Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label இலை. Show all posts
Showing posts with label இலை. Show all posts

மகத்துவ மருதாணி ! 19

அதிரைநிருபர் பதிப்பகம் | August 22, 2012 | , , , , , ,


(*) பண்டிகை காலத்தில்
பாலகர் சிலருக்கும்
பெண்டிர் பலருக்கும்
பிடித்தது மருதாணி..

(*) ஐவிரல் தூணுடை
மாடத்தின் கூடத்தில்
அழகுற இடப்படும்
கோலமே மருதாணி..

(*) எவரது வீட்டினில்
மருதாணி இருக்கிறதோ...
அவரது வீட்டுக்கே
அனைவரும் ஏகுவர்..

(*) பறித்தலும்... இலைதரம்
பிரித்தலும்.... முடிந்தபின்
அரைத்தலும்... என்பதில்
அத்துணை ஆனந்தம்.

(*) இலையுடன் புளியும்
இட்டு அரைப்பதும்
தைலமும் சிறிது
தெளித்து அரைப்பதுமாக..

(*) இங்ஙணம் பலவகை
இன்பங்கள் கொடுத்திடும்
அங்ஙணம் அழகாய்
அரைத்த மருதாணி..

(*) செடியினில் பறிப்பதும்
செறிவுடன் அரைப்பதும்
அடியோடு இல்லாது
அழிந்ததை காணீரோ..!!

(*) அங்காடி கடைகளில்
அழகிய கோன்களில்
மங்கையர் விரும்பிடும்
மருதாணி கிடைக்குமாம்..

(*) ஒவ்வாது சிலருக்கு..
உருப்படியாய் வந்தாலும்
வெவ்வேறு நிறமாகும்
வெவ்வேறு தோலுக்கு..

(*) ஆயத்த மருதாணி
அரிப்பினை உண்டாக்கும்..
தீபட்ட இடம்போல
தழும்பினை உருவாக்கும்..

(*) உடம்பினில் மாறுதல்
உருவாதல் ஒருரகம்..
ஊடக பக்கத்தில்
புரளியோ பலரகம்..

(*) மருத்துவ குணமுள்ள
மருதாணி எனும்பெயரில்
உறுத்திடும் ஒருவகை
பசையுள்ள கூம்புகளில்

(*) வண்ணம் கிடைத்திடலாம்
வகைவகையாய் வரைந்திடலாம்..
சின்ன துளைவழியே
பெரிய துயர்வரலாம்..

(*) உண்மை பலன்கிடைக்க
சிறிதாய் முயன்றிடுவோம்.
பண்டைய  வழியினிலே
பறித்து அரைத்திடுவோம்.

(*) அரைத்த பசையெடுத்து
கூம்பு செய்திடுவோம்..
நினைத்த வடிவங்களை
நிரப்பி மகிழ்ந்திடுவோம்!!

~அதிரை என்.ஷஃபாத்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு