Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label SMS. Show all posts
Showing posts with label SMS. Show all posts

ஐம்பது ஆண்டுகளுக்கு முன் ! 8

அதிரைநிருபர் பதிப்பகம் | October 03, 2016 | , , ,

நினைவில் நிலைத்ததை பகிர்வது : மர்ஹூம் ஹாஜி த. அ. அப்துல் ரசாக்...

அதிரை நகரக் கல்வித் தந்தை ஹாஜி எஸ்.எம்.எஸ். ஷேக் ஜலாலுதீன் 28-ஜனவரி-1920ல் பிறந்தார். நகரத் தந்தை சேர்மன், முஹம்மது அபுல் ஹசன் மரைக்காயரின் ஒரே பிள்ளை; செல்லப்பிள்ளை; சேர்மன் தன் தந்தை ஹாஜி ஷேக் ஜலாலுதீன் பெயரைப் பிள்ளைக்குச் சூட்டினார். அதனால் மகனை எப்போதும் ’வாப்பா’ என்றே அழைப்பார்! மற்றவர்களிடம் பிள்யைப் பற்றிச் சொல்லும்போது ‘தம்பி’ என்பார்! இதனால் அவர் எல்லாருக்கும் ‘தம்பி’ ஆகிவிட்டார்!

நான் ஜனாப் ஷேக் ஜலாலுதீனின் பள்ளித் தோழன்; நான் அவருக்கு இரண்டு வகுப்புகள் இளையவன். அதிராம்பட்டினம், ஆராவமுத அய்யங்கார் நடுநிலைப் பள்ளியிலும், பட்டுகோட்டை மாவட்டக் கழக உயர் நிலைப் பள்ளியிலும் படித்தோம். ஆராவமுத அய்யங்காரும் அவருடைய இரண்டாவாது மகனும் ஆசிரியர்கள்; அருமையான ஆசிரியர்கள்! அவர்கள் திறம் படப் பாடங்களை நடத்தியதோடு, மாணவர்களை வைத்து நாடகங்களையும், மற்ற கலை நிகழ்ச்சி களையும் நடத்தினார்கள். குறிப்பாக, ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் பிறந்த நாளன்று கலை நிகழ்ச்சிகள் அமர்க்களப்படும். அரசு மருத்துவ மனை வளாகம்தான், பள்ளியின் கலை அரங்கம்! ஒரு ஆண்டு சேக்ஸ்பியரின் ’வெனிஸ் வர்த்தகன்’ ஆங்கில நாடகம் நடந்தபோது, அதில் ஜனாப் ஷேக் ஜலாலுதீன் நீதிபதியாக நடித்தார்!

உடல் தளர்ச்சி காரணமாக ஆராவமுத அய்யங்கார், பள்ளியை மூடிவிட்டார்! அப்போது, தற்போதைய ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி மாவட்டப் பகுதிகளில், பட்டுக்கோட்டை – ஒரத்தநாடு இந்த இரண்டு இடங்களில் மட்டுமே உயர் நிலைப் பள்ளிகள் இருந்தன! எனவே மேற் படிப்புக்காக நாங்கள் பட்டுக்கோட்டை போய் வரலானோம்!

இப்போது போல அப்போது பட்டுக்கோட்டைக்கு பேருந்து வசதி கிடையாது! ஒரு நாளைக்கு இரு முறையோ, ஒரு முறையோ பேருந்து வரும்; போகும்! பயணக் கட்டணம் 4 அணா! பயணம் செய்வோரும் மிகவும் குறைவு! நான்கு அல்லது ஐந்து பேர் சேர்ந்து வருவதாகச் சொன்னால் வீட்டு வாசலில் பேருந்தை நிறுத்திக் கூட்டிச் செல்வார்கள்!

பட்டுக்கோட்டையிலிருந்து தஞ்சாவூருக்கும் பயணிகளை ஏற்றிச்செல்ல, பையை ஒருவர் இடையே ஒருவர் பிடுங்கிக் கொண்டு போவார்கள்! பயணக் கட்டணம் எட்டணா! போட்டி காரணமாக ஒருநாள் கட்டணத்தை ஓரணாவாகக் குறைத்ததோடு தஞ்சாவூரில் காப்பியும் கொடுத்தார்கள்! இந்தப் போட்டியைக் கண்டுதான் அப்போதைய முதல்வர் ராஜாஜி, அவர்கள் பேருந்துகளுக்கு வழித் தடங்களையும், நேரத்தையும் ஒதுக்கும் முறையைக் கொண்டு வந்தார்கள்! பேருந்து யாவும் கரி வண்டிகளே!

நான் ஜனாப் ஷேக் ஜலாலுதீன், திரு என்.எஸ். இளங்கோ, உட்பட ஏறத்தாழ 25 மாணவர்கள் பட்டுக்கோட்டையில் படித்தோம்! பெரும்பாலோர் புகை வண்டியில் சென்று திரும்புவர்! சிலர் சைக்கிளில் செல்வர்! இன்னும் சிலர் பட்டுக்கோட்டையிலேயே வாடகைக்கு அறை எடுத்துத் தங்கிப் படித்தார்கள்!

சேர்மன் ஒரு குதிரை வண்டியும், ஒரு ஃபோர்டு காரும் வைத்திருந்தார்! ஜனாப் ஷேக் ஜலாலுதீனையும் என்னையும் காலையில் புகை வண்டி நிலையத்திற்கும், மாலையில் அங்கிருந்து வீட்டிற்கும் ஏற்றிச் செல்ல குதிரை வண்டியோ அல்லது காரோ காத்திருக்கும்!

அக்காலத்தில் பட்டுக்கோட்டையில் உணவகங்கள் மிகவும் குறைவு! தரத்தையோ, ருசியையோ உணவுப் பண்டங்களில் எதிர் பார்க்க முடியாது! அளவு மட்டும் அதிகமாக இருக்கும்! தயிரோடு சாப்பாடு இரண்டணாதான்! முப்பது சாப்பாட்டுச் சீட்டுகள் மூன்றே முக்கால் ரூபாயே! திங்களன்று வடை, பாயாசத்துடன் சாப்பாடு போடுவார்கள்!

நானும் மற்ற மாணவர்களும் பகல் உணவை வீட்டிலிருந்து கொண்டு வருவோம்! ஜனாப் ஷேக் ஜலாலுதீன் உணவுப் பொட்டலம் எதுவும் கொண்டு வரமாட்டார்! மணிக்கூண்டிற்கு அருகில் இருந்த கன்டியர் சிற்றுண்டி விடுதியில் இரண்டு அல்லது மூன்று பரோட்டாக்களை பால் ஊற்றிச் சாப்பிடுவார்! நீலாதான் அப்போது பட்டுக்கோட்டையில் இருந்த ஒரே திரைப் படக் கொட்டகை! எப்போதாவது அவரும் மற்ற நண்பர்களும் திரைப் படம் பார்க்கப் போவோம்! மாணவப் பருவத்தில் ஜனாப் ஷேக் ஜலாலுதீன், பள்ளி உண்டு, வீடு உண்டு என்று இருப்பார்! விளையாட்டில் அவருக்கு ஈடுபாடு கிடையாது! அப்போதே ஆங்கிலத்திலும் தமிழிலும் நன்றாக, ஆணித் தரமாக எழுதுவார்! 1938 ஆம் ஆண்டு எஸ்.எஸ்.எ\ல்.சி. தேர்வு எழுதினார். தமிழில் தேற வில்லை! அப்போ தெல்லாம் ஒரு பாடத்தில் தேராவிட்டாலும் எல்லாப் பாடங்களையும் மீண்டும் எழுதவேண்டும்! அதனால், அடுத்த ஆண்டும் அதே வகுப்பிக் தொடர்ந்து படித்தார்!

மீண்டும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதக் கட்டணம் கட்டினார். 1939 மார்ச் துவக்கத்தில் தேர்வு எழுத படிப்பு விடுமுறை விட்ட போது, அவருக்குத் திருமணம் நடந்தது. திங்கட் கிழமை, தேர்வு தொடங்குவதாக இருந்தது. சனிக்கிழமை அவருக்குக் காய்ச்சல் கண்டது. மறுநாள் ஞாயிற்றுக் கிழமை அம்மை போட்டது! இதனால் தேர்வு எழுதமுடிய வில்லை! பல்லாயிரம் மாணவர்களுக்குக் கல்லூரிக் கல்வி வழங்கிய கல்வித் தந்தைக்கு கல்லூரிக் கல்வி கிடைக்க வாய்ப்புக் கிட்டவில்லை!

பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடக்கும் நாட்களில் மற்ற மாணவர்களுக்குக் காலை 9.30 மணி வரை வகுப்புகள் நடக்கும். அந்த நேரத்தில் பட்டுக்கோட்டைக்குப் புகை வண்டியோ, பேருந்தோ கிடையாது!

அப்படி ஒரு நாள் 1937 – ஆம் ஆண்டு மார்ச் திங்கள் காலை 7.30 மணி வகுப்புக்கு சேர்மனின் ஃபோர்டு காரில் பள்ளிக்குப் போய்க் கொண்டிருந்தோம். பட்டுக்கோட்டைப் பொது பணித்துறை பயண மாளிகைக்கு அருகில், காருக்கு பழுது ஏற்பட்டு நின்று விட்டது. நாங்கள் நடந்தே பள்ளிக்கூடம் நோக்கிப் போனோம்! திடீரென மழை பிடித்துக் கொண்டது! பக்கத்தில் வீடுகளோ, ஒதுங்கும் இடங்களோ எதுவும் இல்லை! நனைந்து கொண்டே பள்ளிக் கூடம் நோக்கிச் சென்றோம்!

அப்போது ஷேக் ஜலாலுதீன் சொன்னார், ”நாம் படிப்பதற்காக பட்டுகோட்டை வருவதில் அதிகமாகச் சிரமப் படுகிறோம்! நம் குழந்தைகள் இவ்விதம் சிரமப் படக் கூடாது! நாம் பெரியவர்களாகி ஓரளவு சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு, முதல் காரியமாக நம் பிள்ளைகள் நம் ஊரிலேயே படிக்க சொந்த முயற்சியில், ஓர் உயர் நிலைப் பள்ளியை ஆரம்பிக்க வேண்டும்!” மேற்படியார் இவ்வாறு சொன்னது, இன்னும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது! அவர் நினைத்தபடி தன் முயற்சியால் உயர் நிலைப் பள்ளி என்ன, ஆண்கள் மேல் நிலைப் பள்ளி, பெண்கள் மேல் நிலைப் பள்ளி, இளங் கலை, முதுகலை, கல்லூரி, தொழிற் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றை ஏற் படுத்தி தன் கனவை நனவாக்கி, அதற்கு மேலும் சாதித்து, நம் மத்தியில் தன் நினைவு என்றும் நிலைத்து நிற்கும் படிச் செய்து விட்டார்.

என்னைக் கல்லூரிக் கட்டிடக் குழுச் செயலாளராகப் பணியாற்றி நிதி திரட்ட ஓரளவு உதவ வைத்தது, இறைவனும், அவரின் வாயிலாக எனக்கு அளித்த பெரும் பாக்கியமாகும்!

நாங்கள் படித்த காலத்தில் அதிராம்பட்டினத்தில் இருந்த பி.ஏ. பட்டதாரிகள் இரண்டே பேர் தான்! ஒருவர் திரு மஜீது! அவரை பி.ஏ. மஜீது என்று தான் அழைப் பார்கள்! மற்றவர் என்.எஸ் இளங்கோவின் தமையனார் திரு கோவிந்தராஜுலு! இன்று அதிரையில் தடுக்கி விழும் இடமெல்லாம் பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., பட்டதாரிகள்! இந்த புரட்சி கரமான மாற்றத்திற்கான பெருமை கல்வித் தந்தை எஸ்.எம். எஸ். ஷேக் ஜலாலுத்தீன் அவர்களையே பெரிதும் சாரும்! இது உண்மை! வெறும் புகழ்ச்சி இல்லை!

கல்வியும் செல்வமும் ஒரு சேரப் பெற்றிருந்த அதிரைப்பட்டினத்தின் சரியான வாரிசு நம் கல்வித் தந்தை என்று சொன்னால் அது மிகை ஆகாது! 

வாவன்னா

எந்தப் பாதை உங்கள் பாதை? 24

அதிரைநிருபர் பதிப்பகம் | May 19, 2016 | , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

யாரோ ஒருவர் போட்ட ஒரே பாதையில் காலம் காலமாக பயணம் செய்வதைவிட அதனினும் சிறந்த வேறு ஒரு பாதையை அமைக்கும் மனிதனையே இந்த உலகம் போற்றுகிறது. எந்தப்  பாதையை நீங்கள் பார்த்தாலும் அதை போட்டவரின் அடையாளத்தை அதில் காணலாம். உங்கள் அடையாளத்தை காட்டும் பாதை ஒன்றை நீங்களும் போடலாமே!”


மேற்கண்ட வரிகள் சென்ற நூற்றாண்டின் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த சிறந்த கவிஞரான அந்தோனியோ மச்சாதோ(Antonio Machado) என்பவர் எழுதிய ஒரு கவிதையின் சாரம்.

நம் நாடு சுதந்திரம்  பெறுவதற்கு முன் மூன்றே மூன்று ஆரம்பப்  பள்ளிகள்  மட்டுமே நமது ஊரில் இருந்தன . அவை 

1.     இந்து மாணவர் ஆரம்ப பாட சாலை 
2.     பெண்கள் ஆரம்ப பாட சாலை 
3.     தட்டாரத் தெருவில் இருந்த முஸ்லீம் ஆண்கள் ஆரம்ப பாட சாலை.

இவற்றுள்  இரண்டில் ஒன்றைத்தான்  மாணவர்கள் தேர்ந்தெடுத்துப்  படித்தார்கள். இந்தப்  பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டும் தான் படிக்க முடியும். உயர்நிலைப்  படிப்பு படிக்க விரும்பினால் நம் ஊருக்கு தெற்கே ஆறு அல்லது ஏழு கிலோ மீட்டர் தூரமுள்ள ராஜாமடம் சென்று அங்குள்ள உயர் நிலை பள்ளியில்தான் படிக்க வேண்டும். இப்பொழுது போல் பேருந்து வசதி இல்லாத காலம். அதிகாலையில் பகல் சாப்பாட்டை டிபன் பாக்சில் எடுத்துக்கொண்டு சில மாணவர்கள் நடந்தே சென்று படித்தார்கள். பகல் சாப்பாடு என்பது இன்று போல் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்படும் இரட்டை முட்டை போட்ட லாப்பையோ, பாம்பே டோஸ்டோ, சிக்கன் பர்கரோ , சேமியா பிரியாணியோ, வெஜிடபிள் பிரியாணியோ அல்ல. பெரும்பாலும் நீர்ச்சோறு அல்லது பழைய சோறு என்று அழைக்கப்படும் சாப்பாடும் ஒரு துண்டு ஊறுகாய் அல்லது நாலு பச்சை வெங்காயம்தான்.

உயர் கல்வி பெற முடியாத மற்ற மாணவர்கள் கடிதம் எழுதவும் கை எழுத்து போடவும் தெரிந்தால் போதும் என்ற மன நிறைவோடு கல்விக்கு ஒரு முழுக்கு போட்டார்கள். இவர்களுக்கு கடிதம் எழுத கொஞ்சம் தெரியுமே தவிர. ஆங்கில எழுத்தில் அட்ரஸ் எழுதத்  தெரியாது. தமிழே அரைகுறையாக எழுதுவார்கள். ‘ஆண்டவன் துணை செய்வானாகவும்’ என்று எழுதத் தெரியாமல் ‘ஆண்டவன் தூணை செய்வானாகவும்’ என்று  எழுதிய சம்பவங்களும் நடந்தன.   ஐந்தாம் வகுப்பு வரை A B C  என்று தொடங்கும் ஆங்கில அகர வரிசை எழுத்துக்கள் பரம ரகசியமாகவே பாதுகாக்கப்பட்டது. அந்தக்காலத்தில் உயர் நிலைப்  பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்ந்த பின்தான் A B C  யை காணும் பாக்கியம் மாணவர்களுக்குக் கிட்டியது. இப்படி அடிப்படையில் உயர் கல்வி பெறமுடியாத சூழ்நிலைதான் மூட்டை தூக்கிகளாகவும், எடுபிடி வேலை செய்பவர்களாகவும், சமையல்காரர்களாகவும் பிழைப்பு நடத்த மலேயா, சிங்கப்பூர் என்று கடல் கடந்து செல்லக் காரணமானது.

ராஜாமடம் என்ற ஊரையும் அதிராம்பட்டினத்தையும் ஒப்பிட்டு பார்த்தால் அதிராம்பட்டினத்தின் ஒரு தெருவுக்குக்  கூட ராஜாமடம் ஈடாகாது. ஆனால் அந்த ஊரில் உயர்நிலைப்  பள்ளி இருந்தது. அந்தப் பள்ளி பனை மரம் போன்றோ அரளிச்  செடி போன்றோ  தானாக முளைக்கவில்லை. கல்வியின் அவசியத்தை உணர்ந்த சிலர் அங்கே வசித்து வந்தார்கள். அவர்கள் அரசின் கதவை தட்டினார்கள்; கதவு திறந்தது;. கேட்டார்கள்; கிடைத்தது.

அன்றைய சூழலில் கல்வியின் மகிமை அறியாதிருந்த நம்மூர் பெரும் தலைகள் கேட்கவில்லை; அதனால் கிடைக்க வில்லை. அதிராம்பட்டினத்தின் வாசிகளான நாம் “ஐந்தே போதும் ஐந்துக்கு மேல் வேண்டவே வேண்டாம்” என்ற சுலோகத்தை சொல்லிக் கொண்டே காலம் கடத்தினோம். பெண்களுக்கு அதுவும் கிடையாது.

எல்லோரும் படித்து முன்னுக்கு வந்தால் நம் V I P அந்தஸ்து போய்விடும் என்ற பயம் ஒரு பக்கம், சபை கூடி “நாயம்” பேசி பரம்பரை பரம்பரையாக நாட்டாமைப்  பட்டத்தை காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போகுமோ என்ற அச்சத்தால் தற்காப்பு நடவடிக்கையாக உயர் கல்விக்கு வழி காணாமல் இருந்தார்கள்.

ஆனால் “எதற்கும் ஒரு காலமுண்டு பொறுத்திரு மகனே”” என்று விஸ்வநாதன் தன் குரலில் பாடிய பாடலை நீங்கள் கேட்டிருக்க கூடும்.

ஆம்! அந்தப் பொறுமையின்  விடியல் 25.06.1949   ல் உதித்தது ஒரு வேர் கொண்ட உதய சூரியன்; அதிரை மண்ணில் அது பதித்தது தன் வேர்களை. அந்த நாள் அதிராம்பட்டினத்தில் காதர் மொய்தீன் உயர் நிலை பள்ளியின் பிறந்த நாளாகும். இந்தக் கல்விக் குழந்தையை கரங்களில் ஏந்தி தொட்டிலில் இட்டவர் கண்ணியம் மிக்க காயிதே மில்லத் ஜனாப் முகமது  இஸ்மாயில் சாகிப்  அவர்களாவார்கள்.   அது வேரோடும் கிளையோடும் விழுதோடும் கூடிய ஆலமரம் போல வளர்ந்தது.


அதைத் தொடர்ந்து மற்றும்மொரு நல்ல மரம் நடப்பட்டது. அதுதான் காதர் முகைதீன் கல்லூரியாகும். நட்ட மரங்கள் இரண்டுமே நல்ல மரங்கள். பூத்தன , காய்த்தன , கனிந்தன . இந்தப் பழத் தோட்டத்தை மேலும் சிறப்பாக்க  பெண்களுக்கான தனி மேல்  நிலைப் பள்ளியும் தொடங்கப்பட்டது. மாஷா அல்லாஹ்.  

ஆயிரம் ஆயிரம் பறவைகள் வந்து தன் கல்விப்  பசி போக்க கனியுண்டு களித்தன . இளைப்பாற வந்தவர்களுக்கு  நிழல் கொடுத்தது. அது நடு ஊரில் பழுத்த நல்ல மரமாக எல்லோர்க்கும் கல்வி எனும் கனி கொடுத்தது. ஆனாலும் வெளியூர் பறவைகள் இந்த மரங்களில் வந்து தங்கி கல்விப் பழம் கொத்திப் பயன் அடைந்ததைப் போல் உள்ளூர்ப் பறவைகள் தேடி வரவில்லை.  


மர்ஹூம் காதர் முகைதீன் அப்பாவின் நன்கொடையை குடத்திலிட்ட விளக்காகவே வைக்காமல் குன்றில் இட்ட தீபமாக மாற்றி பல்லாயிரக்கணக்கான ஏழை எளிய மாணவர் மாணவியரின் கல்விக் கண்கள் திறக்க வழி செய்த மர்ஹூம்  S.M.S சேக் ஜலாலுதீன் அவர்களை நாம் மறக்க முடியாது. அல்லாஹ் அவர்களுக்குத்  தன்னிடம் உள்ள நல்லிடத்தை கொடுக்க துஆ செய்வோமாக. காலம் இதை மறந்து விடாது. இது காலம்  காலந்தோறும் பேசப்படும் காதர் முகைதீன் அப்பா விட்டுச்சென்ற அடையாளங்கள். அதற்கு மெருகூட்டி அதை நடு ஊரில் பழுத்த நல்ல மரமாக்கிய மர்ஹூம் S.M.S  சேக் ஜலாலுதீன் அவர்களின் அடையாளங்கள்.

அரசாங்கம் கை கொடுக்காத அதிராம்பட்டினத்துக்கு தனது  வள்ளல்  சிந்தனையால் கல்வி வளம் கொடுத்த மர்ஹூம் காதர் முகைதீன் அப்பா அவர்களின் திரண்ட சொத்தும், மர்ஹூம் சேக் ஜலாலுதீன் அவர்களின் சலிக்காத  உழைப்பும் கல்விக்காகக்  கை கொடுத்தாலும் உள்ளூர்வாசிகள் எந்த அளவுக்கு அவர்களின் மடிகளில் தானாக கனிந்து விழுந்த பழத்தை பயன்படுத்தி வெற்றி கண்டார்கள் என்பது கேள்விக்குறியே. உயர்நிலைப் பள்ளி திறக்கப்பட்டதும், அதில் சேர்ந்து படிப்பதற்கு உள்ளூரில் அவ்வளவு ஆர்வம்  காட்டப்படவில்லை. எனது இளமைப் பருவத்தில் ஐந்தாம் வகுப்பிலிருந்து தேர்வு பெற்றதும் நானும் எனது நண்பர்களும் ஆறாம் வகுப்பில் சேர்ந்து தொடர்ந்து படிப்பதற்காக முயற்சி  செய்தபோது எங்களை ஊக்கப்படுத்துவதற்கு பதிலாக,  ‘என்ன ஹை ஸ்கூலா ? போய் இங்க்லீஷ் படிக்கப் போறியலோ? படிச்சு பெரிய கலெக்டர் ஆயிடுவியலோ?’ என்றெல்லாம் சில பெரிசுகள் நையாண்டி செய்தன. அதில் ஒருவர் எங்களை நோக்கிக் கேட்ட கேள்வியும் அதற்கு நான் சொன்ன பதிலும் எனது நினைவுப் பதிவேடுகளில் இன்னும் உள்ளன. 

சின்னப் புளிய மரம். இது கடற்கரைத் தெருவின்  போதி மரம்  அல்ல. வம்பு பேசுவோர் வலிய வந்து கூடும் மடம். மலேசியாவிலிருந்து விடுமுறையில் வருபவர்கள்  கூடி தாயக்கட்டை, ஆடுபுலி ஆட ஒன்று கூடும் இடம். அத்துடன் அடுத்தவன் வீட்டில் அம்மி நகருதா ஆட்டுக்கல் நகருதா என்ற  ஊர் ‘பசாது’ களுக்கும் அங்குக்  குறைவு இருக்காது.

அன்றொருநாள் நானும் என்னுடன் புதிதாக உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தவர்களும் ஒன்றாக பள்ளிக்கு நடந்து போய்க்கொண்டு இருந்தோம். (அன்றெல்லாம் ஹீரோ ஹோண்டா பைக்கும் இல்லை; அதை வாங்கித்தர அன்றைய வாப்பாமார்களுக்கு வசதியும் இல்லை). அப்படிப் போய்க் கொண்டு இருக்கும்போது  தெருவின் முக்கியஸ்தர் எங்களைத் தடுத்து நையாண்டித் தொனியில், “ நீ யார் மவன்டா? எத்தனாவது படிக்கிறே? “     என்று கேட்டார். என் நண்பர்கள் பதில் சொன்னார்கள். நானும் சொன்னேன். “ அது சரி இங்க்லீஷ் படிக்கிறியளே! பலாச்சுளைக்கு இங்க்லீஷில் எப்புடிச்  சொல்லணும்? தெரியுமா?” என்று கேட்டார். உண்மையில் எங்களில் யாருக்கும் இதற்கு விடை தெரியாது. எனது நண்பர்கள் தெரியாது தெரியாது என்று சொல்லிவிட்டார்கள். கேலிச் சிரிப்புடன் அவர் என்னிடமும் கேட்டார். ஏற்கனவே பள்ளிக்கு நேரமாகிவிட்டது . இந்த வெட்டிக்குளத்துக்கு   அருகில் வெட்டியாக உட்கார்ந்து கொண்டு  எங்களை வேதனைப் படுத்தும் அந்தப் பெரிய மனுஷனுக்கு ஒரு நோஸ்கட் கொடுக்க வேண்டுமென்று எண்ணி  நான் பதில் சொன்னேன். “ பலாச்சுளைக்கு இங்க்லீஷ் என்னன்னு  நான் லண்டனுக்குப் போயி,  பலா  பழம் வியாபாரம் செய்யும் போது பலா பழத்திற்கு இங்கிலிஷில் எப்படி சொல்வதென்று தெரிந்து கொள்கிறேன். 

இப்போ நாங்க ஸ்கூலுக்குப்  போகனும்  “ என்று அந்தப் பாழாப் போனவரிடம் சொல்லிவிட்டு விறு விறு என்று நடையைக் கட்டினேன்.     இது பற்றி அவர் என் மாமா இடம்  புகார் செய்ததாக பின்பு கேள்விப்பட்டேன். இப்படியெல்லாம் படிப்புக்குத் தடை செய்பவர்கள் இருந்தார்கள். இதற்குக் காரணம் அடிப்படையில் நமது ஊரார் சாய்ந்தால் சாயுற பக்கக் கொள்கைகளையும், செக்குமாடு சித்தாந்தத்தையும் கடைப்பிடித்து வந்ததே. புகைவண்டி நிலையத்தையே நமதூருக்குள் வேண்டாம் தூரமாகப் போகட்டும் என்று ஊரைவிட்டு தூரமாக  ஒதுக்கியவர்களாயிற்றே . ஆரம்பத்தில் இன்றுள்ள வண்டிப் பேட்டையில்தான் நமதூரின் ரயில் நிலையம் அமைய இருந்ததாம்.     

பிற்காலங்களில் கூட நமது ஊர்க்  கல்லூரியில் இருந்த பட்டப் படிப்புகளின் பாடப்பிரிவுகளையே சென்னை, திருச்சி போன்ற  வெளியூர்க் கல்லூரிகளில் சேர்ந்து படித்த நம்மூர்வாசிகளின் பிள்ளைகள் ஏராளம். அதற்கு சொல்லப்பட்ட காரணம் அதிராம்பட்டினத்தில் படித்தால் இங்க்லீஷ் டெவலப் ஆகாது என்பதே. ஆனால் உற்று நோக்கினால் அதிரையிலே பிறந்து அதிரையிலேயே படித்து வளர்ந்தவர்கள்தான் பேராசிரியர்களாகவும் தலைமை ஆசிரியர்களாகவும் பரிணமித்தார்கள். வெளியூர்க் கல்லூரிகளில் போய் படித்தவர்கள் அவ்வளவாக பிரகாசிக்கவில்லை.

இன்றைக்கு நமதூரில் பெண்களுக்கிடையில் நல்ல கல்வி விழிப்புணர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. பல பெண்கள் நமது கல்லூரியிலும், பள்ளிகளிலும் படித்து வருகிறார்கள். வள்ளல் காதர் முகைதீன் அப்பா அவர்கள் போட்ட கல்விப்  பாதையே இதற்குக் காரணம்.  இதேபோல் திருச்சியில் மர்ஹூம் ஜமால் முகமது அவர்களும் உத்தம பாளையத்தில் ஹாஜி கருத்த ராவுத்தர் அப்பா அவர்களும் மேல்விஷாரத்தில் வள்ளல் அப்துல் ரஹீம் அவர்களும் தங்கள் தாங்கள் ஊர்களின்  கல்விப் பாதையை கருணை உள்ளத்துடன் போட்டு இந்த சமுதாயத்துக்கு நல்வழி காட்டினார்கள். இந்த மேன்மையான மக்களுக்காக நாம் து ஆச்செய்வோம்.   

அதுபோல் நீங்களும் ஒரு நல்ல பாதை போட்டு அதில் உங்களின் அடையாளத்தை பதிக்க வேண்டும் என்ற வேட்கையில் நான் ஸ்பெயின் நாட்டு கவிஞர் அந்தோனியோ மச்சாதொவின் கவிதை வரிகளை ஆரம்பத்தில் எடுத்து காட்டினேன். உங்களுக்குப்  பின் உங்கள் அடையாளத்தை உலகில் பதிக்க நீங்கள் ஒரு பாதை போட வேண்டும். 

எந்தப் பாதை உங்கள் பாதை?. 

இன்ஷா அல்லாஹ் மீண்டும் சந்திப்போம்.

முகமது பாரூக்

எந்தப் பாதை உங்கள் பாதை? 5

அதிரைநிருபர் பதிப்பகம் | January 19, 2015 | , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

யாரோ ஒருவர் போட்ட ஒரே பாதையில் காலம் காலமாக பயணம் செய்வதைவிட அதனினும் சிறந்த வேறு ஒரு பாதையை அமைக்கும் மனிதனையே இந்த உலகம் போற்றுகிறது. எந்தப்  பாதையை நீங்கள் பார்த்தாலும் அதை போட்டவரின் அடையாளத்தை அதில் காணலாம். உங்கள் அடையாளத்தை காட்டும் பாதை ஒன்றை நீங்களும் போடலாமே!”


மேற்கண்ட வரிகள் சென்ற நூற்றாண்டின் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த சிறந்த கவிஞரான அந்தோனியோ மச்சாதோ(Antonio Machado) என்பவர் எழுதிய ஒரு கவிதையின் சாரம்.

நம் நாடு சுதந்திரம்  பெறுவதற்கு முன் மூன்றே மூன்று ஆரம்பப்  பள்ளிகள்  மட்டுமே நமது ஊரில் இருந்தன . அவை 

1.     இந்து மாணவர் ஆரம்ப பாட சாலை 
2.     பெண்கள் ஆரம்ப பாட சாலை 
3.     தட்டாரத் தெருவில் இருந்த முஸ்லீம் ஆண்கள் ஆரம்ப பாட சாலை.

இவற்றுள்  இரண்டில் ஒன்றைத்தான்  மாணவர்கள் தேர்ந்தெடுத்துப்  படித்தார்கள். இந்தப்  பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டும் தான் படிக்க முடியும். உயர்நிலைப்  படிப்பு படிக்க விரும்பினால் நம் ஊருக்கு தெற்கே ஆறு அல்லது ஏழு கிலோ மீட்டர் தூரமுள்ள ராஜாமடம் சென்று அங்குள்ள உயர் நிலை பள்ளியில்தான் படிக்க வேண்டும். இப்பொழுது போல் பேருந்து வசதி இல்லாத காலம். அதிகாலையில் பகல் சாப்பாட்டை டிபன் பாக்சில் எடுத்துக்கொண்டு சில மாணவர்கள் நடந்தே சென்று படித்தார்கள். பகல் சாப்பாடு என்பது இன்று போல் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்படும் இரட்டை முட்டை போட்ட லாப்பையோ, பாம்பே டோஸ்டோ, சிக்கன் பர்கரோ , சேமியா பிரியாணியோ, வெஜிடபிள் பிரியாணியோ அல்ல. பெரும்பாலும் நீர்ச்சோறு அல்லது பழைய சோறு என்று அழைக்கப்படும் சாப்பாடும் ஒரு துண்டு ஊறுகாய் அல்லது நாலு பச்சை வெங்காயம்தான்.

உயர் கல்வி பெற முடியாத மற்ற மாணவர்கள் கடிதம் எழுதவும் கை எழுத்து போடவும் தெரிந்தால் போதும் என்ற மன நிறைவோடு கல்விக்கு ஒரு முழுக்கு போட்டார்கள். இவர்களுக்கு கடிதம் எழுத கொஞ்சம் தெரியுமே தவிர. ஆங்கில எழுத்தில் அட்ரஸ் எழுதத்  தெரியாது. தமிழே அரைகுறையாக எழுதுவார்கள். ‘ஆண்டவன் துணை செய்வானாகவும்’ என்று எழுதத் தெரியாமல் ‘ஆண்டவன் தூணை செய்வானாகவும்’ என்று  எழுதிய சம்பவங்களும் நடந்தன.   ஐந்தாம் வகுப்பு வரை A B C  என்று தொடங்கும் ஆங்கில அகர வரிசை எழுத்துக்கள் பரம ரகசியமாகவே பாதுகாக்கப்பட்டது. அந்தக்காலத்தில் உயர் நிலைப்  பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்ந்த பின்தான் A B C  யை காணும் பாக்கியம் மாணவர்களுக்குக் கிட்டியது. இப்படி அடிப்படையில் உயர் கல்வி பெறமுடியாத சூழ்நிலைதான் மூட்டை தூக்கிகளாகவும், எடுபிடி வேலை செய்பவர்களாகவும், சமையல்காரர்களாகவும் பிழைப்பு நடத்த மலேயா, சிங்கப்பூர் என்று கடல் கடந்து செல்லக் காரணமானது.

ராஜாமடம் என்ற ஊரையும் அதிராம்பட்டினத்தையும் ஒப்பிட்டு பார்த்தால் அதிராம்பட்டினத்தின் ஒரு தெருவுக்குக்  கூட ராஜாமடம் ஈடாகாது. ஆனால் அந்த ஊரில் உயர்நிலைப்  பள்ளி இருந்தது. அந்தப் பள்ளி பனை மரம் போன்றோ அரளிச்  செடி போன்றோ  தானாக முளைக்கவில்லை. கல்வியின் அவசியத்தை உணர்ந்த சிலர் அங்கே வசித்து வந்தார்கள். அவர்கள் அரசின் கதவை தட்டினார்கள்; கதவு திறந்தது;. கேட்டார்கள்; கிடைத்தது.

அன்றைய சூழலில் கல்வியின் மகிமை அறியாதிருந்த நம்மூர் பெரும் தலைகள் கேட்கவில்லை; அதனால் கிடைக்க வில்லை. அதிராம்பட்டினத்தின் வாசிகளான நாம் “ஐந்தே போதும் ஐந்துக்கு மேல் வேண்டவே வேண்டாம்” என்ற சுலோகத்தை சொல்லிக் கொண்டே காலம் கடத்தினோம். பெண்களுக்கு அதுவும் கிடையாது.

எல்லோரும் படித்து முன்னுக்கு வந்தால் நம் V I P அந்தஸ்து போய்விடும் என்ற பயம் ஒரு பக்கம், சபை கூடி “நாயம்” பேசி பரம்பரை பரம்பரையாக நாட்டாமைப்  பட்டத்தை காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போகுமோ என்ற அச்சத்தால் தற்காப்பு நடவடிக்கையாக உயர் கல்விக்கு வழி காணாமல் இருந்தார்கள்.

ஆனால் “எதற்கும் ஒரு காலமுண்டு பொறுத்திரு மகனே”” என்று விஸ்வநாதன் தன் குரலில் பாடிய பாடலை நீங்கள் கேட்டிருக்க கூடும்.

ஆம்! அந்தப் பொறுமையின்  விடியல் 25.06.1949ல் உதித்தது ஒரு வேர் கொண்ட உதய சூரியன்; அதிரை மண்ணில் அது பதித்தது தன் வேர்களை. அந்த நாள் அதிராம்பட்டினத்தில் காதர் மொய்தீன் உயர்நிலை பள்ளியின் பிறந்த நாளாகும். இந்தக் கல்விக் குழந்தையை கரங்களில் ஏந்தி தொட்டிலில் இட்டவர் கண்ணியம் மிக்க காயிதே மில்லத் ஜனாப் முகமது  இஸ்மாயில் சாகிப்  அவர்களாவார்கள்.   அது வேரோடும் கிளையோடும் விழுதோடும் கூடிய ஆலமரம் போல வளர்ந்தது.


அதைத் தொடர்ந்து மற்றும்மொரு நல்ல மரம் நடப்பட்டது. அதுதான் காதர் முகைதீன் கல்லூரியாகும். நட்ட மரங்கள் இரண்டுமே நல்ல மரங்கள். பூத்தன , காய்த்தன, கனிந்தன . இந்தப் பழத் தோட்டத்தை மேலும் சிறப்பாக்க பெண்களுக்கான தனி மேல்  நிலைப் பள்ளியும் தொடங்கப்பட்டது. மாஷா அல்லாஹ்.  

ஆயிரம் ஆயிரம் பறவைகள் வந்து தன் கல்விப்  பசி போக்க கனியுண்டு களித்தன . இளைப்பாற வந்தவர்களுக்கு  நிழல் கொடுத்தது. அது நடுவூரில் பழுத்த நல்ல மரமாக எல்லோர்க்கும் கல்வி எனும் கனி கொடுத்தது. ஆனாலும் வெளியூர் பறவைகள் இந்த மரங்களில் வந்து தங்கி கல்விப் பழம் கொத்திப் பயன் அடைந்ததைப் போல் உள்ளூர்ப் பறவைகள் தேடி வரவில்லை.  


மர்ஹூம் காதர் முகைதீன் அப்பாவின் நன்கொடையை குடத்திலிட்ட விளக்காகவே வைக்காமல் குன்றில் இட்ட தீபமாக மாற்றி பல்லாயிரக்கணக்கான ஏழை எளிய மாணவர் மாணவியரின் கல்விக் கண்கள் திறக்க வழி செய்த மர்ஹூம்  S.M.S சேக் ஜலாலுதீன் அவர்களை நாம் மறக்க முடியாது. அல்லாஹ் அவர்களுக்குத்  தன்னிடம் உள்ள நல்லிடத்தை கொடுக்க துஆ செய்வோமாக. காலம் இதை மறந்து விடாது. இது காலம்  காலந்தோறும் பேசப்படும் காதர் முகைதீன் அப்பா விட்டுச்சென்ற அடையாளங்கள். அதற்கு மெருகூட்டி அதை நமது ஊரில் பழுத்த நல்ல மரமாக்கிய மர்ஹூம் S.M.S  சேக் ஜலாலுதீன் அவர்களின் அடையாளங்கள்.

அரசாங்கம் கை கொடுக்காத அதிராம்பட்டினத்துக்கு தனது  வள்ளல்  சிந்தனையால் கல்வி வளம் கொடுத்த மர்ஹூம் காதர் முகைதீன் அப்பா அவர்களின் திரண்ட சொத்தும், மர்ஹூம் சேக் ஜலாலுதீன் அவர்களின் சலிக்காத  உழைப்பும் கல்விக்காகக்  கை கொடுத்தாலும் உள்ளூர்வாசிகள் எந்த அளவுக்கு அவர்களின் மடிகளில் தானாக கனிந்து விழுந்த பழத்தை பயன்படுத்தி வெற்றி கண்டார்கள் என்பது கேள்விக்குறியே. உயர்நிலைப் பள்ளி திறக்கப்பட்டதும், அதில் சேர்ந்து படிப்பதற்கு உள்ளூரில் அவ்வளவு ஆர்வம்  காட்டப்படவில்லை. எனது இளமைப் பருவத்தில் ஐந்தாம் வகுப்பிலிருந்து தேர்வு பெற்றதும் நானும் எனது நண்பர்களும் ஆறாம் வகுப்பில் சேர்ந்து தொடர்ந்து படிப்பதற்காக முயற்சி  செய்தபோது எங்களை ஊக்கப்படுத்துவதற்கு பதிலாக,  ‘என்ன ஹை ஸ்கூலா ? போய் இங்க்லீஷ் படிக்கப் போறியலோ? படிச்சு பெரிய கலெக்டர் ஆயிடுவியலோ?’ என்றெல்லாம் சில பெரிசுகள் நையாண்டி செய்தன. அதில் ஒருவர் எங்களை நோக்கிக் கேட்ட கேள்வியும் அதற்கு நான் சொன்ன பதிலும் எனது நினைவுப் பதிவேடுகளில் இன்னும் உள்ளன. 

சின்னப் புளிய மரம். இது கடற்கரைத் தெருவின்  போதி மரம்  அல்ல. வம்பு பேசுவோர் வலிய வந்து கூடும் மடம். மலேசியாவிலிருந்து விடுமுறையில் வருபவர்கள்  கூடி தாயக்கட்டை, ஆடுபுலி ஆட ஒன்று கூடும் இடம். அத்துடன் அடுத்தவன் வீட்டில் அம்மி நகருதா ஆட்டுக்கல் நகருதா என்ற  ஊர் ‘பசாது’ களுக்கும் அங்குக்  குறைவு இருக்காது.

அன்றொருநாள் நானும் என்னுடன் புதிதாக உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தவர்களும் ஒன்றாக பள்ளிக்கு நடந்து போய்க்கொண்டு இருந்தோம். (அன்றெல்லாம் ஹீரோ ஹோண்டா பைக்கும் இல்லை; அதை வாங்கித்தர அன்றைய வாப்பாமார்களுக்கு வசதியும் இல்லை). அப்படிப் போய்க் கொண்டு இருக்கும்போது  தெருவின் முக்கியஸ்தர் எங்களைத் தடுத்து நையாண்டித் தொனியில், “ நீ யார் மவன்டா? எத்தனாவது படிக்கிறே? “     என்று கேட்டார். என் நண்பர்கள் பதில் சொன்னார்கள். நானும் சொன்னேன். “ அது சரி இங்க்லீஷ் படிக்கிறியளே! பலாச்சுளைக்கு இங்க்லீஷில் எப்புடிச்  சொல்லணும்? தெரியுமா?” என்று கேட்டார். உண்மையில் எங்களில் யாருக்கும் இதற்கு விடை தெரியாது. எனது நண்பர்கள் தெரியாது தெரியாது என்று சொல்லிவிட்டார்கள். கேலிச் சிரிப்புடன் அவர் என்னிடமும் கேட்டார். ஏற்கனவே பள்ளிக்கு நேரமாகிவிட்டது . இந்த வெட்டிக்குளத்துக்கு   அருகில் வெட்டியாக உட்கார்ந்து கொண்டு  எங்களை வேதனைப் படுத்தும் அந்தப் பெரிய மனுஷனுக்கு ஒரு நோஸ்கட் கொடுக்க வேண்டுமென்று எண்ணி  நான் பதில் சொன்னேன். “ பலாச்சுளைக்கு இங்க்லீஷ் என்னன்னு  நான் லண்டனுக்குப் போயி,  பலா  பழம் வியாபாரம் செய்யும் போது பலா பழத்திற்கு இங்கிலிஷில் எப்படி சொல்வதென்று தெரிந்து கொள்கிறேன். 

இப்போ நாங்க ஸ்கூலுக்குப்  போகனும்  “ என்று அந்தப் பெரியவரிடம் சொல்லிவிட்டு விறு விறு என்று நடையைக் கட்டினேன்.     இது பற்றி அவர் என் மாமா இடம்  புகார் செய்ததாக பின்பு கேள்விப்பட்டேன். இப்படியெல்லாம் படிப்புக்குத் தடை செய்பவர்கள் இருந்தார்கள். இதற்குக் காரணம் அடிப்படையில் நமது ஊரார் சாய்ந்தால் சாயுற பக்கக் கொள்கைகளையும், செக்குமாடு சித்தாந்தத்தையும் கடைப்பிடித்து வந்ததே. புகைவண்டி நிலையத்தையே நமதூருக்குள் வேண்டாம் தூரமாகப் போகட்டும் என்று ஊரைவிட்டு தூரமாக  ஒதுக்கியவர்களாயிற்றே . ஆரம்பத்தில் இன்றுள்ள வண்டிப் பேட்டையில்தான் நமதூரின் ரயில் நிலையம் அமைய இருந்ததாம்.

பிற்காலங்களில் கூட நமது ஊர்க்  கல்லூரியில் இருந்த பட்டப் படிப்புகளின் பாடப்பிரிவுகளையே சென்னை, திருச்சி போன்ற  வெளியூர்க் கல்லூரிகளில் சேர்ந்து படித்த நம்மூர்வாசிகளின் பிள்ளைகள் ஏராளம். அதற்கு சொல்லப்பட்ட காரணம் அதிராம்பட்டினத்தில் படித்தால் இங்க்லீஷ் டெவலப் ஆகாது என்பதே. ஆனால் உற்று நோக்கினால் அதிரையிலே பிறந்து அதிரையிலேயே படித்து வளர்ந்தவர்கள்தான் பேராசிரியர்களாகவும் தலைமை ஆசிரியர்களாகவும் பரிணமித்தார்கள். வெளியூர்க் கல்லூரிகளில் போய் படித்தவர்கள் அவ்வளவாக பிரகாசிக்கவில்லை.

இன்றைக்கு நமதூரில் பெண்களுக்கிடையில் நல்ல கல்வி விழிப்புணர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. பல பெண்கள் நமது கல்லூரியிலும், பள்ளிகளிலும் படித்து வருகிறார்கள். வள்ளல் காதர் முகைதீன் அப்பா அவர்கள் போட்ட கல்விப்  பாதையே இதற்குக் காரணம்.  இதேபோல் திருச்சியில் மர்ஹூம் ஜமால் முகமது அவர்களும் உத்தம பாளையத்தில் ஹாஜி கருத்த ராவுத்தர் அப்பா அவர்களும் மேல்விஷாரத்தில் வள்ளல் 'அப்துல் ஹக்கீம்' அவர்களும் தங்கள் தாங்கள் ஊர்களின்  கல்விப் பாதையை கருணை உள்ளத்துடன் போட்டு இந்த சமுதாயத்துக்கு நல்வழி காட்டினார்கள். இந்த மேன்மையான மக்களுக்காக நாம் து ஆச்செய்வோம்.   

அதுபோல் நீங்களும் ஒரு நல்ல பாதை போட்டு அதில் உங்களின் அடையாளத்தை பதிக்க வேண்டும் என்ற வேட்கையில் நான் ஸ்பெயின் நாட்டு கவிஞர் அந்தோனியோ மச்சாதொவின் கவிதை வரிகளை ஆரம்பத்தில் எடுத்து காட்டினேன். உங்களுக்குப்  பின் உங்கள் அடையாளத்தை உலகில் பதிக்க நீங்கள் ஒரு பாதை போட வேண்டும். 

எந்தப் பாதை உங்கள் பாதை?. 

முகமது பாரூக்

எம் சிந்தையைக் கவர்ந்த கல்வித் தந்தை! S M S 4

அதிரைநிருபர் பதிப்பகம் | August 26, 2014 | , , , ,

சுருங்கப் பேசுகின்ற எஸ். எம். எஸ்.,
சுருக்காய்ச் செயல்படும் எக்ஸ்பிரஸ்!
உழைப்பில் எறும்பாய் இயங்கிடுவார்;
உறுதியில் இரும்பாய் இருந்திடுவார்!

சுவைபடப் பேசிச் சொக்க வைப்பார்;
நயம்படச் சொல்லி ரசிக்க வைப்பார்;
வசிய வார்த்தையில் சிக்க வைப்பார்;
மசியா மனிதரை மசிய வைப்பார்!

திட்டினால் நமக்கு அறிவுரை; அவர்
குட்டினால் அனுபவம்! இவைகளின்
சொந்தக்காரர் நமது தாளாளர்; தன்
சொந்தக்காலில் நின்ற செயலாளர்!

மடிக் கணினி வரு முன்னரே
மடியில் வைத்துத் தட்டச்சில்,
பணி ஆணைகள் பல அச்சிட்டு,
படித்தோர்க்குப் பலன் தந்தார்.

ஆங்கிலத்தை ஆளும் துரை! இவர்
ஆளுமையில் அடங்கும் துறைகள்;
கோட்டுகளும் சூட்டுகளும் வசமாய்
மாட்டிக் கொண்டு குட்டுப் படும்!

வாசகமொன்று இவர் எழுதிடின்,
வக்கணை பேச யாருளர்? பிறர்
வாசகத்தை இவர் திருத்திடின்,
வாய்திறந்து மறுப்போர் யாருளர்?

அலுவலகங்களுக்கு ஓர் உடை,
விழாக்களுக்கு என்று ஓர்உடை,
பிரமுகரைச் சந்திக்க ஓர் உடை
என்ற வழக்கம் உடையாரல்லர்!

யாவும் உடையார்க்கு உயருடையா?
பயமே அறியார்க்குப் படை பலமா?
தளரா நடையே போதும் அவருக்கு,
அடையா இலக்கை அடைவதற்கு!

நீட்டோலை வாசியா நின்றவரை,
ஏட்டோடு பள்ளிக்கு வரச் செய்தார்!
படிப்பின்றி வீட்டோடு இருந்தோர்,
பள்ளியில் சேர்ந்து புள்ளியாயினர்.

பட்டறிவில்லா எம் போன்றோரை,
பட்டை தீட்டி மதிப் பேற்றினார்!
அறிவுரைகளால் அதட்டி என்னை
முது கலையை அடைய வைத்தார்!

ஆசிரியப் பணி வாய்ப்பு தந்தார்;
அரவனைத்தார்; தலைமை யாசிரியர்
பதவி நெருங்கும் வரை அவர்
அன்பில் எம் முயர்வு இருந்தது!

பரவட்டும் தாளாளர் புகழொளி
பாரெல்லாம்! வல்ல இறைவன்,
புவனப் பதவி பல தந்தவருக்கு
சுவனப் பதவியை வழங்கட்டும்!

A.M. அப்துல் காதிர், M.A.,Bed. (வாவன்னா)
முன்னாள் மாணவர், முது கலைப்
பட்டதாரி ஆசிரியர்,
காதிர் முகைதீன் மேல் நிலைப்பள்ளி
நன்றி : தென்றல்

மறக்க முடியா மனிதர் ! - நினைவலைகள்...! 14

அதிரைநிருபர் பதிப்பகம் | October 18, 2013 | , , ,

‘Short Message Service’ என்பதன் சுருக்கமான ‘S.M.S.’ என்ற வழக்கு கடந்த 10 ஆண்டுகளாக அறிவியல் மற்றும் நவீன தொழில் நுட்பத்தின் பயனாக உலகளாவிய ஒரு வழக்காகப் பயன் படுத்தப்பட்டு வருகிறது.ஆனால் ‘S.M.S.’ என்ற மந்திரச்சொல் அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் மனதில் – குறிப்பாகக் கற்றோர் நெஞ்சங்களில் நிறைந்து நிற்கிறது!

‘S.M.S.’ என அனைவராலும் அன்பொழுக அழைக்கப்பட்டவரும், எங்களால் ‘பெரியவர்’ என மரியாதையோடு அழைக்கப்பட்டவருமான ‘அதிரையின் கல்வித் தந்தை’ ஹாஜி ஜனாப் S.M.S. ஷேக் ஜலாலுதீன் மரைக்காயர் அவர்களின் நினைவு நாளை (அக்டோபர் 2ம் தேதி) ஒட்டி இந்தக் கட்டுரை எழுதுவதற்கு கிடைத்த வாய்ப்பைப் பெரும் பாக்கியமாகக் கருதி மகிழ்கின்றேன்.


“The reasonable man adapts himself to the world. The unreasonable man wants the world to adapt himself. All progress depends upon the second man.” பேரறிஞர் பெர்னார்ட்ஷாவின் இக்கூற்றைப் படிக்கும் போதெல்லாம் மறைந்த சிறந்த மனிதர் - காதிர் முகைதீன் நிறுவனங்களின் நிறுவனர் கல்வித் தந்தை ஹாஜி ஜனாப் S.M.S. ஷேக் ஜலாலுதீன் மரைக்காயர் அவர்களின் உருவமே நம் மனக்கண் முன் வந்து நிற்கும். ஹாஜி S.M.S. அவர்கள் தன் மனதுக்குச் சரி எனப்படும் கருத்தில் தெளிவாக இருப்பார்; அதை அழுத்தமாகச் சொல்லுவார். மற்றவர்களின் எதிர்ப்புகளைக் கொஞ்சமும் பொருட் படுத்தமாட்டார். அவ்வெதிர்ப்புகளை யெல்லாம் தன் வெற்றிக்கு உரமாக்கிக் கொள்வார்!


60 ஆண்டுகளுக்கு முன் அதிராம்பட்டினத்தில் 5-ம் வகுப்பு முடித்த சிறுவர் சிறுமியர்கள் தங்கள் கல்வியைத் தொடர முடியாத நிலையில் வசதி வாய்ப்புள்ள வீட்டுப் பிள்ளைகள் வெகு சிலர் பட்டுக்கோட்டை, இராஜமடம் போன்ற ஊர்களிலும், செல்வந்தர் வீட்டுப் பிள்ளைகள் சிலர் சென்னையிலும் படிப்பைத் தொடர முடிந்தது. ஆனால் வசதி வாய்ப்பில்லாத பிள்ளைகள் படிப்புக்கு முழுக்குப் போடும் நிலைதான் இருந்தது!

அரபி மற்றும் மார்க்கக் கல்வி கற்பதற்காகவும், தொழுகை நடை பெரும் பள்ளிவாசல்களில் வெளிச்சம் கொடுப்பதற்காகவும், கொடை வள்ளல் ஹாஜி காதிர் முகைதீன் மரைக்காயர் அவர்களால் 1901- ஆம் ஆண்டு நிறுவப்பட்ட M.K.N. அறக்கட்டளையின் செயலாளராகப் பொறுப்பேற்ற ஹாஜி S.M.S. ஷேக் ஜலாலுதீன் மரைக்காயர் அவர்கள், மார்க்கக் கல்வியுடன் உலகக் கல்வியும் அதிரை சிறார்களுக்குக் கிடைக்க வேண்டும் என எண்ணியதன் விளைவாக 1949-ஆம் ஆண்டு காதிர் முகைதீன் நடுநிலைப் பள்ளி தொடங்கப்பட்டது.

காலம் சென்ற கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்கள் பள்ளியைத் தொடங்கி வைத்துச் சிறப்பித்தார்கள். அடுத்த மூன்று ஆண்டுகளில் நடுநிலைப் பள்ளி, உயர் நிலைப் பள்ளியாகப் பரிணமித்தது! S.S.L.C. (அன்று 11 -ஆம் வகுப்பு) படித்துத் தேர்ச்சி பெற்றவர்கள் உயர் கல்விக்காக திருச்சி, சென்னை போன்ற நகரங்களில் உள்ள கல்லூரிகளுக்குச் செல்ல வேண்டிய நிலையில், செல்வந்தர் வீட்டு இளைஞர்களுக்கு மட்டுமே அத்தகைய வாய்ப்புக் கிட்டியது. அதிரை இளைஞர்களின் உயர் கல்விக்காக M.K.N. அறக் கட்டளை சார்பில் கல்லூரி ஒன்று தொடங்கப்படவேண்டும் என்றெண்ணிய தாளாளர் S.M.S. 1955-ஆம் ஆண்டு காதிர் முகைதீன் கல்லூரியை நிறுவினார். கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் தலைமையில் அன்றைய தமிழக நிதி அமைச்சர் மாண்புமிகு C.சுப்பிரமணியன் அவர்கள் கல்லூரியைத் தொடங்கி வைத்துச் சிறப்பித்தார்.


கல்லூரி நிறுவிட நினைத்த நாள் முதல் கல்லூரிக்கான கட்டிடங்கள் கட்டி முடிக்கும் வரை, தாளாளர் அவர்கள் எதிர் கொண்ட எதிர்ப்புகள், இடையூறுகள் எத்தனை எத்தனை என்பதை என்போன்றோர் நன்கு அறிவோம். கல்லூரி ஆரம்பித்த புதிதில் கல்லூரியை நிர்வகித்துச் செல்வதில், தாளாளருக்கு ஏற்பட்ட இடையூறுகள் எண்ணற்றவை. கல்லூரியை நடத்துவதற்கு ஏற்பட்டிருந்த பொருளாதாரத் தட்டுப்பாடு ஒருபுறம்; அறக் கட்டளையை யார் நிர்வகிப்பது என்பதில் எழுந்திருந்த பிரச்சினையைத் தீர்க்க நீதி மன்றத்திலிருந்த வழக்குகள் மறுபுறம். ஆனால் நமது தாளாளர் அவர்கள் கொஞ்சமும் கவலைப்படாமலும், சோர்வடையாமலும் அத்தனைப் பிரச்சினைகளையும் தனக்கே உரித்தான இன்முகத்தோடு சர்வ சாதாரணமாகத் தீர்த்துக்கொண்டு வந்தார். மலை குலைந்தாலும் நிலை குலையாத தளாளரின் நெஞ்சுரத்தை வேறு எவரிடமும் காணவியலாது. ஹாஜி S.M.S. அவர்கள் அறக் கட்டளையின் தாளாளராக மட்டும் இருக்கவில்லை; தளராதவராகவும் இருந்து செயல் பட்டு வந்தார்!

1955- ஆம் ஆண்டுக் காலக் கட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நூற்றாண்டு விழா கண்ட கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியைத் தவிர்த்து, வேறு எந்தக் கல்லூரியும் இல்லாத நிலையில் தாளாளர் அவர்களின் தனித் திறனை எண்ணி வியக்காதவர்கள் இல்லை எனலாம்! அதே ஆண்டு தஞ்சாவூர் இராஜா சரபோஜி கல்லூரி, பூண்டி பற்பம் கல்லூரி நிருவப்பட்டிருப்பினும் அவை காதிர் முகைதீன் கல்லூரிக்குப் பின்னரே நிறுவப்பட்டன! பல்வேறு கல்லூரிகள் நிறைய ஏற்பட்டிருந்தாலும், மாவட்டத்தின் இரண்டாவது கல்லூரி என்ற பெருமை என்றென்றும் காதிர் முகைதீன் கல்லூரிக்கு மட்டுமே உண்டு என்பது குறிப்பிடத்தக்கது! 

இன்றைய நாளில் பெண்கள் மேல் நிலைப் பள்ளியாக விளங்கி வரும் காதிர் முகைதீன் பெண்கள் உயர் நிலைப் பள்ளி உருவான விதம் பற்றித் தெரிந்து கொண்டால்தான் தாளாளர் அவர்களின் தொலை நோக்குச் சிந்தனை எத்தகையது என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடியும். அதிராம்பட்டினத்து மக்களின் குடி நீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் மேலத் தெருவில் அமைந்துள்ள குடி நீர்த் தொட்டியைத் திறந்து வைப்பதற்காக அப்போதைய தமிழக முதல்வர் M.G.R. அவர்கள் அதிரைக்கு வருகை தந்தார். அப்போது அவரிடம் ‘பெண்களுக்காகத் தனியாக உயர் நிலைப் பள்ளி வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்து அதிரை மக்களால் விண்ணப்பம் அளிக்கப்பட்டது. விழா மேடையிலேயே அவ் விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்த முதலமைச்சர், அப்போது மேடையில் வீற்றிருந்த தமிழக அமைச்சர் மாண்புமிகு S.D. சோம சுந்தரம் அவர்களிடம் விண்ணப்பத்தைக் கொடுத்து, அதிரைக்குப் பெண்கள் உயர் நிலைப் பள்ளி அமைவதற்கு உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்! அமைச்சர் S.D. சோம சுந்தரம் அவர்களின் முயற்சியால் அரசுப் பெண்கள் உயர் நிலைப் பள்ளி உருவாவதற்கான பணிகள் தீவிரமாக நடை பெற்று வந்தன!

அத் தருணத்தில் காதிர் முகைதீன் மேல் நிலைப் பள்ளியில் கூட்டுக் கல்வி (CO-EDUCATION) முறையில் படித்துக் கொண்டிருந்த மாணவிகளின் பெற்றோர்கள் தாளாளர் அவர்களை அணுகி, ”பலரும் கூடுகின்ற இடமான மெயின் ரோட்டில் அமையவிருக்கும் அரசுப் பெண்கள் பள்ளிக்கு எங்கள் பெண் பிள்ளைகளை அனுப்புவதற்கு நாங்கள் விரும்பவில்லை. ஊரின் மையப்பகுதி ஒன்றில் பெண்கள் உயர் நிலைப் பள்ளி வருவதற்கு ஏற்பாடு செய்யுமாறு வேண்டிக் கொண்டனர். அவர்களின் வேண்டு கோளை ஏற்றுக் கொண்ட அறக் கட்டளையின் செயலாளர் ஹாஜி S.M.S. அவர்கள் துரிதமாகச் செயல்பட்டார், விடிந்தால் வெள்ளிக்கிழமை. இரவு 9 மணியளவில் வீட்டிலிருந்த எனக்கு கல்லூரி அலுவலக ஊழியர் ஜனாப் S.M.சுல்தான் அவர்கள் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது.


அறக் கட்டளை அலுவலகம் இயங்கி வந்த சேர்மன் வாடிக்கு நான் விரைந்து சென்றேன். அபோது அங்கே தாளாளர் அவர்களுடன் ஜனாப் A.S.M.ரஹ்மத்துல்லா ஹாஜியார், ஹாஜி ஜனாப் மன்னார் M.K. அப்துல் காதர், ஹாஜி ஜனாப் M.A.M. பாட்சா மரைக்காயர் உட்பட அறக்கட்டளை உறுப்பினர்கள் சிலர் இருந்தனர். அங்கு சென்ற என்னிடம் தாளாளர் அவர்கள் சொன்ன செய்தி இதுதான்: “நாளை வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை முடிந்தவுடன், நம் அறக்கட்டளை சார்பில் சலாஹிய்யா மதரசா நடைபெற்று வரும் கட்டிடத்தின் ஒரு பகுதியில் பெண்கள் உயர் பள்ளி துவக்கவும், அப்பள்ளியின் தலைமையாசிரியராக உன்னை நியமனம் செய்யவும் தீர்மானித்துள்ளோம். நாளை ஜும்ஆவுக்குப் பின் அட்மிஷன் செய்ய ஏதுவாக 5- ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, படிப்பைத் தொடர முடியாமல் உள்ளவர்களில் குறைந்தது 10 மாணவிகளின் ரிகார்டு ஷீட்டுகளையும பெற்று, அப்பொழுதே அட்மிஷன் செய்யவேண்டும்; மறுநாள் நம் மேல் நிலைப் பள்ளியிலிருந்து 6 ஆம் வகுப்பு முதல் 10- ஆம் வகுப்பு வரை படித்துக் கொண்டிருக்கும் மாணவிகளை அங்கிருந்து பிரித்து பெண்கள் உயர் நிலைப் பள்ளிக்கு இடம் மாற்றவேண்டும். பெண்கள் பள்ளிக்குப் புதிய ஆசிரியைகளை நியமனம் செய்யும் வரை, ஆண்கள் பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பெண் ஆசிரியைகளைத் தற்காலிகமாகப் பெண்கள் பள்ளியில் பணியாற்றச் செய்யவேண்டும்!” போன்ற உத்தரவுகளைத் தாளாளர் அவர்கள் பிறப்பித்தார்கள்.

தாளாளரின் உத்தரவுக்கு இணங்க அனைத்தும் துரிதமாக நடந்தேறின! 04-06–1986 –ஆம் நாள் காதிர் முகைதீன் பெண்கள் உயர் நிலைப் பள்ளி நிறுவப்பட்டது! நான் தலைமையாசிரியராகவும், ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருந்த ஆசிரியைகளான திருமதி H.நூர்ஜஹான், திருமதி R.வடிவழகி, திருமதி M.மேகலா ஆகியோர் ஆசிரியைகளாகவும் பணியாற்றத் துவங்கினோம். சில மாதங்களில் பெண்கள் பள்ளிக்கெனத் தலைமையாசிரியை மற்றும் தேவையான ஆசிரியைகள் நியமனம் செய்யப்பட்டார்கள். நாங்கள் எங்கள் பள்ளிக்குத் திரும்பினோம். அரசுப் பெண்கள் உயர் நிலைப் பள்ளிக்குப் போட்டியாக நிறுவப்பட்ட பள்ளி எனக் கருதிய தமிழ் நாடு அரசு, காதிர் முகைதீன் பெண்கள் உயர் நிலைப் பள்ளிககு அங்கீகாரம் வழங்கவும், தேவையான ஆசிரியைப் பணியிடங்களை வழங்கவும் தயக்கம் காட்டியது. தாளாளர் அவர்கள் தனக்கே உரிய பாணியில் நீதி மன்றத்தில் வழக்குத் தொடந்தார்கள். காதிர் முகைதீன் உயர் நிலைப் பள்ளிக்கு அங்கீகாரம் வழங்கவும், தேவையான ஆசிரியர் பணியிடங்கள் வழங்கவும் சென்னை உயர் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுத் தீர்ப்பளித்தது. கல்வித் தந்தை ஹாஜி அவர்களின் தொலை நோக்குச் சிந்தனையோடு, ஏறத்தாழ 120 மாணவிகளோடு துவக்கப்பட்ட காதிர் முகைதீன் பெண்கள் உயர் நிலைப் பள்ளி, மேல் நிலைப் பள்ளியாக, இன்று உயர்த்தப்பட்டு, 1200- க்கும் அதிகமான மாணவிகள் படிக்கும் வகையில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.


அரபி மதரசா, ஆண்கள் மேல் நிலைப் பள்ளி, கல்லூரி, பெண்கள் மேல் நிலைப் பள்ளி, என வரிசையாகத் துவக்கப்பட்டு அவற்றை நிர்வகித்து வந்த போதிலும், தாளாளரின் கல்வித் தாகம் மட்டும் தணியவில்லை. சிறு குழந்தைகளின் தொடக்கக் கல்வியின் அவசியத்தை அறிந்து ‘சாதுலியா மழலையர் பள்ளி’யையும், தொழிற் கல்வியின் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்து, சாதுலியா தொழிற் கல்வி நிலையத்தையும் தொடங்கி, அதிரையின் எல்லாப் பருவத்தினருக்கும் அனைத்து வகைக் கல்வியும் கிடைத்திட வழி செய்தார், நமது கல்வித் தந்தை அவர்கள்!

எனது சொந்த வாழ்க்கையில் என்னுடைய முன்னேற்றத்திற்குத் தாளாளர் அவர்களின் பங்களிப்பைப் பற்றி இங்கு குறிப்பிட மறந்தேனென்றால், நன்றி கொன்றவனாகிவிடுவேன். கல்விக் கட்டணம் செலுத்தி மட்டுமே படிக்க முடியும் என்ற காலக் கட்டத்தில் பள்ளியிலும் கல்லூரியிலும் அறக் கட்டளையின் கட்டணச் சலுகையில் படித்து முடித்ததையும், B,sc. பட்டத் தேர்வில் தேர்ச்சி பெற்றதும் பள்ளியில் கணிதப் பட்டதாரி ஆசிரியராகப் பணி செய்திட வாய்ப்புத் தந்ததையும், உயர் நிலைப் பள்ளி, மேல் நிலைப் பள்ளியாக உயர்த்தப் பட்டபோது, கணித முதுகலை ஆசிரியராகப் பணியாற்றிட வாய்ப்பு வழங்கியதையும், முதுகலைப் பட்டங்களோடு என்னினும் மூத்த ஆசிரியர்கள் பலர் இருக்க, அத் தருணத்தில் முது கலைப் பட்டம் பெற்றிராத என்னை ஆண்கள் மேல் நிலைப் பள்ளியின் தலைமையாசிரியராக நியமித்ததையும் உயிர் உள்ள வரை என்னால் மறக்க முடியாது.


02–10–1986 வியாழக்கிழமை, அதிரை நகர வரலாற்றிலும், கல்வி நிறுவனங்களின்வ வரலாற்றிலும் ஈடு செய்ய முடியா ஒரு பேரிழப்பை ஏற்படுத்திய கண்ணீரில் மூழ்கடித்த நாளாகும். ஆம்! அந்த நாள் தான் மறக்க முடியா மனிதர் மறைந்த நாள்! இறை நாட்டப்படி நேர்ந்த இறப்பால் ஹாஜி S.M.S. ஷேக் ஜலாலுதீன் மரைக்காயர் அவர்கள் விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்புவது மிகக் கடினம் என்ற போதிலும் அன்னாரது மூத்த புதல்வர் ஹாஜி ஜனாப் S.முகம்மது முகைதீன் அவர்களும் அவரைத் தொடர்ந்து குடும்ப உறுப்பினர் ஹாஜி ஜனாப் A.M. சம்சுதீன் அவர்களும் அந்த வெற்றிடத்தை நிறைவு செய்தார்கள். தற்போது ஹாஜி S.M.S. அவர்களின் இரண்டாவது புதல்வர் ஜனாப் Dr. S.முகம்மது அஸ்லம் அவர்கள் காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களின் தாளாளராக மிகச் சிறப்பாகச் செயல் பட்டு வருவது பாராட்டுக்குரியது. உலகம் உள்ள வரை கல்வி இருக்கும். கல்வி உள்ள வரை கல்வித் தந்தை ஹாஜி S.M.S. ஷேக் ஜலாலுதீன் மரைக்காயர் அவர்களின் புகழ் இருக்கும் என்பது உறுதி.
இது ஒரு நினைவலைகளின் மீள் பதிவு

ஹாஜி S.K.M. ஹாஜா முகைதீன், M.A.,B.Sc., B.T.,
தலைமை ஆசிரியர் (ஓய்வு)
காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி
அதிராம்பட்டினம்

ஐம்பது ஆண்டுகளுக்கு முன் ! 21

அதிரைநிருபர் பதிப்பகம் | December 12, 2011 | , , ,

நினைவில் நிலைத்ததை பகிர்வது : மர்ஹூம் ஹாஜி த. அ. அப்துல் ரசாக்...

அதிரை நகரக் கல்வித் தந்தை ஹாஜி எஸ்.எம்.எஸ். ஷேக் ஜலாலுதீன் 28-ஜனவரி-1920ல் பிறந்தார். நகரத் தந்தை சேர்மன், முஹம்மது அபுல் ஹசன் மரைக்காயரின் ஒரே பிள்ளை; செல்லப்பிள்ளை; சேர்மன் தன் தந்தை ஹாஜி ஷேக் ஜலாலுதீன் பெயரைப் பிள்ளைக்குச் சூட்டினார். அதனால் மகனை எப்போதும் ’வாப்பா’ என்றே அழைப்பார்! மற்றவர்களிடம் பிள்யைப் பற்றிச் சொல்லும்போது ‘தம்பி’ என்பார்! இதனால் அவர் எல்லாருக்கும் ‘தம்பி’ ஆகிவிட்டார்!

நான் ஜனாப் ஷேக் ஜலாலுதீனின் பள்ளித் தோழன்; நான் அவருக்கு இரண்டு வகுப்புகள் இளையவன். அதிராம்பட்டினம், ஆராவமுத அய்யங்கார் நடுநிலைப் பள்ளியிலும், பட்டுகோட்டை மாவட்டக் கழக உயர் நிலைப் பள்ளியிலும் படித்தோம். ஆராவமுத அய்யங்காரும் அவருடைய இரண்டாவாது மகனும் ஆசிரியர்கள்; அருமையான ஆசிரியர்கள்! அவர்கள் திறம் படப் பாடங்களை நடத்தியதோடு, மாணவர்களை வைத்து நாடகங்களையும், மற்ற கலை நிகழ்ச்சி களையும் நடத்தினார்கள். குறிப்பாக, ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் பிறந்த நாளன்று கலை நிகழ்ச்சிகள் அமர்க்களப்படும். அரசு மருத்துவ மனை வளாகம்தான், பள்ளியின் கலை அரங்கம்! ஒரு ஆண்டு சேக்ஸ்பியரின் ’வெனிஸ் வர்த்தகன்’ ஆங்கில நாடகம் நடந்தபோது, அதில் ஜனாப் ஷேக் ஜலாலுதீன் நீதிபதியாக நடித்தார்!

உடல் தளர்ச்சி காரணமாக ஆராவமுத அய்யங்கார், பள்ளியை மூடிவிட்டார்! அப்போது, தற்போதைய ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி மாவட்டப் பகுதிகளில், பட்டுக்கோட்டை – ஒரத்தநாடு இந்த இரண்டு இடங்களில் மட்டுமே உயர் நிலைப் பள்ளிகள் இருந்தன! எனவே மேற் படிப்புக்காக நாங்கள் பட்டுக்கோட்டை போய் வரலானோம்!

இப்போது போல அப்போது பட்டுக்கோட்டைக்கு பேருந்து வசதி கிடையாது! ஒரு நாளைக்கு இரு முறையோ, ஒரு முறையோ பேருந்து வரும்; போகும்! பயணக் கட்டணம் 4 அணா! பயணம் செய்வோரும் மிகவும் குறைவு! நான்கு அல்லது ஐந்து பேர் சேர்ந்து வருவதாகச் சொன்னால் வீட்டு வாசலில் பேருந்தை நிறுத்திக் கூட்டிச் செல்வார்கள்!

பட்டுக்கோட்டையிலிருந்து தஞ்சாவூருக்கும் பயணிகளை ஏற்றிச்செல்ல, பையை ஒருவர் இடையே ஒருவர் பிடுங்கிக் கொண்டு போவார்கள்! பயணக் கட்டணம் எட்டணா! போட்டி காரணமாக ஒருநாள் கட்டணத்தை ஓரணாவாகக் குறைத்ததோடு தஞ்சாவூரில் காப்பியும் கொடுத்தார்கள்! இந்தப் போட்டியைக் கண்டுதான் அப்போதைய முதல்வர் ராஜாஜி, அவர்கள் பேருந்துகளுக்கு வழித் தடங்களையும், நேரத்தையும் ஒதுக்கும் முறையைக் கொண்டு வந்தார்கள்! பேருந்து யாவும் கரி வண்டிகளே!

நான் ஜனாப் ஷேக் ஜலாலுதீன், திரு என்.எஸ். இளங்கோ, உட்பட ஏறத்தாழ 25 மாணவர்கள் பட்டுக்கோட்டையில் படித்தோம்! பெரும்பாலோர் புகை வண்டியில் சென்று திரும்புவர்! சிலர் சைக்கிளில் செல்வர்! இன்னும் சிலர் பட்டுக்கோட்டையிலேயே வாடகைக்கு அறை எடுத்துத் தங்கிப் படித்தார்கள்!

சேர்மன் ஒரு குதிரை வண்டியும், ஒரு ஃபோர்டு காரும் வைத்திருந்தார்! ஜனாப் ஷேக் ஜலாலுதீனையும் என்னையும் காலையில் புகை வண்டி நிலையத்திற்கும், மாலையில் அங்கிருந்து வீட்டிற்கும் ஏற்றிச் செல்ல குதிரை வண்டியோ அல்லது காரோ காத்திருக்கும்!

அக்காலத்தில் பட்டுக்கோட்டையில் உணவகங்கள் மிகவும் குறைவு! தரத்தையோ, ருசியையோ உணவுப் பண்டங்களில் எதிர் பார்க்க முடியாது! அளவு மட்டும் அதிகமாக இருக்கும்! தயிரோடு சாப்பாடு இரண்டணாதான்! நானும் மற்ற மாணவர்களும் பகல் உணவை வீட்டிலிருந்து கொண்டு வருவோம்! முப்பது சாப்பாட்டுச் சீட்டுகள் மூன்றே முக்கால் ரூபாயே! திங்களன்று வடை, பாயாசத்துடன் சாப்பாடு போடுவார்கள்!

நானும் மற்ற மாணவர்களும் பகல் உணவை வீட்டிலிருந்து கொண்டு வருவோம்! ஜனாப் ஷேக் ஜலாலுதீன் உணவுப் பொட்டலம் எதுவும் கொண்டு வரமாட்டார்! மணிக்கூண்டிற்கு அருகில் இருந்த கன்டியர் சிற்றுண்டி விடுதியில் இரண்டு அல்லது மூன்று பரோட்டாக்களை பால் ஊற்றிச் சாப்பிடுவார்! நீலாதான் அப்போது பட்டுக்கோட்டையில் இருந்த ஒரே திரைப் படக் கொட்டகை! எப்போதாவது அவரும் மற்ற நண்பர்களும் திரைப் படம் பார்க்கப் போவோம்! மாணவப் பருவத்தில் ஜனாப் ஷேக் ஜலாலுதீன், பள்ளி உண்டு, வீடு உண்டு என்று இருப்பார்! விளையாட்டில் அவருக்கு ஈடுபாடு கிடையாது! அப்போதே ஆங்கிலத்திலும் தமிழிலும் நன்றாக, ஆணித் தரமாக எழுதுவார்! 1938 ஆம் ஆண்டு எஸ்.எஸ்.எ\ல்.சி. தேர்வு எழுதினார். தமிழில் தேற வில்லை! அப்போ தெல்லாம் ஒரு பாடத்தில் தேராவிட்டாலும் எல்லாப் பாடங்களையும் மீண்டும் எழுதவேண்டும்! அதனால், அடுத்த ஆண்டும் அதே வகுப்பிக் தொடர்ந்து படித்தார்!

மீண்டும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதக் கட்டணம் கட்டினார். 1939 மார்ச் துவக்கத்தில் தேர்வு எழுத படிப்பு விடுமுறை விட்ட போது, அவருக்குத் திருமணம் நடந்தது. திங்கட் கிழமை, தேர்வு தொடங்குவதாக இருந்தது. சனிக்கிழமை அவருக்குக் காய்ச்சல் கண்டது. மறுநாள் ஞாயிற்றுக் கிழமை அம்மை போட்டது! இதனால் தேர்வு எழுதமுடிய வில்லை! பல்லாயிரம் மாணவர்களுக்குக் கல்லூரிக் கல்வி வழங்கிய கல்வித் தந்தைக்கு கல்லூரிக் கல்வி கிடைக்க வாய்ப்புக் கிட்டவில்லை!

பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடக்கும் நாட்களில் மற்ற மாணவர்களுக்குக் காலை 9.30 மணி வரை வகுப்புகள் நடக்கும். அந்த நேரத்தில் பட்டுக்கோட்டைக்குப் புகை வண்டியோ, பேருந்தோ கிடையாது!

அப்படி ஒரு நாள் 1937 – ஆம் ஆண்டு மார்ச் திங்கள் காலை 7.30 மணி வகுப்புக்கு சேர்மனின் ஃபோர்டு காரில் பள்ளிக்குப் போய்க் கொண்டிருந்தோம். பட்டுக்கோட்டைப் பொது பணித்துறை பயண மாளிகைக்கு அருகில், காருக்கு பழுது ஏற்பட்டு நின்று விட்டது. நாங்கள் நடந்தே பள்ளிக்கூடம் நோக்கிப் போனோம்! திடீரென மழை பிடித்துக் கொண்டது! பக்கத்தில் வீடுகளோ, ஒதுங்கும் இடங்களோ எதுவும் இல்லை! நனைந்து கொண்டே பள்ளிக் கூடம் நோக்கிச் சென்றோம்!

அப்போது ஷேக் ஜலாலுதீன் சொன்னார், ”நாம் படிப்பதற்காக பட்டுகோட்டை வருவதில் அதிகமாகச் சிரமப் படுகிறோம்! நம் குழந்தைகள் இவ்விதம் சிரமப் படக் கூடாது! நாம் பெரியவர்களாகி ஓரளவு சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு, முதல் காரியமாக நம் பிள்ளைகள் நம் ஊரிலேயே படிக்க சொந்த முயற்சியில், ஓர் உயர் நிலைப் பள்ளியை ஆரம்பிக்க வேண்டும்!” மேற்படியார் இவ்வாறு சொன்னது, இன்னும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது! அவர் நினைத்தபடி தன் முயற்சியால் உயர் நிலைப் பள்ளி என்ன, ஆண்கள் மேல் நிலைப் பள்ளி, பெண்கள் மேல் நிலைப் பள்ளி, இளங் கலை, முதுகலை, கல்லூரி, தொழிற் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றை ஏற் படுத்தி தன் கனவை நனவாக்கி, அதற்கு மேலும் சாதித்து, நம் மத்தியில் தன் நினைவு என்றும் நிலைத்து நிற்கும் படிச் செய்து விட்டார்.

என்னைக் கல்லூரிக் கட்டிடக் குழுச் செயலாளராகப் பணியாற்றி நிதி திரட்ட ஓரளவு உதவ வைத்தது, அவரும் இறைவனும் எனக்கு அளித்த பெரும் பாக்கியமாகும்!

நாங்கள் படித்த காலத்தில் அதிராம்பட்டினத்தில் இருந்த பி.ஏ. பட்டதாரிகள் இரண்டே பேர் தான்! ஒருவர் திரு மஜீது! அவரை பி.ஏ. மஜீது என்று தான் அழைப் பார்கள்! மற்றவர் என்.எஸ் இளங்கோவின் தமையனார் திரு கோவிந்தராஜுலு! இன்று அதிரையில் தடுக்கி விழும் இடமெல்லாம் பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., பட்டதாரிகள்! இந்த புரட்சி கரமான மாற்றத்திற்கான பெருமை கல்வித் தந்தை எஸ்.எம். எஸ். ஷேக் ஜலாலுத்தீன் அவர்களையே பெரிதும் சாரும்! இது உண்மை! வெறும் புகழ்ச்சி இல்லை!

கல்வியும் செல்வமும் ஒரு சேரப் பெற்றிருந்த அதிரைப்பட்டினத்தின் சரியான வாரிசு நம் கல்வித் தந்தை என்று சொன்னால் அது மிகை ஆகாது! 

- வாவன்னா

மறக்க முடியா மனிதர் (நிறைவு) 23

அதிரைநிருபர் | October 16, 2011 | , ,

இன்றைய நாளில் பெண்கள் மேல் நிலைப் பள்ளியாக விளங்கி வரும் காதிர் முகைதீன் பெண்கள் உயர் நிலைப் பள்ளி உருவான விதம் பற்றித் தெரிந்து கொண்டால்தான் தாளாளர் அவர்களின் தொலை நோக்குச் சிந்தனை எத்தகையது என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடியும். அதிராம்பட்டினத்து மக்களின் குடி நீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் மேலத் தெருவில் அமைந்துள்ள குடி நீர்த் தொட்டியைத் திறந்து வைப்பதற்காக அப்போதைய தமிழக முதல்வர் M.G.R. அவர்கள் அதிரைக்கு வருகை தந்தார். அப்போது அவரிடம் ‘பெண்களுக்காகத் தனியாக உயர் நிலைப் பள்ளி வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்து அதிரை மக்களால் விண்ணப்பம் அளிக்கப்பட்டது. விழா மேடையிலேயே அவ் விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்த முதலமைச்சர், அப்போது மேடையில் வீற்றிருந்த தமிழக அமைச்சர் மாண்புமிகு S.D. சோம சுந்தரம் அவர்களிடம் விண்ணப்பத்தைக் கொடுத்து, அதிரைக்குப் பெண்கள் உயர் நிலைப் பள்ளி அமைவதற்கு உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்! அமைச்சர் S.D. சோம சுந்தரம் அவர்களின் முயற்சியால் அரசுப் பெண்கள் உயர் நிலைப் பள்ளி உருவாவதற்கான பணிகள் தீவிரமாக நடை பெற்று வந்தன!

அத் தருணத்தில் காதிர் முகைதீன் மேல் நிலைப் பள்ளியில் கூட்டுக் கல்வி (CO-EDUCATION) முறையில் படித்துக் கொண்டிருந்த மாணவிகளின் பெற்றோர்கள் தாளாளர் அவர்களை அணுகி, ”பலரும் கூடுகின்ற இடமான மெயின் ரோட்டில் அமையவிருக்கும் அரசுப் பெண்கள் பள்ளிக்கு எங்கள் பெண் பிள்ளைகளை அனுப்புவதற்கு நாங்கள் விரும்பவில்லை. ஊரின் மையப்பகுதி ஒன்றில் பெண்கள் உயர் நிலைப் பள்ளி வருவதற்கு ஏற்பாடு செய்யுமாறு வேண்டிக் கொண்டனர். அவர்களின் வேண்டு கோளை ஏற்றுக் கொண்ட அறக் கட்டளையின் செயலாளர் ஹாஜி S.M.S. அவர்கள் துரிதமாகச் செயல்பட்டார், விடிந்தால் வெள்ளிக்கிழமை. இரவு 9 மணியளவில் வீட்டிலிருந்த எனக்கு கல்லூரி அலுவலக ஊழியர் ஜனாப் S.M.சுல்தான் அவர்கள் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது.


அறக் கட்டளை அலுவலகம் இயங்கி வந்த சேர்மன் வாடிக்கு நான் விரைந்து சென்றேன். அபோது அங்கே தாளாளர் அவர்களுடன் ஜனாப் A.S.M.ரஹ்மத்துல்லா ஹாஜியார், ஹாஜி ஜனாப் மன்னார் M.K. அப்துல் காதர், ஹாஜி ஜனாப் M.A.M. பாட்சா மரைக்காயர் உட்பட அறக்கட்டளை உறுப்பினர்கள் சிலர் இருந்தனர். அங்கு சென்ற என்னிடம் தாளாளர் அவர்கள் சொன்ன செய்தி இதுதான்: “நாளை வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை முடிந்தவுடன், நம் அறக்கட்டளை சார்பில் சலாஹிய்யா மதரசா நடைபெற்று வரும் கட்டிடத்தின் ஒரு பகுதியில் பெண்கள் உயர் பள்ளி துவக்கவும், அப்பள்ளியின் தலைமையாசிரியராக உன்னை நியமனம் செய்யவும் தீர்மானித்துள்ளோம். நாளை ஜும்ஆவுக்குப் பின் அட்மிஷன் செய்ய ஏதுவாக 5- ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, படிப்பைத் தொடர முடியாமல் உள்ளவர்களில் குறைந்தது 10 மாணவிகளின் ரிகார்டு ஷீட்டுகளையும பெற்று, அப்பொழுதே அட்மிஷன் செய்யவேண்டும்; மறுநாள் நம் மேல் நிலைப் பள்ளியிலிருந்து 6 ஆம் வகுப்பு முதல் 10- ஆம் வகுப்பு வரை படித்துக் கொண்டிருக்கும் மாணவிகளை அங்கிருந்து பிரித்து பெண்கள் உயர் நிலைப் பள்ளிக்கு இடம் மாற்றவேண்டும். பெண்கள் பள்ளிக்குப் புதிய ஆசிரியைகளை நியமனம் செய்யும் வரை, ஆண்கள் பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பெண் ஆசிரியைகளைத் தற்காலிகமாகப் பெண்கள் பள்ளியில் பணியாற்றச் செய்யவேண்டும்!” போன்ற உத்தரவுகளைத் தாளாளர் அவர்கள் பிறப்பித்தார்கள்.

தாளாளரின் உத்தரவுக்கு இணங்க அனைத்தும் துரிதமாக நடந்தேறின! 04-06–1986 –ஆம் நாள் காதிர் முகைதீன் பெண்கள் உயர் நிலைப் பள்ளி நிறுவப்பட்டது! நான் தலைமையாசிரியராகவும், ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருந்த ஆசிரியைகளான திருமதி H.நூர்ஜஹான், திருமதி R.வடிவழகி, திருமதி M.மேகலா ஆகியோர் ஆசிரியைகளாகவும் பணியாற்றத் துவங்கினோம். சில மாதங்களில் பெண்கள் பள்ளிக்கெனத் தலைமையாசிரியை மற்றும் தேவையான ஆசிரியைகள் நியமனம் செய்யப்பட்டார்கள். நாங்கள் எங்கள் பள்ளிக்குத் திரும்பினோம். அரசுப் பெண்கள் உயர் நிலைப் பள்ளிக்குப் போட்டியாக நிறுவப்பட்ட பள்ளி எனக் கருதிய தமிழ் நாடு அரசு, காதிர் முகைதீன் பெண்கள் உயர் நிலைப் பள்ளிககு அங்கீகாரம் வழங்கவும், தேவையான ஆசிரியைப் பணியிடங்களை வழங்கவும் தயக்கம் காட்டியது. தாளாளர் அவர்கள் தனக்கே உரிய பாணியில் நீதி மன்றத்தில் வழக்குத் தொடந்தார்கள். காதிர் முகைதீன் உயர் நிலைப் பள்ளிக்கு அங்கீகாரம் வழங்கவும், தேவையான ஆசிரியர் பணியிடங்கள் வழங்கவும் சென்னை உயர் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுத் தீர்ப்பளித்தது. கல்வித் தந்தை ஹாஜி அவர்களின் தொலை நோக்குச் சிந்தனையோடு, ஏறத்தாழ 120 மாணவிகளோடு துவக்கப்பட்ட காதிர் முகைதீன் பெண்கள் உயர் நிலைப் பள்ளி, மேல் நிலைப் பள்ளியாக, இன்று உயர்த்தப்பட்டு, 1200- க்கும் அதிகமான மாணவிகள் படிக்கும் வகையில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.


அரபி மதரசா, ஆண்கள் மேல் நிலைப் பள்ளி, கல்லூரி, பெண்கள் மேல் நிலைப் பள்ளி, என வரிசையாகத் துவக்கப்பட்டு அவற்றை நிர்வகித்து வந்த போதிலும், தாளாளரின் கல்வித் தாகம் மட்டும் தணியவில்லை. சிறு குழந்தைகளின் தொடக்கக் கல்வியின் அவசியத்தை அறிந்து ‘சாதுலியா மழலையர் பள்ளி’யையும், தொழிற் கல்வியின் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்து, சாதுலியா தொழிற் கல்வி நிலையத்தையும் தொடங்கி, அதிரையின் எல்லாப் பருவத்தினருக்கும் அனைத்து வகைக் கல்வியும் கிடைத்திட வழி செய்தார், நமது கல்வித் தந்தை அவர்கள்!

எனது சொந்த வாழ்க்கையில் என்னுடைய முன்னேற்றத்திற்குத் தாளாளர் அவர்களின் பங்களிப்பைப் பற்றி இங்கு குறிப்பிட மறந்தேனென்றால், நன்றி கொன்றவனாகிவிடுவேன். கல்விக் கட்டணம் செலுத்தி மட்டுமே படிக்க முடியும் என்ற காலக் கட்டத்தில் பள்ளியிலும் கல்லூரியிலும் அறக் கட்டளையின் கட்டணச் சலுகையில் படித்து முடித்ததையும், B,sc. பட்டத் தேர்வில் தேர்ச்சி பெற்றதும் பள்ளியில் கணிதப் பட்டதாரி ஆசிரியராகப் பணி செய்திட வாய்ப்புத் தந்ததையும், உயர் நிலைப் பள்ளி, மேல் நிலைப் பள்ளியாக உயர்த்தப் பட்டபோது, கணித முதுகலை ஆசிரியராகப் பணியாற்றிட வாய்ப்பு வழங்கியதையும், முதுகலைப் பட்டங்களோடு என்னினும் மூத்த ஆசிரியர்கள் பலர் இருக்க, அத் தருணத்தில் முது கலைப் பட்டம் பெற்றிராத என்னை ஆண்கள் மேல் நிலைப் பள்ளியின் தலைமையாசிரியராக நியமித்ததையும் உயிர் உள்ள வரை என்னால் மறக்க முடியாது.


02–10–1986 வியாழக்கிழமை, அதிரை நகர வரலாற்றிலும், கல்வி நிறுவனங்களின்வ வரலாற்றிலும் ஈடு செய்ய முடியா ஒரு பேரிழப்பை ஏற்படுத்திய கண்ணீரில் மூழ்கடித்த நாளாகும். ஆம்! அந்த நாள் தான் மறக்க முடியா மனிதர் மறைந்த நாள்! இறை நாட்டப்படி நேர்ந்த இறப்பால் ஹாஜி S.M.S. ஷேக் ஜலாலுதீன் மரைக்காயர் அவர்கள் விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்புவது மிகக் கடினம் என்ற போதிலும் அன்னாரது மூத்த புதல்வர் ஹாஜி ஜனாப் S.முகம்மது முகைதீன் அவர்களும் அவரைத் தொடர்ந்து குடும்ப உறுப்பினர் ஹாஜி ஜனாப் A.M. சம்சுதீன் அவர்களும் அந்த வெற்றிடத்தை நிறைவு செய்தார்கள். தற்போது ஹாஜி S.M.S. அவர்களின் இரண்டாவது புதல்வர் ஜனாப் Dr. S.முகம்மது அஸ்லம் அவர்கள் காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களின் தாளாளராக மிகச் சிறப்பாகச் செயல் பட்டு வருவது பாராட்டுக்குரியது. உலகம் உள்ள வரை கல்வி இருக்கும். கல்வி உள்ள வரை கல்வித் தந்தை ஹாஜி S.M.S. ஷேக் ஜலாலுதீன் மரைக்காயர் அவர்களின் புகழ் இருக்கும் என்பது உறுதி.

ஹாஜி S.K.M. ஹாஜா முகைதீன், M.A.,B.Sc., B.T.,
தலைமை ஆசிரியர் (ஓய்வு)
காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி
அதிராம்பட்டினம்

மறக்க முடியா மனிதர் ! 13

அதிரைநிருபர் பதிப்பகம் | October 09, 2011 | , , ,

‘Short Message Service’ என்பதன் சுருக்கமான ‘S.M.S.’ என்ற வழக்கு கடந்த 10 ஆண்டுகளாக அறிவியல் மற்றும் நவீன தொழில் நுட்பத்தின் பயனாக உலகளாவிய ஒரு வழக்காகப் பயன் படுத்தப்பட்டு வருகிறது.ஆனால் ‘S.M.S.’ என்ற மந்திரச்சொல் அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் மனதில் – குறிப்பாகக் கற்றோர் நெஞ்சங்களில் நிறைந்து நிற்கிறது!

‘S.M.S.’ என அனைவராலும் அன்பொழுக அழைக்கப்பட்டவரும், எங்களால் ‘பெரியவர்’ என மரியாதையோடு அழைக்கப்பட்டவருமான ‘அதிரையின் கல்வித் தந்தை’ ஹாஜி ஜனாப் S.M.S. ஷேக் ஜலாலுதீன் மரைக்காயர் அவர்களின் நினைவு நாளை (அக்டோபர் 2ம் தேதி) ஒட்டி இந்தக் கட்டுரை எழுதுவதற்கு கிடைத்த வாய்ப்பைப் பெரும் பாக்கியமாகக் கருதி மகிழ்கின்றேன்.


“The reasonable man adapts himself to the world. The unreasonable man wants the world to adapt himself. All progress depends upon the second man.” பேரறிஞர் பெர்னார்ட்ஷாவின் இக்கூற்றைப் படிக்கும் போதெல்லாம் மறைந்த சிறந்த மனிதர் - காதிர் முகைதீன் நிறுவனங்களின் நிறுவனர் கல்வித் தந்தை ஹாஜி ஜனாப் S.M.S. ஷேக் ஜலாலுதீன் மரைக்காயர் அவர்களின் உருவமே நம் மனக்கண் முன் வந்து நிற்கும். ஹாஜி S.M.S. அவர்கள் தன் மனதுக்குச் சரி எனப்படும் கருத்தில் தெளிவாக இருப்பார்; அதை அழுத்தமாகச் சொல்லுவார். மற்றவர்களின் எதிர்ப்புகளைக் கொஞ்சமும் பொருட் படுத்தமாட்டார். அவ்வெதிர்ப்புகளை யெல்லாம் தன் வெற்றிக்கு உரமாக்கிக் கொள்வார்!


60 ஆண்டுகளுக்கு முன் அதிராம்பட்டினத்தில் 5-ம் வகுப்பு முடித்த சிறுவர் சிறுமியர்கள் தங்கள் கல்வியைத் தொடர முடியாத நிலையில் வசதி வாய்ப்புள்ள வீட்டுப் பிள்ளைகள் வெகு சிலர் பட்டுக்கோட்டை, இராஜமடம் போன்ற ஊர்களிலும், செல்வந்தர் வீட்டுப் பிள்ளைகள் சிலர் சென்னையிலும் படிப்பைத் தொடர முடிந்தது. ஆனால் வசதி வாய்ப்பில்லாத பிள்ளைகள் படிப்புக்கு முழுக்குப் போடும் நிலைதான் இருந்தது!

அரபி மற்றும் மார்க்கக் கல்வி கற்பதற்காகவும், தொழுகை நடை பெரும் பள்ளிவாசல்களில் வெளிச்சம் கொடுப்பதற்காகவும், கொடை வள்ளல் ஹாஜி காதிர் முகைதீன் மரைக்காயர் அவர்களால் 1901- ஆம் ஆண்டு நிறுவப்பட்ட M.K.N. அறக்கட்டளையின் செயலாளராகப் பொறுப்பேற்ற ஹாஜி S.M.S. ஷேக் ஜலாலுதீன் மரைக்காயர் அவர்கள், மார்க்கக் கல்வியுடன் உலகக் கல்வியும் அதிரை சிறார்களுக்குக் கிடைக்க வேண்டும் என எண்ணியதன் விளைவாக 1949-ஆம் ஆண்டு காதிர் முகைதீன் நடுநிலைப் பள்ளி தொடங்கப்பட்டது.

காலம் சென்ற கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்கள் பள்ளியைத் தொடங்கி வைத்துச் சிறப்பித்தார்கள். அடுத்த மூன்று ஆண்டுகளில் நடுநிலைப் பள்ளி, உயர் நிலைப் பள்ளியாகப் பரிணமித்தது! S.S.L.C. (அன்று 11 -ஆம் வகுப்பு) படித்துத் தேர்ச்சி பெற்றவர்கள் உயர் கல்விக்காக திருச்சி, சென்னை போன்ற நகரங்களில் உள்ள கல்லூரிகளுக்குச் செல்ல வேண்டிய நிலையில், செல்வந்தர் வீட்டு இளைஞர்களுக்கு மட்டுமே அத்தகைய வாய்ப்புக் கிட்டியது. அதிரை இளைஞர்களின் உயர் கல்விக்காக M.K.N. அறக் கட்டளை சார்பில் கல்லூரி ஒன்று தொடங்கப்படவேண்டும் என்றெண்ணிய தாளாளர் S.M.S. 1955-ஆம் ஆண்டு காதிர் முகைதீன் கல்லூரியை நிறுவினார். கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் தலைமையில் அன்றைய தமிழக நிதி அமைச்சர் மாண்புமிகு C.சுப்பிரமணியன் அவர்கள் கல்லூரியைத் தொடங்கி வைத்துச் சிறப்பித்தார்.


கல்லூரி நிறுவிட நினைத்த நாள் முதல் கல்லூரிக்கான கட்டிடங்கள் கட்டி முடிக்கும் வரை, தாளாளர் அவர்கள் எதிர் கொண்ட எதிர்ப்புகள், இடையூறுகள் எத்தனை எத்தனை என்பதை என்போன்றோர் நன்கு அறிவோம். கல்லூரி ஆரம்பித்த புதிதில் கல்லூரியை நிர்வகித்துச் செல்வதில், தாளாளருக்கு ஏற்பட்ட இடையூறுகள் எண்ணற்றவை. கல்லூரியை நடத்துவதற்கு ஏற்பட்டிருந்த பொருளாதாரத் தட்டுப்பாடு ஒருபுறம்; அறக் கட்டளையை யார் நிர்வகிப்பது என்பதில் எழுந்திருந்த பிரச்சினையைத் தீர்க்க நீதி மன்றத்திலிருந்த வழக்குகள் மறுபுறம். ஆனால் நமது தாளாளர் அவர்கள் கொஞ்சமும் கவலைப்படாமலும், சோர்வடையாமலும் அத்தனைப் பிரச்சினைகளையும் தனக்கே உரித்தான இன்முகத்தோடு சர்வ சாதாரணமாகத் தீர்த்துக்கொண்டு வந்தார். மலை குலைந்தாலும் நிலை குலையாத தளாளரின் நெஞ்சுரத்தை வேறு எவரிடமும் காணவியலாது. ஹாஜி S.M.S. அவர்கள் அறக் கட்டளையின் தாளாளராக மட்டும் இருக்கவில்லை; தளராதவராகவும் இருந்து செயல் பட்டு வந்தார்!

1955- ஆம் ஆண்டுக் காலக் கட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நூற்றாண்டு விழா கண்ட கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியைத் தவிர்த்து, வேறு எந்தக் கல்லூரியும் இல்லாத நிலையில் தாளாளர் அவர்களின் தனித் திறனை எண்ணி வியக்காதவர்கள் இல்லை எனலாம்! அதே ஆண்டு தஞ்சாவூர் இராஜா சரபோஜி கல்லூரி, பூண்டி பற்பம் கல்லூரி நிருவப்பட்டிருப்பினும் அவை காதிர் முகைதீன் கல்லூரிக்குப் பின்னரே நிறுவப்பட்டன! பல்வேறு கல்லூரிகள் நிறைய ஏற்பட்டிருந்தாலும், மாவட்டத்தின் இரண்டாவது கல்லூரி என்ற பெருமை என்றென்றும் காதிர் முகைதீன் கல்லூரிக்கு மட்டுமே உண்டு என்பது குறிப்பிடத்தக்கது! 

தொடரும்...

ஹாஜி S.K.M. ஹாஜா முகைதீன், M.A.,B.Sc., B.T.,
தலைமை ஆசிரியர் (ஓய்வு)
காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி
அதிராம்பட்டினம்


மர்ஹூம் ஹாஜி S.M.S.ஷேக்ஜலாலுதீன் - நினைவு கூர்வோம் ! 11

அதிரைநிருபர் பதிப்பகம் | October 02, 2011 | , ,


மர்ஹூம் ஹாஜி S.M.S.ஷேக்ஜலாலுதீன்
செயலாளர், தாளாளர்; M.K.N. மதரசா
மறைவு: 02-10-1986

சுருக்கமாகப் பேசுகின்ற எஸ்.எம்.எஸ்.,
சுருக்காய்ச் செயல்படும் எக்ஸ்பிரஸ்!
உழைப்பில் எறும்பாய் இயங்கிடுவார்;
உறுதியில் இரும்பாய் இருந்திடுவார்!

சுவைபடப் பேசிச் சொக்க வைப்பார்;
நயம்படச் சொல்லி ரசிக்க வைப்பார்;
வசிய வார்த்தையில் சிக்க வைப்பார்;
மசியாத மனிதரை மசிய வைப்பார்!

திட்டினால் நமக்கு அறிவுரை; அவர்
குட்டினால் அனுபவம்! இவைகளின்
சொந்தக்காரர் நமது தாளாளர்; தன்
சொந்தக்காலில் நின்ற செயலாளர்!

மடிக் கணினி வருமுன்னரே
மடியில் வைத்துத் தட்டச்சில்,
பல பணி ஆணை அச்சிட்டு,
படித்தோர்க்குப் பணி தந்தார்.

ஆங்கிலத்தை ஆளும் துரை! இவர்
ஆளுமையில் அடங்கும் துறைகள்;
கோட்டுகளும் சூட்டுகளும் இவரிடம்
மாட்டிக் கொண்டு குட்டுப்படும்!

வாசகத்தை இவர் எழுதிடின்,
திருத்துவோர் யாருளர்? பிறர்
வாசகத்தை இவர் திருத்திடின்,
மறுத்துரைப்போர் யாருமிலர்!

அலுவலகத்துக்கு ஓர் உடை,
விழாவுக்கு என்று ஓர் உடை,
பிரமுகரைச் சந்திக்க ஓர் உடை
என்ற வழக்கம் உடையாரல்லர்.

யாவும் உடையார்க்கு உயருடையா?
பயமே அறியார்க்குப் படை பலமா?
தளரா நடையே போதும் அவருக்கு,
அடையா இலக்கை அடைவதற்கு!

நீட்டோலை வாசியா நின்றவரை,
ஏட்டோடு பள்ளிக்கு வரச்செய்தார்!
படிப்பின்றி வீட்டோடு இருந்தோர்,
பள்ளியில் சேர்ந்து புள்ளியாயினர்.

பட்டறிவில்லா எம் போன்றோரை,
பட்டை தீட்டி மதிப் பேற்றினார்!
அறிவுரைகளால் அதட்டி என்னை
முதுகலையை அடைய வைத்தார்!

ஆசிரியப் பணி வாய்ப்பு தந்தார்;
ஆசீர்வதித்தார்; தலைமையாசிரியர்
பதவி நெருங்கும் வரை அவர்
அன்பில் எம்முயர்வு இருந்தது!

பரவட்டும் தாளாளர் புகழொளி
பாரெல்லாம்! வல்ல இறைவன்,
புவனப் பதவி பல தந்தவருக்கு
சுவனப் பதவியை வழங்கட்டும்!


A.M. அப்துல் காதிர், M.A., BEd. (வாவன்னா)

முன்னாள் மாணவர், ஆசிரியர்,

காதிர் முகைதீன் மேல் நிலைப் பள்ளி



பொக்கிஷமான நினைவுகள்
















உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு