Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label அப்துல் காதர். Show all posts
Showing posts with label அப்துல் காதர். Show all posts

இஸ்லாத்தில் குற்றவியல் சட்டங்கள் ! 4

அதிரைநிருபர் பதிப்பகம் | March 15, 2015 | , ,

உலகிலேயே அதிகமான மக்களால் துரதிர்ஷ்டவ சமாக தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட மார்க்கம் இஸ்லாம். இதன் காரண காரியங்களை ஆராயும்போது குற்றவியல் சட்டமும் அதில் அடங்குகின்றது. உலகில் அமைதி நிலவ,சமத்துவம் சகோதரத்துவம், தழைத்தோங்க அன்று  தன் அழகிய நிலைப்பாட்டை எடுத்து இயம்பியது,இன்று இயம்புகின்றது. என்றும் இயம்பும் உலக முடிவு நாள் வரை.

இந்த தவறாக புரிந்து கொள்ளப்பட்ட குற்றவியல் சட்டம் எவ்வளவு தெளிவானது.அறிவுபூர்வமானது. நடைமுறைபடுத்த தகுதியானது பகிரங்கமானது. குற்றங்களை குறைக்க வல்லது என்பதை எடுத்து முன் வைப்பதுதான் இந்த பதிவு.

ஏற்றத்தாழ்வு 

ஒட்டு மொத்த மனித குலத்துக்கும்  நன்மைகளை வாரி வழங்குவதில் இஸ்லாம் என்றுமே முன்னிலை வகிக்கின்றது. இயற்கையிலேயே இறைவன் படைப்பில் மனிதன் எல்லா வகையிலும் ஏற்றத்தாழ் வோடுதான் படைக்கப்பட்டிருக்கின்றான். ஒரு கூட்டம் பலம் பொருந்தியதாக இருந்தால் , மற்றொரு கூட்டம் பலகீனமாக படைக்கப்பட்டிருக்கும், ஒருவன் செல்வந்தனாக இருந்தால் ஒருவன் ஏழையாக படைக்கப்பட்டிருப்பான். ஒருவன் குலத்தில் உயர்ந்தவன் என்றிருப்பான், ஒருவன் தாழ்ந்தவன் என்றிருப்பான்.இப்படி ஏற்றத்தாழ்வு , வறுமை செல்வம், வலிமை, பலகீனம் என்பது  இறைவனின் இயற்க்கை படைப்பு. 

வலிமை மிக்கவன் பலகீனமானவனை அடக்கி ஆளுதல், அவன் மீது தன் அதிகாரத்தை பிரயோகித்தல்,அவனுக்கு  அநீதி இழைத்தல்.தன் வலிமையைக்கொண்டு அவன் சொத்து சுகங்களை சூறையாடுதல் எதிர்த்து நிற்பவர்களை  தன் வலிமையைக்கொண்டு அடக்குதல் போன்ற அரசின் குற்றவியல் சட்டத்திற்கு கொஞ்சம் கூட பயமின்றி குற்றத்தை அவனால் அரங்கேற்ற முடிகின்றது. இது ஏன் நடைபெறுகின்றது?

அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் துப்பாக்கி கலாச்சாரம் சர்வ சாதாரணம். அங்கே பொம்மைகளை கடையில் வாங்குவதுபோல் மிகவும் சர்வசாதரணமாக வாங்கி விடுகின்றனர்.  அதன் பின் விளைவுகளை அதிகமாக தெரிந்து வைத்திருந்தும் பள்ளிக்கு செல்லும் மாணவன் கூட சர்வ சாதாரணமாக பயன் படுத்தும் அளவுக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டு அதன் விபரீதம் வெளியான பின்னே சிந்திக்கத்தலைப்படுகின்றனர். 

குற்றங்களின் பின்னணியும், அதை செயல்படுத்திய விதமும் சர்வசாதாரணமாக  ஆராயப்பட்டு குற்றங்களுக்குண்டான தண்டனை குற்றவாளி   திருந்தி வரும் தண்டனையாக இருப்பதில்லை.மாறாக முன்பிருந்ததைவிட படுமோசமான மூர்க்கனாக வெளி வருகின்றான். அதைவிட பன்மடங்கு கொலைக்கு வித்திடும் ஒரு மாபாதக செயலின் முன் திட்டத்தோடு வெளியில் வருகின்றான். அநியாயக் கொலைக்கு கொலை என்றிருந்தால் குற்றங்கள் சங்கிலித்தொடராகும் வாய்ப்பே இல்லாமல் குற்றங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து போகும். ஒரு குற்றமற்ற சமுதாயம் உருவாக வழி பிறக்கும். இதை இவர்களும் புரிந்திருக்க வில்லை. 

ஆதலால் குற்றமற்ற சமுதாயத்தை உருவாக்கும் முயற்சியில் இவர்களுக்கும் தோல்வியே  முடிவாக இருக்கின்றது. காரணம் கொடுக்கப்படும் தண்டனையில் வீரியம் இல்லை. தண்டனை பெற்றவன் இனி இக்குற்றத்தை கனவிலும் நினைத்துப்பார்க்காத அளவுக்கு தண்டனை பகிரங்கமாக இருக்கவேணும். இந்த தண்டனையை பார்க்கும்  சமூகம் அந்த குற்றத்தை நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு தண்டனையில் கடுமை வேணும் இதை செய்யாதவரை மக்களின் இயல்பு வாழ்க்கை என்பது என்றும் ஒரு கேள்விக்குறியாகத்தான் சமூகத்தில் இருக்கும்.

ஏற்றத்தாழ்வு ஒரு காரணம் 

ஏற்றத்தாழ்வுகள் என்று இருக்குபோது இயற்கையிலேயே மனித மனம் அவனை குற்றத்தில் ஈடுபட வைக்கின்றது . எல்லோருமே எல்லாவிதத்திலும்  சரி சமமாக படைக்கப்பட்டிருந்தால் குற்றங்கள் ஏற்பட வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும். ஒருவனிடம் இருக்கும் செல்வம், வலிமை ,குலப்பெருமை, ஆற்றல் அதிகாரம் மற்றும் அனைத்து உலக விஷயங்களில் மற்றவனை விட மேம்பட்டு இருக்கும்போதுதான் அவனை அவன் மனம் தவறு செய்ய அவன் அதிகாரத்தையோ, அவன் ஆற்றலையோ பயன் படுத்தத்தூண்டுகின்றது. வலிமை குன்றியவனுக்கு நீதி கிடைப்பது என்பது அரிதாகின்றது. இருவருமே பலத்தில் சமமானவர்களாக இருக்கும் பட்சத்தில் அங்கே ஒருவன் மீது ஒருவன் தன் வலிமையை பிரயோகிக்க வாய்ப்பில்லாமல் போகின்றது. 

ஆனால் உலகில் மனிதன் படைக்கப்பட்ட நியதியில் ஏற்றத்தாழ்வு என்பது இப்புவியின் இயக்கம் நிற்கும் வரை தொடர்வதாகும். ஆதலால் குற்றங்களே நிகழாத உலகை காண்பது என்பது   கும்மிருட்டில் நடுக்கடலில் கடுகை தொலைத்து விட்டு தேடுவதுபோல் தான். ஆதலால் உலக முடிவு நாள் வரை குற்றங்கள் தொடர்ந்து கொண்டுதானிருக்கும் என்றாலும்,இக்குற்றங்களை களைய வழியே கிடையாதா? இதை தடுப்போர் யாருமில்லையா ? அதற்க்கு இவ்வுலகில் வேறு ஏதாகிலும் சக்தி இல்லவே இல்லையா ? இது தொடர் கதை தானா ? என்பதற்கு இல்லவே இல்லை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாவிட்டாலும் இவ்வுலகின் கணிசமான குற்றங்களை கண்டிப்பாக துடைத்தெறிய முடியம் என்பதற்கு தீர்வு ஒன்றுதான். அதுதான் இஸ்லாத்தின் அல் -குரானின் குற்றவியல் சட்டங்கள்.

தண்டனையில் கடுமை தேவை 

உலகின் மற்ற எந்த சட்டத்தாலும் இன்றுவரை உலகளவில் குற்றங்களை குறைக்க முடியாமல் விழி பிதுங்கி ஒவ்வொரு நாடும் அமைதி வேண்டி ஆளாய் பறக்கும்போது. அதற்கு வடிகாலாய்  இஸ்லாத்தின் குற்றவியல் சட்டங்கள் நம் முன்னே விரிகின்றது. இதன் அறிவுபூர்வ குற்றவியல் சட்டங்கள் எக்காலத்திற்கும் பொருத்தமானவை. மாற்றம் தேவை இல்லாதவை.

உலகில் உள்ள பெரும்பாலான  அரசாங்கங்கள்  குற்றவியல் சட்டத்தை அமுல்படுத்துவதில் இன்றுவரை தோல்வியைத்தான் தழுவி இருக்கின்றன. ஏனனில் குற்றங்களுக்காக கொடுக்கப்படும் தண்டனை குற்றவாளியை எந்த விதத்திலும் திருத்துவதாக இல்லை. மாறாக தண்டனை என்னும் பெயரில் அவர்கள் உள்ளே வாழும் சொகுசு வாழ்க்கை , நாம் தண்டனை பெற்று உள்ளே வந்து இருக்கின்றோம் என்ற அச்ச உணர்வை ஏற்ப்படுத்தாததுதான்.

அறைகூவல் 

இந்த குற்றவியல் சட்டத்திற்கு முஸ்லிம்களாகிய நாம் உரிமை கொண்டாடும் அதே வேளையில், அதை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தும் வாய்ப்பில்லாத தேசத்தின் பிரஜைகளாக நாம் இருக்கின்றோம். இந்த நாட்டில் குற்றவியல் சட்டத்தின் பொறுப்பில் உள்ள  அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இதை ஒரு அறைகூவலாகவே விடுக்கின்றோம்.  

நீங்கள் உண்மையிலேயே நம் தேசத்தின் மீதும், நம் நாட்டின் இறையாண்மையின் மீதும் மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளவர்களாக இருந்தால். நம் நாட்டில் சட்டமும் ஒழுக்கமும் பாதுகாக்கப்பட்டு குற்றங்கள் குறைய வேணும் என்று உண்மையிலேயே விரும்பினால், பெண்களின் கற்பும், மானமும், பாது காக்கப்படவேனும் என்று உள்ளத்தில் உண்மையில் மனப்பூர்வமான உறுதி இருந்தால்,இது ஒரு குறிப்பிட்ட மதத்தின் சட்ட திட்டங்களில் உள்ளது என்ற குறுகிய வட்டத்தில் பார்க்காமல், இது மனிதக்கரங்களுக்கு  அப்பாற்பட்ட , ஒரு இறை சக்தியின் மூலம் வந்தது என்று நினைத்து, குற்றத்திற்குண்டான சட்டமாக அமுல் படுத்திப்பாருங்கள் அதன் அற்புத  விளைவை வெகு சீக்கிரம் அறிந்து கொள்வீர்கள். 

அப்படியின்றி, குற்றங்கள் மலிந்தாலும் பரவாயில்லை, நாட்டில், லஞ்சம், லாவண்யம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, திருட்டு,அயோக்கியத்தனம், மிரட்டல், இன்னும் என்னென்ன தீமைகள் உலா வருகின்றனவோ அவை அனைத்தும் தொடர்கதையானாலும் பரவாயில்லை , ஒரு சிறுபான்மை மக்களின் மார்க்கத்தின் குற்றவியல் நடைமுறை சட்டத்தை  நாட்டின் குற்றவியல் சட்டமாக அறிமுகப்படுத்தத்தயாரில்லை என்று பகிரங்கமாக நீங்கள் சொல்வதைத்தவிர உங்களுக்கு வேறு வழி இல்லை என்று தான் எடுத்துக்கொள்ள முடியும். 

மனித சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது 

மனிதன் இறைவனால் படைக்கப்பட்ட ஒரு பலகீனமான,ஆத்திரம், அவசரம், மற்றும் சொற்ப அறிவே கொடுக்கப்பட்ட ஒரு ஜீவன்.இறைவனால் படைக்கப்பட்ட மூளையைத்தவிர வேறொன்றும் நம் சிரசில் இல்லை. அது ஒரு குறிப்பிட்ட அளவில்தான் சிந்தித்து எதையுமே முடிவு எடுத்து இறுதி கட்டத்திற்கு வரும். அந்த சொற்ப அறிவே கொடுக்கப்பட்ட மூளையைக்கொண்டு மனிதனும் தான் மனிதன் என்ற முறையில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் பொருந்தும் சட்டத்தைத்தான் தன் சிந்தனையில் கொண்டு வந்து சட்டமியற்ற முடியும். 

இது காலத்திற்கு ஏற்பவும் , குற்றத்தின் தன்மை, இடம், பொருள், ஏவல் அனைத்தின் தன்மையைப்பொறுத்து கண்டிப்பாக மாற்றங்களுக்கு உள்ளாகியே தீரும். 

ஆனால் இறைவனின் குற்றவியல் சட்டமோ எக்காலமும் எக்குற்றத்திற்கும் ஏற்றாற்போல் மாற்றத்திற்கு இடமின்றி மாறி வரும் காலத்திற்கும் மாற்றத்தேவையில்லாத ஒரு அறிவாற்றல் மிக்க சட்டமாகும். இப்பூவுலகில் அமைதிப்பூங்கா  என்னும் குற்றமற்ற மனித சமூகம் எங்கும் உருவாக,குற்றத்தை ஒருவன் செய்யுமுன் அவனை ஒரு கணம் யோசிக்க வைக்கும் கடுமை நிறைந்த சட்டமாகும். 

ஒருவன் ஒரு திருட்டுக்குற்றத்திற்காக  சிறை தண்டனை அனுபவிக்கின்றான் என்று வைத்துக்கொள்வோம். நம் நாட்டு குற்றவியல் சட்டப்படி ஒரு குறிப்பிட்ட காலம் சிறைத்தண்டனை அனுபவித்துவிட்டு,  அரசு செலவில் சாப்பாடு, மற்றும் எல்லாவிதமான சுகங்களையும் அனுபவிக்க வைத்துவிட்டு அவனை சிறையிலிருந்து விடுதலை செய்தால், சிறைத்தண்டனை அவனை எந்தவிதத்தில் மாற்றி இருக்கும். ஒரு விளைவும் அதனால் ஏற்ப்பட்டு இருக்காது. இதனால்தான். 15முறை சிறை சென்றவன் மீண்டும் கைது என்று செய்தித்தாள்களில் படிக்கின்றோமா இல்லையா ?

குற்றத்தின் தண்டனை எப்படி இருக்கவேணும் ? இந்த குற்றத்தை செய்தவன் இனிமேல் செய்யாத அளவுக்கு இருப்பதோடு, அவனுக்கு கொடுக்கும் தண்டனை பகிரங்கப்படுத்தப்பட்டு, இனிமேல் சமூகத்தில் அந்த குற்றமே நிகழாத வண்ணம் இருக்க வேண்டுமல்லவா ? இதைத்தான் இஸ்லாம் சொல்கின்றது.

மனித உறுப்பை சேதப்படுத்தினால் :

:உயிருக்கு உயிர் என்ற சட்டத்தில்தான் உங்கள் உயிருக்கு உத்திரவாதம் இருக்கின்றது என்று அருள் மறை குரான் அதிரடி சட்டத்தை அறிவுபூர்வமாக அள்ளித்தருகின்றது. ஒருவன் உயிருக்கு அநியாயமாக குறி வைப்பவனின் உயிருக்கும் குறி வைக்க சொல்கின்றது. 

கண்ணுக்கு கண் பல்லுக்கு பல், என்று சட்டத்தை வரையறுத்து ஒருவனுக்கு   அநியாயமான முறையில் தன் உறுப்புகளில் ஒன்று மற்றவனால் சேதப்படுத்தப்பட்டால், அவன் எந்த உறுப்பை சேதப்படுத்தினானோ, அதே உறுப்பை சேதப்படுத்தவேனும். அதை ஆளும் அரசே செய்யவேணும். அதையும் பகிரங்கமாக செய்யவேணும். என்று சொல்கின்றது. 

ஒருவனின் உரிமையுள்ள பொருளை அவனுக்கு தெரியாமல் திருடி விட்டானா அவனது கையை வெட்டு . பின்பு பார் ஓராயிரம் கைகள் வெட்டப்படுவது தவிர்க்கப்படும், ஒரு பெண்ணின் கற்பு சூறையாடப்பட்டதா ? கொடு அவனுக்கு மரண தண்டனை, ஒரு லட்சம் பெண்களின் கற்பு பாது காக்கப்படும் 

ஒருவன் உன் கன்னத்தில்  ஞாயமின்றி அறைந்தானா ? அவனும் கன்னத்தில் அறையப்பட்டவேனும். ஒருவன் உன் பல்லை உடைத்தானா ? அவன் பல்லும் உடைக்கப்படவேனும்.இவை அனைத்தும் ஒரு அரசு தன் கட்டுப்பாட்டில் இருக்கும் குற்றவியல் சட்டத்தின் மூலம் குற்றத்தின் தன்மையில்  அதில் பாரபட்சம் இல்லாமால் நடைமுறைப்படுத்தினால் குற்றமற்ற தேசத்தை நம் கண் முன்னே அரசில் கோலோச்சும் ஆளும் வர்க்கமும் அதன் அதிகாரிகளும் காணமுடியும்.  உங்கள் முன் தெளிவான அழகான குற்றவியல் சட்டங்கள் இருந்தும் கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்து கொண்டு இருக்கின்றீர்கள். 

ஒரே ஒருமுறை நடை முறைப்படுத்தி பாருங்கள் ஒரு 5 வருட காலத்திற்கு.இதன் உண்மை உலகுக்கு தெரியவரும். எவ்வளவு மாபாதக செயல் என்று கருதப்படும் குற்றங்களும் இருந்த இடம் தெரியாமல்,,உண்மை ஜனநாயகத்தின் காலில் போட்டு மிதிக்கப்பட்டு அமைதிப்பூங்காவாக ஒட்டு மொத்த தேசமும் குற்றமற்ற தேசமாக மலரும்.

இதனை சட்டமாக்கினால் ஏற்படும் நன்மைகள் :

1. குற்றங்கள் கணிசமாக குறையும். 
2. வழக்குகள் தேங்கும் நிலை ஏற்படாது. 
3. சிறை குற்றவாளிகளினால் நிரம்பி வழியாது. 
4. சிறை சாலைகளை அதிகப்படுத்த வேணும் என்ற அவசியம் இருக்காது.
5. நீதிபதிகள் எண்ணிக்கையையும், அரசு வழக்கறிஞர்கள் எண்ணிக்கையையும் அதிகப்படுத்தவேனும் என்ற அவசியம்  இருக்காது.
6. சிறை சாலையில் குற்றவாளிகளுக்காக செலவிடப்படும்    தொகை கணிசமாக குறையும். அந்தப்பணத்தை வேறு அரசின்   பொது நலக்காரியங்களுக்கு பயன் படுத்தலாம். 
7. வழக்குகளுக்கான  நீதி கிடைப்பது துரிதப்படுத்தப்படும். 
8. பொதுமக்கள் அச்சமின்றி நடமாட வழி வகை பிறக்கும்.
9. குற்றம் புரியும் எண்ணமுள்ளவனுக்கு குற்றம் செய்வதற்கு முன் பயத்தை  ஏற்ப்படுத்தும். 
10.தாமதமாக கிடைக்கும் நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்னும் அவல நிலை அகலும்.

இக்குற்றவியல் சட்டத்தை அமுல் படுத்த தலைப்படும்போது, எந்த நாடு இதற்கு முன்னுரிமை கொடுத்து முந்திக்கொள்கின்றதோ அது அமைதிப்பூங்காவாக, குற்றமற்ற சமுதாய மக்கள் வாழும் பிரதேசமாக உண்மை ஜனநாயகம் என்னும் ஆலமரம் வேரூன்றி நிழல் தரும் நாடாக கண்டிப்பாக மாறும், இச்சட்டம் மாற்றிக்காட்டும் என்பதில் சந்தேகம் இல்லை. 

* இன்னும் எத்தனையோ அலப்பரிய நன்மைகளை அள்ளித்தரும் தகுதி பெற்றது இந்த சட்டம்.
* குற்றவாளியை குலை நடுங்கவைக்கும் தன்மை பெற்ற சட்டம்.
* மனிதாபிமானத்தை ஆதரிக்கும் சட்டம்.
* எந்த அதிகாரத்திற்கும் வளைந்து கொடுக்காத , கொடுக்கக்கூடாத சட்டம்.
* நீதி செலுத்துபவன் உறவினரே பாதிக்கப்பட்டாலும் நீதியை நிலை நாட்டத்தவறாதே என்று நீதிபதிக்கு உரத்த குரல் கொடுக்கும் சட்டம்.
* நாணல் போல வளைந்து விடாமல் , தர்மத்தாய்க்கு நிழல் கொடுக்கும் சட்டம்.
* உண்மை தன்னை ஊனப்படுத்திவிடாமல், அதற்கு தலைகுனிவு வந்துவிடமால், தடுமாற்றத்திற்கு இடமில்லா சட்டம்.
* இப்புவி கண்டிப்பாக பின்பற்றி நடக்க வேண்டிய புனிதம் பொருந்திய சட்டம்.
* இறைவனின் இக்குற்றவியல்  சட்டம்.
* அமுல் படுத்தி ஆதரித்து, அதன் பலனை வாழ்நாளிலேயே காணும் அரசு உண்டா?
* உண்டென்றால் அங்கே குற்றமற்ற சமுதாயமும் உண்டு.
* குற்றமற்ற அரசும் உண்டு .

வாருங்கள் இஸ்லாத்தின் குற்றவியல் சட்டத்தின் நிழலில்

குற்றமில்லாச் சமுதாயமாக.

அமைதியின் ஆனந்தத்தை நோக்கி...!

அபு ஆசிப் என்ற அப்துல் காதர்

குணக்குன்று 2

அதிரைநிருபர் பதிப்பகம் | October 09, 2014 | , , , , , , ,

உதய நிலவின் குளிராக உஷ்ண பூமியியின் ஒரு சமுதாயத்திலிருந்து உத்தம நபியை உலகிற்கு அளித்தான் ஏக இறைவன் அல்லாஹ். நீதி மறையின் விளக்க உரையாக நற்குணத்தின் குன்றாக, இறைமறையோடு அருட்கொடையை இப்புவிக்கு பரிசாக தந்தான் வல்ல அல்லாஹ்.

தம்  தூய வாழ்வினால் மனித வாழ்க்கையின்அளவுகோலை மாற்றி , இருளை விட்டும் மக்களை அகற்றி, தங்களின் ஒழுக்கம், வழிகாட்டுதலில், சொல்லில், செயலில் ஒரே நேர்கோட்டுப்பாதையில் எள்ளளவும் பிசிறில்லாமல், தீமையெனும் களை எடுத்து, நன்மை என்னும் நாற்றங்காலை நட்டு, அதன் விளைச்சலை தன் வாழ்நாளிலேயே அறுவடை செய்து, அதன் பலனை அனைவரையும் அனுபவிக்கச் செய்தார்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.

நற்குணத்திலும், நற்செயல்களிலும், இப்புவியின் இயக்கத்திற்கு முற்றுப்புள்ளி வரும் வரை பின்பற்றப்பட வேண்டிய சமுதாயம் என்று ஒரு மிகப்பெரும் சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கிச் சென்ற , மனிதகுல முன்மாதிரி, இறுதி நபி (ஸல்) அவர்களின் குணம், அவர்களின் நடைமுறை வாழ்க்கை , பழகிய விதம், மற்றும் அவர்களின் உயர் பண்புகள் நாள்தோறும் எவ்வாறு இருந்தது என்பதை சுருக்கமாக எடுத்துரைக்கவே இந்தப்பதிவு.

உயர் பண்பு 

வார்த்தைக்குள் அடங்காத சிறந்த பண்புகளையும் குணங்களையும் கொண்டவர்களாக, அவர்களோடு சமகாலத்தில் பழகியவர்களே, அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட மரியாதையைப் போல், இதற்கு முன் யாருக்கும், யாரும் கொடுத்ததுவும் இல்லை, கொடுக்கப்பட்டதாக கேள்விப்பட்டதும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு  அருமை நபி (ஸல்) தம் மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டார்கள். 

ஒருவரைப்பற்றி விரும்பாத செய்தி கிடைத்தால் அப்போது நபி (ஸல்) அவர்கள் "சிலர் ஏன் இப்படி செய்கிறார்கள்" என்று பொதுவாகப் பேசுவார்கள்.  சம்பத்தப்பட்ட நபரின்  பெயரை குறிப்பிட்டு சங்கடப்படுத்த  மாட்டார்கள்.

மக்களில் உண்மையாளராக, ஒழுக்க சீலராக, திகழ்ந்தார்கள். இந்த உண்மையை நபித்தோழர்கள் மட்டுமல்ல எதிரிகள் கூட தெரிந்து வைத்திருந்தார்கள். 

மலர்ந்த முகம், இளகிய மனம், நளினம் பெற்று இருந்தார்கள். கடுகடுப்பு, முரட்டு குணம், கூச்சல், அருவருப்பாக பேசுதல், அதட்டுதல் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டு இருந்தார்கள். 

நபித்துவம் வருவதற்கு முன்பே,  "நம்பிக்கைக்கு உரியவர் " என்று அழைக்கப்பட்ட ஏந்தல் நபி, அறியாமைக் காலத்திலும் அறிவிலிகளுக்குக்கும் நீதமான தீர்வு சொன்ன நீதிமான்.

தனக்கு முன்பு யாரும் எழுந்து நிற்பதை தடை செய்தார்கள், பணிவு உடையவர்களாகவும், பெருமை கொள்வதை விட்டும் விலகியும் இருந்தார்கள். 

தங்கள் தேவைகளை தாங்களே பூர்த்தி செய்து கொள்பவர்களாக இருந்தார்கள். காலணியை தாங்களே தைத்து கொண்டார்கள், ஆட்டிலிருந்து பால் கறந்து பயன்படுத்தி கொண்டார்கள், ஆடைகளை துவைத்து பயன்படுத்தி கொண்டார்கள், எந்த சந்தர்ப்பத்திலும் அவர்களை தனித்துக்காட்ட விரும்பியதே இல்லை. 

ஒருமுறை ஒரு பயணத்தின் போது ஆடு ஒன்றை அறுத்து சமைக்கும்படி கூறினார்கள். ஒருவர் நான் ஆட்டை அறுக்கின்றேன் என்றார், ஒருவர் நான் உரிக்கின்றேன் என்றார், மற்றொருவர் நான் சமைக்கின்றேன் என்றார்,  அப்படியென்றால் நான் விறகு பொறுக்கிக் கொண்டு வருகின்றேன் என்று அண்ணல் நபி ( ஸல் ) அவர்கள் சொன்னார்கள்.

அதற்கு சஹாபாக்கள் யா ரசூலுல்லாஹ் தங்களுக்கு ஏன் சிரமம் நாங்களே பார்த்துக்கொள்கின்றோம் என்றார்கள். 

அதற்கு கண்மணி நாயகம் (ஸல்) சொன்னார்கள் : " நீங்கள் செய்வீர்கள் என்று எனக்கு தெரியும் , ஆனால் என்னை என் தோழர்களிடமிருந்து  தனித்து காட்ட விரும்பவில்லை. அப்படி தனித்து காட்டுவதை  அல்லாஹ் வெறுக்கின்றான் " என்றார்கள். 

அண்ணல் (நபி ஸல்) தெள்ளதெளிவாக பேசுபவர்களாக  இருந்தார்கள், அனைவராலும் அறியப்பட்ட ஒரு நல்லியல்பு பெற்றவர்களாக இருந்தார்கள். தெளிவாக, சரியாக, சரளமாக பேசக் கூடியவர்களாக இருந்தார்கள். நூதன நுட்பங்களுடன்  சொல்லாக்கம் முழுமை பெற்றவர்களாக இருந்தார்கள். ஒவ்வொரு இனத்தாரிடமும் அவரவவர் மொழி நடையில் பேசும் திறமை பெற்றிருந்தார்கள். நகரவாசிகள், கிராமவாசிகளுக்கு தகுந்தார்ப்போல் அவரவர் தொனியில் பேசக்கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள்.

சிரமத்தை தாங்குவது, சக்தி இருந்தும் மன்னிப்பது, சகித்துக்கொள்வது பொறுத்துப் போவது அவர்களின் உயர் பண்புகளில் உள்ளவைகளாகும். சாதாரணமாக இடையூறுகள் அதிகமாக அதிகமாக பொறுமை குறைந்து கொண்டே போகும். ஆனால் இந்த நீதிமானுக்கோ பொறுமை கூடிக் கொண்டே போனது. 

ஒரு விஷயத்தை தேர்ந்தெடுக்க இரண்டு வாய்ப்புகள் என்று வரும்போது அதில் இலகுவானதையே தேர்ந்தெடுப்பார்கள். அது பாவகரமானது என்று தெரிய வரும்போது வெகு தூரம் விலகி விடுவார்கள். தங்களுக்காக தங்கள் சுய நலத்திற்காக யாரையும் பழி வாங்கியதில்லை. ஆனால் அல்லாஹ்வின் கண்ணியம் பாழாக்கப்பட்டால் அதற்குற்குரிய தண்டனையை வழங்கத் தயங்கியதில்லை.

மெதுவாக கோபப்படுவார்கள். விரைவாக மகிழ்ச்சி அடைவார்கள். வறுமைக்கு  அஞ்சாமல் தேவை உடையோர்க்கு உதவி செய்தார்கள். விரைந்து வீசும் காற்றின் வேகத்தைவிட செல்வத்தை வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள்.

ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : அண்ணல் நபி (ஸல்) யாரும் ஒன்றை கேட்டு அவர்கள் இல்லை என்று சொன்னதே இல்லை.  

இப்படி  எந்த குணாதிசயங்களிலும்  ஒரு கடுகளவு குறை சொல்லும் சந்தர்ப்பத்திற்கு  இடமே இல்லாமல் இவ்வுலகை விட்டும் விடை பெற்றுச் சென்று இருக்கின்றார்கள் என்றால் என்னே ஒரு அற்புதமான வாழ்வு வாழ்ந்து சென்று இருக்கின்றார்கள்.

அமைதியின் கம்பீரம்!

நபி (ஸல்) மிகக்குட்டையோ, நெட்டையோ அல்லர், கூட்டத்தில் பார்ப்பதற்கு நடுத்தரமானவர்கள், அடத்தியான சுருட்டை  முடி கொண்டவரும் அல்லர், கோரை முடி கொண்டவரும் அல்லர், சிவந்த வெண்மையானவர்கள், கருவிழி உடையவர்கள். புஜமும் மூட்டு எலும்புகளும் தடிப்பானவர்கள். 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனா செல்லும் வழியில் , அவர்களைக் கண்ட குஜைமா கிளையைச் சேர்ந்த உம்மு மஅபத் விவரிக்கும்போது, 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வயிறோ, தலையோ பெருத்தவர் அல்லர், கவர்ச்சிமிகு பேரழகும், கருத்த புருவமும் உடையவர்கள், நீண்ட இமை முடியும், கம்பீரக்குரல் வளமும் உடையவர்கள். அவரது அமைதி கம்பீரத்தைத் தரும், ஒளி இலங்கும் பேச்சுடையவர் என்றும் இன்ன பிற பண்புகளையும் விளக்குகின்றார்கள்.  

ஒரு விஷயத்திற்காக திரும்பிப் பார்த்தால் முழுவதுமாக திரும்பிப் பார்ப்பாகள். நடந்தால் பள்ளத்தை நோக்கி நடப்பது போன்று பிடிப்புடன் நடப்பார்கள். இரண்டு புஜங்களிலும் நபித்துவ முத்திரை இருக்கும். மக்களுக்கு அதிகமாக வழங்கும்  தன்மை   உள்ளவராகவும், துணிவு உள்ளம் கொண்டவராகவும், மக்களில் அதிகம் உண்மை பேசுபவராகவும்,  பொறுப்புகளை நிறைவேற்றுபவராகவும் இருந்தார்கள்

அழகின் அசல் !

அண்ணல் நபி (ஸல்) அவர்களோடு தம் வாழ்நாளின் பெரும்பகுதியை கழித்த, கணிசமான நபிமொழி தொகுப்புகளை அறிவிக்கக்கூடிய அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: 

"அண்ணல் (நபி) அவர்களைப்போன்று அழகானதை நான் பார்த்ததே இல்லை. அவர்கள் வதனத்திலே சூரியன் இலங்கியது. நாங்கள் சிரமப்பட்டு நடக்கும் வேகத்தை அவர்கள் சர்வ சாதரணமாக நடப்பார்கள். அல்லாஹ் பூமியை சுருட்டி நாயகத்தின் கையில் கொடுத்து விட்டானோ என்றும் நாங்கள் நினைக்கும் அளவுக்கு அவர்கள் நடையில்   வேகம் இருக்கும். 

"ஜாபிர் இப்னு சமூரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :

"ஒருமுறை நான் ஒரு பௌர்ணமி நிலவில் நபி (ஸல்) அவர்களைப் பார்த்தேன் நிலவையும் அவர்களையும் மாறி மாறி பார்த்தேன். எனக்கு நிலவைவிட அண்ணல் நபி (ஸல்) அவர்களே அழகாகத் தெரிந்தார்கள்" (திர்மதி, மிஷ்காத் )

இப்படி பௌர்ணமி நிலவு தோற்கும் அளவுக்கு அண்ணல் நபியை இவ்வுலகில் உலவவிட்டான் பேரறிவாளன் அல்லாஹ். 

ருபைய்யி  பின்த் முஅவ்வித் ( ரலி ) கூறுகின்றார்கள் :

ரசூல் (ஸல்) அவர்களைப் பார்த்தால், உதிக்கும் அதிகாலை சூரியனைப்போல் இலங்குவார்கள். (முஷ்னத்தாரமி, மிஷ்காத்) 

அகன்ற புஜமும், சோனை வரை முடிவைத்தும் இருந்தார்கள். வேதக்காரர்களை ஒத்திருக்கவேனும் என்பதற்காக வகிடு எடுக்காமல் நேராக சீவிக்கொண்டிருந்தார்கள். (சஹீஹுல் புகாரி, முஸ்லிம் )

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கையைப் போன்றதொரு மெல்லிய பட்டாடையை நான் தொட்டதில்லை. அவர்களிடமிருந்து வரும் நறுமணத்தைப்போன்று  வேறு எந்த நறுமணத்தையும் நான் நுகர்ந்ததில்லை. 

வேறு அறிவிப்பில் கஸ்த்தூரியிலோ அல்லது  அம்பரிலோ, வேறு எங்குமே நான் இது போன்றதொரு மணத்தை நுகர்ந்ததில்லை -   (சஹீஹ் புஹாரி, முஸ்லிம் )

ஒரு வழியில் ரசூலுல்லாஹ் (ஸல்) சென்று சிறிது நேரம் கழித்து அதே வழியில் வேறொருவர் சென்றால், அந்த வழியில் மணம் பரப்பிக் கொண்டிருக்கும் அந்த சூழ்நிலையை  வைத்து, அவர் அந்த வழியில் சிறிது நேரத்திற்கு  முன்பு அண்ணல் நபி (ஸல்) அந்தப் பாதை வழியாக சென்றிருக்கின்றார்கள் என்று தெரிந்து கொள்ளும் அளவுக்கு அவர்கள் மேனி கஸ்தூரி மணம் கமழும் ஒரு சுகந்தமாகவே  வாழ்ந்திருக்கின்றார்கள்.  

பனிக்கட்டியைவிட குளிர்ச்சியாகவும், நறுமனத்திலிருந்து கையை எடுத்தது போன்று  நறுமணம் பொருந்தியதாகவும், அவர்களின் கைகள் இருந்தன என்றும் இன்ன பிற அறிவிப்புகளிலும் காணமுடிகின்றது

அண்ணல் நபி (ஸல் ) அவர்கள் மூன்று குணங்களை விட்டும் தங்களை பாது காத்துக்கொண்டார்கள் :

1. முகஸ்துதி , 2. அதிகம் பேசுவது, 3.  தேவையற்றவற்றில் ஈடுபடுவது.

மூன்று  காரியங்களிலிருந்து தங்களை தவிர்த்துக் கொண்டார்கள் :

1. பிறரை பழிக்க மாட்டார்கள்.  2.  பிறரை குறைகூற மாட்டார்கள்.  3.  பிறரின் குறையை தேட மாட்டார்கள். 

ரசூல் (ஸல்) அவர்கள் பேச ஆரம்பித்தால் , அதைக்கேட்பவர்கள், தலையில் பறவை அமர்ந்திருப்பது போன்று , ஆடாமல் அசையாமல் கேட்பர்.

நபி (ஸல்) சபையில் கண்ணியத்திற்குரியவர்களாக தோற்றமளிப்பார்கள். தங்கள் மேனியின் மறைக்கப்பட வேண்டியதை மறைத்தும் வேறு எதையும் வெளிக்காட்டமாட்டார்கள். அதிகம் மௌனம் காப்பார்கள். அவர்கள் புன்முருவலாகவே சிரிப்பார்கள். அவர்களின் பேச்சு தெளிவாக இருக்கும்.  பேச்சு தேவைக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்காது. 

நபியவர்களை கண்ணியப்படுத்த வேன்டும் என்பதற்காக, சப்தமிட்டு சிரிக்காமல் எல்லா தோழர்களும் புன்முருவளிலேயே தங்கள் சிரிப்பை வெளிப்படுத்துவர். 

மறைவான நாணம்

சாதாரண மனிதர்களைப்போல் அல்லாமல் திரை மறைவிலுள்ள கன்னிப்பென்களைவிட நாணம் உள்ளவர்களாகவும், மிகுந்த கூச்ச சுபாவம் உள்ளவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்..

எவருடைய முகத்தையும் ஆழமாக உற்று நோக்கியதில்லை. பெரும்பாலும் பார்வை கீழ்நோக்கியே இருக்கும். பார்வை கடைக் கண்ணாலேயே இருக்கும்.வெட்கத்தினாலும் உயர் பண்பினாலும்  யாரையும் வெறுப்பூட்டும்படி பேசியதே இல்லை.  

சஹாபாக்களின் நேசம்

எங்கள் கழுத்துக்கு கத்தி வந்தாலும் பரவாயில்லை  ஆனால் எங்கள் கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் நகத்தில் ஒரு கீறல் விழுந்தால் கூட எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது என்று சொல்லும் அளவுக்கு , அண்ணல் நபியின் மீது உயிரையே வைத்திருந்தார்கள் சஹாபாப் பெருமக்கள். அவ்வளவு ஆழமாக நேசித்தார்கள். அவர்களின் சிறந்த பண்பும் , குண நலன்களுமே இதற்குக் காரணம். 

இப்படி, இஸ்லாமிய அரசியலுக்கும், ஆன்மீகத்திற்கும் ஒரு சேர தலைவராக இருந்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தங்கள் தோழர்களோடு வேற்றுமையோ,  உயர்வு, தாழ்வோ பாராட்டாமல், நெருக்கத்தோடு வாழ்ந்து, உயர் பண்பின் உச்சத்தில் நின்று வழி காட்டிச் சென்றிருக்கின்றார்கள் என்றால் இதைவிட உயர் பண்பை வேறெங்கு கற்றிட முடியும் ?"

"என்னைப் பற்றி எந்த ஒரு செய்தி கிடைத்தாலும் அதை எடுத்து சொல்லிவிடுங்கள்" என்று பகிரங்கமாக பிரகடனப்படுத்திய ஒரே தலைவர் உலகிலேயே அண்ணல் நபி (ஸல்) ஒருவராகத்தான் இருக்கும். 

ஏனெனில் இந்த சொற்றொடர் உண்மையிலேயே ஒரு ஒழுக்க நியதிக்கும், உயர்பண்பின் உச்சத்திற்கும், நற்குணங்கள் என்று என்னென்னவெல்லாம் உலக  வழக்கத்தில் வருகின்றதோ அனைத்தையும் உள்ளடக்கிய, அப்பழுக்கற்ற , தூய்மையான வாழ்வுக்கு சொந்தக்காரர் தான் இந்த வார்த்தையை பிரகடனப் படுத்த முடியும். 

அதனால்தான் , அல்லாஹ்வால் வழி நடத்தப்பட்டதால், அங்கொன்றும் இங்கொன்றுமாக பெருமானார்  வாழ்க்கையில் மனிதன் என்ற முறையில் சில கோபதாபங்கள், மற்றும் சறுக்கல்கள் வரும் சமயமெல்லாம், இடறி விழுந்து விடாமல் அல்லாஹ் நம்மை காப்பாற்றி இருக்கின்றான் என்ற முழு நம்பிக்கையில்,  தூய்மையான அப்பழுக்கற்ற வாழ்வுக்கு அங்கீகாரமாக அல்லாஹ் பெருமானார் (ஸல்) அவர்களை  தேர்ந்தெடுத்ததால் தான் இதை சொல்ல முடிந்து இருக்கின்றது.

சுருங்கச்சொன்னால், நபி (ஸல்) நற்குணத்தால் அலங்கரிக்கப்பட்டு இருந்தார்கள். ரப்புல் ஆலமீன் எஜ்மானனாக இவர்கள் அல்லாஹ்வின் தூதராக அழகிய ஒழுக்க முறைகளை கற்று தேர்ந்திருந்தார்கள். 

நிச்சயமாக நீங்கள் நற்க்குணமுடையவராகவே இருக்கின்றீர்கள் - அல்-குரான் -68:4 என்று அல்லாஹ் குர்ஆனில் புகழ்கிறான். 

தாக்கம் ! 

இந்தப்பண்புகள்தான் நபியவர்களை அனைவராலும் நேசிக்க வைத்தது. முரண்டு பிடித்த சமுதாய உள்ளங்களை பணிய வைத்தது. மக்களை கூட்டம் கூட்டமாக அல்லாஹ்வின் மார்க்கத்தில் இணைய வைத்தது. 

தலையை கொய்ய வந்தவரை தலைகீழாக மாற்றி, ஈமானில் பிரகாசிக்க வைத்தது. ஒரு அடிமைக்கு அல்லாஹ்வை அழைக்கும் பணிக்கு முதலில் குரல் கொடுக்க வைத்தது. வெற்றியிலும் பணிவு வேணும் என்னும் கொள்கையில் அனைத்து மக்களையும் பணிய வைத்தது. 

செருக்கற்ற,  தூய , பரஸ்பர உதவி மனப்பான்மை, மனித நேயம் மற்றும்  உன்னத பண்புகளைக்கொண்ட சமுதாயத்தை உருவாக்கியது. 

மொத்தத்தில் நாகரிகமற்ற ஒரு சமுதாயத்தை ஒரு உன்னத சமுதாயமாக மாற்றி அதை இவ்வுலகின் முன்னோடி சமுதாயமாக அறிமுகப்படுத்தி   இவ்வுலக வாழ்விற்கு பிரியா விடை கொடுத்தது. 

சல்லல்லாஹு  அலா முஹம்மது 
சல்லல்லாஹு அலைஹிவசல்லம்

சல்லல்லாஹு  அலா முஹம்மது
யாரப்பி சல்லி அலைஹிவசல்லம் 

அபு ஆசிப்
இது ஒரு மீள்பதிவு

குர்ஆனை எளிதல் புரிந்துகொள்வது எப்படி? - அறிமுகம் ! 8

அதிரைநிருபர் பதிப்பகம் | October 05, 2013 | , , , , , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்..

அன்புச் சகோதர சகோதரிகளே:

நம் அனைவருக்கும் அல்-குர்ஆனைப் புரிந்து கொள்ள விருப்பம், ஆனால் காலச் சூழலில் ‘பணிச்சுமை’, கால அவகாசம் அல்லது குர்ஆனைப் படிப்பது மிகவும் கடினம் என்ற எண்ணம் மனதில் இருக்கிறதா ?

அப்படியானால், இதுவொரு அரிய சந்தர்ப்பம் நம் அனைவருக்கும் எளிமையாக மிகச்சரியாக அல்-குர்ஆனை நன்கு புரிந்து கொள்ள வாய்ப்பு.

அமெரிக்கா, ஐரோப்பா, கனடா, துபை, சவுதி அரேபியா மற்றும் தூரகிழக்கு நாடுகளில் உள்ள ஆயிரக்கணக்கான சகோதர, சகோதரிகள், மற்றும் சிறுவர்களுக்கு  இந்த தரம் வாய்ந்த பயிற்றுவிக்கும் பயிற்சி நேரடியாகவும், கணினி வாயிலாகவும் அளிக்கப்படுகிறது.  உலகம் முழுதும் ஏராளமானவர்கள் இதில் பயன் பெறுபவர்களாக இருக்கிறார்கள்.

ஒன்பதே மணி நேரத்தில் அல்-குர்ஆனின் 50% மேல் அறிந்து கொள்ளுதல்.

மொத்தம் 19 பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட 9 மணி நேரம். அதில் நாம் (குர்ஆனில் உள்ள சுமார் 78,000 சொற்களில்) 40,000 முறை வரக்கூடிய 125 வார்த்தைகளைக் கற்று கொள்ள இருக்கிறோம் அது 50%க்கு நிகரான புரிதலை பெறுவதற்கு சமம்.

அப்படியானால், இந்தப் பயிற்சியை முடிக்கும் போது குர்ஆனின் ஒவ்வொரு பக்கத்திலும் உள்ள சொற்களில் பாதிக்கு மேல் பொருள் அறிவீர்கள் இன்ஷா அல்லாஹ்!

என்ன பயில இருக்கிறோம் !?

அரபி மொழியை புரிந்து கொள்வதற்கு எளிதான வழி தொழுகை என்பதைக் கண்டறிந்து.  ஏற்கனவே நம் அனைவருக்கும் அரபி உரைநடை தெரியும் என்பதால் தினமும் நாம் பயில்வதை தொழுகையில் பயிற்சி செய்யலாம்! 

பயிலக் கூடியது:
சூராஃபாத்திஹாமற்றும்குர்ஆனின்இறுதி 6 அத்தியாயங்கள்
தொழுகையின்வேறுபட்டநிலைகள்
அவசியமானஅடிப்படைஇலக்கணம்

பிரத்தியேகமானது:   ஒவ்வொரு பகுதியிலும் ஈமானை உயர்த்தக்கூடிய தனித்தன்மையுள்ள பாடங்கள்.

இந்த பயிற்சியின் நோக்கம் என்ன?

தினமும் ஓதக் கூடியவற்றை (தொழுகையிலும் மற்ற சமயத்திலும்) புரிந்து ஓதுதல் – இது தொழுகையில் நம்முடைய கவனத்தையும்  அல்லாஹ்வுடன் நமக்கு இருக்கும்  தொடர்பையும் வெகுவாக முன்னேற்றும்.

குர்ஆன் வைத்திருப்பதற்கு நல்ல பொருள் மட்டுமல்ல – அது, கண்டிப்பாக பெற வேண்டிய வாழ்வின் வெற்றிக்கு வழிகாட்டி.

குர்ஆனைப் புரிந்து கொள்வது மிகவும் கடினம் என்ற எண்ணத்தை நிரந்தரமாகப் போக்குவது.  இப்போது ஒவ்வொரு பக்கத்திலும் உள்ள பாதி சொற்கள் புரியும்போது, 100% குர்ஆனைப் புரிய ஆரம்பிப்பது மிகவும் எளிது!

இந்த பயிற்சி வகுப்பின் பயன்கள் என்ன?

குர்ஆன் தொடர்புடைய எல்லா செயல்களுக்கும் முன்னுரிமை அளிப்பதற்கு தேவையான முக்கியமான சூத்திரம்!

மிக விரைவாக படிப்பதற்கு உத்திரவாதம் அளிக்க வல்ல சக்தி வாய்ந்த, ஆராய்ச்சிகளின் அடிப்படையில் உருவாக்கிய அணுகு முறை.

‘எவ்வாறு’என்ற பாடங்கள் உள்ளன.  தொடர்பு கொள்ளுங்கள், கற்பனை செய்யுங்கள்,

இலக்கணம் கற்றுக்கொள்ள புரட்சிகரகமான யுத்தி; முழுமையான உடல்ரீதியாக (இணைந்த) செயல்பாடு- TPI (Total Physical Interaction).

இயன்றவரை எல்லாவிதமான கல்விச்சாதனங்களும் அளிக்கப்படும்: ஒளிப்படங்கள், எம்பி 3 (mp3),பவர் பாயின்ட் கோப்புகள், பாடப் புத்தகங்கள், பயிற்சிப் புத்தகங்கள், மின்னஞ்சல் நினைவூட்டல்கள், சிறப்பு வினா விடைகள் மற்றும் ஒரு இறுதித் தேர்வு.

UNDERSTANDING QURAN ACADEMY http://understandqurantamil.com/

இந்த அருமையான பயிற்சி வகுப்புகள் தமிழில் அமீரகம், சவுதி அரேபியா, குவைத் போன்ற நாடுகளிலும் இந்தியாவில், ஆங்கிலம் உருது தமிழ் ஆகிய மொழிகளில் இந்தியாவில் பல பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. டாக்டர் அப்துல் அஜீஸ் அப்துல் ரஹீம் மற்றும் இன்னும் பல தன்னார்வச் சகோதரர்களின் பாரிய முயற்சியால் குர்ஆனை எளிதில் புரிந்து கொள்வது எப்படி என்ற வகுப்பு மிகச் சிறப்பாக நடைப்பெற்று வருகிறது.

http://understandqurantamil.com/ தளம் பற்றி டாக்டர் அப்துல் அஜீஸ் அப்துல் ரஹீம் அவர்கள் என்ன சொல்லியுள்ளார்கள் என்பதை பார்க்க இந்த சுட்டிக்கு செல்லவும் http://understandqurantamil.com/about-us மேலும் இது தொடர்பாக இந்த தளத்தின் பயிற்சியாளர் அவர்கள் தரும் தகவல்கள் இதோ காணொளியாக.


அமீரகத்தில் சகோதரர் சேக் ஜலாலுதீன் அவர்கள் கடந்த மூன்று மாதத்திற்கும் மேலாக இந்த பயிற்சி வகுப்பை நடத்தி வருகிறார்கள். இதில் நிறைய சகோதரர்கள் பயன் அடைந்து வருகிறார்கள். இதில் கலந்து கொண்டு பயனடைந்து வரும் நமது அதிரை சகோதரர்களின் பயிற்சிகளின் காணொளிகள் இதோ உங்கள் பார்வைக்கும்.

சகோதரர் T. அப்துல் காதர்.



சகோதரர் M. தாஜுதீன்



jalaludeens1@gmail.com  என்ற மின்னஞ்சலை தொடர்பு கொண்டு மேலும் விபரங்கள் தெரிந்து கொள்ளலாம்.

குறிப்பு : வெள்ளிதோறும் காணொளிப் பயிற்சி பதிவுகள் பதிக்கப்படும் இன்ஷா அல்லாஹ்!

அதிரைநிருபர் பதிப்பகம்

இஸ்லாத்தில் குற்றவியல் சட்டங்கள் ! 22

அதிரைநிருபர் பதிப்பகம் | September 20, 2013 | , ,

உலகிலேயே அதிகமான மக்களால் துரதிர்ஷ்டவ சமாக தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட மார்க்கம் இஸ்லாம். இதன் காரண காரியங்களை ஆராயும்போது குற்றவியல் சட்டமும் அதில் அடங்குகின்றது. உலகில் அமைதி நிலவ,சமத்துவம் சகோதரத்துவம், தழைத்தோங்க அன்று  தன் அழகிய நிலைப்பாட்டை எடுத்து இயம்பியது,இன்று இயம்புகின்றது. என்றும் இயம்பும் உலக முடிவு நாள் வரை.

இந்த தவறாக புரிந்து கொள்ளப்பட்ட குற்றவியல் சட்டம் எவ்வளவு தெளிவானது.அறிவுபூர்வமானது. நடைமுறைபடுத்த தகுதியானது பகிரங்கமானது. குற்றங்களை குறைக்க வல்லது என்பதை எடுத்து முன் வைப்பதுதான் இந்த பதிவு.

ஏற்றத்தாழ்வு 

ஒட்டு மொத்த மனித குலத்துக்கும்  நன்மைகளை வாரி வழங்குவதில் இஸ்லாம் என்றுமே முன்னிலை வகிக்கின்றது. இயற்கையிலேயே இறைவன் படைப்பில் மனிதன் எல்லா வகையிலும் ஏற்றத்தாழ் வோடுதான் படைக்கப்பட்டிருக்கின்றான். ஒரு கூட்டம் பலம் பொருந்தியதாக இருந்தால் , மற்றொரு கூட்டம் பலகீனமாக படைக்கப்பட்டிருக்கும், ஒருவன் செல்வந்தனாக இருந்தால் ஒருவன் ஏழையாக படைக்கப்பட்டிருப்பான். ஒருவன் குலத்தில் உயர்ந்தவன் என்றிருப்பான், ஒருவன் தாழ்ந்தவன் என்றிருப்பான்.இப்படி ஏற்றத்தாழ்வு , வறுமை செல்வம், வலிமை, பலகீனம் என்பது  இறைவனின் இயற்க்கை படைப்பு. 

வலிமை மிக்கவன் பலகீனமானவனை அடக்கி ஆளுதல், அவன் மீது தன் அதிகாரத்தை பிரயோகித்தல்,அவனுக்கு  அநீதி இழைத்தல்.தன் வலிமையைக்கொண்டு அவன் சொத்து சுகங்களை சூறையாடுதல் எதிர்த்து நிற்பவர்களை  தன் வலிமையைக்கொண்டு அடக்குதல் போன்ற அரசின் குற்றவியல் சட்டத்திற்கு கொஞ்சம் கூட பயமின்றி குற்றத்தை அவனால் அரங்கேற்ற முடிகின்றது. இது ஏன் நடைபெறுகின்றது?

அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் துப்பாக்கி கலாச்சாரம் சர்வ சாதாரணம். அங்கே பொம்மைகளை கடையில் வாங்குவதுபோல் மிகவும் சர்வசாதரணமாக வாங்கி விடுகின்றனர்.  அதன் பின் விளைவுகளை அதிகமாக தெரிந்து வைத்திருந்தும் பள்ளிக்கு செல்லும் மாணவன் கூட சர்வ சாதாரணமாக பயன் படுத்தும் அளவுக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டு அதன் விபரீதம் வெளியான பின்னே சிந்திக்கத்தலைப்படுகின்றனர். 

குற்றங்களின் பின்னணியும், அதை செயல்படுத்திய விதமும் சர்வசாதாரணமாக  ஆராயப்பட்டு குற்றங்களுக்குண்டான தண்டனை குற்றவாளி   திருந்தி வரும் தண்டனையாக இருப்பதில்லை.மாறாக முன்பிருந்ததைவிட படுமோசமான மூர்க்கனாக வெளி வருகின்றான். அதைவிட பன்மடங்கு கொலைக்கு வித்திடும் ஒரு மாபாதக செயலின் முன் திட்டத்தோடு வெளியில் வருகின்றான். அநியாயக் கொலைக்கு கொலை என்றிருந்தால் குற்றங்கள் சங்கிலித்தொடராகும் வாய்ப்பே இல்லாமல் குற்றங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து போகும். ஒரு குற்றமற்ற சமுதாயம் உருவாக வழி பிறக்கும். இதை இவர்களும் புரிந்திருக்க வில்லை. 

ஆதலால் குற்றமற்ற சமுதாயத்தை உருவாக்கும் முயற்சியில் இவர்களுக்கும் தோல்வியே  முடிவாக இருக்கின்றது. காரணம் கொடுக்கப்படும் தண்டனையில் வீரியம் இல்லை. தண்டனை பெற்றவன் இனி இக்குற்றத்தை கனவிலும் நினைத்துப்பார்க்காத அளவுக்கு தண்டனை பகிரங்கமாக இருக்கவேணும். இந்த தண்டனையை பார்க்கும்  சமூகம் அந்த குற்றத்தை நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு தண்டனையில் கடுமை வேணும் இதை செய்யாதவரை மக்களின் இயல்பு வாழ்க்கை என்பது என்றும் ஒரு கேள்விக்குறியாகத்தான் சமூகத்தில் இருக்கும்.

ஏற்றத்தாழ்வு ஒரு காரணம் 

ஏற்றத்தாழ்வுகள் என்று இருக்குபோது இயற்கையிலேயே மனித மனம் அவனை குற்றத்தில் ஈடுபட வைக்கின்றது . எல்லோருமே எல்லாவிதத்திலும்  சரி சமமாக படைக்கப்பட்டிருந்தால் குற்றங்கள் ஏற்பட வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும். ஒருவனிடம் இருக்கும் செல்வம், வலிமை ,குலப்பெருமை, ஆற்றல் அதிகாரம் மற்றும் அனைத்து உலக விஷயங்களில் மற்றவனை விட மேம்பட்டு இருக்கும்போதுதான் அவனை அவன் மனம் தவறு செய்ய அவன் அதிகாரத்தையோ, அவன் ஆற்றலையோ பயன் படுத்தத்தூண்டுகின்றது. வலிமை குன்றியவனுக்கு நீதி கிடைப்பது என்பது அரிதாகின்றது. இருவருமே பலத்தில் சமமானவர்களாக இருக்கும் பட்சத்தில் அங்கே ஒருவன் மீது ஒருவன் தன் வலிமையை பிரயோகிக்க வாய்ப்பில்லாமல் போகின்றது. 

ஆனால் உலகில் மனிதன் படைக்கப்பட்ட நியதியில் ஏற்றத்தாழ்வு என்பது இப்புவியின் இயக்கம் நிற்கும் வரை தொடர்வதாகும். ஆதலால் குற்றங்களே நிகழாத உலகை காண்பது என்பது   கும்மிருட்டில் நடுக்கடலில் கடுகை தொலைத்து விட்டு தேடுவதுபோல் தான். ஆதலால் உலக முடிவு நாள் வரை குற்றங்கள் தொடர்ந்து கொண்டுதானிருக்கும் என்றாலும்,இக்குற்றங்களை களைய வழியே கிடையாதா? இதை தடுப்போர் யாருமில்லையா ? அதற்க்கு இவ்வுலகில் வேறு ஏதாகிலும் சக்தி இல்லவே இல்லையா ? இது தொடர் கதை தானா ? என்பதற்கு இல்லவே இல்லை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாவிட்டாலும் இவ்வுலகின் கணிசமான குற்றங்களை கண்டிப்பாக துடைத்தெறிய முடியம் என்பதற்கு தீர்வு ஒன்றுதான். அதுதான் இஸ்லாத்தின் அல் -குரானின் குற்றவியல் சட்டங்கள்.

தண்டனையில் கடுமை தேவை 

உலகின் மற்ற எந்த சட்டத்தாலும் இன்றுவரை உலகளவில் குற்றங்களை குறைக்க முடியாமல் விழி பிதுங்கி ஒவ்வொரு நாடும் அமைதி வேண்டி ஆளாய் பறக்கும்போது. அதற்கு வடிகாலாய்  இஸ்லாத்தின் குற்றவியல் சட்டங்கள் நம் முன்னே விரிகின்றது. இதன் அறிவுபூர்வ குற்றவியல் சட்டங்கள் எக்காலத்திற்கும் பொருத்தமானவை. மாற்றம் தேவை இல்லாதவை.

உலகில் உள்ள பெரும்பாலான  அரசாங்கங்கள்  குற்றவியல் சட்டத்தை அமுல்படுத்துவதில் இன்றுவரை தோல்வியைத்தான் தழுவி இருக்கின்றன. ஏனனில் குற்றங்களுக்காக கொடுக்கப்படும் தண்டனை குற்றவாளியை எந்த விதத்திலும் திருத்துவதாக இல்லை. மாறாக தண்டனை என்னும் பெயரில் அவர்கள் உள்ளே வாழும் சொகுசு வாழ்க்கை , நாம் தண்டனை பெற்று உள்ளே வந்து இருக்கின்றோம் என்ற அச்ச உணர்வை ஏற்ப்படுத்தாததுதான்.

அறைகூவல் 

இந்த குற்றவியல் சட்டத்திற்கு முஸ்லிம்களாகிய நாம் உரிமை கொண்டாடும் அதே வேளையில், அதை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தும் வாய்ப்பில்லாத தேசத்தின் பிரஜைகளாக நாம் இருக்கின்றோம். இந்த நாட்டில் குற்றவியல் சட்டத்தின் பொறுப்பில் உள்ள  அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இதை ஒரு அறைகூவலாகவே விடுக்கின்றோம்.  

நீங்கள் உண்மையிலேயே நம் தேசத்தின் மீதும், நம் நாட்டின் இறையாண்மையின் மீதும் மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளவர்களாக இருந்தால். நம் நாட்டில் சட்டமும் ஒழுக்கமும் பாதுகாக்கப்பட்டு குற்றங்கள் குறைய வேணும் என்று உண்மையிலேயே விரும்பினால், பெண்களின் கற்பும், மானமும், பாது காக்கப்படவேனும் என்று உள்ளத்தில் உண்மையில் மனப்பூர்வமான உறுதி இருந்தால்,இது ஒரு குறிப்பிட்ட மதத்தின் சட்ட திட்டங்களில் உள்ளது என்ற குறுகிய வட்டத்தில் பார்க்காமல், இது மனிதக்கரங்களுக்கு  அப்பாற்பட்ட , ஒரு இறை சக்தியின் மூலம் வந்தது என்று நினைத்து, குற்றத்திற்குண்டான சட்டமாக அமுல் படுத்திப்பாருங்கள் அதன் அற்புத  விளைவை வெகு சீக்கிரம் அறிந்து கொள்வீர்கள். 

அப்படியின்றி, குற்றங்கள் மலிந்தாலும் பரவாயில்லை, நாட்டில், லஞ்சம், லாவண்யம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, திருட்டு,அயோக்கியத்தனம், மிரட்டல், இன்னும் என்னென்ன தீமைகள் உலா வருகின்றனவோ அவை அனைத்தும் தொடர்கதையானாலும் பரவாயில்லை , ஒரு சிறுபான்மை மக்களின் மார்க்கத்தின் குற்றவியல் நடைமுறை சட்டத்தை  நாட்டின் குற்றவியல் சட்டமாக அறிமுகப்படுத்தத்தயாரில்லை என்று பகிரங்கமாக நீங்கள் சொல்வதைத்தவிர உங்களுக்கு வேறு வழி இல்லை என்று தான் எடுத்துக்கொள்ள முடியும். 

மனித சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது 

மனிதன் இறைவனால் படைக்கப்பட்ட ஒரு பலகீனமான,ஆத்திரம், அவசரம், மற்றும் சொற்ப அறிவே கொடுக்கப்பட்ட ஒரு ஜீவன்.இறைவனால் படைக்கப்பட்ட மூளையைத்தவிர வேறொன்றும் நம் சிரசில் இல்லை. அது ஒரு குறிப்பிட்ட அளவில்தான் சிந்தித்து எதையுமே முடிவு எடுத்து இறுதி கட்டத்திற்கு வரும். அந்த சொற்ப அறிவே கொடுக்கப்பட்ட மூளையைக்கொண்டு மனிதனும் தான் மனிதன் என்ற முறையில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் பொருந்தும் சட்டத்தைத்தான் தன் சிந்தனையில் கொண்டு வந்து சட்டமியற்ற முடியும். 

இது காலத்திற்கு ஏற்பவும் , குற்றத்தின் தன்மை, இடம், பொருள், ஏவல் அனைத்தின் தன்மையைப்பொறுத்து கண்டிப்பாக மாற்றங்களுக்கு உள்ளாகியே தீரும். 

ஆனால் இறைவனின் குற்றவியல் சட்டமோ எக்காலமும் எக்குற்றத்திற்கும் ஏற்றாற்போல் மாற்றத்திற்கு இடமின்றி மாறி வரும் காலத்திற்கும் மாற்றத்தேவையில்லாத ஒரு அறிவாற்றல் மிக்க சட்டமாகும். இப்பூவுலகில் அமைதிப்பூங்கா  என்னும் குற்றமற்ற மனித சமூகம் எங்கும் உருவாக,குற்றத்தை ஒருவன் செய்யுமுன் அவனை ஒரு கணம் யோசிக்க வைக்கும் கடுமை நிறைந்த சட்டமாகும். 

ஒருவன் ஒரு திருட்டுக்குற்றத்திற்காக  சிறை தண்டனை அனுபவிக்கின்றான் என்று வைத்துக்கொள்வோம். நம் நாட்டு குற்றவியல் சட்டப்படி ஒரு குறிப்பிட்ட காலம் சிறைத்தண்டனை அனுபவித்துவிட்டு,  அரசு செலவில் சாப்பாடு, மற்றும் எல்லாவிதமான சுகங்களையும் அனுபவிக்க வைத்துவிட்டு அவனை சிறையிலிருந்து விடுதலை செய்தால், சிறைத்தண்டனை அவனை எந்தவிதத்தில் மாற்றி இருக்கும். ஒரு விளைவும் அதனால் ஏற்ப்பட்டு இருக்காது. இதனால்தான். 15முறை சிறை சென்றவன் மீண்டும் கைது என்று செய்தித்தாள்களில் படிக்கின்றோமா இல்லையா ?

குற்றத்தின் தண்டனை எப்படி இருக்கவேணும் ? இந்த குற்றத்தை செய்தவன் இனிமேல் செய்யாத அளவுக்கு இருப்பதோடு, அவனுக்கு கொடுக்கும் தண்டனை பகிரங்கப்படுத்தப்பட்டு, இனிமேல் சமூகத்தில் அந்த குற்றமே நிகழாத வண்ணம் இருக்க வேண்டுமல்லவா ? இதைத்தான் இஸ்லாம் சொல்கின்றது.

மனித உறுப்பை சேதப்படுத்தினால் :

:உயிருக்கு உயிர் என்ற சட்டத்தில்தான் உங்கள் உயிருக்கு உத்திரவாதம் இருக்கின்றது என்று அருள் மறை குரான் அதிரடி சட்டத்தை அறிவுபூர்வமாக அள்ளித்தருகின்றது. ஒருவன் உயிருக்கு அநியாயமாக குறி வைப்பவனின் உயிருக்கும் குறி வைக்க சொல்கின்றது. 

கண்ணுக்கு கண் பல்லுக்கு பல், என்று சட்டத்தை வரையறுத்து ஒருவனுக்கு   அநியாயமான முறையில் தன் உறுப்புகளில் ஒன்று மற்றவனால் சேதப்படுத்தப்பட்டால், அவன் எந்த உறுப்பை சேதப்படுத்தினானோ, அதே உறுப்பை சேதப்படுத்தவேனும். அதை ஆளும் அரசே செய்யவேணும். அதையும் பகிரங்கமாக செய்யவேணும். என்று சொல்கின்றது. 

ஒருவனின் உரிமையுள்ள பொருளை அவனுக்கு தெரியாமல் திருடி விட்டானா அவனது கையை வெட்டு . பின்பு பார் ஓராயிரம் கைகள் வெட்டப்படுவது தவிர்க்கப்படும், ஒரு பெண்ணின் கற்பு சூறையாடப்பட்டதா ? கொடு அவனுக்கு மரண தண்டனை, ஒரு லட்சம் பெண்களின் கற்பு பாது காக்கப்படும் 

ஒருவன் உன் கன்னத்தில்  ஞாயமின்றி அறைந்தானா ? அவனும் கன்னத்தில் அறையப்பட்டவேனும். ஒருவன் உன் பல்லை உடைத்தானா ? அவன் பல்லும் உடைக்கப்படவேனும்.இவை அனைத்தும் ஒரு அரசு தன் கட்டுப்பாட்டில் இருக்கும் குற்றவியல் சட்டத்தின் மூலம் குற்றத்தின் தன்மையில்  அதில் பாரபட்சம் இல்லாமால் நடைமுறைப்படுத்தினால் குற்றமற்ற தேசத்தை நம் கண் முன்னே அரசில் கோலோச்சும் ஆளும் வர்க்கமும் அதன் அதிகாரிகளும் காணமுடியும்.  உங்கள் முன் தெளிவான அழகான குற்றவியல் சட்டங்கள் இருந்தும் கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்து கொண்டு இருக்கின்றீர்கள். 

ஒரே ஒருமுறை நடை முறைப்படுத்தி பாருங்கள் ஒரு 5 வருட காலத்திற்கு.இதன் உண்மை உலகுக்கு தெரியவரும். எவ்வளவு மாபாதக செயல் என்று கருதப்படும் குற்றங்களும் இருந்த இடம் தெரியாமல்,,உண்மை ஜனநாயகத்தின் காலில் போட்டு மிதிக்கப்பட்டு அமைதிப்பூங்காவாக ஒட்டு மொத்த தேசமும் குற்றமற்ற தேசமாக மலரும்.

இதனை சட்டமாக்கினால் ஏற்படும் நன்மைகள் :

1. குற்றங்கள் கணிசமாக குறையும். 
2. வழக்குகள் தேங்கும் நிலை ஏற்படாது. 
3. சிறை குற்றவாளிகளினால் நிரம்பி வழியாது. 
4. சிறை சாலைகளை அதிகப்படுத்த வேணும் என்ற அவசியம் இருக்காது.
5. நீதிபதிகள் எண்ணிக்கையையும், அரசு வழக்கறிஞர்கள் எண்ணிக்கையையும் அதிகப்படுத்தவேனும் என்ற அவசியம்  இருக்காது.
6. சிறை சாலையில் குற்றவாளிகளுக்காக செலவிடப்படும்    தொகை கணிசமாக குறையும். அந்தப்பணத்தை வேறு அரசின்   பொது நலக்காரியங்களுக்கு பயன் படுத்தலாம். 
7. வழக்குகளுக்கான  நீதி கிடைப்பது துரிதப்படுத்தப்படும். 
8. பொதுமக்கள் அச்சமின்றி நடமாட வழி வகை பிறக்கும்.
9. குற்றம் புரியும் எண்ணமுள்ளவனுக்கு குற்றம் செய்வதற்கு முன் பயத்தை  ஏற்ப்படுத்தும். 
10.தாமதமாக கிடைக்கும் நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்னும் அவல நிலை அகலும்.

இக்குற்றவியல் சட்டத்தை அமுல் படுத்த தலைப்படும்போது, எந்த நாடு இதற்கு முன்னுரிமை கொடுத்து முந்திக்கொள்கின்றதோ அது அமைதிப்பூங்காவாக, குற்றமற்ற சமுதாய மக்கள் வாழும் பிரதேசமாக உண்மை ஜனநாயகம் என்னும் ஆலமரம் வேரூன்றி நிழல் தரும் நாடாக கண்டிப்பாக மாறும், இச்சட்டம் மாற்றிக்காட்டும் என்பதில் சந்தேகம் இல்லை. 

* இன்னும் எத்தனையோ அலப்பரிய நன்மைகளை அள்ளித்தரும் தகுதி பெற்றது இந்த சட்டம்.
* குற்றவாளியை குலை நடுங்கவைக்கும் தன்மை பெற்ற சட்டம்.
* மனிதாபிமானத்தை ஆதரிக்கும் சட்டம்.
* எந்த அதிகாரத்திற்கும் வளைந்து கொடுக்காத , கொடுக்கக்கூடாத சட்டம்.
* நீதி செலுத்துபவன் உறவினரே பாதிக்கப்பட்டாலும் நீதியை நிலை நாட்டத்தவறாதே என்று நீதிபதிக்கு உரத்த குரல் கொடுக்கும் சட்டம்.
* நாணல் போல வளைந்து விடாமல் , தர்மத்தாய்க்கு நிழல் கொடுக்கும் சட்டம்.
* உண்மை தன்னை ஊனப்படுத்திவிடாமல், அதற்கு தலைகுனிவு வந்துவிடமால், தடுமாற்றத்திற்கு இடமில்லா சட்டம்.
* இப்புவி கண்டிப்பாக பின்பற்றி நடக்க வேண்டிய புனிதம் பொருந்திய சட்டம்.
* இறைவனின் இக்குற்றவியல்  சட்டம்.
* அமுல் படுத்தி ஆதரித்து, அதன் பலனை வாழ்நாளிலேயே காணும் அரசு உண்டா?
* உண்டென்றால் அங்கே குற்றமற்ற சமுதாயமும் உண்டு.
* குற்றமற்ற அரசும் உண்டு .

வாருங்கள் இஸ்லாத்தின் குற்றவியல் சட்டத்தின் நிழலில்

குற்றமில்லாச் சமுதாயமாக.

அமைதியின் ஆனந்தத்தை நோக்கி...!

அபு ஆசிப் என்ற அப்துல் காதர்

ஷைத்தானின் ஊசலாட்டம்... 22

அதிரைநிருபர் பதிப்பகம் | September 06, 2013 | , , , , , ,

நிலையாய் இருப்பவன், பிறப்பு, இறப்பு  பசி, தூக்கம், தேவை, மற்றும் சந்ததிக்கு அப்பாற்பட்ட தூய இறைவன் முதன் முதலாக மண்ணிலிருந்து மனிதனை ( ஆதம் நபியை ) படைத்தான். மேலும் சுவனத்து இன்பங்களை அனுபவிக்கச் சொல்லி, ஆறறிவையும் கொடுத்து பலகீனம் என்னும் ஒரு யதார்த்தமான ஒன்றையும் கூடவே கொடுத்து, ஷைத்தான், மலாயிக்கத், என இரண்டு தூண்டுதல்களையும் கொடுத்து சோதனை செய்தான். 

ஆரம்பமே ஷைத்தான் தூண்டுதல் மேலோங்கவே, நெருங்க வேண்டாம் என்று படைத்தவனால் எச்சரித்து தடுக்கப்பட்ட மரத்தினை நெருங்கி, அதன் கனிகளைப் புசிக்க வேண்டாம் என்று விலக்கப்பட்டதை சுவைத்து சுவனத்தை விட்டும் வெளியேற்றப்பட்ட முதல் மனிதரே ஷைத்தானின் தூண்டுதலாலேயே இவ்வுலகிற்கு அறிமுகமாகின்றார்கள். இப்படி முதல் மனிதரையே  ஷைத்தான் வெற்றி கொண்டு இவ்வுலகில் அந்த தூண்டுதல் ஒரு புறமும், இறைவனின் எச்சரிக்கை சைத்தானைப் பற்றி மறுபுறமுமாக அல்லாஹ் இவ்வுலகில் ஆதம் (அலை) , அவரின் துணையாக ஹவ்வா (அலை) இருவரையும், ஷைத்தான்,  மலாயிக்கத் என்னும் இரு தூண்டுதல்களோடு மனதை படைத்து, இச்சோதனையில் இறைவனின் எச்சரிக்கையில் வெற்றி பெறுதல் மூலமே  ஈடேற்றம் அடைய முடியும் என்ற நற்போதனைகளையும் வழங்கி இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்துகின்றான்  

அந்த ஷைத்தானியத்தின் ஊசலாட்டம் மனிதனை எவ்வாறெல்லாம் ஆட்கொள்ளும், அதிலிருந்து மனிதன் கரை சேருவது, அதை எப்படி கையாளுவது, அதனை எப்படி வெற்றி கொண்டு இறை பொருத்தத்தை பெறுவது என்பதின் நோக்கமே இந்த பதிவு. 

ஈமானில் ஊசலாட்டம்

ஒவ்வரு மனிதனும் பலகீனமானவனாகவே படைக்கப் பட்டிருக்கின்றான். ஆசாபாசங்கள், தேவைகள், பசி, தூக்கம், மறதி, இச்சை மற்றும்  உலகாதாய விஷயங்களில் அவன் மிகவும் அவசரக்காரனாகவும், ஆத்திரக்காரனாகவுமே இருக்கின்றான்.  இவைகள் அல்லாஹ்விடத்தில்  மிகப்பெரும் பாவத்தை ஏற்படுத்தி விடப் போவதில்லை. 

ஆனால் அடிப்படை வேரான ஈமானை பாதிக்கக் கூடியவைகளில் எந்த ஒரு விஷயமும் தலைப்பட்டால், அவை முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய ஒன்றாகும். இப்பேர்ப்பட்ட விஷயம், ஷைத்தானின் இந்த ஊசலாட்டத்தில் நாம் சலனப்படுகையில் நடைபெற வாய்ப்புண்டு. (அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாக்க வேணும்).

இப்படி சலனப் படுகையில் மார்க்கம் நம்மை எப்படி வழி நடத்தி செல்கின்றது என்பதை விளக்கவே இந்த பதிவு நம்மை முன்னெடுத்துச் செல்கின்றது. 

இந்த ஊசலாட்டம், நம்மை மட்டுமல்ல  யார் அல்லாஹ்வை பொருந்திக் கொண்டார்களோ, யாரை அல்லாஹ் பொருந்திக்கொண்டானோ அந்த சஹாபாப் பெருமக்களுக்கே  இது ஏற்பட்டு இருக்கின்றது. இந்த விஷயத்தைப் பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் கூறியபோது, 

ஷைத்தான் நம்மை நல்ல எண்ணங்களை நம்  மனதினில் தூவி எண்ணவிட்டு அதன் இறுதியில், நம் ஆழ்நம்பிக்கைகளின் அடிப்படையை தகர்த்தெறியும் செயலில் ஈடுபடுவான். அந்த நிலையில் நாம் நம்மை உஷார் நிலையில் வைத்து ஈமானை  பாதுகாக்க வேண்டும். 

ஒரு முறை நபி (ஸல்) அவர்களிடம் ஒரு கூட்டம் வந்தது. அவர்கள், யாரசூலுல்லாஹ், எங்களுக்கு சில கெட்ட எண்ணங்கள் (ஈமானின் வேரை அசைத்துப் பார்கக்கூடிய அளவுக்கு)   மனதில் தோன்றுகின்றது. ஆனால் அதை வெளியில் சொன்னால் படு பயங்கரமானதாக இருக்கும் என்று தோன்றுகின்றது. அதை வெளியில் சொல்வதற்கு  பதிலாக வானத்திலிருந்து கீழே குதித்து விடுவது மேல் என்றும்  தோன்றுகின்றது என்று சொன்னவுடன். 

அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், என்று மூன்று முறை முழங்கிவிட்டு, இதுதான் உண்மையான ஈமான். ஏனனில், மனதில் தோன்றுவது ஷைத்தான், அதை வாயால் மொழிந்தாலோ, பிறரிடம் சொன்னாலோ அல்லது, செயலில் காட்டினாலே ஒழிய அல்லாஹ்விடத்தில் இதற்கு எந்த வித கேள்வியும் இல்லை. ஏனெனில் , நீ இதை சொல்லாமல் இருப்பதே அல்லாஹ்வை பயந்துதான்.  இதுதான் உண்மையான் ஈமான். இங்கே ஷைத்தானின் ஊசலாட்டம் (உள் எண்ணம்) எந்தப்பயனையும் தராததால், உள்ளத்தில் எண்ணினாலும் ஈமானில் நாம் உறுதியாக இருக்கின்றோம் என்று பொருள் என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை புகழ்ந்தார்கள். 

மனதினில் அந்த (வஸ்வாஸ்) ஊசலாட்டம் வரும்போது நாம் அல்லாஹ்வை நினைத்து பயப்படுகின்றோம் அல்லவா ? அங்கேதான் ஈமானில் நாம் உறுதியாக இருக்கின்றோம் என்று பொருள்.  

மேலும் ஊசலாட்டம் மனதில் தோன்றும்போதெல்லாம் ஒவ்வொரு முறையும் " அஊது பில்லாஹி மினஷ்ஷைத்தான் நிர்ரஜீம் ( யா அல்லாஹ் எடுத்தெறியப்பட்ட ஷைத்தானை விட்டும் என்னை பாதுகாப்பாயாக!) என்று வேண்டும்பொழுது நம்  ஈமான் கூடிக் கொண்டே போகின்றது. 

எங்கெல்லாம் நம் எண்ணம் பலகீனப்படுகின்றதோ, அங்கு கண்டிப்பாக ஷைத்தானின் எண்ணங்கள் மேலோங்கும். நம்முடைய பலகீனம் பார்த்து ஷைத்தான் நம்மை நெருங்குவான், எப்படியும் நம்மை அவன் வழிக்கு  சொல் வடிவம், அல்லது செயல் வடிவம் கொடுக்க வைத்து நம்மை தடம் புரள வைக்க தக்க தருணம் பார்த்திருப்பான். அந்த இடத்தில்தான் நாம் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுமுகமாக " இறைவா என்னை ஷைத்தானின் தீங்கிலிருந்து காப்பாற்று" என்று வேண்டுகின்றோம்.

அல்லாஹ்வையன்றி வேறில்லை 

ஒரு முறை இரு சஹாபிகளுக்கு இடையே ஒரு விஷயத்தில் நடந்த விவாதத்தில், இருவரும் ஆக்ரோஷமாக ஒரு முடிவின்றி பேசிக்கொண்டிருந்த சமயத்தில், ரசூல் (ஸல்) மற்றொரு சஹாபியிடம் சொன்னார்கள் :  இவர்கள் இருவரிடத்திலும் இப்பொழுது ஒற்றுமை ஏற்பட ஒரு விஷயம் என்னிடம் இருக்கின்றது. இவர்கள் இருவரும் அதைச் சொன்னால் உடன் அங்கு ஒற்றுமை நிலவும்.  அதுதான் " அவூது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர்ரஜீம்" (எடுத்தெறியப்பட்ட ஷைத்தானை விட்டும் உன்னிடம் பாது காவல் தேடுகின்றேன்) என்று சொல்ல சொன்னார்கள்"  

அல்லாஹ்வின் உதவியின்றி எந்த ஒரு நன்மையான காரியத்தை செய்யவோ அல்லது எந்த ஒரு தீமையிலிருந்து விலகவோ நமக்கு சக்தி இல்லை என்பதையும் புரிந்து கொள்ளனும். 

ஒரு போரில் ஒரு சஹாபி அல்லாஹ்வுக்காக மிகக்கடுமையாக போரிட்டு பல காபிர்களை வெட்டி வீழ்த்தினார். அப்போரில் வெற்றியும் கிட்டியது. மிகப்பெரும் அந்தஸ்தை அடைய வேண்டிய இந்த சஹாபி, அப்போரில் இவருக்கு ஏற்பட்ட பலத்த காயத்தின் காரணமாக தன்னால் அந்த வருத்தத்தை தாங்க இயலாமல் தன்னைத்தானே ஈட்டியால் குத்தி தற்கொலை செய்து கொண்டார்  அந்த போர்க்களத்திலே.  அண்ணல் நபி (ஸல்) சொன்னார்கள் ,  " இவர் ஒரு நரகவாதி”. அவருக்காக மய்யித்து தொழுகை நிறைவேற்ற ரசூல் (ஸல்) மறுத்து விட்டார்கள்.

நாம் நினைக்கும்போதெல்லாம் ஒரு நன்மையான காரியத்தை செய்து முடிக்கவோ, அல்லது தீமையைக் கண்டு விலகி நிற்கவோ முடியாது. இரண்டிலுமே அல்லாஹ்வின் நாட்டம் அங்கே ஆஜராகியே ஆகவேணும். நன்மையின் பக்கம் விரைந்து செல்வதும் , தீமையைக்கண்டு விலகி நிற்பதும் அவனைக் கொண்டே நடக்கின்றது என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை வேணும்.

நம் பலகீனம் ஷைத்தானின் பலம்

எந்த சூழ்நிலையிலும் நம் பலகீனம் நம்மை ஷைத்தானியத்துக்கு கட்டுப்பட வைத்து விடக்கூடாது. நன்மையான காரியங்களில் நம் கவனம் இருக்கும்போது அங்கே ஷைத்தான் ஆஜராகுவான் என்பது நபி (ஸல்) அவர்கள் வாக்கு. அங்குதான் உலக விஷயங்கள் நம் சிந்தனையில் உலவவிடுவான் ஷைத்தான். 

சாதாரணமாக  கடையில் வியாபாரம் பண்ணும்போதோ, அல்லது வேறு உலக விஷயங்களில் ஈடுபடும்போதோ, ஷைத்தானியத்தின் ஊசலாட்டாம் பெரும்பாலும் இருக்காது. ஆனால் இரண்டு  ரக்காத் தொழுகைக்காக நிருக்கும் போதோ அல்லது அல்-குர்ஆனை எடுத்து ஓத ஆரம்பிக்கும் போதோ அங்கே பெரும்பாலும் ஷைத்தான் நம்மை கெடுக்க ஆஜராவான்.

இங்குதான். அல்லாஹ் நம்மை சோதிக்கின்றான் என்று பொருள் கொள்ள வேணும். ஏனனில் அவன் சொன்னதுதான் ஷைத்தானின் ஊசலாட்டம் என்பது. இது இல்லையெனில் ஸ்திரமான ஈமானுக்கு வேலையே இல்லை.  இந்த ஊசலாட்டத்தில் இருந்து மீண்டு வரத்தான் நமக்கு சோதனை ஆரம்ப மனிதர்  ஆதம் (அலை) அவர்களிலிருந்து இன்று வரை தொடர்கின்றது.  இது இறுதி முடிவு நாள் வரை தொடரும்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஒவ்வொரு  மனிதனிடத்திலும் அல்லாஹ் ஷைத்தானின் ஆதிக்கத்தையும், மலாயிக்கத்துனுடைய ஆதிக்கத்தையும் படைத்திருக்கின்றான். ஷைத்தானின் ஆதிக்கம் மனிதனை உண்மையை பொய்ப்படுத்தவும், தீமையான விஷயங்களில் ஆர்வமூட்டவும் வழிநடத்திச் செல்லும். 

இந்த இடத்தில் "யா அல்லாஹ் விரட்டப்பட்ட ஷைத்தானின் தீங்கை விட்டும் பாதுகாவல் தேடுகின்றேன்"என்று சொல்லி அந்த எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மேலும் வறுமை ஏற்படும்போதும் ஷைத்தான் நம்மை ஆதிக்கம் செலுத்தப் பார்ப்பான். இந்த இடத்தில் மிக கவனமாக செயல்பட்டு அவன் ஊசலாட்டத்திலிருந்து தப்பித்து இதே பாதுகாவல் தேடவேண்டும்.   

மலாயிக்கத்தின் தூண்டுதலோ நம்மை நன்மையின் பக்கம் வழிநடத்தும். இப்படி மலாயிக்கத்தின் தூண்டுதல் நம்மை நெருங்கி நல்ல ஒரு காரியத்தை செய்ய நாடும்போது, முதன் முதலாக நாம் அல்லாஹ்வை புகழ்ந்து , போற்றவேணும். அப்பொழுதுதான், தீமையான காரியத்தின் வழி நடத்தலில் நமக்கு நாட்டம் அற்றுப்போய், நல்லதை செய்ய மனம் நாடுவதோடு, நின்றுவிடாமல், நல்லதை நடத்தியும் காட்டும். ஆதலால்  ஷைத்தான் இந்த இடத்தில் நம்மிடம் தோற்று ஓடும் நிலைமையை அது ஏற்படுத்தும்..

உறங்கும் நேரம்

உறங்கும் நேரம் ஷைத்தான் கனவிலும் கெட்ட விஷயங்களையோ, அல்லது நம்முடைய ஈமானை பாதிக்கக்கூடிய விஷயங்களையோ கனவுகளாக விதைத்தால் அதிலிருந்து விடுபட்டு விழித்து விட்டால், இடது பக்கமாக திரும்பி மூன்று முறை  துப்பிவிட்டு அப்பொழுதும் “இறைவனிடமே  இதே பாதுகாப்பை தேடவேண்டும்”  என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கற்றுத் தருகின்றார்கள்.

மேலும் ஷைத்தானே அல்லாஹ்விடத்தில் சொல்லிவிட்டு வரும்போது, யா அல்லாஹ்  நான் மனித இனத்தை என் வழியில் கொண்டு வந்து அனைவரையும் வழிகெடுப்பேன். ஆனால் யார் உன் கவசம் என்னும் ஆயுதத்தை ( அஊது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர்ரஜீம்) கையில் எடுத்து , உன் உள்ளச்சத்தில் உவப்புடன் இருக்கின்றார்களோ அவர்களைத் தவிர என்றுதான் உலகத்திற்கே அறிமுகமாகின்றான்

பாதுகாப்பு என்னும் கேடயம் 

அல்லாஹ் நம்மிடத்திலே இரு தூண்டுதல்களை ( ஷைத்தான், மலாயிக்கத்) ஏற்படுத்தி, நம் கையிலே பாதுகாப்பு என்னும் கேடயத்தை தந்து , ஷைத்தானிடத்திலே  ஊசலாட்டம் செய்யும் நம்மை தாக்கும் ஆயுதத்தைக் கொடுத்து நம்மை அவனிடமிருந்து பாதுகாப்பு பெரும் வழியினையும்  நமக்கு சொல்லித்தந்து அல்லாஹ் இப்புவி வாழ்க்கைய உண்மை முமினுக்கு ஒரு சோதனைக் களமாகவே  ஆக்கி இருக்கின்றான்.

இங்கு போட்டி அல்லாஹ்வுக்கும் ஷைத்தனுக்குமல்ல. ஷைத்தானுக்கும், மலாயிக்கத்துக்கும் போட்டி. இதில் மனிதன் இடையில் இருக்கும் ஒரு ஜீவன். ஷைத்தானின் ஆதிக்க மேலோங்க வாய்ப்பு கொடுத்தால் அவன் கட்டுப்பாட்டில் நீ. மலாயிக்கத்தின் வாய்ப்பு மேலோங்கும்போது சுவனவாசி நீ.

இதில் எந்தக் கட்டுப்பாட்டில் இயங்க வேணும் என்று அல்லாஹ் தந்த ஆறறிவு, உன்னிடம். இது தீமை, இது நன்மை என்னும் பகுத்தறியும் தகுதி உன்னிடம் இருக்கையில் ஷைத்தானின் கை மேலோங்க இடம் கொடாமல், மலாயிக்கத்தின் நன்மையில்  மேலோங்க ஒவ்வரு ஷைத்தானியத்தின் ஊசலாட்டத்திலும்  "அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தனிர் ரஜீம் (எடுத்தெறியப்பட்ட ஷைத்தானைவிட்டும் பாது காவல் தேடுகின்றேன் ) என்று முழங்குவோம். 

ஷைத்தானை நம் வாழ்வில் வெகு தூரமாக்குவோம்.

அபு ஆசிப் என்ற அப்துல்  காதர்

குணக்குன்று 15

அதிரைநிருபர் பதிப்பகம் | August 26, 2013 | , , , , , , ,

உதய நிலவின் குளிராக உஷ்ண பூமியியின் ஒரு சமுதாயத்திலிருந்து உத்தம நபியை உலகிற்கு அளித்தான் ஏக இறைவன் அல்லாஹ். நீதி மறையின் விளக்க உரையாக நற்குணத்தின் குன்றாக, இறைமறையோடு அருட்கொடையை இப்புவிக்கு பரிசாக தந்தான் வல்ல அல்லாஹ்.

தம்  தூய வாழ்வினால் மனித வாழ்க்கையின்அளவுகோலை மாற்றி , இருளை விட்டும் மக்களை அகற்றி, தங்களின் ஒழுக்கம், வழிகாட்டுதலில், சொல்லில், செயலில் ஒரே நேர்கோட்டுப்பாதையில் எள்ளளவும் பிசிறில்லாமல், தீமையெனும் களை எடுத்து, நன்மை என்னும் நாற்றங்காலை நட்டு, அதன் விளைச்சலை தன் வாழ்நாளிலேயே அறுவடை செய்து, அதன் பலனை அனைவரையும் அனுபவிக்கச் செய்தார்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.

நற்குணத்திலும், நற்செயல்களிலும், இப்புவியின் இயக்கத்திற்கு முற்றுப்புள்ளி வரும் வரை பின்பற்றப்பட வேண்டிய சமுதாயம் என்று ஒரு மிகப்பெரும் சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கிச் சென்ற , மனிதகுல முன்மாதிரி, இறுதி நபி (ஸல்) அவர்களின் குணம், அவர்களின் நடைமுறை வாழ்க்கை , பழகிய விதம், மற்றும் அவர்களின் உயர் பண்புகள் நாள்தோறும் எவ்வாறு இருந்தது என்பதை சுருக்கமாக எடுத்துரைக்கவே இந்தப்பதிவு.

உயர் பண்பு 

வார்த்தைக்குள் அடங்காத சிறந்த பண்புகளையும் குணங்களையும் கொண்டவர்களாக, அவர்களோடு சமகாலத்தில் பழகியவர்களே, அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட மரியாதையைப் போல், இதற்கு முன் யாருக்கும், யாரும் கொடுத்ததுவும் இல்லை, கொடுக்கப்பட்டதாக கேள்விப்பட்டதும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு  அருமை நபி (ஸல்) தம் மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டார்கள். 

ஒருவரைப்பற்றி விரும்பாத செய்தி கிடைத்தால் அப்போது நபி (ஸல்) அவர்கள் "சிலர் ஏன் இப்படி செய்கிறார்கள்" என்று பொதுவாகப் பேசுவார்கள்.  சம்பத்தப்பட்ட நபரின்  பெயரை குறிப்பிட்டு சங்கடப்படுத்த  மாட்டார்கள்.

மக்களில் உண்மையாளராக, ஒழுக்க சீலராக, திகழ்ந்தார்கள். இந்த உண்மையை நபித்தோழர்கள் மட்டுமல்ல எதிரிகள் கூட தெரிந்து வைத்திருந்தார்கள். 

மலர்ந்த முகம், இளகிய மனம், நளினம் பெற்று இருந்தார்கள். கடுகடுப்பு, முரட்டு குணம், கூச்சல், அருவருப்பாக பேசுதல், அதட்டுதல் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டு இருந்தார்கள். 

நபித்துவம் வருவதற்கு முன்பே,  "நம்பிக்கைக்கு உரியவர் " என்று அழைக்கப்பட்ட ஏந்தல் நபி, அறியாமைக் காலத்திலும் அறிவிலிகளுக்குக்கும் நீதமான தீர்வு சொன்ன நீதிமான்.

தனக்கு முன்பு யாரும் எழுந்து நிற்பதை தடை செய்தார்கள், பணிவு உடையவர்களாகவும், பெருமை கொள்வதை விட்டும் விலகியும் இருந்தார்கள். 

தங்கள் தேவைகளை தாங்களே பூர்த்தி செய்து கொள்பவர்களாக இருந்தார்கள். காலணியை தாங்களே தைத்து கொண்டார்கள், ஆட்டிலிருந்து பால் கறந்து பயன்படுத்தி கொண்டார்கள், ஆடைகளை துவைத்து பயன்படுத்தி கொண்டார்கள், எந்த சந்தர்ப்பத்திலும் அவர்களை தனித்துக்காட்ட விரும்பியதே இல்லை. 

ஒருமுறை ஒரு பயணத்தின் போது ஆடு ஒன்றை அறுத்து சமைக்கும்படி கூறினார்கள். ஒருவர் நான் ஆட்டை அறுக்கின்றேன் என்றார், ஒருவர் நான் உரிக்கின்றேன் என்றார், மற்றொருவர் நான் சமைக்கின்றேன் என்றார்,  அப்படியென்றால் நான் விறகு பொறுக்கிக் கொண்டு வருகின்றேன் என்று அண்ணல் நபி ( ஸல் ) அவர்கள் சொன்னார்கள்.

அதற்கு சஹாபாக்கள் யா ரசூலுல்லாஹ் தங்களுக்கு ஏன் சிரமம் நாங்களே பார்த்துக்கொள்கின்றோம் என்றார்கள். 

அதற்கு கண்மணி நாயகம் (ஸல்) சொன்னார்கள் : " நீங்கள் செய்வீர்கள் என்று எனக்கு தெரியும் , ஆனால் என்னை என் தோழர்களிடமிருந்து  தனித்து காட்ட விரும்பவில்லை. அப்படி தனித்து காட்டுவதை  அல்லாஹ் வெறுக்கின்றான் " என்றார்கள். 

அண்ணல் (நபி ஸல்) தெள்ளதெளிவாக பேசுபவர்களாக  இருந்தார்கள், அனைவராலும் அறியப்பட்ட ஒரு நல்லியல்பு பெற்றவர்களாக இருந்தார்கள். தெளிவாக, சரியாக, சரளமாக பேசக் கூடியவர்களாக இருந்தார்கள். நூதன நுட்பங்களுடன்  சொல்லாக்கம் முழுமை பெற்றவர்களாக இருந்தார்கள். ஒவ்வொரு இனத்தாரிடமும் அவரவவர் மொழி நடையில் பேசும் திறமை பெற்றிருந்தார்கள். நகரவாசிகள், கிராமவாசிகளுக்கு தகுந்தார்ப்போல் அவரவர் தொனியில் பேசக்கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள்.

சிரமத்தை தாங்குவது, சக்தி இருந்தும் மன்னிப்பது, சகித்துக்கொள்வது பொறுத்துப் போவது அவர்களின் உயர் பண்புகளில் உள்ளவைகளாகும். சாதாரணமாக இடையூறுகள் அதிகமாக அதிகமாக பொறுமை குறைந்து கொண்டே போகும். ஆனால் இந்த நீதிமானுக்கோ பொறுமை கூடிக் கொண்டே போனது. 

ஒரு விஷயத்தை தேர்ந்தெடுக்க இரண்டு வாய்ப்புகள் என்று வரும்போது அதில் இலகுவானதையே தேர்ந்தெடுப்பார்கள். அது பாவகரமானது என்று தெரிய வரும்போது வெகு தூரம் விலகி விடுவார்கள். தங்களுக்காக தங்கள் சுய நலத்திற்காக யாரையும் பழி வாங்கியதில்லை. ஆனால் அல்லாஹ்வின் கண்ணியம் பாழாக்கப்பட்டால் அதற்குற்குரிய தண்டனையை வழங்கத் தயங்கியதில்லை.

மெதுவாக கோபப்படுவார்கள். விரைவாக மகிழ்ச்சி அடைவார்கள். வறுமைக்கு  அஞ்சாமல் தேவை உடையோர்க்கு உதவி செய்தார்கள். விரைந்து வீசும் காற்றின் வேகத்தைவிட செல்வத்தை வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள்.

ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : அண்ணல் நபி (ஸல்) யாரும் ஒன்றை கேட்டு அவர்கள் இல்லை என்று சொன்னதே இல்லை.  

இப்படி  எந்த குணாதிசயங்களிலும்  ஒரு கடுகளவு குறை சொல்லும் சந்தர்ப்பத்திற்கு  இடமே இல்லாமல் இவ்வுலகை விட்டும் விடை பெற்றுச் சென்று இருக்கின்றார்கள் என்றால் என்னே ஒரு அற்புதமான வாழ்வு வாழ்ந்து சென்று இருக்கின்றார்கள்.

அமைதியின் கம்பீரம்!

நபி (ஸல்) மிகக்குட்டையோ, நெட்டையோ அல்லர், கூட்டத்தில் பார்ப்பதற்கு நடுத்தரமானவர்கள், அடத்தியான சுருட்டை  முடி கொண்டவரும் அல்லர், கோரை முடி கொண்டவரும் அல்லர், சிவந்த வெண்மையானவர்கள், கருவிழி உடையவர்கள். புஜமும் மூட்டு எலும்புகளும் தடிப்பானவர்கள். 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனா செல்லும் வழியில் , அவர்களைக் கண்ட குஜைமா கிளையைச் சேர்ந்த உம்மு மஅபத் விவரிக்கும்போது, 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வயிறோ, தலையோ பெருத்தவர் அல்லர், கவர்ச்சிமிகு பேரழகும், கருத்த புருவமும் உடையவர்கள், நீண்ட இமை முடியும், கம்பீரக்குரல் வளமும் உடையவர்கள். அவரது அமைதி கம்பீரத்தைத் தரும், ஒளி இலங்கும் பேச்சுடையவர் என்றும் இன்ன பிற பண்புகளையும் விளக்குகின்றார்கள்.  

ஒரு விஷயத்திற்காக திரும்பிப் பார்த்தால் முழுவதுமாக திரும்பிப் பார்ப்பாகள். நடந்தால் பள்ளத்தை நோக்கி நடப்பது போன்று பிடிப்புடன் நடப்பார்கள். இரண்டு புஜங்களிலும் நபித்துவ முத்திரை இருக்கும். மக்களுக்கு அதிகமாக வழங்கும்  தன்மை   உள்ளவராகவும், துணிவு உள்ளம் கொண்டவராகவும், மக்களில் அதிகம் உண்மை பேசுபவராகவும்,  பொறுப்புகளை நிறைவேற்றுபவராகவும் இருந்தார்கள்

அழகின் அசல் !

அண்ணல் நபி (ஸல்) அவர்களோடு தம் வாழ்நாளின் பெரும்பகுதியை கழித்த, கணிசமான நபிமொழி தொகுப்புகளை அறிவிக்கக்கூடிய அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: 

"அண்ணல் (நபி) அவர்களைப்போன்று அழகானதை நான் பார்த்ததே இல்லை. அவர்கள் வதனத்திலே சூரியன் இலங்கியது. நாங்கள் சிரமப்பட்டு நடக்கும் வேகத்தை அவர்கள் சர்வ சாதரணமாக நடப்பார்கள். அல்லாஹ் பூமியை சுருட்டி நாயகத்தின் கையில் கொடுத்து விட்டானோ என்றும் நாங்கள் நினைக்கும் அளவுக்கு அவர்கள் நடையில்   வேகம் இருக்கும். 

"ஜாபிர் இப்னு சமூரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :

"ஒருமுறை நான் ஒரு பௌர்ணமி நிலவில் நபி (ஸல்) அவர்களைப் பார்த்தேன் நிலவையும் அவர்களையும் மாறி மாறி பார்த்தேன். எனக்கு நிலவைவிட அண்ணல் நபி (ஸல்) அவர்களே அழகாகத் தெரிந்தார்கள்" (திர்மதி, மிஷ்காத் )

இப்படி பௌர்ணமி நிலவு தோற்கும் அளவுக்கு அண்ணல் நபியை இவ்வுலகில் உலவவிட்டான் பேரறிவாளன் அல்லாஹ். 

ருபைய்யி  பின்த் முஅவ்வித் ( ரலி ) கூறுகின்றார்கள் :

ரசூல் (ஸல்) அவர்களைப் பார்த்தால், உதிக்கும் அதிகாலை சூரியனைப்போல் இலங்குவார்கள். (முஷ்னத்தாரமி, மிஷ்காத்) 

அகன்ற புஜமும், சோனை வரை முடிவைத்தும் இருந்தார்கள். வேதக்காரர்களை ஒத்திருக்கவேனும் என்பதற்காக வகிடு எடுக்காமல் நேராக சீவிக்கொண்டிருந்தார்கள். (சஹீஹுல் புகாரி, முஸ்லிம் )

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கையைப் போன்றதொரு மெல்லிய பட்டாடையை நான் தொட்டதில்லை. அவர்களிடமிருந்து வரும் நறுமணத்தைப்போன்று  வேறு எந்த நறுமணத்தையும் நான் நுகர்ந்ததில்லை. 

வேறு அறிவிப்பில் கஸ்த்தூரியிலோ அல்லது  அம்பரிலோ, வேறு எங்குமே நான் இது போன்றதொரு மணத்தை நுகர்ந்ததில்லை -   (சஹீஹ் புஹாரி, முஸ்லிம் )

ஒரு வழியில் ரசூலுல்லாஹ் (ஸல்) சென்று சிறிது நேரம் கழித்து அதே வழியில் வேறொருவர் சென்றால், அந்த வழியில் மணம் பரப்பிக் கொண்டிருக்கும் அந்த சூழ்நிலையை  வைத்து, அவர் அந்த வழியில் சிறிது நேரத்திற்கு  முன்பு அண்ணல் நபி (ஸல்) அந்தப் பாதை வழியாக சென்றிருக்கின்றார்கள் என்று தெரிந்து கொள்ளும் அளவுக்கு அவர்கள் மேனி கஸ்தூரி மணம் கமழும் ஒரு சுகந்தமாகவே  வாழ்ந்திருக்கின்றார்கள்.  

பனிக்கட்டியைவிட குளிர்ச்சியாகவும், நறுமனத்திலிருந்து கையை எடுத்தது போன்று  நறுமணம் பொருந்தியதாகவும், அவர்களின் கைகள் இருந்தன என்றும் இன்ன பிற அறிவிப்புகளிலும் காணமுடிகின்றது

அண்ணல் நபி (ஸல் ) அவர்கள் மூன்று குணங்களை விட்டும் தங்களை பாது காத்துக்கொண்டார்கள் :

1. முகஸ்துதி , 2. அதிகம் பேசுவது, 3.  தேவையற்றவற்றில் ஈடுபடுவது.

மூன்று  காரியங்களிலிருந்து தங்களை தவிர்த்துக் கொண்டார்கள் :

1. பிறரை பழிக்க மாட்டார்கள்.  2.  பிறரை குறைகூற மாட்டார்கள்.  3.  பிறரின் குறையை தேட மாட்டார்கள். 

ரசூல் (ஸல்) அவர்கள் பேச ஆரம்பித்தால் , அதைக்கேட்பவர்கள், தலையில் பறவை அமர்ந்திருப்பது போன்று , ஆடாமல் அசையாமல் கேட்பர்.

நபி (ஸல்) சபையில் கண்ணியத்திற்குரியவர்களாக தோற்றமளிப்பார்கள். தங்கள் மேனியின் மறைக்கப்பட வேண்டியதை மறைத்தும் வேறு எதையும் வெளிக்காட்டமாட்டார்கள். அதிகம் மௌனம் காப்பார்கள். அவர்கள் புன்முருவலாகவே சிரிப்பார்கள். அவர்களின் பேச்சு தெளிவாக இருக்கும்.  பேச்சு தேவைக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்காது. 

நபியவர்களை கண்ணியப்படுத்த வேன்டும் என்பதற்காக, சப்தமிட்டு சிரிக்காமல் எல்லா தோழர்களும் புன்முருவளிலேயே தங்கள் சிரிப்பை வெளிப்படுத்துவர். 

மறைவான நாணம்

சாதாரண மனிதர்களைப்போல் அல்லாமல் திரை மறைவிலுள்ள கன்னிப்பென்களைவிட நாணம் உள்ளவர்களாகவும், மிகுந்த கூச்ச சுபாவம் உள்ளவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்..

எவருடைய முகத்தையும் ஆழமாக உற்று நோக்கியதில்லை. பெரும்பாலும் பார்வை கீழ்நோக்கியே இருக்கும். பார்வை கடைக் கண்ணாலேயே இருக்கும்.வெட்கத்தினாலும் உயர் பண்பினாலும்  யாரையும் வெறுப்பூட்டும்படி பேசியதே இல்லை.  

சஹாபாக்களின் நேசம்

எங்கள் கழுத்துக்கு கத்தி வந்தாலும் பரவாயில்லை  ஆனால் எங்கள் கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் நகத்தில் ஒரு கீறல் விழுந்தால் கூட எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது என்று சொல்லும் அளவுக்கு , அண்ணல் நபியின் மீது உயிரையே வைத்திருந்தார்கள் சஹாபாப் பெருமக்கள். அவ்வளவு ஆழமாக நேசித்தார்கள். அவர்களின் சிறந்த பண்பும் , குண நலன்களுமே இதற்குக் காரணம். 

இப்படி, இஸ்லாமிய அரசியலுக்கும், ஆன்மீகத்திற்கும் ஒரு சேர தலைவராக இருந்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தங்கள் தோழர்களோடு வேற்றுமையோ,  உயர்வு, தாழ்வோ பாராட்டாமல், நெருக்கத்தோடு வாழ்ந்து, உயர் பண்பின் உச்சத்தில் நின்று வழி காட்டிச் சென்றிருக்கின்றார்கள் என்றால் இதைவிட உயர் பண்பை வேறெங்கு கற்றிட முடியும் ?"

"என்னைப் பற்றி எந்த ஒரு செய்தி கிடைத்தாலும் அதை எடுத்து சொல்லிவிடுங்கள்" என்று பகிரங்கமாக பிரகடனப்படுத்திய ஒரே தலைவர் உலகிலேயே அண்ணல் நபி (ஸல்) ஒருவராகத்தான் இருக்கும். 

ஏனெனில் இந்த சொற்றொடர் உண்மையிலேயே ஒரு ஒழுக்க நியதிக்கும், உயர்பண்பின் உச்சத்திற்கும், நற்குணங்கள் என்று என்னென்னவெல்லாம் உலக  வழக்கத்தில் வருகின்றதோ அனைத்தையும் உள்ளடக்கிய, அப்பழுக்கற்ற , தூய்மையான வாழ்வுக்கு சொந்தக்காரர் தான் இந்த வார்த்தையை பிரகடனப் படுத்த முடியும். 

அதனால்தான் , அல்லாஹ்வால் வழி நடத்தப்பட்டதால், அங்கொன்றும் இங்கொன்றுமாக பெருமானார்  வாழ்க்கையில் மனிதன் என்ற முறையில் சில கோபதாபங்கள், மற்றும் சறுக்கல்கள் வரும் சமயமெல்லாம், இடறி விழுந்து விடாமல் அல்லாஹ் நம்மை காப்பாற்றி இருக்கின்றான் என்ற முழு நம்பிக்கையில்,  தூய்மையான அப்பழுக்கற்ற வாழ்வுக்கு அங்கீகாரமாக அல்லாஹ் பெருமானார் (ஸல்) அவர்களை  தேர்ந்தெடுத்ததால் தான் இதை சொல்ல முடிந்து இருக்கின்றது.

சுருங்கச்சொன்னால், நபி (ஸல்) நற்குணத்தால் அலங்கரிக்கப்பட்டு இருந்தார்கள். ரப்புல் ஆலமீன் எஜ்மானனாக இவர்கள் அல்லாஹ்வின் தூதராக அழகிய ஒழுக்க முறைகளை கற்று தேர்ந்திருந்தார்கள். 

நிச்சயமாக நீங்கள் நற்க்குணமுடையவராகவே இருக்கின்றீர்கள் - அல்-குரான் -68:4 என்று அல்லாஹ் குர்ஆனில் புகழ்கிறான். 

தாக்கம் ! 

இந்தப்பண்புகள்தான் நபியவர்களை அனைவராலும் நேசிக்க வைத்தது. முரண்டு பிடித்த சமுதாய உள்ளங்களை பணிய வைத்தது. மக்களை கூட்டம் கூட்டமாக அல்லாஹ்வின் மார்க்கத்தில் இணைய வைத்தது. 

தலையை கொய்ய வந்தவரை தலைகீழாக மாற்றி, ஈமானில் பிரகாசிக்க வைத்தது. ஒரு அடிமைக்கு அல்லாஹ்வை அழைக்கும் பணிக்கு முதலில் குரல் கொடுக்க வைத்தது. வெற்றியிலும் பணிவு வேணும் என்னும் கொள்கையில் அனைத்து மக்களையும் பணிய வைத்தது. 

செருக்கற்ற,  தூய , பரஸ்பர உதவி மனப்பான்மை, மனித நேயம் மற்றும்  உன்னத பண்புகளைக்கொண்ட சமுதாயத்தை உருவாக்கியது. 

மொத்தத்தில் நாகரிகமற்ற ஒரு சமுதாயத்தை ஒரு உன்னத சமுதாயமாக மாற்றி அதை இவ்வுலகின் முன்னோடி சமுதாயமாக அறிமுகப்படுத்தி   இவ்வுலக வாழ்விற்கு பிரியா விடை கொடுத்தது. 

சல்லல்லாஹு  அலா முஹம்மது 
சல்லல்லாஹு அலைஹிவசல்லம்

சல்லல்லாஹு  அலா முஹம்மது
யாரப்பி சல்லி அலைஹிவசல்லம் 

அபு ஆசிப்

தூய்மையான செல்வம் ! 36

அதிரைநிருபர் பதிப்பகம் | August 20, 2013 | , , , ,

இறைவன் நியதியில் ஒவ்வொருவருக்கும் அவர்களுக்காக விதிக்கப்பட்ட ரிஜ்க் (உணவு) அவர்களை வந்தடையும் வரை மரணம் அவர்களை நெருங்காது.  இது ஒவ்வொரு மனிதனின் ஆழ்மனதில் பதிய வேண்டிய ஒரு விஷயம்.

குறுகியகால வாழ்வில் நிறைய திரட்டி விடவேண்டும் என்னும் பேராசை மேலோங்கும் போது தான் செல்வம் வரும் வழி என்னவென்று யோசிக்க விடாமல் நம் அறிவு செயலிழக்கின்றது. அப்பொழுது, அங்கே ஷைத்தான் ஆஜராகின்றான். மற்றவர்கள் வாழும் பகட்டு வாழ்வும் நம் கண் முன்னே வந்து போகும் போது, அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் அங்கே ஷைத்தானின் தூண்டுதல் மூலம் புறக்கணிக்கப் படுகின்றனர் இந்நிலையில் தான்.

பகட்டு வாழ்வு 

இப்பூவுலகின் பகட்டு வாழ்வின் வாழ்க்கைப் பாதை, ஒவ்வொரு சராசரி மனிதனையும் அதுபோல் வாழத்தான் தன்னை உந்தித் தள்ளும். அந்த வாழ்க்கைக்கு சொந்தமாகிப் போனவன், அவன் செல்வம் வந்த வழி, அவன் போகின்ற போக்கு, அந்த செல்வம் அவனை விட்டு ஒவ்வொரு நாளும் செல்கின்ற விதம் ஒவ்வொன்றும் அவன் சிந்தனைக்கும், அவன் செயல்பாட்டுக்கும் அப்பாற்பட்டு நடக்கும். கறை படிந்த கைகள் மூலம் ஈட்டிய செல்வம், குறுகிய காலப் பயிர் போல விளைச்சல் நல்லதாக தெரியும், ஆனால் அல்லாஹ்வின் பரகத்  (நம் புலன்களுக்கு எட்டாத அல்லாஹ்வின் அருள்)  அதில் கடுகளவும் நிலைத்திருக்காது.

ஆதலால் எவ்வளவு பெரிய செல்வந்தனாக இருந்தாலும், பாரம்பரிய பணக்காரனாக இருந்தாலும் அவன் வாழ்வில், அவன் இறுதி மூச்சு வரை உழைப்பு என்று ஒன்று இருந்தே ஆகவேண்டும். ஏனெனில் சோம்பேறித்தனத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை. மாறாக அல்லாஹ்வும் அவன் தூதரும் காட்டித் தந்த வழியில் அவன் தந்த இந்த உடலை, நேர்மையான வழியில், தன் புத்தியாலோ அல்லது, உடலாலோ அல்லது இன்னபிற மார்க்கம் அனுமதித்த வழிகளிலோ உழைப்பில் ஈடுபடுத்த வேண்டும்.

அந்த உழைப்பின் மூலம் இறைவனிடம் மட்டுமே கையேந்த வேண்டும். யா அல்லாஹ் இந்த உழைப்பில் எனக்கு உன் பரகத் (அபிவிருத்தி) என்னும் அருளை தந்து என் நியாயமான தேவைகளை பூர்த்தி செய்வாயாக ! என்னை எவரிடமும் கையேந்த வைத்துவிடாதே யா அல்லாஹ்! என்று இறைவனிடத்தில் தூய மனதோடு இறைஞ்சினால், புலனுக்கெட்டாத அந்த பரகத் என்னும் அல்லாஹ்வின் அருள் கிடைக்க வெகு நாட்களோ நேரமோ ஆகாது.

பரகத் என்றால் என்ன ?

நம் சமுதாயம் தவறாக புரிந்து வைத்திருக்கும் பல விஷயங்களில் ஒன்று. சாதாரணமாக நாம் இருவர் சந்தித்துக் கொண்டு வாதிக்கும் போதே இதுவும் பேசிக் கொள்வோம், அவனுக்கு அல்லாஹ் கோடி கோடியாய் கொடுத்து பரகத் செய்திருக்கின்றான் என்று. ஆனால் உண்மையில் அதுவல்ல பரகத் என்பது.

பரகத் என்ற சொல்லுக்கு சுருங்கச் சொன்னால், "குறைந்த பொருள் நிறைந்த பயன்". இதுதான் அதன் பொருள். எடுத்துக்காட்டாக, ஒருவன் 100 ரூபாய் பெறுமானமுள்ள ஒரு காரியத்தை செய்ய புறப்படுகின்றான் என்று வைத்துக் கொள்வோம். அதே காரியத்தை செய்ய ஒருவன் 200 ரூபாய் கொண்டு செல்கின்றான். முதலாமவன் காரியம் முடிந்து 100 ரூபாய் மிச்சம் கொண்டு வருகின்றான். இரண்டாமவனோ, ஏதோ ஒரு சிக்கலில் மாட்டி அல்லது, வேறு ஏதோ தேவை ஏற்ப்பட்டு அந்த காரியத்திற்காக மட்டுமே 250 ரூபாய் செலவழித்து 50 ரூபாய் கடனோடு திரும்புகின்றான் என்று சொன்னால் அந்த 100ரூபாயில் உள்ள பரகத் இந்த 200 ரூபாயில் அல்லாஹ் வைத்திருக்கவில்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம்.  

இது எப்படி செலவானது என்று சொன்னால் அதுதான் நம் புலனுக்கெட்டாத அல்லாஹ்வின் அருள் என்பது ரூபாய் 200-ல் இல்லை. 100-ல்இருக்கின்றது.

இந்த பரக்கத்தான விஷயம் அல்லாஹ்வின் ஏற்பாட்டில் உள்ளது, இதில் நாம் அல்லாஹ்வோடு போரிட முடியாது. நம் நடத்தை, நம் அன்றாட செயல் பாடுகள், நம் செல்வம் வந்த விதம், அது ரூபாய் 1-ஆக இருந்தாலும் 1-கோடியாக இருந்தாலும்,நாம் அல்லாஹ்விடம் மன்றாடி கேட்ட விதம், அது வந்த வழி, செலவழிக்கும் வழி ஒவ்வொன்றையும் வைத்து, அல்லாஹ் நமக்கு தர இருப்பதை, பல இலட்சம் கணினி செய்யாத கணக்குகளை துல்லியமாக கணக்கிட்டு தருவதுதான். இதில் அல்லாஹ்வின் அந்த மறைமுகமான அருளை அந்த வரவுக்குள் பொதிய வைப்பது, அல்லாஹ்விடத்தில் நாம் நடந்து கொள்ளும், அவனிடத்தில் தக்வாவுடன் (இறையச்சத்துடன்) கேட்டுப் பெறும் உள்ளத்தைப் பொருத்தது.

கறை படிந்த கரம்

கறை படிந்த கரம் என்ற இந்த பதிவில் நான் சொல்ல வருவது என்னவென்றால் தம் வருவாயின் மூல காரணி எதுவென்று தெரியாமலும், அது நம்மை வந்தடையும் விதம் எதுவென்று புரியாமலும் ஒரு சிலர் கோடி கோடியாக சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். இதன் பின் விளைவைப் பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் நம் கையில், வங்கி இருப்பில் கணக்கு கூடினால்  சரி என்று வரும் வழியை சட்டை செய்வதில்லை.

மேலும் தன் குடும்ப உறுப்பினர்களையும்  அந்த செல்வத்தை செலவழிக்கும் வாய்ப்பைக் கொடுத்து அவர்களையும் பாவக் கறைகள் படிந்தவர்களாக இவ்வுலகிலேயே உலவ விடுவது , ஒட்டு மொத்த குடும்பமும், பாவமெனும் நதியில்  நீராட வைப்பது எந்த விதத்தில் நியாயம் ?

தன் கணவன்  நேர்மையற்ற முறையில்  சம்பாதிக்கின்றான் என்று தெரிந்தும் சூழ்நிலைக் கைதியாக உள்ள அவனை விட்டால் வேறு நாதி இல்லை என்ற நிலையில் தன்னை நாடி வந்தவளை அவள் தெரியும் படியாகவே அவளை பாவக் காரியங்களில் மூழ்கடிப்பது எந்த விதத்தில் நியாயம் ? 

அவள்  இறைவனையும் அவன் தூதரையும் புறக்கணிப்பவளாக இருந்தால் இவன் தூய்மையற்ற செல்வத்தோடு ஒத்துப் போகும் மாறாக இவள், குரானையும், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அமுத மொழிகளையும் தன் உயிராக மதிப்பவளாக இருந்தால் இவள் கதி ? இவனை விட்டு பிரியும் நிலை ஏற்படும்போது,  ஒரு மு'மினான  பெண்ணை உதாசீனப்படுத்திய பாவமும் இவனை சேர்ந்து கொள்ளும் ஒரு குடும்பத்தை தன் பகட்டு வாழ்க்கைக்காக சிதைத்த பாவத்தை அல்லவா இவன் அல்லாஹ் கணக்கில் வரவு வைப்பான். 

இந்த செல்வம் எவ்வளவு மிகப்பெரிய  கைசேதம் தெரியுமா?யோசித்துப் பார்க்கையில் உள்ளமும் உடலும் ஒரு சேர நடுங்குகின்றது. அதாவது.இறைவனுக்கு மாறான வழியில் ஒருவன் செல்வத்தை தேடும்போது இவ்வுலகில் வாழும் வரை அவன் நல்ல மதிப்போடு,மரியாதையோடு, போலி கௌரவத்தோடு, நான்கு பேரை நண்பர்களாக்கிக் கொண்டு பகட்டான வாகனங்களில் வலம் வரலாம்.

நம் ஒவ்வொரு தவறையும் நம்மிடம் உள்ள செல்வாக்கும், பேரும், புகழும் மறைத்து விடலாம். நாம் கோபித்துக் கொள்வோமோ என்று நாம் செய்யும் தவறுகளைக்கூட  நம்மிடமிருந்து உதவி பெறுபவர்கள் மறைத்து நீங்கள் செய்வது தான் சரி என்று நம் தவறை கூட நியாயப் படுத்தலாம்.

இந்த போலியான வாழ்க்கை, தவறான வழியில் செல்வம் வந்தவனை ஒரு போதும் சிந்திக்கத் தூண்டாது. மேலும் சிந்திக்கக்கூடிய சந்தர்ப்பம் வாய்த்தாலும் நம் சிந்தனையில் நாம் செய்யும் தவறு நிழலாடாது. இறைவனை முற்றிலும் பயந்து உள்ளச்சத்துடன் வாழும் வாழ்க்கைக்கு திரும்பும் வரை இந்த பகட்டு வாழ்வு இவன் இறுதி மூச்சு வரை இவனுக்கு சொந்தமாகிப்போகும். அதன் இறுதி விளைவு மறுமை வாழ்வில் கைசேதமெனும் நஷ்டமே.

இறப்புக்குப் பின்

இறப்புக்குப்பின் உள்ள வாழ்க்கையில், அவனுடன் வர இருக்கும் இவ்வுலகில் அவன் செய்த செயல்களில்  இந்த கறை படிந்த சொத்தும் பாவம் என்னும் வரவோடு சேர்ந்து கொள்ளும். சொந்தக்கரனான அவன் மகனோ, மகளோ அல்லது மனைவியோ, எவன் தமக்காக சொத்தை சேர்த்தானோ அவன் மீது கொஞ்சமும் இரக்கமில்லாமல் மண்ணை  அள்ளி போட்டு மூடிவிட்டு தங்கள் வேலையில் கவனம் செலுத்த தொடங்கி விடுவார்கள். 

இது எப்பேர்ப்பட்ட அன்புள்ளம், கொண்ட, பாசமிக்க நேசமிக்க, இவ்வுலகிலேயே அதிக பிரியமான நபராக இருந்தாலும்  இதுதான் உலகநியதி.

விழித்துக் கொண்ட இவன் கதி. (உலகில் உள்ள நாம் அனைவரும் உறக்கத்தில் இருக்கின்றோம் என்பதை நினைவில் கொள்ளவும்) ஒவ்வொரு பைசாவுக்கும் இறைவனிடத்தில் கணக்கு வைக்க வேண்டும். இவன் மகனோ அல்லது மகளோ, சொத்தில் பங்குள்ள எவருமோ, செல்வம் வந்த வழியைப் பற்றி இறைவனிடத்தில் கணக்கு கொடுக்க தேவை இருக்காது. அதை செலவழிக்கும் விதம் பற்றியே உலகில் உள்ளோருக்கு அந்த செல்வத்தைப் பற்றிய கேள்வி.

செல்வத்தை திரட்டி, அது இறைவன் தந்த அமானிதம் அதை அவனிடத்தில் ஒப்படைக்கும் போது, கொடுக்கும் கணக்கு சீராக, அவன் சொன்ன வழியின் பிரகாரம், இருக்க வேண்டும் என்பதில் கொஞ்சமும் அக்கறை இல்லாமல் வாழ்ந்து சென்றானே அவன் கதி?. .

செல்வத்தை திரட்டிய விதம் பற்றியும் இறைவனிடத்தில் விசாரணையின் முன் பதில் வைக்க வேண்டும், அதில் செலவழித்தது பற்றியும், குடும்பப் பங்கீடு என்று வரும்போது நீதமான முறையில் பங்கீடு செய்யப்பட்டதா என்பது பற்றியும், மற்றும் மார்க்கம் சொல்லும், ஜக்காத், ஹஜ், மற்றும் பர்லான கடமைகளில் இவன் சேர்த்த செல்வத்தின் பங்கு செலவழிக்கப்பட்டதா? தன் குடும்பத்தாரின் கடமை நிறைவேற்றப்பட்டதா? தன் குடும்பத்தின் ஏழை எளியவர்கள் கவனிக்கப்பட்டார்களா? தன் ஏழை அண்டை அயலார் புறக்கணிக்கப் பட்டார்களா?,அல்லது ஆதரிக்கப்பட்டார்களா? என்று அடுக்கிக் கொண்டே போவான் இறைவன் கேள்விக் கணைகளை.`

இறைவனிடத்தில் அங்கீகாரம் இல்லை

இது கறை படிந்த சொத்தாக இருந்தால் இவன் மேற்சொன்ன அனைத்து கடமைகளையும் நிறைவேற்றி இருந்தாலும்  வீணே. ஏனெனில் இறைவனுடைய, அவனின் திருத்தூதருடைய வழிக்கு மாற்றமான எந்த வருவாய் காரணியும் அதன் மூலம் செய்யும் எந்த நல்ல செயலும் அங்கீகாரமற்றதே.

இப்படி இறைவனிடத்திலும் அவன் தூதரிடத்திலும் அங்கீகாரம் பெறாத இந்த செல்வம் நாளை மஹ்ஷரில் மிகப்பெரும் சோதனையாக அவன் முன்னே காட்சி அளிக்கும். செல்வத்துக்கு சொந்தக்காரனென்று இவ்வுலகில் இவன் நினைத்தான். அல்லாஹ்வோ, இல்லை இல்லை அதன் சொந்தக்காரன் நானே. என் செல்வம் சொற்ப காலத்திற்கு  உன்னிடத்தில் அமானிதமாக  தரப்பட்டிருந்தது. அதன் கணக்கு வழக்குகளை இப்பொழுது நீ சமர்ப்பிக்க வேண்டும் என்ற அல்லாஹ்வின் அந்த எஜமானனின், அந்த செல்வத்திற்கான உண்மை சொந்தக்காரனின் விசாரணைக்கு நீ தயாராகி பதில் சொல்லியே தீரவேண்டும்

அவன் இவ்வுலகில் உன்னிடம் தந்த செல்வத்தில் நீ ஜக்காத் முறையாக செலுத்தாமல் அதை பெறத் தகுதி உள்ளோரை புறக்கணித்து இருந்தால், ஹஜ் உன்மீது கடமை என்று தெரிந்திருந்தும் அதை நிறைவேற்ற தவறி இருந்தால் உன் குடும்பத்திலேய வெளியில் வர வெட்கப்பட்டு, தன் ஏழ்மையை வெளிக் காட்டாமல், தன் இயலாமையை யாரிடமும் பகிரங்கப் படுத்தி விடாமல் வீட்டிலேயே பொறுமையோடு ஏழ்மையை சகித்துக் கொண்டிருந்தவர்களை, தெரிந்தும் உதாசீனப்படுத்தி இருந்தால் உன் குடும்பத்திலேயே ஜக்காத் பெற தகுதி உள்ள நபர்கள் என்று தெரிந்தும் கண்டும் காணாமல் இருந்திருந்தால், தர்மத்திற்காக ஏழை எளியவர்கள் வீடு நோக்கி வரும்பொழுது, அவர்களை பாராமுகமாக, ஏறெடுத்துப் பாராத நிலையில் அவர்கள் குரல் உன் காதில் விழாமல் இருந்திருந்தால், உன் கண் முன்னே சமுதாயத்தில் எத்தனையோ முதிர்  கன்னிப் பெண்கள், ஆதரவற்ற விதவைகள், அனாதைகள், முதியவர்கள், ஏழைகள் மற்றும் பல பொருளாதார ரீதியில் தேவை  உள்ளவர்கள் என்று தெரிந்துருந்தும் அவர்களின் மனவெதும்பல் உன் மனதை தொடாமல் இருந்திருந்தால்.

சதக்கா, தர்மம், மற்றும் இறைவழியில், உன் செல்வம் பயனளிக்காமல் இந்த உலகத்தின் தேவையோடு நின்று விட்டிருந்தால், அல்லாஹ்விடத்தில் உன் செல்வம் தூய்மையற்ற உனக்கு அவனிடத்தில் தண்டனை பெற்றுத்தர போதுமானதாக கரை படிந்த செல்வமே முன்னிருக்கும்.

உன் கறை படிந்த கரம் அல்லாஹ்வின் இரும்புக்கரத்தின் முன் நிற்கும் நிலையை... யோசனை செய்து பார்.

ஆதலால், கறை இல்லாத செல்வத்தை தேடுவோம், அல்லாஹ்வின் திருப் பொருத்தத்துடன் செல்வம் தேடுவோம் அதனை இறை வழியில் செலவழித்து நம் செயல்களையும் செல்வத்தையும் தூய்மைப்படுத்துவோம் சுவனத்து பாதைக்கு அதை வடிகாலாய் அமைப்போம்.

அபு ஆசிப் (என்ற) அப்துல் காதர் 


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு