"அப்பா" இது ஒரு மந்திரச் சொல் ! தமிழகத்தில் அப்பா, அத்தா என்று தந்தையைத்தான் அழைப்பார்கள். இது ஒரு பக்கமிருக்கட்டும், கடற்கரையோர முஸ்லீம்களின் கலாச்சாரம் மண்வாசனையோடு இருப்பதோடு மட்டுமல்லாது அந்த பினைப்பு எங்கேயும் கிடைக்காத ஒன்று.
தந்தையை "வாப்பா" என்றும் தாய் / தந்தை இவர்களின் தந்தையை "அப்பா" என்றும் அழைப்பது அதிரை மண்ணின் மைந்தர்களின் வழக்கம் இந்த வசீகரச் சொல்தான் மண்வாசனை தேடும் அதிரைச் சொந்தங்களால் அசைபோடப்படும் "அப்பாக்களின் நினைவுகள்"
சரி நாம இப்போ விஷயத்திற்கு வருவோம்...
நாம் எல்லோரும் பேரன்களாக இருந்தவர்கள், இருப்பவர்கள்... என்று தொடரும் இக்காலச் சூழலில் பெரும்பாலோருக்கும் அவர்களின் பால்யவயது காலங்களின் ரோல்மாடலாக, கதாநாயனாக மனதில் பதிந்து விட்ட அற்புதமான மனிதம் போற்றும் அப்பாக்களை நினைத்துப் பார்க்கும்போது சிலிர்க்கவே செய்யும்.
அவ்வகையில், நம் பால்ய வயது காலத்து அப்பாக்கள், அதோடு இன்றைய பால்ய வயதுகாலச் சிறுவர்களின் அப்பாக்களோடு ஒப்பீடு செய்வதல்ல இதன் நோக்கம்.
அன்றை அப்பா அல்லது இன்றைய அப்பா இரண்டு அணிகளாக விவாதிக்கலாம் வாருங்கள்...
கடன் அன்பை முறிக்கும், கடும் சொல் உள்ளைத்தை குத்தும் ஆதலால் கடும் சொற்களோ, தனிமனித தாக்குதலோ இல்லாமல், நல்லதையே நாடி விவாதிக்கலாம்.
வரம்பை மீறும் பேரன்கள் யாராவது விசமம் செய்தால் தூணில் கட்டி வைத்து மிளகாய் பொடி போடப்படும் அதோடு அவர்களை வைப்ரேஷனில் இருக்க வைத்து ஒரு அறையில் வைத்து பூட்டி வைக்கப்படும் என்று அப்பா சொல்லச் சொன்னார்கள்.
-அதிரைநிருபர் குழு


