Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label என் கனவு. Show all posts
Showing posts with label என் கனவு. Show all posts

எனதூர்… என் கனவு…! 33

அதிரைநிருபர் பதிப்பகம் | August 10, 2014 | , , , ,


கண்ணுக் கெட்டும் தூரம்வரை
கம்பீரமாய்க் கடல்
காலைத் தொட்டு உதிரும்போது
காதலுடன் மணல்

சேற்று வாசம் எனினும்
காற்று வீசும் கடற்கரை
எனதூர் காற்றுக்கு மட்டும்
விரல் முளைத்து உடல் வருடும்

பார்த்துப் பார்த்துப்
பழகிப்போன சூரியன்
பழகிப் பழகிப்
பரிச்சயமான சந்திரன்

தென்னைமரத் தோகை
தென்றல் வீசி அசையும்
தேனிருக்கும் இளநீர்
தானிருக்கும் குலையில்

எழுதிவைக்க மறந்த
நினைவுகளைச் சேமிக்கும்
வாய்க்காலும் வரப்புகளும்
உப்பளமும் ஊருணியும்

பாங்கொலிக்கும் பள்ளிகள் - பொறுப்பாகப்
பங்களிக்கும் பெரும் புள்ளிகள்

தழும்பி நிற்கும் நீர்நிலைகள்
அரும்பி நனைக்கும் படிக்கரைகள்
தும்பி பறக்கும் சிறுகாடு
துளிர்த்து மலரும் பூக்காடு

ரயில் ஓடும் ஊர் ஓரம்
வெயில் காயும் வெட்டவெளி
மயில் வந்து ஆடாவிடினும்
ஒயில் குன்றா எழில் எனதூர்

என்னவாயிற்று?

இன்றோ
கலைந்துபோன கனவைப்போல
குழைந்து கிடக்கிறது எனதூர்

விளையாட்டுத் திடலிலும்
வற்றிப்போன குளத்திலும்
குழுக்கள் குழுக்களாய்
குடியும் கும்மாளமும்

ரயில் நிலையத்தைப் பார்
வெயில் சாய்ந்தால் "பார்"

ஆப்ரிக்க வயிறுகளாய்
காய்ந்து மெலிந்த
வாய்க்காலிலும் கால்வாயிலும்
செழிப்பாய் நிற்கின்றன
நீர் உறிஞ்சும் செடிகொடிகள்

கார்காலத்தில்
பனிப்பொழிவிலாவது
ஈரம் பார்த்துவிட
ஏங்குகிறது ஊர்

வசந்த காலத்திலேயே
உலர்ந்து உதிர்ந்துவிட
இலையுதிர்க் காலத்தில்
உதிர்க்க இலையின்றி
பருவ காலம் ஒன்று
அழிந்து மறைகிறது

கைவிடப்பட்ட சேது சமுத்திர
திட்டத்தின் எச்சமான
அகலச் சாலையில்
ஆக்ரமிப்புகள் ஆரம்பம்

கற்பனை கதாபாத்திரமோவென
கலங்க வைக்கிறது
இணையத்தில் மட்டுமே
எழுச்சி பேசும் எனதூர்

மழை பொய்த்து
பிழை மிகைத்து
பிடிவாதமான பிரிவினைகளால்
உருக்குலைந்து
ஊரழிந்து போகிடுமோ
உறவறுந்து விலகிடுமோ!?

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு