Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரை தாருத் தவ்ஹீத் - நட்சத்திரமாக மின்னியது ! [காணொளி முன்னோட்டம் இணைப்பு] 9

அதிரைநிருபர் பதிப்பகம் | October 31, 2014 | , , ,

அதிரை மக்களுக்கு மட்டுமல்ல அனைத்து தமிழ் பேசும் முஸ்லீம்கள் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது நான்கு நாட்கள் நடைபெற்ற "கொள்கையற்றவர்கள் யார்" என்ற தலைப்பிலான விவாதம்.

அதிரை தாருத் தவ்ஹீத் மற்றும் த த ஜ வினர் முறையாக எழுத்துபூர்வமான ஒப்புதலோடு அக்டோபர் 27, 28, 29 மற்றும் 30 தேதிகளில் பல்வேறு அமர்வுகளாக விவாதம் நடந்தேறியிருக்கிறது.

அல்ஹம்துலில்லாஹ் ! ஒவ்வொரு அமர்விலும் அதிரை தாருத் தவ்ஹீத் தங்களது பொறுமையாலும், தகுந்த சான்றுகளுடனும் கண்ணியம் காத்து விவாதத்தை சிறப்புடன் முன்னெடுத்துச் சென்றது அவர்களின் அனுபவம் மற்றும் பண்பட்ட பண்பாளர்களின் ஆளுமையையும் போற்றத்தக்கதாக அமைந்தது சிறப்பு அம்சம்.

மாறாக, பல்வேறு விவாதக் களம் கண்ட த த ஜ வினரும் இன்னும் பண்பட்டவர்களாக விவாத அமர்வை எடுத்துச் செல்வார்கள் என்று அவர்கள் மீது பற்றும் அபிமானமும் வைத்திருந்தவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏமாற்றமாக அமைந்தது. அவர்களின் பிற விவாதங்களில் ஈடுபடுவது போன்றே வழமையான சாடல் போக்கை கையாண்டது வந்திருந்தவர்களில் பெரும்பாலோருக்கு சலிப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

ஓட்டம், தலை தெறிக்க ஓட்டம், பிடரியில் பின்னங்கால் அடிக்க ஓட்டம் இந்த பல்லவியே அவிழ்த்து விடப்படும் என்று விவாதம் துவங்கும் முன்னரே பலராலும் கருத்துக்கள் சொல்லப்பட்டது, அதற்கு மேலும் சொல்லத் துணிவார்கள் என்றும் எதிர்பார்க்கவும் செய்தார்கள். அதையும் தாண்டி விவாதம் நடந்து கொண்டிருக்கும்போதே சில வினாடிக் காட்சிகளை குறும்படமாக பரப்பி விட்டுக் கொண்டிருந்தது அவர்களின் தோல்வி பயம் பற்றிய குழப்பத்திலிருப்பதை உறுதி செய்தது.

ஒட்டுமொத்த த த ஜ அதிரை கிளைக்காக விவாதம் செய்ய வந்த அதன் மாநில நிர்வாகிகள் மற்றும் த த ஜ அதிரைக் கிளயின் வலைத்தளத்தின் சார்பாக பொறுப்பேற்றுக் கொண்டவரும் அந்த வலைத்தளத்தில் 'அதிரை தாருத் தவ்ஹீத்' கொள்கையற்றவர்கள் என்று அள்ளி வீசிய அவதூறான குற்றச்சாட்டுகள் பற்றி ஒரு வார்த்தைகூட த த ஜ தரப்பில் பேசப்படவில்லை என்பது தான் இந்த விவாதத்தின் மிகப்பெரிய ஹைலைட்.

விவாதம் தொடங்கி, அது முடியும் நான்காம் நாள் வரை சூனியம் மற்றும் தனிமனித வசைபாடல்களை வைத்து நான்கு நாட்களை த த ஜ காலம் கடத்தியுள்ளது, த த ஜ-வின் தரப்பில் 'அதிரை தாருத் தவ்ஹீத்' பற்றி குற்றம் சுமத்த ஒன்றுமில்லை என்பது 100% சதவீதம் இந்த விவாதத்தின் மூலம் நிரூபணமாகியுள்ளது.

நிமிர் நடை கொண்டு, தூற்றல் வாடை இன்றி, நேர் பேச்சுகளே துணிவு என்று படைத்த இறைவன் மீது மட்டுமே ஆழமான நம்பிக்கையை வைத்து களம் கண்ட அதிரை தாருத் தவ்ஹீதை தூற்றியவர்களின் அதிரை த த ஜ கிளைக் கூடாரம் கலகலத்து போனது என்னவோ ஊரரிந்த உண்மையாகிப் போனது மட்டும் நிதர்சனம் - அல்ஹம்துலில்லாஹ்.

ஏகத்துவ கொள்கைப் பற்றுடன் த த ஜ அதிரைக் கிளையில் இருக்கும் சகோதரர்கள் இந்த விவாதத்தை சீர்தூக்கிப் பார்த்து தங்களது இயக்க மயக்கத்திலிருந்து மீண்டு வெளியில் வந்து ஏகத்துவதுவ பற்று கொண்ட மற்ற சகோதரர்கள் அனைவரோடும் ஒருசேர மார்க்க மற்றும் சமுதாயப் பணிகளில் தொடர முன்வர வேண்டும் என்பதே எம் அவா ! - இன்ஷா அல்லாஹ் !

அதிரை வள்ளல்

காணொளி முன்னோட்டம்.... சொல்வதோ த.த.ஜ.(அ.கி.) ஓட்டமெடுக்கப் போவதை...



அவதூறு...! 5

அதிரைநிருபர் பதிப்பகம் | October 31, 2014 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால் . . .

திண்ணைப் பேச்சாளர்களின்
புலம்பல்கள்!
உனக்கு தெரியுமா?
சோற்றுக்கு வழி இல்லாமல்
அலைந்தானே இன்று
அவனுக்கு வீடு என்ன?
கார் என்ன?


அவன் மனைவியை பார்த்தியா?
கருகமணிக்கு வழி இல்லாமல்
இருந்தாளே அவள்தான்!
அவள் மணிக்கட்டு முதல்
முழங்கை வரை தங்கம்
தங்கமா? தங்க வளையல்
கழுத்து முழுதும் மாலைகள்
ஹூம்.... நானும்தான் இருக்கேன்
கையில் கழுத்தில் எதுவும் இல்லாமல்!


தெரியுமா? சேதி
அந்த வீட்டில் ஒரே சண்டையாம்
சண்டைக்கு என்ன காரணமாம்
அதை ஏன் கேட்கிறே
அது பெரிய கதை
நானே சுவற்றில் காதை
வைத்து கேட்டேன்!

அவன் அவளை பார்த்தானாம்
இவள் அவனை பார்த்தாளாம்!
நானும் கேள்விப்பட்டேன்!
இப்ப அவனோடு
அவள் ஓடி விட்டாளாமே!


என்ன கொடுமை!
இப்படி அவதூறு பேசும்
திண்ணை கூட்டங்களிடம்
ஒரு மூட்டை அரிசியை கொடுத்து
மூட்டையில் எத்தனை அரிசி
உள்ளது என்று எண்ணி சொல்லுங்கள்
என்ற வேலையை கொடுக்கலாம்!


சாப்பிட்ட உணவு செரிப்பதற்கு
அவதூறை பரப்பிக் கொண்டு
இருப்பவர்கள்
குர்ஆனிலும் , நபிமொழியிலும்
உள்ள எச்சரிக்கையை
மனதில் வைக்கட்டும்!


ஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி சுமத்தி, பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வராதவர்களை என்பது கசையடி அடியுங்கள். அவர்களின் சாட்சியத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்! அவர்களே குற்றம் புரிபவர்கள். (அல்குர்ஆன் : 24:4)

நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் அவர்கள் செய்யாததைக் கூறி துன்புறுத்துவோர் அவதூறையும், தெளிவான பாவத்தையும் சுமந்து விட்டனர். (அல்குர்ஆன்: 33:58)

நம்பிக்கை கொண்ட வெகுளிகளான ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவோர் இவ்வுலகிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டனர். அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு. (அல்குர்ஆன் : 24: 23)

நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள். (அல்குர்ஆன் : 49:6)

முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (அல்-குர்ஆன் 49:12)

'அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மக்கள் 'இறைத்தூதர் அவர்களே! அவை எவை?' என்று கேட்டார்கள். 

நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின்போது புறமுதுகிட்டு ஓடுவதும் அப்பாவிகளான, இறைநம்பிக்கை கொண்ட கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)' 

என்று (பதில்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள்(ஸஹீஹுல் புகாரி: 2766

'புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா?' என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது,

'அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர்' என நபித்தோழர்கள் கூறினர். 

அப்போது நபி (ஸல்) அவர்கள், 'உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் 'புறம்' ' என்றார்கள். 

நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா? என்று கேட்கப்பட்டது.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்)'

என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'யார் ஒருவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசம் கொள்கின்றாரோ அவர் பேசினால் நல்லதையே பேசட்டும் அல்லது மௌனமாக இருக்கட்டும் (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி)

அலாவுதீன் S.

'ADT' - அறிய வேண்டிய அதிரையின் அகம் ! 3

அதிரைநிருபர் பதிப்பகம் | October 30, 2014 | , ,

அதிரை தாருத் தவ்ஹீத் - (ADT) என்ற பெயர் அதிரை மக்கள் மட்டுமல்லாது சுற்று வட்டாரத்தில் இருக்கும் அனைவராலும் நன்கு அறியப்பட்ட ஒன்றே !. அதன் தூய பரிணாமத்தின் சுவடுகளை அறிந்திருக்கும் வாய்ப்புகள் இன்றைய இளைய தலைமுறையினருக்கும் அறியும் வண்ணமாக "தூய பரிணாமத்தின் அறிமுகம்" என்ற மடக்கோலையை வெளியிட்டிருந்தார்கள்

அதிரை தாருத் தவ்ஹீத் பரந்து விரிந்து நிமிர்ந்த நடைபோடும் தூய பரிணாமத்தின் நினைவூட்டல் இதோ:-







அதிரைநிருபர் பதிப்பகம்
இது ஒரு மீள்பதிவு

இளைஞனே...! 3

அதிரைநிருபர் பதிப்பகம் | October 29, 2014 | , , , , ,


பழமையை முழுதாய் ஒதுக்காதே!
புதுமையை முழுதாய் ஏற்காதே!

சிந்தை சீர்தூக்கி அல்லவை தள்ளு!
நல்லதை அள்ளு! வாழ்வில்
வேண்டாம் திள்ளு, முள்ளு !

கற்பனையை நிசமாக்க முயல்வாய்!
நிசத்தினை பொய்யாக்குவோரை இகழ்வாய்!
வருவாய் ஒளிக்கதிராய்!

பெறுவாய் நல் மதிப்பை!
விரைவாய் பணி முடித்து-
தருவாய் நலம் பல
நம் சமுதாய முன்னேற்றத்திற்கு...

- CROWN -

புதிராய் புலப்படுகிறது !
புதினம் காட்டிய இயக்கங்கள்...

புத்தி சொன்னால் ஏளனம்...
பித்து பிடித்தவங்க என்று !

இயக்கவெறி வைத்த வேட்டு
சிதறியோடியது நம்ம ஓட்டு !

ஒற்றுமையை கற்றுத்தந்த நம் மார்க்கம்
வேற்றுமையில் கண்டதோ வேறு மார்க்கம் (வழி)!

இளமை துள்ளும் இஸ்லாமியனே
இனிமேலும் இழக்காதே சுயபுத்தியை !

எதிர்த்தாள ஒரு இயக்கம்
ஏசிப்பேச ஒரு இயக்கம்
தக்லீதுக்கு ஒரு இயக்கம்
தர்மம் கேட்கவும் இயக்கம்

இப்படியாக ஏகப்பட்ட இயக்கங்கள்
என்று மறையும் இந்த மயக்கம் !

கிரவ்ன் காக்கா
2011 மே மாதம் பதிக்கப்பட்டது
இது ஒரு மீள்பதிவு

போடாதே தப்புக் கணக்கு! 20

அதிரைநிருபர் பதிப்பகம் | October 28, 2014 | , ,


ஏட்டுக் கணக்குப் பிழையென்றால்
ஏழுக்கு எட்டு விடையென்றாகும்
வீட்டுக் கணக்கில் குளறுபடி
வீண்சண்டை விவாதம் அடிதடி

ஓட்டுக் கணக்கைக் கணிக்காவிடில்
ஒழித்துக் கட்டும் தேர்தல் களம்
சொத்துக் கணக்கில் சுத்தமில்லை
கம்பிக் கணக்கை எண்ண நேரிடும்

உப்புக்குச் சப்பாய் கூட்டிக் கழித்து
தப்புக் கணக்குப் போட்டுவிட்டால்
கைமேல் பலனெனக் கிடைப்பதெல்லாம்
கைத்தடி வயதில் நோகடிக்கும்

உன்றன் கையில் உள்ளதெல்லாம்
உனக்கே உனக்கென எண்ணவேண்டாம்
உலகையே வென்றதாய் உவகையோடு
உற்சாகக் கூச்சல் போடவேண்டாம்

உள்ளங்கை ரேகை ஒன்றைத் தவிற
உள்ளதெல்லாம் போகும் உணரவேண்டும்
உள்ளெண்ணமும் செயலும் நல்லதென்றால்
உயர் நன்மையாய் மாறி நிலைத்து நிற்கும்

செலவைக் கணக்கிடாமல் - பெரும்
வரவு வந்தும் பலனில்லை
உறவைக் கவனிக்காமல் - இவ்
வுலக வாழ்வில் விடிவில்லை

விளைவுகளைத் தீர்மாணிக்கும்
வினைகளாற்றக் கற்றுக்கொள்
கனியிருப்பக் காய் கவரும்
குருட்டுத்தனம் மாற்றிக்கொள்

ஏழ்மை இழிவெனவோ
இயலாமை விதியெனவோ
முதுமை முடிவெனவோ
மதிப்பீடு முறையல்ல

எல்லா கிழக்கிலும்
விடியல்கள் காத்திருக்க
எல்லா முடிவினிலும்
இன்னுமொரு துவக்கம் உண்டு

எல்லா செயல்களுக்கும்
ஏகப்பட்ட வழியிருக்க
தப்புக் கணக்குப் போட்டு
சதுப்புச் சேற்றில் சிக்கிவிடாதே!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

மறக்க முடியாத மருத்துவர்கள்...! 22

அதிரைநிருபர் பதிப்பகம் | October 27, 2014 | , ,

மருத்துவம், மருத்துவமனை பற்றிய கருத்தாய்வும் கருத்துக் கணிப்புகளும் நமதூரில் பேசப்படும் தருணமிது.  இந்நேரத்தில், நம்மூரின் பழமை பற்றியும் ஓர் ஆய்வு தேவைதானே?

கலந்தர் மரைக்காயர்:  (இவர்களைப் பற்றி ஏற்கனவே 'அதிரை வரலாறு' வலைப்பூவில் தனிக் கட்டுரை இடம்பெற்றுவிட்டது.  அதில் இடம்பெறாத சில தகவல்கள் மட்டும் இங்கே:)

கலந்தர் மரைக்காயர் இறந்த பிறகு, அவருடைய (மனைவி வழி) மூத்த மகன் சேகப்துல்லா காக்கா அவர்கள் தன்னால் இயன்ற, தனது அனுபவத்தின் மூலம் மருந்துக் கடை வைத்து, சில மருந்துகளைக் கொடுத்துவந்தார்.  கலந்தர் மரைக்காயரின் இளைய மகன் மனநிலை பாதிக்கப்பட்டவர்.  அவரும் சில நேரங்களில் 'தொப்பிக்குள் செந்தூரம் இருக்குது; தருகிறேன்' என்பார்.  மக்கள் பைத்தியத்திடம் எப்படி வாங்குவது என்று தயங்குவார்கள்.  அத்துடன் அந்தக் குடும்பத்தின் நாட்டு வைத்திய முறையும் முடிவுற்றது.

செந்தூரம் எனும்போது, சில தனித்தனி வீடுகளில் செந்தூரம் விற்பனையும் நடந்ததை அறிவேன்.  அவற்றுள் 'செந்தூரக்கார வீடு' என்று பெயர் பெற்றது, இப்போதுள்ள எனது அண்டை வீடு.  'கூனா வீட்டு செந்தூரம்' என்பதும் நடுத்தெருப் பகுதியில் பெயர் பெற்ற ஒன்றாகும்.  அன்றைக்கு வந்ததோ, ஒரு சில நோய்கள்தாம்.  அவற்றுக்கெல்லாம் ஒரே மருந்து, சென்தூரம்தான். 

பெத்தையன்:  இவர் ஒரு நாட்டு வைத்தியர்.  இந்துவாக இருந்தாலும், நமதூர் முஸ்லிம் மக்களுடன், குறிப்பாக நமதூரின் சமூகத் தலைவர்களுடன் நல்ல உறவைக் கொண்டிருந்தவர்.  நாடி பிடித்து நோயைக் கண்டுபிடிப்பதில் வல்லவர்.  மடியில் ரெடியாகச் சில மருந்துகளை வைத்திருப்பார்.  சற்று முதிர்ந்த நோய்களாயிருந்தால், அடுத்த நாள் செய்துகொண்டு வருவதாகச் சொல்லிப் போவார்.  கழுவித் துவைத்துப் பெட்டி போட்டு மடிப்புக் கலையாத வெண்மையான உடையுடன், தோளில் அங்கவஸ்திரத்தொடு காணப்படும் அந்தக் கருமைத் தோற்றமுடைய வைத்தியர் பெத்தையன், காசில்லா ஏழைகளுக்கும் காசுள்ள பணக்காரர்களுக்கும் தன மருத்துவச் சேவையைப் பாகுபாடின்றிச் செய்து பயன் விளைவிப்பார்.

இவர் அதிரை முஸ்லிம்களுடன் இணக்கமாக இருந்ததன் பிரதிபலனோ என்னவோ, அல்லது இவரால் பயன் பெற்ற நல்லடியார் ஒருவரின் துஆவினாலோ  என்னவோ, அவருடைய மகன் இஸ்லாத்தைத் தழுவி, இன்று முஸ்லிமாக வாழ்ந்துவருகின்றார்.  இப்போது அவரும் நாட்டு வைத்தியத் தொழிலை மேற்கொண்டு, தன்னால் இயன்ற பணிகளைச் செய்து வருகின்றார்.

இக்ராம் டாக்டர்:  எனக்குத் தெரிந்தவரை, முதன்முதலாக அதிரைக்கு வந்த ஆங்கில மருத்துவர் இவர்தான்.  அக்காலத்தில், அதிரையில் இவரிடம் மட்டுமே 'அம்பாசிடர்' கார் இருந்தது.  இப்போது இருக்கும் 'மக்தூம் பள்ளி'யின் இடத்தில்  அன்று 'ரிஜிஸ்டர் அபீஸ்' இருந்தது.  அந்த வரிசையின் கடைசிப் பகுதியில் டாக்டரின் மருத்துவமனை இருந்தது.  இக்ராம் டாக்டர் திருச்சியைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.  உருது தாய்மொழி.  அதிரையில் குடும்பத்தோடு குடியேறி வாழ்ந்து வந்தார்.  மிகவும் கண்டிப்பான ஆள்.  ஆனால், 'கைராசிக்காரர்' என்று பெயரெடுத்தவர்.  அதிரையின் செல்வந்தர் வீடுகளுக்கும், அவரிடம் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவரும் முதிர் நோயாளிகளுக்கும் மட்டும், அழைப்பின் பேரில் காரில் வந்து சிகிச்சையளிப்பார்.  வீட்டு வருகைக்காகக் கூடுதல் கட்டணம் ரூபாய் ஐந்து சேர்த்துக் கொடுக்கப்படும்.  அவரிடம் கம்பவுண்டராகப் பணியாற்றிய அப்துர்ரஹ்மான் இப்போதும் உள்ளார், செக்கடி மேட்டில் ஒரு சிறிய கடை வைத்துக்கொண்டு.  டாக்டரும் அப்துர்ரகுமானும் திரும்பி வந்த பிறகுதான், மருத்துவமனை மீண்டும் இயங்கத் தொடங்கும்.  அதுவரை நோயாளிகள் பொறுமை காப்பார்கள்!  இந்த டாக்டரை விட்டால் வேறு டாக்டர் இல்லை என்ற நிலைக்காக அன்று; இவர் கைராசிக்காரர் என்பதால்!

நாங்கள் எங்கள் உயர்நிலைப் பள்ளி நாட்களில் நடுத்தெருவில் 'இக்பால் நூல் நிலையம்' என்றொரு நூலகம் நடத்திவந்தோம்.  அந்த நேரத்தில்தான் அல்லாமா இக்பால் அவர்களின் நூற்றாண்டு நிறைவு பெற்றிருந்தது.  இளைஞர்களான இல்லை, சிறுவர்களான எம் உள்ளங்களில் நமதூரில் அல்லாமா இக்பாலின் நூற்றாண்டு விழா நடத்தினால் என்ன? என்ற உதிப்பு!  களத்தில் இறங்கிவிட்டோம்!  இடம்: மரைக்காபள்ளி முக்கூட்டு முனை!  பெரிய பந்தல்!  பேச்சாளர்கள்:  டாக்டர் இக்ராம் (உர்து).  'இறையருட்கவிமணி', பேராசிரியர் கா. அப்துல் கபூர் M.A. (தமிழ்).  மாநாட்டுத் தலைவர்:  அ. இ. செ. முஹிதீன் B.A.  இன்னும் உள்ளூர் பேச்சாளர்களும் சொற்பொழிவாற்ற, மாநாடு மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது!

டாக்டர் நெடுங்காடி:  மருத்துவ வசதிகள் குறைவாயிருந்த அந்தக் காலத்தில், நமதூர் அரசு மருத்துவமனையில் பணியாற்ற வந்து சேர்ந்தார் டாக்டர் நெடுங்காடி.  இவருடைய பொதுநலச்  சேவையின் மூலம் அரசு மருத்துவமனை அக்காலத்தில் புகழ் பெற்றிருந்தது. ஆனால் மருத்துவக் கருவிகள் மற்றும் உபகரணங்கள் மிகக் குறைவு.  அவற்றை வைத்துக்கொண்டு, அவர் தரும் சிகிச்சைகள் அபாரமானவை.

நான் மிகச் சிறிய வயதுடையவனாக இருந்தபோது, என் தாயாருக்கு உள்ளங்கையில் ஒரு சிறிய கட்டி.  அதை டாக்டரிடம் காட்டியபோது, ஆபரேஷன் செய்தே ஆகவேண்டும் என்றார்.  இப்போது இருப்பதைப்போல், ஆபரேஷன் தியேட்டர் மற்றும் உபகரணங்கள் எதுவும் இல்லை.  ஒரு மரக் கட்டிலில் படுக்க வைத்துத் தம் பொறுப்பை நிறைவேற்றத் தொடங்கினார் டாக்டர்.  என் கண்கள் நீர் வடிக்க, என் தாயைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.  கத்தி வைத்தாரோ இல்லையோ, கத்தத் தொடங்கிவிட்டார்கள் என் தாய்.  "ஐயா!  உட்ருங்கோ!" என்று கத்தியபோது பிஞ்சுப் பருவத்தினன் என்னால் பார்த்துக்கொண்டிருக்க முடியுமா?  என்னைத் தடுத்துப் பிடித்து நிறுத்தத் தொடங்கிவிட்டார்கள் பக்கத்தில் நின்றவர்கள்.  அந்தக் காலத்தில் ஆபரேஷன் எல்லாம் தியேட்டரில் நடக்காது.  ஒரு விதமான rude treatmentதான்!  அப்படி இருந்தும், நோய்கள் குணமாகின!  டாக்டர் நெடுங்காடியும் கைராசிக்காரர்தான்.  அப்போதிருந்த dedication, kindness, concentration எல்லாம் மருத்துவர்களிடம் இப்போது குறைவு.   

ஜெர்மன் டாக்டர்:  இந்தப் பெயரில் ஒருவர் தன்னை டாக்டர் என்று கூறிக்கொண்டு நமதூர் தட்டாரத் தெருவில் இருந்த ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, தன் 'தொழிலை' ஆரம்பித்தார்.  ஒரு நாள் திடீரென்று குழந்தையாக இருந்த என் மருமகளுக்கு நெஞ்சு வலி வந்துவிட்டது.  நானும் என் நண்பர் அப்துல் கபூரும் தூக்கிக் கொண்டு ஓடினோம், இந்த ஜெர்மன் டாக்டரிடம்.  எடுத்த எடுப்பில், அந்தப் பச்சிளங்குழந்தையின் நெஞ்சில் குத்தினாரே ஓர் ஊசி!  அதிர்ச்சியால் நாங்கள் உறைந்து போய்விட்டோம்!  குழந்தை அலறவே, அவளைத் தூக்கிகொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.  நடந்ததை வீட்டில் சொன்னபோது, வீட்டாரும் துடித்துப் போனார்கள்.  அல்லாஹ்வின் உதவியால் குழந்தைக்கு ஒன்றும் ஆகவில்லை!  பிறகு தெரியவந்தது, அவர் போலி டாக்டர் என்பது!  கண்வலி என்றால் கண்ணில் குத்தியிருப்பாரோ?

மற்றவை, பின்னூட்டக்காரர்கள் பார்த்துக்கொள்ளட்டும்.       

அதிரை அஹ்மது
இது ஒரு மீள்பதிவு

பஸ்ஸுப் பயணம்... 7

அதிரைநிருபர் பதிப்பகம் | October 26, 2014 | , , , , ,


உம்மா வோடும் வாப்பா வோடும்
ஊரை விட்டுப் புறப்பட்டோம்
சும்மா இருந்து பஸ்ஸுக் குள்ளே
சுகமாய்ப் பயணம் செய்தோமே.

பட்டுக் கோட்டை முதலில் வந்து
பரவச மாகப் போயதனை
விட்டுச் சென்ற பின்னர் ஓட்டுநர்
விளக்கை அணைத்தார் ஊர்திக்குள்.

பார்வை ஓய்ந்து பயணம் தொடரப்
பசியும் நீங்கிக் கண்ணயரப்
போர்வை கொண்டு போர்த்திக் கொண்டு
பொதியைப் போன்று கிடந்தோமே.

நடுராத் திரியில் நின்றது பஸ்ஸும்
நாங்கள் விழித்துப் பார்க்கையிலே
படியில் இறங்கிப் போனார் சிலபேர்
பார்த்தான் காக்கா ஹாமீதும்.

வாப்பா மதராஸ் வந்தது” வென்று
வாயால் கத்திக் கூப்பிட்டான்
போப்பா இன்னும் வரவிலை” என்று
போர்த்திய வாப்பா கண்ணயர்ந்தார்.

பாதிப் பயணம் முடித்த பஸ்ஸும்
பாய்ந்தது பெட்ரோல் ஊற்றியபின்
மீதிப் பயணம் தொடர்ந்த போது
மீண்டும் உறங்கிப் போனோமே.

தாம்பரம், சென்னை விமான நிலையம்
தாண்டிய போது கண்விழித்தோம்
மாம்பலம் தாண்டி மண்ணடி வந்து
மகிழ்வோ டிறங்கி நடந்தோமே.

அதிரை அஹ்மது

வரலாறுகள்! வழக்குகள்! வல்லரசுகள்! வடிக்கப்படும் இரத்தம்!

பாலஸ்தீனம்...

18

அதிரைநிருபர் பதிப்பகம் | October 25, 2014 | , , ,

தொடர் : பகுதி பதிமூன்று

பாலஸ்தீனத்தில் துருக்கி சுல்தான்களின் ஆட்சியை காணும் முன்பு யூதர்கள் பற்றிய ஒரு கேவலமான வரலாற்றுச் செய்தியைப் பகிரவேண்டும். தொடர்ந்த வரலாற்றுச் செய்திகளுக்கு இவைகளை நாம் அறிவது அவசியம். 

கடந்த சில வாரங்களாக எழுதப் பட்டுக் கொண்டிருக்கும் இந்தத் தொடரின் சரித்திர சம்பவங்களை கவனித்து வருபவர்களுக்கு ஒரு முக்கியமான சந்தேகம் நிச்சயம் எழுந்திருக்க வேண்டும். அடிப்படையில் பாலஸ்தீனம் என்ற மையபுள்ளியின் பங்காளிகள் மூவர். அவர்கள் யூதர்கள் , கிருத்தவர்கள், முஸ்லிம்கள் ஆகியோராவார்கள். ஆனால் கடந்த சில வாரங்களாக நாம் எழுதியவை மற்றும் படித்தவை யாவுமே கிருத்துவர்களையும் முஸ்லிம்களையும் பற்றி மட்டுமே. இன்னொரு இனம் எங்கே போயிற்று?

கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகள் சிலுவைப் போர்கள் நடைபெற்றன; பல உயிர்கள் பலி கொள்ளப்பட்டன; பல கட்டிடங்கள் நொறுங்கின; பல நினைவுச் சின்னங்கள் அழிக்கப்பட்டன; சில சக்கரவர்த்திகள் மாண்டார்கள்; சில சீர்திருத்தங்கள் நிகழ்ந்தன; பல மனமாற்றங்கள் எடுத்துக் காட்டப்பட்டன; பலரின் மனிதாபிமானங்களும் சிலரின் சீர்கெட்ட குணங்களும் வெளிப்பட்டன.

ஆனால் இவை எல்லாமே கிருத்துவ மற்றும் முஸ்லிம்கள் தொடர்புடைய செய்திகளாகவே இங்கு காட்டப்பட்டனவே தவிர, பாலஸ்தீன் என்ற மண்ணுக்கு முதல் சொந்தக்காரர்கள் என்று அந்த மண்ணை இன்று சொந்தம் கொண்டாடும் யூதர்கள், இந்தப் போர்களும் சரித்திர நிகழ்வுகளும் நிகழ்ந்தபோது எங்கே போனார்கள்? இந்த சரித்திரத் திருவிழாவில் இந்த யூதக் குழந்தைகள் எங்கே தொலைந்து போனார்கள்? எங்கே பதுங்கினார்கள்? அவர்கள் தங்களைப் போட்டுப் போர்த்திக் கொண்ட ஈரச்சாக்கு எது? ஏன் அவர்களில் ஒருவரின் தலைகூட வெளியில் தெரியவில்லை? கிருத்தவர்களையும் முஸ்லிம்களையும் மோதவிட்டு விட்டு இந்த யூத புல் தடுக்கி பயில்வான்கள் போன இடங்கள் யாவை? இந்த சந்தேகங்கள் இதைப் படிப்பவர்கள் மனங்களில் எழுந்திருக்கும். யாராவது அவர்களைத் தேடினீர்களா? 

இந்தக் கேள்விகளுக்கான பதில் மிகவும் எளிதானது. 

இன்றைக்கு உலகில் பெரிய பூச்சாண்டிகளாகத் தங்களைக் காட்டிக் கொண்டிருக்கும் இந்த யூத சமூகத்தினர் உண்மையில், ஒன்றாம் நம்பர் சந்தர்ப்பவாதிகள்; பயந்தாங்கொள்ளிகள். வீரத்திருமகன் சலாஹுதீன் அய்யூபி (ரஹ்) அவர்களும் சிங்க இதயம் படைத்தவரென்று புகழப்பட்டஆங்கில மன்னன் ரிச்சர்டும், ஜெர்மானிய சக்கரவர்த்தியும், பல போப் ஆண்டவர்களும் தங்களின் உயிரைவிட்டுப் போராடிக் கொண்டிருந்த நேரங்களில் நமக்கென்ன வந்தது என்று இந்தப் போர்களில் எந்தப்பக்கமும் சேராமல், தங்களின் உயிர்களைக் கைகளில் பிடித்துக் கொண்டு பாலஸ்தீனிலிருந்து விட்டால் போதுமென்று ஊரைக் காலி பண்ணிக் கொண்டு கண்பட்ட நாடுகளுக்கெல்லாம் அகதிகளாக ஓடிவிட்டார்கள். இவர்களின் இந்த பயந்தாங்கொள்ளித்தனத்தை சரித்திரம் குறித்து வைத்து இருக்கிறது. 

இன்று வல்லரசுகளின் தயவில் தங்களின் வாழ்வை ஒட்டிக் கொண்டிருக்கும் இந்த யூத துரோகிகள், போர்க்களத்தில் புறமுதுகிட்டு ஓடியவர்கள்தான் என்பதை நினவில் வைத்துக் கொள்ளுங்கள். பிற்காலத்தில் அகப்பட்ட அத்தனை நாடுகளிலும் குறிவைத்து இவர்கள் கொல்லப்பட்டதற்கும் கூட்டம் கூட்டமாக அடித்துத் துரத்தப்பட்டதற்கும் அவர்களின் இந்த சுயநலத்தன்மையும் ‘ புலிக்கு பயந்தவர்களே எல்லோரும் என் மீது படுத்துக் கொள்ளுங்கள்’ என்கிற இயல்பும் ஒரு காரணம் என்பதை இப்போது நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள். 

பாலஸ்தீன் பற்றி எரியும்போது யூதர்கள் இப்படி அந்நாட்டை விட்டு ஓடியது கிருத்துவ மற்றும் முஸ்லிம் படைகளுக்கு யூதர்கள் மீது தனிப்பட்ட வெறுப்பையும் கோபத்தையும் உண்டாக்கியது. இப்படி ஓடிய அவர்களுக்குப் பாடம் படித்துக் கொடுக்கவேண்டுமென்று இருதரப்புமே எண்ணி எதிர்பார்த்து இருந்தது. 

கிருத்தவர்களைப் பொருத்தவரையில், அவ்வளவு சிலுவைப் போர்களிலும் தோற்று கடைசியாக கையறு நிலையில் வெறுத்துப் போய் நாடு திரும்பிய சிலுவைப் போர் வீரர்கள் தங்களின் பங்குக்கு , தாங்கள் போகும் வழியில் ஏன் சும்மா போகவேண்டுமென்று எண்ணினார்களோ என்னவோ இன்றைய லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பதுங்கி இருந்த கிட்டத்தட்ட முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட யூதர்களை குடும்பத்துடன் கொன்று போட்டுவிட்டுத்தான் தங்களின் நாடுகளுக்குத் திரும்பினார்கள். அத்துடன் பல ஆயிரம் யூதர்களை அடிமைகளாக விலங்கிட்டு ஐரோப்பிய நாடுகளுக்கு அழைத்து –அல்ல- இழுத்துச் சென்றார்கள் என்பதையும் நாம் காண்கிறோம். 

இறைவனால் சபிக்கப்பட்ட இந்த யூத சமுதாயத்துக்கு கிருத்தவர்கள் இப்படித் தங்களின் பரிசை வழங்கினார்கள். இதற்குக் காரணம் யூதர்கள் கோழைகளாகி, போர்க்களத்தை விட்டும் போர்ப்பகுதிகளில் இருந்தும் ஓட்டமெடுத்தது மட்டுமல்ல ஹஜரத் நபி ஈசா (அலை) என்று முஸ்லிம்கள் குறிப்பிடுகிற இயேசுநாதரை சிலுவையில் அறைந்து கொலை செய்தவர்கள் இந்த யூதர்கள் என்கிற பரம்பரைக் கோபமும்தான் காரணம்.

ஆனால் முஸ்லிம்களோ அவர்களுக்கு மனிதாபிமானமாக அனுதாபம் காட்டி முஸ்லிம்கள் வென்ற இடங்களில் இருந்து யூதர்கள் வெளியேற விரும்பினால் அவர்களை பத்திரமாக போகவேண்டிய இடங்களுக்கு அனுப்பிவைத்தார்கள். ஆகவே உண்மையில் யூத இனம் நன்றி செலுத்த வேண்டுமென்றால் முஸ்லிம்களுக்கும் குறிப்பாக அரபு இனத்துக்கும்தான் காலத்துக்கும் நன்றி செலுத்த வேண்டும். ஆனால் இன்றோ கிருத்துவ வல்லரசுகளோடு கை கோர்த்துக் கொண்டு அரபு இனத்தை அழிப்பதற்கு ஆலவட்டம் கட்டி நிற்கிறது யூத இனம். 

ஹஜரத் உமர் (ரலி) அவர்களின் காலத்திலிருந்து சலாஹுதீன் அய்யூபி (ரஹ்) அவர்களையும் தொடர்ந்து வந்த சுல்தான்களும் யூதர்களை ஆதரித்தே வந்திருக்கிறார்கள். 

அடிப்படையில் ஒரே உருவமற்ற இறைவனை வணங்குவதிலும் ஆப்ரஹாமிய மதங்கள் என்று வரலாறு பெயர் சூட்டி அழைக்கும் மதங்களில் முதன்மை வகிக்கும் மதங்களை யூதர்களும் முஸ்லிம்களும் பின்பற்றுவதால் இயல்பிலேயே முஸ்லிம்களுக்கு யூதர்களின் மீது இரக்கம் இருந்தது. அதே இரக்கம் திரண்டுவந்த கிருத்துவர்களுக்கெதிரான முஸ்லிம்களின் உயிர்ப் போராட்டங்களுக்கு உதவாமல் - தோளோடு தோள் நிற்காமல் விலாங்கு மீன் நழுவுவது போல் நழுவி நாட்டை விட்டு ஓடிப் போன காரணத்தால் கிருத்துவர்களைப் போலவே முஸ்லிம்களுக்கும் யூதர்களின் மீது கடும் கோபத்தையும் வரவழைத்தது. முஸ்லிம்களின் யூதர்களின் மீதான இரக்கம் இறக்கம் கண்டது. 

ஆனாலும் யூதர்களின் பங்களிப்பு இல்லாமலேயே அல்லாஹ் முஸ்லிம்களுக்கு வெற்றிகளையையே தொடர்ந்து பரிசாக அளித்தான். இந்த வெற்றிகளில் பங்கு பெற்று கவுரவமான பங்காளிகளாகத் திகழ வேண்டிய யூதர்கள், நாடோடிகளாக உலகெங்கும் மூட்டை முடிச்சுகளோடு சாலைப் பணியாளர்கள் போல அலைந்தார்கள். சிலுவைப் போர்கள் நடைபெற்ற காலங்களில் முஸ்லிம்களோடு இணைந்து யூதர்களும் நின்று இருந்தால் நாடற்றவர்களாக அவர்கள் அலைந்த கதைகளும் கொத்துக் கொத்தாக அவர்கள் ஹிட்லர் முதலியவர்களால் கொலை செய்யப்பட்ட நிகழ்வுகளையும் சரித்திரம் சந்திக்காமலேயே போயிருக்க வாய்ப்பிருந்தது. அந்த நல்ல வாய்ப்பைக் கெடுத்துக் கொண்டவர்கள் யூதர்களே. வினையை விதைத்தவர்கள் வினையை அறுத்தார்கள். 

இது ஒருபுறமிருக்க ஐரோப்பா முழுதும் யூத சமூகத்தின் மீது ஒருவித வெறுப்பு உச்சகட்டத்தில் நீன்று நிலவ ஆரம்பித்தது. இதற்கு அடிப்படைக் காரணம், முன்னரே குறிப்பிட்டதுபோல் சிலுவைப் போர்களின்போது யூதர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக தங்களுடன் நிற்கவில்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும் யூதர்கள் என்றாலே அவர்கள் சுயநலக் காரியவாதிகள்; துரோகம் செய்வதில் முன்னணியில் நிற்பவர்கள் என்பதை ஐரோப்பிய உலகம் நன்றாக உணர்ந்து கொண்டது. அவர்கள் நாடோடிகளாகத் தங்களின் நாடுகளுக்கு வந்ததை எந்த ஐரோப்பிய நாடும் விரும்பவில்லை. அவர்களை தங்களின் நாடுகளைவிட்டு வெளியேற்றிவிட வேண்டுமென்று அவை ஆர்வம் காட்டின. ஐரோப்பிய நாடுகளில் அவர்கள், ‘முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்தாகவே ‘ நடத்தப்பட்டனர். 

யூதர்களின் மீது முதல் கல்லை எடுத்து வீசிய நாடு ஸ்பெயின் ஆகும். ஸ்பெயின் யூதர்களை தங்களின் நாட்டை விட்டு வெளியேற்றிய வரலாற்றுச் செய்திகள், அவற்றின் நடைமுறைகள் நம்மைக் குலை நடுங்கச் செய்கின்றன. 

1492 ! On July of that year, the entire Jewish community , some 200, 000 people were expelled from Spain. என்று வரலாறு குறிப்பிடுகிறது. ஒரு இனத்தை கூண்டோடு குறிப்பிட்ட தேதிக்குள் நாட்டைவிட்டு வெளியேறிவிட வேண்டுமென்று ஒரு நாட்டின் அரசு உத்தரவிட்டது பெரிய விஷயமல்ல. ஆனால் இறைவனால் சாபமிடப்பட்ட யூதர்கள் எப்படி இழிவு படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டார்கள் என்பதை ஒரு சாம்பிளுக்காக எடுத்துக் காட்டுவதானால் வரலாறு தருவதை அப்படியே தரலாம். 

Tens of thousands of refugees died while trying to reach safety. In some instances, Spanish ship captains charged Jewish passengers exorbitant sums, then dumped them overboard in the middle of the ocean. In the last days before the expulsion, rumors spread throughout Spain that the fleeing refugees had swallowed gold and diamonds, and many Jews were knifed to death by brigands hoping to find treasures in their stomachs.

யூதர்களின் இந்த இழிநிலையை கே. பி. சுந்தராம்பாள் பாணியில் , “ தப்பித்து வந்தானம்மா! பாவம் தனியாக நின்றானம்மா! காலம் கற்பித்த பாடத்தின் அடிதாங்க முடியாமல் தப்பித்து வந்தானம்மா “ என்றுதான் பாடவேண்டும். 

பெரும் தொகைகளை தப்பித்துச் செல்லும் கப்பலுக்கு கட்டணமாகச் செலுத்தினாலும் அவர்கள் சமுத்திரத்தின் நடுவில் குப்பைகளைப் போலக் கொட்டப்பட்டனர். நாட்டைவிட்டுச் செல்லும் யூதர்கள் ஸ்பெயினிலிருந்து தங்கத்தையும் வைரத்தையும் தங்களின் வயிறுகளில் வைத்து கடத்திச் செல்வதாக ஒரு வதந்தி எழுந்ததைத் தொடர்ந்து அவர்களின் வயிறுகள் கூர்மையான கத்திகளால் கீறப்பட்டு சோதனையிடப்பட்டன. இதனால் இறந்த யூதர்களின் எண்ணிக்கை எத்தனையோ.

பல ஆயிரம்பேர்கள் உயிர் பிழைக்கவேண்டுமானால் கிருத்துவ மதத்துக்கு மாறவேண்டுமென்று கட்டாயப்படுத்தப்பட்டு கிருத்துவ மதத்துக்கு மதம் மாற்றப்பட்டனர். மதம் மாற மறுத்த சைமன் மாயமி என்ற ஒரு யூதத்தலைவர் கழுத்து வரை தரையில் புதைக்கப்பட்டு ஏழுநாட்கள் அன்னம், தண்ணீர், ஆகாரமின்றி கொல்லப்பட்டார். இவைகள் சில உதாரணங்கள்தான்.

இவ்வளவு கொடுமைகளுக்கிடையிலும் பல யூதர்கள் பல்வேறு நாடுகளுக்குத் தப்பி சென்றனர். அவ்விதம் அவர்கள் நாடு பெயர்ந்தபோது தாங்கள் வட்டிக்குக் கொடுத்து சேர்த்திருந்த அத்தனை சொத்துக்களையும் போட்டது போட்டாற்போல் உயிர்பிழைத்தால் போதும் என்று ஓடினார்கள். ‘வட்டி, செல்வத்தை அழிக்கும் ‘ என்ற திருமறை குர் ஆனின் வாசகத்துக்கு இது ஒரு உதாரணம். அப்படித் தப்பிச் சென்ற நாடோடி யூதர்களில் ஒரு பகுதியினர்தான் அமெரிக்காவுக்கும் சென்றார்கள். இன்று அங்கிருந்துகொண்டு உலகை ஆட்டுவிக்கிறார்கள் என்பதை இந்த இடத்தில் நாம் நினைவு கொள்ள வேண்டும். அதே போல பல அரபு தேசங்களுக்கும் இவர்கள் தப்பிச்சென்றார்கள். இவர்கள் அரபு தேசங்களுக்கு குறிப்பாக துருக்கிக்குச் சென்றதை யூதர்கள் பெற்ற அதிர்ஷ்டம் என்று வரலாறு குறிப்பிடுகிறது. அங்கு அவர்கள் வரவேற்கப்பட்டதையும் குறிப்பிட்டுக் காட்டுகிறது இப்படி. 

“The most fortunate of the expelled Jews succeeded in escaping to Turkey. Sultan Bajazet welcomed them warmly.” (Source: Joseph Telushkin. Jewish Literacy NY: William Morrow and Co., 1991).

இப்படி அவர்களை வரவேற்று வாழ்வளித்ததற்கான விலையை, பச்சிளங்குழந்தைகள் மற்றும் வயோதிகர்களின் உயிர்களாக இன்று பாலஸ்தீனத்தில் குறிப்பாக காஸாவில் இந்தக் கொடியவர்களுக்குக் கொடுத்து வருகிறோம் என்பதை நாம் வேதனையுடன் குறிப்பிடாமல் இருக்க இயலாது. 

இப்படி ஸ்பெயினிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் எந்தெந்த நாடுகளுக்கு அகதிகளாகச் சென்றார்கள் என்பதை விக்கி ஒரு கணக்குப் பட்டியலாகத் தருகிறது. இதோ :- 

It may be of interest to give the following estimates of Loeb's of the numbers of those who were in Spain before the expulsion and of those who emigrated to different parts of the world:

Algeria 10,000
Americas 5,000
Egypt and Tripoli 2,000
France 3,000
Holland, England, Scandinavia and Hamburg 25,000
Italy 9,000
Morocco 20,000
Turkey 90,000
Elsewhere 1,000
Total emigrated 165,000
Baptized 50,000
Died en route 20,000
Total in Spain in 1492 235,000

ஸ்பெயினைப் பின்பற்றி இன்னும் பல ஐரோப்பிய நாடுகளும் யூதர்களின் கழுத்தைப் பிடித்துத் தள்ளி கதவை சாத்தின ; தூக்கி தூர வீசின. பிரிட்டன் உட்பட குறைந்த பட்சம் பதினைந்து நாடுகளாவது இவ்விதம் இவர்களை வெளியேற்றின. இதர ஐரோப்பிய நாடுகளின் வரலாற்றில் யூதர்களை வெளியேற்றுவது என்பது ஒரு நடைமுறையாகவே பின்பற்றப்பட்டது. அப்போதெல்லாம் அவர்களுக்கு அடைக்கலம் தந்த நாடுகள் மத்திய கிழக்கில் இருந்த அரபு நாடுகள்தான் . அதையும் மீறி சிலர் வடஆப்ரிக்க நாடுகளுக்கும் அமெரிக்க நாடுகளுக்கும் பின்னங்கால்கள் பிடரியில் பட ஓடினார்கள்! ஓடினார்கள்! வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினார்கள். 

இப்படிப் பட்ட வெள்ளாடுகள்தான் இந்த யூதர்கள். சரி ! இந்த வெள்ளாடு எப்படி வேங்கையானது? 

இன்ஷா அல்லாஹ் தொடரலாம்...

இபுராஹிம் அன்சாரி

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 92 3

அதிரைநிருபர் பதிப்பகம் | October 24, 2014 | ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!

 “எந்த நபியும் தன் சமுதாயத்தினரிடம் பொய்யனும் ஒற்றைக் கண் உடையவனுமான (தஜ்ஜால்) அவனைப் பற்றி எச்சரிக்காமல் இருந்ததில்லை. அறிந்து கொள்க! நிச்சயமாக அவன் ஒற்றைக் கண் உடையவன் ஆவான். நிச்சயமாக உங்களின் இறைவன், ஒற்றைக் கண் உடையவன் இல்லை. தஜ்ஜாலின் இரு கண்களுக்கிடையே காபிர் என்று எழுதப்பட்டிருக்கும்என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) ( ரியாளுஸ்ஸாலிஹீன்:1817 )

யூதர்களிடம் முஸ்லிம்கள் போர் புரியும் வரை மறுமை நாள் ஏற்படாது. அப்போது யூதர்கள் பாறை, மரங்களின் பின்னே ஒளிந்து கொள்வார்கள். அப்போது பாறையும், மரமும் முஸ்லிமே இதோ! என் பின்னே யூதன் உள்ளான். இங்கு வருவீராக! அவனைக் கொல்வீராக! என்று கூறும். ஆனால் ''ஹர்கத்'' என்ற (முள்) மரத்தைத் தவிர அந்த (முள்) மரம், யூதர் மரமாகும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1820 ) (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1820 )

நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் ஒரு சபையில் பேசிக் கொண்டிருந்தபோது, ஒரு கிராமவாசி வந்து, ''மறுமை நாள் எப்போது வரும்?'' என்று  கேட்டார். நபி(ஸல்) அவர்கள் பொருட்படுத்தாமல் பேசிக்கொண்டே இருந்தார்கள். மக்களில் சிலர், ''இவர் கூறியதை நபி(ஸல்) அவர்கள் வெறுக்கிறார்கள்'' என்று கூறினர். வேறு சிலரோ, ''இவர் கூறியதை அவர்கள் கேட்கவே இல்லை'' என்று கூறினார்கள். இறுதியாக தன் பேச்சை முடித்துக் கொண்டு, ''மறுமை நாள் பற்றி கேட்டவர் எங்கே?'' என்று நபி(ஸல்) கேட்டார்கள். இறைத்தூதர் அவர்களே! அது நான் தான்'' என அவர் கூறினார். ''நம்பிக்ககை மோசடி செய்யப்படும்போது, மறுமை நாளை நீர் எதிர் பார்ப்பீராக!'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.  ''நம்பிக்கை மோசடி என்பது எப்படிஎன்று கேட்டார். தகுதி இல்லதவர்களிடம் ஆட்சி வழங்கப்பட்டால் மறுமை நாளை எதிர்பார்ப்பீராக!'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.  (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1837 )

அல்லாஹ்விடம் பூமியில் மிகப் பிரியமான இடம், பள்ளிவாசல்களாகும். அல்லாஹ்விடம் பூமியில் மிகக் கோபத்திற்குரிய இடம் கடைவீதிகளாகும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) ( ரியாளுஸ்ஸாலிஹீன்:1841 )

வானவர்கள் ஒளியினால் படைக்கப்பட்டார்கள். நெருப்பு ஜுவாலையால் ஜின்கள் படைக்கப்பட்டனர்.  உங்களிடம் வர்ணிக்கப்பட்ட (மண்) மூலம் ஆதம் (அலை) படைக்கப்பட்டார்கள்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1846 )

அல்லாஹ்வை சந்திப்பதை ஒருவன் விரும்பினால், அவனை சந்திப்பதற்கு அல்லாஹ்வும் விரும்புகிறான். அல்லாஹ்வை சந்திப்பதை ஒருவன் வெறுத்தால், அவனை சந்திப்பதை அல்லாஹ்வும் வெறுக்கிறான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். ''இறைத்தூதர் அவர்களே! மரணத்தை வெறுக்கலாமா?'' நாங்கள் மரணத்தை வெறுக்கிறோமே! என்று கேட்டேன். ''அது அப்படி அல்ல! எனினும் ஒரு மூஃமின். அல்லாஹ்வின் அருள், அவனது திருப்தி அவனது சொர்க்கம் பற்றி சுபச் செய்தி கூறப்பட்டால், அல்லாஹ்வின் சந்திப்பை விரும்புகிறான். உடனே அல்லாஹ்வும் அவனை சந்திக்க விரும்புகிறான். ஓர் இறை மறுப்பாளன், அல்லாஹ்வின் வேதனை, அவனது கோபம் பற்றி செய்தி கூறப்பட்டால், அல்லாஹ்வை சந்திக்க வெறுக்கிறான்.  அல்லாஹ்வும் அவனை சந்திக்க வெறுக்கிறான்'' என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1848)

 ''நபி(ஸல்) அவர்கள் (பள்ளிவாசலில்) இஹ்திகாஃப் இருந்தார்கள். அவர்களை சந்திக்க ஒருநாள் இரவு வந்தேன். அவர்களிடம் பேசிவிட்டு, வீட்டிற்குச் செல்ல எழுந்தேன். என்னை அனுப்பி வைக்க என்னுடன் நபி(ஸல்)அவர்களும் எழுந்தார்கள். அப்போது (மதீனாவாசிகளான) அன்சாரீ நபித்தோழர்கள் இருவர் நடந்து சென்றனர். அந்த இருவரும் வேகமாக நடந்து சென்றதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள், ''நீங்கள் இருவரும் நில்லுங்கள். இவள், (என் மனைவி) ஸபிய்யா பின்த் ஹுயய் தான்'' என்று கூறினார்கள். ''சுப்ஹானல்லாஹ்! (இறைத்தூதர் அவர்களே! நாங்கள் சந்தேகப்படவில்லையே)'' என்று இருவரும் கூறினார்கள். அப்போது ''நிச்சயமாக ஷைத்தான், ஆதமின் மகனின் (மனிதனின்) ரத்த நரம்புகளில் ஓடுகிறான். உங்கள் இருவரின் உள்ளங்களில் தீய எண்ணத்தை அவன் போட்டு விடக்கூடும் என்று பயப்படுகிறேன்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸபிய்யா பின்த் ஹுயய் (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்)    (ரியாளுஸ்ஸாலிஹீன்:1849)

''மனிதர்களே! நிச்சயமாக அல்லாஹ் தூய்மையானவன், தூய்மையானதைத் தவிர அவன் ஒப்புக் கொள்ளமாட்டான். மேலும் அல்லாஹ் தூதர்களுக்கு கட்டளையிட்டதையே மூஃமின்களுக்கும் கட்டளையிடுகிறான்'' என்று நபி(ஸல்)கூறிவிட்டு (பின்வரும்) வசனங்களை ஓதினார்கள்.

அல்லாஹ் கூறுகிறான்:

தூதர்களே! தூய்மையானவற்றிலிருந்து உண்ணுங்கள். நற்செயல் செய்யுங்கள். (அல்குர்ஆன் : 23:51)

''இறை நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு நாம் அளித்தவற்றிலிருந்து தூய்மையானவற்றை உண்ணுங்கள்.'' (அல்குர்ஆன் : 2:172)

பின்பு நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதர் பற்றி கூறினார்கள்:

ஒருவர் நீண்ட பயணம் மேற்கொள்கிறார். புழுதி படிந்தவராகவும், பரட்டைத் தலையுடையவராகவும் உள்ளார். தன் கைகளை வானத்தின் பக்கம் உயர்த்தி, ''இறைவா! இறைவா! என்று கூறுகிறார். அவரது உணவு ஹராமாக உள்ளது. அவரது பானமும் ஹராமாக உள்ளது. ஹராமானதையே ஆடையாகவும் அணிகிறார். பிறகு எப்படி துஆ ஏற்கப்படும்?'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1851 )

நபி(ஸல்) மறுமை நாளில் மூன்று பேர்களிடம் அல்லாஹ் பேசமாட்டான். அவர்களைத் தூய்மைபடுத்த மாட்டான். அவர்களைப் பார்க்க மாட்டான். அவர்களுக்கு நோவினைதரும் வேதனை உண்டு. 1) விபச்சாரம் செய்யும் வயோதிகன் 2) பொய் கூறும் அரசன் 3) தற்பெருமை கொள்ளும் ஏழை என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) ( ரியாளுஸ்ஸாலிஹீன்:1852 )

''அல்லாஹ்வின் மீது சத்தியமாக, நிச்சயமாக நான் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருகிறேன். தினமும் 70 தடவைக்கும் மேலாக பாவமன்னிப்பு கேட்கிறேன்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்.  (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி) ( ரியாளுஸ்ஸாலிஹீன்:1870 )

ஆதமின் மகனே!  நிச்சயமாக நீ என்னிடம் துஆ செய்யும் காலமெல்லாம் என்னை நீ நம்பும் காலமெல்லாம் உன்னில்; ஏற்படும் குற்றத்தை நான் மன்னிப்பேன். நான் பொருட்படுத்த மாட்டேன். ஆதமின் மகனே! வானத்தின் முகட்டை உன் பாவங்கள் அடைந்து, பின்பு, என்னிடம் நீ பாவமன்னிப்புக் கோரினால் உன்னை மன்னிப்பேன். நான் பொருட்படுத்தமாட்டேன். ஆதமின் மகனே! நீ பூமி நிரம்ப என்னிடம் பாவத்தைக் கொண்டு வந்து, பின்பு எனக்கு எதையும் நீ இணை வைக்காதவனாக என்னை நீ சந்தித்தால், அது நிரம்ப உனக்கு நான் மன்னிப்பைத் தருவேன்'' என்று அல்லாஹ் கூறினான் என நபி(ஸல்) கூற நான் கேட்டேன். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1878 )

''சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் நுழைந்ததும், ஓர் அழைப்பாளர் (வானவர்), ''நிச்சயமாக உங்களுக்கு நிரந்தரமான வாழ்க்கை உண்டு. எக்காலமும் நீங்கள் இறந்து விட மாட்டீர்கள். நிச்சயமாக உடல் நலத்துடன் இருப்பது உண்டு. எக்காலமும் நீங்கள் நோயாளியாகி விட மாட்டீர்கள். நிச்சயமாக நீங்கள் வாலிபர்களாக இருப்பதுண்டு. எக்காலமும் நீங்கள் முதுமையாகி விடமாட்டீர்கள். நீங்கள் இங்கு சுகத்தை அனுபவிக்க உங்களுக்கு உரிமை உண்டு. எக்காலமும் நீங்கள் சிரமப்படமாட்டீர்கள் என அறிவிப்பு செய்வார்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி), அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1892)

''சொர்க்கத்தில் உங்களில் ஒருவரின் தாழ்ந்த நிலை என்பது, அவரிடம் அல்லாஹ் ''நீ ஆசை கொள்'' என்று கூறுவதுதான். உடனே அவர் ஆசை கொள்வார். மேலும் ஆசை கொள்வார். ''நீ ஆசை கொண்டாயா?''என்று அல்லாஹ் அவரிடம் கேட்பான். ''ஆம்'' என்பார். உடனே அல்லாஹ் அவரிடம் ''நிச்சயமாக நீ நினைத்தது உனக்குண்டு. மேலும் அத்துடன் அது போன்றதும் உண்டு'' என்று கூறுவான் என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்)( ரியாளுஸ்ஸாலிஹீன்:1893)

 ''சொர்க்கவாசிகளைப் பார்த்து அல்லாஹ், ''சொர்க்கவாசிகளே!'' என்று அழைப்பான். உடனே அவர்கள், ''எங்கள் இறைவா! உன்னிடம் ஆஜாரகி விட்டோம். உன்னிடம் வந்து விட்டோம். நன்மைகள் அனைத்தும் உன் வசமே உள்ளது'' என்று கூறுவார்கள். ''நீங்கள் திருப்தி அடைந்தீர்களா?'' என்று அல்லாஹ் கேட்பான். உடனே அவர்கள், ''எங்கள் இறைவா!  நாங்கள் எப்படி திருப்தி அடையாமல் இருப்போம். உன் படைப்பினங்களில் எவருக்கும் நீ அளிக்காத ஒன்றை எங்களுக்குக் கொடுத்துள்ளாயே?'' என்று கூறுவார்கள். '' இதைவிட மிகச் சிறந்ததை உங்களுக்கு நான் கொடுக்கட்டுமா?'' என்று கேட்பான். ''இதையும் விட மிகச் சிறந்தது எது?''  என்று அவர்கள் கேட்பார்கள். உடனே அவன் ''உங்களுக்கு என் திருப்தியை தந்து விட்டேன். இதன் பின் எப்போதும் உங்களிடம் நான் கோபம் கொள்ள மாட்டேன்'' என்று கூறுவான் என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) ( ரியாளுஸ்ஸாலிஹீன்:1894 )

 ''நபி(ஸல்) அவர்களின் அருகில் இருந்தோம். அப்போது அவர்கள் பவுர்ணமி இரவு நிலவைக் கண்டார்கள். ''இந்த நிலாவை நீங்கள் பார்ப்பது போல், நிச்சயமாக நீங்கள் உங்கள் இறைவனைக் கண்களால் மறுமையில் காண்பீர்கள். அவனைப் பார்க்கும்  விஷயத்தில் இடைஞ்சல் - இடையூறு அளிக்கப்படமாட்டீர்கள்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜரீர் இப்னு அப்துல்லா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) ( ரியாளுஸ்ஸாலிஹீன்:1895 )

சுஹைப் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
'சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் நுழைந்து விட்டால், அல்லாஹ் ''எதையேனும் நீங்கள் விரும்பினால் உங்களுக்கு அதிகப்படுத்துகிறேன்'' என்று கூறுவான். அதற்கு அவர்கள் ''எங்களின் முகங்களை நீ வெண்மையாக்கி விடவில்லையா? சொர்க்கத்தில் எங்களை நுழையச் செய்து நரகை விட்டும் எங்களை நீ காப்பாற்றி விடவில்லையா?'' என்று கூறுவார்கள். உடனே அல்லாஹ் (தனக்கும், அவர்களுக்குமிடையே உள்ள) திரையை திறப்பான். தங்களின் இறைவனை அவர்கள் பார்ப்பதை விட, அவர்களுக்கு விருப்பமான,வேறு எதையும் அவர்கள் வழங்கப்பட வில்லை. (அவனைப் பார்ப்பதுதான் மிக விருப்பமானது)'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: சுஹைப் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன் : 1896)

அல்லாஹ் கூறுகிறான்:

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தவர்களை அவர்கள் நம்பிக்கை கொண்டதன் காரணமாக அவர்களின் இறைவன் இன்பம் நிறைந்த சொர்க்கச் சோலைகளில் சேர்ப்பான். அவர்களுக்குக் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும்.

''அல்லாஹ்வே! நீ தூயவன்''. என்பதே அங்கே அவர்களின் பிரார்த்தனை. ஸலாம் தான் அங்கே அவர்களின் வாழ்த்து. ''அகிலத்தாரின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்'' என்பதே அவர்களது பிரார்த்தனையின் முடிவாகும். (அல்குர்ஆன் : 10 : 9 – 10)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)
'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
நிறைவுற்றது!!!
குறிப்பு:
அன்புச்சகோதரர்களே :
இத்துடன் ரியாளுஸ்ஸாலிஹீன் தொகுப்பில் உள்ள ஹதீஸ் முடிந்தது.


வேறு தொகுப்பில் உள்ள ஹதீஸ்களை தொகுப்பதற்கு சில காலங்கள் தேவைப்படும். தொகுத்த பிறகு தொடர்கிறேன். இன்ஷாஅல்லாஹ்!

அலாவுதீன் S.


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு