Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label ஏன் ஹிஜாப். Show all posts
Showing posts with label ஏன் ஹிஜாப். Show all posts

ஏன் ஹிஜாப்? - (பொன்முத்து சம்பத் - இரண்டாம் பரிசு பெற்ற கட்டுரை) 2

அதிரைநிருபர் பதிப்பகம் | July 04, 2015 | ,

இவ்வருடத்தின் ஹிஜாப் தினத்தை முன்னிட்டு. இஸ்லாமியப்பெண்மணி தளமும் டீக்கடை முகநூல் குழுமமும் இணைந்து நடத்திய “ஏன் ஹிஜாப்?” கட்டுரைப் போட்டியில் இரண்டாமிடம் பெற்று ரூ 4 ஆயிரம் பரிசுத்தொகை பெற்ற சகோதரர் பொன்முத்து சம்பத் அவர்களின் கட்டுரை:

மரப்பட்டைகளை அணிந்து,  பட்டாடைகளை அணிந்து  பண்பாட்டில்(Culture) வளர்ந்தது மானுடம். நாகரிகம் (Civilization) என்ற பெயரில், பெண்கள் தங்களின் ஆடைகளைக் குறைத்து வெளியிடங்களில் திரிவதால் முகம் சுளிக்கிற நிலையும் தேவையற்ற பிரச்சனைகளும் எழுவதை அன்றாட செய்திகளாய், ஊடகங்களில் காண முடிகிறது. ‘ஆள்பாதி, ஆடைபாதி’ என்பதை தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பலப்பல. கல்லூரிகளில், கடைத்தெருக்களில் காணப்படும் பெண்களை கேலி கிண்டல் செய்யும் அநாகரிப் போக்கும் வன்முறையே.  இதனைத் தவிர்க்கும் வகையில் ஆண், பெண்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.     இதுவே முஸ்லிம் பெண்களின் ஹிஜாப். இதைக் கடைப்பிடிக்கும் பெண்கள் கண்ணியத்திற் குரியவராகிறார்கள்.  இக்கலாச்சாரம் மேலைநாடுகளிலும் வேரூன்றி வருகின்றது. இதனால் ஈவ்டீஸிங்கிலிருந்து விடுபடலாம்.

(நபியே!) இறை நம்பிக்கை கொண்ட ஆண்களிடம் அவர்கள் தங்கள் பார்வைகளைப் பேணிக்கொள்ளும்படியும், தங்களுடைய வெட்கத் தலங்களைப் பாதுகாத்துக் கொள்ளும்படியும் நீர் கூறும்.  இதுவே அவர்களுக்கு மிகத் தூய்மையான வழிமுறையாகும்.  அவர்கள் செய்யும் அனைத்தையும் திண்ணமாக இறைவன் நன்கு தெரிந்தவனாக இருக்கிறான்.

மேலும், (நபியே!) இறை நம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறும், அவர்கள் தங்களுடைய பார்வைகளைப் பேணிக் கொள்ளட்டும்.  தங்களுடைய வெட்கத் தலங்களைப் பாதுகாக்கட்டும்.  தங்களுடைய அழகை வெளியில் காட்டாதிருக்கட்டும்.  அதிலிருந்து தாமாக வெளியே தெரிகின்றவற்றைத் தவிர, மேலும் தங்களுடைய மார்புகள் மீது தங்கள் முன்றானையைப் போட்டுக் கொள்ளட்டும். (24:30-31)


இந்த இறைவசனங்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவர்களுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் மிக உன்னதமான ஒழுக்க நெறிகளை வகுத்துத் தருகின்றன. ஹிஜாபை அணிவது இன்றைய நவநாகரிக உலகில் அவசியமற்றது என்பவர்களுக்கும் வாகனங்களில் பயணம் செய்கிறபோது தடையாக இருக்கிறது என்பவர்களுக்கும்  தோஹாவில் நடைபெற்ற 15-வது ஆசிய விளையாட்டுப் போட்டியைச் சுட்டலாம்.

Ruqaya Al-Ghasra

2006 டிசம்பர் 11 அன்று  200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 23.19 விநாடிகளில் தங்கப் பதக்கம் வென்றவர் பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண்மணி ருக்கையா அல்-கஸரா.  இதில் என்ன அதிசயம் எனில்,   இஸ்லாமியப் பாரம்பரிய உடையான ஹிஜாப் அணிந்து, ஓட்டப்ப பந்தயத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதுதான்.  அவரை மொய்த்த ஊடகங்களுக்கு அவர் அளித்த பதில்:


‘பாரம்பரியமான இஸ்லாமிய உடை என் ஓட்டத்தைத் தடை செய்யவில்லை. ஓட்டத்திற்கு உடை ஒரு தடை என்பதை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். இஸ்லாமிய உடை என்னை ஊக்கப்படுத்தியது; உற்சாகப்படுத்தியது. பஹ்ரைனில் என்னை யாரும் இந்த உடைதான் அணிய வேண்டும் என்று வற்புறுத்தவில்லை. நானாகத்தான் வெள்ளை நிற ஹிஜாபைத் தேர்வு செய்து ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டேன். ’ 

இஸ்லாமிய உடைகளைச் சுமையாகக் கருதுகிற இஸ்லாமியப் பெண்கள் என்றில்லாமல் அனைத்து மதப் பெண்களுக்கும் இது ஒரு சவுக்கடி. இஸ்லாம் ஒழுங்குபடுத்தியுள்ள உடை பெண்களின் எத்தகைய நியாயமான முன்னேற்றத்திற்கும் தடையாக  இருப்பதில்லை  என்பதற்கு பள்ளப்பட்டி உஸ்வத்துன் ஹஸனா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கொண்டே ஆண்டுதோறும் விளையாட்டுப்  போட்டியில் கலந்து கொள்கின்றனர் என்பது சான்று.

முக்காடு போடுவதும், முகத்தை மறைப்பதும், மூளையை மறைப்பதாகக் கருத இயலாது. அந்நிய ஆடவர்களிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள, இஸ்லாம் வகுத்த இந்தப் பழக்கம் உண்மையில் பாராட்டுக்குரியது.   இஸ்லாம் மதத்தின் மீது இருக்கிற மதிப்பையும் மரியாதையையும் விட கூடுதலான மதிப்பும் மரியாதையும் ஹிஜாபையும், புர்காவையும் அணிகிற பெண்களின் மீது ஏற்படுகிறது. எனவே, ஹிஜாப் அணிகிற இந்த நடைமுறையை  அனைத்து மதத்தைச் சேர்ந்த பெண்களும் ஆண்களும் கடைபிடிக்கலாம் என்றும் தோன்றுகிறது

ஏன் ஹிஜாப் ? - பரிசுப் போட்டி...! 1

அதிரைநிருபர் பதிப்பகம் | February 02, 2015 | , , , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறோம்...!

ஏக இறைவனின் அன்பும் அருளும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாவதாக ஆமீன்...

பிப்ரவரி 1-   உலக ஹிஜாப் தினத்தை முன்னிட்டு வலையுக அன்பர்களுக்காக இஸ்லாமிய பெண்மணி நடத்தும் இந்த வருடத்தின் முதல் போட்டியை இங்கு அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்... !!

உங்கள் அறிவுக்கும் ஹிஜாப்பிற்கும் சம்மந்தமே இல்லையே என்று நிருபர் கேட்ட கேள்விக்கு நோபல் பரிசு வென்ற இஸ்லாமிய பெண்மணியின் பதிலுக்கும் நம் போட்டிக்கும் தொடர்புண்டு என்றால் மிகையாகாது.

உடலை மறைத்திருக்கும் பெண்கள் அறிவையும் சேர்த்தே மறைக்கிறார்கள் என்ற பிம்பம்  இன்று பலர் மத்தியில் ஆழமாக பதிந்துவிட்டது. ஹிஜாப் பேணும் சகோதரிகள் ஒவ்வொருவரும் ஹிஜாப் குறித்தான கேள்விகளை கட்டாயம் எதிர்கொண்டிருப்பார்கள். அவர்களின் அனுபவங்களை பகிரவும், தங்கள் வீட்டு பெண்கள் எதிர்கொண்ட  கேள்விகளுக்கு ஆண்களின் பதில்களை பகிரவும் ஓர் அறிய வாய்ப்பு.

போட்டிக்கான  கேள்விகள் மற்றும் பரிசுகள் விபரம் கீழ்க்காணும் படத்தில்:-


போட்டியின் விதி முறைகள்:-

உங்கள் பதில்கள் 20 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்..

நீங்கள்  எழுதும் படைப்பு இதற்கு முன் வேறு எந்த தளத்திலும் பிரசுரிக்கப்பட்டு இருக்கக்கூடாது. காப்பி பேஸ்ட்டாகவோ யாரோ வேறொருவரின் பதில்களாகவோ இருக்கக்கூடாது. கட்டாயம் உங்கள் சொந்த பதிலை மட்டுமே எழுதி அனுப்புங்கள்.

உங்கள் ஆக்கங்களை அனுப்ப வேண்டிய இமெயில் முகவரி: admin@islamiyapenmani.com

உங்கள் ஆக்கங்கள் எங்களுக்கு அனுப்ப வேண்டிய கடைசி நாள் : பிப்ரவரி 15-02-2015 இந்திய நேரம் இரவு 11.59க்குள்

ஜனவரி 31-2015 என்ற போட்டியின் இறுதி தேதி வலையுக நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க பிப்ரவரி 15-2015 வரை போட்டியின் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பங்கேற்பாளர்களின் விருப்பமே எங்கள் விருப்பம்.

நடுவரின் தீர்ப்பே இறுதியானது.

அனைவரும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். பரிசினை வெல்லுங்கள்.

கவனிக்க: ஹிஜாப் என்பது நாகரீகமாய், ஒழுக்கமாய், இறுக்கமற்றதாக, முகம், கை மணிகட்டு, கால்பாதம் தவிர்த்து உடல் அங்கங்களை  வெளிகாட்டாத எந்த உடையையும் குறிக்கும்.

நன்றி : http://www.islamiyapenmani.com/2015/01/blog-post_16.html

பரிந்துரை : நட்புடன் ஜமால்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு