அல்லாஹ் தந்த பொக்கிஷமே -இணை
இல்லா எந்தன் சொந்தமே!
என் தாயின் துணையே!
எந்தையே, என் தந்தையே!
நான்
தீராத அன்பு கொள்ளும் அன்பே!
நான்
என்றும் தங்கள் நாணின் அம்பே!
என்
மூச்சு காற்றின்
மூலக்காற்றே!
என்னை
அல்லாஹ்விடமிருந்து
பெற்றுத்தந்த வரமே!
அலிப் சொல்லித்தந்த
முதல் ஹஜ்ரத்தே!
அகரம் சொல்லித்தந்த
முதல் ஆசானே!
நபிவழி
நடக்கச் சொல்லித்தந்த
நஜாத்தே!
சமூகத்தின் பாதையில்
நடக்க சொன்ன - சுன்னத்துல்
ஜமாத்தே!
நான் வாழ
தேய்ந்த நிலவே!
நான் இன்பம் கான
என்னில் வந்த கனவே!
உம்
முதுகு வளைத்து
எம் வாழ்வை நிமிர்த்தியே!
உம்
துன்பம் மறைத்து
இன்பம் மட்டும் தந்தீரே!
என் விந்தையே! தந்தையே!
உலகில் எம்முன்னே
மறைந் தாலும்
எனை ஆளும்
உம் அன்பு!பாசம்,தியாகம்!
நான் முன்னே இறந்தாலும் ,
கவலை வேண்டாம்
நீர்
என்னை என்றும்
மனதில் சுமக்கும் தாய்!
வாழ்க நீர் பல்லாண்டு
என் தந்தையே!
என் உயிரின் உந்தே!
அ.ர.முஹமது தஸ்தகீர்(கிரவுன்)