Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label கண் பார்வை விழிப்புணர்வு. Show all posts
Showing posts with label கண் பார்வை விழிப்புணர்வு. Show all posts

கண்மணியே கவனி! 19

அதிரைநிருபர் | March 11, 2011 | , ,

கண் பார்வை விழிப்புணர்வு பதிவுகள் - 2


வீதிக்கு வீதி
விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள்...
விழிகளுக் கென்றும்
மொழிதல் வேண்டும்!

எண்ணும் எழுத்தும்
கண்ணெனக் கொள்-
கண்ணொளி போயின்
எண்ணேது எழுத்தேது?

கிட்டப் பார்வையும்
குழி லென்ஸும்
சோடா புட்டியென
'சேடை' பேச்சும்
முன்னேற உனக்கு
முட்டுக் கட்டை!

ஓரப் பார்வைகளை
ரசிக்கும் வயதில்
தூரப் பார்வை
துயர மல்லவா?

சின்னத்திரையும்
பெரிய திரையும்
விழித்திரையின் எதிரிகள்...
கணினித்திரையின்
காணொளிகூட
கண்ணொளி உண்ணும் கருவியே.

நேரம் தவறிய தூக்கம்
நிதானமற்ற நோக்கும்
வர்ண வண்ண உலகை
மங்கலாய் மற்றிக் காட்டும்.

உறக்கமும் இறத்தலும்
உக்கிர இருட்டு
பார்வை பழுதானால்
பகல்கூட இரவே!

கண்களை உருட்டி
களைப்பை விரட்டு
காலையும் மாலையும்
கண்களைக் கழுவு!

காய்கறி கீரையும்
காரட்டுச் சாரையும்
கலந்த சாப்பாடு
கண் பார்வைக்கு காப்பீடு!

முகத்திற்கு நேரே
விளக்கொளி தவிர்த்து
வாசிக்கும் வரிகளில்
வெளிச்சம் பாய்ச்சு!

இறைவன் இமைகள்
தந்திராவிடில்
கண்களைக் காத்தல்
கடினமா யிருந்திருக்கும்!

கண்களைப் பேண்
களங்களைக் காண்!

 -- சபீர்
    Sabeer.abuShahruk


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு