Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label கைகள். Show all posts
Showing posts with label கைகள். Show all posts

பிடி நழுவிய பொழுதுகள்! 14

அதிரைநிருபர் பதிப்பகம் | January 28, 2015 | , , , ,

நீர்த்தேக்கம் உடைந்து
ஊர்த்தாக்கும் வரை
கண்டுகொள்ளாமல் விடப்பட்ட
அணைக்கட்டின் கசிவு

குரும்பு என்று
அரும்பிலேயே
அலட்சியமாய் விட்டுவிட்ட
சிறுவனின் முதற்குற்றம்

உஷ்ணத் தொடுகைக்குத்
தயாராகும்வரை
ஒன்றுமில்லை என்றிருந்த
விடலைகளின் ஓரப்பார்வை

ஒரு துளிதானே சிறு பொறிதானே
என விடப்பட்ட
பிழையான கணிப்புகளால்தான்
பெரு வெள்ளமோ கடும் நெருப்போ
அழித்து அடங்கும்

உல்லாச ஊஞ்சலில்
காற்றைக் கிழித்தாடும்
களிப்பான கணங்கள்கூட
ஒரு நொடி
பிடி நழுவவே
வலியோடு முடிகின்றன

பற்றிப் பிடிப்பதில்
வெற்றியடைதல் போதாது
கைக்கு எட்டி
வாய்க்கும் வாய்ப்புகள்
வாய்க்கும் எட்டும்வரை
அடி வழுவாது
பிடி நழுவாது பிடி

அகலப்பாதை கனவால்
பிடி நழுவிய பொழுதன்றோ
இருந்த இருப்புப் பாதையையும்
ஊர்ந்த ரயிலையும்
ஒன்றுமில்லாமல் செய்துவிட்டது

ஓடிப்போகும்
ஜோடிக்குப் பின்னாலும்
வாடிப்போகும்
வாழ்க்கைக்குக் காரணமாகவும்
தோற்றுப் போகும்
தொழிலுக்குத் துவக்கமாகவும்
இன்னும்
இல்லை யென்றாகிப்போன
இயல்பான இன்பத்திற்கும்
பிடி நழுவிய பொழுதொன்று
இருந்தே தீரும்

பிடி இறுகட்டும்

ஒடித்துவிடாமல் வளைக்கவும்
வெடித்துவிடாமல் அனைக்கவும்
ஆரம்பமே
அருமையான தருணம்!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு