Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label பெற்றோர். Show all posts
Showing posts with label பெற்றோர். Show all posts

ஒரு பிள்ளையின் ஏக்கம் ! - காணொளி 1

அதிரைநிருபர் பதிப்பகம் | August 17, 2016 | , , ,

இஸ்லாமிய பெற்றோர்கள் அனைவரின் ஏக்கமும் பிரார்த்தனைகளும் தங்களது குழந்தைகள் சாலிஹானவர்களாகவும் நல்லதையே நாடக்கூடியவர்களாகவும் அதையே செய்யக் கூடியவர்களாகவும் இருக்கத்தான் விரும்புவர்.

அவ்வகையில் ஏங்கும் பெற்றோர் எத்தனை பேர் தாங்களும் சாலிஹானவர்களாக, மார்க்கம் எடுத்துரைத்த கடமைகளை பொறுப்புடனும் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடி செய்கிறார்களா என நமக்குள்ளே கேட்டு கொள்ளும் அளவுக்கு ஆங்காங்க ஒரு சில நிகழ்வுகளையும் பார்க்கத்தான் செய்கிறோம்.

மாஷா அல்லாஹ், இந்த காணொளியின் நாயகி தனது பெற்றோருக்காக அவர்களின் நலனுக்காக மறுமையின் நிலையை எண்ணி ஏங்கும் இந்த குழந்தையைப் போன்றவர்களை பெற்றெடுத்தவர்கள் பேறுபெற்றவர்களே !


அதிரைநிருபர் பதிப்பகம்

புள்ளையலுவோ பரீட்சைக்கு படிக்குதுவோமா ! 4

அதிரைநிருபர் பதிப்பகம் | February 22, 2015 | , , , , ,


ஊட்டு பிள்ளைகளை நன்கு படிக்க விடுங்கள் / தூண்டுங்கள்....

மாணவ, மாணவியர்களுக்குத்தான் எல்லாரும் தன்னால் இயன்ற அறிவுரைகளையும் கடந்த கால நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு வழங்கி வருகிறோம். ஆனால் அதற்கு முன் அவர்கள் எவ்வித தொந்தரவும், தொல்லைகளும், தடைகளுமின்றி தன் தேர்வை நல்லபடி எழுதி முடிக்க வீட்டில் உள்ள அப்பா, பெரியம்மா, வாப்பா, உம்மா, ராத்தா, தங்கை, தம்பி, தங்கிச்சிமார்கள் அவர்களுக்கு உறுதுணையாகவும், உதவியாகவும் தேர்வுகள் முடியும் வரை எவ்வித தொந்தரவும் செய்யாதவர்களாகவும் இருத்தல் மிக,மிக அவசியமான ஒன்று. 

கீழே குறிப்பிட்ட படி தொந்தரவுகள் செய்யக்கூடாது.

* தம்பி செத்த கடெக்கி போயி சாமானுவொ கொஞ்சம் வாங்கிட்டு வர்ரியா?

* போனு பண்ணியும் வரலெ செக்கடிமோட்லெ போயி ஆட்டோ புடிச்சிட்டு வர்ரியா புள்ளெ பெத்த ஊட்டுக்கு சீனி வாங்கிட்டு போகனும்?

* வாப்பா வெளியெ போயிட்டாஹ, கொஞ்சம் கூப்பன் கடையிலெ சாமான் வாங்கி தர்றியா?

* ராத்தாக்கு ஒடம்பு சரியில்லெ ஆஸ்பத்திரி வரைக்கும் தொணைக்கி வர்றியா? (அமெரிக்காவரைக்கும் தனியா போயிட்டு வரத்தெரியுது?)

* வண்ணான்ட்டெ துணி போட்டிக்கிறேன் கொஞ்சம் வாங்கித்தந்துர்ம்மா வாப்பா?

* ஊட்லெ வேலெ செய்றவ இன்னிக்கி பாத்து லீவு போட்டுட்டா கொஞ்சம் கடெத்தெருவுக்கு போயி மீனு வாங்கி தர்றியா?

* மாமா ஊடு குடி போறாஹ, காலைப்பசியாற போயிட்டு வந்துரு போவாட்டி கோவிச்சிக்கிடுவாஹ. (பரிச்சையிலெ ஃபெயிலாப்போனா கோவிச்சிக்கிட மாட்டாஹளா?)

* ராத்தாடெ புள்ளெயெ தூக்கிட்டு போயி சங்கத்துலெ போலியோ சொட்டு மருந்து கொடுக்குறாஹெ போயி போட்டுட்டு வந்துர்மா வாப்பா?

* வர்ர வழியிலெ தங்கச்சி பென்சிலும், அலி லப்பரும் வாங்கி கேட்டா வாங்கிட்டு வந்துர்ம்மா மறந்துராமெ?

* தஞ்சாவூர்லெ எக்ஸ்பிசன் போட்டிக்கிறானுவொ ராத்தம்மாவூட்லெ எல்லாரும் காரு புடிச்சி போறாஹ நாமலும் போயிட்டு வருவோம் அங்கெ சாமானுவொ வெலெ கொறஞ்சி விக்கிம் வாடா போயிட்டு வந்துர்லாம்?

* பைப்பு ஒடஞ்சி போச்சி போயி கபீராக்கா மொவனெ கூட்டிக்கிட்டு வர்றியா?

* தையல்காரன்ட்டெ துணி தக்கெ கொடுத்து பத்து நாளாச்சி. போயி வாங்கிட்டு வந்துர்றியா?

* பஞ்சாயத்து போர்ட்லேர்ந்து வந்து மைக்குலெ சொல்லிட்டு போயிட்டாங்க, செத்த அங்கெ போயி தண்ணி பில்லும், ஊட்டு வரியும் கட்டிட்டு வந்துர்ம்மா வாப்பா? (பரிச்சையிலெ ஃபெயிலா போயிட்டா ஹாஜி முஹம்மது சாரு அடிப்பாருண்டு யான் அவ்வொளுக்கு தெரியமாட்டிக்கிது?)

* நாளையோட கெரண்டு பில்லு கட்ட கடைசி நாளு, இன்னெக்கி எப்புடியாவது கட்டிட்டு வந்துரும்மா? இல்லாட்டி அபராதம் போடுவாஹ. (பரிச்சையிலெ ஃபையிலா போயிட்டா வாழ்க்கையே அபராதமா போயிடும்ண்டு அவ்வொளுக்கு தெரியாதா?) கெரண்ட்டே இருக்கிறது இல்லெ...இதுலெ பில்லு வெற கட்டணுமாக்கும்? என்று அவன் முணங்குவது எல்லோர் காதுகளுக்கும் நிச்சயம் கேட்கும் என்று நெனெக்கிறேன்.

* கெரண்டு அடிக்கடி போறதுனாலெ தண்ணி மோட்டாரும் காயிலு அடிவாங்கி வீணாப்போச்சி, செத்த மோட்ரு எசவு பண்ரவனெ கூட்டிக்கிட்டு வர்றியா?

* ஊட்லெ நெத்தா உழுந்துக்கிட்டு ஈக்கிது, தேங்காய்ப்பறிக்கிறதுக்கு ஊடு, ஊடா வந்துக்கிட்டு ஈந்த அந்த ஆளும் செத்துப்போயிட்டானாம். கொஞ்சம் சேர்மாவாடியிலெ காலையிலெ சுபோடெ போயி ஆளு நிக்கிம் கூட்டிக்கிட்டு வந்துர்றியா? தேங்காய் இல்லாததுனாலெ அடுத்த ஊட்லெ கடன் வங்கனுமா ஈக்கிது? (சுபோடெ படிக்கனும்ண்டு நெனெக்காம தேங்காய் ஞாபகத்துலேயே புள்ளெ படுக்குறதுனாலெ ராத்திரி கனவுல கூட தேங்காய் கொலையா வந்துட்டு போவும்)

* வர்ர வழியிலெ மீரா மெடிக்கல்லெ கொஞ்சம் மாத்திரெ வாங்கிட்டு வந்துரு? பட்டுக்கோட்டையிலெயே நேத்து கெடக்கலெ வாப்பா சொன்னாஹெ. 

* மொபைல்லெ காசு முடிஞ்சி போச்சி (கதகதையா அளந்தா வேற என்னா செய்யிம்?) கடெத்தெருவுலெ மீனு வாங்கிட்டு வரும் போது நூறு ரூபாக்கி ஈ.ஸி. போட்டுட்டு வந்துரு மறந்துராமெ?

* சத்துக்கொறவா ஈக்கிது ஆட்டுக்காலு சூப்பு வச்சி தர்ரேன். கறிக்கடையிலெ கொஞ்சம் நெஞ்செலும்பும், காலும் வாங்கிட்டு வந்துரு.

* இன்வன்டரு பேட்டரி சர்வீஸ் பண்ண ஊட்டுக்கு ஆளு வரும் போன் பண்ணுனானுவொ வந்தா கொஞ்சம் கூட இருந்து பாத்துக்கோ.

* பேரனுக்கு (ராத்தா மொவன்) நாளெக்கு பள்ளிக்கொடத்துலெ ஆண்டு விழாவாம். அவனுக்கு அதுலெ கலந்துக்கிறதுக்கு கொஞ்சம் சாமானுவொ வேனும்ண்டு டீச்சர் சொல்லி அனுப்பி ஈக்கிறாஹெ. அந்த சாமான்வொலெ கொஞ்சம் மெயின் ரோட்ல உள்ள கடையிலெ போயி வாங்கி தந்துரும்மா வாப்பா.

* பெரியம்மாவுக்கு ஒரே ஓங்காரமா ஈக்கிது கொஞ்சம் நாட்டு மருந்து கடெயிலெ போயி கொஞ்சம் சாமானுவொ வாங்கிட்டு வா. அவ்வொளுக்கு குடிநி போட்டு கொடுத்தா நல்லாப்போயிடும்.

இப்படி படிப்பைத்தவிர ஏஹப்பட்ட வேலைகளை அவர்கள் மேல் அசராமல் ஏவி விட்டு தேர்வுக்கு தயாராகும் உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கும், அவர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கும் நீங்களே எதிரியாக அவர்களின் எதிர்காலத்தை பாழாக்கி விடாதீர்கள்.

கடெசியிலெ, அல்லாஹ் இந்த புள்ளையலுவொலெ நல்லா படிக்க வச்சி, பாஸாக்கி, வாப்பா மாரி கஸ்டப்படாமெ, பெரிய உத்யோகத்துக்கு போயி ஊட்டு கஸ்டமெல்லாம் தீரட்டும் என்று து'ஆ மட்டும் செய்ய மறக்கிறது இல்லெ.....

பரிச்சையிலெ புள்ளையலுவொ ஃபெயிலாப்போனாலோ அல்லது மார்க்கு கொறச்சி வாங்குனாலோ அது தெரிஞ்சா மொதல்ல அப்பா உங்களத்தான் ஏசுவாஹ....புள்ளையலுவொலெ இல்லெ.....தெரிஞ்சிக்கிடுங்க....ஊட்டு புள்ளையலுவொலெ  செரமம் கொடுக்காம நல்லா படிக்க வைங்க...பிறகு அதன் பலாபலன்களை நீங்களும் அனுபவிப்பீங்க......இன்ஷா அல்லாஹ்...

பரீட்சை எழுதின மாதிரி ஒரே டயர்டா ஈக்கிது.... தேத்தண்ணி குடிக்கனும்... வரட்டா....

மு.செ.மு. நெய்னா முஹம்மது

மண்சட்டி! 31

அதிரைநிருபர் பதிப்பகம் | November 03, 2013 | , , , , , ,

அது ஒரு சின்னக் குடும்பம்! செல்வக் குடும்பம்! திரண்ட சொத்து. கணவன்-
மனைவி, ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுனு ஒரே ஒரு பெண்பி ள்ளை வயது’ பதினாறு கூடக் கூடப் போனால் பதினெட்டுக்கு மேல் போகாது. தாயும் தந்தையும் நடுத்தர வயதினரே!

கணவருக்கு அரசாங்கத்தில் பெரிய வேலை. பெரிய சம்பளம், மாத்ச் சம்பளம் வாங்கித்தான் குடும்பம் ஓட்ட வேண்டும் என்ற நிலை இல்லை. பூர்வீக சொத்துக்கள் நகை நட்டுகள் குவிந்து கிடக்கிறது. இதையெல்லாம் ஆள ஒரு ஆண்பிள்ளை இல்லாத குறை ஒன்றே அவர்கள் குறை. மற்றதுக்கு எல்லாம் சுக்கூர் அல்லா!

ஆண்பிள்ளை கேட்டு தவமா தவமிருந்தார்கள். பெண்பிள்ளை ஒன்றுக்கு பிறகு தாய் வயிற்றில் பூச்சிபுழு எதுவும்உசும்பவில்லை. காட்டாத டாக்டரிடமெல்லாம் காட்டினார்கள். திங்காத மருந்தெல்லாம் திண்டார்கள். போகாத பள்ளிவாசல் இல்லை. நேராத நேத்திக் கடன் இல்லை. காசை காசென்று பார்க்காமல் தண்ணீர்’ செலவு செய்தார்கள். ஒன்றும் கைகூடவில்லை. ’கல்லசை-என்னசை’ என்று சொல்லி விட்டது அடிவவுறு. ஆம்புளே வாரிசு இல்லே. பொம்புளே புள்ளே ஒன்னே ஒன்னுதான். ‘’தலைலே போட்டு வச்ச விதி யாராலே   மாத்த முடியும்’! என்று சும்மா இருந்து விட்டார்கள். திரண்டு கெடக்கும் எல்லா சொத்துக்கும் ஒரே ஒரு பெண் பிள்ளைதான் வாரிசு. குடும்பம் ஓடியது.

வீட்டில் பெரிய கொல்லை. அங்கே ஒரு கீத்து கொட்டகை! கறுக்கு மட்டையில் செய்த படல் [கதவு] கொட்டகைக்குள் ஒரு வயதான கிழவி. வயது எழுபத்தைந்து அல்லது எழுபத்து ஏழு இருக்கும்.

வீட்டுக்கார  அம்மா ஒரு மண்சட்டியில் சோறும் சோத்துக்கு மேலேகறியும் ஆணமும் ஊத்தி கிழவிக்கு கொண்டு போய் கொடுக்கும். யார் அந்த கிழவி என்று பெண் பிள்ளைக்கு தெரியாது. கிழவி ‘கருப்பா? செவப்பா? கட்டையா? நெட்டையா?’ என்றும் தெரியாது!. யாரோ ஒரு வயதான கிழவி!. பொம்புளைக்கு வயசானா அவகிழவிதானே!

ஒருநாள் ‘’நீ சோறு போடுறீயே! அந்த கெளவி யாரும்மா?’’ பிள்ளை கேட்டது. 

’’அதெல்லாம் தெரிஞ்சு நீ என்ன பண்ணப் போறே? பேசாமே போயி உன் வேலையைப் பாரு!’’ அம்மாவின் காட்டமான பதில்! 

சில நாள் கழித்து பொம்புளே புள்ளே அதே கேள்வியை திரும்பவும் கேட்டது ’’என்னா? நீ கிளிப்பிள்ளை மாதிரி கேட்டதேயே கேட்டுகிட்டு இருக்கே? ஒருக்கா சொன்னா தெரியாதா?” பிள்ளை மேல் அம்மா எரிஞ்சு விழுந்தாள்! பிள்ளை ஒன்னும் பேசாமே வாயை மூடிகிட்டு போச்சு!

இன்னும் சில நாள் கழித்து புள்ளே அதே கேள்வியை கேட்டது.

அம்மாவின் அதே பதில் வந்தது. ஆனால், பிள்ளையோ அம்மாவின் பதிலைக் கேட்டு வழக்கம் போல் சும்மா இருக்கவில்லை. வயசு வந்துடுச்சுல்ல! சும்மா இருக்குமா?’’ நீ பதில் சொன்னாத்தான் சோறு உம்பேன்!. இல்லேனா பட்டினி கிடப்பேன்! பள்ளிக்கூடம் போக மாட்டேன்.” என்று சத்தியாகிரக அறிக்கை வெளியிட்டது.

உண்ணாவிரதம் தொடங்கியது.. “பசி தாங்க மாட்டா! இன்னும் கொஞ்ச நேரஞ்செண்டு போட்டுக் கொடுத்தா பேசாம வாயே மூடிகிட்டு உண்டுட்டு போயிடுவா!” என்று தாய் போட்ட கணக்கு தப்பா போச்சு! உண்ணாவிரதம் போல் தொடர்ந்தது.

இது சென்னை அண்ணா சிலையில் இருக்கும் உண்ணாவிரதம் அல்ல!. 

காலை ஆறு மணிக்கு தொடங்கி ஆறு இருபத்தொரு நிமிஷத்திலேயே முடித்து ஆறே முக்காலுக்கு வீட்டுக்கு பிரேக் பாஸ்ட் எடுக்க போகும் உண்ணாவிரதம் அல்ல!?  [அதாவதுBed-Coffeeகும் Break-fastக்கும் இடையே கொஞ்சம் மெரீனா காத்து வாங்கும் உண்ணாவிரதம் அல்ல!]

இது வீட்டிற்குள் நடந்த உண்ணா நோன்பு! அங்கே வங்க கடலோரம் தங்க மனம் கொண்ட அண்ணா துயில் கொள்ளும் அண்ணாசமாதியும், அவரின் சிலையும் இல்லை. மெரீனா பீச்இல்லை!.

இந்த சிறு பெண் பிள்ளையின் உண்ணாவிரதம் எதிர்வரும் தேர்தலில் ஒட்டு வாங்க வியூகம் வகுத்து மேற்கொண்ட ‘கண்கட்டி’ உண்ணாவிரதம் அல்ல! ஒரு வயதான மூதாட்டிக்கு தன் தாய்-தந்தையரே இழைக்கும் கொடுமையை எதிர்த்து நடத்தும் மனித உரிமை போராட்டம். ஒரு மணி நேரம் தொடர்ந்தது உண்ணா நோம்பு!

தாய் மனம் அல்லவா! பத்து மாதம் சுமந்து தவமிருந்து பெத்த பிள்ளையாச்சே! தாய் மனம் கேக்குமா! மகளின் பசி பார்த்து தவித்தது தாய் மனசு. “சோத்தை உண்ணு! நான் சொல்றேன்!” சொன்னது தாய். 

’’ஊஹூம்! முடியாது; முதலில் நீ சொல்! பிறகு நான் உன்கிறேன்!” இது பிள்ளையின் குரங்கு பிடி!

தாயின் ’பாச்சா’ பெற்ற பிள்ளையிடம் பலிக்கவில்லை. ‘’சரி! சொல்றேன் கேளு!” தாய் தொடங்கினாள் அந்த கதையை. 

“நான் சின்ன புள்ளையா இருந்தப்போ இந்த பொம்புளே இங்கே வேலை தேடி வந்தாளாம். ’’உம்மா, வாப்பா சொந்தகாரங்க யாருமில்லே; நான் ஒரு அநாதை ஆதரிப்பார் யாருமில்லே! உன்கச் சோறும், உடுத்த துணியும், தங்க இடமும் தாங்க! நேரங்காலம் பாக்காமே சொன்ன வேலையும் பாக்குறேன்; சொல்லாத வேலையும் பாக்குறேன்னு சொல்லி வேலை கேட்டு உன் பாட்டியோட காலை கட்டி புடிச்சு அழுதாலாம்! பார்த்தா இரக்கமா இருந்துச்சாம்! உன் பாட்டி வேலைக்கு சேர்த்துக்கிட்டா. அன்னேயிலேயிருந்து அவ நம்ம ஊட்டுலே வேலை செஞ்சுக்கிட்டு இருக்கா.

எனக்கு கல்யாணம் கொஞ்ச நாளைலே உன் பாட்டிக்கு ஏலாமை வந்து படுத்த படுக்கையா கெடந்தா! எல்லாத்தையும் இவதான் பாத்தா! ஒருநாள் என்னை கூப்பிட்டு, அந்த வேலக்காரி நம்மாலே நம்பி நம்மட்டேயே இருந்துட்டா! அவளே நீ நல்லா வச்சுக்கோ! அவளுக்கும் வயசாச்சு! ஏலாமை எடஞ்சல் எதுவந்தாலும் காசு பணத்தை பார்க்காமே நல்ல டாக்டர்ட்டே காட்டு! அல்லாஹ்வோட விதி வந்து அவ மவுத்தா போனா நல்லபடியா மையத்து எடுத்துடு’’ண்டு உன் பாட்டி ஒசியத்து சொல்லிட்டு கண்ணை மூடிட்டா! ஒன் பாட்டி போன ரெண்டு மூனு வருசத்திலே இவளும் கொணங்கிட்டா!” என்றுஉம்மா சொன்னாள்!

‘கொணங்கிட்டா’  என்றால் என்னாமா?’’ பிள்ளை கேட்டது.

‘’அதா?! வயசாயி சீக்கு வந்து வேலை செய்ய முடியாமே போறது!’’ அம்மா சொன்னாள்.

’’கொஞ்ச நாள்ளே அவளுக்கு ஒடம்பெல்லாம் எலைக்க ஆரம்பிச்சுடுச்சு. ‘லொக்கு-லொக்கு’ இரும வேறே வந்து இருமி-இருமி கண்ட-கண்ட எடத்துலே எச்சியே துப்புனா! டாக்டர்டே கொண்டுபோய் காட்டி என்னாண்டு கேட்டோம். டாக்டர் டிகிரி வச்சு பாத்துட்டு ‘டிபி’ண்டு சொன்னாரு’’.

டி.பி.ண்டா என்னா?’’ண்டு கேட்டோம். ’’அதா! அது காச நோய்! ஒரே இருமலா இருமும். சளி சளியா வாயாலே கக்கும். கெட்ட சீக்கு கிட்டே யாரும் போகாதீய. ஒட்டிக்கிடும்’’ என்றார்.

அதான் அந்த பொம்புலேயே கொல்லையிலே கொட்டகை போட்டு தனியா வச்சுருக்கேன்! நீ கிட்டே போயிடாதே! ஒட்டிக்கிடும்’’ என்று அம்மா சொன்னாள்.

இதைக் கேட்ட பிள்ளை தன் ஒன்னரை மணி நேர உண்ணாவிரதத்தை ‘கை’விட்டு செம்புலே இருந்த தண்ணியிலே கை கழுவி சோறு உண்டது. எல்லா உண்ணாவிரதமும் ஆக கடைசியில் ‘கைவிடப்பட்ட’ அநாதை ஆகிப்போச்சு! பாவம் உண்ணாவிரதம்!. உண்ணாவிரதம் முடிஞ்சா அடுத்தது உங்கிற வேலைதானே உண்ணாவிரதம் இருந்துட்டு சோத்துலே உக்காந்தா நல்லா ஒரு புடிபுடிக்கலாம். தன் சொந்த வவுத்தே Activate பண்றதுக்குதான் தலைவைங்க உண்ணாவிரதம் இருக்கான்யா!

’’நான் ஜோடித்து சொன்ன   பொய் நல்லா வேலை செஞ்சுருச்சு’’ தாய் மனசுக்குள்ளேயே சந்தோஷபட்டுகிட்டா! பொய் எப்பொழுதும் தன்னை தானே அலங்காரம் செய்தே மற்றவரை கவரும்.

கொஞ்ச நாள் ஓடியது. ஒரு நாள் உம்மா, வாப்பா, மகள், எல்லோரும் ஷாப்பிங் போனார்கள். விலை உயர்ந்த சாமான்களை வாங்கினார்கள். பிறகுஒருசட்டி-பானை கடையில் ஒரு மண்சட்டியும் வாங்கினார்கள்.

அம்மா கையில் மண்சட்டி இருப்பதை கண்டபிள்ளைக்கு ஆச்சரியம்! ’எப்பொழுதுமே விலைஉயர்ந்த சாமான்களை வாங்கும் உம்மா இன்று ஏன் மண் சட்டி வாங்கியது?’ என்ற கேள்வி எழுந்தது .’’ஏம்மா இந்த மண்சட்டி வாங்குனே?’’

‘’நம்ம ஊட்டு கொல்லைலே கிடக்குறாள்ல ஒருகிளவி அவளுக்குத்தான்! பழைய சட்டியே ஓடச்சுப் புட்டலாம்!. அதான் புது சட்டி வாங்கியாந்தேன். இப்புடி வருசத்துக்கு அஞ்சாறு சட்டி ஒடச்சு ஒடச்சு குமிக்கிது., ஒரு நாளைக்கி மூனு நாலு சட்டிசோறு திண்டு அழிக்கிது! எப்போ சாவுவாளோ’? அள்ளி போட்டு பொதச்சுட்டு அல்லான்டு நிம்மதியா உக்காரலாம்!’ என்று உம்மா அலுத்துக்கிட்டா!

மாதங்கள் பல ஓடியது. உம்மா, வாப்பா, மகள் – மூவரும் ஷாப்பிங் போனார்கள். வீட்டுக்கு தேவையான சாமான்கள் வாங்கினார்கள்.

’’உனக்கு ஏதும் தேவைப்பட்டால் வாங்கி கொள்ளேன்’’ மகளிடம் தாய் சொன்னாள்.’ ’’’ஆமாம் நானும்தான் வாங்கணும்!.’ இங்கேயே கொஞ்சம் நில்லும்மா! நான் போய் வாங்கி வருகிறேன்’ என்று மகள் எங்கேயோ போனாள். கொஞ்ச நேரம் கழித்து திரும்பினாள்! கையில் இரண்டு மண்சட்டிகள் இருந்தது.

மகள் கையில் மண்சட்டிகளை கண்ட தாய்க்கும் தந்தைக்கும் மனதுக்குள்ஒரு குழப்பம். ’’இந்த ரெண்டு மஞ்சட்டியும் கெளவிக்கா? நாந்தான் அன்னிக்கே வாங்கிட்டேனே! நீ வேறே எதுக்கு வீணா ரெண்டு சட்டிவாங்குனே!’’ என்று அம்மா கேட்டாள். ‘’அந்த கெழவிக்கு நான் வாங்கலேம்மா! அவளுக்குத்தான் நீ வாங்கி கொடுத்துட்டியே!’’ என்று மகள் சொன்னாள்.

’’பின்னே! இந்த ரெண்டு சட்டியும் ஏன் வாங்குனே?’’ அம்மா கேட்டாள்! இன்னும்கொஞ்ச காலத்துலே நம்ம ஊட்டுக்கு ஒரு கெழவியும் கெழவனும் வரப்போறாங்க! அவங்களுக்கு கொடுக்கத்தான் இதை வாங்கினேன்’’ என்று மகள் சொன்னது.

வாப்பாவுக்கும் உம்மாவுக்கும் பிள்ளை சொல்வது ஒன்றும் புரியாமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். ’’நீ என்னம்மா சொல்றே? ஒன்னும் புரியலேயே? ’இன்னும் கொஞ்ச காலத்துலே நம்ம ஊட்டுக்கு வர்ற! கெழவனும் கெழவியும்யாரு?’’ என்று அம்மா கேட்டாள். 

‘’ஒ! ‘அந்தக் கெழவன் கெழவி’ யாருன்னு கேக்றியா? அது வேற யாருமில்லேம்மா! அது நீயும் வாப்பாவும்தான். நீங்க கெழவன்-கெழவியானதும் உங்களை கொட்டகையில் அடைத்து சோறு போடத்தான் இந்த ரெண்டு மண்சட்டியேயும் வாங்கினேன்’’ என்று பிள்ளை சொன்னது.

இதைகேட்டு தாயும் தந்தையும் திடுகிட்டார்கள். ’’என்னாது? நீ எங்களை கீத்துக் கொட்டகையில் அடைத்து மண்சட்டியில் சோறு போடப்போறியா?’’ அம்மா ஆச்சரியத்துடன் கேட்டாள்.

.’’ஆமாம் அம்மா!’’ இது மகளின் அமைதியான பதில்.’ ‘’பெத்து பாலுட்டி செல்லமா வளத்த எங்களுக்கா நீ பிச்சைகாரர்களுக்கு சோறு போடுவது போல் சோறு போடப்போறே?’’ என்று நீ கேக்குறே இல்லையா? நம்ம ஊட்டு கொல்லைலே கொட்டகை போட்டு ஒதுக்கி வச்சு எல்லாரும் திண்டு மிஞ்சின கடைசி சோத்தை நாய்க்கி போடுறது போல ஒருவயதான பொம்புலைக்கு போட்டியே ‘அவயாருன்னு எனக்கு தெரியாது’ன்னு நெனச்சுயா?அவதான் பத்துமாதம் சுமையா சுமைசுமந்து உன்னை பெற்றெடுத்த தாய்!.

ராத்தூக்கம் பாக்காமே பகத்தூக்கம் பாக்காமே படாத பாடுபட்டு உன்னை வளத்த தாய்! ‘’அவ ஒரு வேலக்காரி. அவளுக்கு காச நோய் அவ கிட்ட போகாதே!’’ என்று என்னிடம் சொன்னா! ஆனா அது நீ கட்டிய பொய் கதை. ஒருநாள் நீவீட்டில் இல்லாத நேரம் கொட்டகைக்கு போய் பேசினேன். அவங்க ஒன்னு விடாமே எல்லாத்தையும் புட்டுபுட்டு வச்சுட்டாங்க !உன் பகட்டு வாழ்கைக்கு இந்த பொக்கை வாய்காரி வீட்டு நடு கூடத்தில் இருந்தது கௌரவ குறைவா இருந்துச்சு அதுனாலே கொல்லைப் பக்கமா ஒதுக்கிட்டே சரிதானா? நீ ஒன் தாய்க்கு செய்த கொடுமையே உனக்கு செய்யவே இந்த மண்சட்டி! இது ஆரம்பம்’’ என்றது பிள்ளை.

அம்மாவின் கண்ணில் நீர் ஓடியது. ‘’நீ சொன்னதெல்லாம் உண்மை! நீ கொடுக்கும் தண்டனையே எனக்கு கொடு! அந்த தண்டனைக்குரியவள் நான்’ என்றாள் அம்மா.

உனக்கு தண்டனை கொடுப்பதும், அல்லது மன்னிப்பதும் உன் தாயின் கையிலேதான் இருக்கிறது!வீட்டுக்கு வந்து உன்தாயிடமே மன்னிப்புகேள்!’’என்றாள்மகள்.

வீட்டுக்கு வந்த மூவரும் நேரே கொட்டகைக்குள புகுந்தார்கள். தரையில் பனை ஓலை பாயில் அம்மா நன்றாக தூங்கி கொண்டிருந்தாள். அம்மா கிட்டே சென்று’’அம்மா! அம்மா!’’ என்று கூப்பிட்டாள்.

பதில் இல்லை மகள் மீது அம்மாக்கு கோபமோ! அல்லது நல்ல தூக்கமோ! உசிப்பினாள். 

அம்மா எழுந்திருக்கவில்லை, கண் திறந்து மகளை பார்க்கவில்லை. அம்மாவின் கண்களிலிருந்து ஈக்கள் பறந்தது. விழித்த விழிகள் விழித்தபடி இருந்தது.’’ அம்.......மா....ஆஆஆஅ.......!!!!!!!.’’அம்மா!  தாருல் பனாவை விட்டு தாருல் பக்ரா சென்று விட்டாள்.

இன்னா லில்ஹி வஇன்னா இளைஹி ராஜூவுன். இன்னும் ஒரு மணிநேரம் அம்மா  தாமதித்திருந்தால் மகளுக்கு சொர்கத்தின் கதவுகள் திறந்தே இருந்து திருக்கும். இன்னும் ஒருமணி நேரம் மகளே முந்தி இருந்தாலும் சொர்க்கத்தின் கதவுகள் மூடாமல் திறந்தே இருக்கும். இதில் முந்தியது யாரோ? பிந்தியது யாரோ?விடை காணமுடியாத கேள்விகள்!

ஆனால் அல்லாவின் அழைப்பு யாருக்காகவும் காத்திருப்பதுமில்லை; முந்திக் கொள்வதும் இல்லை. ஒரு மண்சட்டி உடைந்தது.

இன்னும் எத்தனையோ சட்டிகள் உடைய காத்திருக்கிறது. அவைகள் மண்ணிலிருந்தே வந்தது!. மண்ணுக்கே போகும்!

S.முஹம்மது ஃபாருக்

முதுமை என்பது, ஒரு குழந்தைப் பருவம்! 2

அதிரைநிருபர் | June 21, 2013 | , ,

என் பெற்றோர் என்னைச் சந்திக்க வந்துவிட்டு, ஒரு வியாழக்கிழமை அன்று ஊருக்குத் திரும்பிச் செல்ல ஆயத்தம் செய்துகொண்டிருந்தார்கள். அவர்களை விடைகொடுத்து அனுப்புவதற்காக நாங்கள் விமான நிலையத்திற்குச் செல்ல ஆயத்தமானோம். உண்மையில், அவர்கள் ஊருக்கு விமானத்தில் திரும்பிச் செல்ல இருக்கிறார்கள் என்பது, அவர்களுக்குத் தெரியாது. என் பெற்றோர், அதுவரையில் விமானப் பயணமே செய்ததில்லை! எனவே, இம்முறை விமானப் பயணத்தின் சுகானுபவத்தில் அவர்கள் திளைக்கட்டும் என்று முடிவெடுத்து, அவர்களுக்கான இருக்கையை உறுதிப்படுத்திவிட்டுத்தான், என் தந்தையாரிடம் விமானப் பயணச்சீட்டை நீட்டினேன்.

என் தந்தையின் முகத்தில் பளிச்சிட்ட வியப்பையும் ஆனந்தத்தையும் கண்டு மகிழ்ந்த நான், விமானம் பறக்கும் உயரமென்ன, அதைவிடப் பன்மடங்கு உயரப் பறந்தேன்! பள்ளிச் சிறுவன் ஒருவனைப்போல், அவர் தான் எடுத்துச் செல்லவேண்டிய பொருள்களை ஒவ்வொன்றாக எடுத்து வைத்துக்கொண்டிருந்ததும், தனது சாமான்களை ஏற்றிக்கொண்டு உருட்டிச் செல்லும் 'ட்ராலி'யை நகர்த்திப் பார்த்ததும், நாங்கள் விமான நிலையத்தை அடைந்த பின்னர் பயணிகளின் பரிசோதனைக்காகக் காத்திருந்ததும், தனக்குச் சாளர இருக்கை (Window seat) கேட்டுப் பெற்றதும் ஆகிய அவருடைய ஒவ்வொரு அசைவும் என்னைக் குதூகலிக்கச் செய்தது.

இறுதியாக, எங்களுக்கு விடைகொடுத்துவிட்டு விமானத்தில் ஏறும் நேரத்தை அடைந்தபோது, என்னை நோக்கி வந்த அவருடைய முகத்தைப் பார்த்தேன்; அவர் கண்கள் பனித்தன! "Thanks my dear son" என்று அவர் கூறியபோது, அவருடைய அதரங்கள் துடித்தன! அவருடைய நன்றிக்கு ஆயிரம் பொருள்கள் கூறலாம்! நான் செய்ததோ, ஒரேயொரு உதவிதான். அதன் பயனை உணர்ந்த அந்தத் தந்தையின் உள்ளமோ, அதற்காக அயிரமாயிரம் நன்றிகளை அள்ளித் தந்துகொண்டிருந்தது!

அவர் எனக்கு நன்றி கூறியபோது, எனது அந்தச் சாதாரண உதவிக்காகத் தந்தையிடமிருந்து இத்துணை உணர்வுகளின் வெளிப்பாடா என்று வியந்து நின்றேன்! "எனக்கு ஏனப்பா இவ்வளவு நன்றிப் பெருக்கு?" எனக் கூறி எனது தாழ்மையை வெளிப்படுத்தினேன். அடுத்த வினாடியில், எனது கடந்த கால வாழ்க்கையின் எல்லா விதமான நிகழ்வுகளும் என் இதயத்தில் படங்களாக விரிந்தன:

நாம் குழந்தைகளாக இருந்தபோது, பெற்றோர் நம்முடைய எத்தனைக் கனவுகளை நனவுகளாக்கினர்! அவர்களின் பொருளாதார நிலைபற்றி அறியாமல், நாங்கள் கிரிக்கெட் மட்டை வாங்கிக் கேட்டோம்; வாங்கித் தந்தார்கள். விதவிதமான ஆடைகள், விளையாட்டுச் சாதனங்கள் எல்லாம் வாங்கித் தந்தார்கள். புதுப்புது இடங்களைக் கண்டு களிக்கச் செய்தார்கள். அவர்களின் பொருளாதார வசதியைப்பற்றி எங்களுக்கேது கவலை? எங்களுக்கு எங்கள் ஆசைகள் நிறைவேறவேண்டும்; அவ்வளவுதான். அவற்றை நிறைவேற்றித் தருவதற்காக அவர்கள் என்னவெல்லாம் தியாகங்கள், அர்ப்பணிப்புகள் செய்தார்கள் என்பது பற்றியெல்லாம் நாங்கள் சிந்தித்துப் பார்த்தோமா? அல்லது, அவர்கள் நிறைவேற்றித் தந்த எங்கள் விருப்பங்களுக்காக எப்பொழுதாவது அவர்களுக்கு நாங்கள் நன்றி சொன்னோமா?

இது போன்றே, இன்று நாங்கள் எம் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக, அவர்களைத் தரமான பள்ளிகளில் சேர்த்துப் படிக்க வைக்கிறோம். அதற்கான செலவுகளைக் கணக்குப் பார்ப்பதில்லை. அவர்களுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து, நம்மைப்பற்றிப் பெரிதாக எண்ணிக்கொள்ளும் அதே வேளை, நம்மை உயர்நிலையில் ஆக்க நம்முடைய பெற்றோர்கள் என்னவெல்லாம் தியாகங்கள் செய்திருப்பார்கள் என்பதை நினைத்துப் பார்க்கத் தவறிவிடுகின்றோம்!

என் சிறு வயதில் என் பெற்றோர் என்னிடம் கேட்ட பல கேள்விகளுக்குப் பொறுமையில்லாமல் பதில் சொல்லியிருக்கிறேன். அப்போதெல்லாம், அவர்கள் என்னைப்பற்றி என்ன நினைத்திருப்பார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால், இப்போது என் மகள் கேட்கும் கேள்விகளுக்கு நான் மிகவும் அடக்கமாகவும் அமைதியாகவும் பதில் கூறுகின்றேன். இப்போதுதான் நமக்கு உணர்வு வருகின்றது, முதுமை என்பது மற்றொரு குழந்தைப் பருவமாகும் என்று. எனவே, நாம் நம் குழந்தைகளைப் பாசத்துடன் பராமரிக்கும் விதத்திலேயே நம் பெற்றோர்களையும் முதியவர்களையும் நோக்கவேண்டும்.

நம் குழந்தைகள் வந்து நம்மிடம் கேள்விகள் கேட்கும்போது, செய்தித்தாளைப் படித்துக்கொண்டிருக்கலாம். அப்போது, அவர்களின் முகத்தை நோக்கிக் கனிவாக பதில் கூறுவதற்குப் பகரமாக, ஒரே வார்த்தையில் பதில் கூறி அவர்களை விரட்டிவிடக் கூடாது.

"Thanks!" என்ற சொல்லைக் கூறி, என்னை இவ்வளவு தூரம் சிந்திக்கச் செய்துவிட்ட என் தந்தையை, அவருக்கு இன்பத்தைத் தரும் இந்தப் பயணக் கனவை நனவாக்கிக் கொடுக்க இவ்வளவு நாட்கள் காத்திருக்க வைத்துவிட்டேனே என்ற குற்ற உணர்வால் கூனிக் குறுகி நின்றேன் நான். எனக்கு நன்றாகத் தெரியும், அவர்கள் என்னை உயர்த்தி வைத்துப் பார்ப்பதற்காக என்னவெல்லாம் தியாகங்கள் செய்திருப்பார்கள் என்று. எஞ்சியிருக்கும் நாட்களில் அவர்களின் எல்லாத் தேவைகளையும் நிறைவேற்றிக் கொடுப்பேன் என்று இவ்வேளை நான் எடுக்கும் உறுதிப்பாடு நிலைத்திருக்கவேண்டும், அவர்களின் மரணத்தின் பின்னரும்!

அவர்கள் முதுமையை அடைந்துவிட்டதால், அவர்களின் இதய வேட்கைகளைத் தியாகம் செய்துவிட வேண்டும்; அவர்களின் பேரப்பிள்ளைகளின் பராமரிப்பில் தங்கள் எஞ்சிய காலத்தைக் கழிக்கவேண்டும் என்பது கருத்தன்று. அவர்களுக்கும் ஆசைகள் இருக்கத்தான் செய்யும்! எனவே, உங்கள் பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுங்கள்! அவர்கள் விலைமதிப்பற்ற சொத்தாவர்!

'Human Relations' என்பது பற்றிய கருத்தாய்வு நிகழ்ச்சி ஒன்றில், Indian Institute of Technologyயில் பணி புரியும் திரு வி. பாலசுப்ரமணியன் அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவிலிருந்து.

தகவல்: அதிரை அஹ்மது

இது ஓர் மீள்பதிவு : - அன்று இது அதிரைநிருபருக்கு கன்னிப் பதிவு !
20-Jun-2010

புள்ளையலுவோ பரீட்சைக்கு படிக்குதுவோமா ! 21

அதிரைநிருபர் பதிப்பகம் | February 22, 2012 | , , , , ,


ஊட்டு பிள்ளைகளை நன்கு படிக்க விடுங்கள் / தூண்டுங்கள்....

மாணவ, மாணவியர்களுக்குத்தான் எல்லாரும் தன்னால் இயன்ற அறிவுரைகளையும் கடந்த கால நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு வழங்கி வருகிறோம். ஆனால் அதற்கு முன் அவர்கள் எவ்வித தொந்தரவும், தொல்லைகளும், தடைகளுமின்றி தன் தேர்வை நல்லபடி எழுதி முடிக்க வீட்டில் உள்ள அப்பா, பெரியம்மா, வாப்பா, உம்மா, ராத்தா, தங்கை, தம்பி, தங்கிச்சிமார்கள் அவர்களுக்கு உறுதுணையாகவும், உதவியாகவும் தேர்வுகள் முடியும் வரை எவ்வித தொந்தரவும் செய்யாதவர்களாகவும் இருத்தல் மிக,மிக அவசியமான ஒன்று. 

கீழே குறிப்பிட்ட படி தொந்தரவுகள் செய்யக்கூடாது.

* தம்பி செத்த கடெக்கி போயி சாமானுவொ கொஞ்சம் வாங்கிட்டு வர்ரியா?

* போனு பண்ணியும் வரலெ செக்கடிமோட்லெ போயி ஆட்டோ புடிச்சிட்டு வர்ரியா புள்ளெ பெத்த ஊட்டுக்கு சீனி வாங்கிட்டு போகனும்?

* வாப்பா வெளியெ போயிட்டாஹ, கொஞ்சம் கூப்பன் கடையிலெ சாமான் வாங்கி தர்றியா?

* ராத்தாக்கு ஒடம்பு சரியில்லெ ஆஸ்பத்திரி வரைக்கும் தொணைக்கி வர்றியா? (அமெரிக்காவரைக்கும் தனியா போயிட்டு வரத்தெரியுது?)

* வண்ணான்ட்டெ துணி போட்டிக்கிறேன் கொஞ்சம் வாங்கித்தந்துர்ம்மா வாப்பா?

* ஊட்லெ வேலெ செய்றவ இன்னிக்கி பாத்து லீவு போட்டுட்டா கொஞ்சம் கடெத்தெருவுக்கு போயி மீனு வாங்கி தர்றியா?

* மாமா ஊடு குடி போறாஹ, காலைப்பசியாற போயிட்டு வந்துரு போவாட்டி கோவிச்சிக்கிடுவாஹ. (பரிச்சையிலெ ஃபெயிலாப்போனா கோவிச்சிக்கிட மாட்டாஹளா?)

* ராத்தாடெ புள்ளெயெ தூக்கிட்டு போயி சங்கத்துலெ போலியோ சொட்டு மருந்து கொடுக்குறாஹெ போயி போட்டுட்டு வந்துர்மா வாப்பா?

* வர்ர வழியிலெ தங்கச்சி பென்சிலும், அலி லப்பரும் வாங்கி கேட்டா வாங்கிட்டு வந்துர்ம்மா மறந்துராமெ?

* தஞ்சாவூர்லெ எக்ஸ்பிசன் போட்டிக்கிறானுவொ ராத்தம்மாவூட்லெ எல்லாரும் காரு புடிச்சி போறாஹ நாமலும் போயிட்டு வருவோம் அங்கெ சாமானுவொ வெலெ கொறஞ்சி விக்கிம் வாடா போயிட்டு வந்துர்லாம்?

* பைப்பு ஒடஞ்சி போச்சி போயி கபீராக்கா மொவனெ கூட்டிக்கிட்டு வர்றியா?

* தையல்காரன்ட்டெ துணி தக்கெ கொடுத்து பத்து நாளாச்சி. போயி வாங்கிட்டு வந்துர்றியா?

* பஞ்சாயத்து போர்ட்லேர்ந்து வந்து மைக்குலெ சொல்லிட்டு போயிட்டாங்க, செத்த அங்கெ போயி தண்ணி பில்லும், ஊட்டு வரியும் கட்டிட்டு வந்துர்ம்மா வாப்பா? (பரிச்சையிலெ ஃபெயிலா போயிட்டா ஹாஜி முஹம்மது சாரு அடிப்பாருண்டு யான் அவ்வொளுக்கு தெரியமாட்டிக்கிது?)

* நாளையோட கெரண்டு பில்லு கட்ட கடைசி நாளு, இன்னெக்கி எப்புடியாவது கட்டிட்டு வந்துரும்மா? இல்லாட்டி அபராதம் போடுவாஹ. (பரிச்சையிலெ ஃபையிலா போயிட்டா வாழ்க்கையே அபராதமா போயிடும்ண்டு அவ்வொளுக்கு தெரியாதா?) கெரண்ட்டே இருக்கிறது இல்லெ...இதுலெ பில்லு வெற கட்டணுமாக்கும்? என்று அவன் முணங்குவது எல்லோர் காதுகளுக்கும் நிச்சயம் கேட்கும் என்று நெனெக்கிறேன்.

* கெரண்டு அடிக்கடி போறதுனாலெ தண்ணி மோட்டாரும் காயிலு அடிவாங்கி வீணாப்போச்சி, செத்த மோட்ரு எசவு பண்ரவனெ கூட்டிக்கிட்டு வர்றியா?

* ஊட்லெ நெத்தா உழுந்துக்கிட்டு ஈக்கிது, தேங்காய்ப்பறிக்கிறதுக்கு ஊடு, ஊடா வந்துக்கிட்டு ஈந்த அந்த ஆளும் செத்துப்போயிட்டானாம். கொஞ்சம் சேர்மாவாடியிலெ காலையிலெ சுபோடெ போயி ஆளு நிக்கிம் கூட்டிக்கிட்டு வந்துர்றியா? தேங்காய் இல்லாததுனாலெ அடுத்த ஊட்லெ கடன் வங்கனுமா ஈக்கிது? (சுபோடெ படிக்கனும்ண்டு நெனெக்காம தேங்காய் ஞாபகத்துலேயே புள்ளெ படுக்குறதுனாலெ ராத்திரி கனவுல கூட தேங்காய் கொலையா வந்துட்டு போவும்)

* வர்ர வழியிலெ மீரா மெடிக்கல்லெ கொஞ்சம் மாத்திரெ வாங்கிட்டு வந்துரு? பட்டுக்கோட்டையிலெயே நேத்து கெடக்கலெ வாப்பா சொன்னாஹெ. 

* மொபைல்லெ காசு முடிஞ்சி போச்சி (கதகதையா அளந்தா வேற என்னா செய்யிம்?) கடெத்தெருவுலெ மீனு வாங்கிட்டு வரும் போது நூறு ரூபாக்கி ஈ.ஸி. போட்டுட்டு வந்துரு மறந்துராமெ?

* சத்துக்கொறவா ஈக்கிது ஆட்டுக்காலு சூப்பு வச்சி தர்ரேன். கறிக்கடையிலெ கொஞ்சம் நெஞ்செலும்பும், காலும் வாங்கிட்டு வந்துரு.

* இன்வன்டரு பேட்டரி சர்வீஸ் பண்ண ஊட்டுக்கு ஆளு வரும் போன் பண்ணுனானுவொ வந்தா கொஞ்சம் கூட இருந்து பாத்துக்கோ.

* பேரனுக்கு (ராத்தா மொவன்) நாளெக்கு பள்ளிக்கொடத்துலெ ஆண்டு விழாவாம். அவனுக்கு அதுலெ கலந்துக்கிறதுக்கு கொஞ்சம் சாமானுவொ வேனும்ண்டு டீச்சர் சொல்லி அனுப்பி ஈக்கிறாஹெ. அந்த சாமான்வொலெ கொஞ்சம் மெயின் ரோட்ல உள்ள கடையிலெ போயி வாங்கி தந்துரும்மா வாப்பா.

* பெரியம்மாவுக்கு ஒரே ஓங்காரமா ஈக்கிது கொஞ்சம் நாட்டு மருந்து கடெயிலெ போயி கொஞ்சம் சாமானுவொ வாங்கிட்டு வா. அவ்வொளுக்கு குடிநி போட்டு கொடுத்தா நல்லாப்போயிடும்.

இப்படி படிப்பைத்தவிர ஏஹப்பட்ட வேலைகளை அவர்கள் மேல் அசராமல் ஏவி விட்டு தேர்வுக்கு தயாராகும் உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கும், அவர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கும் நீங்களே எதிரியாக அவர்களின் எதிர்காலத்தை பாழாக்கி விடாதீர்கள்.

கடெசியிலெ, அல்லாஹ் இந்த புள்ளையலுவொலெ நல்லா படிக்க வச்சி, பாஸாக்கி, வாப்பா மாரி கஸ்டப்படாமெ, பெரிய உத்யோகத்துக்கு போயி ஊட்டு கஸ்டமெல்லாம் தீரட்டும் என்று து'ஆ மட்டும் செய்ய மறக்கிறது இல்லெ.....

பரிச்சையிலெ புள்ளையலுவொ ஃபெயிலாப்போனாலோ அல்லது மார்க்கு கொறச்சி வாங்குனாலோ அது தெரிஞ்சா மொதல்ல அப்பா உங்களத்தான் ஏசுவாஹ....புள்ளையலுவொலெ இல்லெ.....தெரிஞ்சிக்கிடுங்க....ஊட்டு புள்ளையலுவொலெ  செரமம் கொடுக்காம நல்லா படிக்க வைங்க...பிறகு அதன் பலாபலன்களை நீங்களும் அனுபவிப்பீங்க......இன்ஷா அல்லாஹ்...

பரீட்சை எழுதின மாதிரி ஒரே டயர்டா ஈக்கிது.... தேத்தண்ணி குடிக்கனும்... வரட்டா....

-மு.செ.மு. நெய்னா முஹம்மது

பெற்றோர்களே ! 10

அதிரைநிருபர் | July 01, 2011 | , , ,

வயசுக்கு வந்த பிள்ளையை வளர்க்க வேண்டியது அம்மாவோட பொறுப்பு என நைஸாக நழுவும் அப்பாவா நீங்கள்? கொஞ்சம் நில்லுங்கள். உண்மையில் உங்கள் டீன் ஏஜ் மகளுக்கு அம்மாவை விட அதிகம் தேவை நீங்கள் தான். திருதிருவென்று முழிக்காதீங்க... உறவு முறைகளிலேயே மிகவும் அழுத்தமானது தந்தைக்கும் மகளுக்குமுள்ள உறவு தான் என்கிறார் ஒரு .ஃபிரான்ஸ் நாட்டு அறிஞர்.


தந்தையின் நேசம் கலந்த வழிகாட்டுதல் இல்லாத இளம் வயதுப் பெண்கள் பல்வேறு சிக்கல்களில் விழுகிறார்கள். சிறுவயதிலேயே அவர்கள் பாலியல் ரீதியாக பலவீனப்படுகிறார்கள். தேவையற்ற தாய்மையைப் பெற்றுக் கொள்கிறார்கள். இதையெல்லாம் விரிவான ஆராய்ச்சி ஒன்று சொல்கிறது.
இந்த ஆராய்ச்சியை முன் நின்று நடத்தியவர் நியூசிலாந்திலுள்ள கேண்டர்பர்க் பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியரான புரூஸ் ஜே எல்லிஸ். டீன் ஏஜ் பருவத்திலேயே பாலியல்ல் பிரச்சினைகளில் மாட்டி கர்ப்பமாவது அமெரிக்கா மற்றும் நியூசிலாந்தில் சர்வ சாதாரணம். இதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என அவர்கள் அலசி ஆராய்ந்தபோது தான் சிக்கியிருக்கிறது இந்த அதிர்ச்சியூட்டும் உண்மை. தந்தையின் சரியான வழிகாட்டுதல், அன்பு, அரவணைப்பு இல்லாதது தான் எல்லா பிரச்சினைக்கும் மூல காரணமாம். இப்போது சொல்லுங்கள், டீன் ஏஜ் பெண்ணின் வளர்ச்சிக்கு நீங்கள் தேவையா இல்லையா ?

ஒரு டீன் ஏஜ் மகளுக்கு அப்பா என்பவர் வெறும் ஒரு நபரல்ல. ஒரு நண்பன், பாதுகாவலன், ஊக்கமூட்டுபவர், உற்சாகப்படுத்துபவர், தன்னம்பிக்கை வளர்ப்பவர், நம்பிக்கை ஊட்டுபவர், பண்புகளை ஊட்டுபவர், வழிகாட்டி என எக்கச்சக்க முகங்கள் அவருக்கு இருக்க வேண்டும். ஒரு பெண் முதலில் சந்திக்கும் ஆண் அவளுடைய அப்பா தானே? அப்பாவிடமிருந்து தான் அவள் ஒரு ஆணுக்குரிய இலக்கணங்களைக் கற்றுக் கொள்கிறாள். ஆண் என்பவனின் குணாதிசயங்களைக் கற்றுக் கொள்கிறாள். ஆண் என்பவருடைய அளவீடுகளைக் கற்றுக் கொள்கிறாள். ஆண் என்பவரின் தேவையைக் கண்டு கொள்கிறாள். எனவே மகள் மழலையாய் இருக்கும் போதே எல்லா வகையிலும் முன் மாதிரியான வாழ்க்கை வாழவேண்டியது அப்பாவின் கடமையாகிறது.


சின்ன வயதில் மழலையாய் சிரித்துச் சிணுங்குகையில், அழகழகாய் ஆடைகள் வாங்கிக் கொடுப்பதானாலும் சரி, பென்சில், ரப்பர் வாங்குவதானாலும் சரி ரொம்பவே ஈடுபாடு காட்டுவீர்கள். எல்லாவற்றையும் தேடித் தேடி வாங்குவீர்கள். பாப்பாவும் ரொம்பவே சமர்த்தாய் உங்கள் கழுத்தைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தம் தருவாள். திடீரென ஒரு நாள் பார்த்தால், சட்டுபுட்டுன்னு வளர்ந்து நிர்ப்பாள். "என் டாடி சூப்பர்" என்று சொல்லிக் கொண்டிருந்தவள், "டாடிக்கு ஒரு மண்ணும் தெரியாது" என்று பல்டி அடிப்பாள். மூக்குத்தியை எடுத்து நாக்கில் மாட்டுவாள். டென்ஷன் ஆகாதீர்கள். எல்லாவற்றுக்கும் காரணம் அவளுடைய உடல், மன மாற்றங்கள் தான்.
என் பொண்ணுக்கு என்னைக் கண்டாலே புடிக்கல. அவளுக்கு நான் இனிமே தேவையில்லை என்றெல்லாம் உளறிக் கொட்டாதீர்கள். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் மகள் உங்கள் மகள் தான். உங்கள் மீதான பாசமும், அன்பும், கரிசனையும் எப்போதுமே அவளிடம் நிரம்பி இருக்கும். ஆனால் அவளுடைய வெளிப்படுத்தல்களில் தான் எக்கச் சக்க மாற்றங்கள் முண்டியடிக்கும்.

"டாடி பிளீஸ்.... டாடி... வாங்கிக் கொடுங்க டாடி" என்று சின்ன வயதில் கெஞ்சிய மகள் "டாட்.... எனக்கு இது வேணும். முடியுமா முடியாதா?" என பிடிவாதம் பிடிப்பாள். உடனே நீங்கள் பதட்டப்படுவீர்கள். ஆனால் உண்மையில் அவள் உங்களுடைய அனுமதியை எதிர்பார்த்து நிற்கிறாள். அப்பாவின் அனுமதி இருந்தால் தான் அவளுக்கு அதில் ஒரு ஆத்ம திருப்தி. நீங்க பாட்டுக்கு எல்லாவற்றையும் சகட்டு மேனிக்கு நிராகரித்துத் தள்ளாதீர்கள். "நல்லதுன்னா அப்பா ஒத்துப்பார்" எனும் நிலமை தான் இருக்க வேண்டுமே தவிர "அவர் கிட்டே என்ன சொன்னாலும் வேலைக்காவாது" என்ற நிலைக்கு நீங்கள் வந்து விடவே கூடாது.இது ஒரு நீச்சல் போல. கரையில் இருந்து கொண்டே நீங்கள் ஆர்டர் போட முடியாது. இன்னும் சொல்லப் போனால் டீன் ஏஜ் பருவத்தினருக்கு அட்வைஸ் எனும் வார்த்தையே அலர்ஜி. காரணம் பெரும்பாலும் அவளுடைய விருப்பத்துக்கு நேரானதாகத் தான் இருக்கிறது அப்பாக்களின் அட்வைஸ். அதற்காக நல்ல விஷயங்களைச் சொல்லக் கூடாதா என்பதல்ல. அதை செயலில் காட்டவேண்டும். அல்லது நாசூக்காக விளக்க வேண்டும். பேசுவதை விட மிக மிக அதிகமாய் மகள் பேசுவதைக் கேட்கவேண்டும். அது தான் முக்கியம்.

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், "என் அப்பா டெக்னாலஜியில் என்னைப் போல ஹைடெக்.." என கருதுவதில் உங்கள் மகளுக்கு இருக்கும் மகிழ்ச்சி அலாதியானது. நீங்கள் அந்த டெக்னாலஜி உலகுக்குள் நுழைந்தால் தான் அதிலுள்ள நன்மை தீமைகளை நாசூக்காக உங்கள் மகளுக்குச் சொல்லவும் முடியும்! அதை விட்டு விட்டு, "என்ன இவ சாப்பிடும்போ எஸ் எம் எஸ் அடிக்கிறா, பேசிகிட்டே எஸ் எம் எஸ் அடிக்கிறா, ஆர்குட், பேஸ் புக் என்னன்னவோ சொல்றா...." என புலம்பித் தள்ளாதீர்கள்.இன்னொரு விஷயம், உங்கள் மகள் பருவத்துக்குரிய வனப்புடன் வளர்கிறாள் என்றதும் தள்ளியே நிற்காதீர்கள். அது மன அளவில் உங்கள் டீன் ஏஜ் மகளைப் பாதிக்கும் என்கின்றனர் உளவியலார்கள். உங்கள் மகளின் தோளைத் தட்டிப் பாராட்டுவதோ, தலையைக் கோதிப் பாராட்டுவதோ, செல்லமாய் அரவணைத்துக் கொள்தலோ அவளுக்கு ரொம்பவே தேவை.அடிக்கடி வெளியே கூட்டிப் போங்கள். ஐஸ்கிரீம் பார்லர் போன்ற இடங்களுக்கு ஜாலியாகப் போய் வாருங்கள். மகளுடன் நிறைய நேரம் செலவிடுங்கள். நிறைய நேரத்தை நீங்கள் அவளுடன் செலவிடும்போது அவளுக்கு இயல்பான உரையாடல் சாத்தியப்படுகிறது. நினைத்ததை எப்படியேனும் வெளிப்படுத்தி விடுவாள். அவள் பள்ளியிலோ, கல்லூரியிலோ ஏதேனும் விழா நடக்கிறது , அழைக்கிறாள் என்றால் தவற விடாதீர்கள். வெறுமனே நீங்கள் அவளுடன் இருந்தால் போதும் அவள் உங்களை ரொம்பவே கொண்டாடுவாள்.நீங்கள் அவளை அன்பு செய்கிறீர்கள். சரி! மதிக்கிறீர்கள். சரி! ஆனால் அதை அவளிடம் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறீர்களா? இல்லையேல் அதைச் சொல்லுங்கள் முதலில்.

டீன் ஏஜ் மனது எதிலும் வெளிப்படையாய் இருக்க விரும்பும் மனது. சுற்றி வளைத்து எதையும் பேசாமல், உங்கள் மகளை நீங்கள் மதிக்கிறீர்கள், அன்பு செய்கிறீர்கள் என்பதைச் சொல்லி விடுங்கள்.டீன் ஏஜ் மகளின் தினசரிகள் பல்வேறு அனுபவங்களால் நிரம்பி வழியும். ஆனந்தம், கவலை, எரிச்சல், சோகம் என எக்கச் சக்க உணர்வுகள் நிரம்பி வழியும். சக தோழிகளின் கிண்டல், படிப்பு, அழகு என கண்டதுக்கும் கவலைப்படும் வயது அது. அதை முதலில் நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும். "எதுவானாலும் கவலையில்லை .... அப்பா இருக்கிறார்" எனும் நம்பிக்கையை நீங்கள் உங்கள் மகளிடம் ஊற்ற முடிந்தால் அதை விடப் பெரிய விஷயம் ஏதும் இல்லை. அதற்கு மகளிடம் உண்மையாய் இருக்க வேண்டியது உலக மகா தேவை!மகளிடம் நீங்கள் எந்த அளவுக்கு உண்மையாய், நம்பிக்கைக்குரியவராய் இருக்கிறீர்களோ அந்த அளவுக்கு அவள் உங்களிடம் வெளிப்படையாய் பேசுவாள். உண்மையை உள்ளபடி பேசுவாள். அப்படி மனம் திறந்து பேசும் போது எந்தக் காரணம் கொண்டும் அவளைத் திட்டாதீர்கள். அவள் என்னதான் மிகப்பெரிய தவறு செய்திருந்தாலும் சரி, உணர்ச்சி வசப்படாதீர்கள். பிரச்சினைகள் விளைவுகள் தீர்வுகள் என சிந்தியுங்கள்.

நீங்கள் பதட்டப்பட்டு உங்கள் கோபத்தையும், ஆத்திரத்தையும் மகளிடம் காட்டி விட்டால் போச்சு. அது வீட்டைப் பூட்டி சாவியை தூர எறிவதற்குச் சமம். உங்கள் மகள் அதன் பின் உங்களிடம் எதையும் பேசுவாள் என்று சொல்வதற்கில்லை.எப்போதும் அவளிடம் தோழமை உணர்வுடன் பழகுங்கள். அடிக்கடு உங்கள் மூடு மாறாமல் இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம். "அப்பா எப்போ அமைதியா இருப்பாரு, எப்போ எரிஞ்சு விழுவாருன்னு தெரியாது" எனும் நிலமை வந்தால் சிக்கல் தான். அவளுடைய படிப்பு, நட்பு, எல்லாவற்றிலும் உங்கள் அளவான ஈடுபாடு இருக்கட்டும். "அவளுக்கு இதெல்லாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை" என்று மட்டும் எப்போதும் நினைக்காதீர்கள். குறிப்பாக ஆண்களைப் பற்றியும், ஆண்களின் குணாதிசயங்கள், சிந்தனைகள், எதிர்பார்ப்புகள் போன்றவற்றைப் பற்றியும் அவளுக்குப் புரியும் வகையில் அவ்வப்போது சொல்வது அவசியம். வெளுத்ததெல்லாம் பாலல்ல, பாய்சன் கூட உண்டு என்பதை அவள் தெரிந்து கொள்ள வேண்டும், அதான் விஷயம்.இந்த அப்பா மகள் பந்தத்தில் யாருக்கு அதிக பொறுப்பு என நினைக்கிறீர்கள்? அப்பாவுக்கு என்று சொன்னால் நீங்கள் ஒரு பொறுப்பான அப்பா என்று அர்த்தம்.

டீன் ஏஜ் மகளின் மனநிலையைப் புரிந்து கொண்டு பொறுமையாக வழிகாட்ட வேண்டியது உங்கள் கடமை. ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். டீன் ஏஜ் பருவம் தொட்டால் வெடிக்கும் பருவம். அதனால் அவளை உசுப்பேற்றும் எந்த சண்டையையும் நடத்தாமல் இருப்பது நல்லது. குறிப்பாக அவளுடைய தோற்றம், அழகு, ஆடைகள் போன்றவற்றைக் கிண்டலடிக்காதீர்கள். மாறாக, பாராட்டுங்கள். பாராட்டுக்கள் தன்னம்பிக்கையை வளர்க்கும். அவளை வலுவாக்கும்.சமூகம் சார்ந்த பல அறிதல்களையும் நீங்கள் தான் அவளுக்குச் சொல்லித் தர வேண்டும். அவற்றைப் பற்றிய தெளிவை மகளுக்குத் தரும் பொறுப்பும் உங்களிடமே.ஒரு ஆச்சரிய உண்மை என்னவென்றால், பதின் வயதுத் தொடக்கத்தில் இருக்கும் மனோபாவம் நாள் செல்லச் செல்லப் பக்குவப்படும். பெண்ணின் திருமண வயது வரும்போது "அப்பா தான் உலகம்" எனும் நிலைக்குப் பெண்கள் வந்து விடுவார்கள். அதுவரை சலிக்காத வழிகாட்டலும், பொறுமையான அணுகு முறையும், நிபந்தனையற்றை அன்பும் நீங்கள் காட்ட வேண்டியது அவசியம்.சின்ன வயதிலிருந்தே தந்தையின் வழிகாட்டுதலிலும், அன்பிலும் வளரும் குழந்தைகள் நல்ல மன வளர்ச்சி அடையும் என்கிறார் எழுத்தாளரும் மருத்துவருமான மெக் மீக்கர். "ஸ்ட்ராங் ஃபாதர்ஸ், ஸ்ட்ராங் டாட்டர்ஸ்" எனும் நூலில் அப்பாவின் வழிகாட்டுதலே டீன் ஏஜ் பெண்களுக்கு மிக மிகத் தேவை என்கிறார். "என் பொண்ணோட வாழ்க்கையில் மிக முக்கியமான நபர் நான்" எனும் எண்ணம் அப்பாக்களுக்கு வரவேண்டியது தான் முதல் தேவை என்கிறார் இவர்.


இன்னொரு முக்கியமான விஷயம், நீங்கள் உங்கள் மகளை எப்படி நடத்துகிறீர்கள் என்பதை வைத்து மட்டும் உங்கள் மகள் உங்களை எடை போடுவதில்லை. உங்கள் மனைவியை நீங்கள் எப்படி நடத்துகிறீர்கள், மற்றவர்களை எப்படி நடத்துகிறீர்கள் என்பதையெல்லாம் அவள் கூட்டிக் கழித்துப் பார்ப்பாள். நீங்கள் எல்லா இடத்திலும் வலுவாக இல்லையேல் நீங்கள் அவளிடம் காட்டும் அன்பை போலித்தனம் கலந்ததாக அவள் கருதிக் கொள்ள வாய்ப்பு உண்டு.கடைசியாக ஒன்று. "என் அப்பாவைப் போல நல்ல ஒரு ஆண் எனக்குக் கணவனாக வர வேண்டும்" என உங்கள் மகள் நினைக்க வேண்டும். அப்படி நடந்தால் நீங்கள் ஒரு அப்பாவாக வெற்றி பெற்று விட்டீர்கள் என்று பொருள்! வெற்றி பெற வாழ்த்துக்கள்.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தன் மகள் இந்திரா காந்திக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கினார் என்பது வரலாறு. அவர் தனது மகள் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதங்கள் எதிர்காலத்தில் அவரை முதல் பெண் பிரதமராக மிளிர்வதற்கு துணை நின்றது என்றுகூட சொல்லலாம். சிறையில் இருந்தபோதுகூட தன் மகளான இந்திராவுக்கு கடிதம் எழுத நேரு தவறியதில்லை.

அன்புடன்...

ஷேக் முஹம்மது
Courtesy - Tamil Muslim Brothers group mail"

தகவல் : M.S.அப்துல் கஃபூர்

ப‌டாத‌ பாடும் ப‌ள்ளிக்கூட‌ க‌ல்வியும், ப‌ரித‌விக்கும் பெற்றோர்க‌ளும். 24

அதிரைநிருபர் பதிப்பகம் | June 19, 2011 | , ,

முந்தைய அரசு பல கல்வியாளர்களையும், உயர் அதிகாரிகளையும் கலந்தாலோசித்து பல ஆய்வுகளுக்குப்பின் கொண்டு வந்த சமச்சீர் கல்வி முறை இன்று புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு முந்தைய அரசு கொண்டு வந்த காரணத்தாலோ? என்னவோ? சமச்சீர் கல்வி முறையில் பல குறைகள் உள்ளன என சுட்டிக்காட்டி அதை அப்படியே முடக்க முயல்கிறதா? அல்லது அதில் திருத்தம் கொண்டு வந்து நீக்கப்பட வேண்டிய பாடங்களை நீக்கி மேலும் சிறப்புடன் வெளியிட்டு மாணவர்களின் கல்வியை செம்மைபடுத்த விரும்புகிறதா? என்று ஒன்றும் புரியாத புதிராகவும், பேயரைந்த நிகழ்வாகவும் தான் மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் இன்று இருந்து வருகிறது.

இதில் தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் வசூல் செய்யும் கல்விக்கட்டணத்தில் ஆயிரத்தெட்டு குழப்பங்களும், வரம்புமீறல்களும், அதிருப்திகளும் அதனால் அரசால் நியமிக்கப்பட்ட கமிட்டிகளும் (ரெங்கராஜன் மற்றும் ரவி ராஜ பாண்டியன் கமிட்டிகள்), பெற்றோர்களின் போராட்டங்களும், மாணவர்களின் மனக்குமுறலும் என இன்று தரமான கல்வி என்ற இலக்கு பலரால் உதைக்கப்படும் ஒரு கால்பந்து போல் ஆகிவிட்டது.

இதில் தனியார் கல்வி நிறுவனங்களின் கூட்டமைப்பில் அரசு நிர்ணயித்த கல்விக்கட்டணத்தை ஏற்றுக்கொண்டவர்கள் ஒரு குழுவாகவும், அதில் அதிருப்தி அடைந்து அது போதவில்லை அரசு அதை மேலும் உயர்த்த வேண்டும் என்று கூறி அதற்காக உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்ற கருத்து கொண்டவர்கள் மற்றொரு குழுவாகவும் செயல்பட்டால் தரமான கல்வி என்பது ஏட்டளவில் இருந்து எட்டாக்கனியாகி விடுமோ என்ற அச்சம் எல்லாத்தரப்பு மக்களிடமும் நிலவி வருவது உண்மையே.

எது,எதெற்கெல்லாம் வெளிநாடுகளை ஒப்பிட்டு பார்க்கும் இக்காலத்தில் கல்வித்துறையில் மட்டும் அவ்வாறு வெளிநாடுகளை ஒப்பிட்டு அதன் வளர்ச்சிகளையும், முன்னேற்றங்களையும், முறைகளையும் மத்திய, மாநில அரசுகள் நம் நாடில் கொண்டு வர முனைப்பும், முயற்சியும் காட்டதது ஏன்? படித்தவர்கள் நாட்டில் பெருகி விட்டால் அரசியல்வாதிகள் பந்தாடப்பட்டுவிடுவார்கள் என்ற அச்சமா? இல்லை காலமெல்லாம் தனக்கு பல்லக்கு தூக்குபவர்களாக மட்டும் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறதோ? என்னவோ தெரியவில்லை?

நாட்டின் குடிமக்கள் கள்ளச்சாரயம் காய்ச்சி அதனால் அவர்களும், அவர்கள் குடும்பமும் சீரழிந்து நாசமாகிறது என முதலைக்கண்ணீர் வடிக்கும் மத்திய, மாநில அரசுகள் அதற்காக தானே முன்னின்று நடத்தும் "டாஸ்மாக்" சாராயக்கடைகளும், அதற்கு கொடுக்கும் மானியங்கள் என பல சலுகைகள் கொடுத்து ஊக்கப்படுத்தும் இவ்வேளையில் மக்களுக்கு தரமான கல்வி எல்லோருக்கும் பாரபட்சமின்றி கொடுத்து அதன் மூலம் அவர்கள் குடும்பங்களுக்கும், ஊருக்கும், உலகுக்கும் ஒளியேற்றி வைக்க கல்வித்துறையை மத்திய, மாநில அரசே முன்னின்று நடத்தாதது ஏன்? அதில் அதிக வருமானம் இண்மையாலா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா?

தேர்தல் சமயத்தில் ஏதேச்சதிகாரம் பெற்று ஜனாதிபதியின் நேரடி பார்வையில் இயங்கி தனித்துறையாக எவ்வித தலையீடும் இன்றி சிறப்புடன் செயல்படும் தேர்தல் ஆணையம் போல் கல்வித்துறையையும் ஜனாதிபதியின் நேரடி பார்வையில் இயங்கும் ஒரு தனித்துறையாக கொண்டு வந்தால் என்ன? கண்டதிற்கெல்லாம் கோடானகோடிகளை ஒதுக்கீடு செய்யும் மத்திய, மாநில அரசுகள் கண் போன்ற கல்விதுறையை கண்டுகொள்ளாமல் விடுவது ஏன்? உயிர்பிச்சை கேட்டு நிற்கும் ஒரு வறியவனுக்கு (கல்வித்துறை) உதவ முன்வராமல் ஓரளவு உணவு, உடை, இருப்பிடம் பெற்றிருப்பவனுக்கு (டாஸ்மாக்) ஓடோடிச்சென்று இன்னும் பல வசதிகள் செய்து கொடுக்க முனைப்பு காட்டுவது ஏன்? ஊறுகாய் வாங்கி கொடுத்து அவனை (சாராயம் குடிப்பவனை)மேலும் உற்சாகப்படுத்துவது ஏன்?

எங்களுக்கு இலவசமாக ஆடு,மாடுகள் தேவையில்லை, இலவச மிக்ஸியும், கிரைண்டரும் அவசியமில்லை, வண்ணத்தொலைக்காட்சியும் வராவிடில் நாங்கள் மாண்டுபோய் விடமாட்டோம். தாலிக்கு தங்கம் யாருக்கு வேண்டும்? இவை எல்லாவற்றையும் கனப்பொழுதில் வாங்கி வந்து சேர்க்கும் தரமான உயர் கல்வி மட்டும் போதும் எங்களுக்கு. அரசே தர இயலுமா? இல்லை காரணம் பல கூறி தப்பித்து ஓடுமா?

அமெரிக்காவே நம் மக்களின் கல்வித்திறமைகளையும், நாட்டின் புத்திசாலி பலரின் செயல்பாடுகளை நேரடியாக கண்டு வியந்து பாராட்டி மூக்கின் மேல் கை வைத்து நிற்கும் இந்த வேளையில் இப்படி அரசே கல்வித்துறையை அசிங்கப்படுத்தி பார்க்கலாமா?

அரசு இலவசமாக கொடுக்கும் ஆடு,மாடுகளால் அன்றாட வீட்டின் பால் தேவை நிறைவேரலாம். முறையான, தரமான கல்வியை மக்களுக்கு கொடுப்பதால் பல பால் பண்ணைகளையே அவர்களால் உருவாக்கப்படலாம் அல்லவா? அதன் மூலம் வேலையில்லாத்திண்டாட்டத்திற்கே வேட்டு வைக்கலாம் இல்லையா?

இன்றைய காலகட்டத்தில் ரோட்டோரம் படுத்துறங்கும் பாமரனாக இருந்தாலும் சரி, மாடத்தின் பால்கனியில் கடல்காற்று வாங்கும் பணக்காரனாக இருந்தாலும் சரி தன் சந்ததிக்கு உயர்தர கல்வியை கொடுத்து விடுவதில் இருவரும் ஒரே நேர்க்கோட்டில் தான் பயணம் செய்கிறார்கள். ஒருவன் பணத்துடன் செல்கிறான் மற்றொருவன் வெறும் கையுடன் செல்கிறான். இதை நாடிப்பிடித்து பார்க்க நாம் ஒன்றும் மருத்துவ உயர்பட்டம் பெற வேண்டிய அவசியமில்லை. அரசுக்கு தெரியாததா என்ன? ஏன் இந்த மெத்தனம்? ஊரான் வீட்டு பிள்ளைக்கு உயர்கல்வி கொடுத்தால் தான் பிறந்த நாடல்லவா உலக அரங்கில் பிரகாசிக்கும்? வெறும் வாயிலல்ல உண்மையிலேயே மிளிரும்.

கல்வி என்னும் கண்களின் பார்வை மங்கச்செய்ய காரணமாக இருந்து விட்டு பிறகு தெளிவான பார்வைக்கு கண் கண்ணாடி இலவசம் என்று கொக்கரிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?

தனியார் கல்வி நிறுவனங்களை நடத்தும் கல்வியாளர்களின் கஷ்ட, நஷ்டங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அரசு நினைத்தால் குறைந்த கல்வி கட்டணத்தால் அவர்களுக்கு ஏற்படும் நஷ்டங்களை உங்கள் மானியம் மூலம் போட்டு கட்ட வேண்டியது தானே? அதை விட்டு விட்டு அவர்களை கடிவாளம் பூட்டப்படாத குதிரை போல் அவர்கள் இஷ்டத்திற்கு அவிழ்த்து விடுவது எந்த வகையில் நியாயம்? பொருளாதாரத்தில் போதிய அளவைத்தொட்டவன் தன் பிள்ளைகளை நீர் கேட்கும் தொகையுடன் கூடுதலாகவே செலுத்தி அவன் பிள்ளைகளை பள்ளியில் சேர்த்து பரவசமடைவான். போதிய வருமானம் இல்லாதவன் தன் பிள்ளைகளை சேர்க்க நாணயமானவனாக இருந்தால் நடுத்தெருவில் தான் வந்து நிற்பான். தீயகுணம் உடையவனாக இருப்பின் தவறான வழியை (லஞ்சம், திருட்டு, கொள்ளை) தேர்ந்தெடுத்து எப்படியும் தன் பிள்ளையை சேர்த்து விட முயற்சிக்கமாட்டான் என நாம் எப்படி உறுதியாக கூற முடியும்?

நாட்டில் மக்களின் மருத்துவ சிகிச்சையை தான் இலவசமாக்க இயலவில்லை. கல்வித்துறையிலாவது முற்றிலும் இலவசமாக இல்லாவிட்டாலும் ஓரளவு நீதி, நேர்மையாக மத்திய, மாநில அரசுகள் நடந்து கொள்ளலாமல்லவா? கட்டுரைகள் பல எழுத நாம் ஒன்றும் பெரும் கல்வியாளன் அல்லன். அன்றாடம் காணும் காட்சிகளால் அல்லறும் சாதாரன இந்தியக் குடிமகன். நம் அன்றாட அவலங்களும், ஆதங்கங்களும், அவசிய தேவைகளும் அரசின் பார்வைக்கு சென்றடையுமா? இல்லை நாடு உனக்கு என்ன செய்தது என்று பார்க்காதே; நாட்டிற்காக நீ என்ன செய்தாய்? என்று நம்மீதே கேள்வி கேட்டு நிற்குமா? என வரும் காலம் தான் பதிலளிக்க வேண்டும்.

இது எந்த ஆட்சியையும்/கட்சியையும் குறை சொல்லியோ அல்லது கொடிப்பிடித்தோ எழுதப்பட்டதல்ல. காலத்தால் கட்சிகள் மாறலாம் அதனால் காட்சிகளும் மாறலாம். ஆனால் கல்விக்கண்ணில் மண்ணைத்தூவி அதில் மருத்துவம் பார்க்க அரசு முயல வேண்டாம் என்பதே சாதாரன ஒரு குடிமகனின் நடுநிலையான கருத்தாகவும், ஏக்கமாகவும் இருக்கும். சொல்வது எம் உரிமையானாலும் அதை செவிசாய்த்து கேட்பது அரசின் கடமையல்லவா?

அயல்நாடுகளில் பல அல்லல்களுக்கிடையே வேலை பார்த்து நம் நாட்டு அரசுக்கு அன்னியச்செலாவணியை அள்ளித்தரும் பல லட்ச இந்தியக்குடிமகன்களில் நானும் ஒருவனாய், நாட்டு மக்களின் இன்றைய இன்றியமையாத்தேவையை இங்கு எடுத்துரைத்தவனாய்....

- மு.செ.மு. நெய்னா முஹம்மது

பெற்றோர்களே மனம் திறந்து பேசுங்களேன் 4

அதிரைநிருபர் | February 14, 2011 | , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பானவர்களே, கடந்த சில நாட்களாக மாணவிகள் தற்கொலை என்ற செய்தி அன்றாடம் தொலைக்காட்சியில் காணமுடிந்தது. அன்மையில் பள்ளி ஆசிரியர் கண்டித்ததால் சென்னையை சேர்ந்த மாணவி ஒருவரும், கும்பகோணத்தில் பள்ளி தலைமையாசிரியர் திருட்டு விசாரனை என்று ஒரு மாணவியை கண்டித்து தண்டித்ததால், தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர், இந்த மாணவிகள் மன உளச்சலுக்குள்ளாகி தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள் என்பது மிக வேதனையான செய்தியே.

பெற்றோர்களே பள்ளிக்கு செல்லும் தங்களின் பிள்ளைகளிடம் இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளியில் ஆசிரியர்கள் விதிமுறைக்கு உட்பட்டு கண்டிப்பது சகஜமே என்றாலும் பள்ளியிலிருந்து வீட்டுக்கு வரும் தம் பிள்ளைகளை தங்களின் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும். அவர்களின் stress levelயை கண்டறியவேண்டும்.

மாணவிகள் தற்கொலை என்ற செய்தி, மக்களிடையே அந்த மாணவிகளுக்கு அனுதாபங்கள் ஏற்படுத்தி வருகிறது என்பது உண்மை. ஆசிரியர்களின் கண்டிப்புகளால் சிறிதளவு பாதிக்கப்பட்ட உங்கள் பிள்ளைகளின் மனதில் இது போன்ற செய்திகள் ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம்.

பெற்றோர்கள் மனம்திறந்து தங்களின் பிள்ளைகளிடம் நண்பர்கள் போல் பழகி பேசவேண்டும். அப்போது தான் அவர்கள் தங்களுக்கு ஏற்படும் கஷ்டங்களை நம்மிடம் பகிர்ந்துக்கொண்டு மன அழுத்தத்திலிருந்து விடுபட முடியும். உங்களின் ஹிட்லர் அராஜகத்தை உங்கள் பிள்ளைகளிடம் காட்டி அவர்களிடையே மன உலைசலை ஏற்படுத்தி அவர்களின் மனதை சிதைத்துவிட நீங்களும் காரணமாகிவிடாதீர்கள்.

ஆசிரியர்கள் மாணவ மாணவிகளை விதிமுறைபடி கண்டிப்பது சகஜமே, விதியைமீறி தண்டிக்கும் ஆசிரியர்களை கண்டறிந்து பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் நிச்சயம் புகார் கொடுக்கவேண்டும். தவறுகள் செய்வது மனித இயல்பு, அப்படியே மாணவர்கள் பள்ளிகளில் தவறு செய்தால் அந்த தவறை மீண்டும் செய்யாமல் இருப்பதற்கு கடினமான தண்டனையோ அல்லது கடினமாக கண்டிப்பதோ வழியல்ல, செய்தது தவறு என்பதை அம்மாணவர்களுக்கும் பக்குவமாக புரியவைக்கும் பொறுப்பு ஒவ்வொரு ஆசிரியருக்கும் உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆசிரியர்களும் பள்ளியில் உள்ள மாணவ மாணவிகள் தங்களிடம் இருக்கும் நேரம் முழுவது அவர்கள் தங்களின் பிள்ளைகள் என்பதை மனதில் வைத்துக் கொள்ளவேண்டும் என்று நாம் ஆசிரியர்களுக்கு சொல்லித்தர வேண்டியதில்லை.

பெற்றோர்களே, நீங்கள் பெற்ற பிள்ளைகளிடம் மனவிட்டு பேசுவதில் என்ன தவறு உள்ளது? பள்ளிக்கு செல்லும் பிள்ளைகள் எவ்வகையான பிரச்சினைகள் சந்திக்கிறார்கள் என்பதை அறிந்து அதற்கான தீர்வுகளை கண்டறிந்து, மன உளச்சல் இல்லாத நிம்மதியான சூழலை படிக்கு நம் பிள்ளைகளுக்கு பெற்றோர்களான நம் எல்லோரின் கடமை. கல்வியிலும், சமூகத்தில் உயர்ந்தவர்களாக உருவாக்க வேண்டுமானால் பெற்றோர்களே மனம் திறந்து பேசுங்களேன் உங்கள் பிள்ளைகளிடம்.

இஸ்லாமிய மார்க்க சிந்தனை நிறைந்த அதிரைப்போன்ற ஊர்களில் தற்கொலை என்ற செய்திகள் அறவே இல்லை என்றாலும், இந்த சனியன் புடிச்ச டிவீ மெகா சீரழிக்கும் சீரியல்களின் காட்சிகள், இது போன்ற நிகழ்வுகளுக்கு காரணமாக இருக்கிறது என்பதற்கு யாருக்கும் மாற்று கருத்து இருக்காது என்றே நம்புவோம். காலம் போகிற போக்கில் இது போன்ற தற்கொலை நிகழ்வுகள் எங்கு வேண்டுமானாலும் நிகழலாம், இதற்காக நாம் எச்சரிக்கையாக இருப்பது மிக அவசியமே. அல்லாஹ் நம்மையும், நம் பிள்ளைகளையும் பாதுகாப்பானாக.

- அதிரைநிருபர் குழு.

கவர்ண்மென்ட் உத்தியோகம்..! 13

அதிரைநிருபர் | July 28, 2010 | , , ,

ஆரம்ப பள்ளி, வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது பக்கத்தில் சகவயதுடைய மாணவன் தன்னுடைய புது வகையான லெதர் பேக்கிலிருந்து ஜாமின்ட்ரி                                             பாக்ஸ் திறந்து அழகழகான நிறமும் வடிவமுடைய பென்சில்,                 பேனா, ரப்பர், ஸ்கேல் எடுத்து இது என் வாப்பா சிங்கப்பூரிலிருந்து அனுப்பிருக்காங்க என்று பெருமையடித்துக்கொண்டிருந்தான். அதைப்பார்த்த இவன் தன்மேல் வெறுப்பும் கோபமும் வருகிறது. நாம் ஏன் வெளிநாட்டிலிருக்கும் தந்தைக்கு மகனாக பிறந்திருக்கக்கூடாது, இங்கு ஏன் பிறந்தோம் என்று அழுதே விட்டான் தான் கொண்டுவந்திருக்கும் அழுக்கான பரக்கத்ஸ்டோர் என்று எழுதிருக்கும் மஞ்சள்பையையும் அதுலே கூருடைந்த ஒரு பெண்சிலும், சிறு துகள்களாக உள்ள சில கல்லுக்குச்சிகளும் இருப்பதை பார்த்து.

இவனுடைய தந்தை மாத சம்பளத்திற்கு வேலை செய்யும் ஆர‌ம்ப‌ப்ப‌ள்ளியின் தலைமையாசிரிய‌ர், எல்லாத்துலேயும் க‌ண்டிப்பு நேர‌ம் த‌வ‌றாமை ப‌டிப்பு, குரான் ஓதுத‌த‌ல், இறைதொழ செல்லுத‌ல், இப்ப‌டியாக‌... வீட்டிலேயிருந்து ப‌டித்துக்கொண்டிருக்கும்(ப‌டிப்ப‌து மாதிரி ந‌டிப்ப‌து)வெளியில் விளையாடும் கிளித்த‌ட்டு, க‌ண்டுவிளையாட்டு, சில்லுக்கோடுக‌ளால் போடும் கூக்குர‌லால் ம‌ன‌து எதிலேயுமே ல‌யித்திருக்காது. இப்போதும் அதே ம‌ன‌நிலை நாம் ஏன் இங்கே பிற‌ந்தோமென்று ஏனென்றால் வெளியே விளையாடும் ப‌ச‌ங்க‌ளின் த‌ந்தைக‌ள் வெளிநாட்டில் உத்தியோக‌ம். சிறுவ‌ய‌த்திற்கேயுரிய‌ ப‌டிப்பு/ஓதுத‌ல் த‌விர‌ அனைத்திலும் மன‌துசெல்லும் அதுலே இவ‌ர்க‌ள் ச‌ந்தோஷ‌மாக‌ இருக்கிறார்க‌ள், இதுலே தொலைக்காட்சி/சினிமா பார்ப்ப‌து. இதுமாதிரி தான் அனுப‌விக்காத‌ ஒவ்வொரு நிமிட‌மும் இதேம‌ன‌நிலையில் இவ‌னின் ம‌ன‌தும் அழுத‌து.

பல வருடம் கழித்து வேலைக்காக அப்ளைசெய்து கடைசியில் இவனே வெளிநாட்டில் வேலைப்பார்க்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டான். அந்த வெளிநாட்டுவேலை, கைநிறைய சம்பளம், நினைத்தமாதிரி வாழ்க்கை என்ற மனநிலையின் வெளிப்பாடாக கூட இருக்கலாம். ஆனால், எவ்வளவுதான் சம்பாதித்தாலும் குடும்பத்தாருடனும், தெரு/ஊரு ஆட்களுடனும் மனசு ஏனோ ரொம்ப தூரம் தள்ளியிருப்பதுபோல்தான் தோன்றுகிறது, இதே இவனின் தந்தை குறைந்த சம்பளம் வாங்கினாலும் நிறைவான வாழ்க்கை, தன் மனைவியை விட்டு என்றும் பிரியாநிலை, மகன்/மகள், பேரன்/பேத்தியை விட்டு பிரியாமல் அவர்களின் சுக/துக்கத்தில் பங்கெடுத்து, குடும்பத்திலும் ஊரிலும் நடக்கும் அனைத்துவகையான சுக/துக்கத்திலும் பங்கெடுத்து, தன் வேலை நேரம் போக பொதுப்பணியில் தந்தை ஈடுபத்தி தன்னாலான சேவையை இந்த சமுதாயத்திற்காக செய்தது எல்லாம் இந்த உத்தியோகத்தினால் மட்டுமே சாத்தியம்.

இன்று எத்தனையோ வெளிநாட்டு வாழ்கைப்பற்றி கவிதைகள், சம்பவங்கள் படித்தும் பார்த்தும்கொண்டிருக்கிறோம், இதுலே தங்கை கல்யாணம், பெற்றோரை கவனிப்பது, தனக்கென்று ஒரு வீடு, ஏதாவது பிஸினெஸ் பண்ண கொஞ்சம் பணம் இப்படிபட்ட காரணத்திற்க்காக வெளிநாடு செல்ல கட்டாயப்படுத்தபடுகிறது, ஆனால் இதன்மூலம் மேற்சொன்னதை முழுமனதோடு நிறைவேற்றிருக்கிறோமா? அப்படியே நிறைவேற்றுவதற்கு தன் இளமை, தளர்ச்சி, நோய்கள்தான் மிச்சமிருக்கிறாது. ஒரு நாள் ரிடையர் என்ற ஒன்று பெறும்போது நல்ல கம்பெனியில் வேலைசெய்தால் கிராஜுவிட்டி என்ற பணம் கிடைக்கும், அதை வைத்து தனக்கு வைத்தியம் செய்யவே போதுமானதாக இருக்கும், தன் மனைவிக்கோ, குழந்தைகளுக்கோ கடைசிவரை நிரந்தரமாக ஒன்றுமே விட்டுவைக்கவில்லை.

இதுவே கவுரவம் பாராமல் உத்தியோகம் செய்த இவனின் தந்தையால் எல்லாமே நிறைவேறியது, தான் வேலையிலிருந்து ஓய்வுப்பெற்றாலும் தனக்கென்ற ஒரு வருமானம். இன்று தான் இறந்தாலும் அந்த ஓய்வூதிய வருமானத்தில் ஒரு பகுதி தன் மனைவிக்கு வருகிறது, அவர் மனைவிக்கூட யாரிடமும் எந்த வித பண உதவிக்கூட எதிர்ப்பாராமல் வாழ வழிவகை செய்கிறது அந்த உத்தியோகம்.

இன்று திரும்பிப்பார்கிறான் தன் பள்ளிக்கால வாழ்வை, இவர்களுக்கு மகனாகப்பிறந்ததுக்கு இறைவனுக்கு நன்றிக்கூறுபவனாக..

ஆக்கம்: அப்துல் மாலிக்

முதுமை என்பது, ஒரு குழந்தைப் பருவம்! 1

தாஜுதீன் (THAJUDEEN ) | June 22, 2010 | , , ,

என் பெற்றோர் என்னைச் சந்திக்க வந்துவிட்டு, ஒரு வியாழக்கிழமை அன்று ஊருக்குத் திரும்பிச் செல்ல ஆயத்தம் செய்துகொண்டிருந்தார்கள். அவர்களை விடைகொடுத்து அனுப்புவதற்காக நாங்கள் விமான நிலையத்திற்குச் செல்ல ஆயத்தமானோம். உண்மையில், அவர்கள் ஊருக்கு விமானத்தில் திரும்பிச் செல்ல இருக்கிறார்கள் என்பது, அவர்களுக்குத் தெரியாது. என் பெற்றோர், அதுவரையில் விமானப் பயணமே செய்ததில்லை! எனவே, இம்முறை விமானப் பயணத்தின் சுகானுபவத்தில் அவர்கள் திளைக்கட்டும் என்று முடிவெடுத்து, அவர்களுக்கான இருக்கையை உறுதிப்படுத்திவிட்டுத்தான், என் தந்தையாரிடம் விமானப் பயணச்சீட்டை நீட்டினேன்.


என் தந்தையின் முகத்தில் பளிச்சிட்ட வியப்பையும் ஆனந்தத்தையும் கண்டு மகிழ்ந்த நான், விமானம் பறக்கும் உயரமென்ன, அதைவிடப் பன்மடங்கு உயரப் பறந்தேன்! பள்ளிச் சிறுவன் ஒருவனைப்போல், அவர் தான் எடுத்துச் செல்லவேண்டிய பொருள்களை ஒவ்வொன்றாக எடுத்து வைத்துக்கொண்டிருந்ததும், தனது சாமான்களை ஏற்றிக்கொண்டு உருட்டிச் செல்லும் 'ட்ராலி'யை நகர்த்திப் பார்த்ததும், நாங்கள் விமான நிலையத்தை அடைந்த பின்னர் பயணிகளின் பரிசோதனைக்காகக் காத்திருந்ததும், தனக்குச் சாளர இருக்கை (Window seat) கேட்டுப் பெற்றதும் ஆகிய அவருடைய ஒவ்வொரு அசைவும் என்னைக் குதூகலிக்கச் செய்தது.

இறுதியாக, எங்களுக்கு விடைகொடுத்துவிட்டு விமானத்தில் ஏறும் நேரத்தை அடைந்தபோது, என்னை நோக்கி வந்த அவருடைய முகத்தைப் பார்த்தேன்; அவர் கண்கள் பனித்தன! "Thanks my dear son" என்று அவர் கூறியபோது, அவருடைய அதரங்கள் துடித்தன! அவருடைய நன்றிக்கு ஆயிரம் பொருள்கள் கூறலாம்! நான் செய்ததோ, ஒரேயொரு உதவிதான். அதன் பயனை உணர்ந்த அந்தத் தந்தையின் உள்ளமோ, அதற்காக அயிரமாயிரம் நன்றிகளை அள்ளித் தந்துகொண்டிருந்தது!

அவர் எனக்கு நன்றி கூறியபோது, எனது அந்தச் சாதாரண உதவிக்காகத் தந்தையிடமிருந்து இத்துணை உணர்வுகளின் வெளிப்பாடா என்று வியந்து நின்றேன்! "எனக்கு ஏனப்பா இவ்வளவு நன்றிப் பெருக்கு?" எனக் கூறி எனது தாழ்மையை வெளிப்படுத்தினேன். அடுத்த வினாடியில், எனது கடந்த கால வாழ்க்கையின் எல்லா விதமான நிகழ்வுகளும் என் இதயத்தில் படங்களாக விரிந்தன:

நாம் குழந்தைகளாக இருந்தபோது, பெற்றோர் நம்முடைய எத்தனைக் கனவுகளை நனவுகளாக்கினர்! அவர்களின் பொருளாதார நிலைபற்றி அறியாமல், நாங்கள் கிரிக்கெட் மட்டை வாங்கிக் கேட்டோம்; வாங்கித் தந்தார்கள். விதவிதமான ஆடைகள், விளையாட்டுச் சாதனங்கள் எல்லாம் வாங்கித் தந்தார்கள். புதுப்புது இடங்களைக் கண்டு களிக்கச் செய்தார்கள். அவர்களின் பொருளாதார வசதியைப்பற்றி எங்களுக்கேது கவலை? எங்களுக்கு எங்கள் ஆசைகள் நிறைவேறவேண்டும்; அவ்வளவுதான். அவற்றை நிறைவேற்றித் தருவதற்காக அவர்கள் என்னவெல்லாம் தியாகங்கள், அர்ப்பணிப்புகள் செய்தார்கள் என்பது பற்றியெல்லாம் நாங்கள் சிந்தித்துப் பார்த்தோமா? அல்லது, அவர்கள் நிறைவேற்றித் தந்த எங்கள் விருப்பங்களுக்காக எப்பொழுதாவது அவர்களுக்கு நாங்கள் நன்றி சொன்னோமா?

இது போன்றே, இன்று நாங்கள் எம் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக, அவர்களைத் தரமான பள்ளிகளில் சேர்த்துப் படிக்க வைக்கிறோம். அதற்கான செலவுகளைக் கணக்குப் பார்ப்பதில்லை. அவர்களுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து, நம்மைப்பற்றிப் பெரிதாக எண்ணிக்கொள்ளும் அதே வேளை, நம்மை உயர்நிலையில் ஆக்க நம்முடைய பெற்றோர்கள் என்னவெல்லாம் தியாகங்கள் செய்திருப்பார்கள் என்பதை நினைத்துப் பார்க்கத் தவறிவிடுகின்றோம்!

என் சிறு வயதில் என் பெற்றோர் என்னிடம் கேட்ட பல கேள்விகளுக்குப் பொறுமையில்லாமல் பதில் சொல்லியிருக்கிறேன். அப்போதெல்லாம், அவர்கள் என்னைப்பற்றி என்ன நினைத்திருப்பார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால், இப்போது என் மகள் கேட்கும் கேள்விகளுக்கு நான் மிகவும் அடக்கமாகவும் அமைதியாகவும் பதில் கூறுகின்றேன். இப்போதுதான் நமக்கு உணர்வு வருகின்றது, முதுமை என்பது மற்றொரு குழந்தைப் பருவமாகும் என்று. எனவே, நாம் நம் குழந்தைகளைப் பாசத்துடன் பராமரிக்கும் விதத்திலேயே நம் பெற்றோர்களையும் முதியவர்களையும் நோக்கவேண்டும்.

நம் குழந்தைகள் வந்து நம்மிடம் கேள்விகள் கேட்கும்போது, செய்தித்தாளைப் படித்துக்கொண்டிருக்கலாம். அப்போது, அவர்களின் முகத்தை நோக்கிக் கனிவாக பதில் கூறுவதற்குப் பகரமாக, ஒரே வார்த்தையில் பதில் கூறி அவர்களை விரட்டிவிடக் கூடாது.

"Thanks!" என்ற சொல்லைக் கூறி, என்னை இவ்வளவு தூரம் சிந்திக்கச் செய்துவிட்ட என் தந்தையை, அவருக்கு இன்பத்தைத் தரும் இந்தப் பயணக் கனவை நனவாக்கிக் கொடுக்க இவ்வளவு நாட்கள் காத்திருக்க வைத்துவிட்டேனே என்ற குற்ற உணர்வால் கூனிக் குறுகி நின்றேன் நான். எனக்கு நன்றாகத் தெரியும், அவர்கள் என்னை உயர்த்தி வைத்துப் பார்ப்பதற்காக என்னவெல்லாம் தியாகங்கள் செய்திருப்பார்கள் என்று. எஞ்சியிருக்கும் நாட்களில் அவர்களின் எல்லாத் தேவைகளையும் நிறைவேற்றிக் கொடுப்பேன் என்று இவ்வேளை நான் எடுக்கும் உறுதிப்பாடு நிலைத்திருக்கவேண்டும், அவர்களின் மரணத்தின் பின்னரும்!

அவர்கள் முதுமையை அடைந்துவிட்டதால், அவர்களின் இதய வேட்கைகளைத் தியாகம் செய்துவிட வேண்டும்; அவர்களின் பேரப்பிள்ளைகளின் பராமரிப்பில் தங்கள் எஞ்சிய காலத்தைக் கழிக்கவேண்டும் என்பது கருத்தன்று. அவர்களுக்கும் ஆசைகள் இருக்கத்தான் செய்யும்! எனவே, உங்கள் பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுங்கள்! அவர்கள் விலைமதிப்பற்ற சொத்தாவர்!

'Human Relations' என்பது பற்றிய கருத்தாய்வு நிகழ்ச்சி ஒன்றில், Indian Institute of Technologyயில் பணி புரியும் திரு வி. பாலசுப்ரமணியன் அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவிலிருந்து.

தகவல்: அதிரை அஹ்மது




உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு