Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label ZAEISA. Show all posts
Showing posts with label ZAEISA. Show all posts

தா (த்) தா வின் தொப்பி அட்வைஸ்...! 1

அதிரைநிருபர் பதிப்பகம் | November 11, 2014 | , , , , ,

(அப்பா பகலுணவு சாப்பிட்டபின் பரிமாறியவற்றை அப்புறப்படுத்த பேரன் வருகிறார்) 

பேரன்: அப்பா நல்லா சாப்பிடீங்களா.....? பொறிச்சமீனெல்லாம் அப்படீயே இரிக்கிது.........?

அப்பா: அல்ஹம்துலில்லாஹ்! நல்லா சாப்புட்டேன், பொறிச்சா மீனெல்லாம் அப்டீத்தான் இரிக்கும்... ஓடாது. நீங்க வெரசா அந்தவிசிறியை எடுத்து தாங்கம்மா. (பேரன் சிறிது நேரத்தில் விசிறியுடன் வர ) 

தொடர்ந்து...

அப்பா: என்னா நீங்க இந்நேரத்துல வூட்ல இரிக்கிரிய..

பேரன்: இன்னக்கி ஸ்கூல் லீவுப்பா... அதான்... நா வீசிவுடட்டுமா....?

அப்பா: அப்பாமேலே உங்களுக்கு ரொம்ப வொஹ்ப்புதான் சரி வீசுங்க (மனதிற்குள் புள்ளக்கி லீவு அதுவுமா காசு மொடயாயிருக்கும்)... அன்னக்கி உங்கள வெரட்டிவுட்டது தலைல தொப்பி இல்லைண்டுதானாம் அந்த தம்பி சொன்னுச்சு.அது உங்க குத்தம்தானே...?

பேரன்: தொப்பி போடாட்டி தேவலாம்னு சொல்றாங்களே....

அப்பா: சும்மா பத்தியத்துக்கு கேட்டமாரி தேவலாம்னு சொல்லாதிய.. போட்டா எந்த கேடுமில்லையே... சங்கைதானே.... ஏன்னா.... நாம இந்த ஊர்ல பெரும்பாலாயிருந்தாலும், இந்த நாட்டுல சிறுபான்மையா இருக்கிறோம். மேலும், இந்த ஒலகத்துல இருக்கிற ஒவ்வொரு மதத்துக்கும் ஒரு அடையாளமுண்டு. அது மாதிரி ஒலகத்துல நம்ம முஸ்லிம்களை எங்கேப்பாத்தாலும் பொதுவா தலைய மூடித்தான் பாக்கிறோம்.அப்புறம் தொழுகைக்கு முன் உங்களை சங்கையாக்கிக் கொள்ளுங்கன்னும் சொல்றாங்க..!

தொப்பி போடறதால சங்கை இரிக்கிதா..? இல்லையா..? ஒரு சபைக்கிப் போனாலும் நமக்கும் அழகு... சபைக்கும் அழகுதானே.... தொழுகையில் எல்லோரும் ஒரே மாதிரியா தலையை மூடி இருக்கும்போது ஒரு அந்துசு இரிக்கிதா..? இல்லையா..? நா ஒன்னும் தொப்பிக் கடைக்கு வக்காலத்தா பெசுறேண்டு நினைக்காதியோ... ஒருத்தன உன்னுடைய மதம் என்னாண்டு கேட்டா ஒடனே சொல்லிடுவான். நா இன்ன மதம்னு. ஆனா இந்த யஹூதி மட்டும் நாம எல்லாம் மனுசர்கள்தானென்று மழுப்புவான். அவன் ஒரு நாசுவக்கிண்ணி மாதிரி தொப்பி போட்டிருப்பான்.

அதைப் பார்த்து நாம அடையாளம் கண்டுக்கலாம். எதுக்கு நா சொல்றேண்டா அவனவனுக்கு ஒரு அடையாளம் இருக்கும்போது, உண்மையான ஒசத்தியும், கண்ணியமான நம்ம இஸ்லாத்தில் இருக்கும் நாம் ஒரு முஸ்லிம் என்று தெரியப்படுத்துவது தவறல்லவே....? தொப்பி கட்டாயமல்லதான் ஒத்துக்கிறேன். ஆனா நம்ம ஒடம்புக்கு பிரதானமா உள்ள தலைய மூடுவதில் நிறைய சௌகரியம் ஈக்கிரதொட, தீமையில்லதானே.... ஒரு கட்டுக்கோப்பான அமைப்பு தலையை மூடி நிக்கிம்போது ஒரே சீராக கண்ணியமாக தெரியலையா..?

பேரன்: என்ன அப்பா சங்கையா உடுப்பு உடுத்துரதும் அப்படித்தானே...

அப்பா: ஆமா ! இப்ப நாம உடுத்துற வேட்டி ராஹத்தானதா, இல்ல பேன்ட் ராஹத்தா..?

பேரன்: வேட்டிதானப்பா ராஹத்தானது.

அப்பா: ஆங்.. அப்புடி ராஹத்தான வேட்டி உடுத்துரவ.... ஏறப்புலான்ல பயணம் போம்போது எப்போதும் உடுத்துரமாதிரி வேட்டியை உடுத்திக்கிட்டு ப்ளேன்ல ஏறுனா இறக்கியா உட்டுருவாணுவ... இல்லையே..... பின்னே எதுக்கு பினாயில் விக்கிரவனாட்டம் பேன்ட் போடணும். ஏனுண்டு கேட்டா அது போகிற எடத்துக்கும் போரவளுக்கும் அந்துசுன்டுதானே...? அதுபோலத்தான் சங்கையான எடத்துல நாமும் சங்கையா நடந்துக்கிடணும்.

பேரன்: நீங்க இப்படி சொல்ரியலே.... அரபு தேசங்களான, எகிப்து, சிரியா, லெபனான், ஈராக், இன்னும் பல முஸ்லிம்களெல்லாம் தொப்பியில்லாமதானே தொழுவுறாங்க......?

அப்பா: ஆமா, அதான் ரொம்ப நிம்மதியா இறிக்கிறாங்க... இப்போ நீங்க ஒரு இந்திய முஸ்லிம்னு அவங்கள்ட சொல்லிப் பாருங்க ஒரு ஏளனமா பாப்பாங்க. நாம ஒரு முஸ்லிம்னு சொல்லிப்புட்டு என் வாப்பா, உம்மா கூட முஸ்லீம்னு சொன்னியண்டா அப்டீயே வாயப்பொலந்துடு வாங்க காரணம் அங்கே அவளவு லேடுபாடு.... அட இங்கே தா பாருங்க.... தொப்பி ஒரு கட்டாயமில்லை என்று என்னக்கி நமக்கு தெரிய வந்துச்சோ ஒரு பெருநாளைக்கு பதிலா ரெண்டு, மூணு பெருநாள் வருது. நமக்கென்று 10, 12 எம்.எல்.ஏ வரை இருந்தது ஒன்னுமில்லாம போச்சு... சரியா... !!

அப்புறம் இன்னொன்னு சொல்றேன், மொதல்ல, நம்மூர் பக்கம் டீ.வி சனியன் ஒவ்வொரு வூட்லேயும் தல காட்ட ஆரம்பிக்கும்போது, ஆலிம்சாமார்கள் டீ.வி இருக்கிற வூடா போய் இந்த முசீபத்த வூட்ல வைக்காதியனு கால்ல உழுவாத கொறையா கெஞ்சினாங்களே அப்ப.... டீ.வி பாக்ககூடாதுனு நபி சொன்னாங்களா என்று திருப்பிக் கேட்டாங்க நம்ம ஜனங்கள். இப்ப பாருங்கள் வூட்டுலேந்து பள்ளியாசளுக்கு போறது என்னமோ 4 வது, 5 வது வார்டு பக்கம் போற மாதிரில இருக்குது. 

நடு கூடத்துல இருந்து குரான் ஓதிக்கிட்டு இருந்த வூட்டுல நாடகத்துல சாமிக்கி பூஜை நடக்கிற மணி சத்தம் கேக்குது. இன்னொரு வூட்டுல அடுப்படிக்கி போன ராத்தாவை, 'ஆதி வந்துட்டான் வெரசா வந்து பாரு' என்று தங்கச்சிக்காரி கூப்புடுறா. இதெல்லாம் தேவையா..? இப்ப இருந்துக்கிட்டு டீ.வி பாத்து பொம்புள எல்லாம் வீனாப்போச்சுண்டு அடிச்சிக்கிரியலே... புரியுதா அன்னக்கி ஆலிம்சா எவ்வளவு தொல நோக்கோட கெஞ்சினது.

அதனால நம்ம ரசூலுல்லாஹ் அவர்கள் பேணிய எதிலும் இம்மியளவு பிசகு இருக்காது. தெரிஞ்சிக்கோங்கோ. நன்மையே.. மொத்தத்துல சொல்றாயிருந்தா.... ஒருத்தன் ஒரு காரியத்துல இறங்கும் போது இது நம் நபி வழிக்கு பொருந்துமா என்று நெனச்சு இறங்கினான் என்றால் அவனுக்கு எந்த சேதாரமும் இல்லை. நஷ்டவாளி என்று ஒருவனை பார்க்க நேர்ந்தால் ஏதோ ஒரு வழியில் நபிவழி பேனாதவனாக இருப்பான். [அஷர் பாங்கு ஒலிக்கிறது]

பேரன்: அப்பா... பாங்கு சொல்லுறாக...... நா போவட்டா.... போவட்டா... போவட்டாப்பா..

அப்பா: கேக்குறது வெளங்குது.... இந்தாங்க பணம். தொழுவிட்டு போய் கபாப்  வங்கி தின்னுங்க. [அப்பா அஷர் தொழுகைக்கு தயார் ஆகிறார்கள்]

மேலும்...

அப்பா: சரி, பாங்கு சொல்லிட்டாக ஒரு ஆபத்திலிருந்து தொப்பியைக் கொண்டு அல்லாஹ் காப்பாத்துனுத இன்னொரு நாளைக்கி சொல்றேன்.

ZAEISA

ஒரு ஒப்ப(ந்த)ம் போடுங்க அப்பா ! 3

அதிரைநிருபர் பதிப்பகம் | August 06, 2014 | , , , , , , ,

அதிரை அப்பாவுக்கும் அவர்களின் பேரனுக்கும் நடக்கும் உரையாடல்....

பேரன்: "அப்பா.. அஸ்ஸலாமு அலைக்கும்....."

அப்பா:  "அலைக்கு முஸ்ஸலாம்…. யாரு.. ஜாகிரா....?"

பேரன்: "என்னப்பா.. ஜாகிராண்டா பொம்ப்லாபுள்ளப் பேரப்பா. எம்பேரு ஜாகிருசேன்ப்பா..."

அப்பா:  "சரி..சரி.. என்ன இஷாவுல பளியாசள்ள ஒன்ன பாக்கலையே...ஏ… இஷா தொழுவலையா…?"

பேரன்:  "என்னப்பா... நான் தொழுகைய விடுவேனா..? ரெண்டாவது சஃப்ல தூணுக்கு கிட்டகூட நீங்க நிண்டு தொழுவுனதைப் பாத்தேனே...."

அப்பா:  "கோவிச்சிக்கிடாதே… சும்மா கேட்டேம்மா, சரி என்ன விஷயம்..?"

பேரன்:  "என் ரேங்க்கார்டுல கையெழுத்து போடனும்ப்பா போடுவியளா...?"

அப்பா:  "கெரண்டு போன நேரத்துல வேற வந்திக்கிற....!"

பேரன்:  "பத்திரத்திலையா போடச் சொல்றேன் ரேங்கார்டுதானப்பா..."

அப்பா:    "நீ ரேங்கு எத்தன எடுத்திக்கிரா..?"

பேரன்:  "ரெண்டாவது ரேங்கப்பா.. எல்லாத்திலையும் நல்ல மார்க்தான்ப்பா இங்கிலீஸ்ல மட்டும் எட்டுமார்க் சபீர் ங்க்ரவ கூட எடுத் திட்டதாலே நான் ரெண்டாவது ரேங்…"

அப்பா: "இனி இங்கிலீஸ்ல கவனமாயிரு அப்பதான் ஒலக மொழி எல்லாம் கத்துக்கலாம்."

பேரன்:   "உங்களுக்கு ஒலக மொழி எல்லாந்தெரியுமாப்பா...?"

அப்பா:  "ஹும்…. ஒலகத்தில எல்லா மொழியிலும் சிரிக்க மட்டும் தெரியும்."

பேரன் : "ஆமா… நீங்க சின்னபுள்ளையிலே வேட்டிய கெலஞ்சுவச்சுட்டு கொளத்துல குளிப்பியலாம் !. மைத்தாங்கரயிலே தும்பிபுடிப்பி யலாம்ல ?"

அப்பா: "ஆமா…. வேட்டில உள்ள சாயமெல்லாம் போயிடும்ல அதனாலதாம்மா…"

பேரன்:  "மைத்தாங்கரயிலுமா சாயம்போவும்..? யாம்ப்பா.......!!!!"

அப்பா:  "இதெல்லா யாரு உனக்கு சொன்னது..?"

பேரன்:  "அவ்பக்கர்ட அப்பா சொன்னாக"

அப்பா:   "யார்ரா அது...."

பேரன்: "அதாம்பா.. கெரண்டு குஞ்சாட்டம் தாடிக்கு கலரெல்லாம் அடிசிருப்பாக. ஜும்மாவுட்டு நீங்க பேசிக்கிட்டு வந்தியளே அவ்வொதான்"

அப்பா: "அட நம்ம நெய்னாமதா.... அப்படி எல்லாஞ் சொல்லகூடாது. நீ…குர்ஆன் பாடம் முடிச்சிட்டியா இல்லையா..?"

பேரன்:  "இன்னிக்கிதான் சூரத்துல் ஜக்ரப் பாடங்குடுத்தேன், இன்னும் பாக்கி ஈக்கிது… !"

அப்பா: "முடிக்க இன்னும் ஆறேழு ஜுசு இரிக்கிதா .....? "

பேரன்:  "ஜக்ரப் இருபத்தஞ்சாவது ஜுசுப்பா அஞ்சுதாபாக்கி. "

அப்பா:  "உவ்ளோ நாளா ஒதுரமாரித்தெரியுது. இன்னும் முடிக்கலையா....?"

பேரன்: "இது நாலாவது தடவை பாடங்குடுக்கிறேன். நீங்க எவ்ளோ பாடங்குடுத்துப்பியபப்பா...?"

அப்பா:  "நா… பதினொன்னோ, பன்னெண்டோ குடுத்த ஞாபகம்… !"

பேரன்:  "என்னப்பா டயங்கேட்டமாரி சொல்றியோ…"

அப்பா: "ஆமாப்பா அப்போ பள்ளிக்கு போயிக்கிட்டுதான் இருந்தப்போ காய்ச்சல் வந்துடுச்சு பள்ளிக்கு போகல. ஆனா இப்போபாரு நானா பலதடவை திருப்பி, திருப்பி ஒதுறேனா இல்லையா..?"

பேரன்: "நீங்க, பெரியம்மாவை கல்யாணம் முடிக்க யுவ்ளோ பணமும் நகையெல்லாம் வாங்கினியலாமே...நெசமாப்பா......?"

அப்பா: "நா… வாங்களே எங்க வாப்பா உம்மா வாங்குனாக பெரியவங்க வாங்கும்போது நாம சின்னபுள்ளே பேச்சை கேக்கவா போறாங்க ....?"

பேரன்:  "சின்னப் புள்ளக்கிதான் கலியான முடிக்க மாட்டாங்களே.... யாம்ப்ப நீங்க....!!"

அப்பா:  "(உடனே) யாரோ கதவ தட்டுர மாரிதெரியுதே…. அங்க பாரு.. !"

பேரன்:  "ஆமா கெரண்டுப்பா….. பேச்சை மாத்தாதியோ.."

அப்பா:  "இதுவும் அந்த நெய்னாமது சொன்னதா ..?"

பேரன்: "ஆமாப்பா.உண்மையத்தானே சொன்னாக... அல்ஹம்துல்லில்லாஹ் கெரண்டு வந்துடுசிபா.... இந்தாங்கப்பா கையெழுத்த போடுங்கப்பா....."

{பேரன் ரேங்க் கார்டில் கையெழுத்து வாங்கி விட்டு சலாம் சொல்லிவிட்டு அங்கிருந்து விடை பெற்றதும்}

அப்பா மனதிற்குள் எம்பேரன் நல்ல புத்திசாலியாக இருக்கிறானென்று சந்தோசத்துடன், யாஅல்லாஹ் எம்பேரனை தர்பியத்தான, சாலிஹானவனாக ஆக்கி பரக்கதாக்கிவை என்று துஆச் செய்தவாறே படுக்க செல்கிறார்.

ZAEISA

குறிப்பு: பெயர்கள் யாவும் கற்பனையே.யார்,யாரை நினைச்சிக்கிட்டாலும்… கம்பெனி பொறுப்பல்ல என்று அப்பா சொல்ல சொல்லிட்டாங்க !

அப்பாவும் பேரனும் - தொடர்கிறது ! 12

அதிரைநிருபர் பதிப்பகம் | September 17, 2013 | , , , , , ,


[பேரன் வெளியிலிருந்து வீட்டிற்குள் நுழைய எதிர்படும் அப்பாவிடம்..]

பேரன் : அஸ்ஸலாமு அலைக்கும் அப்பா..

அப்பா : வ அலைக்குமுஸ்ஸலாம். என்ன இந்நேரத்திலே எங்கிருந்து வர்றிய...

பேரன் : இன்னைக்கு ஸ்கூல் லீவு அதான் முடி வெட்டிகிட்டு குளிக்கப் போறேன்..

அப்பா : எங்க நீங்க குளிக்க... அதான் கெரண்டுமில்ல.. தண்ணியுமில்லண்டு உங்கம்மா கத்திக்கிட்டு கெடக்குது.... இதென்ன தல நடுவுல நாள்பட்ட கபுராட்டம் ஒரு  குமியலா....!?

பேரன் : போங்கப்பா.. இதுக்குப் பேர்தான் ஃபோஹாக் கட்டுன்னு பேரு. பெக்காம் கட்டுன்னும் சொல்லுவாங்க.

அப்பா : அப்படியா.. நல்லாத்தான் ஈக்கீது கொளத்துல போய் குளிங்க..

பேரன் : ச்சீ… உவ்வே.. என்னப்பா.. கொளத்துல போய் குளிக்கச் சொல்றிய..நஜீசுல..

அப்பா : அடங்கப்பா... எதெ நஜுசுன்னு சொல்றிய.. புதுசா பீடி குடிச்சாப்ல தூரமா நிக்காம கிட்டவாங்க சொல்றேன்... நாங்கெளெல்லாம் கொளத்துக்கு கெளம்புனம்னா திரும்பி வர மூணு நாலு மணியாவும்.அவ்வளவு நேரம் குளிச்சு வெளயாண்டுட்டு வருவோம், தெரியும்ல...?

பேரன் : மூணு நாலுமணி நேரமா… அப்படின்னா ஒன்னுக்கு, ரெண்டுக்கெல்லாம் கரையேர மாட்டியலா..?

அப்பா : ஹெ...ஹெ....! அதுக்கெல்லாம் கரையேற  மாச்சப்பட்டு கொளத்துக்குள்ளெயெ.....!!

பேரன் : ச்சீ ..அதெல்லாம் கொளத்துல்க்குள்ளெவா...!?

அப்பா : ஆமா...செல சமயம் தண்ணியால தள்ளிவுட்டா  பின்னே அதை மீன் திண்டுடும்.தெரிஞ்சுக்கிடுங்க.. 

பேரன் : அப்படின்னா… உங்களுக்கு காச்ச கீச்ச வராதா...?

அப்பா : அதெல்லாம் வராது… அப்படி காச்ச வந்தா வாயில மட்டும்தான் வரும்…!

பேரன் : அதென்ன வாயில மட்டும் காச்சல்...?

அப்பா : ஆமா. எங்கசாரு நோட்டு கேட்கிற அன்னைக்கி மாத்திர மட்டும் பள்ளி கொடம் போக கொஞ்சம் செரவடியாயிரிக்கும் அப்ப எவன் பள்ளிகொடம் பொறவன்ர வூட்டுல போய் லீவுலெட்டெர குடுத்து வுடுவோம். கொளத்துலே குளிக்கிற நாள்ல சீக்கும் கம்மி டாக்டர்மார்வளும் கம்மி. இப்ப நீங்களுவ கொளத்துல குளிக்காமயிருந்துதான் சீக்கும் புதுசு புதுசா  பெருவிப் போச்சு. ஆஸ்பத்திரியும் பெருவிடுச்சு. டோக்கன்னு நான் பாத்தது அப்ப வெளியூர் முஸாபர்களுக்கு சாப்பாட்டுக்காக பள்ளியாசல்ல குடுப்பாக அதான். இப்ப என்னடான்னா டாக்ட்டர்க்கிட்ட காமிக்கிறதுக்கு டோக்கன் வாங்கனும்னு சொல்றானுவ உங்க காலமெல்லாம் ரொம்ப பாவப்பட்ட காலமப்பா..

பேரன் : சரிப்பா… இப்ப கொளத்துல தண்ணியில்லாம பயனுவ கிரிகெட்டுல்ல வெளயாடுறானுவ.

அப்பா : எப்படிப்பா தண்ணியிருக்கும்...? வருசத்துல 2,3 தடவை c m p வாய்க்கலெ தண்ணிவரும் நாங்கெல்லாம் போய் குளிப்போம். மீனல்லாம் வரும், வேட்டி வச்சு புடிப்போம்.

பேரன் : வேட்டி வுடுத்திக்கிட்டு ஆத்துல குளிக்கிறதே கஷ்டம், அதெப்பெடி வேட்டிய வச்சு மீன் புடிக்க முடியும்..? பொய் சொல்லாதிய...

அப்பா : நான் பொய் சொல்வேனா, எப்ப சொன்னேன் வேட்டி வுடுத்திக்கிட்டு குளிச்சேன்னு...? மேலே கேளு. சொல்றேன் கடமட தண்ணி வேஸ்டா ஏன் கடலுக்கு போவனும் ஜனங்களுக்கு போவட்டுமே என்றுதான் அந்த காலத்து லேந்து வெட்டி வுட்டாங்க. அதுனால எல்லா வூட்டுக் கெணத்துலயும் தண்ணி கெடந்துச்சு, அதனால வூருல உள்ள கொளமும் கெண்ட பாஞ்சு கெடந்துச்சு.மழை பெய்ஞ்சா எல்லா கொளமும் ஒடச்சுக்கிட்டு ஊரெல்லாம் தண்ணி பெருவி,அங்கெங்கே கெடக்குற குப்பைகூளங்கள், செத்தகோழி, தெருவுல ஓடுற சாக்கட தண்ணியெல்லாம் அடிச்சிக்கிட்டு போய் கடல்ல கலந்திடும்.மொத்தத்தில ஊரையே கழுவிவுட்டடும்.

கொசுத்தொல்லையும் இல்ல,பத்தாதத்துக்கு இப்ப அடிச்சுக்கிறியல நெலத்தடி நெலதடி நீர்னு… அதுக்கும் பஞ்சமில்லாம இருந்துச்சு. ஏன்னா, எல்லா ஊடும் முத்தம் வச்சு கட்டி இருக்கும் மழை பேஞ்சா முத்த நெறஞ்சு சாராக்குழி வழியா தெருவுக்கு ஓடி தெருவும் குளிர்ந்திருக்கும்.

பேரன் : அதென்ன சாராகுழி...?

அப்பா : அதா ஒவ்வொரு ஊட்லயும் ஊட்டுத் தண்ணி தெருவுக்கு ஓட கட்டியிருப்பாங்க. மழை நாள்ல தண்ணி ஓடும், மத்தநாள்ல பெருச்சாளி ஓடும்.

பேரன் : ஹா… ஹா… சரிப்பா… c m p வாய்க்கா தண்ணி வரத்துயில்லையே..ஏன்..?

அப்பா : அப்புடிகேளு எம்பேரா… இப்ப சொல்றேன் ஊருல உள்ள கொளமெல்லம் அந்தந்த எடத்துல உள்ள பள்ளியாசலுக்கு சொந்தம், அதுல வர்ற வருமானமும் சொந்தமுன்னு ஆயிடுச்சு, இது பொறுக்காத அவிய்ங்க... நம்மூருக்கு வர்ற தண்ணியை மறுச்சு இவனுவளுக்கு ஏன் போவணும்னு ஐடியா பண்ணி தடுத்துட்டாணுவ...இத கேட்க நாதியில்லாம போச்சு.

பேரன் : அவ்யிங்கன்னா யாருப்பா...?

அப்பா : அதா.....சுன்னத்து பன்னாதனுவோ.....!

பேரன் : நீங்கதான் ஒட்டு போட்டு ஜெயிச்சவங்கள்ட்ட போய் சொல்ல வேண்டியதுதானே..?

அப்பா : அட நீ ஒன்னு… அவங்களுக்கு பொறம்போக்கு நெலத்தையே பாக்க நேரமில்லாம போச்சு.... இதப்போய் பாக்கவா போறாங்க... இப்ப ஒன்னும் கெட்டுபோகல.  நம்ம்மூரு சேர்மனாமே.. அந்த புள்ளையும் சுகாதாரம் வேணும்னு படிச்சு படிச்சு சொல்லுதாமே நீ கொஞ்சம் சொல்லி அதுக்குள்ள ஏற்பாட்டை பண்ணச் சொல்லு MLA, MP ன்னு பாத்து பேசச் சொல்லு... அப்படியுமில்லையா இந்த தெருமுனை பிரச்சாரம்னும், பள்ளியாசலை, மதுர்ஸாவை கழுவிவுட்டுட்டு போட்டாவெல்லாம் போடுதுல அந்த புள்ளகள்ட்டெயும் சொல்லி இந்த அவந்தரைக்கு ஒதவச் சொல்லு செய்வாங்க. அல்லாஹ் பரக்கத்து செய்வான்னு சொல்லு. மேலும், ஊருக்கு ஓதவனும்னு நெனக்கிற வலப்பூ கட்டி தெனமும் ஃபோட்டோவெல்லாம் போட்டு செய்தி போடுதுவொல அவங்க கிட்டே சொல்லு, ஊர் தேவைக்கெல்லாம் எழுதிப் போட்டு சரி செய்யுதாமுள்ள அந்தப் புள்ளையோ இன்னும் யாரு இதற்கு முயற்சி செய்றாங்களோ..... அல்லாஹ் நற்கூலி கொடுக்கப் போதுமானவன்........... 

வந்துடுச்சு...... வந்துடுச்சு.....

பேரன் : சீக்கிரம் போங்கப்பா...

அப்பா : அட நீ ஓடு கெரண்டு வந்துடுச்சுன்னு சொன்னேன் போய் நல்லா குளிங்க.

ZAEISA

நவீன மவ்லூது 13

அதிரைநிருபர் பதிப்பகம் | November 03, 2012 | , , ,

நவீன மவ்லூது - கண்டனங்களுக்கு அப்பாற்பட்டது !

முன்னுரை:

மெளலாய சல்லி வசல் லிம்தாயி மன் அபதா
அலா ஹபீபிக்க கைரில் ஹல்க்கி குல்லி ஹிமி 

என்று ரிதம் அமைய....

நார்சா - கம்பன் எக்ஸ்பிரஸில் வருகிறது....

---------------------------------------------------------------------------------

ஏக இறையோனே... எல்லாம் வல்ல அல்லாஹ்வே !
என் ஊரு நிலைமைகளை... சொல்லுகிறேன் நீ கேளு !

தயாளம் நிறைந்தோனே... தங்கடம் நீக்கிவிடு!
இணையில்லாப் பெரியோனே... இம்முசை போக்கிவிடு !

ஆட்டைக் கழுதையாக்கி அசர வச்ச எங்கூரு...!
கோட்டை போல பள்ளி கட்டி தொழுது வரும் நல்லூரு..!

கான்வெண்ட், ஹைஸ்கூலு, கல்லூரி போனாலும்...
புளியமரம், ரேவடின்னு புள்ளேபோய் படிச்சாலும்

பாஸ்போர்ட்டு எண்ணத்தாலே... படிப்பு ஆச்சு...
கல்லி வல்லி

அப்போ ! இடுப்பு வலிச்ச அடுத்த கணம் நாசுடு...
சுத்திக் குலவை விட்டு... சுயமாகப் பெப்பாங்க...
இப்போ வலின்னா... ஏறுராங்க தஞ்சாவூரு
கத்தாமே பெக்கனும்னு கத்தி போட்டு பெத்துக்குறாங்க...

(ஏக இறையோனே....)

எறச்சியினு வாங்கப்போனா... வெலகிலோ நானூறு
மத்தபடி, மீனெல்லாம் மனை விலையாயிடுச்சு - சரி
மனையாச்சும் வாங்கலாம்னா... மண்ணுவெல கூடிடுச்சு!
வரதட்சனை கூடாதுன்னு... கண்டிப்பாக சொன்னாலும்
உண்டிப்பணம் போல... ஒளிச்சுகிட்டு வாங்கிடுறாங்க...

நேரான மார்க்கம் சொல்ல... வந்தாரு ஒருவர்
"மார்க்கம் இதுதான்"ன்னு சொல்லிட்டாரு அவரும்!
அவரை,ஒரு மார்க்கம் பண்ண... நிலுவையில ஒரு வழக்கு !

(ஏக இறையோனே....)

கூட்டாளி வீட்டு வைபவன்ம்னு... கொண்டாட வந்த பாலகரை
கொடுமை ரொம்ப படுத்திடுச்சு... கொலைகாரக் கொசுக் கூட்டம்...
கொசு பேட்டுச் வச்சிருந்தும் பாலகரு தூங்கலையே...!
சிட்டாகப் பறந்துட்டாரு... பச்ச பெல்ட் ஊரு பக்கம் !

வரப்பு பக்கம் போனாக்கா... அந்தப் பக்கம் ஆளிருக்கும்...
காட்டுப் பக்கம் ஒதுங்கலாம்னா... கணைப்பு சப்தம் கேட்கும்...
வெட்டவெளி வேனான்னு... வீட்டிலேயே கக்கூஸ்....
பொட்டுத் தண்ணியில்லாமே... வச்ச பைப்பு இத்துடுச்சு....

(ஏக இறையோனே....)

பச்சைத் தண்ணி குளங்களெல்லாம்... பள்ளிக்குன்னு ஆனதாலே...
சீர்போல வந்த தண்ணி... CMP வறண்டு போச்சு....
CMP தண்ணி வந்தாலே... அஞ்சு குளம் நிறைஞ்சிருக்கும்...
அக்க-பக்க கிணறல்லாம்... அலையடிச்சு தண்ணி இருக்கும்...

(ஏக இறையோனே....)

எங்க கவி வேட்டிடுத்தி...!? விளையாண்ட வெட்டிக்குளம்
வெடி பொருக்கு வெளஞ்சு... வேலிக்குருவை நிக்கிதங்கே !
தப்படிச்சு குளிச்ச குளம்... தரைமட்டமாகிடுச்சு....
முட்டை கட்டி குளிச்ச குளம்... பொட்டக்கரையாயிடுச்சு....
தாந்தோண்டி குளம் தூத்து… வீடு கட்டி வாழுறாக…
தண்ணிக் கடைகளெல்லாம்... ஊரைச் சுத்தி வந்துடுச்சு..

(ஏக இறையோனே....)

இன்பம் நிறைந்தவனே.... இம்முசுகளைக் கலைந்துவிடு...
உன்னையே வணங்குகிறோம்... உம்மிடத்தே ஏகுகிறோம்

(ஏக இறையோனே....)

ZAEISA

அப்பாவி(யி)ன் தொப்பி அட்வைஸ். 31

அதிரைநிருபர் பதிப்பகம் | April 05, 2012 | , , , ,


(அப்பா பகலுணவு சாப்பிட்டபின் பரிமாறியவற்றை அப்புறப்படுத்த பேரன் வருகிறார்) 

பேரன்: அப்பா நல்லா சாப்பிடீங்களா.....? பொறிச்சமீனெல்லாம் அப்படீயே இரிக்கிது.........?

அப்பா: அல்ஹம்துலில்லாஹ்! நல்லா சாப்புட்டேன், பொறிச்சா மீனெல்லாம் அப்டீத்தான் இரிக்கும்... ஓடாது. நீங்க வெரசா அந்தவிசிறியை எடுத்து தாங்கம்மா. (பேரன் சிறிது நேரத்தில் விசிறியுடன் வர ) 

தொடர்ந்து...

அப்பா: என்னா நீங்க இந்நேரத்துல வூட்ல இரிக்கிரிய..

பேரன்: இன்னக்கி ஸ்கூல் லீவுப்பா... அதான்... நா வீசிவுடட்டுமா....?

அப்பா: அப்பாமேலே உங்களுக்கு ரொம்ப வொஹ்ப்புதான் சரி வீசுங்க(மனதிற்குள் புள்ளக்கி லீவு அதுவுமா காசு மொடயாயிருக்கும்)... அன்னக்கி உங்கள வெரட்டிவுட்டது தலைல தொப்பி இல்லைண்டுதானாம் அந்த தம்பி சொன்னுச்சு.அது உங்க குத்தம்தானே...?

பேரன்: தொப்பி போடாட்டி தேவலாம்னு சொல்றாங்களே....

அப்பா: சும்மா பத்தியத்துக்கு கேட்டமாரி தேவலாம்னு சொல்லாதிய.. போட்டா எந்த கேடுமில்லையே... சங்கைதானே.... ஏன்னா.... நாம இந்த ஊர்ல பெரும்பாலாயிருந்தாலும், இந்த நாட்டுல சிறுபான்மையா இருக்கிறோம். மேலும், இந்த ஒலகத்துல இருக்கிற ஒவ்வொரு மதத்துக்கும் ஒரு அடையாளமுண்டு. அது மாதிரி ஒலகத்துல நம்ம முஸ்லிம்களை எங்கேப்பாத்தாலும் பொதுவா தலைய மூடித்தான் பாக்கிறோம்.அப்புறம் தொழுகைக்கு முன் உங்களை சங்கையாக்கிக் கொள்ளுங்கன்னும் சொல்றாங்க..!

தொப்பி போடறதால சங்கை இரிக்கிதா..?இல்லையா..? ஒரு சபைக்கிப் போனாலும் நமக்கும் அழகு..சபைக்கும் அழகுதானே.... தொழுகையில் எல்லோரும் ஒரே மாதிரியா தலையை மூடி இருக்கும்போது ஒரு அந்துசு இரிக்கிதா..? இல்லையா..? நா ஒன்னும் தொப்பிக் கடைக்கு வக்காலத்தா பெசுறேண்டு நினைக்காதியோ... ஒருத்தன உன்னுடைய மதம் என்னாண்டு கேட்டா ஒடனே சொல்லிடுவான். நா இன்ன மதம்னு. ஆனா இந்த யஹூதி மட்டும் நாம எல்லாம் மனுசர்கள்தாநென்று மழுப்புவான். அவன் ஒரு நாசுவக்கிண்ணி மாதிரி தொப்பி போட்டிருப்பான்.

அதைப்பார்த்து நாம அடையாளம் கண்டுக்கலாம்.எதுக்கு நா சொல்றேண்டா அவனவனுக்கு ஒரு அடையாளம் இருக்கும்போது, உண்மையான ஒசத்தியும், கண்ணியமான நம்ம இஸ்லாத்தில் இருக்கும் நாம் ஒரு முஸ்லிம் என்று தெரியப்படுத்துவது தவறல்லவே....? தொப்பி கட்டாயமல்லதான் ஒத்துக்கிறேன். ஆனா நம்ம ஒடம்புக்கு பிரதானமா உள்ள தலைய மூடுவதில் நிறைய சௌகரியம் ஈக்கிரதொட, தீமையில்லதானே.... ஒரு கட்டுக்கோப்பான அமைப்பு தலையை மூடி நிக்கிம்போது ஒரே சீராக கண்ணியமாக தெரியலையா..?

பேரன்: என்ன அப்பா சங்கையா உடுப்பு உடுத்துரதும் அப்படித்தானே...

அப்பா: ஆமா ! இப்ப நாம உடுத்துற வேட்டி ராஹத்தானதா, இல்ல பேன்ட் ராஹத்தா..?

பேரன்: வேட்டிதானப்பா ராஹத்தானது.

அப்பா: ஆங்.. அப்புடி ராஹத்தான வேட்டி உடுத்துரவ.... ஏறப்புலான்ல பயணம் போம்போது எப்போதும் உடுத்துரமாதிரி வேட்டியை உடுத்திக்கிட்டு ப்ளேன்ல ஏறுனா இறக்கியா உட்டுருவாணுவ... இல்லையே..... பின்னே எதுக்கு பினாயில் விக்கிரவனாட்டம் பேன்ட் போடணும் .ஏனுண்டு கேட்டா அது போகிற எடத்துக்கும் போரவளுக்கும் அந்துசுன்டுதானே...?அதுபோலத்தான் சங்கையான எடத்துல நாமும் சங்கையா நடந்துக்கிடணும்.

பேரன்: நீங்க இப்படி சொல்ரியலே.... அரபு தேசங்களான, எகிப்து, சிரியா, லெபனான், ஈராக், இன்னும் பல முஸ்லிம்களெல்லாம் தொப்பியில்லாமதானே தொழுவுறாங்க......?

அப்பா: ஆமா, அதான் ரொம்ப நிம்மதியா இறிக்கிறாங்க...இப்போ நீங்க ஒரு இந்திய முஸ்லிம்னு அவங்கள்ட சொல்லிப் பாருங்க ஒரு ஏளனமா பாப்பாங்க. நாம ஒரு முஸ்லிம்னு சொல்லிப்புட்டு என் வாப்பா,உம்மா கூட முஸ்லீம்னு சொன்னியண்டா அப்டீயே வாயப்பொலந்துடுவாங்க காரணம் அங்கே அவளவு லேடுபாடு.... அட இங்கேதா பாருங்க.... தொப்பி ஒரு கட்டாயமில்லை என்று என்னக்கி நமக்கு தெரிய வந்துச்சோ ஒரு பெருநாளைக்கு பதிலா ரெண்டு, மூணு பெருநாள் வருது. நமக்கென்று 10, 12 எம்.எல்.ஏ வரை இருந்தது ஒன்னுமில்லாம போச்சு... சரியா... !!

அப்புறம் இன்னொன்னு சொல்றேன், மொதல்ல, நம்மூர் பக்கம் டீ.வி சனியன் ஒவ்வொரு வூட்லேயும் தல காட்ட ஆரம்பிக்கும்போது, ஆலிம்சாமார்கள் டீ.வி இருக்கிற வூடா போய் இந்த முசீபத்த வூட்ல வைக்காதியனு கால்லவுழுவாத கொறையா கெஞ்சினாங்களே அப்ப.... டீ.வி பாக்ககூடாதுனு நபி சொன்னாங்களா என்று திருப்பிக்கேட்டாங்க நம்ம ஜனங்கள். இப்ப பாருங்கள் வூட்டுலேந்து பள்ளியாசளுக்கு போறது என்னமோ 4 வது, 5 வது வார்டு பக்கம் போற மாதிரில இருக்குது. 

நடு கூடத்துல இருந்து குரான் ஓதிக்கிட்டு இருந்த வூட்டுல நாடகத்துல சாமிக்கி பூஜை நடக்கிற மணி சத்தம் கேக்குது.இன்னொரு வூட்டுல அடுப்படிக்கிபோன ராத்தாவை ,ஆதி வந்துட்டான் வெரசா வந்துபாரு என்று தங்கச்சிக்காரி கூப்புடுறா.இதெல்லாம்தேவையா..? இப்ப இருந்துக்கிட்டு டீ.வி பாத்து பொம்புள எல்லாம் வீனாப்போச்சுண்டு அடிச்சிக்கிரியலே... புரியுதா அன்னக்கி ஆலிம்சா எவ்வளவு தொல நோக்கோட கெஞ்சினது.

அதனால நம்ம ரசூலுல்லாஹ் அவர்கள் பேணிய எதிலும் இம்மியளவு பிசகு  இருக்காது. தெரிஞ்சிக்கோங்கோ. நன்மையே.. மொத்தத்துல சொல்றாயிருந்தா.... ஒருத்தன் ஒரு காரியத்துல இறங்கும் போது இது நம் நபி வழிக்கு பொருந்துமா என்று நெனச்சு இறங்கினான் என்றால் அவனுக்கு எந்த சேதாரமும் இல்லை. நஷ்டவாளி என்று ஒருவனை பார்க்க நேர்ந்தால் ஏதோ ஒருவழியில்நபிவழி பேனாதவனாக இருப்பான். [அஷர் பாங்கு ஒலிக்கிறது]

பேரன்: அப்பா... பாங்கு சொல்லுறாக...... நா போவட்டா.... போவட்டா... போவட்டாப்பா..

அப்பா: கேக்குறது வெளங்குது.... இந்தாங்க பணம். தொழுவிட்டு போய் கபாப்  வங்கி தின்னுங்க. [அப்பா அஷர் தொழுகைக்கு தயார் ஆகிறார்கள்]

மேலும்...

அப்பா: சரி, பாங்கு சொல்லிட்டாக ஒரு ஆபத்திலிருந்து தொப்பியைக் கொண்டு அல்லாஹ் காப்பாத்துனுத இன்னொரு நாளைக்கி சொல்றேன்.

-ZAEISA

யாருண்டு வந்து காட்டு கேக்கிறேன்... - அப்பா ! 15

அதிரைநிருபர் பதிப்பகம் | March 13, 2012 | , , , , , , ,

அப்பா பேரனை இஷா தொழுகைக்கு அழைக்கிறார்கள்....

அப்பா: தம்பி இகாமத் சொல்லிடுவாக சீக்கிரமா வாங்கமா......

பேரன்: நா அந்தப் பள்ளியாசளுக்கு போறேன். நீங்க இங்கே போங்கப்பா..

அப்பா: யான் கிட்டன வுள்ளத வுட்டுட்டு அங்கே போறன்க்ரிய   

பேரன்: மக்ரிப் தொழுவ போம்போது ஒரு ஆம்புள வெரட்டி வுட்டுட்டாருப்பா

அப்பா: அப்புடியா யாருண்டு வந்து காட்டு கேக்கிறேன்..

[இருவரும் பள்ளியை வந்தடைகிறார்கள்]

பேரன்: அந்தோல ஒளு செஞ்சிட்டு தொடச்சிக்கிட்டு போறாஹளே அவ்வோதான்

அப்பா: அட நம்ம அன்சாரி தம்பில, நம்ம புள்ளையில யா வெரட்டுனச்சு.. சரி, தொழுவ முடிஞ்சு கேட்டுக்கலாம். நீ ஒளு செஞ்சிட்டு சுருக்கா வந்துடு...

[தொழுகை முடிந்து வெளியேறும்போது அப்பா அன்சாரியை பாத்துர்ராஹ]

அப்பா: என்ன தம்பி உங்களை பாக்கவே முடியலையே.. வேல ஜாஸ்தியோ.? சுஹமாயிருக்ரியலா, நானும் இந்த தடவை ஹஜ்ஜூக்கு போவலாம்னு இருக்கிறேன். துஆ செய்ங்க தம்பி.கொஞ்ச நேரம் உட்காந்து பேசலாமே...

அன்சாரி: அல்ஹம்துல்லில்லாஹ்! அல்லாஹ் ரஹ்மாத்தாக்கித் தருவான். சரி, உங்களோட பேசியும் ரொம்ப நாளாச்சு.

அப்பா: தம்பி எதுவும் நெனச்சிக்கிடாதிய புள்ளயளுவ்ள மக்ரிப்ள வெரட்டி வுட்டுடியலாம்ல.எம்பேரன் வந்து சொன்னானே..?

அன்சாரி: ஆமா எங்கயோ வெளையாண்டுட்டு 5, 6 புள்ளயளுவ பேசி சிரிச்சுக்கிட்டு, எதோ முடிவெட்டுற கடைக்கு வர்ர மாதிரி ஒரு அதபில்லாம தலைல ஒத்தரும் தொப்பியில்லாமே வந்துச்சுவோ அதான் வெரட்டிவுட்டேன்.. சரிதானே அதுவும் கம்ப்ளைண்டாச்சா..

அப்பா: நீங்க செஞ்சது சரிதான் இப்ப நெறைய புள்ளயளுவ தொப்பியில்லாமதா வருதுவோ. யா இப்புடி செய்துவோண்டு தெரியல. அன்னைக்கி கூட எம்பேரனோட வந்த பத்தரூட்டு புள்ளைய நம்ம ஆமாத்தும்மா மொவனாண்டு கேட்டுப்புட்டேன். நம்ம புள்ளயளுவ புத்திசாலி புள்ளயளுவதான் நீங்க கூப்புட்டு எடுத்து சொன்னா கேட்டுக்கிடும்தானே.

அன்சாரி: நீங்க ஒன்னு இப்புடி நாலஞ்சு புள்ளயளுவ்ள நாம சீரியஸா வச்சு சொல்லிக்கிட்டு இருக்கும்போதே அவனுவளுக்குள்ளேயே ஒத்தனுக்கு ஒருத்தே கிண்டிவுட்டுக்கிட்டு சிரிச்சிக்கிட்டு கடைசியிலே நமக்கு ஒரு  பட்டப்பேரு வச்சுட்டு போயிடுங்க. தனியா சொன்னா அது ஒரு கணக்கு.

அப்பா: நீங்க இந்த வயசு புள்ளயளுவ்ள வெரட்டுனதால இதோட முடிஞ்சிடுச்சு. கொஞ்சம் வளர்ந்த லேசா தாடி வந்த புள்ளைய சொன்னீய அப்புறம் உங்க பாடு அவ்வளவுதான்...

அன்சாரி: நீங்க கரெக்ட்டா சொன்னிய அன்னக்கி ஒரு லுஹருக்கு தொப்பியில்லாம வந்த பையனே பாத்து... ஏம்பா தொப்பியில்லாம வர்ரியேன்னு கேட்டுபுட்டேன். அவ்வளவுதான் அஸர்ல ரெண்டு பேரோடு வந்து என்னென்னமோ சொல்லிப்புட்டு போயிட்டானுவ. அப்புறம் மஃக்ரிப்ல சம்மந்தமே இல்லாத ஒரு பையன் வந்து என்னா அன்சாரியாக்கா அஷர்ல ஒரே சவுண்டாயிருந்துச்சே என்னாண்டுதான் கேட்டான், உடனே யாரு அஷர்ல என்னெட்ட சவுண்டு போட்டவன் என்னையும் சேத்துக்கிட்டு எங்களுக்குள்ளே உள்ளது நீ வேலையே பாத்துக்கிட்டு போன்னு அவன்ட்ட  சொன்னதும். உங்களுக்குள்ள எதுயிருந்தாலும் பள்ளிக்கு வெளியே வச்சுக்கிடுங்க என்னையும் சேத்து கத்திட்டுப் போயிட்டான். பிறகு,  இஷாவ்ல ஒரு ரெண்டு மூணு பேரு தொழுகை முடிஞ்சு என்ன அன்சாரியாக்க அவனுவளுக்கு சண்டை போட இதான் எடமாக்கும் சொல்லி வைங்க இல்லாட்டி அவனுவளோட உங்களையும் சேர்த்து சீடி. போட்டுவுற்றுவோம்னு சொல்லிப்ட்டணுவ பாருங்களேன். நம்ம புள்ளய்வோதான் எல்லாரும் நல்லாதொழுவத்தான் செய்துவோ இப்புடி பிரிஞ்சி நிக்கிதுவோல அல்லாஹ்தான் நல்ல புத்தியை கொடுக்கணும்.

அப்பா: இப்பவல்லாம் புள்ளைவோ ஒரு மாதிரியாத்தான் இரிக்கிதுவோ நீ மொதல்ல அல்லாஹ்க்கு சுக்கூர் செயிங்க. ஏண்டாக்கா அப்ப சீடி பார்ட்டியோட நின்ருடுச்சு இல்லன்டா மூஞ்சில துண்டு கட்டிக்கிட்டு வந்து அடியப்போடுற புள்ளையலும் வந்துடும். ஒரு மோட்டார் சைக்கிள்ளே மூணு நாலு பேரா வர்றது ரெண்டு ரெண்டு போனு வச்சுக்கிறது. ரசூலுல்லாஹ் என் உம்மத்துக்கள் 70 க்கு மேல் பல பிரிவுகளாய் இருப்பார்கள் என்று சொன்னதாக சொல்வதுண்டு நமூர்லையே 50 தேறிடும்போல தெரியுது. நல்லவேளை நானும் ஒரு தொப்பி போடாம  வந்த புள்ளயை கண்டிச்சேன்தான் ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி. ஆனா இவ்ளவு உங்களுக்கு நடந்த மாதிரி நடக்கல. ஏன்டா அப்ப உவ்வல்லாம் ஒன்னாத்தான் இருந்தாக.. இப்பவ்ள பல தினுசா போய்டுச்சுவ.....

அன்சாரி: இன்ஷா அல்லாஹ்.நம்ம புள்ளைவ ஒரு நாளைக்கு ஒத்துமையாத்தான் இரிக்கப்போவுதுவ.  ஆஹா!!! கெரண்டு போயிடுச்சே. சரி,  இருட்டுல உங்களுக்கு செரமமாயிருக்கும் வூடு வரைக்கும் வந்து விடுறேன் 

அப்பா: இந்த கெரண்டுவேற குருவியில்ல போய் வரவனாட்டம் எப்ப போவுது எப்ப வருதுன்னு தெரியல.சரி வாங்க.

[அப்பாவை வீட்டில்விட அன்சாரி இருட்டில் போய்க்கொண்டிருக்குபோது எதிரில் வரும் நபர் யாரு அன்சாரியா என்கிறார்]

அன்சாரி: ஆமா என்ன நீயா இந்நேரத்தில போறே...

நபர்: தஞ்சாவூருக்கு போனேன் இப்பதா பஸ் வந்துச்சு. அதான்.

அன்சாரி: சரி உவ்வள வூட்டுல வுட்டுட்டு வந்துடறேன்... நீ போ ..

அப்பா: யாரு அது நல்லா செண்டு கமாளிக்குது... ஏது வெளிநாட்டுல இருந்தாவ்லா....

அன்சாரி: ஆமா! லண்டனோ, ஆஸ்திரேலியாவுலையோ பெரிய ஊர்லேந்துதான் வந்திக்கிறாப்ள.....

அப்பா: தொப்பி போட்டிக்கிரஹளா...

அன்சாரி: ம் நீங்க பாக்கலையா அழகான மலேஷியா தொப்பி போட்டிருந்தாப்ள...

அப்பா: இருட்டுல நா கவனிக்கல [மனதிற்குள் ஹூம். அப்றானி அன்சாரியா இரிக்கிதே நா கேட்ட தொப்பி எதுண்டு தெரியலையே]

அன்சாரி: வூடு வந்துடுச்சு போய்ர்ரியல வர்றேன் அஸ்ஸலாமு அலைக்கும்

அப்பா: அலைக்கும் வஸ்ஸலாம். ஃபிஅமானில்லாஹ்...

-ZAEISA


அப்பா பேரனுக்கு இடையே ஊடுருவும் தனிநபர்களின் பெயர்கள் ஊர் நடப்புகளை எடுத்துரைக்க கையாண்ட கற்பனைப் பெயரே அன்றி தனிநபர் யாரையும் குறிப்பதற்கு அல்ல. 


அதிரைநிருபர்-குழு

அப்பா! பேரன் ஜாகிரு வந்திக்கிறான்..! 15

அதிரைநிருபர் பதிப்பகம் | February 18, 2012 | , , , , , ,


(அதிரை அப்பா, காலை ஸுபுஹு தொழுகைக்குப்பின் டீக்கடை வருவது வழக்கம்)

அப்பா: “அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்”

டீக்கடைக்காரர்: “அலைக்குமுஸ்ஸலாம், வாங்கப்பா......”

(சிறிது நேரத்திற்குப் பின் பேரனும், அனுடைய நண்பனுடன் அங்கே வந்து டீ சொல்கிறான்)

டீக்கடைக்காரர்:  “அப்பா.. உங்க பேரன் ஜாகிரு வந்திக்கிறான்… !”

அப்பா: “அப்படியா, ஜாகிருசேண்டு சொல்லு. இல்லாட்டி கோவச்சிகிடுவான் உள்ளே கூப்புடு. கேக்கரதக்கொடு.”

அப்பா:  “வாங்க, என்ன இங்கிட்டாலே…”

பேரன்: “டியூசனுக்குப் போறோம் அப்படியே ‘டீ’ குடிச்சிட்டுப் போவலாமுன்னுதான்......”

அப்பா: “ரெண்டு இடியாப்பந்தின்ட்டு ‘டீ’ குடிச்சா என்னா....?”

பேரன்: “வேணாம்ப்பா... ‘டீ’ போதும்..!”

அப்பா: “சரி அதுயாரு ஆமாத்துமா மொவனா.....?”

பேரன்:  “இல்லை, பத்தரூட்டு சேகரு. சுபுஹு தொளுவிட்டு இவஞ் சைக்கிள்ளே போவோம்.”

அப்பா: “அப்ப சரி, நா ஜாவியா திக்ருக்குப் போயிட்டு கடைத்தெருக்கு வந்துர்றேன். ஒன்கூட்டாளிட்டே சொல்லி ஒன்ன அங்கே விட்டுட்டுப் போச்சொள்ளு. திக்ரு முடிஞ்சு நா வந்து நிக்கேன்.. நீ வந்துடு, சரியா...?”

பேரன்:  “சரிப்பா நா வர்றேன்”


(குறிப்பிட்ட நேரம் கழிந்ததும் இருவரும் மார்க்கெட்டில் சந்தித்துக் கொள்கிறார்கள்)

அப்பா:  “என்ன இன்னும் மீனு ஒன்னும் வரல. இல்லாட்டி எறச்சி ஏதும் பாக்கலாம் வா !”

(இறைச்சி கடையிக்கு இருவரும் வருகிறார்கள்.)

கடைக்காரர்: “ வாங்கப்பா, யாரு உங்கப்பேரனா.....?”

அப்பா: “ஆமா ! கிலோ எவ்வளவு.. ?”

கடைக்காரர்: “நானூருப்பா !”

அப்பா: “சுபஹானல்லாஹ்’.. தலையே சுத்துது...”

பேரன்: “என்னப்பா ? சுகர், ரெத்தக்கொதிப்பு அளவைச் சொல்லிட்டாரா...? தலசுத்துதுறீங்க விலயத்தான் சொன்னாருப்பா !”

அப்பா: “இல்லடாப்பா, முன்னே ‘75 ரூபாக்கி’ வித்துக்கிட்டு இரிக்கிம்போது, திடீரிண்டு ‘100 ரூபாண்டவுடன்’ ஹொத்வா முடிஞ்சு மரைக்கா கூட்டம்ல்லாம் கூட்டுனாஹ. அதான் ஞாபகம் வந்துச்சு. இப்ப வுவ்ளோ நெருப்பாக்கீது”

பேரன்: “நெருப்பெல்லாம் வராது, அதான் எல்லாருஞ் சட்டி நெறைய பக்கத்திலேய தண்ணி வச்சிக்கிராங்களே !”

அப்பா: “சரி வா இப்ப மீனு வந்திருக்கும் பாக்கலாம்...”

தொடர்ந்து…

அப்பா: “இந்தா இந்த கொடுவாக்கண்ணுக்கு எவ்ளவு...?”

மீன்காரி: “320 ருவா கொடுங்க !”

அப்பா: “சரி, அந்த வவ்வாலோட அந்த பண்ணாவையும் போட்டு சொல்லு”

மீன்காரி:  “430.. வரும்... 400… ருவா கொடுத்துடுங்க”

அப்பா:  “என்ன மொம்மாப்துல்லா, வெல கேட்டா 4oo ,500 ங்கிராளுவ... ?

மொம்மாப்துல்லா: “அவ கழுத்தில போட்டிக்கிறதுக்கு வெல சொல்லியிருப்பா, மறுபடியும் போய் மீனுக்கு எவ்ளோவுண்டு கேளுங்க.!”

அப்பா: “நா வந்து ஒன்னட்டே கேட்டேனே..., அங்கென்னா கூட்டம் கொரலி வித்தையா....நடக்குது. ஆட்களெல்லாம் சுத்தி நிக்கிறாங்க...!”

மொம்மப்துல்லா: “க்கே......க்கே..க்கே.. இல்ல கொடுவா வாங்கி கூறு போடுறாங்க நீங்களும் போய் சேந்துக்கிடுங்க போங்க”

அப்பா: தம்பி வா... நா வாங்கித்தறேன் வூட்டுல போய் கொஞ்சம் பொறிக்கச் சொல்லிட்டு மீதிய ஆனம ஆக்கா சொல்லிடு, லுஹருக்கு நேரமாச்சு நா போறேன் நீனும் வந்துடு”

(அப்பா,பேரனிடம் கொடுவாபிஸ்கு வாங்கி கொடுத்து விட்டு லுஹர் தொளுவ நடைய கட்டிட்டாங்க.)

-ZAEISA

ஒரு கையெழுத்து போடுங்க அப்பா ! 33

அதிரைநிருபர் பதிப்பகம் | February 06, 2012 | , , , , , , ,


அதிரை அப்பாவுக்கும் அவர்களின் பேரனுக்கும் நடக்கும் உரையாடல்....

பேரன்: "அப்பா.. அஸ்ஸலாமு அலைக்கும்....."

அப்பா:  "அலைக்கு முஸ்ஸலாம்…. யாரு.. ஜாகிரா....?"

பேரன்: "என்னப்பா.. ஜாகிராண்டா பொம்ப்லாபுள்ளப் பேரப்பா. எம்பேரு ஜாகிருசேன்ப்பா..."

அப்பா:  "சரி..சரி.. என்ன இஷாவுல பளியாசள்ள ஒன்ன பாக்கலையே...ஏ… இஷா தொழுவலையா…?"

பேரன்:  "என்னப்பா... நான் தொழுகைய விடுவேனா..? ரெண்டாவது சஃப்ல தூணுக்கு கிட்டகூட நீங்க நிண்டு தொழுவுனதைப் பாத்தேனே...."

அப்பா:  "கோவிச்சிக்கிடாதே… சும்மா கேட்டேம்மா, சரி என்ன விஷயம்..?"

பேரன்:  "என் ரேங்க்கார்டுல கையெழுத்து போடனும்ப்பா போடுவியளா...?"

அப்பா:  "கெரண்டு போன நேரத்துல வேற வந்திக்கிற....!"

பேரன்:  "பத்திரத்திலையா போடச் சொல்றேன் ரேங்கார்டுதானப்பா..."

அப்பா:    "நீ ரேங்கு எத்தன எடுத்திக்கிரா..?"

பேரன்:  "ரெண்டாவது ரேங்கப்பா.. எல்லாத்திலையும் நல்ல மார்க்தான்ப்பா இங்கிலீஸ்ல மட்டும் எட்டுமார்க் சபீர் ங்க்ரவ கூட எடுத் திட்டதாலே நான் ரெண்டாவது ரேங்…"

அப்பா: "இனி இங்கிலீஸ்ல கவனமாயிரு அப்பதான் ஒலக மொழி எல்லாம் கத்துக்கலாம்."

பேரன்:   "உங்களுக்கு ஒலக மொழி எல்லாந்தெரியுமாப்பா...?"

அப்பா:  "ஹும்…. ஒலகத்தில எல்லா மொழியிலும் சிரிக்க மட்டும் தெரியும்."

பேரன் : "ஆமா… நீங்க சின்னபுள்ளையிலே வேட்டிய கெலஞ்சுவச்சுட்டு கொளத்துல குளிப்பியலாம் !. மைத்தாங்கரயிலே தும்பிபுடிப்பி யலாம்ல ?"

அப்பா: "ஆமா…. வேட்டில உள்ள சாயமெல்லாம் போயிடும்ல அதனாலதாம்மா…"

பேரன்:  "மைத்தாங்கரயிலுமா சாயம்போவும்..? யாம்ப்பா.......!!!!"

அப்பா:  "இதெல்லா யாரு உனக்கு சொன்னது..?"

பேரன்:  "அவ்பக்கர்ட அப்பா சொன்னாக"

அப்பா:   "யார்ரா அது...."

பேரன்: "அதாம்பா.. கெரண்டு குஞ்சாட்டம் தாடிக்கு கலரெல்லாம் அடிசிருப்பாக. ஜும்மாவுட்டு நீங்க பேசிக்கிட்டு வந்தியளே அவ்வொதான்"

அப்பா: "அட நம்ம நெய்னாமதா.... அப்படி எல்லாஞ் சொல்லகூடாது. நீ…குர்ஆன் பாடம் முடிச்சிட்டியா இல்லையா..?"

பேரன்:  "இன்னிக்கிதான் சூரத்துல் ஜக்ரப் பாடங்குடுத்தேன், இன்னும் பாக்கி ஈக்கிது… !"

அப்பா: "முடிக்க இன்னும் ஆறேழு ஜுசு இரிக்கிதா .....? "

பேரன்:  "ஜக்ரப் இருபத்தஞ்சாவது ஜுசுப்பா அஞ்சுதாபாக்கி. "

அப்பா:  "உவ்ளோ நாளா ஒதுரமாரித்தெரியுது. இன்னும் முடிக்கலையா....?"

பேரன்: "இது நாலாவது தடவை பாடங்குடுக்கிறேன். நீங்க எவ்ளோ பாடங்குடுத்துப்பியபப்பா...?"

அப்பா:  "நா… பதினொன்னோ, பன்னெண்டோ குடுத்த ஞாபகம்… !"

பேரன்:  "என்னப்பா டயங்கேட்டமாரி சொல்றியோ…"

அப்பா: "ஆமாப்பா அப்போ பள்ளிக்கு போயிக்கிட்டுதான் இருந்தப்போ காய்ச்சல் வந்துடுச்சு பள்ளிக்கு போகல. ஆனா இப்போபாரு நானா பலதடவை திருப்பி, திருப்பி ஒதுறேனா இல்லையா..?"

பேரன்: "நீங்க, பெரியம்மாவை கல்யாணம் முடிக்க யுவ்ளோ பணமும் நகையெல்லாம் வாங்கினியலாமே...நெசமாப்பா......?"

அப்பா: "நா… வாங்களே எங்க வாப்பா உம்மா வாங்குனாக பெரியவங்க வாங்கும்போது நாம சின்னபுள்ளே பேச்சை கேக்கவா போறாங்க ....?"

பேரன்:  "சின்னப் புள்ளக்கிதான் கலியான முடிக்க மாட்டாங்களே.... யாம்ப்ப நீங்க....!!"

அப்பா:  "(உடனே) யாரோ கதவ தட்டுர மாரிதெரியுதே…. அங்க பாரு.. !"

பேரன்:  "ஆமா கெரண்டுப்பா….. பேச்சை மாத்தாதியோ.."

அப்பா:  "இதுவும் அந்த நெய்னாமது சொன்னதா ..?"

பேரன்: "ஆமாப்பா.உண்மையத்தானே சொன்னாக... அல்ஹம்துல்லில்லாஹ் கெரண்டு வந்துடுசிபா.... இந்தாங்கப்பா கையெழுத்த போடுங்கப்பா....."

{பேரன் ரேங்க் கார்டில் கையெழுத்து வாங்கி விட்டு சலாம் சொல்லிவிட்டு அங்கிருந்து விடை பெற்றதும்}

அப்பா மனதிற்குள் எம்பேரன் நல்ல புத்திசாலியாக இருக்கிறானென்று சந்தோசத்துடன், யாஅல்லாஹ் எம்பேரனை தர்பியத்தான, சாலிஹானவனாக ஆக்கி பரக்கதாக்கிவை என்று துஆச் செய்தவாறே படுக்க செல்கிறார்.

-ZAEISA

குறிப்பு: பெயர்கள் யாவும் கற்பனையே.யார்,யாரை நினைச்சிக்கிட்டாலும்… கம்பெனி பொறுப்பல்ல என்று அப்பா சொல்ல சொல்லிட்டாங்க !


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு