அதிரை மொழிக்கே ஆங்கிலத்தில் அகராதி போட்டவர்கள் (MSMn) நம்மவர்கள், ஆங்கிலமே எழுதுபவர்களோடும் அகராதி(யில்) பேசுபவர்களும் நாம்மவர்கள்தான்.

சமுதாய அமைப்பில் சபை நாகரீகம் என்ற பெயரில் இயல்பாகப் பழகிய மொழியின் வார்த்தைகளை மறைத்துப் பேசும் அனைத்து மொழிகளுமே தாய் மொழியில் பேசினாலும் அவை அந்நிய மொழியே. "உம்மாடி ஏல்லே" என்கிற வார்த்தையில் உள்ள ஹோம்லி உணர்வு அம்மா முடியவில்லை என்று சொல்வதில் கிடையாது.
"அல்லாட காவ" என்று சொல்வதில் உள்ள இயல்பு அல்லாஹ் மாக் என்று சொல்வதில் உணர முடியாது.
பூக்கமலையை எடுத்து சோப்பிவிடுவேன் என்று கோபமாக சொல்லும் வார்த்தை கூட உன்னை தொலைத்துவிடுவேன் என்கிற கோபத்தில் உணர முடியாது. கோபமா இருந்தாலும் பாசமா இருந்தாலும் அதை நாம்மூர் பாசையில் வெளிக்கொட்டுவது என்பது ஒரு அலாதிதான்
காரணம் மண்ணின் மனம், மண் வாசனை, என்பது கரிசல் காட்டிலே கூட ஒருவனை கடுதாசி போடவைத்ததாகும் . கடித்துப் பேசும் நெல்லைத் தமிழையும் கனிவுடன் பேசும் கொங்கு தேச தமிழையும் வய வய கொய கொய என்று பேசும் சென்னைத்தமிழையும் அந்தந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்கள் தங்களின் மனதில் மாளிகை கட்டி வைத்திருக்கிறார்கள்.
அதுபோல் நம்ம ஊர் பாசையில் பேச்சு வழக்கில் இருந்து நினைவுக்கு வந்தவைகள் இங்கே பட்டியலாக விரிகிறது.
ஒரு 'அவயாசமயத்துக்கு' இவன் ஒதவமட்டேன்கிறான்
இவனோட இம்முசு தாங்க முடியலமா
மல பேஞ்சி 'தாவாரம்' வழியா தண்ணி ஊத்துது
கலரி சோறு திண்டது ஒத்துகிடாமே ஒரே கொட பெறட்டா இருக்கு
'சப்பாத்தை' மாட்டிக்கிட்டு பள்ளிகொடம் போடா
இது எங்க வாப்புச்சா காலத்திலே இருந்து எங்க ஊட்டுலே உள்ள 'சப்பரம்பெஞ்ச் கட்டுலு'
என்ன சொன்னாலும் இவன் 'ஈட்டிக்கி மூட்டி' யா தான் செய்வான்
பினாங்குலய்ருந்து 'பொட்டிபிசு மேத்துண்டு' வரும் பாருங்க கமகன்னு மனத்துக்கிட்டு
அப்போவுல்லாம் வெட்டிக்கொலத்து தண்ணி பளிங்கி மாதிரி கெடக்கும் இப்போவெல்லாம் எல்ல கொலத்து தண்ணியும் 'பிளாய்யா' கெடக்கு
ரெங்கு பொட்டிலே பத்தாய் கைலி வச்சது வச்ச மாதிரியோ இருக்கு
அப்போவெல்லாம் ஊட்டுக்கு ஊடு பத்தாயமும் ரெங்கு பெட்டியும் இருக்கும்
இவன்டே அசந்து மசந்து கடன் வாங்கிறது கூடாது கொதவலை சுருக்கு வஞ்சி திருப்பி கேப்பன்
என்னதான் திட்டுனாலும் பேசுனாலும் சூடுசொரணை கெடையாது
குதுராளி நெறையா நெல்லு கொட்டி வைக்க ஆசை
ஒரு எடத்துலே இருக்காமே மக்க சக்கரத்துலே வர்றான்
என்னா பசப்பு பசப்புறான்
'ஆறு' வருசத்துக்கு அப்புறம் இப்பதாம்மா மசக்கையா இருக்கா
வால்வாட்டி [ ]
ஆம்புலப்புள்ள குப்பற படுக்க கூடாது
பொம்புலப்புல்ல மல்லாக்க படுக்க கூடாது
என்ன கை மருந்து கொடுத்தாலும் ஒத்துக்க மாட்டேங்குது
இவன் வூட்டுக்குள்ள நொழஞ்சா வூட்டை அலங்கமலங்கா அடிப்பான்மா
வூட்டுக்குல நொலைரப்பவே மொவரக்கட்டை சரி இல்லாம இருந்துச்சி
ரூமுகுள்ள வச்ச சொவ்க்காரப்பொட்டி எங்க போனிசுன்னு தெரியலே
பாசை படிக்கிறான் [ ]
ஒன்னோட சங்கனாத்தமே வாணாம்
பொரிக்கன்சட்டி [ ]
காமாடு தலமாடு தெரியாம தூங்குறான்
நேத்தையானம்னதும் அப்பம் தான் நினைவுக்கு வரும்
பாலுஞ்சோறு காமாடு
ஒலமூடிய காணோம்
காலுக்கு மோஜா போடாமே சப்பாத்து போடதே
எங்கே போனாலும் பொறத்தாலே வந்துகிட்டே இருப்பா
பிருமனை [ ]
முட்டாசு [ ]
குட்டிப் பாளையம் ஒரு எடத்துலே இருக்க மாட்டேங்குது பாளையம்
என்ன வேலை சொன்னாலும் 'மாய்ச்ச' இல்லாமே பாப்பான்
சாமத்துலே [ ]
உப்புத் தக்கரு [ ]
சீவன் செத்தவன் [ ]
பின் குறிப்பு : கடைசியா அண்ணன் NAS அவர்கள் எங்களை அடிக்கடி திட்டும் அந்த ஸ்லோகனுடன் இன்னும் சில வார்த்தைகள் கிடைக்கும் போது தொகுத்துக் கொண்டு வருகின்றேன்
ஹேர்பின் குறிப்பு : [ ] இப்படியிட்ட இடங்களில் என்ன பொருள் போடலாம் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் அல்லது கருத்துப் பெட்டியில் போட்டுவிடுங்கள் !
Sஹமீது