துபாயிலிருந்து விமானம் திருச்சியை நோக்கி வந்து கொண்டிருந்தது அதில் அதிரையைச் சேர்ந்த அஹமது (பயணத்தின் நாயகன்) மிக சந்தோசத்தோடு வரும் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாட 45 நாள் விடுப்பில் வந்து கொண்டிருந்தார்.
திருச்சி விமான நிலையம். அஹமதுவின் தம்பி மற்றும் மைத்துனர், மாமனார் ஆகியோர் சகிதம் ஆவலோடும் பரபரப்போடும் வெளியில் காத்திருந்தனர்.
அல்லாஹ்வின் உதவிகொண்டு விமானம் திருச்சி விமான நிலையத்தின் ஓடுதளத்தில் தரையிரங்கியது அதன் பின்னர் விமான நிலைய சட்டதிட்ட நடைமுறைகள் முடிந்து அஹமதுவும் விமான நிலையத்திலிருந்து வெளிவந்தார். அவரை அழைத்துச் செல்ல வந்திருந்த அனைவர்களது முகத்திலும் சந்தோசம் முசாஃபா செய்து கொண்டனர்.
தம்பி, காக்காவிடம் நலம் விசாரித்துவிட்டு "காக்கா சாம்சங் ஸ்கிரீன் டச் ஃபோன் வாங்கி வந்துயிருக்கிங்கதானே?" உரிமையோடும் ஆவளோடும் கேட்டான்.
சிரித்துக்கொண்டே "கொண்டு வந்திருக்கிறேன்டா தம்பி" என்றவர். அனைவரும் காருக்குள் ஏறினர். கார் அதிரையை நோக்கிச் சென்றது. ஊர் விசயங்களை ஒவ்வொன்றாய் ஒவ்வொருவரிடமும் கேட்டுக்கொண்டு வந்தார் அஹமது. இடையிடையே கார் ஓட்டுனரும் மற்றவர்கள் சொல்லவிட்டதை எடுத்து கொடுத்தார்.
மாமனாரை பார்த்து "ஆமினா (மனைவி) நல்லா இருக்கின்றதா?" என்று கேட்க... அவரும் "நல்லா இருக்கிறது, என்ன சுகரும் ப்ரசரும்தான் அடிக்கடி தொந்தரவு செய்கிறது." என்று சொல்லிக் கொண்டு வர, இடை யே ஓட்டுநர்(ஜமால்) அஹமதுவைப் பார்த்து "காக்கா தஞ்சாவூர் சென்றாலும் பட்டுக்கோட்டை சென்றாலும் ராத்தா என் காரில்தான் வருவார்கள் என்ன ஆஸ்பத்திரி வேலை மட்டும் தான் என்று சொல்லிவிட்டு எல்லா கடைகளிலும் ஏறி இறங்கி லேட் பன்னிட்டு வெயிட்டிங் சார்ஜ் மட்டும் தரவே மாட்டார்கள்" என்று சொல்ல, மாமனார் ஓட்டுனரை முரைத்துவிட்டு ரோட்ட பாத்து ஓட்டுப்பா என்று அதட்டினார்.
அதிரை மண்ணில் கால் பதித்தாகிவிட்டது உம்மாவிடம் சலாம் சொல்லி முசாஃபா செய்து தம்மை பார்க்க வந்தவர்களிடம் உடல் நலம் விசாரித்து அமானித சாமான்கள் கேட்டுவந்தவர்களிடம் மஃக்ரிபுக்கு பிறகு வரச் சொல்லியும் பரபரப்பாய் இருந்து கொண்டிருந்தார் அஹமது.
தன்னந்தனியாய் பாலைவனத்தில் காணாமல் போன ஒட்டகம் திரும்பக் கிடைத்த சந்தோசம் குருவிக் கூட்டுக்குள் இரை கொண்டு வந்த தாய்ப் பறவையை கண்ட பரவசம் 3 வருடம் ஒரே அறையில் சந்தோசமாய் படித்து படுத்து குதூகளித்து கல்லூரி படிப்பு முடிந்து பிரிந்த இரண்டு நண்பர்கள் நீண்ட இடைவேளைக்குப்பின் சந்தித்துக் கொண்ட மகிழ்ச்சி அனைத்தும் ஒன்று சேர்ந்த கலவை என்று கழிந்தது.
அன்று இரவு 9 மணி கணவன் மனைவி சந்திப்பில் ஒருவர் ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர். பேச்சு வரவில்லை நான்கு கண்களும் ஏதேதோ பேசுகிறது. வாயில் புன்னகை வார்த்தைகளில் தடுமாற்றம் 2 வருட பிரிவிற்கு பின்னர் அல்லாஹ் தந்த அற்புத நேரம் ஆனந்தச் சூழல் அல்ஹம்துலில்லாஹ்..
தொடரும்
மு.செ.மு.சஃபீர் அஹமது


