Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

படிக்கட்டுகள் நூல் – பதிப்புரை 0

அதிரைநிருபர் | November 29, 2020 |

 ‘அதிரை நிருபர்’ வலைத்தளம் www.adirainirubar.in அமைதியின் ஆளுமையாகக் கலை, இலக்கியம், வாழ்வியல், அரசியல், சமுதாய நன்னோக்கு, பொருளாதாரம், சுய சரிதைகள், வரலாற்றுக் குறிப்புகள், விழிப்புணர்வு, ஊர்ச் செய்திகள், நிஜத்தை நிமிரவைக்கும் உண்மைகள் எனப் பல்வேறு பகுதிகளாகத் தொடர்ந்து பதிவுகளை வெளியிடுவதில் தனித்துவத்துடன் நிமிர்ந்து நிற்கிறது.

‘அதிரைநிருபர்’ தளத்தில் வெளியாகும் பதிவுகளை எழுதும் பதிவர்களின் எழுத்தோவியங்களில் உயிரோட்டமும், உணர்வுகளோடு உரசும் உரமும் இருப்பதை அதை வாசிக்கும் வாசகர்கள் நன்கறிவர். சகோதரர் ஜாகிர் ஹுசேன் அவர்களால் ஏராளமான பதிவுகள் எழுதப்பட்டு அதிரைநிருபர் தளத்தில் வெளியாகி இருக்கின்றன. குறிப்பாக வாழ்வியலை வருடும் எழுத்தோவியங்கள், நகைச்சுவை ததும்பும் கருத்துருவாக்கங்கள் கொண்ட பதிவுகள், தான் பிறந்த, வளர்ந்த, வசிக்கும் மண்வாசனையும் அதன் கலாச்சாரமும் சார்ந்த கட்டுரைகள், இன்னும் நிகழ்காலத்தோடு நிமிர்ந்து நடைபோடும் அவரின் எழுத்துக்கள் உறங்கும் உள்ளங்களையெல்லாம் உசுப்பிவிட்டு விழித்தெழச் செய்யும். மேலும் பல்வேறான விழிப்புணர்வு கட்டுரைகள் பலரை வெகுவாகக் கவர்ந்திருப்பது அவருடைய எழுத்திற்கான வெற்றியே!

வாழ்வியலை வருடும் பதிவுகளின் வெற்றியைத் தொடர்ந்து, தான் சார்ந்த சுய அனுபவத்தின் பலனாய் புத்துயிரூட்டும் விதமான தொடரொன்றை ஒவ்வொரு அத்தியாயத்திற்குமெனத் தனியொரு கரு கொண்டு எழுதி அதனை எளிய வடிவில் புரிந்து கொள்ளும் விதமாக ஒவ்வொரு அத்தியாயத்தையும் நகைச்சுவையோடு தனது சமயோசித சூழல் பேசும் மொழியில் வடித்திருக்கிறார்.

ஒவ்வொரு அத்தியாயமும் அதிரைநிருபர் வலைத்தளத்தில் வெளியானதும் வாசகர்களின் கருத்தாய்வுகளும் இந்தத் தொடருக்கு மேலும் வலுசேர்த்தது.
மிகச் சிறந்த சிந்தனையாளர், சமகால சக மனிதர்களோடு அவர்களின் வழக்காடு மொழியிலேயே எழுத்தோடு உரையாடக் கூடியவர், சமுதாய மக்களின் ஒற்றுமையை மற்றும் குடும்ப உறவுகளின் ஒற்றுமையை வலியுறுத்தும் ஏராளமான கட்டுரைகளுக்கும் சொந்தக்காரர் சகோதரர் ஜாகிர் ஹுசேன் அவர்கள்.

அதிரைநிருபர் வலைத்தளத்தின் மூன்றாவது வெளியீடாக, எங்கள் நட்சத்திர எழுத்தாளரின் தொடர் ஒன்று புத்தகமாக வெளிவருவதில் நாங்கள் பெருமகிழ்வடைகிறோம்!

வாழ்த்துகின்றோம்!

நெறியாளர்
editor@adirainirubar.in
www.adirainirubar.in

அலைபேசி எண் : 8220071216 என்ற வாட்சப் எண்ணுக்குத் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம் !

நபி(ஸல்) வரலாறு வினா விடைகள் 0

தாஜுதீன் (THAJUDEEN ) | November 25, 2020 |

 இறைத் தூதர்களில் இறுதியானவராகவும் இஸ்லாத்தின் வழிகாட்டியாகவும் வந்த முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை பற்றித் தெரிந்து கொள்வது முஸ்லிம்களின் மீது முக்கிய கடமையாகும். அவர்களின் வரலாறுகள் தொடர்பாக ஏராளமான நூல்கள் வந்திருந்தாலும் அவற்றில் பெரும்பாலும் ஆதாரமில்லாத கற்பனைச் செய்திகளே நிறைந்துள்ளன.

இந்தக் குறையை நிறைவு செய்யும் வண்ணமும் நமது குழந்தைகளுக்குக் கேள்வி பதில் வடிவத்தில் எளிமையாகக் கற்றுக் கொடுப்பதற்கும் இந்தத் தொடரை நாம் ஏற்படுத்தியுள்ளோம். இத்தொடரைப் படிக்கும் சிறுவர்கள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையை முழுமையாக அறிந்த திருப்தி ஓரளவு கிடைக்கும் என்று நம்புகிறோம்.

இத்தொடரை உங்கள் குழந்தைகளைப் படிக்கச் சொல்லுங்கள். அல்லது நீங்கள் படித்து நபிகளாரின் வரலாறை சொல்லிக் கொடுங்கள்.

கேள்வி: நபி (ஸல்) அவர்கள் பிறந்த கிழமை எது?

பதில்: திங்கள் கிழமை (ஆதாரம்: முஸ்லிம் 1977)

கேள்வி: நபி (ஸல்) அவர்கள் எந்த வருடத்தில் பிறந்தார்கள்?

பதில்: கி.பி. 570 என்று சிலரும் கி.பி 571 ஏப்ரல் 21 என்று சிலரும் குறிப்பிடுகின்றனர். அரபி மாதப்படி ரபீவுல் அவ்வல் 12 என்று சிலரும் ரபீவுல் அவ்வல் 9 என்று சிலரும் குறிப்பிடுகின்றனர். (நபி (ஸல்) அவர்கள் பிறப்பு தொடர்பாக வலிமையான ஆதாரங்களுடன் உள்ள எந்தச் செய்தியையும் நாம் அறியவில்லை. வரலாற்று நூல்களில் பிரபலமாக எழுதப்பட்டுள்ளதை இங்கே குறிப்பிட்டுள்ளோம்)

கேள்வி: நபி (ஸல்) அவர்களின் தந்தை பெயர் என்ன?

பதில்: அப்துல்லாஹ் (ஆதாரம்: புகாரீ 2700 )

கேள்வி: நபி (ஸல்) அவர்களின் தாயார் பெயர் என்ன?

பதில்: ஆமினா (ஆதாரம்: முஸ்லிம் 3318)

கேள்வி: நபி (ஸல்) அவர்களின் பாட்டனார் பெயர் என்ன?

பதில்: அப்துல் முத்தலிப் (ஆதாரம்: புகாரீ 2864)

கேள்வி: நபி (ஸல்) அவர்களின் தந்தையுடன் பிறந்தவர்கள் ஆண்கள் எத்தனை பேர்?

பதில்:
1. ஹாரிஸ்
2. ஸுபைர்
3.அபூதாலிப்
4.அப்துல்லாஹ்
5. ஹம்ஸா (ரலி)
6. அபூலஹப்
7.கைதாக்
8. முகவ்விம்
9. ஸிஃபார்
10. அப்பாஸ் (ரலி) ஆகிய பத்து நபர்களாகும். (ஆதாரம்: இப்னு ஹிஷாம்)

கேள்வி: இவர்களில் இஸ்லாத்தை ஏற்றவர்கள் யார்?

பதில்: ஹம்ஸா (ரலி), அப்பாஸ் (ரலி) (ஆதாரம்: அல்இஸ்தீஆப்)

கேள்வி: நபி (ஸல்) அவர்களின் தந்தையுடன் பிறந்த பெண்கள் எத்தனை பேர்?

பதில்:
1. ஸஃபிய்யா (ரலி),
2. ஆத்திகா,
3. அர்வா,
4. உமைய்யா,
5. பர்ரா,
6. உம்மு ஹகீம் ஆகிய ஆறு நபர்கள். (ஆதாரம்: மஸாயிலு இமாம் அஹ்மத்)

கேள்வி: இவர்களில் இஸ்லாத்தை ஏற்றவர்கள் யார்?

பதில்: ஸஃபிய்யா (ரலி), மற்றவர்கள் விஷயத்தில் கருத்து வேறுபாடு உள்ளது. (ஆதாரம்: பத்ஹுல் பாரீ)

கேள்வி: நபி (ஸல்) அவர்களின் தந்தை எப்போது இறந்தார்?

பதில்: நபி (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்பே இறந்து விட்டார். (ஆதாரம்: இஸ்தீஆப்)

கேள்வி: நபி (ஸல்) அவர்களின் தாயார் எப்போது இறந்தார்கள்?

பதில்: நபி (ஸல்) அவர்கள் ஆறு வயதை அடைந்தபோது இறந்தார். (ஆதாரம்: இஸ்தீஆப்)

கேள்வி: நபி (ஸல்) அவர்களின் பெற்றோர்கள் இறந்த பின்னர் அவர்களை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர்கள் யார்?

பதில்: அப்துல் முத்தலிப். அதன் பின்னர் நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அபூதாலிப் (ஆதாரம்: அஸ்ஸீரத்துன் நபவிய்யா லி இமாம் தஹபீ)

கேள்வி: நபி (ஸல்) அவர்களை வளர்த்த பெண்மணி யார்?

பதில்: உம்மு ஐமன் (ரலி) (ஆதாரம்: புகாரீ 3737)

கேள்வி: நபி (ஸல்) அவர்களுக்குப் பாலூட்டியவர்கள் யார்? யார்?

பதில்: 1. ஸுவைபா (ஆதாரம்: புகாரீ 5101), 2. ஹலீமா அஸ்ஸஃதிய்யா (ஆதாரம்: இப்னு ஹிப்பான் 6335)

கேள்வி: நபி (ஸல்) அவர்கள் சிறு வயதில் என்ன வேலை செய்தார்கள்?

பதில்: ஆடு மேய்த்தல் (ஆதாரம்: புகாரீ 3406)

கேள்வி: நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராவதற்கு முன்னர் குறைஷிகள் கஅபத்துல்லாஹ்வை புதுப்பிக்கும்போது நபி (ஸல்) அவர்களின் வயது என்ன?

பதில்: 35 (ஆதாரம்: தப்ரானீ பாகம்: 18, பக்கம்: 342)

கேள்வி: கஅபத்துல்லாஹ்வைப் புதுப்பிக்கும்போது நபி (ஸல்) அவர்கள் என்ன உதவியைச் செய்தார்கள்?

பதில்: கஅபத்துல்லாஹ் கட்டுவதற்குரிய கற்களை எடுத்துச் செல்லும் வேலை செய்தார்கள். (ஆதாரம்: புகாரீ 1582)

கேள்வி: நபி (ஸல்) அவர்களின் முதல் மனைவியின் பெயர் என்ன?

பதில்: கதீஜா (ரலி) (ஆதாரம்: புகாரீ 3816)

கேள்வி: நபி (ஸல்) அவர்கள் தமது எத்தனையாவது வயதில் கதீஜா (ரலி) அவர்களைத் திருமணம் முடித்தார்கள்? அப்போது கதீஜா (ரலி) அவர்களின் வயது என்ன?

பதில்: நபி (ஸல்) அவர்களின் வயது 25, கதீஜா (ரலி) அவர்களின் வயது 40 (ஆதாரம்: பத்ஹுல் பாரீ)

கேள்வி: நபி (ஸல்) அவர்களுடன் கதீஜா (ரலி) அவர்கள் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள்?

பதில்: 25 ஆண்டுகள் (ஆதாரம்: பத்ஹுல் பாரீ)

கேள்வி: கதீஜா (ரலி) அவர்கள் உலகத்தில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள்?

பதில்: 65 ஆண்டுகள் (ஆதாரம்: பத்ஹுல் பாரீ)

கேள்வி: நபி (ஸல்) அவர்கள் கதீஜா (ரலி) அவர்களைத் திருமணம் முடித்தபோது அவர்கள் கன்னிப் பெண்ணா? விதவையா?

பதில்: இரண்டு திருமணங்கள் முடித்தபின்னர் விதவையாக இருந்தார்கள் (ஆதாரம்: பத்ஹுல் பாரீ)

கேள்வி: கதீஜா (ரலி) அவர்களின் முந்தைய கணவர்களின் பெயர்கள் என்ன?

பதில்:
1. அபூ ஹாலா பின் ஸுராரா,

2. அதீக் பின் ஆயித் (ஆதாரம்: பத்ஹுல் பாரீ)

கேள்வி: கதீஜா (ரலி) அவர்களுக்கு அன்றைய காலத்தில் இருந்த பட்டப் பெயர் என்ன?

பதில்: தாஹிரா – பரிசுத்தமானவள் (ஆதாரம்: தாரிக் திமிக்ஸ், பக்கம் 109)

கேள்வி: நபி (ஸல்) அவர்கள் தம் மனைவியர்களில் அதிகம் நேசித்த மனைவி யார்?

பதில்: கதீஜா (ரலி) (ஆதாரம் புகாரீ 3818)

கேள்வி: நபி (ஸல்) அவர்களுக்கு யார், யார் மூலம் குழந்தை பிறந்தது?

பதில்: அன்னை கதீஜா (ரலி), மாரியத்துல் கிப்திய்யா (ரலி) (ஆதாரம்: புகாரீ 3818, 1303, தாரகுத்னீ பாகம்: 4, பக்கம்: 132)

கேள்வி: மாரியத்துல் கிப்திய்யா (ரலி) அவர்கள் மூலம் நபி (ஸல்) அவர்களுக்கு பிறந்த குழந்தையின் பெயர் என்ன?

பதில்: இப்ராஹீம் (ஆதாரம்: புகாரீ 1303)

கேள்வி: நபி (ஸல்) அவர்களது குழந்தை எத்தனை வயதில் இறந்தது?

பதில்: 16 மாதம் (ஆதாரம்: அபூதாவூத் 2772)

கேள்வி: நபி (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம் அவர்கள் இறந்த போது நடந்த முக்கிய நிகழ்ச்சி என்ன?

பதில்: சூரிய கிரகணம் ஏற்பட்டது (ஆதாரம்: புகாரீ 1043)

கேள்வி: நபி (ஸல்) அவர்களின் பெண் குழந்தைகள் பெயர்கள் என்ன?

பதில்: ஜைனப் (ரலி), ருகைய்யா (ரலி), உம்மு குல்ஸþம் (ரலி), ஃபாத்திமா (ரலி) (ஆதாரம் புகாரீ 516, 5842, 357 அஹ்மத் 525)

கேள்வி: ஜைனப் (ரலி) அவர்களின் கணவர் பெயர் என்ன?

பதில்: அபுல் ஆஸ் பின் ரபீவு (ஆதாரம்: திர்மிதீ 1062)

கேள்வி: ஃபாத்திமா (ரலி) அவர்களின் கணவர் பெயர் என்ன?

பதில்: அலீ (ரலி) (ஆதாரம்: புகாரீ 441)

கேள்வி: அலீ (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுக்கு என்ன உறவு?

பதில்: நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அபூதாலிப் அவர்களின் மகன் அலீ (ரலி) அவர்கள் (ஆதாரம்: புகாரீ 441)

கேள்வி: நபி (ஸல்) அவர்களின் குழந்தைகளில் இறுதியாக இறந்தவர் யார்?

பதில்: பாத்திமா (ரலி), நபி (ஸல்) அவர்கள் இறந்து ஆறு மாதம் கழித்து இறந்தார்கள் (ஆதாரம்: புகாரீ 3093)

அஹ்மது பாகவி
நன்றி: அல்பாக்கவி.காம்

காலணிகளை வெளியே விடவும்! 0

அதிரைநிருபர் | November 24, 2020 |

அம்மா…!
இந்த
இடிபாடுகளுக்கிடையே
என்னை
இறக்கி வைத்துவிட்டு
எங்கே போனாய்

சுயநலக் கோடரியால்
எல்லா
கிளைகளையும் துண்டித்துக்கொண்டு
ஒற்றை மரமென
ஆகிவிட்ட மனிதக் காடுகளில்
நிழலின்றி அவதியுறுகிறேன்

கத்தியையும் கடப்பாறைகளையும்
கலந்தாலோசிக்க விட்டால்
காயங்கள்தானே மிஞ்சும்?

பாவிக்கும் காவிக்கும்
இயல்பாக அமைந்திட்ட
எதுகை மோனையோடு
எடு கையில்
முனை கூரிய வாளென
குத்திச் சாய்க்கிறது
ஒரு கூட்டம்

அரிதாரம் பூசி
அவதாரமாய்
அபிநயிப்போரிடமோ

அலங்காரமாய்ப் பேசி
அரை மயக்கத்தில் ஆழ்த்துவோரிடமோ
சிக்கித் தவிக்கிறது
சமுதாயம்

அப்பாவிகள் அணிவித்த
மகுடத்தின்
மந்திரக்கோலையும் மிஞ்சும்
மகிமையால்
சொத்துக் குவிப்பிலோ
சுகக் களிப்பிலோ
திளைக்கிறது தலைமை

அலாவுதீன் பூதம் கொண்டு
அழிக்க முனைந்தாலும்
அலிபாபாவின் திருடர்களாய்
மிகைக்கிறார்கள்

துறவி வேடதாரிகள்
இல்லறம் சுகிக்க,
நல்லற இலக்கணங்களாம்
அன்பு
பாசம்
அக்கறை
நேசம் என
மனிதப் பண்புகள் அற்றுப்போய்
இல்லறப் போர்வைக்குள்
ஒற்றைப்பட்டுத் தவிக்கிறது மானுடம்

உட்காயங்களால் அழும்
உன்
சேயை விட்டு
எங்கே சென்றாய் அம்மா

கைகளைத் தூளியாக்கி
மெய்யோடு அனைப்பாயே
அந்த
மந்திரத் தொடுகைக்கு
ஏங்கித் தவிக்கவிட்டு
எங்கே போனாய்

கால் நீட்ட இடம் இன்றி
கை விரிக்க வலம் இன்றி
நிமிரவோ திமிறவோ
வழியின்றி
குறுகிக்கிடந்த கருவரையில்
உண்ட சக்தியையும்


Sabeer Ahmed

தேனீ உமர்தம்பி – இணையத்தில் இணைப்பிலே ! 0

அதிரைநிருபர் | November 23, 2020 |

கணினித் தமிழ் வரலாற்றில் முத்திரை பதிக்க அடிக்கல் நாட்டிய மிக முக்கியமானவர்களில் ஒருவர்தான், அதிரையின் மைந்தன் தேனீ உமர்தம்பி அவர்கள்!

வாழும் நாட்களில் வீசிய வசந்தம் அவரின் இறப்புக்குப் பின்னர்தான் பாரில் பரவி வியாபித்தது.

சிறு வயதிலிருந்தே அதிகமதிகம் அவர்களோடு நெருக்கமாகவும் பிரியமாகவும் பழகியவர்களுக்குத் தெரிந்திருக்கும். அவர்களின் ஒவ்வொரு முயற்சியும் அதற்கான சிரத்தையும் சிலிர்க்க வைக்கும் என்பதே. அதோடு, அதன் பின்னர் கிடைக்கும் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்வதோடு இருக்காமல் எப்படி அதனை எட்டிப் பிடித்தார்கள் என்று விளக்கவும் செய்வார்கள்.

1994ம் வருடம் அமீரகத்தில் அங்கொன்றும் இங்கொன்றும் இணையம் பரவ ஆரம்பித்த காலங்களில் தனது வீட்டில் இணணயத் தொடர்பைப் பெற்று அங்கிருந்து கொண்டு அவரது சொந்தங்களுக்கும், நண்பர்களுக்கும் அவரவர்களின் அலுவலக கணினிக்கு ஏற்படும் பிணிகளுக்கு மருத்துவம் செய்வார்கள்.

இன்றைய கால கட்டத்தின் அசுர வளர்ச்சியின் பலனாய் கணினிக்குள் ஊடுருவ எத்தனையோ மென்பொருள்கள் வந்து விட்டன, ஆனால் அப்போது இருந்தச் சூழல் முற்றிலும் வேறுமட்டுல்ல தொழில்நுட்பத்தில் எல்லாமே புதிது.

2002 வருடம் துபாயிலிருந்து விடைபெற்று ஊருக்குச் சென்ற இரண்டொரு மாதங்களிலேயே அதிரையில் இணையத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு இங்கிருக்கும் (துபாய், மஸ்கட்) கணினிகளுக்கு அவ்வப்போது ஏற்படும் காய்ச்சலை சரிபார்க்கவும் செய்தார்கள் அதோடு அதன் மேம்பாட்டையும் சீரமைத்து தந்தார்கள்.

அதிரைச் சகோதரர்களின் கணினி (தமிழ்) தொழில் நுட்ப வளர்ச்சியில் மட்டுமல்ல இணைய கணினித் தமிழ் வளர்ச்சியில் அவர்களின் பங்கும் போற்றத்தக்கதாக அமைந்திருப்பது சந்தோஷப்படக்கூடிய விஷயம்.

இந்தியா பாக்கிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் நேற்று முன் தினம் பெங்களூருவில் நடந்தது, அப்போது சட்டென்று ஞாபகத்திற்கு வந்தது தேனீ உமர்தம்பி அவர்கள் 17 வருடங்களுக்கு முன்னால் இந்தியா பாக்கிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் இங்குச் சார்ஜாவில் நடந்து கொண்டிருக்கும்போது அவர்களின் (துபாய்) வீட்டுக் கணினியில் போட்டுக் காட்டிய புள்ளி விபரங்களும் கிராஃபிக்ஸும் இன்றும் அப்படியே பசுமையாக நினைவுக்கு வந்ததை மறைக்க முடியவில்லை.

இப்போதைய வளர்ச்சியில் இருக்கும் மென்பொருள்களின் உதவியால் அப்படியே மைதானத்தில் பார்க்கும் வீரர்களின் செயல்களைச் செயற்கையாகக் காணொளி போன்று செய்ய முடியும் ஆனால் அன்றே அவர்கள் ஒற்றை வரிக் கோட்டில் (single line draw) வண்ணங்களில் செய்து காட்டினார்கள்.

அதன் தொடர்ச்சியாக அவர்களை நினைவுகூறலாமே என்று மனதுக்குள் எண்ணம் தோன்றியது அதன் விளைவே இந்த ஒலிப்பேழை காணொளிப் பதிவு உங்களனைவரின் பார்வைக்காகவும் நினைவில் நிழலாடவும்.

https://www.newindianexpress.com/states/tamil-nadu/2010/jun/21/honour-forgotten-father-of-tamil-computing-125174.html#

OUR NEW WEBSITE https://adirainirubar.in/ 0

அதிரைநிருபர் | November 07, 2020 |

 


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு