்டுக்கு சேவை செய்ய நாகரிகக் கோமாளி வந்தானய்யா! என்று யூதர்கள் ஆட்டம் ஆடி பாட்டுப்பாடி ஆதரித்ததுதான் கொடுமை. 

இந்த ஷாப்பேடை ட்ஜ்வி Shabbetai Tzvi என்பவன் ஒரு டுபாக்கூர். ஆனாலும் ஒரு குறிப்பிட்ட காலம் யூதர்களின் எல்லாமாக இவன் இருந்தான். இறுதியில் இவன் எடுத்த முடிவு இறைவன் இவனுக்கு விதித்த விதி. இவனது கதையைத் தெரிந்து கொள்ளும் முன்பு ஒரு செய்தியை நாம் தெரிந்து கொள்ளலாம். அந்த செய்தி என்னவென்றால் யூதர்களாகப் பிறந்தவர்கள் வேறு எந்த மதத்துக்கும் மாறிக் கொள்ளலாம். ஆனால் வேறு எந்த மதத்திலிருந்தும் யூத மதத்துக்கு மாற முடியாது என்பதுதான். அதாவது யூதனாக வேண்டுமானால் யூதனாகப் பிறக்க வேண்டும் என்பதே அந்த செய்தி.

யூதர்கள் பற்றிய பல வரலாற்றுச் செய்திகள் நிலத்தை நடுங்க வைத்திருக்கின்றன. அவற்றில் ஒரு செய்தி Shabbetai Tzvi, தன்னை ஒரு இறைத் தூதர் என்று கூறிக் கொண்டதும் அதை யூதர்கள் கொண்டாடி ஏற்றுக் கொண்டதும்தான். எப்படி இருக்கிறது இந்தக்கதை? இவருக்கு இப்படி சொல்லிக் கொள்ளும் துணிச்சல் எப்படி வந்தது. அவருடைய வரலாற்றை ஒரு பார்வை பார்த்துவிடுவோம்.

இன்றைக்கும் சிலர் தங்களை முன்னிலைப் படுத்திக் கொள்ள சில ஸ்டண்டுகளை அடிக்கிறார்களே – தாங்கள் சொல்வதுதான் சரி என்று தலையாட்ட ஒரு கூட்டத்தை கூவ வைத்து வளர்க்கிறார்களே- அது போல ஒரு ஸ்டண்ட் வாழ்க்கைதான் ட்ஜ்வி உடையதும். 

இளவயதில் எகிப்து முதலிய நாடுகளில் சுற்றிக் கொண்டிருந்துவிட்டு பின் துருக்கியில் இருந்த இஜ்மீர் என்ற ஊரிலிருந்து 1662 ஆம் ஆண்டு ஒரு சாதாரண பிழைப்புத்தேடி வந்த யூதனைப்போல் ஜெருசலத்துக்குள் புகுந்தார். அப்போது அவரது வயது இருபத்தி இரண்டு. ஆனால் இந்த இளவயதில் யூத மத்தத்தின் உயர்ந்த அந்தஸ்துகளில் ஒன்றான ‘ரபி’ என்ற நிலையை அவர் அடைந்து இருந்தார். இவ்வளவு இளவயதில் ‘ரபி’ என்கிற அந்தஸ்து அபூர்வமானது. இந்தப் பட்டமே இவருக்கு மக்களிடையே ஒரு ஈடுபாட்டை ஏற்படுத்தியது. அவர் ஜெருசலத்தின் உள்ளே வந்த போது இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்கிற மாதிரி அப்பாவியாகவே வந்தார். ஆனால் வெகு விரைவில் ஜெருசலத்தில் வாழ்ந்த யூத சமுதாயத்தின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டார். யூதர்கள் ஒரு திட்டத்தை செயல்படுத்த முன் கூட்டியே திட்டமிடுவதில் பெயர் பெற்றவர்கள். ஆனால், அப்படிப்பட்ட அந்த யூத திருநெல்வேலிக்கே அல்வா கொடுத்தார் இந்த ட்ஜ்வி.

ஒரு கையளவே இருந்த காலத்தில் யூத சமுதாயத்தின் ஏற்ற இறக்கங்களுக்கு முழுப் பொறுப்பேற்றவராக ட்ஜ்வி திகழ்ந்தார். பல நூற்றாண்டுகளுக்குப் பின்பு இன்றும் கூட இவர் ஏற்படுத்திய தாக்கங்கள் யூத சமூகத்தால் அலசப்படுவதும் நினைவுகூறப்படுவதையும் நாம் குறிப்பிட்டாக வேண்டும். 

உண்மையான இறைத்தூதர்கள், தாங்கள் எந்த சமுதாய மக்களின் மத்தியில் பிறந்து வாழ்ந்தார்களோ அதே சமுதாய மக்களால் மறுக்கப்பட்டு பல வேதனைகளுக்கும் ஆளாக்கப்பட்டனர் என்பதே வரலாறு. ஹஜரத் நூஹு (அலை) முதல் ஹஜரத் மூசா (அலை) முதல் ஹஜரத் ஈசா (அலை) முதல் இறுதித்தூதர் எம்பெருமானார் (ஸல்) அவர்கள் வரை இறைத்தூதர்கள் மறுக்கப்பட்டதையும் வெறுக்கப்பட்டதையும் நாம் மறுக்க இயலாது; மறக்க இயலாது. ஆனால் ட்ஜ்வி தன்னை இறைத்தூதர் என்று இறைவனின் தரப்பிலிருந்து ஒரு வானவர் வந்து தன்னிடம் அறிவித்தார் என்று சொன்ன போது அதைப் பற்றி சிந்தித்தவர்களை விட உற்சாகமாக கைதட்டி வரவேற்றவர்களே அதிகம். 

காரணம்?

இறைவனின் இறுதித்தூதர் மக்காவில் பிறந்து மதினாவில் ஆட்சியமைத்தார் என்பதை மனதார வெறுத்துக் கொண்டிருந்த யூதர்கள் – அந்த யூத சமுதாயம் தாங்கள் இழைத்துக் கொண்ட தவறுகளாலும் வாக்கு மீறல்களாலும் தண்டனைகளுக்கு ஆளாகி – மதினாவின் இஸ்லாமிய ஆட்சிக்கு எதிராக குறைஷியர்களுடன் ஒன்று சேர்ந்து கொண்டு அகழ்ப்போர் ஏற்படக் காரணமாக இருந்த காரணத்தாலும் – பனு குறைளா மற்றும் கைபர் போர்களில் பல யூதர்கள் கொல்லப்பட்டதும் யூதர்களின் நெஞ்சங்களில் பெருமானார் ( ஸல் ) அவர்களின் மீது ஒரு வித வெறுப்பை தலைமுறைகள் தாண்டியும் வளர்த்துவிட்டு இருந்தது. 

இந்த நிலையில் இறைவனின் இறுதித்தூதர் அரபுகளில் வம்சத்தில் வந்த முகம்மது ( ஸல்) அவர்கள் வாழ்ந்து ஆண்டு வரலாற்று சாதனைகளை நிகழ்த்தி மறைந்தபிறகும் - அவை அனைத்தையும் விட மேலாக, பல பாரம்பரியம் மிக்க யூதர்கள் பெருமானார் (ஸல்) அவர்கள்தான் இறுதி நபி என்று தங்களின் வேதங்களில் வந்துள்ள செய்திகளை சான்றாகவும் சாட்சியாகவும் பல சம்பவங்களில் கூறிய பிறகும் - தங்களது யூத குலத்தில் பிறந்த ட்ஜ்வி மீண்டும் ஒரு இறை தூதராக அவதரித்தார் என்ற செய்தி பரப்பப்பட்டதும் அவரை உண்மைக்கு மாறானவர் என்று எண்ணாமல் கரம் நீட்டி வரவேற்று மகிழ்ந்தனர். 

தங்களுக்கு அடைக்கலம் அளித்து ஆதரித்த, இஸ்லாமியரான உஸ்மானியப் பேரரசின் மன்னர், தங்களது இந்த கூற்றை (கூத்தை) கை தட்டி வரவேற்று ரசிப்பாரா – இதை எப்படி எடுத்துக் கொள்வாரென்று எல்லாம் யூதர்கள் சிந்திக்கவில்லை; ட்ஜ்வியும் தனது சொல்லாற்றலால் இவைகளை சிந்திக்க விடவில்லை.

ட்ஜ்வியைப் பொறுத்தவரை மிகவும் திட்டமிட்டு காய்களை நகர்த்தினார். நாலு பேருக்கு நடுவில் தன்னை மிகுந்த ஒழுக்க சீலராக காட்டிக் கொண்டார். தனிமையில் தவத்தில் இருந்தார் ; தீவிரமான நோன்புகளைப் பிடித்தார்; பிரார்த்தனைக் கூட்டங்களில் நல்லுபதேசங்களை  அருளினார்;  தனிமையில் (Judean hills) ஜீடன் மலைக் குன்றுகளில் நடந்து திரிந்தார். நாடு கடந்து அடைக்கலம் பெற்று வந்த ஒரு சிறிய எண்ணிக்கையிலான யூத சமுதாயத்தின் நடுவில் தன்னை ஒரு தானைத் தலைவனாக காட்டிக் கொள்வது ட்ஜ்விக்கு ஒரு சிரமமான காரியமாக இல்லை. அப்போது அவருக்கு வயது முப்பத்தாறு. யாரையும் வசீகரிக்கும் அழகான தோற்றமும் தேஜசும் அவரது பிளஸ் பாயிண்டாக இருந்தன. மிகவும் எளிதாக அவனது வலையில் யூதர்கள் விழுந்தனர். அவரது சொல்லுக்கும் -   சொல்லுக்கு மட்டுமல்ல அவர் இசையமைத்துப் பாடிய இறைவணக்கப் பாடல்களுக்கும் தலையாட்டினார்கள். 

முதலாவதாக யூத மத சம்பிரதாயப்படி, இறைவனைப் புகழ்ந்தும் குறிப்பிட்டும் சொல்லும் ஒரு ஹீப்ரு மொழியின் வார்த்தையை பல உயர்ந்த அந்தஸ்து உள்ளவர்கள் கூடி இருந்த கூட்டத்தில் அவர் உச்சரித்தார். இப்படி அவர் அந்த ஹீப்ரு வார்த்தையை உச்சரித்தது பலரை சிந்திக்க வைத்தது. யூத மதத்தின் பெரும் முனிவர்கள் கூட அந்த ஹீப்ரு வார்த்தையை உச்சரிக்கக் கூடாது. இறைவனிடம் நேரடித்தொடர்பு உடையவர்கள்தான் அதை உச்சரிக்க முடியுமாம். அப்படிப்பட்ட தகுதியான வார்த்தையை உச்சரித்து அனைவரையும் அசத்தினார் ட்ஜ்வி. 

அடுத்து, ஜெருசலத்தில் ஹஜரத் சுலைமான் (அலை) அவர்கள் கட்டிய தேவாலயம் இடிக்கப்பட்டதாக கூறி அந்த நாளை மன்னர் சாலமனின் தேவாலயம் இடிக்கப்பட்ட நாள் என்று யூதர்கள் கொண்டாடுவார்கள். ஆனால் ட்ஜ்வி இனி அந்த நாளை தனது பிறந்த நாளாகக் கொண்டாடும்படி கட்டளை இட்டார். காரணம் தேவாலயம் இடிக்கப்பட்ட நாளில்தான் இவ்வுலகின் இறைவன் தன்னை உதிக்கச் செய்தான் என்றார்.

அதற்கும் பிறகு, ‘தேராவை மணந்து கொள்வது’ என்று யூதமதத்தில் ஒரு சடங்கு இருந்தது. இதன் பொருள் என்னவென்றால் துறவற வாழ்வை மேற்கொள்வது என்பதாகும். இப்படி இவர் துறவிக் கோலம் பூண்டபிறகு யூதர்கள் கூட்டம் கூட்டமாக கண்ணீர் மல்க ட்ஜ்வியை நோக்கித் திரள ஆரம்பித்தார்கள்- கைகளில் காணிக்கையுடன்தான். 

இத்தகைய நிலை ஏற்பட்ட பிறகு அவருக்கு யூதர்கள் வசிக்கும் உலக நாடுகளின் சில பகுதிகளுக்கு ஒரு சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு யூத சமூகத்தை ஒன்றிணைப்பது அவசியமாயிற்று. இந்தப்பணியை kehillah என்றழைக்கிறார்கள். அதன்படி, எகிப்தின் கெய்ரோ , ஹெர்பன், ஜெலேபி, காஸாபோன்ற பகுதிகளுக்கும் அங்கிருந்த யூதர்களின் புனித இடங்களுக்கும் குகைகளுக்கும் சென்று பிராத்தனக் கூட்டங்கள் நடத்தினார். பெரும் பணம் திரண்டது. வசூலித்து வாரி எடுத்து வைத்துக் கொண்டார் பற்றற்ற துறவி.

இப்படி ஒரு வெற்றிகரமான சுற்றுப் பயணத்தின் நிறைவாக, ட்ஜ்வி பாலஸ்தீனத்துக்கு மீண்டும் வந்தார். தங்களின் தூதரைப் பிரிந்திருந்த யூதர்கள் தேவாலயங்களில் திரண்டனர். அப்படித் திரண்ட மக்கள் வெள்ளத்தின் மத்தியில் “ தூதர்களின் அரசர் “ என்கிற பட்டம் அவருக்கு சூட்டப்பட்டது. பட்டத்தை சூட்டியவர் அன்றைய யூதர்களின் தலைமை குருவான நாதான் (NATHAN) என்பவராவார். பலத்த கரகோஷங்களுக்கிடையே “ இனி எனக்கு இந்த நாதான் தான் ஜோவான் “ என்று அறிவித்தார் ட்ஜ்வி. ( ஜோவான் என்பவர் யோவான் என்ற பெயரில் அழைக்கப்படும் இயேசு கிறிஸ்துவின் பிரதான சீடர் என்று பைபிளில் குறிப்பிடப்படுகிறார்.) 

இந்த அறிவிப்பால் உசுப்பிவிடப்பட்ட நாதான், “ மக்களை நோக்கி இனி ட்ஜ்வி நமது இறைத்தூதர். அவரது கருணையாலும் இறைவனுக்கும் அவருக்குமுள்ள நெருக்கத்தாலும் உஸ்மானிய துருக்கியின் ஆளுமைக்குட்பட்ட அடிமை பாலஸ்தீனத்தை சுதந்திர பாலஸ்தீனமாக ஆக்கி உலகெங்கும் சிதறுண்டு கிடக்கும் யூத மக்களை ஒன்றுதிரட்டி குடியமர்த்துவார்" என்று அறிவித்தார். தவளை தான் வாயால் கெட்டது. நிகழ்வுகளைக் கேள்வியுற்ற உஸ்மானிய துருக்கியின் மன்னர் இன்னும் மவுனம் காத்தார் ; பொறுமை காத்தார்.

இந்தப் பொறுமையின் காலம் இன்னும் பதினைந்து ஆண்டுகள். இந்த இடைப்பட்ட காலத்தில் இறைத்தூதர் என்று சொல்லி பல கூத்துக்களையும் அடித்தார் ட்ஜ்வி. பதினைந்து ஆண்டுகள் உலக சுற்றுப் பயணம். அங்கு பேசும்போதெல்லாம் , மீண்டும் ஜெருசலத்துக்கு செல்லும்போது ஒரு சிங்கம் எனது வாகனமாக இருக்கும் என்றும் ஜெருசலம் தங்களின் தலைநகராக இருக்குமென்றும் பல நாடுகளில் அறிவித்தார்.

உஸ்மானிய துருக்கிய மன்னர் இவற்றை கவனித்துக் கொண்டே இருந்தார். மீண்டும் பாலஸ்தீனத்துக்கு சிங்கத்தின் மீதேறி செல்வேநென்று அறிவித்த ட்ஜ்வி சில பாடல்களைப் பாடிக் கொண்டு தனது துதிபாடிகளுடன் துருக்கிக்குள் நுழைந்தார். இதற்காக காத்திருந்த சுல்தான், இனியும் பொறுக்க இயலாது எரி தழல் கொண்டுவா! என்று இறைத்தூதர் என்று தன்னை அறிவித்த ட்ஜ்வியைக் கைது செய்து கொண்டுவரும்படி தனது இராணுவத்துக்கு ஆணையிட்டார். தலையைத் தொங்கப் போட்ட பொய்த்தூதர் புன்சிரிப்புடன் கைகளில் விலங்குடன் அரசவைக்கு முன் நிறுத்தப்பட்டார்.

ஒரே மணி நேரத்தில் ட்ஜ்வியின் மீது பறந்துகொண்டிருந்த யூதர்களின் கொடி அகற்றப்பட்டது . ஆடம்பர அணிகலன்கள் அனைத்தும் களையப்பட்டு - பறிமுதல் செய்யப்பட்டு நேரடியாக துருக்கியின் சிறைக்கூடத்துக்கு அனுப்பப்பட்டார். அப்போதும் சிரித்துக் கொண்டே நடந்தார் பொய்த்தூதர். யூத சமூகம் கண்ணீர் விட்டழுதது; பால்குடமும் பன்னீர் குடமும் எடுத்தது. “நாட்டாமை! தீர்ப்பை மாற்றிச் சொல்லு ! “ என்று கதறாத குறைதான். (அண்மை நிகழ்வுகள் நினைவுக்கு வந்தால் நாம் பொறுப்பல்ல)

இறைவனருள் பெற்ற தூதரைக் காப்பாற்ற இறைவன் ஏதாவது அற்புதங்கள்- அதிசயங்களை அன்றே நிகழ்த்திக் காட்டி தனது தூதரை இரட்சிப்பார் - இதோடு துருக்கி அரசின் ஆட்சி கட்டில் ஆட்டம் காணப்போகிறது என்றெல்லாம் உலக யூத சமுதாயமே எதிர்பார்த்து ஏங்கிக் கிடந்தது. ஆனால் அன்றைக்குப் பார்த்து வழக்கமாக அடிக்கும் கடல் காற்று கூட வீசவில்லை.

இருந்தாலும், இறைவன் ட்ஜ்வியை இரட்சித்தான். எப்படி ? இறுதிக்காட்சிகள் இப்படித்தான் இருந்தன.

சிறையின் சுவர்களை வெறித்துப் பார்த்தபடி இருந்து கொண்டு இருந்த ட்ஜ்விக்கு மன்னர் ஒரு வாய்ப்புத் தந்தார்.

ஒன்று ஏக இறைவனை ஏற்று இஸ்லாத்தில் இணைய வேண்டும் இல்லையேல் சாகத் தயாராக வேண்டு மென்பதே அந்த வாய்ப்பு. 

ஆட்டம் போட்ட மனிதரும் ஆரவாரம் செய்தவரும் கோட்டை கட்டி வாழநினைத்தவரும் தூக்கி வைத்த துருக்கி மன்னரைத் தோற்கடித்து சிங்கத்தின் மீதேறி பாலஸ்தீனத்தின் மன்னராக செல்வேநென்று அறிவித்தவரும் பொன்னும் மணியும் புகழும் பணமும் கமழும் மணமும் கண்ணீர் விட்டுக் காத்திருந்த கூட்டமும் துறவற மனமும் ட்ஜ்விக்கு தனது உயிருக்கு முன்னால் தூசியாகப் போனது. உயிர்ப் பசி வந்திட பத்தும் பறந்து போனது. அடைந்தால் திராவிடநாடு இல்லாவிட்டால் சுடுகாடு என்று முழங்கியவர்கள் தடைச் சட்டம் வந்ததும் துண்டைக் காணோம் துணியைக் காணோமென்று ஓடிய நிகழ்வு ஏனோ இப்போது நினைவுக்கு வருகிறது. 

ஒரு துண்டை எடுத்து துருக்கியின் மன்னர் முன் விரித்து ‘லா இலாஹா இல்லல்லாஹ் முகம்மத் ரசூலுல்லாஹ்’ என்ற திருக் கலிமாவை ஓதி தன்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டு உயிர்ப் பிச்சை பெற்று மக்களோடு மக்களாக மறைந்து போனார். அதற்குப் பின் யூதர்கள் பூதக் கண்ணாடி வைத்து தேடியும் தென்படவில்லை.

இறைத்தூதர் என்று யூதர்களால் பொய்யாக கொண்டாடப்பட்ட ட்ஜ்விக்கு இஸ்லாத்தைக் கொடுத்து இறைவன் இரட்சித்துக் கொண்டான். யூதர்கள் மீண்டும் அனாதையாக உணர்ந்தார்கள். அடுத்தது என்ன என்று ஆலோசிக்கத் துவங்கினார்கள். உலகவரலாறு, ட்ஜ்வியின் வரலாற்றை நகைச்சுவைக் காட்சிகளாக சித்தரிக்கிறது. 

இந்த சம்பவத்திலிருந்து துருக்கி அரசு தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டது. 

அடுத்த காட்சிகள் இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம். 
=========================================================================================
நன்றி : Dovid Rossoff Land of Our Heritage, Safed: The Mystical City, and The Tefillin Handbook

இபுராஹிம் அன்சாரி


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு