Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label ரஃபியா. Show all posts
Showing posts with label ரஃபியா. Show all posts

முன்னாள் ஹஜ் கான்சலருடன் சந்திப்பு! 6

அதிரைநிருபர் பதிப்பகம் | July 07, 2013 | , , , , , , ,


இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் ஹஜ் கான்சலாக சகோதரர் முபாரக் அவர்களும் துணை ஹஜ் கான்சலாக சகோதரர் S.D.மூர்த்தி அவர்களும் நியமிக்கப்பட்டு அற்புதமான பணிகளைச் செய்தனர்.

சகோதரர் மூர்த்தி ஐயா அவர்களால் ஹஜ் டூட்டியை எப்படி ஹாஜிகளுக்கான ஏற்பாடுகள் செய்ய இயலும்" என விக்கித்துப்போன அனைவரும் வெட்கித்துப் போகும் அளவிற்கு ஹாஜிகளுக்கு ஜித்தா ஏர்போட்டில் அத்தனை ஹித்மத்துகளை (பணிகள்), குடிதண்ணீர் விநியோகம், லக்கேஜ்கள் நகர்த்தி, பஸ்களில் ஏற்றி / இறக்கி இந்திய ஹாஜிகளை மாநில வாரியாக பிரித்து முஅல்லிம் - குரூப் லீடர்ஸ்களிடம் அனுகி சேவைகளை சிறப்புடன் செய்த சிறந்த அதிகாரி. 

பிறகு Community Welfare Consul-ஆக பொறுப்பேற்று பொதுமக்களுக்கு சிறப்பான சேவையும், தொண்டர்கள் மற்றும் நற்பணி அமைப்புகளுடன் நல்ல நெருக்கமான தொடர்புகள் கொண்டு பெயர் பெற்றுச் சென்ற தமிழர்.

பணிமூப்பு பெற்று இங்கிருந்து இலங்கைக்கு மாற்றலாகியுள்ள சகோதரர் மூர்த்தி ஐயா அவர்கள் தற்போதைய சவூதியின் அவசரகால நிலைமையை கருத்தில் கொண்டு NITAKAT / AMNESTY க்காக SPECIAL RESCUE TASK FORCE OFFICER-ராக குறுகிய காலத்திற்காக மீண்டும் ஜித்தா-இந்திய தூதரகத்திற்கு வருகை தந்துள்ளதை பெருமையுடன் வரவேற்றோம்.

ராஃபியா 
வாழ்க வளமுடன், நலமுடன்

இ மெயிலில் இளித்தது! 18

அதிரைநிருபர் பதிப்பகம் | June 27, 2011 | ,

படித்ததில் ரசித்தது!

Latest from Nursery Schools:

A: APPLE
B: BLUETOOTH
C: CHAT
D: DOWNLOAD
E: E-MAIL
F: FACEBOOK
G: GOOGLE
H: HEWLETT PACKARD
I: iPHONE
J: JAVA
K: KINGSTON
L: LAPTOP
M: MESSENGER
N: NERO
O: ORKUT
P: PICASSA
Q: QUICK HEAL
R: RAM
S: SERVER
T: TWITTER
U: USB
V: VISTA
W: WiFi
X: Xp
Y: YOU TUBE
Z: Zorpia

நல்ல வேலே
A is still APPLE இன்னும் அப்படியே !

உங்களுக்கு தெரிந்த A to Z சொல்லுங்களேன்.

ரஃபியா

இந்திய தூதரக அதிகாரிகள் 5

அதிரைநிருபர் பதிப்பகம் | May 30, 2011 | , ,

அன்புடையீர் !

ஜித்தா இந்தியத் தூதரகத்திற்கு பாஸ்போர்ட் செக்ஷன் கவுன்சிலராக ஒரு தமிழர் நியமிக்கப் பட்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.திரு தாஸ் ஜெயச்சந்திரன் என்ற இவர் இனிமையாகப் பழகும் ஓர் தமிழ் ஆர்வலர். தூத்துகுடி பகுதியைச் சேர்ந்தவர். ஜெத்தா தமிழ் சங்கத்தின் சார்பாக வாழ்த்தி வரவேற்கப்பட்டார்.

ஏற்கனவே மதிப்பிற்குரிய S.D. மூர்த்தி அவர்கள் திருச்சிப் பகுதியைச்சேர்ந்த தமிழ்த் தாக்கமும் தேசப் பற்றும் ஒரு சேரப் பெற்ற நற்றமிழர்.சென்ற வருடம் வரை ஹஜ் செக்ஷனை கவனித்து வந்து ஹாஜிகளின் துஆக்களை அள்ளிக் கொண்ட நம் நண்பர் ,இவ்வருடம் மக்கள் நலத்துறை - welfare - கான்சளாக உயர்த் தப்பட்டுள்ளார்.


நாகர்க்கோவில் பகுதியைச்சேர்ந்த மரியாதைக்குரிய முபாரக் அவர்கள் ஒரு இளம் அதிகாரி.ஹஜ் கான்சலான இவர்களோ அனைவரும் மெச்சும் வன்ணம் தனது பணிகளை செவ்வனே செய்து வந்து கொண்டிருக்கின்றார்கள்.


மும்மூர்த்திகளாய் மூன்று தமிழ் அதிகாரிகளை ஒரே நேரத்தில் பெற்றது யாம் பெற்ற பெரும்பேறு!

- ரஃபியா

லாஜிக் நேரம் ! 11

அதிரைநிருபர் பதிப்பகம் | May 21, 2011 | , ,

யோசிக்கிறார் யோகராஜ்....

கோட்டையில் - அம்மா

கிழக்கே (கொல்கத்தா) - அக்கா

மத்தியில் - மேடம்

தலைநகரில் - ஆண்ட்டி

உச்சியில் - பாட்டி(ல்)

வீட்டில் (எப்பவுமே) - மனைவி ராஜ்ஜியம்


பிறகு ஏன் ஆணாதிக்கம் என்று கம்ப்ளைண்ட் பன்றாங்க!? !

ரோசனை சொல்லுங்க..


- Rafia

சின்ன சின்ன சுவாரசியம் 11

அதிரைநிருபர் | November 01, 2010 | , ,

இன்னும் திறக்கப்பட்டு வாசிக்கப்படாத டைரி, கிழிக்கப்பட்ட துப்பறியும் நாவலின் கடைசிப்பக்கங்கள், டெலிவரி செய்யப்படாமல் சுற்றிவரும் அவசரம் தாங்கிய‌ குரியர், வெளியிடப்படாத தேர்தல் மற்றும் பரிட்சை ரிசல்ட் இவைகளில் எல்லாம் எதோ ஒரு விதமான சுவராஸ்யமும், பரபரப்புடன் கூடிய படபடப்பும் ஒளிந்திருப்பதை அன்றாட வாழ்வில் நாம் அறியாமல் அறிந்து வருகிறோம்.

சவுதி ஜித்தா இந்தியத் தூதரகத்தில் WELFARE CONSUL ஆக சமீபத்தில் பதவி உயர்வு பெற்று பொறுப்பேற்றுள்ள‌ சகோதரர். மூர்த்தி அவர்கள் கூடுதல் பொறுப்பாக புனித ஹஜ் டிபார்ட்மெண்டையும் ஏற்று அதன் மூலம் அற்புதமான பணியை செய்து வருகிறார்கள்.

"ஏற்பு மதத்தவரை விட மாற்று மதத்தவரான இவரால் எப்படி இவ்வளவு சிறப்பாக ஹித்மத் (service) செய்ய முடிகிறது?! என்று விமான தளத்தில் அவர் காது படவே நம் ஹாஜிகளின் ஆச்சரியம் கலந்த முனுமுனுப்பு!

மாற்று மத அன்பராக இருந்த பொழுதிலும் அவருக்காக அவர்கள் அனைவரும் மனமார து'ஆச்செய்வதை நேரிலேயே காண முடிந்தது.

ஒரு நாள் ஒரு காலை பொழுது ஜித்தா தமிழ்ச்சங்கத்தின் சார்பாக மத நல்லிணக்கக் கூட்டம் நடத்தலாமா? என்ற யோசனையுடனும் ஆர்வத்துடனும் திரு. மூர்த்தி அவர்களின் அலுவலகம் சென்றிருந்தோம். பல விடயங்கள் பேசிக் கொண்டிருந்தபோது தனக்கு வந்த மின்னஞ்சல்களில் ஒன்றை மட்டும் குறிப்பிட்டு நம்மிடம் அவர் காண்பிக்க, அதை சற்றே வாசிக்க நேர்ந்தது. அதில் சுருக்கமாக வரையப்பட்ட அர்த்தங்கள் ஆயிரம் சொல்லும் வார்த்தைகளை உங்களின் பார்வைக்கு இங்கு வழங்க விரும்புகிறேன்.

------------ ------------------ ----------------------------

அய்யா!

பல நாட்களுக்கு முன்னர் என் தந்தை அவர்களுக்கு தாங்கள் எழுதியனுப்பிய மின்னஞ்சலை (பிரிக்கப்படாமிலிருந்ததை )இப்பொழுது தான் படிக்க இயன்றது. எதற்கோ அவருக்கு தாம் உதவி செய்திருக்கிறீர்கள். எதற்கென்று இத்தருணம் வரை நான் அறியேன். ரொம்ப சந்தோசம். அவர் சார்பாக என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். (சில மாதங்களுக்கு முன் என் தந்தை இறந்து விட்டார் என்பது தங்களுக்கு தெரியுமோ இல்லை தெரியாதோ..?! என்று எனக்கு தெரியவில்லை).

நன்றி!

ஜுலைகா
ரியாதிலிருந்து.

------------------------ ------------------------ -----------------------------------

சுப ஹானல்லாஹ் ! நேற்று பெற்ற உதவியை இன்று மறந்து விடும் இக்காலத்தில் அதுவும் பலன் அடைந்தோரே பராமுகமாகிவிடும் இந்நாளில் இப்படியுமா? என அச்சகோதரியின் மின்னஞ்சலை என் அகக்கண் முன்னே நிறுத்தியவனாக‌ நன்றி மறப்பது என்றும் நன்றன்று .. என உள்ளத்துக்குள் முனுமுனுத்தவனாக 'மத நல்லிணக்க' கூட்ட‌ம் ப‌ற்றி அலோசிக்காம‌லேயே வெளியே வந்து விட்டேன்!

இறைவ‌ன் இது போன்ற‌ ஆயிர‌மாயிர‌ம் ந‌ல்லெண்ண‌ம் கொண்ட‌ மாற்று ம‌த‌ ச‌கோத‌ர‌, ச‌கோத‌ரிக‌ளை ந‌ம் உன்ன‌த‌ மார்க்க‌மாம் இஸ்லாத்தின் ப‌க்க‌ம் ஆர்வ‌முட‌ன் வ‌ந்திணைந்து ஈருலக பாக்கியங்களை பெற‌ அவ‌னிட‌மே து'ஆச்செய்து அத‌ற்காக‌ ந‌ம் அன்றாட‌ அலுவ‌ல்க‌ளுட‌ன் முய‌ற்சிப்போமாக‌ என‌ அன்புட‌ன் கேட்டுக்கொண்ட‌வ‌னாக‌ உங்க‌ளிட‌மிருந்து விடை பெறுகிறேன் என் அடுத்த‌ ஆக்க‌ம் வ‌ரை.

வஸ்ஸலாம்.

வாழ்க வளமுடன்.!

மு.செ.மு. ரஃபியா

ஜித்தாவிலிருந்து.


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு