அல்லாஹ்வின் பெயரால்.
அல்ஹம்துலில்லாஹ். பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில், கடற்கரைத் தெரு கந்தூரி ஊர்வலம் தொடர்பாய், தாரூத் தவ்ஹீது அமைப்பிற்கும், கந்தூரி கமிட்டியினருக்கும் வட்டாட்சியர் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. தான் விளங்கி இருந்த தகவல்படி கந்தூரியினருக்கு இடஞ்சல் இல்லாத வகையில் ஊர்வலத்தை எவ்வாறு நடத்துவது என்பது பற்றி ஆரம்பித்த வட்டாட்சியர். இரு தரப்பின் வாதங்களை கேட்டப்பின் இவர்கள்தான்( தாரூத் தவ்ஹீது) உண்மையான முஸ்லிம்கள். நீங்களும் (கந்தூரி கமிட்டியினரை) இவர்களை போல் முஸ்லிம்களாக மாறிவிடுங்கள் என்றார்.
பாகியத்துஸ்ஸாலிஹாத் பள்ளியை சுற்றி வருவதில் கமிட்டியினர் பிடிவாதம் காட்டியதை தொடர்ந்து,
கந்தூரி ஊர்வலம் கலவரத்தை தூண்டவே நடக்கிறது எனவே சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கருதி ஊர்வலத்திற்கு தடை விதிக்கிறேன். என சிறப்பானதோர் முடிவு எடுத்து அமைதி பேச்சுவார்த்தையை கலைத்து விட்டார். கந்தூரி கமிட்டியினர் அப்ஜக்ஷனை கலக்டரிடம் தெரிவித்துக்கொள்ளுங்கள். என்று முடித்துவிட்டார்.
நன்றி : அதிரைந்தாருத் தவ்ஹீத்

