Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label ஃபோட்டோகிராஃபி. Show all posts
Showing posts with label ஃபோட்டோகிராஃபி. Show all posts

ஸ்டெடி ரெடி அப்புறம் புடி ! 6

அதிரைநிருபர் பதிப்பகம் | October 22, 2016 | , , ,

நம்மைச் சுற்றி நிகழ்பவைகளில் உலகில் நிறைய விசயங்கள் மாறினாலும் ஒரு சில விசயங்கள் இன்னும் மாறாமல் அப்படியே இருந்து வருகின்றன அல்லது இயங்குகின்றன ! முன்பெல்லாம் நாங்கள் மல்லிபட்டினம் மனோராவுக்குச் சென்றாலும் அங்கே நின்று அல்லது அந்த கட்டிடக் கலையை போட்டோ எடுப்பவர்கள் மனோராவின் உச்சியை தொடுவது போல் அங்கே நின்று போஸ் கொடுப்பவரின் கையை தூக்கிக் கொண்டு நிற்பதும் அதனைப் படம் எடுப்பவரோ தரையில் உட்கார்ந்தும் உருண்டும் புரண்டும் ஃபோட்டோ  எடுப்பதை காணாமல் வந்ததில்லை.

கடந்த ஆண்டு வேலையாக (பணி நிமித்தம்) மும்பை சென்றபோது கேட்வே ஆஃப் இந்திய சென்று வந்தேன் அங்கே ஒருவர் கையை தூக்கிக் கொண்டு ஓபராய் ஹோட்டலின் உச்சியை தொடுவது போல்  போஸ் கொடுக்க அதை அங்கு இருந்த ஃபோட்டோ கிராபர் ஃபோட்டோ எடுத்ததை பார்த்ததும் நம்மூர் மல்லிபட்டினம் மனோரா மலரும் நினைவுகள் நினைவுக்கு வந்தது. பலரையும் படம் எடுக்கும் இந்த புகைப் படக்காரரை அதாங்க ஃபோட்டோ கிராபரை நான் ஒரு கிளிக் கிளிக்கு கொண்டு வந்தேன்.

புகைப்படம் எடுப்பதும் அதனை ரசனைக் கண் கொண்டு ரசிப்பதும் அவரவர் விருப்பம் அதிலும், சில புகைப் படங்கள் திகைக்க வைக்கும் அழகையும், ஆச்சரியத்தையும், பிரமிப்பையும் ஊட்டும். இன்னும் சிலவகையோ எப்படியெல்லாம் புகைப்படம் எடுக்கக் கூடாது என்று படம் பிடித்து காட்டிவிடும். ஆளுக்கு ஒரு டிஜிட்டல், அல்லது மொபைல் ஃபோன் கிளிக் அங்கே அவரவருக்கு தகுந்த (ரசனைக்கேற்ற) விளக்கமும் விமர்சனமும் பதிக்கப்படுவதை நினைத்து எப்படியெல்லாம் எடுக்க கூடாது என்ற பாடமும் நமக்கு அவ்வப்போது கிடைத்துக் கொண்டே இருக்கிறது.

இப்போ ஏனுங்க அதுக்கு இப்படியொரு பீடிகையுடன் ஒரு சிறு கட்டுரை அதுக்கு ஒரு ஃபோட்டோ என்று கோபப்படமா ஒரு விஷயத்தை கவனிங்க தமிழனாக இருந்தாலும் கன்னடனாக இருந்தாலும் மலையாளியாக இருந்தாலும் பம்பாய் காரனாக இருந்தாலும் நாம எல்லாம் இந்தியன் நம்மிடமோ பல வேற்றுமை இருந்தாலும் ஒரு சில விசயங்களில் ஒற்றுமை இருப்பதைத்தான் அந்தப் படம் (!!!) நமக்கு காட்டுகின்றது.

முக்கிய குறிப்பு : தேசிய நீரோட்டத்தில் இணைந்து விடும் ஐடியாவெல்லாம் இல்லை, ஏதோ தேர்தல் நேரமாக இருப்பதால் எல்லோரும் தேசம், என் தேசம், என்று சொல்லிகிட்டு இருக்காங்க... நாமளும் ஊரைத் தாண்டி இந்தியாவையும் நேசிப்போம்னும் எப்போதான் எழுதுறதாம் !


Sஹமீது

ஃபோட்டோகிராஃபியும் அதன் நகலும் ! 53

அதிரைநிருபர் பதிப்பகம் | December 01, 2011 | , , ,

பேசும் படங்களும் அவைகள் என்னையும் பேச அழைத்த அழகும் !

சவுதி அரேபிய பாலைவனத்தில் ஒரு பகுதியில் செவ்வானம் சிவந்திருக்கும் அந்தி மாலையின் அழகிய இயற்கை காட்சியை துல்லியமாக காட்சிப் படுத்திட உள்ளம் துடித்தது. கிட்டியதோ வழமையாக எம்மோடு தோள்மீது தொங்கும் எனது மூன்றாம் கண்ணாக கேமரா அதனை கையிலெடுத்து குறிவைத்தேன் மறைய எத்தனிக்கு சூரியனை சுட்டுவிடலாம் என்று. ஆனால், எனது விரலோ அழுத்தியது அந்தக் கேமராவின் பொத்தனை அதனூடே பதிந்தது இந்த வண்ணப்படம் நிழற்படமாக.


1. சமீபத்தில் கொடைக்கானல் சென்றிருந்தபோது பில்லர்-ராக் எனும் இடத்தில் மேகக்கூட்டம் அந்த பில்லர் ராக்கை கிராஸ் செய்தபோது எடுத்த படம்.


2. ஒற்றை காலில் தலைகீழ் நின்ற இந்த பூக்கள் என்னை தலை நிமிர்ந்து பார்த்திடத் தூண்டியதன் விளைவு இந்தப் புகைப்படம்.


3. இந்த மஞ்சள் வண்ணப்பூ மென்மையாக இருந்ததை பார்த்து மனம் கவர்ந்து கிளிக் செய்தது .


4. ஊருக்கு விடுப்பில் சென்றிருந்தபோது வீட்டில் இருந்ததை விட தோப்பில் இருந்த நேரம்தான் அதிகம் அப்படி ஒரு நாள் தோப்பில் இருந்தபோது ஒரு மாலை நேரத்தில் பெய்த மழையில் மேற்கே இருந்த சூரியன் கிழக்கே தந்த அந்த வானவில்.


5. கேரட்டை நல்லா கழுவி சாப்பிடனும் இங்கே வந்து பார்த்ததும் தோனியது, காரணம் இவங்க அதை காலால் கழுவி விற்பனைக்கு அனுப்புறாங்க !


6. குட்டி குட்டியாய் இந்த சிவந்த(பூ)விதழை பார்க்க நன்றாக இருந்தது எனக்கு ! உங்களுக்கு எப்படி ?


7. கொக்கு குருவிகளை நேரில் பார்த்த நாம் அதை எல்லாம் இப்போ இப்படித்தான் இனி பார்க்க வேண்டி வருமோ !


8. வெள்ளையும் ரோஜா நிறமும் சேர்ந்த இந்த 'பூ' ஏற்காட்டில் எடுத்தது.








9. நீ முந்தி போவதா நான் முந்தி போவதா என்ற யோசனையில் இருவருமே போகாமல் நிக்கும் காட்சி (எடுத்த இடம் ராஜஸ்தான்)இதை எடுக்க ராஜஸ்தான் போவனுமான்னு யாரும் கேட்டுறாதிங்கா...


10. எக்ஹினோ கேக்டஸ் என்ற இந்த செடி பூமி உருண்டையா ? அல்லது நாங்கள் உருண்டையா என்று கேட்பது போல் இருந்தது.



11. இது எந்த இடம் என்று யாருக்கும் சொல்ல தேவை இல்லை என நினைகின்றேன்.


12. நம்மூர் மார்க்கெட் நம்மூர் தேசை பொடி மீன்.


இந்த புகைப்படங்களை கண்டதும் கவிதையாக எழுதுபவர்கள் கவிதையை அப்படியே எழுதுங்கள், மேலும் கருத்துக்களால் வர்னிப்பவர்கள் பின்னுட்டங்களால் அலங்காரம் செய்யலாம். புகைப்பட அணி வகுப்பு இன்னும் தொடரும் இன்ஷா அல்லாஹ். 

- ஹமீது


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு