அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...
அளவிலா அருளும் நிகரிலா புகழும் உரித்தான ஓர் இறை அல்லாஹ்வின் பேரருளாலும் தன்னிகரற்ற வல்லமையின் நாட்டத்தினாலும் அதிரைநிருபர் வலைத்தளம் முதலாம் ஆண்டு நிறைவை எட்டி இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இச்சூழலில் எங்கள் யாவரின் உள்ளம் கவர்ந்த வாசக நேசகங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி மட்டுமல்ல நன்றிப் பெருக்குடன் அல்ஹம்துலில்லாஹ்! சொல்லிக் கொள்வதில் உவகை கொள்கிறோம்!
அயர்ந்திருந்த தருனத்தில் ஆசுவாசப்படுத்திட ஆரம்பிக்கப்பட்டதல்ல அதிரைநிருபர் வலைத்தளம். ஆராவரிக்கும் வாதங்கள், விமர்சனங்கள் உருவெடுத்த தருனத்தில் அன்பையும் அரவனைப்பையும் காட்டியவர்களோடு களம் கண்டிடுவோமே என்று அதிர்வலைகள் அதிகம் ஏற்படுத்தாமல் அமைதியின் ஆளுமையாக அதிரையின் வலைதளங்களில் ஒன்றோடு ஒன்றாக இருந்திடாமல் சாதிக்க வேண்டும் என்ற வேட்கையால் உந்தப்பட்டு இணையக்கடலில் தடம் வைத்தது 2010ம் வருடம் ஜூன் திங்கள் 21ம் தேதி அன்று.
இது பெருமையடித்துக் கொள்ள எழுதப்பட்டதல்ல, பொறுமைகாத்து, சகிப்புத்தன்மையால் பக்குவப்பட வைத்த தருனத்தை நினைவு கூறுவதிலும் அத்தருனத்திலும் இன்றளவும் எள்ளலவும் குறையாமல் மென்மேலும் அன்பும் ஆதரவும் அள்ளித்தரும் சகோதர சகோதரிகள் யாவருக்கும் எங்கள் அதிரைநிருபர் குழுவின் நன்றியை உரித்தாக்குகிறோம்.. அல்ஹம்துலில்லாஹ் !
சுருக்கமாக இதுவரை...
495 பதிவுகள்
7,563 பின்னூட்டங்கள்
282,195 செல்ல அடிகள்
கடந்த ஏப்ரல் மாதம் 2011 வரை அலெக்சா இணைய தர வரிசையில் 226,310 என்ற நிலையை எட்டியது ! இதனூடே ஏற்ற இறக்கமிருக்கும் அவ்வப்போது... இதுநாள் வரை அதிரைசார்பு வலைத்தளங்களிலேயே முதன்மையிடம் !
கல்வி விழிப்புணர்வு மாநாட்டுக்கு தடம் அமைத்து வெற்றிகரமாக நடந்திட அதிரைநிருபர் முன்னின்று பங்காற்றியது !
7 தொடர்கள்
அனைவராலும் பெரிதும் பாராட்டப்பட்ட சகோதரர் அலாவுதீன் அவர்கள் எழுதிய "கடன் வாங்கலாம் வாங்க" தொடர், இதனை அதிரைநிருபரே புத்தகமாக வெளியிட பொறுப்பேற்று அதற்கான வேலைகளும் நடந்து வருகிறது.
சகோதரர் அலாவுதீன் அவர்கள் எழுதிய "பரீட்சைக்கு படிக்கலாம்" அதிரைநிருபரில் வெளிவந்த கட்டுரையை - நான்கு பக்க பிரசுரமாக அதிரை மற்று வெளியூர் மாணவர்களுக்கு பயன்பெறும் வகையில் வெளியிட்டு மாணவர்கள் மற்று பெற்றோர்களின் வரவேற்பை பெற்றது.
அதிரைநிருபர் வலைத்தளம் அதிரை சகோதர சகோதரிகளோடு மட்டும் சுழன்றிடாமல் உலகளாவிய இணையக் கடலில் பயனிக்கும் அனைத்து வாசக நேசங்களின் மனங்களை வென்று அமைதியின் ஆளுமையை நிருபித்தது.
அதிரைநிருபர் வலைத்தளத்தின் பங்களிப்பாளர்கள் ஒவ்வொருவராக பெயரிட்டு நன்றி சொல்வதில் தனித்தனியாக பிரித்துப் பார்க்காமல் எங்கள் குழுவோடு ஒன்றினைந்து எல்லாவகையான ஒத்துழைப்பையும் ஆலோசனைகளைம் நேரிலும், மின்னஞ்சல் வழியாகவும், அலைபேசிவாயிலாகவும் பெரிதும் அளித்து உதவியவர்களுக்காக எங்களின் துஆ என்றும் அதோடு நன்றியும் நிலைத்திருக்கும் இன்ஷா அல்லாஹ்!.
- அதிரைநிருபர் குழு
அளவிலா அருளும் நிகரிலா புகழும் உரித்தான ஓர் இறை அல்லாஹ்வின் பேரருளாலும் தன்னிகரற்ற வல்லமையின் நாட்டத்தினாலும் அதிரைநிருபர் வலைத்தளம் முதலாம் ஆண்டு நிறைவை எட்டி இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இச்சூழலில் எங்கள் யாவரின் உள்ளம் கவர்ந்த வாசக நேசகங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி மட்டுமல்ல நன்றிப் பெருக்குடன் அல்ஹம்துலில்லாஹ்! சொல்லிக் கொள்வதில் உவகை கொள்கிறோம்!
அயர்ந்திருந்த தருனத்தில் ஆசுவாசப்படுத்திட ஆரம்பிக்கப்பட்டதல்ல அதிரைநிருபர் வலைத்தளம். ஆராவரிக்கும் வாதங்கள், விமர்சனங்கள் உருவெடுத்த தருனத்தில் அன்பையும் அரவனைப்பையும் காட்டியவர்களோடு களம் கண்டிடுவோமே என்று அதிர்வலைகள் அதிகம் ஏற்படுத்தாமல் அமைதியின் ஆளுமையாக அதிரையின் வலைதளங்களில் ஒன்றோடு ஒன்றாக இருந்திடாமல் சாதிக்க வேண்டும் என்ற வேட்கையால் உந்தப்பட்டு இணையக்கடலில் தடம் வைத்தது 2010ம் வருடம் ஜூன் திங்கள் 21ம் தேதி அன்று.
இது பெருமையடித்துக் கொள்ள எழுதப்பட்டதல்ல, பொறுமைகாத்து, சகிப்புத்தன்மையால் பக்குவப்பட வைத்த தருனத்தை நினைவு கூறுவதிலும் அத்தருனத்திலும் இன்றளவும் எள்ளலவும் குறையாமல் மென்மேலும் அன்பும் ஆதரவும் அள்ளித்தரும் சகோதர சகோதரிகள் யாவருக்கும் எங்கள் அதிரைநிருபர் குழுவின் நன்றியை உரித்தாக்குகிறோம்.. அல்ஹம்துலில்லாஹ் !
சுருக்கமாக இதுவரை...
495 பதிவுகள்
7,563 பின்னூட்டங்கள்
282,195 செல்ல அடிகள்
கடந்த ஏப்ரல் மாதம் 2011 வரை அலெக்சா இணைய தர வரிசையில் 226,310 என்ற நிலையை எட்டியது ! இதனூடே ஏற்ற இறக்கமிருக்கும் அவ்வப்போது... இதுநாள் வரை அதிரைசார்பு வலைத்தளங்களிலேயே முதன்மையிடம் !
கல்வி விழிப்புணர்வு மாநாட்டுக்கு தடம் அமைத்து வெற்றிகரமாக நடந்திட அதிரைநிருபர் முன்னின்று பங்காற்றியது !
7 தொடர்கள்
அனைவராலும் பெரிதும் பாராட்டப்பட்ட சகோதரர் அலாவுதீன் அவர்கள் எழுதிய "கடன் வாங்கலாம் வாங்க" தொடர், இதனை அதிரைநிருபரே புத்தகமாக வெளியிட பொறுப்பேற்று அதற்கான வேலைகளும் நடந்து வருகிறது.
சகோதரர் அலாவுதீன் அவர்கள் எழுதிய "பரீட்சைக்கு படிக்கலாம்" அதிரைநிருபரில் வெளிவந்த கட்டுரையை - நான்கு பக்க பிரசுரமாக அதிரை மற்று வெளியூர் மாணவர்களுக்கு பயன்பெறும் வகையில் வெளியிட்டு மாணவர்கள் மற்று பெற்றோர்களின் வரவேற்பை பெற்றது.
அதிரைநிருபர் வலைத்தளம் அதிரை சகோதர சகோதரிகளோடு மட்டும் சுழன்றிடாமல் உலகளாவிய இணையக் கடலில் பயனிக்கும் அனைத்து வாசக நேசங்களின் மனங்களை வென்று அமைதியின் ஆளுமையை நிருபித்தது.
அதிரைநிருபர் வலைத்தளத்தின் பங்களிப்பாளர்கள் ஒவ்வொருவராக பெயரிட்டு நன்றி சொல்வதில் தனித்தனியாக பிரித்துப் பார்க்காமல் எங்கள் குழுவோடு ஒன்றினைந்து எல்லாவகையான ஒத்துழைப்பையும் ஆலோசனைகளைம் நேரிலும், மின்னஞ்சல் வழியாகவும், அலைபேசிவாயிலாகவும் பெரிதும் அளித்து உதவியவர்களுக்காக எங்களின் துஆ என்றும் அதோடு நன்றியும் நிலைத்திருக்கும் இன்ஷா அல்லாஹ்!.
- அதிரைநிருபர் குழு

ஒரு கால்வாயில் இரு நதிகள்
அதிரை நிருபர்
ஆரம்பித்து
ஐந்தாண்டுகள் ஆகிவிட்டனவா?
அதற்குள் எப்படி
ஆறாண்டுகளுக்கான
ஆக்கங்கள்
ஏழாண்டுகளுக்கான
எத்திவைப்புகள்
எட்டாண்டுகளுக்கான
கட்டுரைகள்
ஒன்பதாண்டுகளுக்கான
நண்பர்கள்
பத்தாண்டுகளுக்கான
கவிதைகள்
பதினோறு ஆண்டுகளால் சாத்தியப்படும்
விழிப்புணர்வு மாநாடு
என சாத்தியப்பட்டது?
என்னது...?
ஓராண்டு நிறைவுறுகிறதா?
அதுசரி...
வாழ்த்துகள்ப்பா!!!
-- சபீர்
Sabeer abuShahruk
ரோசத்தில் பிறந்த
அக்னிகுஞ்சு!
நேசத்தில் வளர்த்த
வாசக, வாசகியர்களின்
பாசத்தில் திளைத்து
ஒருவருடம் ஓடியதே
தெரியாத பிள்ளையாய்
எல்லாராரலும் தாலாட்டப்பட்டு
இன்று!
நாளைய !
சமுதாயத்துக்கு தோள்
கொடுக்க வளரும்
பிள்ளையாய் அடியெடுத்து
வைக்கும் நாளில்.
நல்லுளங்களோடு பங்கெடுக்கும்
சாமானிய வாசகனாக
உவகை கொள்வதுடன்.
இந்த குழந்தையுடன்
நானும் சேர்ந்து
நடந்து இருக்கிறேன்
எனக்கு
பேரானந்தத்தை தருகிறதே !
மேலும் மேலும்
சமுதாய சிந்தையுடன்
சிறப்புடன் செயலாற்ற
அல்லாஹ்விடம் வேண்டுகிறேன்.
"யா அல்லாஹ்!
எங்கள்
செயலையும்
எண்ணத்தையும்
உனக்குப் பிடித்தமான
வாகையில்
அமைய
அருள் புரிவாயாக.
-- CROWN
முதலாம் ஆண்டின் நிறைவில் அதிரை நிருபர்....
இணைய கடலில் இனிமையாய்
பயணித்து வரும் அதிரை நிருபரே!
ஒரு வருட காலத்தில் நீர்
பெரும் கடலையே தாண்டிவிட்டீர்!
கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து
மாநாடொன்று நடத்தி வெற்றிபெற்றீர்!
கவிதைக்கு முக்கியத்துவம் தந்து
பல கவிப்பாக்களை இங்கு தந்தீர்!
மார்க்கத்திற்கு முக்கியத்துவம் தந்து
மனிதநேயம் மலரச் செய்தீர்!
போட்டியின்றி நீர் புரட்சி செய்தீர்!
அமைதியாய் அதிரையை ஆட்கொண்டீர்!
கடந்த கால வரலாறெழுதி எம்
கண் முன்னே கொண்டு வந்தீர்!
வயதுகள் கடந்து அனைவரின்
வாழ்த்துக்கள் பல பெற்றீர்!
கடிவாளமிட்ட குதிரையாய்
அடக்கத்துடன் ஆளுமை செய்தீர்!
அநாகரிக எழுத்துக்களை அறவே வெறுத்தீர்!
அதனால் அனைவரின் கவனத்தை பெற்றீர்!
உம் அரவணைப்பில் எம் அனைவரையும்
கால்கடுப்பின்றி வரிசையில் நிற்கவைத்தீர்!
பரிட்ச்சை எழுதி தேர்வு முடிவுக்கு ஏங்கும்
மாணவனாய் எம்மை ஆக்கி வைத்தீர்!
உற்சாக மிகு உம் வார்த்தைகளால்
எம்மை கயிறின்றி கட்டிப்போட்டீர்!
தொலைந்து போன எம் உறவுகளை
இங்கு கொண்டு வந்து சேர்த்தீர்!
எங்கோ இருக்கும் அவருக்கும்
இங்கே இருக்கும் எனக்கும்
இணைப்பு பாலத்தை சிரமமின்றி
இணையக்கடலின் மேல் கட்டிதந்தீர்!
ஊரின் முக்கிய நிகழ்வுகளை
உற்சாகமாய் வழங்கித்தந்தீர்!
காணொளி மூலம் எம்மை
ஊருக்கே கொண்டு சென்றீர்!
பசுமையான நினைவுகளை
கட்டுரை மூலம் வார்த்துதந்தீர்!
படைத்த இறைவனை என்றும்
நினைவில் கொண்டீர்!
நம்மூர் கடைத்தெரு நிகழ்வுகளை கூட
கலிஃபோர்னியா வரை கொண்டு சேர்த்தீர்!
பாலைவனத்தில் இருக்கும் எம்மை
சோலைவனத்திற்கே அழைத்து சென்றீர்!
கவிக்காக்கா மூலம்
கவிதைகள் பல தந்தீர்!
விஞ்ஞானி காக்கா மூலம்
அறிவியல் சிந்தனைகளை தந்தீர்!
மருத்துவ காக்கா மூலம்
பல சிகிச்சைகளை செய்தீர்!
கீரீட(க்ரவ்ன்)சகோதரன் மூலம்
சொல்விளையாட்டை கற்று தந்தீர்!
அதிரை அஹ்மது சாச்சா மூலம்
அறிவுப்பூர்வமான தகவல் பல தந்தீர்!
சகோ. அலாவுதீன் மூலம்
அழகிய கடனை கற்றுத்தந்தீர்!
சகோ. அபுஈசா மூலம்
அன்றாட பிரச்சினைக்கு தீர்வுகண்டீர்!
தம்பி ஷஃபாத் மூலம்
வார்த்தை விளையாட்டை சொல்லித்தந்தீர்!
மச்சான் ஜஹபர் சாதிக் மூலம்
பின்னூட்ட ஊட்டம் தந்தீர்!
அபுஇபுறாகீம் காக்கா மூலம்
உற்சாகத்தை அள்ளித்தந்தீர்!
சகோ. தாஜூத்தீன் மூலம்
தலை சிறந்த கருத்தை தந்தீர்!
தம்பி இர்ஷாத் மூலம்
கிச்சிகிச்சி காட்டினீர்!
மகன் மீராஷா மூலம்
கிராஃபிக்ஸில் விண்ணில் பறக்கச்செய்தீர்!
சகோ. ரஃபியா மூலம்
முக்கிய பல நிகழ்வுகளை தந்தீர்!
சகோ யாசிர் மூலம்
விலையுயர்ந்த காப்பியும் போட்டு தந்தீர்!
நண்பன் அப்துல் ரஹ்மான் மூலம்
கி.மு. விற்கே எம்மை கொண்டு சென்றீர்!
வாவன்னா சார் மூலம்
வாழ்க்கை பாடம் நடத்தினீர்!
எஸ்.கே.எம். ஹாஜாமுஹைதீர் சார் மூலம்
பள்ளி நினைவுகளுக்கு பந்தலிட்டு வரவேற்றீர்!
சகோ. அதிரை முஜீப், மீரா மூலம்
எமக்கு உயர்கல்விக்கு வழிகாட்டினீர்!
அன்பின் அப்துல் மாலிக் மூலம்
ஆக்கப்பூர்வமான தகவல் பல தந்தீர்!
(எம்.எஸ்.எம்) என் மூலம்
பழைய நினைவுகளுக்கு வர்ணம் பூசினீர்!
இங்கு விடுபட்ட பலர் மூலம்
பல விந்தைகளை செய்து முடித்தீர்!
கருத்துப்பரிமாற்றத்தில் கலைகட்டினீர்!
கல்வி, மார்க்கம், அறிவியல், கவிதை
ஊர் நலன், சமூக சீர்திருத்தம்,ஆரோக்கியம்
என கண்ட துறையிலும் கொடிகட்டிப்பறந்தீர்!
சப்தமின்றி சாதனை பல படைத்தீர்!
அடக்கத்தால் அனைவரின் அன்பை பெற்றீர்!
பள்ளி ஆசிரியர்களிடம் பேட்டி பல கண்டு
எம்மை வகுப்பறைக்கே அழைத்து சென்றீர்!
கப்பலின்றி இணையக்கடலில் கரை சேர்ந்து விட்டீர்!
படிப்பவரெல்லாம் தொடர்ந்து படிக்க என்ன வசியம் செய்தீர்?
பாராட்டு புகழனைத்தும் படைத்தவனுக்கே என்றுரைத்தீர்!
பல்லாண்டு நீர் சிறப்புடன் பயணிக்க எல்லோரின் பிரார்த்தனையையும் நீர் பெற்றீர்!
இன்னும் சிறப்புடன், செம்மையுடன் உம் தடையற்ற பயணம் இனிதே தொடர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்தவனாக..
-- மு.செ.மு. நெய்னா முஹம்மது.
வாழ்த்தும் நெஞ்சங்களோடு இன்னும் எங்களின் முயற்சிகள் தொடர்ந்திட உங்கள் யாவரின் துஆ என்று எங்களுக்கு(ம்) இருந்திட நம்மை படைத்து பாதுகாத்து வரும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் நாங்களும் பிரார்த்திக்கிறோம் !
-- மு.செ.மு. நெய்னா முஹம்மது.
வாழ்த்தும் நெஞ்சங்களோடு இன்னும் எங்களின் முயற்சிகள் தொடர்ந்திட உங்கள் யாவரின் துஆ என்று எங்களுக்கு(ம்) இருந்திட நம்மை படைத்து பாதுகாத்து வரும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் நாங்களும் பிரார்த்திக்கிறோம் !
நன்றியுடன் !
- அதிரைநிருபர் குழு


