Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து. Show all posts
Showing posts with label அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து. Show all posts

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 062 8

அதிரைநிருபர் பதிப்பகம் | November 25, 2016 | ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.

லுஹாத் தொழுகையின் சிறப்பு

''ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்குமாறும், லுஹா நேரத்தில் இரண்டு ரக்அத் தொழுமாறும், தூங்கும் முன் வித்ருத் தொழுமாறும் என்னிடம் என் நேசர் நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்தினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1139)

''ஒருவர் தன் ஒவ்வொரு மூட்டுக்களுக்கும் காலையிலேயே தர்மம் செய்ய வேண்டும். ஒவ்வொரு தஸ்பீஹும் ''சுப்ஹானல்லாஹ்வும்'', தர்மம் ஆகும். ஒவ்வொரு ''அல்ஹம்துலில்லாஹ்''வும் தர்மமாகும். ஒவ்வொரு ''லாயிலாஹ இல்லல்லாஹ்'' கூறுவதும் தர்மமாகும். ஒவ்வொரு ''அல்லாஹு அக்பரும்' தர்மமாகும். நல்லதை ஏவுவது தர்மமாகும். கெட்டதை தடுப்பதும் தர்மமாகும். இவை அனைத்துக்கும் பகரமாக லுஹா நேரத்தில் இரண்டு ரக்அத் தொழுவது போதுமாகும் என்று நபி(ஸல்) கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூதர் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1140)

''நபி(ஸல்) அவர்கள், லுஹா நேரத்தில் நான்கு ரக்அத் தொழுவார்கள். அல்லாஹ் நாடிய அளவுக்கு (சில நேரம்) அதிகமாக்கிக் கொள்வார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1141)

சூரியன் உதயமாகி உயர்வதில் இருந்து உச்சியிலிருந்த சாயும்வரை 'லுஹா' தொழுகை தொழுவது கூடும்.

''சிலர் லுஹாத் தொழுகையை தொழக் கண்டேன். ''இந்த நேரம் அல்லாத நேரத்தில் லுஹாத் தொழுவது மிகச் சிறந்தது என்பதை அவர்கள் அறிந்து கொள்வது நல்லது. ஏன், எனில் நபி(ஸல்) அவர்கள், ''இறைவனிடம் மீளும் மக்கள் (லுஹாவை) தொழுவது, ஒட்டகக் குட்டிகள் சூடு பொறுக்காமல் கரிந்து விடும் (பகல்) நேரம் ஆகும்'' என்று கூறினார்கள் என நான் அவர்களிடம் கூறினேன். (அறிவிப்பவர்: ஸைத் இப்னு அர்கம் (ரலி) அவர்கள் (முஸ்லிம்)   (ரியாளுஸ்ஸாலிஹீன்:1135)

பள்ளிவாசலுக்குரிய காணிக்கைத் தொழுகை தொழுதிட ஆர்வமூட்டுதல்!மேலும் பள்ளிவாசலில் எப்போது நுழைந்தாலும் இரண்டு ரக்அத் தொழும் முன் உட்காருவது கூடாது. அந்த இரண்டு ரக்அத், பள்ளிவாசல் காணிக்கை தொழுகையாகவோ, அல்லது பர்லான தொழுகையாகவோ, அல்லது வழமையான சுன்னத், மற்றும் நபிலான தொழுகையாகவோ இருந்தாலும் சரியே!

''ஒருவர் பள்ளிவாசலுக்குள் நுழைந்தால், இரண்டு ரக்அத் தொழும்வரை உட்கார வேண்டாம்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: கதாதா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்)    (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1144)

''பள்ளியில் நபி(ஸல்) அவர்கள் இருந்தபோது அவர்களிடம் வந்தேன். ''இரண்டு ரக்அத் தொழுவீராக!'' என்று அப்போது நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1145)

உளு செய்தபின் இரண்டு ரக்அத் (தொழுவது) விரும்பத்தக்கது

''பிலாலே! இஸ்லாத்தில் நீர் செய்கின்ற சிறந்த செயல் பற்றி என்னிடம் கூறுவீராக ஏன் எனில், சொர்க்கத்தில் எனக்கு முன்பு உம் செருப்பு சப்தத்தைக் கேட்டேன்'' என்று நபி(ஸல்) அவர்கள் பிலாலிடம் கூறினார்கள். ''இரவிலோ, பகலிலோ எப்போது உளு செய்தாலும் அந்த உளுவுக்குப் பின் இரு ரக்அத் நபில் தொழாமல் நான் இருந்ததில்லை.  இதைவிட வேறு சிறந்த செயல் செய்ததில்லை'' என்று பிலால் (ரலி) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)   அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1146)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...

வானத்தின் மீதும் தாரிக் மீதும் சத்தியமாக! (அல்குர்ஆன்: 86:1)

தாரிக் என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்? (அல்குர்ஆன்: 86:2)

அது ஒளி வீசும் நட்சத்திரம். (அல்குர்ஆன்: 86:3)

ஒவ்வொருவர் மீதும் கண்காணிப்பாளர் இல்லாமல் இல்லை. (அல்குர்ஆன்: 86:4)

மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதைச் சிந்திக்கட்டும். (அல்குர்ஆன்: 86:5)

குதித்து வெளிப்படும் நீரிலிருந்து படைக்கப்பட்டான். (அல்குர்ஆன்: 86:6)

அது முதுகுத் தண்டுக்கும் முன் பகுதிக்கும் இடையிலிருந்து வெளிப்படுகிறது. (அல்குர்ஆன்: 86:7)

இவனை மீட்பதற்கு அவன் ஆற்றலுடையவன்.
(அல்குர்ஆன்: 86:8)

அந்நாளில்  இரகசியங்கள் வெளிப்படுத்தப்படும்.
(அல்குர்ஆன்: 86:9)

அவனுக்கு எந்த வலிமையும் எந்த உதவியாளரும் இருக்க மாட்டார்கள். (அல்குர்ஆன்: 86:10)

திருப்பித் தரும் வானத்தின் மீது சத்தியமாக!
(அல்குர்ஆன்: 86:11)

பிளக்கும் பூமியின் மீது சத்தியமாக! (அல்குர்ஆன்: 86:12)

இது தெளிவான கூற்றாகும். (அல்குர்ஆன்: 86:13)

இது கேலிக்குரியதல்ல. (அல்குர்ஆன்: 86:14)

அவர்கள் கடும் சூழ்ச்சி செய்கின்றனர். (அல்குர்ஆன்: 86:15)

நானும் கடும் சூழ்ச்சி செய்கிறேன். (அல்குர்ஆன்: 86:16)

எனவே(என்னை) மறுப்போருக்கு அவகாசம் அளிப்பீராக! சொற்ப அவகாசம் அளிப்பீராக! (அல்குர்ஆன்: 86:17)

(அல்குர்ஆன்: 86: 1 -17 அத்தாரிக் - விடிவெள்ளி)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
 இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன் S.

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 061 3

அதிரைநிருபர் பதிப்பகம் | November 18, 2016 | , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.

அஸரின் சுன்னத்

''அஸருக்கு முன் நான்கு ரக்அத் தொழும் மனிதருக்கு அல்லாஹ் அருள்புரிவானாக என நபி(ஸல்) கூறினார்கள்.(அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) அவர்கள் (அபூதாவூது, திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1120)

''நபி(ஸல்) அவர்கள் அஸருக்கு முன் இரண்டு ரக்அத் தொழுவார்கள்.(அறிவிப்பவர்: அலீ இப்னு அபீதாலிப் (ரலி) அவர்கள் (அபூதாவூது) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1121)

மஃஹ்ரிபுக்கு முன் - பின் சுன்னத்

''மஃஹரிபுக்கு முன் (சுன்னத்) தொழுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் மூன்று தடவை கூறிவிட்டு ''விரும்பியவருக்கு (அனுமதி)'' என்று கூறினார்கள்(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு முஃஹப்பல் (ரலி) அவர்கள் (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1122)

ஜும்ஆவின் சுன்னத்

''உங்களில் ஒருவர் ஜும்ஆவை தொழுதுவிட்டால், அதன்பின் நான்கு ரக்அத்தை தொழட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்)  (ரியாளுஸ்ஸாலிஹீன்:1126)

வீட்டில் நபில் தொழுகைகளை தொழுவது

''மனிதர்களே! உங்கள் வீடுகளில் தொழுங்கள். நிச்சயமாக தொழுகையில் மிகச் சிறந்தது, ஒருவர் கடமையான தொழுகையைத் தவிர, தன் வீட்டில் தொழும் தொழுகைதான் என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்கள்  (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1128)

''வீடுகளிலும் உங்கள் தொழுகைகளை வைத்துக் கொள்ளுங்கள். அவற்றை கப்ருகளாக (மண்ணறைகளாக) ஆக்கிவிடாதீர்கள் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1129)

''ஒருவர் தொழுகையைத் தன் பள்ளிவாசலில் நிறைவேற்றி விட்டால், தொழுகையின் ஒரு பகுதியை தன் வீட்டிலும் தொழுது கொள்ளட்டும்! நிச்சயமாக அல்லாஹ், அவரின் வீட்டில் அவரது தொழுகையின் காரணமாக நல்லதை ஏற்படுத்துகிறான்'' என்று நபி (ஸல்) கூறினார்கள் (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1130)

வித்ருத் தொழுகை

''வித்ருத் தொழுகை, கடமையான தொழுகை போல் கட்டாயமானதல்ல! எனினும் நபி(ஸல்) அவர்கள் அதை முறையாக்கினார்கள். மேலும் ''நிச்சயமாக அல்லாஹ் ஒருவன். அவன் ஒற்றைப்படையை (வித்ரை) விரும்புவான். எனவே குர்ஆனைப் பெற்றவர்களே! நீங்கள் வித்ருத் தொழுங்கள்'' என்று  கூறினார்கள்.  (அறிவிப்பவர்: அலீ இப்னு அபீதாலிப் (ரலி) அவர்கள் (அபூதாவூது, திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1132)

''ஒவ்வொரு இரவிலும் நபி(ஸல்) அவர்கள் வித்ருத் தொழுவார்கள். (சில சமயம்) இரவின் ஆரம்பித்திலும், நடு இரவிலும், இரவின் இறுதியிலும் தொழுவார்கள். அவர்களின் வித்ருத் தொழுகை ஸஹர் நேரத்தில் முடியும். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1133)

''உங்கள் இரவுத் தொழுகையில் இறுதியாக வித்ரை ஏற்படுத்துங்கள் என்று நபி(ஸல்) கூறினார்கள் (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்)  (ரியாளுஸ்ஸாலிஹீன்:1134)

''நீங்கள் சுப்ஹுநேரம் வரும் முன் வித்ருத் தொழுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)அவர்கள் (முஸ்லிம்)  (ரியாளுஸ்ஸாலிஹீன்:1135)

''இரவின் கடைசியில் எழாமல் இருப்பதை ஒருவர் பயந்தால், அவர் இரவின் ஆரம்பத்திலேயே வித்ருத் தொழட்டும். இரவின் இறுதியில் எழுந்திடுவதை ஆசைப்பட்டவர் இரவின் இறுதியில்  வித்ருத் தொழட்டும். இரவின் இறுதியில் தொழுவது, (மலக்குகளால்) சாட்சி கூறப்படத்தக்கதாகும். மேலும் அதுவே மிகச் சிறந்தது   என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1138)

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால். . .
(முஹம்மதே) படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக! (அல்குர்ஆன்:96:1)

அவன் மனிதனை கருவுற்ற சினை முட்டையிலிருந்து படைத்தான். (அல்குர்ஆன்:96:2)

ஓதுவீராக! உமது இறைவன் கண்ணியமானவன். (அல்குர்ஆன்:96:3)

அவனே எழுது கோலால் கற்றுத் தந்தான்(அல்குர்ஆன்:96:4)

அறியாதவற்றை மனிதனுக்குக் கற்றுத் தந்தான் (அல்குர்ஆன்:96:5)

அவ்வாறில்லை! தன்னைத் தேவையற்றவன் எனக் கருதியதால் மனிதன் வரம்பு மீறுகிறான். (அல்குர்ஆன்:96:6,7)

உமது இறைவனிடமே திரும்பிச் செல்லுதல் உண்டு. (அல்குர்ஆன்:96:8)

தொழும் அடியாரைத் தடுப்பவனைப் பார்க்கவில்லையா? (அல்குர்ஆன்:96:9,10)

அவர் நேர் வழியில் இருப்பதையே, அல்லது இறையச்சத்தை ஏவுவதையே அவன் பொய்யெனக் கருதி அலட்சியம் செய்வதை நீர் கவனித்தீரா? (அல்குர்ஆன்:96:11,12,13)

அல்லாஹ் பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா? (அல்குர்ஆன்:96:14)

அவ்வாறில்லை அவன் விலகிக் கொள்ளவில்லையானால் முன் நெற்றியைப் பிடிப்போம். (அல்குர்ஆன்:96:15)

அது குற்றமிழைத்த பொய் கூறிய முன் நெற்றி. (அல்குர்ஆன்:96:16)

அவன் தனது சபையோரை அழைக்கட்டும். (அல்குர்ஆன்:96:17)

நாம் நரகின் காவலர்களை அழைப்போம். (அல்குர்ஆன்:96:18)

எனவே, அவனுக்குக் கட்டுப்படாதீர்! ஸஜ்தாச் செய்வீராக! நெருங்குவீராக! (அல்குர்ஆன்:96:19)
(அல்குர்ஆன் : 96:1-19 அல் அலக்-கருவுற்ற சினைமுட்டை)

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால். . 

காலத்தின் மீது சத்தியமாக! (அல்குர்ஆன்: 103:1)

நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்.
(அல்குர்ஆன்: 103:2)

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும், உண்மையைப் போதித்து பொறுமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர. (அல்குர்ஆன்:103:3 அல் அஸ்ர் காலம்)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள்''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

இன்ஷாஅல்லாஹ் வளரும்...

அலாவுதீன் S.

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 060 6

அதிரைநிருபர் பதிப்பகம் | October 28, 2016 | ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.

கடமையான தொழுகைகளை பேணுதலின் கட்டளை!

‘’தொழுகைகளையும், நடுத்தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள்! (அல்குர்ஆன் : 2:238 அல்பகரா - அந்த மாடு)

''செயல்களில் மிகச் சிறந்தது எது? என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். ''உரிய நேரத்தில் தொழுவது'' என்று நபி (ஸல்) கூறினார்கள். ''பின்பு எது?'' என்று கேட்டேன். ''பெற்றோருக்கு நலம் பேணுதல்'' என்று கூறினார்கள். பின்பு எது? என்று கேட்டேன். ''அல்லாஹ்வின் வழியில் ஜிஹாத் செய்தல்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1074)

''ஒரு மனிதனுக்கும், இணை வைத்தலுக்கும் இடையே வேறுபாடு, தொழுகையை விடுவதாகும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1078)

''நமக்கும் (முஸ்லிமல்லாத) அவர்களுக்குமிடையே உள்ள ஒப்பந்தம் தொழுகை தான். அதை விட்டவர், இறை மறுப்பாளர் ஆகிறார்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: புரைதா(ரலி) அவர்கள் (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1079)

'' மறுமை நாளில் ஓர் அடியான் அவனின் செயல் பற்றி கணக்குக் கேட்கப்படுவதில் முதன்மையானது, தொழுகைதான். அது சீராக இருந்தால் அவர் வெற்றி பெற்று, நல்லவராகி விட்டார். அது கெட்டு விட்டால், அவர் கவலையும், துயரமும் அடைந்தவராவார். அவரது கடமையான தொழுகையில் ஏதும் குறை இருந்தால், ''என் அடியானிடம் உபரியான நன்மை உண்டா? என்று பாருங்கள்'' என, அல்லாஹ் கூறுவான். கடமையான தொழுகையில் உள்ள குறைகள் அதன் மூலம் நிறைவு செய்யப்படும். பின்பு இது மாதிரியே மற்ற செயல்களும் ஆகும் என்று  நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன் : 1081)

முதல் வரிசையின் சிறப்பு  

''நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, ''வானவர்கள் தங்களின் இறைவன் முன் அணிவகுத்தது போல் நீங்கள் அணிவகுக்க மாட்டீர்களா?'' என்று கூறினார்கள். அப்போது ''இறைத்தூதர் அவர்களே! வானவர்கள் தங்கள் இறைவன் முன் எப்படி அணி வகுத்து நிற்பர்? என்று கேட்டோம். ''அவர்கள் முதல் வரிசைகளில் நிற்பார்கள். மேலும் வரிசையில் நெருக்கமாக நிற்பார்கள்'' என்று கூறினார்கள்.  (அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு ஸமுரா(ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1082)

''நபி(ஸல்) அவர்கள் வரிசையின் ஒரு பகுதியிலிருந்து மறுபகுதிக்குச் செல்வார்கள். எங்களின் நெஞ்சுகளையும், தோள்பட்டைகளையும் தடவுவார்கள். ''நீங்கள் மாறுபட்டு நிற்காதீர்கள். உங்களின் இதயங்கள் மாறுபட்டு விடும்'' என்று கூறிவிட்டு ''நிச்சயமாக அல்லாஹ் முதல் வரிசையில் உள்ளோருக்கு அருள்புரிகிறான். வானவர்கள்; அருள்புரிய வேண்டுகிறார்கள்'' என்றும் கூறினார்கள்.  (அறிவிப்பவர்: பராஉ இப்னு ஆஸிப் (ரலி) அவர்கள் (அபூதாவூது) ரியாளுஸ்ஸாலிஹீன் : 1090 )

''வரிசைகளை (சமமாக) பேணுங்கள். தோள்பட்டைகளை சமமாக்குங்கள். இடைவெளிகளை நீக்குங்கள். உங்கள் சகோதரர்களின் கைகளை மென்மையாகப் பிடியுங்கள். ஷைத்தான்களுக்கு இடைவெளியை ஏற்படுத்தி (இடம் தந்து) விடாதீர்கள். வரிசையில் சேர்ந்து நிற்பவரை அல்லாஹ் சேர்த்துக் கொள்வான். வரிசையை விட்டு பிரிந்து நிற்பவனை, அல்லாஹ் பிரித்து விடுவான் என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) அவர்கள் (அபூதாவூது - ரியாளுஸ்ஸாலிஹீன் : 1091 )

''முதல் வரிசையை முழுமைபடுத்துங்கள். பின்பு அடுத்த வரிசையை முழுமைப்படுத்துங்கள். குறை எதுவும் இருப்பின், அது கடைசி வரிசையில் இருக்கட்டும்'' என்று  நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் (அபூதாவூது) (ரியாளுஸ்ஸாலிஹீன் :1093 )

சுப்ஹின் சுன்னத் இரண்டு ரக்அத்களின் அவசியம்

''நபி(ஸல்) அவர்கள் லுஹருக்கு முன் நான்கு ரக்அத்களையும், சுப்ஹுக்கு முன் இரண்டு ரக்அத்களையும் விடமாட்டார்கள்.  (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1100)

''நபி(ஸல்) அவர்கள் உபரியான (நபிலான) தொழுகைகளில் சுப்ஹு தொழுகையின் (முன்) இரண்டு ரக்அத்களைவிட வேறு எதிலும் மிக உறுதியாக கடைபிடிப்பவர்களாக இருந்ததில்லை. (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1101)

''சுப்ஹு தொழுகையின் (முன்) இரண்டு ரக்அத்கள், இவ்வுலகம், மற்றும் அதில் உள்ளதை விட சிறந்ததாகும் என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1102)

''நபி(ஸல்) அவர்கள் சுப்ஹின் இரண்டு ரக்அத்தில் ''குல் யாஅய்யுஹல் காஃபிரூன்'' (109 வது அத்தியாயம்), மற்றும் குல்ஹுவல்லாஹுஅஹத்''  (112 வது அத்தியாயம்) ஆகியவற்றை  ஓதுவார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்)  (ரியாளுஸ்ஸாலிஹீன்:1108)

லுஹரின் சுன்னத்

''லுஹருக்கு முன் இரண்டு ரக்அத்தையும், லுஹருக்குப் பின் இரண்டு ரக்அத்தையும் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதேன். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1113)

''நபி(ஸல்) அவர்கள் லுஹருக்கு முன் நான்கு ரக்அத்தை விடாதவர்களாக இருந்தார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1114)

''லுஹருக்கு முன் நான்கு ரக்அத்தையும், லுஹருக்குப்பின் நான்கு ரக்அத்தையும் ஒருவர் பேணி (தொழுது) வந்தால், அல்லாஹ் அவருக்கு நரகத்தை தடை செய்து விட்டான்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் (அபூதாவூது, திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1116)

''நபி(ஸல்) அவர்கள் லுஹருக்கு முன் நான்கு ரக்அத்தை தொழாவிட்டால், அதன்பின் (பர்லுக்கு பின்) அதைத் தொழுவார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1118)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமாலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (அல்குர்ஆன்: 5:8)

நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள். ((அல்குர்ஆன்: 49:6)

நம்பிக்கை கொண்டோர் (அனைவரும்) சகோதரர்கள் தாம். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள். (அல்குர்ஆன்: 49:10)

நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! (அல்குர்ஆன்: 49:11)

வானங்களிலும், பூமியிலும் மறைவாக உள்ளதை அல்லாஹ் அறிவான். நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன். (அல்குர்ஆன்:49:18)

உமது இறைவன் நாடியிருந்தால் மனிதர்களை ஒரே சமுதாயமாக ஆக்கியிருப்பான். (அவ்வாறு நாடாததால்) உமது இறைவன் அருள் புரிந்தவர்களைத் தவிர மற்றவர்கள் முரண்பட்டோராகவே நீடிப்பார்கள். இதற்காகவே அவர்களை  அவன் படைத்தான். மனிதர்கள் மற்றும் ஜின்கள் அனைவராலும் நரகத்தை நிரப்புவேன் என்ற உமது இறைவனின் வாக்கு முழுமையாகி விட்டது. (அல்குர்ஆன்: 11: 118,119 )

எனது உள்ளம் தூய்மையானது என்று நான் சாதிக்கவில்லை. எனது இறைவன் அருள் புரிந்ததைத் தவிர உள்ளம் தீமையைத் தான் அதிகம் தூண்டுகிறது என் இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் (என்றும் கூறினார்). (அல்குர்ஆன் : யூஸுஃப் - 12:53 யூஸுஃப் நபி)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் '' 
இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன் S.

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 059 11

அதிரைநிருபர் பதிப்பகம் | October 21, 2016 | , , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.

(ஜமாஅத்) கூட்டுத் தொழுகையின்  சிறப்பு

''கூட்டுத் தொழுகை என்பது, தனித்துத் தொழுவதைவிட தகுதியால் 27 மடங்கு சிறந்ததாகும் என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1064)

''ஒருவர், மற்றவருடன் கூட்டாகத் தொழுவது, தன் வீட்டில், தன் கடையில் தனித்துத் தொழுவதை விட 25 மடங்கு கூடுதல் நன்மையாகும். ஒருவர் அழகிய முறையில் உளுச்செய்து, பின்பு தொழுகைக்காகவே தவிர வேறு எதற்குமின்றி பள்ளிவாசலுக்கு வந்தால், அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் ஒரு பதவி உயர்த்தப்படாமல் இருப்பதில்லை. அவர் தொழுது விட்டதும் தான் தொழுத இடத்தில், தன் உளூ முறியாமல் அவர் அமர்ந்திருந்தால், வானவர்கள் அவருக்காக,  ''இறைவா! இவரை மன்னிப்பாயாக! இறைவா! இவருக்கு அருள்புரிவாயாக!'' என்று கூறி பிரார்த்திருப்பார்கள். அவர் (மறு) தொழுகையை எதிர்பார்த்திருக்கும் வரை இது நீடிக்கும் என்று  நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1065)

''நபி(ஸல்) அவர்களிடம் ஒரு குருடர் வந்தார், ''இறைத்தூதர் அவர்களே!  பள்ளிவாசலுக்கு என்னை அழைத்து வருபவர் எவருமில்லை'' என்று கூறிய அவர், தன் வீட்டிலேயே தொழுது கொள்ள தனக்கு சலுகை அளிக்கும்படி நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார். உடனே அவருக்கு சலுகை அளித்தார்கள். அவர் திரும்பியபோது அவரை அழைத்த நபி(ஸல்) அவர்கள், ''தொழுகைக்காக பாங்கு சப்தத்தைக் கேட்கிறீரா?'' என்று கேட்டார்கள். ''ஆம்'' என்றார். ''அப்படியானால் (பள்ளிக்கு வருவது மூலம்) பதில் கூறுவீராக'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1066)

''என் உயிரை தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக, விறகு கொண்டு வர நான் கட்டளையிட்டுவிட்டு, பின்பு தொழுவதற்காக பாங்கு கூற கட்டளையிட்டு, அதன்பின் ஒருவரை மக்களுக்கு  இமாமத் செய்யச் சொல்லிவிட்டு (தொழுகைக்கு வராத) ஆண்களிடம் நான் சென்று அவர்களை அவர்களின் வீட்டோடு எரித்து விட விரும்புகிறேன்'' என்று நபி(ஸல்)கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)  அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1068)

''நாளை (மறுமையில்) அல்லாஹ்வை முஸ்லிமாக ஒருவன் சந்திக்க விரும்பினால் பாங்கு கூறி அழைக்கப்பட்டதும், ஐந்து நேரத் தொழுகைகளைப் பேணட்டும். நிச்சயமாக அல்லாஹ், உங்களின் நபிக்கு நேரான வழி முறைகளை கடமையாக்கி உள்ளான். நிச்சயமாக இவைகளும் நேரான வழிமுறைகளில் உள்ளவைகளே. தொழுகைக்கு வரப் பிந்தியவர் தன் வீட்டில் தொழுதவர் போல், உங்கள் வீடுகளிலேயே நீங்கள் தொழுதால், உங்கள் நபியின் வழிமுறையை விட்டவர்களாவீர்கள். உங்கள் நபியின் வழிமுறையை நீங்கள் விட்டுவிட்டால், நீங்கள் வழி தவறியவராவீர்கள்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். நயவஞ்சகத்தனம் தெளிவாக அறியப்பட்ட நயவஞ்சகரைத் தவிர  வேறு எவரும் தொழுகைக்கு வராமல் இருந்ததில்லை. (எங்கள் காலத்தில்) இரண்டு மனிதர்களின் தோள்களுக்கிடையே தொங்கியவராக கொண்டு வரப்பட்டு முதல் வரிசையில் நிறுத்தப்படுவார் (என்ற நிலை இருந்ததது). (அறிவிப்பவர்: இப்னுமஸ்ஊத் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1069)

''ஒரு கிராமத்தில், காட்டில் மூன்று (முஸ்லிம்) நபர்கள் இருந்து, அவர்களிடையே தொழுகை பேணப்படவில்லையானால், அவர்களை ஷைத்தான் சூழ்ந்து கொள்ளாமல் இருப்பதில்லை. எனவே, ஜமாஅத்தை பேணிக் கொள்ளுங்கள். ஏனெனில் பிரிந்து நிற்கும் ஆட்டைத்தான் ஓநாய் சாப்பிடும் என்று  நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூதர்தாஉ (ரலி) அவர்கள் (அபூதாவூது) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1070)

''ஜமாஅத்துடன் இஷாவை ஒருவர் தொழுதால், பாதி இரவு வரை அவர் வணங்கியவர் போலாவார். ஜமாஅத்துடன் சுப்ஹைத் தொழுதால் அவர் இரவு முழுதும் வணங்கியவர் போலாவார்''என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (அறிவிப்பவர்: உஸ்மான் இப்னு அஃபான் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1071)
     
''ஜமாஅத்தில் இஷாத் தொழுகைக்காக ஒருவர் கலந்து கொண்டால், அவருக்கு பாதி இரவு வரை வணங்கிய நன்மை கிடைக்கும். ஜமாஅத்தில் இஷா, சுப்ஹு ஆகிய தொழுகைகளைத் தொழுதால், அவருக்கு இரவு முழுதும் நின்று தொழுத நன்மை கிடைக்கும் என்று நபி(ஸல்) கூறினார்கள்.   (அறிவிப்பவர்: உஸ்மான் இப்னு அஃபான் (ரலி) அவர்கள் (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1071)

''இஷா மற்றும் சுப்ஹுத் தொழுகையின் மாண்பை மக்கள் அறிந்து கொண்டால், அவர்கள் தவழ்ந்தேனும் அந்த இரண்டு தொழுகைக்கும் வருவார்கள்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1072)

''நய வஞ்சகர்களுக்கு சுப்ஹு, இஷாத் தொழுகைகளை விட கடுமையானதாக வேறு எதுவும் இல்லை. அவ்விரண்டிலும் உள்ளதை (சிறப்பை) அவர்கள் அறிந்து கொண்டால், தவழ்ந்தேனும் (சுப்ஹு, இஷா) அவ்விரண்டுக்கும் வருவார்கள்''என்று  நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (அபூதாவூது) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1073)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...

மிக உயர்ந்த உமது இறைவனின் பெயரைத் துதிப்பீராக! (அல்குர்ஆன்: 87:1)

அவனே படைத்தான் ஒழுங்குற அமைத்தான். (அல்குர்ஆன்: 87:2)

அவனே நிர்ணயித்தான். வழி காட்டினான். (அல்குர்ஆன்: 87:3)

அவனே மேய்ச்சலுக்குரியதை வெளிப்படுத்தினான். (அல்குர்ஆன்: 87:4)

பின்னர் அவற்றை உலர்ந்த கூளங்களாக்கினான். (அல்குர்ஆன்: 87:5)

(முஹம்மதே) உமக்கு  ஓதிக் காட்டுவோம். நீர் மறக்க மாட்டீர். (அல்குர்ஆன்: 87:6)

அல்லாஹ் நாடியதைத் தவிர. அவன் பகிரங்கமானதையும், மறைவானதையும் அறிகிறான். (அல்குர்ஆன்: 87:7)

(முஹம்மதே) எளியதை உமக்கு மேலும் எளிதாக்குவோம். (அல்குர்ஆன்: 87:8)

அறிவுரை பயன் தருமானால் நீர் அறிவுரை கூறுவீராக! (அல்குர்ஆன்: 87:9)

(இறைவனை) அஞ்சுபவன் படிப்பினை பெறுவான். (அல்குர்ஆன்: 87:10)

துர்பாக்கியசாலி அதிலிருந்து விலகிக் கொள்வான். (அல்குர்ஆன்: 87:11)

அவனே பெரும் நெருப்பில் கருகுவான். (அல்குர்ஆன்: 87:12)

பின்னர் அதில் சாகவும் மாட்டான். வாழவும் மாட்டான். (அல்குர்ஆன்: 87:13)

தூய்மையாக வாழ்பவன் வெற்றி பெற்றான். (அல்குர்ஆன்: 87:14)

தனது இறைவனின் பெயரை நினைத்து தொழுதான். (அல்குர்ஆன்: 87:15)

ஆனால் நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையே தேர்வு செய்கிறீர்கள். (அல்குர்ஆன்: 87:16)

மறுமையே சிறந்ததும், நிலையானதுமாகும். (அல்குர்ஆன்: 87:17)

இது முந்தைய வேதங்களிலும், இப்ராஹீம், மூஸாவுடைய வேதங்களிலும் உள்ளது. (அல்குர்ஆன்: 87:18,19)

(அல்குர்ஆன்: 87:1-19 அல்அஃலா- மிக உயர்ந்தவன்)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...

தீர்ப்பு நாளை பொய்யெனக் கருதியவனைப் பார்த்தீரா? (அல்குர்ஆன்: 107:1)

அவனே அனாதையை விரட்டுகிறான். (அல்குர்ஆன்: 107:2)

ஏழைக்கு உணவளிக்க அவன் தூண்டுவதில்லை. (அல்குர்ஆன்: 107:3)

தமது தொழுகையில் கவனமற்று தொழுவோருக்குக் கேடு தான். (அல்குர்ஆன்: 107:4,5)

அவர்கள் பிறருக்குக் காட்டுவதற்காகத் தொழுகின்றனர். (அல்குர்ஆன்: 107:6)

அற்பமானதையும் (கொடுக்க) மறுக்கின்றனர். (அல்குர்ஆன்: 107:7) (அல்குர்ஆன்: 107:1-7 அல் மாவூன்- அற்பப் பொருள்)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன் S.


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு