Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

விண் கல் வீண் பயமா ? 7

அதிரைநிருபர் பதிப்பகம் | May 31, 2013 | , ,

அந்த காலத்தில் வீட்டை விட்டு வெளியே போகும் போது  உம்மம்மா வாப்புச்சா சொல்லுவாங்க  பார்த்து போ வாப்பா வீதரோடு கல்லு எதாச்சும் காலுலே அடிச்சிரம என்று அது போல இப்போது பேப்பர் செய்தியைப் பார்த்தா கொல நடுங்குது அதுக்கு காரணம்  வரும் வெள்ளிக்கிழமை (இன்று) விண்கல் ஒன்று பூமிக்கு ரொம்ப கிட்டக்க வந்து  கடந்து போக உள்ளதாம்  இது பூமியைத் தாக்கும் ஆபத்து இருக்கும்ன்னு சொல்றாங்க இல்லைன்னும் சொல்றங்க மழை  வரும் ஆனால் வராமலும் இருக்கும் என்பதுபோல்.


இந்த கல்  பூமிக்கு அருகே பல ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் கடந்து செல்வதால்  மேலே சுத்திக்கொண்டிருக்கும் ஒரு  சில (ராக்கெட்) செயற்கைக் கோள்களுக்கு ஆபத்து நேரக்கூடும் என சில விஞ்ஞானிகள் கருத்து சொல்லி உள்ளனர்  என்ற இந்த விண்கல் 45.7 விட்டம் கொண்டது. 

இது பூமியின் மீது மோதலாம் என கருதப்பட்டது . ஆனால், அதற்கான வாய்ப்பே இல்லை என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸா அறிவித்து உள்ளது.

'1998 கியூஇ2' இந்த விண்கல் பூமியை 27,681 கி.மீ தூரத்தில் கடந்து செல்லப் போகிறது. இது அண்டவெளியில் அளவுகளோடு கணக்கிட்டு பார்க்கையில் இது ஒரு ஜுஜுபி கிலோ மீட்டர்தான்.

வருகிற (மே) 31-ந்தேதி இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு இந்த விண்கல் பூமியிலிருந்து 5.8 மில்லியன் கி.மீ. தூரத்தில் கடந்து செல்லப் போகிறது. இது பூமிக்கும் நிலவுக்கும் உள்ள தூரத்தைப் போல 15 மடங்காகும்.

இது பூமியில் வந்து விழப் போவதில்லை இருந்தாலும் பூமிக்கு மேலே சுமார் 35,406 கி.மீ உயரத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் பல்வேறு நாடுகளின்  நூற்றுக்கணக்கான தொலைத் தொடர்பு, வானிலை, உளவு செயற்கைக் கோள்களில் ஏதாவது ஒன்றின் மீது மோதுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும்  ஒரு கருத்து நிலவுகின்றது.

வரும் வெள்ளிக்கிழமை பூமியை 27,681 கி.மீ தூரத்தில் கடந்து செல்லப் போகும் இந்த விண்கல்லை உலகின் பல்வேறு வானியல் தொலை நோக்கிகளும், வானில் சுற்றும் ஹப்பிள் தொலைநோக்கியும் கண்காணித்துக் கொண்டுதான் உள்ளன.

இந்த விண்கல் மணிக்கு 30,000 கி.மீ. வேகத்தில், அதாவது ஒலிவை விட 8 மடங்கு வேகத்தில் சீறி பாய்ந்து கொண்டு பூமியை கடந்து செல்ல உள்ளது.

Sஹமீது

பத்தாம் வகுப்பு தேர்வில் அதிரை பள்ளி மாணாக்களின் எழுச்சி ! 13

அதிரைநிருபர் பதிப்பகம் | May 31, 2013 | , , , ,

அதிரையின் பிரதான பள்ளிகளான காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி (ஆண்கள், பெண்கள்) மற்றும் இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளி (ஆண்கள் பெண்கள்) மாணாக்கள் பத்தாம் வகுப்பு தேர்வில் சிறப்பான மதிப்பெண்கள் எடுத்து இருக்கிறார்கள்.

வழமைபோல் மாணவிகளின் ஆளுமை வெற்றிப் படிக்கட்டுகளை எட்டிப் பிடிப்பதில் முன்னனியில் இருக்கிறார்கள், இதுபோல் வரும் காலங்களில் மாணவர்களும் தொடர்ந்து தங்களது நிலைகளை மேலும் உயர்த்திக் கொண்டு தங்களின் படிப்பில் கவனம் சிதைக்கும் எக்காரியத்திலும் ஈடுபடாமல் சிறப்பான வெற்றிகளைப் பெற வேண்டும் இன்ஷா அல்லாஹ் !

முதல் மூன்று இடங்களை எடுத்தவர்கள் மட்டுமல்ல பதின்ம பருவத்தின் சவலாக இருக்கும் பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றி கண்ட அனைத்து மாணாக்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

சாதனை படைத்த மாணவ மாணவிகளின் பெற்றொர்களின் மகிழ்ச்சியில் நாங்களும் பங்கெடுத்துக் கொள்கிறோம்.

மேலும் இது போன்று கல்வியில் சாதனைகள் பல பெற்று பெற்றவர்களுக்கும் சமுதாயத்திற்கும் நம் நாட்டிற்கும் நற்பெயர் வாங்கித்தர வேண்டும் என்று வல்ல அல்லாஹ்விடம் து ஆ செய்கிறோம்.

அன்பு மாணவச் செல்வங்களே ! பெற்றோர்க்கு உகந்த பிள்ளைகளாகவும், அவர்களின் உள்ளம் குளிரும் நன்மக்களாகவும் இருந்து அவர்களுக்கு நற்பெயரை என்றென்றும் நிலைத்திருக்க வையுங்கள் இன்ஷா அல்லாஹ் !

அதிரைநிருபர் பதிப்பகம்

உன்னை அறி 42

அதிரைநிருபர் பதிப்பகம் | May 30, 2013 | , , ,

உன்னை அறி
உண்டி நிறைக்க
தன்னை இழக்கும்
தன்மை ஒழி

தன்னை நம்பி தேடியவரே
தீர்வுகள் எட்டினர்
உன்னை நம்பு
உதித்து எழு

மயிர்க்கணக்கில் கால்களிருந்தும்
மரவட்டை யல்ல ஊர்வதற்கு
மான் குட்டி நீ
துள்ளிக் குதி

உறைந்து போவது
பனிக்கட்டிக்கு இயல்பு
நீ புலிக்குட்டி
விடைத்து நில்
புஜங்கள்
புடைக்க நிமிர்

உயர்ந்த எண்ணங்களை
உள்ளத்தில் உரமிடு
விருட்சங்கள் அனைத்திலும்
சுபிட்சங்கள் விளையும்

படிப்போ பிழைப்போ
பொறுப்பாய்ப் பாடுபடு
தேர்விலும் வெல்லலாம்
தெருவிலும் உயரலாம்

முன்னமொரு முறை
முயன்றது போதுமென்ற
எண்ணம் துற,
முட்டி மோதியே
ஓடு உடைந்திட
உலகில் வெளிப்படும்
குஞ்சை நினை

தடைகள் வந்து இடைமறித்தால்
தாவிக் குதி
முட்டுச் சுவர்கூட முடிவல்ல
அப்பாலும்கூட
உலகம் இயங்குவதை
சிந்தையில் வை

சொல்ல விழைவதை
சுற்றி வளைத்திட
சோம்பல் மீறிடும்
பொட்டில் அடித்ததுபோல்
சட்டெனச் சொல்

கற்க மறுத்தது
தவறு என்பதை
உணரும்வரைதான்
உறக்கம் வரும்

உண்ணப் பசிக்கையில்
உலகம் மறுக்கையில்
உழைக்க உனக்குள்ளே
உத்வேகம் வரும்

அந்த
ஒற்றை இழை பிடி
உன்னை அதில் இழை
தென்னை நிமிர்ந்ததுபோல்
விண்ணை எட்டு

நல்ல வழி அறி
வெல்ல அதில் நட
வெற்றி வாய்க்கையில்
நெற்றி நிலம்பட
நன்றி நவில்!

Sabeer AbuShahruk

பிரிட்டனில் வருடத்திற்கு 50,000 பேர் இஸ்லாத்தை ஏற்கின்றனர் அதில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் ! 14

அதிரைநிருபர் பதிப்பகம் | May 29, 2013 | , , , , ,

பிரிட்டனில் வருடத்திற்கு 50,000 பேர் இஸ்லாத்தை ஏற்கின்றனர் அதில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் ! ஓர் ஆய்வு சொல்லும் உண்மை ! - இது டிவீட் அல்ல ! நான்கு நாட்களுக்கு (24-மே-2013) முன்னர் தி-ஹிண்டு ஆங்கில தினசரிப் பத்திரிக்கையில்  வெளியான கட்டுரை !

இஸ்லாத்தை உளப்பூர்வமாக உணர்ந்து வெள்ளைக்கார பிரிட்டானிய பெண்கள் பெரும்பாலான எண்ணிக்கையில் தொடர்ந்து வாழ்வியலாகவும் ஈருல வெற்றிக்காகவும் ஏற்றுக் கொண்டு வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் தங்களது துறையில் தனித் தன்மையுடன் விளங்குபவர்கள், படித்தவர்கள், பன்முகம் கொண்ட அறிவில் சிறந்தவர்களும் உண்டு.

இந்த வெற்றியாளர்கள் அனைவருக்குமே நன்கு தெரியும் தாங்கள் தேர்ந்தெடுக்கும் மார்க்கத்திற்கு எதிராக குடும்பத்தினர் வலுவான குரல் கொடுப்பார்கள் என்றும், இருந்தாலும் அவர்களில் உயர்தட்டு மக்களில் இதுவரை பேறு பெற்றவர்கள் லரென் பூத் (முன்னாள் பிரிட்டீஸ் பிரதம மந்திரி டோனி பிளேர் அவர்களின் மனைவியின் சகோதரி) பிரபல பத்திரிகையாளார் யோன்னி ரெட்லி, எம்.டிவி வர்ணனையாளார் கிரிஸ்டெய்ன் பெக்கர் ஆகியோர் உள்ளடக்கம்.

கடந்த 9/11க்கு பின்னர் அதிகரித்து வரும் இஸ்லாம் அதிலும் குறிப்பாக பெண்மணிகளின் உள்ளங்களை ஆழமாகத் தொட்டு அவர்களை ஏற்கவைத்து இருக்கிறது.

தங்களது துறைகளில் தனித் தன்மையுடன வெற்றியடைந்த, சுதந்திரமான மேற்கத்திய பெண்களே இஸ்லாத்தை விரும்பி ஏற்று வருகின்றனர்.

இணைக்கப்பட்டுள்ள ஆங்கில பத்திரிகையின் மொழியாக்கத்தை விரைவில் பதிவுக்குள் கொண்டு வருகிறோம் இன்ஷா அல்லாஹ் !


இனிய மார்க்கம்
ஏனைய வர்க்கும் 
ஏற்ற மார்க்கம் !

அபூஇப்ராஹீம்

அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும்...! - தொடர் - 9 12

அதிரைநிருபர் பதிப்பகம் | May 29, 2013 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..


அறிவிப்பு : வியாழன் தோறும் வெளியாகி வந்த இந்த தொடர், இனி புதன் கிழமை தோறும் வெளிவரும் இன்ஷா அல்லாஹ் !

சென்ற வாரம் நபி(ஸல்) அவர்கள் தனக்கு ஏற்பட்ட கஷ்டங்கள், குறிப்பாக பசியின் வேதனையிலும் கூட அல்லாஹ்வை நினைவு கூர்ந்து அழுதார்கள் என்பதையும், அவர்களும் அவர்களோடு வாழ்ந்த தோழர்களும் எவ்வளவு எளிமையான வாழ்வு வாழ்ந்துள்ளார்கள் என்பதையும் இரண்டு சம்பவங்களின் மூலம் அறிந்தோம். இந்த வாரம் நபி(ஸல்) அவர்கள் தம்முடைய உம்மத்தாகிய நம்மேல் எவ்வளவு அக்கறை வைத்து அழுதுள்ளார்கள் என்பதைப் பார்க்கலாம்.

அகிலத்தின் அருட்கொடையாம் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் ஒரு முறை என்னுடைய சமுதாயம் என்னுடைய சமுதாயம் என்று சுஜூதில் விழுந்து அழுதுகொண்டே இருந்தார்கள்.

(இறைவா!) நீ அவர்களை வேதனை செய்தால் (தண்டிப்பதற்கு முற்றிலும் உரிமையுள்ள) உன்னுடைய அடியார்களாகவே நிச்சயமாக அவர்கள் இருக்கின்றனர்; அன்றி, நீ அவர்களை மன்னித்து விடுவாயானால், நிச்சயமாக நீதான்(யாவரையும்) மிகைத்தோனாகவும் ஞானமிக்கோனாகவும் இருக்கின்றாய்” (என்றும் கூறுவார்). குர்ஆன் (5:118)

மேலே குறிப்பிட்ட இறைவசனம், ஈசா(அலை) அவர்கள் அல்லாஹ்விடம் முறையிட்ட சம்பவம். ஈசாவே நீதான் உன் தாயையும் வணங்க கட்டளை பிறப்பித்தாயா? என்று அல்லாஹ் கேட்பான், அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்து (பார்க்க: திருக்குர்ஆன் 5:116 மற்றும் 5:117) மேல் சொன்ன பிரார்த்தனையை (5:118) செய்தார்கள். இந்த இறைவசனத்தை ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் இஷா தொழுகைக்குப் பிறகு ஆரம்பித்து தஹஜ்ஜத்து தொழுகை வரை சுஜூதில் விழுந்து அழது கொண்டே இருந்தார்கள். அப்போது அல்லாஹு தன்னுடைய வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் அழைத்து அந்த முஹம்மதுக்கு என்ன ஆயிற்று ஏன் இவர் இப்படி அழுகிறார்கள் என்று கேட்டு வரும்படி கட்டளையிடுகிறான்.

ஜிப்ரீல் நபி(ஸல்) அவர்களிடம் வந்து கேட்கிறார்கள், “என்ன உங்கள் பிரச்சினை?” நபி(ஸல்) அவர்கள் அழுதுகொண்டே “எனது உம்மத், எனது உம்மத், மறுமையில் எனது சமுதாயத்தின் நிலை என்ன என்பது எனக்கு தெரிந்தாக வேண்டும்” என்று ஜிப்ரிலிடம் கேட்டார்கள். உடனே ஜிப்ரீல் அல்லாஹ்விடம் இந்த செய்தியைச் சொல்ல, அல்லாஹ்  'ஓ ஜிப்ரீல்...! முஹம்மதிடம் சென்று இவ்வாறு கூறுங்கள். உமது உம்மத்தின் விஷயத்தில் நீர் திருப்தியுறும் வண்ணம் அல்லாஹ் நடந்து கொள்வான். நீர் கவலையடையும் வண்ணம் ஒருபோதும் நடக்க மாட்டான்' என்று ஜிப்ரீல் (அலை)கூறிய பிறகே நபி(ஸல்) அவர்கள் தம்முடைய அழுகையை நிறுத்தினார்கள் என்று நாம் ஹதீஸ்களில் (முஸ்லீம்) பார்க்கிறோம்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய சமுதாயமான இந்த உம்மத் மீது எந்த அளவுக்கு அன்பு வைத்திருக்கின்றார்கள் என்பதை இந்த ஹதீஸிலிருந்து நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. இந்த சமுதாயத்திற்கு அல்லாஹ் வேதனைகளைத் தந்து விடுவானோ என்ற அச்சம், மற்ற சமுதாயங்களை அழித்தது போன்று இந்த சமுதாயத்தையும் அழித்து விடுவானோ என்ற பயம், என் இறைவா....! எனது சமூகத்திற்கு நீ கருணை புரிவாயாக என்ற பரிவு ஆகிய அனைத்தும், 'என் உம்மத்....! என் உம்மத்....! என்ற பெருமானாரின் அழுகை நமக்கு உணர்த்துகின்றது.

அந்த ஆருயிர் நபி (ஸல்) அவர்கள் நிச்சயமாக நம்மீது அளப்பரிய அன்பு கொண்டவர்களாகவே இருந்தார்கள். ஆகவேதான் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான். '(பாருங்கள்!) உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார். நீங்கள் துன்பத்திற்குள்ளாவது அவருக்குக் கடினமாக இருக்கிறது. மேலும், உங்களுடைய வெற்றியில் பேராவல் கொண்டவராகவும், நம்பிக்கையாளர்கள் மீது அதிகப்பரிவும், கருணையும் உடையவராகவும் இருக்கின்றார்'. (9:128).

மற்றொரு நாள் உஹத்தில் மரணமடைந்த ஷஹீத்களுக்கு பிரார்த்தனை செய்ய சென்ற போது கட்டுப்படுத்த முடியாமல் அழுகின்றார்கள் பெருமானார் (ஸல்). 'இறைத்தூதரே! ஏன் அழுகின்றீர்கள்?' என்று தோழர்கள் கேட்க, 'எனது சகோதரர்களை நினைத்து அழுகிறேன்' என்று கூறினார்கள். 'நாங்கள் தங்களது சகோதரர்கள் இல்லையா...?' என்று தோழர்கள் கேட்கவும், 'இல்லை, நீங்கள் எனது தோழர்கள். எனது சகோதரர்கள் எனக்குப் பின்னால் வருபவர்கள். என்னைப் பார்க்காமலேயே என் மீது ஈமான் கொண்டவர்கள்' என்று கூறி அழுதுள்ளார்கள் என்பதை அஹமது என்ற ஹதீஸ் தொகுப்பில் பார்க்கலாம். அந்த இரக்கத்தின் சிகரம் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தன்னோடு வாழ்ந்த மக்களை தோழர்கள் என்றும், தன்னை காணாத நம்மை சகோதரர்கள் என்றும் சொல்லி நமக்காக அழுதுள்ளார்கள். 

பத்ரு யுத்தம் பற்றி நாம் அனைவரும் தெரிந்திருந்தாலும் ஒவ்வொரு முஸ்லீமும் பத்ரு போரின் நிகழ்வுகள் அனைத்தையும் ஞாபகப்படுத்துவதன் மூலம் நம்முடைய தக்வாவை நிச்சயம் அதிகரிக்கும். எம்பெருமானார் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்கள் காலத்தில் தாமே சென்று செய்த யுத்தங்களில் மிக முக்கியமானது பத்ரு யுத்தமாகும். இதுவே இஸ்லாத்தின் வெற்றிக்கும் ,இஸ்லாம் அழிக்கப்படாமல் பரவுவதற்கும், முன்னேற்றத்திற்கும் மக்களின் ஊக்கத்திற்கும் வீரத்திற்கும் வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பத்ருப் போர் நடைபெறப்போகும் அந்த இரவு நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் அழுது துஆ செய்தார்கள். யா அல்லாஹ் இந்த போரில் நாங்கள் தோற்றால் உன்னை இந்த பூமியில் வணங்க ஆள் இருக்காது, ஆகவே எங்களுக்கு வெற்றியைத் தருவாயாக என்று தன்னுடைய மேல் ஆடை கீழே விழுவது கூட தெரியாமல் அழுது அழுது துஆ செய்தார்கள். பின்னர் அபூபக்கர்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் “அல்லாஹ் நம்மை கைவிட மாட்டான் யா ரசூலுல்லாஹ் உங்கள் அழுகையை நிறுத்துங்கள்” என்று ஆறுதல் கூறினார்கள் அல்லாஹ் நபி(ஸல்) அவர்களின் பிரார்த்தனையை ஏற்று வாக்குறுதி கொடுத்து மிகப்பெரிய வெற்றியையும் பத்ரில் தந்தான் என்ற வரலாற்று செய்தியை புகாரியில் நாம் காணலாம்.

அந்த பத்ருக்களத்தில் நபி(ஸல்) அவர்கள் அழுது அழுது செய்த பிரார்த்தனையால் இன்று இறைவனை மட்டுமே வணங்கும் கண்ணியமான மக்களாக வாழ்ந்துவருகிறோம் என்பதை நாம் உணரலாம்.

தம்மோடு வாழ்ந்த மக்களை நேசித்துள்ளார்கள், அவர்களின்  இறந்த பின்பு அவர்களின் மைய்யவாடிக்கெல்லாம் சென்று பிரார்த்தனை செய்தார்கள், தன்னை பார்க்காத மக்களை இறக்கத்துடன் சகோதர பாசத்துடன் நேசித்துள்ளார்கள், தம்முடைய அனைத்து உம்மத்துகளையும் நேசித்து மறுமையின் வேதனையிலிருந்து அனைவரையும் காக்க, அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை செய்து அழுதிருக்கிறார்கள் என்பதை இது போல் பல ஹதீஸ்களின் மூலம் அறியலாம்.

இது போன்று ஓராயிரம் நிகழ்வுகளைக் கூறிக்கொண்டே செல்லலாம். அத்தனையும் அந்த உத்தம நபி முஹம்மது (ஸல்) அவர்கள் நம் மீது கொண்ட அன்பின் வெளிப்பாடுகளே....! அந்த அன்பின் உச்சநிலை தான் மேலே கூறப்பட்ட அண்ணலாரின் அழுகையும், என் உம்மத்...என் உம்மத்...என்ற இறைஞ்சுதலும்.

நம்மீது அளவிலா பாசம் வைத்த அண்ணல் நபி(ஸல்) அவர்களுக்காக நாம் என்ன கைமாறு செய்யப் போகிறோம்?

24 மணிநேரம் இருக்கும் ஒரு நாளில் 1 நிமிடமாவது அண்ணல் நபி(ஸல்) அவர்கள், அவர்களின் உம்மத்தான நம்மேல் எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்கள் என்பதை நினைத்து அழுதிருக்கிறோமா அவர்களுக்காக தொழுகையில் கேட்கும் துஆ தவிர்த்து, பிற நேரங்களில் பிரார்த்தனை செய்திருக்கிறோமா?

அண்ணல் எங்கள் ஆருயிர் நபி(ஸல்) அவர்கள், அனைத்துத் துறைகளிலும் அவர்களே எங்களுக்கு முன்மாதிரி என்று வாய் வார்த்தைகளால் மட்டும் கூறி, அரசியல் வியாபாரம், கொடுக்கல் வாங்கல் என இன்னபிற துறைகளில் வேறு யாரையோ பின்பற்றுகிறோமே... அவர்களுக்கு நாம் செய்யும் கைமாறு இதுதானா...?

உறுதி மொழி:

நம்மீது இரக்கம் கொண்ட அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி(ஸல்) அவர்களை வெறும் வாயளலவில் நேசிக்காமல், மனதார நேசிப்போம். அவர்கள் இஸ்லாத்திற்காக செய்த தியாகங்களை நினைத்து கண்ணீர் சிந்துவோம். அவர்கள் காட்டித் தந்த வழியை மட்டுமே பின்பற்றுவோம். அவர்களுக்காக ஐவேளையை தொழுகைக்கான பாங்குக்கு பிறகு வசீலா என்ற உயர்ந்த அந்தஸ்தை எங்கள் தலைவர் முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு வழங்கு என்ற பாங்கு துஆவை ஓதுவோம்.
தொடரும் இன்ஷா அல்லாஹ் !
M.தாஜுதீன்

நேற்று! இன்று ! நாளை?- 2 15

அதிரைநிருபர் பதிப்பகம் | May 28, 2013 | , , , , , , , ,


கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்களைப் போன்ற ஒரு தலைவர் தமிழ்மண்ணில் பிறந்தது நம் கண் முன்னே வாழ்ந்து மறைந்த காட்சிகளைக் காண நாம் பாக்கியம் செய்தவர்கள். இன்றைய இளைய சமுதாயத்தினர் நம்பி பின் தொடர்ந்து போகும் பல மாறுபட்ட இயக்கங்களின் தலைவர்கள் இத்தகைய தகுதிகளைப் பெற்று இருப்பார்களா என்பது பெரும் சந்தேகத்துக்குரியது. காயிதே மில்லத் அவர்களைப் பற்றி இன்னும் இரண்டொரு செய்திகளை சுட்டிக் காட்டிவிட்டு தொடர எண்ணுகிறேன். 


காயிதே மில்லத் அவர்களின் புகழுக்கு மணிமகுடம் வைப்பது அரசியல் நிர்ணய சபையில் அவர் ஆற்றிய உரை. ஒரு தமிழனாக தனது தாய்மொழியாம் தமிழ்தான் இந்த நாட்டின் ஆட்சிமொழியாக வேண்டுமென்று துணிச்சலாக வாதாடிய வரலாறு அவருக்குண்டு. இறுதியில்  அவர் கருத்து வாக்கெடுப்புக்கு விடப் பட்டபோது இராஜேந்திர பிரசாத் போட்ட ஒரே  ஒரு ஓட்டின் வித்தியாசத்தால் தமிழ் ஆட்சி மொழி அந்தஸ்து பெறும்  முயற்சி தோல்வியடைந்தது. இல்லாவிட்டால் ஜிஸ் தேச மே கங்கா பஹ்திகே என்று பாடம் இருக்காது. இந்நாட்டில் காவிரி ஓடுகிறது என்றே பாடம் படிக்கப் பட்டுக் கொண்டு  இருக்கும். 

நாடு இரண்டாக உடைந்ததற்குக் காரணம் யார்? ஜின்னாவா? நேருவா? நடுநிலையாளர்கள் அறிவார்கள். விடுதலை பெற தயாராகிக் கொண்டிருந்த  இந்தியாவில் ஜின்னாவிற்கு குடியரசுத் தலைவர் பதவி கொடுத்து விடுங்கள். நாடு உடையாமல் காப்பாற்றுங்கள் என காந்தியார் முன்வைத்த கடைசி நேர சமரசத்தை நிராகரித்தது யார்? சகாக்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் எனச் சாக்குச் சொல்லி, கடைசி நேர வாய்ப்பையும் கைகழுவி, இந்தியா இரண்டாக உடையக் காரணமாக இருந்தது நேருபிரான் அல்லவா? 

நேரு அரசியலில் தனது போட்டியாளர்களாகக் கருதியது இருவரைத்தான். ஒருவர் நேதாஜி. மற்றவர் ஜின்னா. ஒன்று நேருவுக்கு தலைவலி. மற்றது திருகுவலி. இந்தியா விடுதலைப் பெறப் போகிறது. நேதாஜி இனி இந்தியாவுக்குத் திரும்பப் போவதில்லை. ஜின்னாவுக்கு குடியரசுத் தலைவர் பதவி கொடுத்து இந்தியா உடையாமல் காப்பாற்றலாம். ஆனால் தனது திருகுவலி நிரந்தரமாகிவிடும். சிறந்த சட்ட மேதையான ஜின்னா அரசியல் அமைப்புச் சட்டத்தில் குடியரசுத் தலைவர் பதவியை செயல் அதிகாரமுள்ள பதவியாக்குவதில் வெற்றி பெற்றுவிட்டால்? தட்டிக் கேட்பார். யாருமின்றி இந்தியாவைத் தன்னால் ஆள முடியாதே? நேருவின் இந்த சர்வாதிகார மனோபாவத்தால்தான் நாடு பிளவுண்டது. பழி ஓரிடம், பாவம் ஓரிடம் என்பதைப் போல இந்தியாவில் எஞ்சி நின்ற நான்கு கோடி முஸ்லிம்களும்தான் பிரிவினைக்கு காரணமானவர்கள் என்று அவர்கள் காங்கிரசாரால் தூற்றப்பட்டார்கள்.

இந்தச் சூழலில்தான் 1948ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 மற்றும் 14 ஆகிய இரு நாட்களில், பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் அகில இந்திய முஸ்லிம் லீக் கவுன்சிலின் கடைசிக் கூட்டம் நடைபெற்றது. 1906 ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சிக் கவுன்சிலின் கடைசிக் கூட்டம் அது. இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகளாக இந்தியா பிரிந்துவிட்ட நிலையில் கட்சியைக் கலைத்து விடுவதற்காகக் கூடிய கூட்டம் அது.

கூட்டத்தில் எடுத்த முடிவுகளின்படி கட்சி இரண்டாகப் பிரிக்கப்பட்டது. பாகிஸ்தானுக்கு ஒரு பொறுப்பாளரும், இந்தியாவுக்கு ஒரு பொறுப்பாளரும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இரு பொறுப்பாளர்களும் அவரவர் நாட்டில் மூன்று மாதங்களுக்குள்ளாக கட்சிக் கூட்டத்தைக் கூட்டி எதிர்கால நடவடிக்கைகளைத் தீர்மானித்துக் கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது. பாகிஸ்தான் பொறுப்பாளராக லியாகத் அலிகான் அவர்களும், இந்தியாவுக்கான பொறுப்பாளராக நமது கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

இந்தியாவில் உள்ள நான்கு கோடி முஸ்லிம்களைப் பாதுகாக்கின்ற பெரும் பொறுப்பு ஒரு தமிழனின் தோள்களில், நம் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் தோள்களில் அன்று கராச்சியில் சுமத்தப்பட்டது.

நமது காயிதே மில்லத் இந்திய முஸ்லிம்களைக் காப்பாற்றும் பணியை, அன்றே, கராச்சியிலேயே தொடங்கிவிட்டார். எவ்வாறு?

கூட்டம் முடிந்ததும் பாகிஸ்தான் பிரதமர் அனைவருக்கும் ஒரு விருந்தளித்தார். விருந்தின் முடிவில் லியாகத் அலிகான் காயிதே மில்லத்திடம் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு என்ன பிரச்சினை என்றாலும், என்ன உதவி என்றாலும் நாங்கள் செய்யத் தயார் என்றார். அப்போது தெள்ளத் தெளிவாக, ஆணித்தரமாக காயிதே மில்லத் சொன்னார்,

“நீங்கள் ஒரு நாட்டினர். நாங்கள் வேறு நாட்டினர். எங்கள் நாட்டு முஸ்லிம்களின் நன்மை தீமைகளை நாங்களே பார்த்துக் கொள்வோம். அதில் நீங்கள் தலையிட வேண்டியதில்லை. எங்கள் நாட்டு முஸ்லிம்களுக்கு நீங்கள் ஏதேனும் நன்மை செய்ய விரும்பினால், உங்கள் நாட்டிலுள்ள சிறுபான்மையினருக்கு (இந்து, சீக்கியர், கிறித்துவர்) ஒரு துயரமும் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதுபோதும்!” எவ்வளவு ஆழமும், அர்த்தமும் பொதிந்த வேண்டுகோள் அது!

இந்தியா திரும்பிய காயிதே மில்லத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைக் கூட்டினார். அதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அந்தச் சமயத்தில் முஸ்லிம் லீகைச் செத்த பாம்பு என வர்ணித்தார் நேரு. செத்த பாம்பை  எடுத்து ஆட்டிக் காட்டுகிறார் பேட்டை இஸ்மாயில் என காயிதே மில்லத் அவர்களைக் கேலி செய்தார்கள் காங்கிரசார். ஒரு படி மேலே போய், பிரிந்து போய்விட்ட பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியிடம், கோடிக்கணக்கில் பணமும் சொத்துக்களும் உள்ளன. இந்தியாவில் மீண்டும் முஸ்லிம் லீக் கட்சியைத் தொடங்கி நடத்தினால் கோடிக்கணக்கில் பணம் தருவதாக பாகிஸ்தானியர் சொன்னதாலேயே காசுக்கு ஆசைப்பட்டு காயிதே மில்லத் கட்சி தொடங்கியிருப்பதாக வல்லபாய் பட்டேல் குற்றம் சாட்டினார்.

அப்போது கவர்னர் ஜெனரலாய் இருந்த ராஜாஜி, காயிதே மில்லத்தை நேரில் அழைத்து, பாகிஸ்தான் முஸ்லிம் லீகிலிருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு சொத்துக்கள், பணப் பரிமாற்றம் ஏதேனும் செய்ய வேண்டியதிருந்தால் அதற்கு வேண்டிய உதவிகள் அனைத்தையும் தான் செய்வதாகக் கூறி பார்ப்பன ஆழம் பார்த்தார். வேற்று நாட்டிலிருந்து தங்கள் கட்சிக்கு எந்த உதவியும் தேவை இல்லை நாங்களே கட்சி நடத்திக் கொள்வோம் உங்கள் பருப்பை எங்களிடம் வேகவைக்கப் பார்க்காதீர்கள் என ராஜாஜியிடம் காயிதே மில்லத் தெரிவித்து விட்டார்.

நாடு என்று வரும்போது நான் முதலிலும் இந்தியன், கடைசியிலும் இந்தியன். மதம் என்று வரும்போது நான் முதலிலும் முஸ்லிம். கடைசியிலும் முஸ்லிம் என அலி சகோதரர்களில் ஒருவர் கூறியதை, தனது ஒவ்வொரு நகர்விலும் நடைமுறைப்படுத்திக் காட்டினார் காயிதே மில்லத்.

அப்படிப்பட்ட கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்கள் அலங்கரித்த எதிர்க் கட்சித்தலைவர் பதவியின் நாற்காலியில்  இன்று யார் யார் பெயரோ  எழுதப்பட்டு அமர ஆள் இல்லாமல் அல்லது அமரும் ஆள் வந்து அமராமல் அல்லது வரவிடாமல்  ஒட்டடை படிந்து கிடக்கிறது என்பது தமிழக சட்டமன்றத்தின் அழுக்குப் படிந்த வரலாறு.

அண்ணா அவர்கள் முதல்வராக இருந்தபோது , சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவரான திரு. பி.ஜி. கருத்திருமன் என்பவர் எதிர்க் கட்சித் தலைவராக இருந்து அந்தப் பதவியை அலங்கரித்தார்.  காங்கிரஸ் கட்சியின் சார்பில் திரு. விநாயகம் என்கிற உறுப்பினரும் , சுதந்திரா கட்சியைச் சேர்ந்த டாக்டர் ஹண்டே அவர்களும் இருந்து நடைபெற்ற சட்டமன்றக் கூட்டங்கள் ஒவ்வொன்றும் கருத்துச்செரிவும் கண்ணியமும் காத்தவை. சட்டமன்றத்தின் பொற்காலம் என்று இதைக் கூறலாம்.

திரு. விநாயகம் அவர்கள் கேள்வி கேட்பதில் வித்தகர். முதல்வர் அண்ணா அழகாக பதில் சொல்வார். ஒருமுறை தொடர்ந்து விநாயகம் கேள்விகள் கேட்ட போது எரிச்சலுற்ற ஆளும் கட்சி உறுப்பினர் விநாயகம் அவர்களைப் பார்த்து, “இப்படியே எவ்வளவு கேள்விகள் கேட்பீர்கள்?” என்று கோபமாக கேட்டார். அண்ணா அமைதியுடன் எழுந்து “ அவர் கேட்கட்டும் இன்னும் கேட்கட்டும் அவர் பெயரிலேயே வினா இருப்பதால் அப்படித்தான் கேட்பார்” என்று கூறினார்.  சட்டமன்றத்தில் வங்கக் கடலின் அலைகள் சிரிப்பொலிகளாக எழுந்தன. ஒரு இலக்கிய மன்றத்தின் கூட்டம் நடைபெறுவதுபோல் சட்டமன்றக் கூட்டங்கள் நடக்கும்.  இன்றோ சட்டமன்றம் வசவுகளின் மன்றமாகிவிட்டது. 

அதே திரு. விநாயகம் அவர்கள் அண்ணா சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கையின் விமர்சனத்தில் பேசும்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருப்பதால் திமுக ஆட்சியைக் கலைத்துவிடுவோம் என்கிற தோரணையில் “ YOUR DAYS ARE NUMBERED “ என்று கூறினார். ஆனால் அண்ணா அமைதியுடன் “ NO! OUR STEPS ARE MEASURED” என்று பதில் அளித்தார். “ உங்களின் நாட்கள் எண்ணப் படுகின்றன “ என்று சொல்லிய  வினாயகத்துக்கு, “ நான் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் அளக்கப் படுகிறது “ என்ற அற்புதமான பதிலை அளித்தார். 

இந்நிகழ்ச்சி நடைபெற்று கொஞ்ச காலத்துக்குள் அண்ணா கடும் நோய்வாய்ப் பட்டார். இறந்தும் போனார். இறுதி அஞ்சலியில் தன் முகத்தை அண்ணாவின்  கால்களுக்கு இடையே பதித்துக் கொண்டு விநாயகம் கதறி அழுதார். உங்களின் நாட்கள் எண்ணப் படுகின்றன என்று தான் கூறியது அரம் பாடியதாக ஆகிவிட்டதோ என்று கதறினார். இங்கு பதிய வேண்டிய இன்னொரு தகவல் விநாயகமும் அண்ணாவும்         பச்சையப்பன் கல்லூரியில் ஒன்றாகப் படித்த கல்லூரித் தோழர்கள் என்பதாகும். இது அன்றைய அரசியல் நாகரீகம். இன்று இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் எதிர்க் கட்சியினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் இறப்பைக்  கொண்டாடுவார்கள். 

அண்ணாவின் ஆட்சிகாலத்தில் உணவுக்குப் புளித் தட்டுப்பாடு ஏற்பட்டது. அன்று புலிப் பிரச்னைகள் இந்த அளவுக்குக் கிடையாது. புளிப் பிரச்னைதான்.  மிகக் கூடுதலான விலைக்குக் கூட தமிழகத்தில் புளி கிடைக்கவில்லை. அந்த நேரம் காங்கிரசின் ஆட்சியில் இருந்த கர்நாடகத்தின்  மைசூர் பகுதிகளில் புளி ஏகபோகமாக விளைந்து இருந்தது. முதல்வரும் எதிர்க் கட்சித்தலைவரும் கலந்து பேசி மைசூரில் இருந்து மத்திய அரசு மூலம் தமிழகத்துக்கு தட்டுப் பாடு இன்றி புளி கொண்டுவர உதவினர். புளிப் பஞ்சம் நீங்கியது. இதுபற்றி ஒரு முறை சட்டமன்றத்தில் விவாதம் நடைபெற்ற போது திரு. பி.ஜி. கருத்திருமன் எழுந்து , “ புளிப் பிரச்னை யாரால் தீர்க்கப் பட்டது ?” என்று மிகவும் மிதப்பாகக் கேட்டார். உடனே அண்ணா எழுந்து    “ புளிப் பிரச்னை தீர்ந்தது புளிய மரத்தின்  உதவியால் “ என்றார். சட்டமன்றத்தில் சிரிப்பலைகள். கருத்திருமனும் நன்றாக சிரித்துவிட்டார். இப்போது போல் யாரும் மேசைகளைத் தட்டவில்லை. அப்போது இருந்த இதுபோல் அரசியல் நாகரிகம் இப்போது உண்டா?
இன்ஷா அல்லாஹ் இன்னும் சொல்லலாம். 
முத்துப் பேட்டை P. பகுருதீன் B.Sc; 

அதிரைத் திருமணங்களில் கொல்லைப்புற தட்சணைகள் !? 66

அதிரைநிருபர் பதிப்பகம் | May 27, 2013 | , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

கடந்த ஒரு மாதமாக அதிரையிலும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களிலும் திருமண சீசன் என்பது எல்லோரும் அறிந்ததே. அதிரையில் திருமணம் களைகட்டுகிறது என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அதெப்படி அதிரை திருமணங்கள் களைக்கட்டுகிறது என்பதை இந்தப் பதிவில் கொஞ்சம் மற்றொரு கோணத்தில் பார்ப்போம்!

ஒரு காலத்தில் வசதியானவர்கள் வீட்டுத் திருமணத்தில் பூவந்தி போன்ற நார்ஸாவும், மார்க்கம் வலியுறுத்திய வலிமாவாக தேங்காய்ச் சோறுடன் / நெய்ச்சோறுடன் 5 கறி சாப்பாடு அல்லது ஆட்டு இறைச்சி பிரியாணியும் சொந்தங்களுக்கும், வறியவர்களுக்கும் விருந்தாக இருந்தது. பிறகு உண்மையில்லாத கவுரவத்தை தலையில் சுமந்து, வரதட்சணை மூலம் போலி வசதி வாய்புகளை பெற்று, அவற்றை மூலதனமாக வைத்து ஊராருக்கு பகட்டு காட்ட தங்களுடைய சக்திக்கு மீறிய திருமண வைபவங்களில் வரம்பு மீறி செலவழிக்க தொடங்கினார்கள் மேலும் பலர். 

பின்னர் ஏகத்துவ பிரச்சார எழுச்சியால், பகிரங்கமாக வற்புறுத்தி வாங்கப்பட்ட வரதட்சணைகள் என்ற கேவலமான செயலை முஸ்லீம்களிடம் அழித்தெறிய அரும்பாடுபட்டு அதில் வெற்றியும் கண்டார்கள். ஆனால் நேரடியாக வரதட்சணை மூலம் கொள்ளையடித்த மணமகன் வீட்டார் வேறொரு வேடம் தரிக்க ஆரம்பித்து என் மகன் நஜாத்து, தவ்ஹீத் கொள்கைவாதி வரதட்சணைப் பணமா வாங்கினா ஏசுவான் என்று ஊராரிடம் பெருமையடிப்பது ஒரு புறமிருந்தாலும்,  கொல்லைப்புறம் வழியாக சீருசிராட்டு என்று வாங்க வேண்டியதை வாங்குவது வரதட்சணை என்ற கணக்கில் அது வராது என்று சொல்லி பண்ணுகிற அடாவடியும். இதுநாள் வரை குறைந்தபாடில்லை. அவைகளைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தால் நீண்டதொரு லிஸ்டே போடலாம். முன்கூட்டியே முடிவு செய்யப்படும் அந்த கைக்கூலியான வரதட்சணையே இந்த கொடுமைகளுக்கு தேவலாம் என்ற எண்ணத்திற்கு பெண் வீட்டார் தள்ளப்படுகிறார்கள். 

அப்படி என்னதான் நடைபெறுகிறது இதோ பின்வரும் தகவல்கள் ஓர் உண்மை(யான) காட்டு, மாறாக எந்தவொரு குடும்பத்தையும் இழிவுபடுத்த வேண்டும் என்ற துளியளவு எண்ணத்தில் இது பதிக்கப்படவில்லை. மார்க்க வரம்பு, நபிவழி, வீண் விரையம் செய்ய வேண்டாம், என்று ஊருக்கெல்லாம் உபதேசம் சொல்லுபவர்களே இதுபோன்ற காரியங்களுக்கு துணை போகிறார்கள் அல்லது கண்டும் காணாதவாறு உள்ளார்களே என்ற ஆதங்கத்தினாலே பதிக்கப்படுகிறது. இவ்வாறு சுட்டிக் காட்டப்படுபவைகள் ஏன் நமது வீடுகளில் கூட நடைபெற்றிருக்கலாம், இனி அவ்வாறு நடைபெறாமல் இருக்க நாம் துணிந்து போராட வேண்டும், அதற்காக வீட்டாரை தயார்படுத்த வேண்டும் இன்ஷா அல்லாஹ்.

களைகட்டும் அதிரை திருமணங்களில் உண்மையில் களைகட்டுகிறதா என்று பார்ப்போம்.
  • மணமகன் முதுநிலை பட்டதாரி, சென்னையில் வேலை செய்கிறான், திருமணத்திற்கு பின்பு வெளிநாட்டிற்கு போகப்போகிறான். தனக்கு மனைவியாக வரவேண்டியவள் படித்தவளாகவும் மார்க்க பற்றுள்ளவளாகவும், ஒழுக்கமுள்ளவளாகவும், அழகாகவும் இருக்க வேண்டும் என்பது அவனின் கண்டிசன்.
  • மணமகன் குடும்பம் நல்ல வசதியான குடும்பம், வரதட்சணை எல்லாம் நாங்க வாங்க மாட்டோம், வரதட்சணை வாங்குவது கேவலம் என்று ஒரு மெகா சீரியல் பிரச்சாரம் செய்யும் குடும்பம். எங்கள் வீட்டில் யாருக்கும் நாங்க வரதட்சணை வாங்கியதில்லை, இனியும் யாருக்கும் வாங்க மாட்டோம். சொந்த வீடு ஊரிலும், பிற ஊர்களில் நிலங்களும் உள்ளது.
  • மணமகள், இளநிலை பட்டதாரி, ஆலிமாவும் கூட.
  • மணமகள் குடும்பம், தாய் பள்ளிக்'கொடம்' தாண்டி பள்ளிகூடம் தாண்டாவர்கள் ஆனால் மூத்த மகளை நல்லவளாக வளர்த்து சாதனை படைக்க வைத்தார்கள். கூடப்பிறந்தது ஒரு தங்கை, ஒரு தம்பி அனைவரும் நன்றாக படிக்கிறார்கள். தந்தை 23 வருடமாக வெளிநாட்டில் வேலை பார்த்து, தன்னுடன் பிறந்த ஒரே காரணத்திற்காக (அதிரையின் விதிப்படி) தன் இரு சகோதரிமார்களுக்கும் தனி வீடுகட்டி கொடுத்து, மீதியை தனது மூத்த பிள்ளைக்கு மட்டும் தனி வீடு கட்டி வைத்திருக்கும் ஒரு நடுத்தர சராசரி வரு’மானமுள்ளவர்’. மகள் திருமணத்திற்கு பிறகு அடுத்த மகளுக்கு வீடுகட்ட வெளிநாடு சென்றால் தான் முடியும் என்ற எழுத்தப்படாத விதி வேறு உட்பிரிவாக இருக்கிறது. 46 வயதான தகப்பனுக்கு High-BP, அடிக்கடி வரும் ஒற்றை தலைவலி (migraine) என்பது வேதனையான அந்த வயதுக்கேற்ற medical qualifications. பயிற்சிமுறை உணவு உட்கொள்ளும் மருத்துவ ஆலோசனைகளைக் கடைபிடித்து தன்னுடைய நோயை குணப்படுத்தி வந்தவருக்கு, மகளின் திருமணத்திற்காக பணம் ஏற்பாடு செய்யும் டென்ஷனில் மீண்டும் ஆங்கில மருந்துகளுக்கு அடிமையாகி போனவர்களில் இவரும் ஒருவர். ஆனால் தன்னுடைய மகள் கண்கலங்காமல் வாழனும் என்பதற்காக திருமண வேலையில் சுறு சுறுப்பாக ஈடுபடுகிறார்.
என்று மணமக்கள் குடும்பங்கள் பற்றிய குறிப்புகள்.

இதோ வரதட்சணை வாங்காத மணமகன் வீட்டாரின் கொல்லைப்புற அடாவடித்தனங்களைப் பார்ப்போம்.

1. பெண் பார்க்க வருகிறார்கள், எப்படியும் குறைந்தது 50 பேர்களுடன்
வருபவர்களுக்கு டி, பிஸ்கட்டு, மிக்சரு, 10 சஹன் அல்வா, டீ பிடிக்காதவர்களுக்கு ரோஸ் மில்க். இவ்வாறாக 13,000 ரூபாய் மணமகள் வீட்டு செலவு.

2. பெண்ணைப் பிடித்திருக்கிறது என்று மாப்பிள்ளை வீட்டார் சொல்லி விட்டார்கள். அவங்க வரதட்சணைதான் வாங்கல, ஏதாச்சும் பண்ணிக்குடுக்க வேண்டாமா என்று 50 முர்தபாவும், கோழி பெரட்டலும், அனுப்பி வைக்கிறோம் என்று தூதுவர்கள் (இவர்களை பற்றி ஒரு தொடரே எழுதும் அளவுக்கு தூதுச் செய்திகள் இருக்கிறது) மூலம் மணமகன் வீட்டிற்கு சொல்லியனுப்பியாச்சு. 

வரதட்சணை வாங்காத அந்த புண்ணியக் குடும்பத்தில் உள்ள பெரிய மனுசியொருவர், சீர் செய்தியோடு வந்த தூதுவரிடம் “நாங்க பெரிய பிச்சளம் 50 முர்தபாவுலாம் பத்தாது, 200 முர்தபா அனுப்ப சொல்லுவுள” என்று சொல்லிவிட. அதுவும் ரெடியாகி அடுத்த நாளே மணமகன் இல்லத்திற்கு அவர்கள் கேட்ட 200 முர்தபா, கோழி பெரட்டல் அனுப்படுகிறது. 

இப்படி கொஞ்சம் கொஞ்சமா சீருசீராட்டுகள் நடைபெறுவதைக் அங்கொன்றும் இன்கொன்றும் கண்ட மணமகன், “ஏம்மா இதெல்லாம் வாங்குறீங்க, மார்க்கத்துல கூடாதும்மா” என்று கேட்க. “இல்ல வாப்பா நாமலா கேட்கல, எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறாங்க, வானா வானாங்க அனுப்புறாங்கம்மா. நாமலா கேட்டு வாங்கினாத்தானே பாவம், அவர்களா தந்தா அது தப்பில்லை வாப்பா” என்று சொல்லி மணமகனின் வாயை பஞ்சு வைத்து அடைக்கப்பட்டாகி விட்டது.

தன் குடும்பம் இது வரை மணமகள் வீட்டாரிடம் வாங்கிச் சாப்பிட்ட பிறகு, அந்த நிலையிலாவது மணமகன் வீட்டார் வாங்கியவைகளை திருப்பி கொடுத்தால்தான் நான் கல்யணம் செய்து கொள்வேன் என்று சொல்ல அந்த மணமகனை திடமற்றவனாக மாற்றி விடுகிறது குடும்ப கவுரவமும், தாய் பாசமும். ஆக 40,000/- மணமகள் வீட்டு செலவு.

3. திருமண கூப்பாட்டில் மணமகள் வீட்டார், மணமகனின் மாமாவையோ அல்லது சாச்சாவையோ அல்லது பேசிமுடித்துக் கொடுத்த மாமியையோ ஞாபக மறதியால் கூப்பிட தவறிய அந்த செய்தி மாப்பிள்ளையின் உம்மாவுக்கு தெரிய வந்தால், அவ்வளவுதான் மிகப்பெரிய வார்த்தைப் போர் ஆரம்பமாகிவிடும். இது ஒன்னு போதும் தலைமுறை தலைமுறையாக குறை சொல்ல. சரி மறந்துவிட்டோம் என்று, திருமணத்திற்கு ஒரு நாளைக்கு முன்பு திரும்பப் போய் அந்த மனுசனை / மனுசியை கூப்பிட போனால், உலக கவுரவக்காரர்களின் சங்கத் தலைவர் போல் இருந்து கொண்டு வறட்டு பிடிவாதத்தோடு செய்யும் சாட்டித்தனத்தால், மணமகளில் தந்தைக்கு இருக்கும் BP வியாதியை, இருதய நோயாகும் நிலைக்கு கொண்டு செல்லும் அளவுக்கு கூப்பிட மறந்த உறவுக்காரர்கள், மணமகள் குடும்பத்தை அலைக்கழிப்பார்கள்.

4. “இன்று இரவு 8 மணிக்கு செப்பு சாமான்களோடு, மணமகளுக்கு முகம் துடைக்க வருகிறோம், என்று சொல்லி நாங்க 50 பேர் வருகிறோம், 100 முர்தபா, கோழி, கடப்பாசி செய்து வைங்க, கடைல வாங்க வேண்டாம், வூட்ல பண்ணுங்க” என்று பகல் 3 மணிக்கு தூதுவர் மூலம் செய்தி அனுப்பப்படுகிறது. “உம்மாடியோவ் திடீர் என்று சொல்லியனுப்பிட்டாகலே, இது பெரிய குடும்பம்லே, வரதட்சணை வாங்காதவோ, புதுசா கேட்டுப்புட்டாஹலே” என்று மணமகள் வீட்டார், அடுத்த நாள் காலை ‘பசியார’வுக்காக தயாரித்து வைத்திருந்த பெருட்களை அரக்கப்பரக்க தயாரித்து, ஒரு வழியாக கேட்ட உணவு வகைகள் ரெடி. முகம் துடைத்து, சாப்பாடு சாப்பிட்டார்கள், அந்த நேரத்தில் மாப்பிள்ளையோட மாமிக்காரி ஒருத்தி சாப்பாட்டில் கோழி வெந்து கரைஞ்சு போச்சு என்று பெண் வீட்டாரிடம் பிரச்சினை பண்ணி, சந்தோசமாக இருக்க வேண்டிய அந்த இரவில் பெண்ணை பெற்றவர்களுக்கு பக் பக் என்று விடியும் வரை ஈரக்கொலையில் ஒரே படபடப்புதான். அன்றைய இரவு திடீர் விருந்தின் செலவு 20,000 ருபாய்.

5. பொதுவாக திருமண தினத்தில் நார்ஸா மணமகள் வீடு தான் கொடுப்பது வழக்கமாக உள்ளது. பெண் வீட்டின் வசதிக்கு தகுந்தாற் போல் பிஸ்கட், தம்ரூட், பூவந்தி என்று கொடுப்பார்கள். இதன் பின்னனி நிறைய பேர்களுக்கு தெரியாது. நிறைய வீடுகளில் வரதட்சணை வாங்க மாட்டோம் என்று சொல்லும் மணமகன் வீட்டார் தான் முடிவு செய்கிறார்கள். என்ன நார்சா மணமகள் வீட்டார் கொடுக்க வேண்டும் என்று. அந்த நார்ஸா எவ்வளவு விலையானாலும் பெண் வீட்டார் தான் வாங்க வேண்டும். இந்த கொடுமை வரதட்சணை வாங்கவில்லை என்று மார்தட்டிக் கொள்ளும் மாப்பிள்ளை வீட்டாரால் நடத்தப்படுகிறது. நார்சாவுக்கு என்று 5,000 ரூபாய் பட்ஜெட் என்று எண்ணிய பெண்ணின் தந்தைக்கு மேலும் 45,000 ரூபாய் கூடுதல் செலவு.

6. வரதட்சணை தான் நாங்க வாங்கவில்லை, காலை பசியார 100 சஹன் தாருங்கள் என்று கேட்டு வாங்கிய பின்பும், சாப்பாடு பற்றாக்குறை என்று சொல்லி மீண்டும் மணமகள் வீட்டாரிடம் இன்னும் 25 சஹன் அனுப்புங்கள் என்று கல்யாண காலைல கொடுக்குற இனிமா இருக்கிறதே. அல்லாஹு அக்பர். மாப்பிளை வீட்டுக்கு காலை பசியார செலவு: 1,25,000/- ரூபாய்.

7. திருமணம் முடிந்த நாள் முதல் குறைந்த பட்சம் 3 நாட்களுக்காவது, மாப்பிள்ளையுடன், மணமகள் வீட்டிற்கு காலை பகல் இரவு என்றும் அதனைத் தொடர்ந்து திருமணநாள் வர இயலாதவர்கள் லிஸ்ட் என்று ஒன்று போட்டு அவர்களுக்கு சாப்பாடு என்று எகிறும் செலவினங்களை நினைத்தால் கண்ணை கட்டும். உம்மாடி இந்த குடும்பத்திலையா நாம சம்பந்தம் கலந்தோம் என்று பெருமூச்சுவிட வைக்கும் பெண்ணை பெத்தவர்களுக்கு. மணமகள் இல்லத்தில் அந்த 3 நாட்களுக்கு ஏற்படும் செலவு ரூ 50,000/-.


இப்படி கொல்லைப்புறத்து வரதட்சணை லிஸ்ட்டை சொல்லிக் கொண்டே போகலாம். மேலே சொல்லப்பட்டவைகளில் சில நாம் சந்தித்திருக்கலாம், ஆனால் அத்தனையும் ஊரில் நடைபெறுகிறது, மேலும் நிறைய கொல்லப்புர வரதட்சணை கொடுமைகள் நடைபெறுகிறது.

மேலே சொல்லப்பட்டவைகளில் இருந்து கணக்கிட்டு மொத்தம் பார்த்தால், 2,98,000/- ரூபாய் தெருவாசல் வழியாக வரதட்சணை வாங்காத திருமணத்திற்கு கொல்லைப்புறத்தில் கொடுக்கப்பட்ட வரதட்சணைக்கு ஏற்பட்ட செலவும் (இவைகள் தோராய பட்ஜெட்).

வரதட்சணை வாங்காத தவ்ஹீத் மாப்பிள்ளை, தப்லீக் மாப்பிள்ளை என்று வெளிப்புறத்தில் ஒரு தோற்றம், சீர் சீராட்டு, பசியாற, முகம் துடைப்பு சாப்பாடு, பெண் பார்த்தல் உணவு என்று மறைமுகமாக வரதட்சணை வாங்கப்படுவதை கண்டு கொள்ளாமல் இருப்பது மற்றொரு புறம். இது தான் நபி வழியா? இதற்கெல்லாம் எங்கே ஆதாரம் உள்ளது?

இவைகள் திருமணம் விருந்து உபசரிப்பு என்று நமக்கு மேலோட்டமாக தெரிந்தாலும், வெளித்தோற்றத்தில் நடைபெறும் ஒவ்வொரு திருமண தினத்திலும் பெண்ணை பெற்றவர்கள் சந்தோசமாக இருப்பது போல் தெரிந்தாலும், அந்த திருமண நிகழ்வுக்கு பின்னால் நாம் மேற்சொன்ன மணமகன் வீட்டாரின் அடாவடிகளால் பொருளாதார ரீதியாகவும் உளரீதியகவும் பாதிக்கப்பட்ட பெண்ணை பெற்றவர்களின் சோகக்கதைகள் எண்ணிலடங்காதவை. பெண் பிள்ளை திருமணத்திற்கு பின்பு சந்தோசமாக இருந்தாலும், பேரக்குழந்தைகள் கிடைத்தாலும், தட்டுத் தடுமாரிய தருணங்களில் திருமண நேரத்தில் மணமகன் வீட்டார் செய்தவைகள் மறக்க முடியாத நிகழ்வாகவே நிலைத்து விடுகிறது.

இங்கு குறிப்பிட்டது அல்லாமல், இன்னும் 'சீர்'கேடுகளும் இருக்கத்தான் செய்கிறது, பின்னூட்த்தில் பகிர்ந்து கொள்ளுங்கள். இவைகள் அனைத்தும் படிப்பினை பெறுவதற்கே அன்றி வேறில்லை !

இது போன்ற வரதட்சணைகள், சீர்களை அறவே புறந்தள்ளிவிட்டு மிகவும் எளிமையாக, செலவுகள் குறைவாகவும், வீண் விரையம் இன்றியும் திருமணங்களும் நமதூரில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.

சீர் என்று மாற்று பெயரில் இருக்கும் இந்த வரதட்சணை நம் சமூகத்திலிருந்து தூக்கி எறியப்பட வேண்டும். பெண் வீட்டார் இவ்விசயத்தில் இனி கண்டிப்புடன் இருக்க வேண்டும்.

அன்பளிப்புகளை பரிமாறிக் கொள்ளுங்கள் அது உங்களுக்கிடையே அன்பை வளர்க்கும் - நபிமொழி, ஆனால் கேட்டுப் பெறுவதற்கு அன்பளிப்பு என்ற ஒரு போர்வை நபிவழியல்ல, அது யாசகம் !

நபிவழிக்கு புறம்பான இத்தீய காரியமான சீர்களுக்கு நாம் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரவுகள் அளித்து வந்திருந்தால், அல்லாஹ்விடம் தவ்பா செய்வோமாக. இது போன்ற பாவங்களிலிருந்து நம்மை அல்லாஹ் பாதுகாப்பானாக. ஆமீன்.

அதிரைநிருபர் பதிப்பகம்

அசத்தும் அதிரை மொழிகள் ஆராய்ச்சி தொடர்கிறது ! 67

அதிரைநிருபர் பதிப்பகம் | May 26, 2013 | , , , ,



அதிரை மொழிக்கே ஆங்கிலத்தில் அகராதி போட்டவர்கள் (MSMn) நம்மவர்கள், ஆங்கிலமே எழுதுபவர்களோடும் அகராதி(யில்) பேசுபவர்களும் நாம்மவர்கள்தான்.

எந்த ஒரு மனிதனுக்கும் தனது மண்ணின் மொழி மீது ஒரு மயக்கம் உண்டு. காதல் உண்டு. பசுமரத்து ஆணி பதிவது போல் மனத்தின் அடித்தளத்தில் பதிவதே மண்ணின் மொழி. உலகம் சுற்றி வந்தவர்கலானாலும் தனது சொந்த ஊருக்கு வந்து தன் மக்களோடு தன் இயல் மொழியில் பேசும் மொழியில் கிடைக்கும் ஒரு அன்னோனியம் சுகம் இதை  உணர்ந்தவர்களால் மட்டுமே உணர்த்தபபடக்கூடியது.

சமுதாய அமைப்பில் சபை நாகரீகம் என்ற பெயரில் இயல்பாகப் பழகிய மொழியின் வார்த்தைகளை மறைத்துப் பேசும் அனைத்து மொழிகளுமே தாய் மொழியில் பேசினாலும் அவை அந்நிய மொழியே. "உம்மாடி ஏல்லே" என்கிற வார்த்தையில் உள்ள ஹோம்லி உணர்வு அம்மா முடியவில்லை என்று சொல்வதில் கிடையாது. 

"அல்லாட காவ" என்று சொல்வதில் உள்ள இயல்பு அல்லாஹ் மாக் என்று சொல்வதில் உணர முடியாது.

பூக்கமலையை எடுத்து சோப்பிவிடுவேன் என்று கோபமாக சொல்லும் வார்த்தை கூட   உன்னை தொலைத்துவிடுவேன்  என்கிற கோபத்தில் உணர முடியாது. கோபமா இருந்தாலும் பாசமா இருந்தாலும் அதை நாம்மூர் பாசையில் வெளிக்கொட்டுவது என்பது ஒரு அலாதிதான் 

காரணம் மண்ணின் மனம், மண் வாசனை, என்பது கரிசல் காட்டிலே கூட ஒருவனை கடுதாசி போடவைத்ததாகும் . கடித்துப் பேசும் நெல்லைத்      தமிழையும் கனிவுடன் பேசும் கொங்கு தேச தமிழையும் வய வய கொய கொய என்று பேசும் சென்னைத்தமிழையும் அந்தந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்கள் தங்களின் மனதில் மாளிகை கட்டி வைத்திருக்கிறார்கள்.

அதுபோல் நம்ம ஊர் பாசையில் பேச்சு வழக்கில் இருந்து நினைவுக்கு வந்தவைகள் இங்கே பட்டியலாக விரிகிறது.

ஒரு 'அவயாசமயத்துக்கு' இவன் ஒதவமட்டேன்கிறான் 

இவனோட இம்முசு தாங்க முடியலமா 

மல பேஞ்சி 'தாவாரம்' வழியா தண்ணி ஊத்துது 

கலரி சோறு திண்டது ஒத்துகிடாமே ஒரே கொட பெறட்டா இருக்கு 

'சப்பாத்தை' மாட்டிக்கிட்டு பள்ளிகொடம் போடா 

இது எங்க வாப்புச்சா காலத்திலே இருந்து  எங்க ஊட்டுலே உள்ள 'சப்பரம்பெஞ்ச் கட்டுலு' 

என்ன சொன்னாலும் இவன் 'ஈட்டிக்கி மூட்டி' யா தான் செய்வான் 

பினாங்குலய்ருந்து 'பொட்டிபிசு மேத்துண்டு'  வரும் பாருங்க கமகன்னு மனத்துக்கிட்டு 

அப்போவுல்லாம் வெட்டிக்கொலத்து தண்ணி பளிங்கி மாதிரி கெடக்கும் இப்போவெல்லாம் எல்ல கொலத்து தண்ணியும் 'பிளாய்யா' கெடக்கு 

ரெங்கு பொட்டிலே பத்தாய் கைலி வச்சது வச்ச மாதிரியோ இருக்கு  

அப்போவெல்லாம் ஊட்டுக்கு ஊடு பத்தாயமும் ரெங்கு பெட்டியும் இருக்கும் 

இவன்டே அசந்து மசந்து கடன் வாங்கிறது  கூடாது கொதவலை சுருக்கு வஞ்சி திருப்பி கேப்பன் 

என்னதான் திட்டுனாலும் பேசுனாலும் சூடுசொரணை கெடையாது 

குதுராளி நெறையா நெல்லு கொட்டி வைக்க ஆசை 

ஒரு எடத்துலே இருக்காமே மக்க சக்கரத்துலே வர்றான் 

என்னா பசப்பு பசப்புறான் 

'ஆறு' வருசத்துக்கு அப்புறம் இப்பதாம்மா மசக்கையா இருக்கா 

வால்வாட்டி [                                               ]

ஆம்புலப்புள்ள குப்பற படுக்க கூடாது 

பொம்புலப்புல்ல மல்லாக்க படுக்க கூடாது 

என்ன கை மருந்து கொடுத்தாலும் ஒத்துக்க மாட்டேங்குது 

இவன் வூட்டுக்குள்ள நொழஞ்சா  வூட்டை அலங்கமலங்கா அடிப்பான்மா 

வூட்டுக்குல நொலைரப்பவே மொவரக்கட்டை சரி இல்லாம இருந்துச்சி 

ரூமுகுள்ள வச்ச சொவ்க்காரப்பொட்டி எங்க போனிசுன்னு தெரியலே 

பாசை படிக்கிறான்  [                                     ]

ஒன்னோட சங்கனாத்தமே வாணாம் 

பொரிக்கன்சட்டி  [                                     ]

காமாடு தலமாடு தெரியாம தூங்குறான் 

நேத்தையானம்னதும் அப்பம் தான் நினைவுக்கு வரும் 

பாலுஞ்சோறு காமாடு

ஒலமூடிய காணோம் 

காலுக்கு மோஜா போடாமே சப்பாத்து போடதே 

எங்கே போனாலும் பொறத்தாலே வந்துகிட்டே இருப்பா 

பிருமனை [                                              ]

முட்டாசு [                                               ]

குட்டிப் பாளையம் ஒரு எடத்துலே இருக்க மாட்டேங்குது பாளையம் 

என்ன வேலை சொன்னாலும் 'மாய்ச்ச' இல்லாமே பாப்பான் 

சாமத்துலே [                               ]

உப்புத் தக்கரு [                            ]

சீவன் செத்தவன் [                          ]

பின் குறிப்பு : கடைசியா அண்ணன் NAS அவர்கள் எங்களை அடிக்கடி திட்டும் அந்த ஸ்லோகனுடன் இன்னும் சில வார்த்தைகள் கிடைக்கும் போது தொகுத்துக் கொண்டு வருகின்றேன் 

ஹேர்பின் குறிப்பு : [              ] இப்படியிட்ட இடங்களில் என்ன பொருள் போடலாம் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் அல்லது கருத்துப் பெட்டியில் போட்டுவிடுங்கள் !

Sஹமீது

இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் - தொடர் - 17 20

அதிரைநிருபர் பதிப்பகம் | May 25, 2013 | ,



தொடர் : பதினேழு

இஸ்லாமிய பொருளாதாரத்தைத்  தாங்கி நிற்கும் தூண்கள். ( உழைப்பு க்குக் கூலி ) 

உழைப்பாளிகளை கண்ணியப்படுத்தி அவர்களை கௌரவப்படுத்தி அவர்களின் அடிப்படைப் பிரச்னைகளை முளையிலேயே கிள்ளி எறிந்து அவர் களின் உரிமைகளை 1400 ஆண்டுகளுக்கு முன்னாலேயே இஸ்லாம் வழங்கியிருக்கிறதென்றால் அது மிகைப்படுத்தப் பட்டதல்ல. இஸ்லாம் வழங்கும் மனிதாபிமானம் சார்ந்த பொருளாதார அடிப்படை   உரிமைகளும்  நபி(ஸல்)அவர்கள் வாழ்ந்து நடந்து கொண்ட விதமும் நடக்கச் சொல்லி போதித்த முறைகளும்  உலகெங்கும் கடைப் பிடிக்கப் பட்டால் தொழிலாளர் பிரச்சனைகள் தடுக்கப்பட்டு வளர்ச்சிப் பாதையில் உலகம் நடைபோடும் வகையில்  உற்பத்தி மேலோங்கும்.  

இதோ இறைமறையும் நபி மொழிகள் நமக்குத்தரும் சான்றுகள் இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம் என்று கடந்த வாரம் கண்டோம். இனி தொடர்ந்து இஸ்லாம் காட்டியும் கற்றும்  தரும் வழிமுறைகளைக் காணலாம்.  

“உங்களில் ஒருவரிடம் அவரின் பணியாள் அவரின் உணவைக்கொண்டு வந்தால், அவர் அப்பணியாளைத் தம்முடன் (அமர வைத்துக் கொள்ளட்டும். அவ்வாறு) அமர வைத்துக் கொள்ளவில்லையென்றாலும் அவருக்கு ‘ஒரு பிடி அல்லது இருபிடிகள்’ அல்லது ‘ஒரு கவளம் அல்லது இரண்டு கவளங்கள்’ உணவு கொடுக்கட்டும். ஏனெனில், அவர் (அதை சமைத்தபோது) அதன் வெப்பத்தையும் அதன் சிரமத்தையும் சகித்துக் கொண்டார்.” 

என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். புகாரி: 5460.

‘நான் அபூ தர்(ரலி)யை (மதீனாவிற்கு அரும்லுள்ள) ‘ரபதா’ என்ற இடத்தில்சந்தித்தேன். அப்போது அவரின் மீது ஒரு ஜோடி ஆடையும் (அவ்வாறே) அவரின் அடிமை மீது ஒரு ஜோடி ஆடையும் கிடப்பதைப் பார்த்தேன். நான் (ஆச்சரியமுற்றவனாக) அதைப் பற்றி அவரிடம் கேட்டதற்கு, ‘நான் (ஒருமுறை) ஒரு மனிதரை ஏசிவிட்டு அவரின் தாயையும் குறை கூறி விட்டேன். அப்போது நபியவர்கள் கூறினார்கள்: ‘அபூ தர், அவரையும் தாயையும் சேர்த்துக் குறை கூறி விட்டீரே! நீர் அறியாமைக் காலத்துப் பழக்கம் குடி கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர்! உங்களுடைய அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர். அல்லாஹ்தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கிறான். எனவே ஒருவரின் சகோதரர் அவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தால் அவர், தாம் உண்பதிலிருந்து அவருக்கும் புசிக்கக் கொடுக்கட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கும் உடுத்தக் கொடுக்கட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு அவர்களை நீங்கள் சிரமமான பணியில் ஈடுபடுத்தினால் நீங்கள் அவர்களுக்கு உதவியாயிருங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (இதனால்தான் நான் அணிவது போல் என் அடிமைக்கும் உடை அளித்தேன்” என அபூதர் கூறினார்” என மஃரூர் கூறினார். புகாரி: 30.

”மூவருக்கெதிராக கியாமத் நாளில் நான் வழக்குரைப்பேன்! என் பெயரால் சத்தியம் செய்து மோசடி செய்தவன், 

 சுதந்திரமானவனை (அடிமையாக) விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன் 

கூலிக்கு ஒருவரை அமர்த்தி, அவரிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன் (ஆகிய இவர்கள்தான் அந்த மூவர்)!” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். புகாரி: 2270.

ஒரு மனிதர் நபி(ஸல்)அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே நான் என்னுடைய பணியாளரிடம் அவர் (ஏதாவது தவறிழைத்துவிட்டால்) எத்தனை முறை மன்னிப்பை மேற்கொள்வது?என்று கேட்க நபியவர்கள் மௌனம் காத்தார்கள் பிறகு அம்மனிதர் மீண்டும் அதே போன்று கேட்க ஒவ்வொரு நாளும் எழுபது முறை மன்னிப்பை மேற்கொள்வீராக என்று நபியவர்கள் பதிலளித்தார்கள். திர்மிதீ: 1949.

ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் தம் துணைவியரில் ஒருவரிடம் இருந்து கொண்டிருந்தார்கள். இறைநம்பிக்கையாளர்களின் அன்னையரில் ஒருவரான நபியவர்களுடைய மற்றொரு துணைவியார் உணவுப் பண்டமுள்ள தட்டு ஒன்றை நபியவர்களுக்காகப் பணியாள் ஒருவரிடம் கொடுத்தனுப்பினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் எவருடைய வீட்டில் தங்கியிருந் தார்களோ அந்தத் துணைவியார் கோபமுற்று  அந்தப் பணியாளரின் கையைத் தட்டிவிட்டார். அந்தத் தட்டு கீழே விழுந்து உடைந்துவிட்டது. உடனே ஆத்திரப்படாமல் நபி(ஸல்) அவர்கள் அந்த உடைந்த தட்டின் துண்டுகளை பொறுமையாக ஒன்று சேர்த்தார்கள். பிறகு தட்டிலிருந்த உணவை (மீண்டும்) அதிலேயே ஒன்று சேர்க்கலானார்கள். மேலும், அங்கிருந்த தோழர்களை நோக்கி, ‘உங்கள் தாயார் ரோஷப்பட்டுவிட்டார்” என்று கூறினார்கள். பின்னர் அந்தப் பணியாளை அங்கேயே நிறுத்திவிட்டு தாமிருந்த வீட்டுக்கார துணைவியாரிடமிருந்து மற்றொரு தட்டைக்கொண்டு வரச் செய்து, உடைபட்ட தட்டுக் குரியவரிடம் நல்ல தட்டை மாற்றாகக் கொடுத்து அனுப்பிவிட்டார்கள். உடைந்த தட்டை உடைக்கப்பட்ட வீட்டிலேயே வைத்துவிட்டார்கள். என்று அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். புகாரி: 5225.

நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பத்து ஆண்டுகள் சேவகம் புரிந்தேன். (மனம் வேதனைப்படும்படி) என்னை ‘ச்சீ” என்றோ, ‘(இதை) ஏன் செய்தாய்” என்றோ, ‘நீ (இப்படிச்) செய்திருக்கக் கூடாதா?’ என்றோ அவர்கள் சொன்னதில்லை” என அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.  புகாரி: 6038.

“உங்களுடைய அடிமைகள் உங்களின் சகோதரர் களாவர். அல்லாஹ்தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கிறான். எனவே ஒருவரின் சகோதரர் அவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தால் அவர், தாம் உண்பதிலிருந்து அவருக்கும் புசிக்கக் கொடுக்கட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கும் உடுத்தக் கொடுக்கட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு அவர்களை நீங்கள் சிரமமான பணியில் ஈடுபடுத்தினால் நீங்கள் அவர்களுக்கு உதவியாயிருங்கள் ”  என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி: 30 .

கூலியாளின் வியர்வை உலருவதற்கு முன் அவருடைய கூலியைக் கொடுத்துவிடுங்கள் என்பதும்    தன் அடிமைகள் மீதும் பணியாட்கள் மீதும் தனது அதிகாரத்தைப் பிரயோகித்தவன் சுவனத்தில் நுழைய மாட்டான் என்கிற இந்த  பெருமானார்( ஸல்) மொழிந்த முத்துக்களும் உலகப் புகழ்பெற்றவை. 

இஸ்லாம் தோன்றி வளர்ந்த அரபு நாடுகளில் கூட  தொழிலாளர் உரிமைகள் மதிக்கப் படுகின்றனவா?   தொழிலாளரை சுரண்டி வாழ்வது நிறுத்தப் பட்டுவிட்டதா? ஆகிய கேள்விகளை நமக்குள் எழுப்பிப் பார்ப்போமானால் மனசாட்சியுடையோர் “ இல்லை” என்றே  தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு சொல்ல முடியும்.  இறைவனின் கட்டளைக்கு மாறுபாடு செய்யப்படுகிற பல கதைகளை நாம் கேட்டுவருகிறோம். ஒரு அரபி தன் கீழ் பலரை   வெளியில் வேலை செய்யவிட்டுவிட்டு அப்படி வியர்வை வடித்து  உழைப்போர் இடமிருந்து மாதாமாதம் கறக்கும் பணம் அவரை கொழிக்கவும் செழிக்கவும் வைக்கிறது.  உழைக்காதவருக்கு உண்ண உரிமையில்லை . ஆனால் அத்தகையோர் உண்ணும்  ஒவ்வொரு பருக்கைக்கும் அல்லாஹ்வுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். இன்று சவூதி அராபியாவில் பலர் கண்கலங்கி நிற்க காரணம் இந்த ப்ராக்சி முறைதான். இஸ்லாம் தழைத்த நாடுகளில் – தியாக சஹாபாக்கள் ஒட்டிய வயிற்றில் கல்லை உளமொப்பிக் கட்டிக் கொண்டு பட்டினி கிடந்தது வளர்த்த இஸ்லாத்தின் நிழலில் இருப்போர் இப்படி அத்து மீறுவது அழகல்ல. அல்லாஹ் பார்த்துக் கொண்டு இருக்கிறான் என்பதை இவர்கள் தொடர்ந்து மறந்து வருகிறார்கள்.  

மேலும் அரபு நாடுகளில் வீட்டு வேலைக்குப் போகும் “கத்தாமா” எனப்படுகிற வீட்டுவேலை செய்யும் பெண்கள் அல்லலுற்று ஆற்றாது அழும்  கண்ணீர் செல்வத்தை தேய்க்கும் படையாகப்   போய்விடுமோ என்பதே நம் அச்சம். கொடுத்தும் பார்க்கிற இறைவன் கெடுத்தும் பார்ப்பான். அல்லாஹ் இன்னும் அத்தைகையோருக்கு நல்வழி காட்டுவானாக. 

நவீன உலகில் தனியார் மயம், உலக மயம், தாராள மயம் ஆகியவை  ஏற்படுத்தி வரும் தாக்கங்கள் பல உலகப் பொருளாதாரத்தின் சீர்கேட்டிர்கான வாயில்களைத்  திறந்து விட்டிருக்கின்றன.   மீண்டும் உலகெங்கும் ஆட்  குறைப்பு, வேலைவாய்ப்பின்மை, சுரண்டல் ஆகியவை அரங்கேறத் தொடங்கி இருக்கின்றன.  அமெரிக்கர்களும்  யூதர்களும் கோலோச்சுகிற  உலக வங்கியின் கட்டளைகளை உலக நாடுகள் பின்பற்றத்தொடங்கியதும் உலகப் பொருளாதாரத்தில் சீரழிவுகளை உழைப்போருக்கெதிராகவும் அரங்கேற்றி விட்டன.  அனைத்து அழிவுப்பதைகளில் இருந்தும் இஸ்லாமே உலகைக் காப்பற்ற வேண்டும். 

தொடர்ந்து பார்க்கலாம் இன்ஷா அல்லாஹ். 
இபுராஹீம் அன்சாரி

யார் தீவிரவாதி ! - விவாதக்களம் 21

அதிரைநிருபர் பதிப்பகம் | May 24, 2013 | , ,



யார் திவிரவாதின்னு உலக மெகா(!!) இணைய அறிவாளியான விக்கிப்பீடியா கட்டற்ற கலைக் களஞ்சியம் அண்ணாத்தை சொல்றாரு "அல் காயிதா உறுப்பினர்கள்‎, தமிழீழ விடுதலைப் புலிகள்‎, நக்சலைட்டுகள்‎ மற்றும் இன்னும் பல"  இவய்ங்க அமைப்பிலுள்ளவங்கள்னு பகுத்தெடுத்து பாடம் நடத்துகிறது.

அந்த கட்டற்ற கலைக்களஞ்சியமான(!!??) விக்கிபீடியாவில் "பயங்கவராதம், தீவிரவாதம், அடிப்படைவாதம்" என்ற பதத்திற்கு இப்புடி சூட்டுறாய்ங்க:-

பயங்கரவாதம் (Terrorism) என்பது ஒரு மரபுசாராப் போர்முறையும், உளவியற் போர்முறையும் ஆகும். 

இச்சொல் அரசியலோடும் உணர்வுகளோடும் தொடர்புபட்டிருப்பதால் இதனைச் சரியாக வரையறுப்பது கடினமானது. 

1988 ஆம் ஆண்டில், ஐக்கிய அமெரிக்கப் படைத்துறை நடத்திய ஓர் ஆய்வின்படி பயங்கரவாதத்துக்கு நூற்றுக்கு மேற்பட்ட வரைவிலக்கணங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. 

பயங்கரவாதத்தில் ஈடுபடும் ஒருவர் "பயங்கரவாதி" எனப்படுவார்.

பயங்கரவாதத்தைப் பல வகையான அரசியல் இயக்கங்கள் தமது நோக்கங்களை அடைவதற்காகப் பயன்படுத்துகின்றன. 

இவற்றுள் இடதுசாரி, வலதுசாரி இயக்கங்கள், மதக் குழுக்கள், புரட்சியாளர்கள், ஆளும் அரசுகள் போன்ற பலவும் அடங்கும். அரசு அல்லாத குழுக்கள் பரவலான ஆயுதப் போராட்டங்களில் ஈடுபட்டிருப்பது போர்ச் சட்டங்களைப் பயன்படுத்துவதில் பல சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளது.

பயங்கரவாதம், தீவிரவாதம் (Extremism) மற்றும் அடிப்படைவாதம் (Fundamentalism) ஆகியன ஒன்றோடு ஒன்று தொடர்புடையன. அடிப்படைவாதம் தமது கருத்தை பிறர் அடியொற்றி பின்பற்ற வேண்டுமெனும் நோக்கில் வன்முறை சார்ந்தோ அல்லது அதிகாரத்தின் வழியோ மேற்கொள்வது. தீவிரவாதம் எனப்படுவது அச்சமூட்டும் வன்முறை நடவடிக்கை. தீவிரவாதம் மென்பயங்கரவாதத்தின் குழந்தையாகும். மென் பயங்கரவாதம் அதிகரிக்கும் போது அதை எதிர் கொள்ள வேறு வழியின்றி நாடும் செயல்.

மேற்சொன்னவை அனைத்தும் கட்டற்ற கலைக்களஞ்சியம் (!!?) விக்கிபிடீயாவில் வெட்டி ஒட்டிப் போட்டவைகள்...

சரிங்க, நமதூரில் ஒருவரைத் தீவிரவாதச் செய்களில் ஈடுபடுகிறார் என்றும் அதனால் அவர் தீவிரவாதி என்றும் வாய்க்கூசாமல் / எவ்வித மன உறுத்தல்களும் இல்லாமல் வழக்கே போட்டிருப்பது சங்க் பரிவார் அமைப்பல்ல, போலிசாரும் அல்ல மாறாக சங்கங்களின் பரிவாரங்களை ஒன்றினைத்து இரண்டு சங்கங்களின் பரிந்துரையோடு, ஒரு பள்ளி நிர்வாகத்தின் துணையுடன் செய்திருக்கிறது.  அவரைத் தீவிரவாதியென்று முத்திரை குத்தி முடக்கவே இந்த ஆயத்தங்கள்.

இஸ்லாமிய மார்க்க வரம்புக்குள் நன்மையை ஏவி தீமையத் தடுக்கும் பிரச்சாரம் செய்பவர் தீவிரவாதியா ?

நன்மையான விஷயங்களை சொல்பவர் தீமையான விஷயங்களிருந்து விலகியிருக்கச் சொல்பவர் அதனைக் காது கொடுத்து கேட்கும் மக்களை நோக்கிச் செய்யும் பிரச்சாரம் மூளைச் சலவையா ?

தவறிழைப்பவனுக்கு தண்டனை அல்லாஹ் மறுமையில் (இறப்புக்கு பின் எழுப்படும் நாளில்) தருவான் என்று சொல்வது தீவிரவாதக் குற்றமா ? நன்மை செய்பவனுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவான் என்று சுபச் செய்தி சொல்வது தடைசெய்யப்பட்ட செயலா ?

நீதியை நிலைநாட்டுங்கள், அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள். படைத்தவனை மட்டுமே வணங்குங்கள் படைப்பினங்களை போற்றாதீர்கள் என்று இறை கட்டளையை நேர்பட எடுத்துச் சொல்வது நேர்மையற்ற செயலா ?

வாருங்கள் விவாதிக்கலாம் !

அதிரைநிருபர் பதிப்பகம்

அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும்..! - தொடர் - 8 18

அதிரைநிருபர் பதிப்பகம் | May 23, 2013 | ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..


நம் அருமை நபி முஹம்மது (ஸல்) அவர்கள் தமக்காகவும், இஸ்லாத்திற்காகவும் பல வகையில் உதவிகள் தியாகங்கள் செய்தவர்களின் செயலை எண்ணி அழுதார்கள்  என்ற படிப்பினை தரும் தகவல்களைச் சென்ற பதிவில் பார்த்தோம்.

இந்த வாரம், மிகவும் உருக்கமானது. இந்தப் பதிவைத் தட்டச்சு செய்ய இரண்டு நாட்கள் எடுத்தது, காரணம் இந்த பதிவில் சொல்லப்பட்டுள்ள உணர்ச்சிபூர்வமான சம்பவங்களின் தாக்கத்தால் என்னால் தட்டச்சு செய்ய முடியவில்லை, இருப்பினும் கண்ணீர் மல்க இதை தட்டச்சு செய்தேன்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீனால் நமக்கு இவ்வுலகிற்கு கொடுக்கப்பட்ட அருட்கொடை அண்ணல் நபி (ஸல்) அவர்கள், சிறு வயதில் தாயையும் தந்தையையும் இழந்து, அனாதையாகி, உணவுக்காக ஆடு மேய்த்து, தன்னுடைய பெரிய தந்தையின் அன்பான வளர்ப்பில் வளர்ந்து, தன்னுடைய நல்லொழுக்கத்தாலும் நற்குணத்தாலும் கவரப்பட்டு செல்வ சீமாட்டி அன்னை ஹதீஜா(ரலி) அவர்களை மணமுடித்து, 40 வது வயதில் நபித்துவம் பெற்ற பின் தன்னுடைய மற்றும் தன் மனைவியினுடைய அனைத்து சொத்துக்களையும் இஸ்லாத்திற்காக தியாகம் செய்து, மக்காவில் தன்னுடைய ஊர் மக்களால் கொடுமைபடுத்தப்பட்டு பிறகு மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்று, மதீனாவில் எண்ணிலடங்காக் கஷ்டங்களை அனுபவித்து, பிறகு அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையால் மக்காவை வெற்றி கொண்டு உலக மக்களுக்கு ஜனாதிபதியாக இருந்து, தான் இறக்கும் போது தனக்கோ தன் குடும்பத்திற்கோ எந்த பொருட்களையும் விட்டுச் செல்லாமல் மரணித்தார்கள் என்று நாம் வரலாறுகளில் படித்திருப்போம். ஆனால் நபி(ஸல்) அவர்கள் என்னதான் அல்லாஹ்வுடைய தூதராக இருந்தாலும் ஒரு சாதாரண மனிதன் எப்படி உணவின்றி பசியில் வாடிடுவானோ அது போல் தன்னுடைய வாழ்நாளில் பல சந்தர்ப்பத்தில் இருந்துள்ளார்கள், இதனை அவர்களோடு அனுபவித்த உத்தம நபியின் உண்ணத தோழர்களும் அடங்குவர். இதோ ஒரு சில சம்பவங்கள்..

ஒரு காலகட்டத்தில் மிகப்பெரும் வரட்சியான சூழல், அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி(ஸல்) அவர்கள் அன்றாட உணவுக்கு வழியின்றி பசியோடு வாழ்ந்து வந்தார்கள். அதே பசியோடு இருந்த சஹாபாக்களும் யாரிடமும் யாசகம் கேட்காமல் நபி(ஸல்) அவர்களுடைய சபையிலே வந்தமர்ந்து நல்லுபதேசங்களைக் கேட்டு தங்களின் பசியை மறந்தவர்களக்ச் செல்வார்கள்.

ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் மதினாவில் சஹாபாக்களுடன் தொழுதுவிட்டு அமர்ந்திருக்கிறார்கள், அந்த நேரத்தில் சிறுவயதுடைய அனஸ் பின் மாலிக்(ரலி) (7 வயது சிறுவர்) அவர்கள் அந்த இடத்துக்கு வருகிறார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் சிறிய கற்களை எடுத்து ஒரு துணியில் போட்டு கட்டி தன்னுடைய வயிற்றில் கட்டிக்கொண்டு தன்னுடைய மேனியில் ஒரு துணியைப் போட்டு மூடுகிறார்கள். இதனை அனஸ்(ரலி) அவர்கள் காண்கிறார்கள்.

உடனே அனஸ்(ரலி) அவர்கள் பிற சஹாபாக்களிடம் “ ரஸூல்லுல்லாஹ் வயிற்றில் ஏதோ கட்டி வைத்துள்ளார்களே அது என்ன?” என்று கேட்கிறார்கள். அதற்கு அங்கிருந்த சஹாபாக்கள் சொன்னார்கள், நம்முடைய உத்தம நபி(ஸல்) அவர்கள் ரொம்ப நாட்களாக உணவின்றி சாப்பிடாமல் பசியில் இருக்கிறார்கள், தன்னுடைய பசியின் துயரத்தைத் தாங்கிக்கொள்ள துணியில் கல்லை கட்டி தன் வயிற்றில் கட்டி வைத்திருக்கிறார்கள்” என்று கூறினார்கள். இதனை கேட்ட அனஸ்(ரலி) சத்தம் போட்டு அந்த கஷ்டத்திற்கு நாசமுண்டாகட்டும், நாசமுண்டாகட்டும் என்று அழுதவர்களாக தன்னுடைய தாய் உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம் வந்து நபி(ஸல்) அவர்கள் பசியினால் தன் வயிற்றில் கல்லைக் கட்டி வைத்திருப்பதைச் சொன்னார்கள். அந்த தீன்குலப்பெண்மனி உம்மு சுலை அவர்கள் உடனே நபி(ஸல்) அவர்களுக்கு உணவு கொடுத்தனுப்புகிறார்கள். நபி(ஸல்) அந்த உணவை உம்மு சுலைம்(ரலி) அவர்கள் வீட்டிற்கே கொண்டு செல்லுமாறு அனஸ்(ரலி) அவர்களிடம் சொல்லிவிட்டு, அல்லாஹ்வின் கட்டளைபடி நபி(ஸல்) மற்றும் சஹபாக்களும் உம்மு சுலைம்(ரலி) அவர்கள் வீட்டிற்கு சென்று உணவருந்தினார்கள். அன்றைய தினம் அல்லாஹ்வால் நபி(ஸல்) அவர்கள் மூலம் ஓர் அற்புதம் நிகழ்த்தி காட்டப்பட்டு அத்தனை சஹபாக்களும் வயிறார உணவருந்தினார்கள் என்பதை புகாரி முஸ்லீம் போன்ற ஹதீஸ் தொகுப்புகளில் நாம் பார்க்கிறோம்.

மற்றுமொரு சம்பவம், இஸ்லாமிய வரலாற்றில் வீரத்திற்கு எடுத்துகாட்டான நபித்தோழர் உமர்(ரலி) அவர்கள் ஒரு  பகல் நேரத்தில் வெளியில் வேகமாக நடந்து வருகிறார்கள். இஸ்லாமிய வரலாற்றில் நபி(ஸல்) அவர்களை முதன் முதலில் உண்மைபடுத்திய (சித்தீக்) உண்மையாளர் என்று ஒட்டுமொத்த முஸ்லீம்களால் அழைக்கப்படும் அபூபக்கர்(ரலி) அவர்களும் அதே பட்டப் பகலில் வெளியே வருகிறார்கள். அந்த வீரத்தோழரும், உண்மை தோழரும் தெருவில் சந்திக்கிறார்கள்.

“என்ன உமரே இந்த பகல் நேரத்தில் எங்கே செல்கிறீர்கள்” என்று அபூபக்கர்(ரலி) கேட்க, அதற்கு உமர்(ரலி) அவர்கள் “எனதருமை தோழர் அபூபக்கரே பசி தாங்க முடியவில்லை, அதுதான் நபி(ஸல்) சபைக்குச் செல்கிறேன்” என்று சொன்னார்கள். அபூபக்கர்(ரலி) அவர்கள் உமர்(ரலி) அவர்களின் கையைப் பிடித்து “அதே நிலைதான் எனக்கும் உமரே, வாருங்கள் நபி(ஸல்) அவர்களின் சபைக்கு நாம் செல்வோம்” என்று கூறி இருவரும் நபி(ஸல்) அவர்களைச் சந்திக்கச் சென்றார்கள்.

நபி(ஸல்) அவர்களும் அந்த வெயில் நேரத்தில் வெளியில் வருகிறார்கள், தன்னுடைய அருமைத் தோழர்கள் இருவரும் நடுப்பகலில் தெருவீதியில் வேகமாக வருவதைக் கண்டார்கள். “என்ன தோழர்களே எங்கே இந்த வெயில் நேரத்தில் கிளம்பிவிட்டீர்கள்” என்று கேட்டார்கள்.

அந்த தோழர்களில் ஒருவர் சொன்னார்கள் “யா ரசூலுல்லாஹ் பசி தாங்முடியவில்லை அதான் உங்களைச் சந்திக்க வந்தோம்” என்றார்கள். உடனே நபி(ஸல்) “எனது உயிர் எவன் வசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக நானும் அதற்காகத்தான் வெளியில் வந்தேன்” என்று கூறி அந்த உத்தம தோழர்கள் இருவரைக் கட்டி அனைத்து, “வாருங்கள் நம் அருமை தோழர் அபூ அய்யூப் அல் அன்சார்(ரலி) அவர்கள் வீட்டிற்குச் செல்வோம்” என்று அவ்விருவரையும் அழைத்துச் சென்றார்கள்.

உத்தம நபியின் மதீனத்து உண்ணத தோழர் அபூ அய்யூப் அல் அன்சாரி(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களும், உமர்(ரலி) அபூபக்கர்(ரலி) ஆகியோரின் வருகையை அறிந்து உடன் தன் இல்லத்திற்கு வந்தார்கள். உணவு சமைத்து வருவதற்கு முன்பு வந்த விருந்தாளிகள் மூவருக்கும் பேரீத்தம்பழங்களைக் கொடுக்கிறார்கள் கொஞ்சம் பசியார வைக்கிறார்கள்.

பிறகு உணவு சமைத்து தட்டில் வைத்து, அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி(ஸல்) அவர்களுக்கும், அருமை தோழர்களுக்கும் பரிமார மிக ஆவலோடு வருகிறார்கள். அப்போது நபி(ஸல்) திடீரென எழுகிறார்கள், சஹபாக்கள் இருவரும் என்ன ரஸூலுல்லாஹ் எழுந்துவிட்டார்களே என்று வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதுவரை தன் தோழர்களுடைய பசி, தன்னுடைய பசியைப் பற்றியே பேசிய நபி(ஸல்) அவர்கள் அபூ அய்யூப் அல் அன்சாரி(ரலி) அவர்களைப் பார்த்து “ நாங்கள் மூவரும் பேசிக்கொண்டிருக்கிறோம் அபூ அய்யூப் அல் அன்சாரி அவர்களே, இந்தத் தட்டில் உள்ள உணவை என்னுடை அருமை மகள் ஃபாத்திமா அவர்களிடம் சென்று கொடுத்துவிட்டு வாருங்களேன். வீட்டில் என்னுடைய மகள் ஃபாத்திமாவும்(ரலி), மருமகன் அலி(ரலி), பேரக்குழந்தைகள் ஹசன்(ரலி) ஹுசைன்(ரலி) ஆகியோரும் பசியோடு இருக்கிறார்கள், சாப்பிட்டு பல நாட்களாகிவிட்டது.” என்று கேட்டுக்கொண்டார்கள். அதுவரை நபி(ஸல்) அவர்களும் இரு தோழர்கள் மட்டும் தான் பசியாக இருக்கிறார்கள் என்று எண்ணிய அபூ அய்யூப் அல் அன்சாரி(ரலி) அவர்களுக்கு அப்போது தான் தெரிந்தது நபி(ஸல்) அவர்களின் குடும்பமே பசியில் உள்ளது என்று. சுப்ஹானல்லாஹ்….

அபூ அய்யூப் அல் அன்சாரி(ரலி) அவர்கள் அந்த உணவை ஃபாத்திமா(ரலி) அவர்கள் வீட்டிற்குச் சென்று கொடுத்துவிட்டு, நபி(ஸல்) அவர்களை உபசரிப்பதற்காக தன் வீட்டிற்கு வந்தார்கள், பிறகு நபி(ஸல்) அவர்களுடனும், மற்ற இரு தோழர்களுடம் உணவருந்தினார்கள். சாப்பிட்டு முடித்தவுடன் நபி(ஸல்) அவர்கள் அழ ஆரம்பித்துவிட்டார்கள், தாடி நனையும் வரை அழுதார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள் தன்னுடைய தோழர்களைப் பார்த்து அழுதவர்களாக சொன்னார்கள் “ இதோ ரொட்டி, இதோ இரைச்சி, இதோ பேரீச்சம்பழம் என்று விதவிதமாக சாப்பிடுகிறோமே, இதற்கெல்லாம் நாளை மறுமையில் அல்லாஹ் கேள்வி கணக்கு கேட்பான் தோழர்களே, அதை நினைத்து அழுகிறேன் என்றார்கள் என்பதை ஹதீஸ் தொகுப்புகளில் காணமுடிகிறது. சுப்ஹானல்லாஹ்.

அகிலத்தின் அருட்கொடை, இந்த உலகில் பிறந்த எவராலும் தோற்கடிக்க முடியாத படையின் தளபதி, ஏழைகளுக்கு வாழ்வளிக்கும் உலக பொருளாதார மாமேதை, தந்தைகளுக்கெல்லாம் முன்மாதிரி, கணவர்களுக்கெல்லாம் முன்மாதிரி, தோழர்களுக்குக்கெல்லாம் முன்மாதிரி, ஆசிரியர்களுக்கெல்லாம் முன்மாதிரி, வியாபரிகளுக்கெல்லாம் முன்மாதிரி, என்று ஒட்டுமொத்த மனித குலத்திற்கே முன்மாதிரி நம் உயிரினும் மேலான அண்ணல் நபி(ஸல்) அவர்களும் அவர்களின் ஆருயிர் தோழர்கள் அபூபக்கர்(ரலி) உமர்(ரலி) அவர்களோடு பல நாட்கள் பசியோடு இருந்த நிலையில், அல்லாஹ் நமக்கு வித விதமான உணவைத் தந்துள்ளானே, அவனின் அருளை நினைத்தும், உண்ட அந்த உணவுகளுக்கு நாளை மறுமை நாளில் அல்லாஹ்விடம்கேள்வி கணக்கு உள்ளதே என்று எண்ணி அழுதுள்ளார்கள் என்றால், நம்முடைய நிலை என்ன என்பதை சிந்திக்க வேண்டாமா…

அன்பான சகோதரர்களே, நபி(ஸல்) அவர்களும், அவர்களின் குடும்பத்தினரும், அவர்களோடு வாழ்ந்த உத்தம தோழர்களும் பல நாட்கள் உண்ண உணவின்றி கஷடப்பட்ட நிலையிலும் அல்லாஹ் அவர்களுக்குக் கொடுத்த அருளை எண்ணி அல்லாஹ்வுக்காக கண்ணீர் சிந்தினார்கள்.

விதவிதமாக இன்று நாம் பல்சுவை உணவு, நாவுக்கு ருசியாக சாப்பிடுகிறோமே, என்றைகாவது நபி(ஸல்) அவர்களும் தோழர்களும் பசியோடு கஷ்டப்பட்டார்களே, என்று எண்ணி  அழுதிருக்கிறோமா?

பொருளாதாரத்தில் அபிவிருத்தியை தந்து, எந்தவித கஷ்டமும் இன்றி நம்முடைய வாழ்நாட்களைக் கழிக்கிறோமே, இந்தப் பொருளாதாரத்திற்கு நாளை அல்லாஹ்விடம் கேள்வி கணக்கு உண்டே என்று என்றைக்காவது மறுமையை நினைத்து அழுதிருக்கிறோமா?

உண்ண உணவின்றி கோடானு கோடி மக்கள் இன்றும் வாழ்கிறார்களே அவர்களின் நிலையை நினைத்து அல்லாஹ் நம்மை நல்ல நிலையில் வைத்துள்ளானே என்று அவனின் அருளை எண்ணி என்றைக்காவது அழுதிருக்கிறோமா?

அழ வேண்டும்
அர்த்தத்தோடு
அழ வேண்டும்.

இந்த வார உறுதி மொழி: 

நமக்கு ஏற்படும் கஷ்டமான சூழ்நிலையில், நபி(ஸல்) அவர்கள் பட்ட கஷ்டங்களை எண்ணிப்பார்ப்போம். என்னதான் நமக்கு செல்வம் வந்தாலும் அல்லது கஷ்டம் வந்தாலும், வறுமை, பசி வந்தாலும் நம்மை படைத்த அல்லாஹ்வைப் புகழ்வோம், அவனுடைய அருளை எண்ணி அவனுக்கு நன்றி சொலுத்துவோம்.

அல்லாஹு அக்பர்.
தொடரும் இன்ஷா அல்லாஹ் !
M. தாஜுதீன்

நேற்று! இன்று! நாளை?- 1 16

அதிரைநிருபர் பதிப்பகம் | May 22, 2013 | , , , ,


தமிழக சட்டமன்றத்தின்  இவ்வாண்டுக்கான நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கும்  கூட்டத் தொடர் அண்மையில் நிறைவுற்றது. ஒரு அரசியல் நோக்கர் என்கிற முறையில், இப்போதெல்லாம் நடைபெறும் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற நிகழ்வுகளை உற்று நோக்கிப் பார்க்கும்போது மனதில் பல ஒப்பீட்டு நினைவலைகள் எழுகின்றன. அவைகளை நமக்குள் அன்புடன் பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவைத்தர எண்ணினேன்.

சட்டமன்றம்  கூடப் போகும் நாளைப் பற்றி ஊடகங்கள், பத்திரிகைகள் பரபரப்பு செய்தியாக முக்கியத்துவம் கொடுத்து சட்டமன்றம் கூடி சலசலப்பை ஏற்படுத்தும் முன்பே இவர்கள் ஒரு சலசலப்பை ஏற்படுத்தும் சடங்கை செய்துவிடுவார்கள். மானியக் கோரிக்கைகள் வர இருக்கின்றன – மசோதா தர இருக்கிறார்கள் - பரபரப்பான சூழ்நிலையில் சட்டமன்றம் கூடுகிறது- எதிர்க் கட்சிகள் வரிந்து கட்டுகின்றன- ஆளும் கட்சி ஒரு கை பார்க்க தயாராகிறது- அப்படி இப்படி என்று ஏதோ ரேக்ளா ரேசுக்குத் தயார் ஆவது போல செய்திகளை வெளியிடுவார்கள். 

பரிதாபத்துக்குரிய மக்களும் ஆஹா! சட்டமன்றம் கூடுகிறது – நமக்கு ஆகுமான பல நல்ல திட்டங்கள் வரப்  போகின்றன- என்று வாயில் ஈ போவதுகூடத் தெரியாமல் வாயைப் பிளந்து கொண்டு காத்திருப்பார்கள். சட்டமன்றம் கூடும் நாள் வரும். அன்று எதிர்க் கட்சிகள் சட்டமன்றத்தின் இன்றைய கூட்டத்தைப் புறக்கணிக்கிறோம் என்று ஆரம்பிப்பார்கள். காரணம் சட்டமன்றத்தின் கேண்டீனில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு தரும் தேநீரில் சர்க்கரை அதிகமாகப் போடுகிறார்கள் எதிர்கட்சிக் காரர்களுக்கு உப்பை அள்ளிப் போடுகிறார்கள் என்பது போல சில காரணம் இருக்கும். அதையும் மீறி உள்ளே போனால் சபாநாயகர் எதிர்கட்சிக்காரர்களை கூட்டாக  வெளியேற்றினார் என்றும் குண்டுக் கட்டாகத் தூக்கி வெளியே போடப்பட்டனர் என்றும்  எதிர்க் கட்சியினர் கோஷம் போட்டு வெளிநடப்பு செய்தனர் என்றும் - ஒரு குறிப்பிட்ட கட்சி உறுப்பினர் விவாதம் நடைபெறும்போது கடந்த வருடம் அவர் சாப்பிட்ட மட்டன் கறியில் ஒரு  பிசிறு பற்களுக்கிடையில் சிக்கிக் கொண்டிருந்ததை குச்சியால் குத்தி நோண்டிக் கொண்டிருந்தார் என்றும் குற்றம் சாட்டப்பட்டு ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகி தொடர் முழுதும் நீக்கப் பட்டு இருப்பர் இல்லாவிட்டால் இவர் பல்லைக் கடித்தார் உதட்டைத் துருத்தினார்- என்று ஏதாவது குற்றம் சாட்டப்பட்டு தொடர் முழுதும் வெளியேற்றப்படுவார். 

கோடிக்கணக்கில் பொதுப்பணத்தை செலவு செய்து கோடான கோடி மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து தேர்ந்தெடுத்து சட்டமன்றத்துக்கு அனுப்பினால் சக்தியில் கல்லைப் போட்ட சங்கதிதான் நடக்கிறது. ஆளும் கட்சிக்கும் எதிர்க் கட்சிக்கும் வெட்டுப் பகை குத்துப் பகை- ஏட்டிக்குப் போட்டி. ஒன்றிலும் அனுசரணை ஒத்துப்போதல் தென்படுவதே இல்லை. தனிவாழ்வுபற்றிய விமர்சனங்கள், சட்டமன்றத்தின் தரத்தை குறைத்துவிடுகின்றன. மக்கள் நாளை நம்மைப் பார்த்து கேள்வி கேட்பார்களே என்கிற உணர்வு ஒரு துளி கூட இல்லை. சத்தம் கொஞ்சம் சூடு பிடித்தால் குழாயடி கூட வெட்கப்படும். சந்தைக்கடை கூட தற்கொலை செய்துகொள்ளும். எதிர்க் கட்சி உறுப்பினர்களை வெளியேற்றுவதில் ஏகபோக உரிமை சபாநாயகருக்கு. 

யார் இந்த சபாநாயகர்? வானளாவிய அதிகாரம் தனக்கு உண்டு என்று பறைசாற்றும்  சபாநாயகரும் ஒரு தொகுதியிலிருந்து மக்களால் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கப் பட்ட எம். எல் ஏ தான். ஆனால் அதே போல் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களை சபாநாயகர் விரும்பினால் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் அவருக்கு வழங்கப் பட்டு இருக்கிறது. இந்த அதிகாரத்தை வைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் மிரட்டப் படுகின்றனர். மக்கள் தேர்ந்தெடுத்த ஒரு சட்டமன்ற உறுப்பினரை பதவி நீக்கம் செய்தால் மக்களுக்கு என்ன மரியாதை? ஜனநாயகத்தின் யோக்கியதைதான் என்ன?

சட்டசபை வளாகத்தில் சபை நடவடிக்கைகளில் சற்றும் நாகரீகமோ சாதுர்யமோ  காணப்படுவது இல்லை. பழிவாங்கும் படலம் மாறி மாறி அரங்கேறுகிறது. மக்கள் பிரச்னைகள் புறந்தள்ளப் படுகின்றன. மக்களுக்கு பாராளுமன்ற சட்ட மன்றங்களின் மீது சபை நடவடிக்கைகளைக் காணும்போது நம்பிக்கைகள் பொய்த்துப் போகின்றன. 

அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின் 
தொகையறிந்த தூய்மையவர்”  என்று வள்ளுவர்  வரையறுக்கிறார்.

தூய அறிவாளர்கள் சொல்லின் பொருள் அறிந்து அவையின் தன்மை அறிந்து தாம் சொல்லப் போவதையும் நன்றாக  அறிந்தே எதையும் சொல்ல வேண்டும் என்பதே இதன் பொருள். 

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன 
கெடுப்பார் இலானும் கெடும் “  -என்பதும் வள்ளுவன் வாக்கே. 

இடித்துரைத்து சொல்லித்திருத்துபவர் இல்லாத பாதுகாப்பற்ற மன்னன் தன்னைக் கெடுப்பவர் இல்லாவிட்டாலும் தானாக கேட்டுப் போவான் என்பது இதற்குப் பொருள். 

ஆளும் கட்சியின் குறைபாடுகளை எதிர்க் கட்சிகள் எடுத்துரைக்கும் போது அதனை சீர்தூக்கி சரிசெய்து கொள்வது ஆளும் கட்சியின் கடமை. அதைவிடுத்து தான்தோன்றித்தனமாக ஆளும் கட்சி செயல்ப்படுமானால் அக்கட்சி அடுத்த தேர்தலில் மக்களால் தூக்கி எறியப்படும். இவை நாம் கண்டு வரும் வரலாற்றுப் படிப்பினைகள். 

இதைத்தான் அறிஞர் அண்ணாதுரை அவர்கள் 1957-62 சட்டமன்ற நிகழ்ச்சியில்  “ஆளும் கட்சி யானையின்  பலம் கொண்டதாக இருந்தாலும் அதை சரியான பாதையில் செலுத்த அங்குசம் என்ற ஒன்று வேண்டும்” என்று ஆளும் கட்சியை நோக்கி நறுக்கென்று மனதில் படும்படி சொன்னார். மேலும்,    

அதே 1962 ல் அண்ணா அவர்களின் கட்சியினர் 50 உறுப்பினர்கள் வெற்றிபெற்று சட்டமன்றத்தில் இடம் பெற்றிருந்தபொழுது, ஆளும் காங்கிரஸ் சார்பில் வைக்கபட்ட குற்றசாட்டுக்கு, மிக சாதுர்யமாக பதிலளித்தைக்  கண்டு ஆளுங்கட்சியான காங்கிரசு கட்சியே வியந்தது. அவர்கள் எதிர்கட்சித் தலைவராக இருந்த நெடுஞ்செழியனை நோக்கி வைத்த குற்றசாட்டு, அண்ணாதுரையின் கட்சிக்கு  நல்ல எதிர்க்கட்சியாக இயங்கத் தெரியவில்லை என்பதாகும்  ஆளும்கட்சியாக இருந்த காங்கிரஸ் கேலியுடன் தெரிவித்த குற்றசாட்டை மறுத்து “நீங்கள் எதிர்கட்சி சரியில்லை, என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் விரைவில் நீங்களே, அந்தக் குறையைப் போக்கி விடுவீர்கள் என்று எண்ணுகிறேன். நாங்கள் ஒரு காலத்தில் நீங்கள் இப்போது உள்ள இடத்தில் அமர வேண்டியவர்கள் என்பதால் பொறுப்புணர்ந்து அடக்கத்துடன் கூறுகிறேன்.”

என்று நெடுஞ்செழியன் நயம்பட உரைத்தாராம். பின்னர் அது உண்மையில் நடந்தது. 

மற்றொருமுறை அரசின் மானியக் கோரிக்கைமீது அண்ணா பேசும்போது அன்றைய காங்கிரஸ் அமைச்சர்களில் ஒருவர் இத்தனை கோடி ரூபாய்களை மக்கள் நலனுக்காக செலவழிக்கிறோம் என்றார். இதற்கு பதில் அளித்த அண்ணா “ பத்து பேர் கையிலிருந்து மாறிய ஐஸ் கட்டியைப் போலத்தான் அரசின் திட்டங்கள் மக்களைப் போய் சேரும் சமயத்தில் இருக்கின்றன” என்று இடித்துரைத்தார். அன்றாவது பத்து பேர் கை மாறிய ஐஸ் கட்டியாகத் திட்டங்கள் மக்களைப் போய்ச் சேர்ந்தன. இன்றோ காற்றைக் கையில் பிடித்து காட்டாறு வெள்ளத்தில் கோட்டாறு மண்ணெடுத்து கூட கோபுரமும் மாட மாளிகையும் கட்டி கொடுக்கிறோம் என்று சொல்கிறார்கள். இன்றைக்கு அரசின் திட்டங்கள் கடலில் கரைத்த சந்தனமாக அல்லவா போய்விட்டன? வருங்காலத்தில் சந்தனமும் இல்லாமல் வெறுங்கையை வைத்து கரைப்பதுபோல் கட்சி நாடகம் நடத்துவார்கள் அரசியல்வாதிகள். 

காங்கிரஸ் ஆட்சியில் ஒருமுறை அவை நடவடிக்கைகள் நடைபெறும்போது ஒரு ஆளும் கட்சி  உறுப்பினர் நன்றாகத் தூங்கிக் கொண்டு இருந்தார். இதைப் பார்த்த எதிக் கட்சி உறுப்பினர் இப்படித்தூங்கலாமா? என்று கேள்வி எழுப்பினார். இதற்குக் கலைஞர்  கூறிய கருத்து  அவையில் சிரிப்பலைகளை எழுப்பியது. கலைஞர் கூறினார் “ தூங்கலாம் ஆனால் குறட்டை விடக்கூடாது. தூங்குவது அவர் உரிமை குறட்டைவிட்டால் மற்றவர்களுக்கு இடையூறு. உரிமைப் பிரச்னை  “ என்றார். 

சட்டமன்றத்தில் அரசியல் நாகரீகம் பற்றிப் பேசும் புண்ணியவான்களுக்கு  கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்கள் தொடர்புடைய ஒரு நிகழ்வை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். 

சென்னை இராஜதானி சட்ட மன்றத்தில் காங்கிரஸ் ஆளும் கட்சி. இருபத்தி ஐந்து உறுப்பினர்களைக் கொண்டிருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் குழு கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்களை எதிர்கட்சி தலைவராக தேர்ந்தெடுத்து இருந்தது. சிறந்த எதிர்க் கட்சித் தலைவராக அவர்கள் பணியாற்றி வந்தார்கள். கம்யூனிஸ்ட் கட்சிக்கு அப்போது திரு. அனந்தன் நம்பியார் உட்பட இரண்டே   இரண்டு உறுப்பினர்கள்.   கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக ஒரு உரிமைப் பிரச்னை கொடுக்கப் பட்டு இருந்தது. அதை இன்னொரு நாள் எடுத்துக் கொள்வோம் என்று சபாநாயகர் கூறினார். 

இதற்குக் காரணம் இன்னொரு கம்யூனிஸ்ட் உறுப்பினர் வேறொரு தொழிலாளர் பிரச்னை காரணமாக கைது செய்யப்பட்டு சிறையில் இருந்ததால் அவைக்கு வரமுடியவில்லை. எனவே கம்யூனிஸ்ட் கட்சி தந்திருந்த உரிமைப் பிரச்சனைய வழி மொழிய ஆள் இல்லை. ஒரு தீர்மானத்தை ஒருவர் முன் மொழிந்தால் மற்றொரு உறுப்பினர் வழி மொழிய வேண்டும். ஒரு உறுப்பினர் வர முடியாத நிலையில் வழிமொழிய முடியாமல் தீர்மானம் தள்ளுபடியாகக்  கூடிய நிலை ஏற்பட்டது. அப்போது யாருமே எதிர்பார்க்காமல் கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்கள் எழுந்து நான் வழி மொழிகிறேன் என்று கூறி சபையை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்கள். 

அப்போது காங்கிரஸ் கட்சியின் சார்பில் “இஸ்லாமியர்களுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் ஒத்துவராதே – ஏணி வைத்தாலும் எட்டாதே – எப்படி நீங்கள் வழிமொழிந்தீர்கள்?” என்று கேட்டார்கள். கண்ணியத்துக் குரிய காயிதே மில்லத் அவர்கள் சொன்னார்கள் “ எந்த ஒரு உறுப்பினரும் தனது கருத்தை இந்த அவையில்   பதிய    உரிமை உடையவர்கள். எதிர்பாராத சூழ்நிலையில் அவர்களின் கருத்து பதிவுசெய்யப் படாவிட்டால் அது ஜனநாயகத்தை ஊனமாக்கிவிடும். எனவேதான் வழிமொழிந்தேன். இங்கே இஸ்லாம் கம்யூனிசம் என்கிற பேச்சுக்கு இடமில்லை “ என்றார்கள். இஸ்லாத்தின் சகிப்புத்தன்மைக்கும் சகோதரத்துக்கும்  சான்று பகர்ந்த சம்பவம் அது. 

இதனால்தான் கண்ணியத்துகுரிய காயிதே மில்லத் அவர்களைப் பற்றி கலைஞர்  ஒருமுறை குறிப்பிட்ட போது “ அரசாள்வோர் தன்னகத்தே கொண்டிருக்க வேண்டியவை கனிவு! துணிவு! பணிவு!  நான் கனிவைகற்றுக் கொண்டது காயிதே மில்லத்திடம்! துணிவைக் கற்றுக் கொண்டது பெரியாரிடம்! பணிவைக் கற்றுக் கொண்டது அண்ணாவிடம்!  “ என்றார். 

இதேபோல் மற்றொரு சம்பவம் இங்கு நினைவு கூறத் தக்கது. கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்கள் எதிர்க் கட்சித் தலைவராக பணியாற்றியபோது கல்வி அமைச்சராக பணியாற்றியவர் கோவை அவினாசிலிங்கம் அவர்களாவார். ஒரு விருந்தில் இருவரும் சந்திக்க நேர்ந்தது. ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டதுடன் பல்வேறு விஷயங்கள் பற்றி இருவரும் பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது காயிதே மில்லத் இடம் கல்வி அமைச்சர் “ இஸ்மாயில் சாஹிப்! உங்கள் மகன் இஞ்சிநீரிங் கல்லூரியில் நன்றாகப் படிக்கிறாரா ?” என்று கேட்டார்.  “ ஆமாம்! ஆமாம்! ஆனால் அவன் இஞ்சினியருக்குப் படிப்பது உங்களுக்கு எப்படித்தெரியும்? என்று  வியப்புடன் கேட்டார் காயிதே மில்லத். 

“எனக்கு எப்படித் தெரியாமல் இருக்கும்? அவருக்கு கல்லூரியில் இடம் கொடுத்ததே நான்தானே? (அவினாசிலிங்கத்தின் சொந்தக் கல்லூரி) விண்ணப்பத்தைப் பார்த்ததும் உங்கள் மகன் என்று தெரிந்தது. எதிர்க் கட்சித்தலைவரான உங்கள் மகனை நிராகரிக்க முடியுமா? உடனடியாக கொடுத்துவிட்டோம் என்று மகிழ்வுடன் கூறினார் திரு.  அவினாசி லிங்கம். பேச்சை அத்துடன் முடித்துக் கொண்ட கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அடுத்த நாள் தனது மகனை அழைத்து  "இன்றிலிருந்து நீ கல்லூரிக்குப் போக வேண்டாம் அந்தப் படிப்பையும் தொடர வேண்டாம்" என்று நிறுத்திவிட்டார். 

பலர் வற்புறுத்திக் கேட்டும் இப்படி மகனின் படிப்பை இடை நிறுத்தியதற்கான  காரணத்தை  உடனே அவர் கூறவில்லை. பல குடும்ப உறுப்பினர்களின் வற்புறுத்தலுக்குப் பிறகு காரணத்தைச் சொன்னார் . அது, “ நான் எதிர்க் கட்சித் தலைவர் என்பதால் என் மகனுக்கு சீட் கொடுத்ததாக கல்வி அமைச்சர் சொல்கிறார். அப்படிப் பட்ட தயவு நமக்கு தேவை இல்லை.” 

இப்படிப்பட்ட பண்பாளர்களை இன்று ஹாங்காங்கில் வலை வாங்கி வந்து வங்காள விரிகுடாக் கடலில் இரட்டை மடி வீசி அரித்து சலித்துப்  பார்த்தாலும் சட்டமன்றங்களில் நாம் காண முடியுமா?

இன்ஷா அல்லாஹ் தொடரலாம். 
முத்துப் பேட்டை P. பகுருதீன் B.Sc;


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு