பர்மிய முஸ்லிம் படுகின்ற வேதனை
தர்மம் நியாயம் தலைகீழாய்ப் போனதை
புத்தன் பெயரில் புரியும் படுகொலை
நித்தம் அழுதேன் நினைத்து
பச்சிளம் பாலகர்ப் பற்றிய நோன்பினை
மெச்சியும் பார்த்து மெழுகாய் உருகினன்
நாதி யிலாநிலை நாட்டில் அகதியாய்;
நீதி வழங்குவாய் நீ
தாயை இழந்து தவிக்கும் குழந்தையை
நாயாய்க் கருதி நடுவீதி(யில்) சுட்டுப்
பொசுக்கும் மிருகமாய்ப் போனர்; இனத்தை
நசுக்கு மிவர்கள் நடப்பு
நோன்பின் தருணத்தில் நோவினைச் சேர்ந்ததைக்
காண்போர் களின்கண்கள் கண்ணீர் சொரியுமே
துன்பத்தை யெல்லாம் துடைக்கும் இறைவனே
இன்பத்தை அங்கே இறக்கு!
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com
தர்மம் நியாயம் தலைகீழாய்ப் போனதை
புத்தன் பெயரில் புரியும் படுகொலை
நித்தம் அழுதேன் நினைத்து
பச்சிளம் பாலகர்ப் பற்றிய நோன்பினை
மெச்சியும் பார்த்து மெழுகாய் உருகினன்
நாதி யிலாநிலை நாட்டில் அகதியாய்;
நீதி வழங்குவாய் நீ
தாயை இழந்து தவிக்கும் குழந்தையை
நாயாய்க் கருதி நடுவீதி(யில்) சுட்டுப்
பொசுக்கும் மிருகமாய்ப் போனர்; இனத்தை
நசுக்கு மிவர்கள் நடப்பு
நோன்பின் தருணத்தில் நோவினைச் சேர்ந்ததைக்
காண்போர் களின்கண்கள் கண்ணீர் சொரியுமே
துன்பத்தை யெல்லாம் துடைக்கும் இறைவனே
இன்பத்தை அங்கே இறக்கு!
--
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com


