Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label லெ.மு.செ.அபுபக்கர். Show all posts
Showing posts with label லெ.மு.செ.அபுபக்கர். Show all posts

குடும்ப உறவுகளை உடைத்தெறியும் அரக்கர்கள்.. 20

அதிரைநிருபர் பதிப்பகம் | December 19, 2011 | , , , ,


அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே! 

நம் குடும்ப உறவுகளை உடைத்து நொறுக்க அமெரிக்காவோ, இஸ்ரேலோ தான் படையெடுத்து வந்து அங்கே அணு ஆயுதங்களை வைத்தெல்லாம் நொறுக்கும் அரக்கர்கள் என்று நினைத்து விட வேண்டாம்.

அப்படி என்றால் வேறு யாருதான் என்று குழம்புகிறீர்களா?

ஆணவம், மமதை மற்றும் தான்தோன்றித் தனமான போக்கினால் நம்மிலிருந்தே அணு உலையை விட கொடியதுமான நம் உயிர் உள்ள வரை அழியா நாவு என்னும் ஆயுதத்தைக் கொண்டு படை எடுக்கிறார்கள். 

அப்படியென்றால் அந்த அரக்கர்கள் எங்கெல்லாம் வந்து வேட்டு வைக்கிறார்கள் என்று தெரியுமா ?


1. புது மாப்பிள்ளை பெண் பேசும் நிகழ்வுகளின் போது அங்கே நினைத்த காரியம் கை கூடவில்லை என்ற நிலை வரும்போது.

2. நிர்ணயித்த அல்லது பேரம் பேசிக் கொண்ட வரதட்சணைத் தொகை,  சீர் செட்டுகள் (சீராட்டுகள்) சரியாக வந்து அடையாத போது.

3. 'மின்னல் ஹபீபி'  எனும் பண கொடுக்கல் வாங்கலின் போது.

4. ஒப்படைக்கப்பட்ட அமானிதத்தில் தில்லு முல்லு அல்லது மோசடி செய்யும்போது.

5. பாகப்பிரிவினை நேரத்தில் பங்குதாரர்களின் விஷயத்தில் அநீதியாக, அத்துமீறி அங்கே அநியாமாக நடந்து கொள்ளும் போது.

6. கூட்டுக் குடும்பமாக இருக்கும் அழகான சூழலில் அற்ப விசயத்திற்காகவும் சுயலாபத்திற்காகவும் அல்லது உற்றார் மீது எழுதும் பொறாமையினால் பிரச்சினை உண்டாகும் போது .

7. கணவன் மனைவிக்கிடையே சரியான புரிந்துணர்வுகள் இல்லாத போது.

8. வசதி வாய்ப்பு எனும் தர்பாரில் உள்ளவர்கள் அவைகள் அமையப் பெறாதவர்களை மதிக்காத போது.

9. பெற்றோரை இரக்கமின்றி மிதித்து மனைவியை கிறக்கத்தில் துதிக்கும் போது.

10. இல்லாத ஒன்றை அவதூறாக இட்டுக்கட்டி பழி சுமத்தும் போது.

இப்ப குழப்பங்கள் தீர்ந்து இருக்குமே!

இப்படிப்பட்ட அரக்கர்களிடம் எலும்பற்ற நாவு என்னும் ஆயுதத்தை சுழல விடாமல் அடக்கம் என்னும் கயிற்றால் வரிந்து கட்டுங்கள். 

குடும்ப உறவுகளை பாதுகாத்துக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்.

- லெ.மு.செ.அபுபக்கர்

யார் செய்கிற கொடுமை ? 15

அதிரைநிருபர் பதிப்பகம் | November 16, 2011 | , ,

அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே!

தலைப்பைப் படித்ததும் மனசுக்கு படபடண்டு அடிக்குதா? வெடவெடண்டு உதறுதா ?

வேற ஒன்னுமில்லைங்க அது ஊருக்குள்ள "மின்சாரவலிப்பு"ன்னு ஒரு வியாதி பரவி கெடக்குதுன்னு வைத்தியர் சொன்னதாக எங்கேயாவது காணொளி பார்த்தீருப்பீங்க.

முதலில் மனசை கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்க. ஃபிரிட்ஜிலிருந்து சூடா ஸாரி ஆறிப்போன ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து விட்டு ஆசுவாசம் செய்து கொள்ளுங்க. விசயத்திற்கு வருகிறேன் கவனமா கண் வைத்து காது கொடுத்து கேளுங்க ஆனா இதெல்லாம் கரண்ட் நியூஸ்ங்க.

நம்ம ஆளுங்ககிட்ட வெறுமனே “என்ன ஆச்சு"ண்டு? கேட்டா…

உடனே "அம்மா ஆட்சி"ண்டு சொல்லுறாங்க !

அடுத்து வெவரமா “கரண்டு என்னாச்சு"ண்டு கேட்டா…

அதுவா போச்சு"ண்டு நக்கலா சொல்லுறாங்க !

அதுவா எங்கே போச்சுன்னு யாருக்கும் சொல்லத் தெரியலை மின்சாரம் இருந்தாதான் ஷாக் அடிக்கும் என்பதெல்லாம் அந்தக்காலம் ஆனா நம்ம ஊருல மின்சாரமின்றியும் நிறைய விசயங்களிலும் ஷாக்காக இருக்குது போங்க…

காலையில் குளிப்பதற்கு மின்சார மோட்டார் பொத்தனை அழுத்தினால், வீர்ர்ர்ர்ர் கொண்டு எழுந்து ஆரவாரத்துடன் ஓட ஆரம்பிக்கும் மோட்டாரை. சில நிமிடங்களில் சீத்த ‘வெடி’ போல் வீரியத்தை இழக்க செய்கிறது இந்த மின்சா(ஜு)ரம்.

மீண்டும் மீண்டும் மின்சா(ஜு)ரம் வர (குணமடைவது எப்போதோ?) அந்த திட்டுமுட்டுகிடையில…

சமையல் அறையில் இருந்து ராத்தா, தங்கைமார்களின் சப்தமான குரல் ஓங்குகிறது 'கல்ச்சல்ல போவான் கரண்ட அமத்திட்டானுவோ' என்ற சப்தம் காதுலே வேகமாக ஊடுருவுது. இந்த ஊடுருவல் மட்டும் மின்சாரத் துறையின் காதுகளுக்கு போவதில்லை!

மீண்டும் மின்சா(ஜு)ரம் வர  (குணமடைய)

சரி சட்டையை அயர்ன் பன்னுவோம்ண்டு இஸ்திரி பெட்டிக்கு மின் இணைப்பு கொடுத்து டெம்ப்ரச்சர் ஏத்தி வச்சு அயர்ன் செய்யலாம்ண்டு இஸ்திரி பெட்டியை கையில் எடுத்தால். பெட்டியில் டெம்ப்ரச்சர் குறைய நம்ம மூளைக்குள் சூடு அதிகமாகிறது (டென்ஷன் டென்ஷன் ஒரே டென்ஷன்).

மீண்டும் மின்சா(ஜு)ரம் வர (குணமடைய)

'சரி'ண்டு சொல்லி கடைக்கு போய் கம்பூட்டருக்கு முன்னாடி அமர்ந்து (அ.நி) அமைதின் ஆளுமைக்கு வந்து அமைதி காப்போம்ண்டு வந்தால். சிறிது நேரத்தில் UPSஐ யாரோ கிள்ளிவுட்டுகிட்டு இருப்பது போல் விடாமல் தொடர்ந்து வீல் வீல்ண்டு கத்த விடுகிறது மின்சா(ஜு)ரம்.

இத்துடன் முடிந்ததுண்டு வெறுப்புடன் மனதை ஆறுதல் படுத்திக் கொள்கிறீர்களா?

மீண்டும் மின்சா(ஜு)ரம் வர (குணமடைய)

பாவம் பிஞ்சு குழந்தைகள் யாருக்கு என்ன துரோகம் செய்தது? ஆனா இந்த மின்சாரம் ராத்திரியிலே நமக்கு போட்டியா தூங்கச் செல்கிறது நம்மள காவ காக்கா வச்சுட்டு. அதுல பாருங்க டெண்டர் போட்டு காண்ட்ராக் எடுத்த மாதிரி இந்த ஈவு இறக்கம் இல்லாத கொசு நர்சுகளோ குழந்தைகள் கதற கதற ஊசிகள் போடுதுங்க!.

சிறுசுகள் கதறுவதால் பெருசுகளின் தூக்கமும் பறந்து விடுகிறது குழைந்தங்களை கடித்த கொசுக்களோடு!

இது யார் செய்கிற கொடுமைங்க ?

ஐயா செய்கிறாரா ? அல்லது அம்மா செய்கிறாங்களா ?

கேட்டாக்கா இது அதிரைக்கு மட்டுமல்ல அனைத்து தமிழகத்திலேயும் இருக்கும் மின்சார (மருந்து) தட்டுப்பாடு என்று சாக்கு சொல்லி அங்கும் ஷாக்கு அடிக்கின்றது (சொன்னாலும் ஆனாலும்!)

அதிரை பேரூராட்சிக்கு ஜெயித்த தலைவருக்கு போட்டியாக நின்று தோற்றதும் பின்னர் துணைக்கு நின்று ஜெயித்ததும் பதவிக்கு வந்ததும். ஆளுங்கட்சியான எங்களால்தான் எதையும் செய்ய முடியும்ண்டு, பரபரப்பாக பேட்டியோடு செயல் படுவதையும் காட்டிடும் மாநில ஆளுங்கட்சி சகோதரர்கள் அதிரையில் மலேரியாபோல் பரவிக்கிடக்கும் இந்த மின்சாரத்த ஊருக்குள்ளேயே கட்டிப் போடுங்களேன் அடிக்கடி வந்துட்டு வந்துட்டு ஓடி ஒளிஞ்சுபோயிடுது.. இப்படி வருவதும் வராததுமாக இருக்கும் மின்சார ஜுரத்தை ஆளுங்கட்சி மருத்துவர்களைக் கொண்டு முழுவதும் சரிசெய்ய முடியாவிட்டாலும் பாதிக்கு மேலயாவது முடியுமான்னு யோசிச்சு 'ஷாக்  அடிக்கிற மாதிரி ஒரு "action please !"

- லெ.மு.செ.அபுபக்கர்

எங்கவூட்டு மருமவோமா ! 20

அதிரைநிருபர் பதிப்பகம் | September 14, 2011 | , , ,

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, இந்த உரையாடலாய் அமைந்திருக்கும்  ஆக்கம் யாரையும் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு பதிய பட்டவையல்ல, அன்றாடம் நமதூரில் பொதுவில் நடந்தேறும் நிஜமான நிகழ்வுகளின் நிழலாக மட்டுமே.

இரண்டு பெண்மக்கள் ஒரு ஆண்மகனை பெற்றெடுத்த அதிரைப்படினத்து உம்மா உடல்நிலை சரியில்லாத நிலையில் அவர்களின் படுக்கை அறையிலிருந்து இளைய மகளை "தங்கச்சி" என்று அழைக்க !

பள்ளிக்கூட பாடங்களை எழுதிக் கொண்டிருந்த இளைய மகள் "என்னம்மா?" என்று பதற்றத்தோடு உம்மா அருகே செல்கிறாள்.

புள்ளைங்கள பெத்த உம்மா "தங்கச்சி மனசுக்குள்ளே பட படண்டு செரவடியா வருதுமா காக்காவுக்கு போன் போட்டு டாக்டரை சட்டுன்னு கூட்டிக்கிட்டு வரச்சொல்லுமா" என்று பதற, துடித்தே விட்டாள் இளைய மகள்.

விளையாடச் சென்ற காக்காவுக்கு உடனே ஃபோன் பன்னுகிறாள் இளையமகள் - தன் வீட்டிலிருந்து டெலிஃபோன் வருகிறதே என்று அவனும் பதறியவனாக "ஹலோ ! அஸ்ஸலாமு அலைக்கும்" என்றதும்.

மறுமுனையில் "வ-அலைக்கு முஸ்ஸலாம், காக்கா உம்மாவுக்கு படபடண்டு வருதாம் சட்டுன்னு டாக்டரை கூட்டிக்கிட்டு வரச் சொல்லுது, எனக்கு என்ன செய்வதென்று தெரியலை" குரல் உருக்கியது.

"சரி இந்த வந்துறேன்" என்றவன் தன் நண்பனிடமிருந்து இரவலாக டூவீலரை வாங்கி கொண்டு வேகமாக மருத்துவமணைச் சென்று அங்கிருந்த மருத்துவரை அழைத்துக் கொண்டு வீட்டுக்குச் செல்கிறான்.

அங்கே டாக்டரும் அவர்களது உம்மாவை பரிசோதித்துவிட்டு.

"உங்களுக்கு ஒன்றுமில்லை தைரியமாக இருங்கள் நான் தர்ர மாத்திரைகளை சாப்பிடுங்க" என்று பிள்ளைகளின் உம்மாவிடம் சொன்ன டாக்டர் அவர்களின் மகனை தனியாக அழைத்து. 

"உங்க உம்மா கவலைப்பட்டு கவலைப்பட்டு ரொம்ப மனசு பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் அவங்களை கவலைப்படாம பாத்துக்கோ" என்று எடுத்துச் சொன்னார், அதன் பின்னர் டாக்டரை திரும்ப விட்டு விட்டு வந்ததும்.

வீட்டில் !

உம்மாவின் தோழி அதற்குள் நலம் விசாரிக்க வந்திருந்தார்கள்.. .

"அஸ்ஸலாமு அலைக்கும், என்னாவுளே ஒனக்கு  என்ன பன்னுனுச்சு?"

"யாருமா வா வா எங்கடி போன? ஒன்னே ஆளே கானோ இப்பவாவது வந்து கேட்டியே ஒரு மாசமா மனசுக்கு சரி இல்லடி இப்பதான் டாக்டரு வந்து பாத்துட்டு போறாரு".

"ஆமவுளே இப்ப ஒ இளய மொவ சொல்லித்தான் எனக்கு தெரியும். அதா ஒன்னே பாக்கலாம்டு ஓடியாரேன்."

"தங்கச்சி சாச்சிக்கு சீனி கொஞ்சமா போட்டு தேத்தணி குடுமா...." இளைய மகளுக்கு குரல் கொடுத்ததும்

"இந்த போட்டு கொடுக்குரமா." என்றாள் இளையவள்.

"ஆமா எங்க ஒ மூத்த மொவ மாமியாவூட்டுக்கு போய்க்கிதா?"

"அவளையா கேக்குறா? அவளநேச்சுதாண்டி எனக்கு பெரும் கவலையா ஈக்குது."

"என்னவுளே சொல்றா?"

"அவ மாப்புள மெட்ராசுலே விசா யாவாரம் பாத்துட்டு அப்புடியே நெலமும் வாங்கி வித்துகிட்டு இருந்தாகவுளே! நல்லாத்தான் போய்க்கிட்டு ஈந்துச்சு யாரையோ பெரிய நாட்டுக்கு அனுப்புரெண்டு சொல்லி விசா அடிச்சிக்கிறாஹ அது ஏதோ ஏம்மாத்து விசாவா போச்சுண்டு விசாவுக்கு பண கொடுத்தவரு பணத்த கேட்டு பெரச்சனே பன்னுராருண்டு அவ்வோ வாப்பாட்டே பனோம் கேட்டாவுளே! 

ஏதோ அங்க இங்க கடன வாங்கி அடைச்சோம், சரி அதோட வெளிநாட்டுக்கு போய் சம்பாரிச்சு வாங்குன கடனே எப்புடியாச்சும் அடைக்கச் சொன்னா அங்கெல்லாம் போமாட்டேண்டு சும்மாவே காலத்தே ஓட்டுரார்வுளே அதுனாலே ஏம்மொவ மாமியாவூட்டுலே ஈக்கிராவுளே! 

அவ்வொளுக்கு தேவையா இந்த வயசுலேயும் முதுகு வலியோடும்.கால் வலியோடும் கஸ்ட்டப்பட்டு வாழ்நாளெல்லாம் வீணாக்கிட்டு ஈக்கிராஹ அதுவும் ரொம்ப கஸ்ட்டப்பட்டு இந்த ஊடு பல வருசத்துக்குப் பிறகு கட்டுனதுவுளே.

இப்ப எனக்கு ஒடம்புவேற சரியில்லையா எண்ட ரெண்டாவது மொவதான்வுல எல்லா வேலையும் பாக்குறா ஒரு வாரமா பள்ளிகொடதுக்கு வேற போவல.

மொவனும் 12வது படிக்கிறான்  அவனை நல்லா படிக்க வைக்கனும்டு அவ்வோ வாப்பா கொஞ்ச கொஞ்சமா காசு சேக்குராஹா இந்த புள்ளைல்வோ நெலம தெரியாம ஆடுதுவோ."

அதற்குள் தோழி சாச்சி, "ஆமா வூட்டுக்கு வூடு வசப்படியான்தா ஈக்குது உளே! இந்த ஏண்ட ரெண்டுமகளுக்கும் எந்த கொரையும் இல்லாமதான் கல்யாணம் பண்ணி வச்சோம் ஏம்மகள்ற நகைகளெல்லாம் வித்து மூத்த மருமவனே மலேசியாவுக்கு அனுப்புனோம். போய் ஒரு வருசமாச்சு போனத்துக்கு ரெண்டு மாசம்தாவுல செலவுக்கு பணம் அனுப்புனாரு. இது வரைக்கும் அஞ்சி பைசா கூட இல்லவுளே!

ரெண்டாவது மருமொவனுக்குத்தான் வெளிநாடு அனுப்ப முயற்சி செஞ்சிட்டு இருக்கோம். அவருக்குத்தான் எங்கயுமே அமையமாட்டங்குது சரி விசா வரவரைக்கு எங்கயாவது ஒரு கடையிலே போய் இருக்க சொன்னாக்கா அதுலாம் சரியா வராதுன்னு சும்மா தோளமாரோட ஊற சுத்திக்கிட்டு வரார்வுளே!"

இவர்களின் சோகமான பேச்சுக்கிடையில் "அஸ்ஸலாமு அலைக்கும்" என்று மீண்டும் மகனின் குரல்.

"வ-அலைக்க முஸ்ஸலாம் (வரஹ்) கண்ணான வாப்பா இன்னைக்கு ஸ்கூலுக்கு போவல ? தம்பி அசர் தொளுதுட்டியாமா?"

"இன்னும் தொளுவலமா டீ குடிச்சிட்டு போறமா."

மீண்டும் தொடர்ந்த தோழி சாச்சி "சரி அதெல்லாத்தயும் வுடு ஒ எளய புள்ளைக்காவது படிச்ச மாப்புள்ளையா பார்த்து கல்யாணம் பன்னி வைவுல."

"ஆமா நீ ஒன்னு படிச்ச மாப்புளைக்கு எங்க போறது? அதுவோ படிக்கவச்சதுக்குமுள்ள சேத்து நம்மட்டே லட்சக்கணக்குலே பணத்த கேக்குதுவோ."

"இப்ப உள்ள ஆம்புலபுள்ளைவோ அது வாங்ககூடாது இது வாங்ககூடாதுண்டு சொல்லுதுவோலே தவிர வூடு வானாண்டு புடிவாதமா சொல்ல மாட்டின்கிறதுவோமா"

"இது வொத்தான் அப்படி ஈக்குதுண்டு பார்த்தா ஓதி படிச்ச வூட்டுவொல்லேயும் ரொம்ப எதிர்பாக்குதுவோ."

ஆயிஷாராத்தா அங்கிருந்த தோழியின் மகனைப் பார்த்து, "இங்க பாத்தியா தம்பி ஒ ராத்தா மச்சான்ற சொல்லேக் கேட்டுகுட்டு உம்மாவே எவ்வளோவு கஸ்த்தப்படுத்துதூவோ .நீங்களாவது உம்மாவே கவலப்படவுடாம பாத்ததுகிடுங்கமா?"

"சரி சாச்சி, உம்மா நானாவது ராதாவுக்கு போனு போட்டு என்னாண்டு கேக்கவமா?"

"வானாண்ட வாப்பா இந்தக்கால புள்ளையள்வோலுக்கு நல்லது சொன்ன பொல்லாப்பா தெரியுது. அவங்களா அல்லாஹ்வுக்கும் மறுமைனாளுக்கும் பயந்து மனம்திருந்தி வரட்டும்"

"சரிவுளே நீ கவைப்படாத ஒ ஒடம்பே நல்ல மாறியா பாத்துக்கோ எல்லாத்துக்கு அல்லா ஈக்குரான் அவன் பாத்துக்குவா. நா போயிட்டு வரேவுல"

நிஜத்தில் நடந்திடும் நிகழ்வுகள் வாசிக்கும்போது நெகிழ்வைத் தந்தாலும், நேர்கொண்ட பார்வையும் நெஞ்சுரம் கொண்ட இளைய என் சமுதாயமே இனியாவது இவ்வாறன இழிவுக்குள் வீழ்ந்திடாமல் விழித்தெழுந்திடு உன்னைப் பெற்றவங்களும் உன்னவளைப் பெற்றவர்களும் இருவரும் பெற்றோரே ! அந்தப் பெற்றோரைப் பேனுவதில் நேர்மையை காட்டிடு முன்னுதாரமாய் திகழ்ந்திடு.

-லெ.மு.செ.அபுபக்கர்

நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? 16

அதிரைநிருபர் பதிப்பகம் | July 21, 2011 | , ,

அன்பிற்குரிய சகோதர,சகோதரிகளே! என் மனதில் வேதனையாக உதித்தவற்றை தாங்கள் முன் கவலையோடு பகிர்ந்து கொள்வதற்காக சில வரிகள் இங்கே.

1. பெண்களின் அடாவடிகளும் / ஆளுமையும் தலை விரித்தாடும் ஊர் - நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?

2. விளையாடும் பருவத்தில் மாப்பிளை,பெண் பேசும் ஊர் - நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?

3.  மாப்பிள்ளை, பெண் பேசி முடிக்கிறோம் என்ற பெயரில் உறவுகளை உடைத்தெறியும் ஊர் - நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?   

4.  வரதட்சணையை மாடி வீடுகளாய் கேட்கும் ஊர் -  நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?

5. பெண் வீட்டில் பெருமையாக வாங்கி தின்னும் ஊர் - நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?

6. பெண் வீட்டில் வாங்கியதில் குறையிருந்தால் குத்திக்காட்டும் ஊர் - நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?

7. ஓசியில் அலங்கார நகைகளை வாங்கி அலங்கரித்துக்கொண்டு ஓசி சாப்பாட்டுக்கு செல்லும் ஊர் - நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?

8. வாழ்வில் சிரமமெடுத்து சீர் கொடுக்கும் ஊர் - நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?

9. எளிமையிலும் .பணக்காரர்களை போல் ஆடம்பரமாக வாழ நினைக்கும் ஊர்  - நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?

10. பந்தி என்றால் பகட்டுக்காக கடன் வாங்கி காசை கரியாக்கும் ஊர் - நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?

11. குழந்தை பிறந்தால் அவ்வீட்டை சீனி குடோவ்ன்கலாக்கும் ஊர் - நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?

12. உழைக்காத மாப்பிளைகளும் மைனராக வலம் வரும் ஊர் - நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?

13. அயல் நாடே உனக்கு அடைக்கலம் என்று சொல்லும் ஊர் - நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?

14. புறம் பேசி புகழை  தேட நினைக்கும் ஊர் -  நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?

15. பொறாமைனால் பொல்லாங்கு சொல்லும் ஊர் - நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?

16 . ஆபரணத்தை அடகு வைத்து ஆண்களை அயல் நாட்டுக்கு அனுப்பும் ஊர் - நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?

17 . குடும்ப சூழ்நிலையைச் சொல்லி வாலிபத்தை சூறையாடும் ஊர் - நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?

18 . வெட்டிப்பேச்சில் வீரனாய் / வீராங்கனையாய் திகழும் ஊர் - நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?

19 . மனம் குன்றாமல் அடுத்தவரின் குறைகள் தேடிக் கானும் ஊர் - நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?

20. பணமிருந்தால் பல்லை இளிக்கும், அது இல்லையெனில் மூஞ்சை சுளிக்கும் ஊர் -  நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?

21 . தெரு வேற்றுமைகளால்ஆழமாக வேருன்றி நிற்கும் ஊர் - நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?

22 . மார்க்க மேதைகள் நிறைந்திருந்தும் மாசுக்களை துடைத்து எறிய முடியா ஊர் - நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ;

"நான் அல்லாஹ்வின் பாலிருந்து நற்குணங்களை முழுமைப் படுத்துவதற்க்காக அனுப்பப்பட்டுள்ளேன்" ஹதிஸின் கருத்து .

நாமும் நற்குணத்தால் நற்பேர் பெற்று இம்மண்ணில் வாழ அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக ! ஆமீன்.

லெ.மு.செ.அபுபக்கர்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு