இன்று
காணாமல் போன
ஆனக்குண்டே
கதியென்று கிடந்த...
இன்று
பாசிபிடித்து
ஆக்ரமிப்பிலிருக்கும்
அமராவதி குளத்தில்
காலை முதல்
மதியம் வரை நிச்சலடித்த...
இரவு மறந்து
புளியமரங்களிலும்
மொட்டை மாடிகளின்
பின்புறச்சுவர்களில்
தாவி ஏறி ஒளிந்து
கள்ளம் போலீஸ்
விளையாடிய.....
கல்யாண வீடுகளில்
கடைசி வரை
பறிமாறிவிட்டு
அலுப்பு மாற...
முட்டத்துக்கும்
கன்னியாகுமரிக்கும்
பட்டாளம் போல்
பறக்கும்....
இன்னும்...
இன்னும்...
என் வாழ்வின்
வசந்த காலங்களில்
என்னோடு கைகோர்த்த...
என் பால்ய கால..
சிநேகிதர்களே!
நண்பர்கள் தினத்தில்
எனக்கு நம்பிக்கை இல்லை
மறந்து போனால் தானே
என்றாவது ஒருநாள் நினைக்க!
உணர்வின் வெளிச்சத்தில்
உண்மை மனதோடு தேடுகிறேன்..
கலைந்து போக...
கனவுகளல்ல நாம்
கலர்கலராய் வாழ்ந்த
காலங்கள்…
வெட்ட வெட்ட வளரும்
பசுமை போல் வளர்ந்த சிநேகம்
பெரும் புயலிலும் அடித்துக் கொண்டு
போக முடியாத ஆழ்ந்த நட்பு…
சந்தோசங்களில் உன்னை
அழைக்க மறந்தாலும்
துன்பங்களை அறிந்த பொழிதில்
தோள் கொடுக்க
ஓடி வருவருவாய்...
அலைகள் போல் திரும்ப திரும்ப
அசை போடும் நினைவுகள்..
ஆக்ரமித்துக் கொண்டும்
அடைத்துக் கொண்டுமிருக்கும் மனங்கள்…
கண் காண தொலைவில் நாம்-ஆனாலும்
கண்டு கொண்டே இருக்கிறோம்…
மகிழ்ச்சிகளிலும் துக்கங்களிலும்
மனக் கண்களில்…
வசதிகள் நம்மை பிரிப்பதில்லை
வசந்தம் நம்மை மறப்பதில்லை
வாய்ப்புகள் நம்மை நேசிக்கமலில்லை
வருவாய்கள் நம்மை சோதிப்பதில்லை
என் மொபைலுக்கு
நீ இருக்குமிடம் தெரியும்
அது உன் முகவரி அறியும்
ஆனால் அழைக்க மனமில்லை
நீ ஆன்லைனின்
நானும் தான்…
ஆனாலும் ஒரு கிளிக்கில்
ஹலோ! சொல்ல மனமில்லை…
காரணம்…
இந்த இடைவேளையில்
மென்று தீர்க்க நம்மிடம்
இருப்பது வெறும் முறுக்குகளல்ல..
ஒரு நாள் விருந்தில்
ஒன்றாய அகம் மகிழ
ஆயிரம் நினைவுகள்….
வளர்ந்து வரும்
உன் மகன் என்னை
முகப்புத்தகத்தில்
நண்பனாக அழைக்கிறான்
கண்கள் குளமாக
“கன்ஃபாம்” செய்கிறேன்.
இன்னும் மிச்சமிருக்கும்
இறுதிப் பயணத்திற்க்கு முன்
இணைபிரியாமல் வாழ்ந்த
இனிமை நண்பர்களே!
இனி இணைவோமா?....
- முகமது செயினுத்தீன்
- திருவிதாங்கோடு.
-நன்றி : இபுராஹீம் அன்சாரி (காக்கா)
காணாமல் போன
ஆனக்குண்டே
கதியென்று கிடந்த...
இன்று
பாசிபிடித்து
ஆக்ரமிப்பிலிருக்கும்
அமராவதி குளத்தில்
காலை முதல்
மதியம் வரை நிச்சலடித்த...
இரவு மறந்து
புளியமரங்களிலும்
மொட்டை மாடிகளின்
பின்புறச்சுவர்களில்
தாவி ஏறி ஒளிந்து
கள்ளம் போலீஸ்
விளையாடிய.....
கல்யாண வீடுகளில்
கடைசி வரை
பறிமாறிவிட்டு
அலுப்பு மாற...
முட்டத்துக்கும்
கன்னியாகுமரிக்கும்
பட்டாளம் போல்
பறக்கும்....
இன்னும்...
இன்னும்...
என் வாழ்வின்
வசந்த காலங்களில்
என்னோடு கைகோர்த்த...
என் பால்ய கால..
சிநேகிதர்களே!
நண்பர்கள் தினத்தில்
எனக்கு நம்பிக்கை இல்லை
மறந்து போனால் தானே
என்றாவது ஒருநாள் நினைக்க!
உணர்வின் வெளிச்சத்தில்
உண்மை மனதோடு தேடுகிறேன்..
கலைந்து போக...
கனவுகளல்ல நாம்
கலர்கலராய் வாழ்ந்த
காலங்கள்…
வெட்ட வெட்ட வளரும்
பசுமை போல் வளர்ந்த சிநேகம்
பெரும் புயலிலும் அடித்துக் கொண்டு
போக முடியாத ஆழ்ந்த நட்பு…
சந்தோசங்களில் உன்னை
அழைக்க மறந்தாலும்
துன்பங்களை அறிந்த பொழிதில்
தோள் கொடுக்க
ஓடி வருவருவாய்...
அலைகள் போல் திரும்ப திரும்ப
அசை போடும் நினைவுகள்..
ஆக்ரமித்துக் கொண்டும்
அடைத்துக் கொண்டுமிருக்கும் மனங்கள்…
கண் காண தொலைவில் நாம்-ஆனாலும்
கண்டு கொண்டே இருக்கிறோம்…
மகிழ்ச்சிகளிலும் துக்கங்களிலும்
மனக் கண்களில்…
வசதிகள் நம்மை பிரிப்பதில்லை
வசந்தம் நம்மை மறப்பதில்லை
வாய்ப்புகள் நம்மை நேசிக்கமலில்லை
வருவாய்கள் நம்மை சோதிப்பதில்லை
என் மொபைலுக்கு
நீ இருக்குமிடம் தெரியும்
அது உன் முகவரி அறியும்
ஆனால் அழைக்க மனமில்லை
நீ ஆன்லைனின்
நானும் தான்…
ஆனாலும் ஒரு கிளிக்கில்
ஹலோ! சொல்ல மனமில்லை…
காரணம்…
இந்த இடைவேளையில்
மென்று தீர்க்க நம்மிடம்
இருப்பது வெறும் முறுக்குகளல்ல..
ஒரு நாள் விருந்தில்
ஒன்றாய அகம் மகிழ
ஆயிரம் நினைவுகள்….
வளர்ந்து வரும்
உன் மகன் என்னை
முகப்புத்தகத்தில்
நண்பனாக அழைக்கிறான்
கண்கள் குளமாக
“கன்ஃபாம்” செய்கிறேன்.
இன்னும் மிச்சமிருக்கும்
இறுதிப் பயணத்திற்க்கு முன்
இணைபிரியாமல் வாழ்ந்த
இனிமை நண்பர்களே!
இனி இணைவோமா?....
- முகமது செயினுத்தீன்
- திருவிதாங்கோடு.
-நன்றி : இபுராஹீம் அன்சாரி (காக்கா)


