Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label சேமிப்பு. Show all posts
Showing posts with label சேமிப்பு. Show all posts

நிலத்தடிநீர் வளத்தைப் புதுப்பிக்க மழைநீர் சேகரிப்பு ஒன்றே வழி 6

அதிரைநிருபர் பதிப்பகம் | September 14, 2015 | , , , , ,

அறிவியல் கதிர் - நிலத்தடிநீர் வளத்தைப் புதுப்பிக்க மழைநீர் சேகரிப்பு ஒன்றே வழி - பேராசிரியர் கே. ராஜு

நம் நாட்டில் நகரங்களாக இருந்தாலும் கிராமங்களாக இருந்தாலும் பருவகாலங்களில் அடைமழை, மற்ற காலங்களில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஆகிய இரண்டையும் மாறிமாறி சந்திப்பது வழக்கமாகிவிட்டது. 

நகரங்களில் ஏராளமான அடுக்குமாடி வீடுகள் அடுத்தடுத்து கட்டப்படுகின்றன. இந்த வீடுகளுக்குத் தேவையான தண்ணீரைப் பெற 200 அடி வரையும் அதற்குக் கீழேயும் ஆழத்தில் குழாய்க் கிணறுகள் (bore wells) தோண்டப்படுகின்றன. நிலத்தடி நீர்வளத்தைப் புதுப்பிக்காமல் இந்த குழாய்க் கிணறுகளிலிருந்து எத்தனை நாட்களுக்குத் தண்ணீரைப் பெற முடியும்? மழைநீரைச் சேகரிக்கவில்லையெனில் அது சாக்கடை நீருடன் கலந்து நகரை மேலும் மாசுபடுத்தும் வேலையையே செய்யும். 

தற்போது அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. மழைநீரை வீணாக்காது அதன் ஒவ்வொரு துளியையும் சேமித்துப் பயன்படுத்திட மழைநீர் சேகரிப்பு மையங்களை உருவாக்கி நிலத்தடி நீரை வலுப்படுத்துவது  ஒன்றே இப்பிரச்சனைக்குத் தீர்வாக இருக்க முடியும். 

சென்னை போன்ற மாநகரங்களில் பெருவாரியான மக்களிடையே இது குறித்துப் போதுமான விழிப்புணர்வு இல்லை.  நிபுணர்களிடமிருந்து இது பற்றித் தெரிந்துகொள்ள உதவும் அறிவியல் சுற்றுச்சூழல் மையங்களை (Centre of Science and Environment - CSE)  நாடு முழுதும் உருவாக்க அவற்றின் நிறுவன இயக்குநர் அனில் அகர்வால் திட்டமிட்டார். அதன்படி அமைக்கப்பட்டதுதான் சென்னை மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள மழைநீர் மையம் (Rain Centre Chennai). ஆகாஷ் கங்கா என்ற அமைப்பு இந்த மையத்தை நிறுவி பராமரித்து வருகிறது. 

பொதுமக்கள் இந்த மையத்தை அணுகி தங்கள் வீடுகளுக்கேற்ற மழைநீர் சேகரிப்பு மாடலைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு தக்க ஆலோசனைகளைப் பெற முடியும்.   மொட்டை மாடியில்  விழும் மொத்த மழைநீரும் சென்று அடையும் வகையில் சேகரிப்பு மையத்தை உருவாக்க வேண்டும். இதைத் திறம்படச் செய்தால் கிணறுகளிலும் குழாய்க் கிணறுகளிலும் உள்ள நீரின் தரமும் அளவும் மேம்படும். கைபேசிகளை அவ்வப்போது ரீசார்ஜ் செய்துகொள்வதுபோல், நிலத்தடி நீரை ரீசார்ஜ் செய்துகொள்ள வேண்டும். 

இதற்கு 4லிருந்து 8 மீட்டர் ஆழம் உள்ள குழியை பொருத்தமான விட்டத்தில் தோண்டி அதில் பிவிசி குழாயை முழு ஆழத்திற்கும் வருமாறு பதிக்க வேண்டும்.  ஜல்லிகள், கூழாங்கற்களை இட்டு நிரப்பி அவற்றின் வழியே மழைநீர்  சென்று குழியின் அடிப்பாகத்தை அடையுமாறு செய்ய வேண்டும். 

இது ஒரு சேகரிப்பு மாடல். வீட்டின் அளவைப் பொறுத்து மாடலின் தன்மையும் மாறும். முன்பு சென்னையைச் சுற்றி 3000 ஏரிகள் இருந்திருக்கின்றன. இன்று ஏரிகள் எல்லாம் கட்டடங்களாக மாறி எஞ்சியிருப்பவை மூன்றில் ஒரு பகுதி ஏரிகளே. 

இவற்றைப் பாதுகாப்பது, புதிய நீர்நிலைகளை உருவாக்குவது, மழைநீரைச் சேகரிப்பது போன்ற பன்முக நடவடிக்கைகளின் மூலமே எதிர்காலத்திற்கான தேவைகளைச் சமாளிக்க முடியும். 

மேற்கொண்டு தகவல் வேண்டுவோர் சென்னை மழைநீர் மையத்தின்  இயக்குநர் திரு. சேகர் ராகவனை 96770 43869 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி: முதுவை ஹிதாயத்
www.mudukulathur.com

பரிந்துரை : அதிரை அஹ்மது

படிக்கட்டுகள் - 20 3

அதிரைநிருபர் பதிப்பகம் | July 22, 2015 | , , , ,

சேமிப்பின் அவசியம்.

சேமிப்பது நல்லது என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனாலும் தெரிந்தும் செயல் படுத்தாமல் போவதற்க்கு ஒரு  டிசிப்ளின் இல்லாத காரணமே தவிர, வசதியில்லை என்பதல்ல.

சேமிப்பின் முதல் விதி:  

வருமானம் - [மைனஸ்] சேமிப்பு > [மீதி] செலவுகள்.

Income – Savings > expenses.

ஆனால் பெரும்பாலானவர்கள் கடைபிடிக்கும் தவறான விதி: வருமானம் [மைனஸ்] - செலவுகள் > [மீதி] = சேமிப்பு.

Income – Expenses > Savings.

பணம் கைக்கு கிடைத்தவுடன் செலவளித்து விட்டு மிச்சம் மீதி இருந்தால் சேமிப்பேன் என்பது நடக்ககூடிய காரியமாக எனக்கு படவில்லை.

தொடர்ந்து சேமிக்காததால் சில சமயங்களில் வாழ்க்கையே வெறுத்துப்போகும். ஏனெனில் வாழ்க்கையின் அடுத்த நிமிடம் அவிழ்க்கப்போகும் மிகப்பெரிய உண்மைகளில் செலவுகளின் அத்யாயங்களுக்கே முதல் இடம். அதற்க்கு பிறகுதான் இயற்கையை ரசிப்பதும், உறவுகளின் கவனிப்பும், உங்களுக்கு பிடித்த அந்த கடற்கரை காற்றும், அடைமழையில் சூடான ஸ்ட்ராங் டீயும்.

Financial Planning ல் சில முக்கியமான விசயங்களுக்கு உங்களிடம் சேமிப்பு இருக்க வேண்டிய அவசியத்தை சொல்கிறார்கள். இது நிச்சயம் உங்களால் முடியக்கூடிய விசயம்தான்இருப்பினும் சென்டிமென்ட், அளவுக்கு அதிகமான ஆசைபோன்ற கற்களில் தடுக்கிவிழுவதும் ,விழாததும் உங்கள் சமத்தை பொறுத்தது.

Emergency Fund :

உங்கள் வருமானத்தில் ஆறுமாத வருமானம் அல்லது உங்களுக்கு ஆகும் செலவில் [ ஒரு மாத செலவு ] ஆறு மடங்கு உங்களிடம் நிச்சயம் பணமாக சேமிப்பில் இருக்க வேண்டும் என்பது முக்கியம். இதன் காரணம் நீங்கள் வேலை பார்க்கும் சூழல் திடீரென நிர்வாக முறைகேடால் உங்கள் வருமானம் பாதிக்கப்படலாம். இல்லாவிட்டால் முதலாளியின் மச்சானுக்கு உங்கள் வேலை எல்லாம் நீங்களே படித்து கொடுத்து விட்டதால் நீங்கள் இன்ஸ்டலேசன் முடிந்த சி.டி மாதிரி ஒரு என்வலப்பில் போட்டு ஒரங்கட்டுவதுபோல் ஓரங்கட்டப்படலாம். அல்லது உங்கள் வீட்டுவிழாவில் கலந்து சிறப்பித்து விட்டு வந்ததால் உங்கள் இருக்கையில் ஒரு யுவதி அமர்ந்து உங்களை ஏதோ கூழ்காய்ச்சி ஊத்துவதற்கு டொனேசன் கேட்க வந்த ஆளை பார்ப்பதுபோல் பார்க்கலாம்.

எது எப்படியோ. உங்கள் வாழ்க்கை ஏறக்குறைய டார்ஜான் மாதிரி. அடுத்த கயிற்றை பிடிக்க தவறினால் கீழே விழுந்து பலத்த அடி படலாம். எனவே இந்த ஆறு மாத சேமிப்பு உங்களை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி கொள்ள உதவியாக இருக்கும். வருசக்கணக்கில் "சும்மா" உட்கார்ந்து சாப்பிடுபவர்களுக்கு இதுவரை எந்த பொருளாதார நிபுனராலும் எந்த விதியும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது ஒரு தற்காலிகம்தான். இன்னும் 6 மாதம் இருக்கிறது என்று அடுத்த வருமானத்தை தேடாமல் "நானும் ஊருக்கு நல்லது செய்ரேன்" என கிளம்பினால் 5 வது மாத ஆரம்பத்திலேயே நெருக்கமான உறவுகளும் தத்துவமெல்லாம் பேச ஆரம்பிக்கும். அதை நாம் வேறு கேட்டுத்தொலைக்க வேண்டி வரும்.

Emergency Medical Fund

இந்த விசயத்தை எழுத என்னிடம் பலஎபிசோடுக்கு விசயம் இருக்கிறது.

இன்றைய செடன்ட்ரி லைஃப், நம்முடைய அன்றாட வாழ்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி நமது ஆர்கன்கள்பெரும்பாலும் அதன் அதன் முழு வீச்சில் இயங்காமல் போய் முன்பெல்லாம் வரும் வயதானவர்களுக்கான நோய் இப்போது சின்ன வயதில் வந்து விடுகிறது. நோயின் தாக்கம் என்பது வேறு, அதில் உங்கள் சம்பாத்தியத்தில் ஏற்படுத்தும் தாக்கத்திற்கு சரியான தீர்வு மெடிக்கல் இன்சூரன்ஸ். இப்போது இஸ்லாமிக் இன்சூரன்ஸ் [TAKAFUL] வந்து விட்டதால் இதில் கொஞ்சம் அதிகப்படியான ஆட்கள் பயன் அடைய முடியும்.

உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும் சேர்த்து தபாரு [பிரிமியம்] கட்டுவதால் இக்கட்டான சூழ்நிலையில்உங்கள் பொருளாதாரம் பாதிக்கப்படாமல் காப்பாற்றலாம்.

இது போன்ற மெடிக்கல் இன்சூரன்ஸ் எடுக்கமுடியாமல்போகும் சூழ்நிலையில் இருப்பவர்கள் தனது குடும்பத்தில் உழைப்பவர்களை சேர்த்துக் கொண்டு தங்கள் குடும்பத்தினருக்கு என்று ஒரு மெடிக்கல் நிதியை தனியாக நிர்வகித்து வருவது நல்லது. 20 ஆண்கள் உழைக்கும் குடும்பத்தில் உள்ளவர்கள் கூட ஆஸ்பத்திரியின் பெரிய பில்களை கட்ட முடியாமல் போய் ரெஸ்பிரேட்டரில் ஓடிக் கொண்டிருக்கும் ஒருவரின் இதயம் நிறுத்தப்பட்டதை நான் பார்த்திருக்கிறேன். காரணம் பணம்.

Retirement Fund:

சமீபத்தில் ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவருக்கு ஆண்பிள்ளைகள். ஒரு மகனுக்கு கல்யாணம் ஆகிவிட்டது. 2வது வது மகனும் நல்லபடியாக படிப்பதால் உங்கள் வாழ்க்கை இனிமேல் ஈசியாகிவிடும். பசங்க சம்பாதித்தால் அட்லீஸ்ட் நீங்கள் ஒய்வெடுக்கலாம்" என்று சொன்னேன். அதற்கு அந்த நண்பர் சொன்ன பதில் எல்லோருக்கும் பொருந்தும். அப்படித்தான் எல்லோரும் நினைத்து வாழ்கிறோம்ஆனால் நடைமுறை வாழ்க்கையில் மகன் சம்பாதிக்க ஆரம்பிக்கும்போதுதான் அவனது கல்யாணம்அவனுக்கென்று வாகனம்வீடு இப்படி பெரும் செலவுகளை மனிதன் சந்திக்கிறான். எனவே நாம் சம்பாதிக்க கூடிய செயல் ஒரு 'தொடர்கதை" அதற்கு முடிவு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஆனால் ரிட்டயர்மென்டுக்கு என்று ஏதாவது தொடர் வருமானம் வருகிறமாதிரி ஏற்படுத்திக்கொள்ளாதவர்கள் வாழ்க்கை கொஞ்சம் கஷ்டம்தான். பிள்ளைகள் தருவார்கள் என்ற எதிர்பார்ப்புள்ள வாழ்க்கை எப்போதும் ஒரு மர்ம நிமிடங்கலுடன் கடந்து போகும். இதை எத்தனை பேர் தாங்கி கொள்ள முடியும்" .....இதை அவர் சொன்னவுடன் ஏதோ எனக்குள் செய்தது. கொஞ்சம் நான் "ஹேங்'  ஆனது என்னவோ உண்மை. நாம் காலம் கடந்து சில விசயங்களை யோசிப்பதுடன் இப்படி அனுபவபூர்வமாக பேசுபவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறதாக நான் உணர்கிறேன்.

இப்போது விற்கும் சொத்து விலைகளால் ஏதும் வாங்க முடியுமா என்று யோசிப்பவர்கள் பல முதலீடு விசயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. இந்தியா போன்ற இடங்களில் ம்யூச்சுவல் ஃபன்ட் நிறைய இருக்கிறது. இவைகளில் முதலீடு செய்வது நல்லது என்றாலும் Syariyah compliance counters இவைகளை செக் செய்வது உங்கள் கடமை, அதோடு Historical return of Fund எப்படியிருக்கிறது என்பதையும் செக் செய்து கொள்ளவும்.

Child Education Fund

இது  1- 5 & 6-10 படிக்கும் மாணவர்கள் உங்களுக்கு பிள்ளைகளாக இருந்தால் அவசியம் கவனம் செலுத்த வேண்டிய விசயம். பிள்ளைகள் படித்து முடித்து நல்ல மதிப்பெண்களுடன் அவர்கள் தயாரான பிறகு பெற்றோர்களான நாம் தயாராக இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும் என்று நானே அனுபவித்திருக்கிறேன். அதே மாதிரி பல பெற்றோர்கள்  பட்ட டென்சனான சூழ்நிலையையயும் நான் பார்த்திருக்கிறேன். இதற்கு நாம் பல காரணம் சொன்னாலும் உங்கள் மகனோ மகளோ 19 வயதில் கல்லூரிக்கு போகப்போவது 19 வருடத்துக்கு முன்னே தெரியும், ஏன் நாம் தயாராகவில்லை?. இந்த விழிப்புணர்வை எனக்கு தந்தது அதிகம் படித்திராத என் சீனியர்.

இப்போது சேமிக்களாம் அப்புறம் சேமிக்கலாம் என்றால் காலமும் கடல் அலையும் நமக்காக காத்திருக்காது. பிள்ளைகள் எங்கே அவ்வளவு படிக்கப்போகிறது என்ற அவநம்பிக்கையிலும் சேமிக்காமல் இருப்பதும் தவறு. ஏனெனில் உங்களின் அவநம்பிக்கையின் தாக்கம் அவனது படிப்பு வரையில் பாதித்திருக்களாம். கடைசியில் உங்கள் நெகடிவ் எனர்ஜியால் உங்கள் வம்சமே பாதிக்கப்படக்கூடும்.

பிள்ளைகளுக்கு பணம் சேர்ப்பதுடன் கொஞ்சம் நம்பிக்கையையும் சேர்த்து வையுங்கள். உங்கள் பிள்ளையின் எதிர்காலக்கனவுகளை அடிக்கடி ஞாபகப்படுத்துங்கள். அதற்காக உங்கள் பிள்ளையை ஓய்வெடுக்க விடாமல் அவனை ஒரு மாடு மாதிரி நடத்துவதையும் தவிர்த்து விடுங்கள். பிள்ளைகள் பெற்றோர்களின் நச்சரிப்பையும் புத்தக மூட்டையையும் சுமக்கும் பொதிகழுதை ஆகாமல் பார்த்துக்கொள்வதும் உங்கள் கடமைதான்.

எதற்கு சேமித்தாலும் அதற்கென்று ஒரு தனி வங்கிகணக்கு இருத்தல் அவசியம். அதில் பணம் சேர்க்க மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். அதில் செக் புக் அல்லது ஏ டி எம் கார்டு இருந்தால் கை அரிக்கும். எனவே அதை கடாசிவிட்டு  சேமிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. நீங்கள் சேமிப்பில் புலி / நரி என்று விளம்பரப்படுத்தி கொண்டிருந்தால் பக்கத்தில் கழுகுகள் பறக்க ஆரம்பித்து விடும்.

இதற்கும் நான் முன்பு சொன்ன  Visualization Technique  உதவும். உங்கள் சேமிப்பு கணக்கில் எவ்வளவு இருக்க வேண்டும் என்று அடிக்கடி நினைத்து பாருங்கள். உங்கள் சேமிப்பும் உயரும்.

சம்பாதிப்பது எல்லோராலும் முடியும். அதை சரியாக காப்பாற்றுவதுதான் சவாலான விசயம். ஊரில் சிலரை பார்த்திருக்கிறேன். என்னிடம் இவ்வளவு பணம் இருக்கிறது, அதை வைத்து என்ன செய்யலாம் என்று வெட்டியாக திரிபவர்களிடம் ஐடியா கேட்பது. அதில் ரிசல்ட் எப்படியிருக்கும் என்று உங்களுக்கே தெரியும்.

சிலருக்கு சொத்து வருமானம் அல்லது பிசினஸ் வருமானம் என்று இருக்கும் [கவனிக்க: இவர்கள் மாதசம்பளம் வாங்குபவர்கள் அல்ல] சில சமயங்களில் தான் நினைத்ததை விட அதிக வருமானம் வர வாய்ப்பு இவர்களுக்கு உண்டு. எப்போது அதிக வருமானம் வருகிறதோ. அந்த மாதத்திற்கு தேவையான பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு மற்ற அனைத்து உபரிவருமானத்தையும்  சேமிப்பில் போட பழகிக்கொண்டால் பல சமயங்களில் இவர்களுக்கான பொருளாதாரச்சுமை தவிர்க்கப்படலாம்.  அதை விட்டு நல்ல வருமானம் வரும்போது தனது மனசு சொல்லும் செலவுகளை செய்துவிட அவசரப்படுபவர்களை யாராலும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியாது.
ஏற்றம் தொடரும்
ZAKIR HUSSAIN

சேமிப்பு 55

அதிரைநிருபர் பதிப்பகம் | April 18, 2013 | , , ,

அகிலத்தின் இயக்கத்தை
ஆண்டவன் திட்டமிட்டான்
அட்சரம் பிசகாமல்
அமைந்தது உலகு

இன்றே திட்டமிடு
நாளையை உனதாக்கு
கனவுகளைக் கைப்பற்ற
காரியங்களைத் திட்டமிடு

வட்டமிடும்
கழுகெனவே வாழ்க்கை
வெட்டவெளிக்
கோழிக்குஞ்சு மனிதன்
கொத்தப்படு முன்
திட்டமிடு

கருடப் பார்வையிலிருந்து
கணநேரம் தப்பிக்கலாம்
காலத்தின் பிடியிலிருந்து
கற்றோர்கூட தப்பவியலாது

காலம்...
பணி மூப்பென்றொரு
போர் தொடுக்கும்
நீ...
சேமிப்பு என்றொரு
சேனை வளர்
பணிமூப்புப் பட்டாளம்
புறமுதுகிடும்

ஊர்வனகூட
உணவைச் சேமிக்கின்றன
கலைஞர்களோ
கனவைச் சேமிப்பர்
சேமித்த
உணவும் கனவும்
உயர்வுக்குக் கைகொடுக்கும்

சேமிக்கும்போதுதான்
சில்லறை,
சேர்ந்துவிட்டால்
சில்லென்ற அறையில்
செல்லமான வாழ்க்கை

களவுபோகு முன்னரே
காபந்து செய்வதறிவு
செலவு செய்யும் முன்னரே
சேமிப்புச் செய்வதுயர்வு

இம்மையில் நன்மைகள்
மறுமைக்கான சேமிப்பு
உண்மையில் அதுவே
உயர்வுக்கானத் திட்டம்

ஊதாரித்தனமின்றி
உலோபியென சுருங்காமல்
கணக்கிட்டு தர்மம் செய்து
மெனக்கெட்டுச் சேமித்தால்
இம்மையும் இன்பமாகும்.

திட்டமிட்டுச் சேமிக்கக்
கற்றவரே கரைசேர்வர்
இம்மை மறுமையெனும்
ஈருலகிலும் ஈடேறுவர்.

Sabeer AbuShahruk

படிக்கட்டுகள்... ஏற்றம் - 20 28

ZAKIR HUSSAIN | October 08, 2012 | , , , ,

சேமிப்பின் அவசியம்.

சேமிப்பது நல்லது என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனாலும் தெரிந்தும் செயல் படுத்தாமல் போவதற்க்கு ஒரு  டிசிப்ளின் இல்லாத காரணமே தவிர, வசதியில்லை என்பதல்ல.

சேமிப்பின் முதல் விதி:  

வருமானம் - [மைனஸ்] சேமிப்பு > [மீதி] செலவுகள்.

Income – Savings > expenses.

ஆனால் பெரும்பாலானவர்கள் கடைபிடிக்கும் தவறான விதி: வருமானம் [மைனஸ்] - செலவுகள் > [மீதி] = சேமிப்பு.

Income – Expenses > Savings.

பணம் கைக்கு கிடைத்தவுடன் செலவளித்து விட்டு மிச்சம் மீதி இருந்தால் சேமிப்பேன் என்பது நடக்ககூடிய காரியமாக எனக்கு படவில்லை.

தொடர்ந்து சேமிக்காததால் சில சமயங்களில் வாழ்க்கையே வெறுத்துப்போகும். ஏனெனில் வாழ்க்கையின் அடுத்த நிமிடம் அவிழ்க்கப்போகும் மிகப்பெரிய உண்மைகளில் செலவுகளின் அத்யாயங்களுக்கே முதல் இடம். அதற்க்கு பிறகுதான் இயற்கையை ரசிப்பதும், உறவுகளின் கவனிப்பும், உங்களுக்கு பிடித்த அந்த கடற்கரை காற்றும், அடைமழையில் சூடான ஸ்ட்ராங் டீயும்.

Financial Planning ல் சில முக்கியமான விசயங்களுக்கு உங்களிடம் சேமிப்பு இருக்க வேண்டிய அவசியத்தை சொல்கிறார்கள். இது நிச்சயம் உங்களால் முடியக்கூடிய விசயம்தான்இருப்பினும் சென்டிமென்ட், அளவுக்கு அதிகமான ஆசைபோன்ற கற்களில் தடுக்கிவிழுவதும் ,விழாததும் உங்கள் சமத்தை பொறுத்தது.

Emergency Fund :

உங்கள் வருமானத்தில் ஆறுமாத வருமானம் அல்லது உங்களுக்கு ஆகும் செலவில் [ ஒரு மாத செலவு ] ஆறு மடங்கு உங்களிடம் நிச்சயம் பணமாக சேமிப்பில் இருக்க வேண்டும் என்பது முக்கியம். இதன் காரணம் நீங்கள் வேலை பார்க்கும் சூழல் திடீரென நிர்வாக முறைகேடால் உங்கள் வருமானம் பாதிக்கப்படலாம். இல்லாவிட்டால் முதலாளியின் மச்சானுக்கு உங்கள் வேலை எல்லாம் நீங்களே படித்து கொடுத்து விட்டதால் நீங்கள் இன்ஸ்டலேசன் முடிந்த சி.டி மாதிரி ஒரு என்வலப்பில் போட்டு ஒரங்கட்டுவதுபோல் ஓரங்கட்டப்படலாம். அல்லது உங்கள் வீட்டுவிழாவில் கலந்து சிறப்பித்து விட்டு வந்ததால் உங்கள் இருக்கையில் ஒரு யுவதி அமர்ந்து உங்களை ஏதோ கூழ்காய்ச்சி ஊத்துவதற்கு டொனேசன் கேட்க வந்த ஆளை பார்ப்பதுபோல் பார்க்கலாம்.

எது எப்படியோ. உங்கள் வாழ்க்கை ஏறக்குறைய டார்ஜான் மாதிரி. அடுத்த கயிற்றை பிடிக்க தவறினால் கீழே விழுந்து பலத்த அடி படலாம். எனவே இந்த ஆறு மாத சேமிப்பு உங்களை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி கொள்ள உதவியாக இருக்கும். வருசக்கணக்கில் "சும்மா" உட்கார்ந்து சாப்பிடுபவர்களுக்கு இதுவரை எந்த பொருளாதார நிபுனராலும் எந்த விதியும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது ஒரு தற்காலிகம்தான். இன்னும் 6 மாதம் இருக்கிறது என்று அடுத்த வருமானத்தை தேடாமல் "நானும் ஊருக்கு நல்லது செய்ரேன்" என கிளம்பினால் 5 வது மாத ஆரம்பத்திலேயே நெருக்கமான உறவுகளும் தத்துவமெல்லாம் பேச ஆரம்பிக்கும். அதை நாம் வேறு கேட்டுத்தொலைக்க வேண்டி வரும்.

Emergency Medical Fund


இந்த விசயத்தை எழுத என்னிடம் பலஎபிசோடுக்கு விசயம் இருக்கிறது.

இன்றைய செடன்ட்ரி லைஃப், நம்முடைய அன்றாட வாழ்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி நமது ஆர்கன்கள்பெரும்பாலும் அதன் அதன் முழு வீச்சில் இயங்காமல் போய் முன்பெல்லாம் வரும் வயதானவர்களுக்கான நோய் இப்போது சின்ன வயதில் வந்து விடுகிறது. நோயின் தாக்கம் என்பது வேறு, அதில் உங்கள் சம்பாத்தியத்தில் ஏற்படுத்தும் தாக்கத்திற்கு சரியான தீர்வு மெடிக்கல் இன்சூரன்ஸ். இப்போது இஸ்லாமிக் இன்சூரன்ஸ் [TAKAFUL] வந்து விட்டதால் இதில் கொஞ்சம் அதிகப்படியான ஆட்கள் பயன் அடைய முடியும்.

உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும் சேர்த்து தபாரு [பிரிமியம்] கட்டுவதால் இக்கட்டான சூழ்நிலையில்உங்கள் பொருளாதாரம் பாதிக்கப்படாமல் காப்பாற்றலாம்.

இது போன்ற மெடிக்கல் இன்சூரன்ஸ் எடுக்கமுடியாமல்போகும் சூழ்நிலையில் இருப்பவர்கள் தனது குடும்பத்தில் உழைப்பவர்களை சேர்த்துக் கொண்டு தங்கள் குடும்பத்தினருக்கு என்று ஒரு மெடிக்கல் நிதியை தனியாக நிர்வகித்து வருவது நல்லது. 20 ஆண்கள் உழைக்கும் குடும்பத்தில் உள்ளவர்கள் கூட ஆஸ்பத்திரியின் பெரிய பில்களை கட்ட முடியாமல் போய் ரெஸ்பிரேட்டரில் ஓடிக் கொண்டிருக்கும் ஒருவரின் இதயம் நிறுத்தப்பட்டதை நான் பார்த்திருக்கிறேன். காரணம் பணம். 

Retirement Fund:

சமீபத்தில் ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவருக்கு 3 ஆண்பிள்ளைகள். ஒரு மகனுக்கு கல்யாணம் ஆகிவிட்டது. 2வது 3 வது மகனும் நல்லபடியாக படிப்பதால் ' உங்கள் வாழ்க்கை இனிமேல் ஈசியாகிவிடும். பசங்க சம்பாதித்தால் அட்லீஸ்ட் நீங்கள் ஒய்வெடுக்கலாம்" என்று சொன்னேன். அதற்கு அந்த நண்பர் சொன்ன பதில் எல்லோருக்கும் பொருந்தும். ' அப்படித்தான் எல்லோரும் நினைத்து வாழ்கிறோம், ஆனால் நடைமுறை வாழ்க்கையில் மகன் சம்பாதிக்க ஆரம்பிக்கும்போதுதான் அவனது கல்யாணம், அவனுக்கென்று வாகனம், வீடு இப்படி பெரும் செலவுகளை மனிதன் சந்திக்கிறான். எனவே நாம் சம்பாதிக்க கூடிய செயல் ஒரு 'தொடர்கதை" அதற்கு முடிவு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஆனால் ரிட்டயர்மென்டுக்கு என்று ஏதாவது தொடர் வருமானம் வருகிறமாதிரி ஏற்படுத்திக்கொள்ளாதவர்கள் வாழ்க்கை கொஞ்சம் கஷ்டம்தான். பிள்ளைகள் தருவார்கள் என்ற எதிர்பார்ப்புள்ள வாழ்க்கை எப்போதும் ஒரு மர்ம நிமிடங்கலுடன் கடந்து போகும். இதை எத்தனை பேர் தாங்கி கொள்ள முடியும்" .....இதை அவர் சொன்னவுடன் ஏதோ எனக்குள் செய்தது. கொஞ்சம் நான் "ஹேங்'  ஆனது என்னவோ உண்மை. நாம் காலம் கடந்து சில விசயங்களை யோசிப்பதுடன் , இப்படி அனுபவபூர்வமாக பேசுபவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறதாக நான் உணர்கிறேன்.

இப்போது விற்கும் சொத்து விலைகளால் ஏதும் வாங்க முடியுமா என்று யோசிப்பவர்கள் பல முதலீடு விசயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. இந்தியா போன்ற இடங்களில் ம்யூச்சுவல் ஃபன்ட் நிறைய இருக்கிறது. இவைகளில் முதலீடு செய்வது நல்லது என்றாலும் Syariyah compliance counters இவைகளை செக் செய்வது உங்கள் கடமை, அதோடு Historical return of Fund எப்படியிருக்கிறது என்பதையும் செக் செய்து கொள்ளவும்.

Child Education Fund

இது  1- 5 & 6-10 படிக்கும் மாணவர்கள் உங்களுக்கு பிள்ளைகளாக இருந்தால் அவசியம் கவனம் செலுத்த வேண்டிய விசயம். பிள்ளைகள் படித்து முடித்து நல்ல மதிப்பெண்களுடன் அவர்கள் தயாரான பிறகு பெற்றோர்களான நாம் தயாராக இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும் என்று நானே அனுபவித்திருக்கிறேன். அதே மாதிரி பல பெற்றோர்கள்  பட்ட டென்சனான சூழ்நிலையையயும் நான் பார்த்திருக்கிறேன். இதற்கு நாம் பல காரணம் சொன்னாலும் உங்கள் மகனோ மகளோ 19 வயதில் கல்லூரிக்கு போகப்போவது 19 வருடத்துக்கு முன்னே தெரியும், ஏன் நாம் தயாராகவில்லை?. இந்த விழிப்புணர்வை எனக்கு தந்தது அதிகம் படித்திராத என் சீனியர்.

இப்போது சேமிக்களாம் அப்புறம் சேமிக்கலாம் என்றால் காலமும் கடல் அலையும் நமக்காக காத்திருக்காது. பிள்ளைகள் எங்கே அவ்வளவு படிக்கப்போகிறது என்ற அவநம்பிக்கையிலும் சேமிக்காமல் இருப்பதும் தவறு. ஏனெனில் உங்களின் அவநம்பிக்கையின் தாக்கம் அவனது படிப்பு வரையில் பாதித்திருக்களாம். கடைசியில் உங்கள் நெகடிவ் எனர்ஜியால் உங்கள் வம்சமே பாதிக்கப்படக்கூடும்.

பிள்ளைகளுக்கு பணம் சேர்ப்பதுடன் கொஞ்சம் நம்பிக்கையையும் சேர்த்து வையுங்கள். உங்கள் பிள்ளையின் எதிர்காலக்கனவுகளை அடிக்கடி ஞாபகப்படுத்துங்கள். அதற்காக உங்கள் பிள்ளையை ஓய்வெடுக்க விடாமல் அவனை ஒரு மாடு மாதிரி நடத்துவதையும் தவிர்த்து விடுங்கள். பிள்ளைகள் பெற்றோர்களின் நச்சரிப்பையும் புத்தக மூட்டையையும் சுமக்கும் பொதிகழுதை ஆகாமல் பார்த்துக்கொள்வதும் உங்கள் கடமைதான்.

எதற்கு சேமித்தாலும் அதற்கென்று ஒரு தனி வங்கிகணக்கு இருத்தல் அவசியம். அதில் பணம் சேர்க்க மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். அதில் செக் புக் அல்லது ஏ டி எம் கார்டு இருந்தால் கை அரிக்கும். எனவே அதை கடாசிவிட்டு  சேமிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. நீங்கள் சேமிப்பில் புலி / நரி என்று விளம்பரப்படுத்தி கொண்டிருந்தால் பக்கத்தில் கழுகுகள் பறக்க ஆரம்பித்து விடும்.

இதற்கும் நான் முன்பு சொன்ன  Visualization Technique  உதவும். உங்கள் சேமிப்பு கணக்கில் எவ்வளவு இருக்க வேண்டும் என்று அடிக்கடி நினைத்து பாருங்கள். உங்கள் சேமிப்பும் உயரும்.
 
 

சம்பாதிப்பது எல்லோராலும் முடியும். அதை சரியாக காப்பாற்றுவதுதான் சவாலான விசயம். ஊரில் சிலரை பார்த்திருக்கிறேன். என்னிடம் இவ்வளவு பணம் இருக்கிறது, அதை வைத்து என்ன செய்யலாம் என்று வெட்டியாக திரிபவர்களிடம் ஐடியா கேட்பது. அதில் ரிசல்ட் எப்படியிருக்கும் என்று உங்களுக்கே தெரியும்.

சிலருக்கு சொத்து வருமானம் அல்லது பிசினஸ் வருமானம் என்று இருக்கும்  [ கவனிக்க: இவர்கள் மாதசம்பளம் வாங்குபவர்கள் அல்ல] சில சமயங்களில் தான் நினைத்ததை விட அதிக வருமானம் வர வாய்ப்பு இவர்களுக்கு உண்டு. எப்போது அதிக வருமானம் வருகிறதோ. அந்த மாதத்திற்கு தேவையான பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு மற்ற அனைத்து உபரிவருமானத்தையும்  சேமிப்பில் போட பழகிக்கொண்டால் பல சமயங்களில் இவர்களுக்கான பொருளாதாரச்சுமை தவிர்க்கப்படலாம்.  அதை விட்டு நல்ல வருமானம் வரும்போது தனது மனசு சொல்லும் செலவுகளை செய்துவிட அவசரப்படுபவர்களை யாராலும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியாது.
ஏற்றம் தொடரும்
ZAKIR HUSSAIN

கடன் வாங்கலாம் வாங்க - 14 25

அதிரைநிருபர் | March 03, 2011 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...


அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)    இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

சகோதர, சகோதரிகள் சென்ற தொடரை படித்துவிட்டு பட்ஜெட் போட துவங்கியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். முயற்சி செய்யுங்கள் இன்ஷாஅல்லாஹ் வெற்றி நமதாகும். 13வது தொடரில் சிக்கனத்தை பற்றி பார்த்தோம். மேலும் சேமிப்பு, சிக்கனம் இவைகளை தொடர்வோம்.
பிள்ளைகளின் சேமிப்பு :

தாய்மார்களுக்கு : வீட்டில் உள்ள பிள்ளைகளுக்கு சேமிக்கும் பழக்கத்தை கற்று கொடுக்க வேண்டுமென்றால் அவர்களுக்கு தனித்தனியாக ஒரு உண்டியல் வாங்கி கொடுத்து விடுங்கள். மண் உண்டியல் உடைந்து விடும். தகரம், இரும்பில் உண்டியல்கள் கடையில் கிடைக்கிறது. இதில் காசு நிறைய சேர்த்து விட்டால் உனக்கு தேவைப்பட்ட பொருட்களை வாங்கி கொடுப்பேன் என்று சொல்லுங்கள். மேலும் தங்களிடம் காசு கேட்டால் நீ சேர்த்து வைத்துள்ள காசில் எடுத்து வாங்கிக் கொள் என்று சொல்லுங்கள். பிள்ளைகளுக்கு ஒரு பொறுப்பு வருவதை உணர்வீர்கள்.

வாங்கும் பொருட்களில் சிக்கனம் :

ஒரு கிரைண்டர் வாங்கினால் ஒரு கிரைண்டர் இலவசம். ஒரு மிக்ஸி வாங்கினால் ஒரு மிக்ஸி இலவசம். ஒரு ஸ்டவ்விற்கு ஒரு ஸ்டவ் இலவசம். இது போன்ற பொருட்களை வாங்காதீர்கள். ஒரு பொருள் குறைந்த பட்சம் 5 வருடத்திற்காவது  உழைக்க வேண்டும் என்றால் நல்ல தரமான கம்பெனிகள் தயாரிக்கும் பொருட்களை வாங்குங்கள்.

விலை குறைவாக இருக்கிறது என்று இலவசத்துடன் வரும் பொருட்களை வாங்காதீர்கள். பாதி விலையில் கிடைக்கிறதே என்று பயன்படுத்திய பொருட்களையும் வாங்காதீர்கள். எந்த மின் சாதனங்கள்  (உதாரணத்திற்கு பிரிட்ஜ், வாஷிங் மெஷின்) வாங்கினாலும்  தரமான கம்பெனியின் பொருட்களையே வாங்குங்கள்.  பொருட்கள் வாங்கும்பொழுது ஒரே கடையில் வாங்கி விடாமல் இரண்டு மூன்று கடைகளில் சென்று விலைகளை பார்த்து எங்கு குறைவாக கிடைக்கிறதோ அந்த கடையில் வாங்குங்கள்.

துணிமணிகள்:

நம் சமுதாய பெண்மணிகள்   கண்ணை மூடிக்கொண்டு 4 ஆயிரம் 5 ஆயிரத்திற்கு சேலைகள் வாங்குகிறார்கள். இதற்கு மேலும் விலை அதிகமாக எடுப்பவர்களும் இருக்கிறார்கள். (ஏன் இவ்வளவு விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்றால் இவள் மாதிரி சேலை வாங்க முடியுமா? இவள் சேலை எடுத்தாலே விலை உயர்ந்ததுதான் என்று மற்ற தோழிகள் பெருமையாக பேச வேண்டுமாம்). (பூனை கண்ணை மூடிக்கொண்டு பூலோகம் இருண்டு கிடக்கிறது என்று நினைப்பது போல்).

வீண் விரயம்:

எனது அலுவலகத்தில் வேலை செய்த ஆபீஸ் பாய் சொன்னது: (கும்பகோணத்திற்கு பக்கத்து ஊர்) இவரின்  தந்தை முனிஸிபாலிட்டியில் வேலை செய்கிறார். இவர்கள் ஊருக்கு பணம் அனுப்பி அவர்கள் தாயார் கையில் கிடைத்தவுடன் அவர்கள் செய்யும் முதல் வேலை வாடகை ஆட்டோவில் கும்பகோணம் சென்று (வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக இல்லை) தொலைக்காட்சியில் செய்து காட்டிய உணவு வகைகளை குறிப்பெடுத்து அந்த பொருட்களை தேடி அலைந்து வாங்கி வந்து செய்து பார்ப்பார்களாம். எவ்வளவு பணம் அனுப்பினாலும் தாயார் பணம் பற்றவில்லை என்ற புலம்பல்தானாம். பொழுது போக்கு சமையல் செய்வதற்காக மாதா மாதம் வீண் விரயமாக ஒரு தொகை போய்க்கொண்டு இருக்கிறது. சமுதாய பெண்களுக்கு மார்க்கம் சரியான வழியில் சென்றடையவில்லை. வீண் விரயத்தை வல்ல அல்லாஹ் கண்டிக்கிறான் என்பது அவர்களுக்கு தெரியவில்லை.

உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரயம் செய்யாதீர்கள்! வீண் விரயம் செய்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான்.(அல்குர்ஆன்: 7:31)

ஆகவே சகோதர, சகோதரிகளே:  வீடு கட்டுவது, துணிமனிகள் வாங்குவது, வீட்டிற்கு மின்சாதன பொருட்கள் வாங்குவது, வீட்டில் சமைத்து சாப்பிடும் உணவு பொருட்களுக்கு செலவழிப்பது இப்படி எந்த காரியத்திலும், ஆடம்பரம் கலக்காமல், பிறர் பாராட்ட வேண்டும் என்று நினைக்காமல், அவசியமா? அவசியமில்லையா? என்பதை சரிகண்டு பிறகு நாம் செய்யும் காரியத்தில் வீண் விரயம் இருக்கிறதா? நம்முடைய காரியத்தில் வல்ல அல்லாஹ்வின் திருப்தி கிடைக்குமா? நம் மனதிற்கு திருப்தியாக இருக்கிறதா? என்று மட்டும்தான் பார்க்க வேண்டும். ஊருக்காக, ஆடம்பரத்திற்காக எந்த ஒரு காரியமும் இருக்காமல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

தள்ளுபடி:

ஆடித்தள்ளுபடி வருடா வருடம் போடுவார்கள். காரணம் அவர்களின் மூட நம்பிக்கையின்படி இந்த மாதம் நல்லமாதம் கிடையாது. அதிகம் பேர் கையில் பணமும் இருக்காது, (ஏன் பணம் இருக்காது என்று தெரியவில்லை) கேள்விப்பட்டேன். அதனால் நிறைய துணிக்கடைகள் காற்று வாங்கிக் கொண்டு இருக்கும். இந்த கடைகள் கண்டுபிடித்ததுதான் ஆடித்தள்ளுபடி.
இந்த நேரத்தில் தங்களுக்கும் வீட்டில் உள்ளவர்களுக்கும் தேவைப்பட்ட துணிமணிகளை சாதாரணமாக பயன்படுத்தவும், நோன்பு பெருநாள், ஹஜ் பெருநாள் வரைக்கும் சேலை, சுடிதார், பிள்ளைகள் துணிகள் என்று அனைத்தையும் வாங்கி வைத்துக்கொள்ளலாம். (எந்தந்த ஊர்களில் தள்ளுபடியில் தரமான துணிகள் கிடைக்கிறது என்று தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது).

இதனால் அடையும் பலன்கள் குறைவான விலையில் துணிகள் வாங்குவதோடு நாம் மீதப்படுத்தும் பணத்தில் அக்கம் பக்கம் உள்ள ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் துணிகள் எடுத்துக் கொடுக்கலாம்.(தருமம் செய்த நன்மை கிடைக்கும்) நோன்பு மாதத்தில் 20வது நோன்பு முதல் பெருநாள் முதல் நாள்வரை துணிகள் வாங்க அலைந்து புனித மாதமான நோன்பில் அமல்கள் செய்யாமல் புறக்கணிப்பது பாதுகாக்கப்படும். புனித மாதத்தின் நன்மைகள் முழுவதுமாக கிடைத்து நிம்மதியாக அமல்கள் செய்யலாம்.

சில பெண்களிடம் தள்ளுபடி விலையில் துணிகள் வாங்கலாம் என்றால் தள்ளுபடி துணிகளை உடுத்தும் அளவுக்கு தரம் தாழ்ந்தா போய்விட்டோம் என்று கூறுகிறார்கள். சேமிப்பின் அவசியம் அவர்களுக்கு புரியவில்லை. விலை உயர்ந்த துணிகள்தான் உடுத்துவார்களாம். இனி வரும் காலங்களில் தள்ளுபடி போடாமல் எந்த வியாபாரமும் நடக்காது என்று சொல்லும் அளவுக்கு வருடம் முழுவதும் தள்ளுபடி திருவிழாவை காணலாம் (தரமான துணிகளும் தள்ளுபடியில் கிடைக்கும்). நமக்கு தேவை குறைந்த விலையில் மனநிறைவான துணிகள் இது போதாதா?


வளைகுடா சகோதரர்களின் சிக்கனம்:

லூயி பிலிப் (Louis Philipe Shirts )  வேன் ஹிஉசேன் (Van heusen shirts ) ஏஎல்எம் (ALM shirts)  (என்ன கடனைப்பற்றி எழுதி விட்டு, சட்டை துணிமணிகள் விற்பதற்கு ஏஜெண்டாகி விட்டீர்களா? என்று நினைக்க வேண்டாம்) நிறைய சகோதரர்கள் பிராண்டடு (Branded) என்ற வார்த்தையை அதிகம் உபயோகப்  படுத்துவதை காணமுடிகிறது. நல்ல கம்பெனிகளில் தரமான அழகான பேண்ட், ஷர்ட்களும் வெளிவருகிறது. அதேநேரத்தில் கிச்சனில் பயன்படுத்தும் துணிகள் போன்றதையும் 100திர்ஹம்  (ரூபாய் 1000) த்திற்கு மேல், 160திர்ஹம் (கிட்டத்தட்ட 2ஆயிரம் ரூபாய்) இந்த விலையில் கடைகளில் பார்க்க முடிகிறது.

சில நேரங்களில் (கிச்சனில் பயன்படுத்தும்) விலை உயர்ந்த சட்டைகளை கவலையே படாமல் கையில் இருக்கும் பிளாஸ்டிக் மணியை கொடுத்து நம் சகோதரர்கள் வாங்கிச் செல்கிறார்கள். பக்கத்தில் பார்த்துக்கொண்டு இருக்கும் எனக்கு மனதிற்கு சங்கடமாக இருக்கும். சம்பாரிக்கிறோம் என்ற நினைப்பில் இப்படி பொறுப்பற்று இருக்கிறார்கள் என்று. இப்பொழுதும் இந்த கம்பெனி துணிகளை எல்லா இடங்களிலும் தள்ளுபடி போட்டிருக்கிறார்கள். எப்படி இரண்டு சட்டை எடுத்தால் ஒரு சட்டை இலவசமாம். மேலும் குறிப்பிட்ட துணிமணிகள் (Half is Back – Half Priced Items) பாதி விலை தள்ளுபடி என்ற புதுவித தள்ளுபடி ஆரம்பமாகியுள்ளது.

சரி விஷயத்திற்கு வருவோம்:  வளைகுடா நாடுகள் என்று இல்லாமல் எல்லாநாடுகளிலும் மெகா தள்ளுபடி போட ஆரம்பித்து விட்டார்கள். அதன் பெயர்களை தாங்கள் தெரிந்து வைத்திருப்பது நல்லது. கோடைகால தள்ளுபடி, குளிர்கால தள்ளுபடி, ரமலான் தள்ளுபடி, வாரத்தள்ளுபடி, ஸ்பெஷல் தள்ளுபடி, ஸ்டாக் கிளியரென்ஸ் தள்ளுபடி இது போக 50 சதவீத , 70 சதவீத தள்ளுபடியும் சில நேரங்களில் இருக்கும். சாதாரண நாட்களில் விருப்பட்டதை எடுங்கள். இந்த தள்ளுபடி காலங்களில் ஒரு வருடத்திற்கு தேவைப்படும் துணிகளை எடுத்து வைத்துக்கொள்ளலாம். நிறைய சேமிப்பு கிடைக்கும்.

பிராண்டடு உள்ள துணிகள் அதிக விலைக்குத்தான் எடுக்க முடியும் என்று நினைக்கலாம். எடுக்க வேண்டாம் என்று கூறவில்லை. தள்ளுபடியே இல்லை என்றால் எடுக்கலாம். தள்ளுபடி காலங்களில் எடுத்து வைத்துக்கொண்டால் ஒரு வருடத்திற்கு உபயோகப்படும். மேலும் நமக்கு பணம் மீதப்படும். இந்தப்பணத்தில் ஏழை உறவினர்களுக்கு உதவி செய்யப்பயன்படுத்தலாம். நமக்கு சேமிப்பாகவும் இருக்கும்.

சிக்கனமா? கஞ்சத்தனமா?

சகோதர, சகோதரிகளே! நான் சிக்கனத்தைப் பற்றித்தான் சொல்லி வருகிறேன். சிக்கனமாக இருக்க சொல்கிறார்கள். நாம் சிக்கனமாக செலவு செய்து யாருக்கும் கொடுக்காமல் நமக்கு மட்டும் சேர்த்து வைத்துக் கொள்வோம் என்று நினைக்காதீர்கள். சிக்கனம் என்பது வேறு கஞ்சத்தனம் என்பது வேறு. சிக்கனத்தால் வாழ்வு சீரடையும். கஞ்சத்தனம் நம்மை நரகில் கொண்டு போய் சேர்த்து விடும்.

கஞ்சத்தனம் பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறியது:

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : (தர்மம் செய்யாது) கருமித்தனம் செய்பவர் மற்றும் தர்மம் செய்பவருக்கு உதாரணம் அவ்விருவரின் மீதும் இரும்பினால் ஆன கேடயம் (முழுக்க அவ்விருவரையும் மூடிக் கொண்டவாறு) உள்ளது. (அந்நிலையிலிருக்கும்) தர்மம் செய்து கொண்டிருந்தவர் ஒரு தர்மத்தை செய்ய நாடுவாரானால் அது அவருக்கு விஸ்தீரணமாகிக் கொடுக்கும். முடிவாக அவரிலிருந்து ஏற்பட்ட தவறுகளின் அடிச்சுவடுகளை அது அழித்து விடும். கருமித்தனத்தை உடையவர் ஒரு தர்மத்தை செய்ய நாடுவாரனால் (அவர் மீது இருக்கும்) கவசமானது அவரை நெருக்கும். அவருடைய இரு கைகளும் அவரது கழுத்தின்பால் இணைந்து கொள்ளும் (அதிலுள்ள) ஒவ்வொரு வளையமும் அவரை இருக்கிக் கொள்ளும். அதை அவர் விசாலமாக்கிக் கொள்ள அவர் பெரிதும் முயல்வார் ஆனால் அதற்கு சக்தி பெறமாட்டார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

இன்ஷாஅல்லாஹ் வளரும்...

- அலாவுதீன். S.



உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு