Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பத்தாம் வகுப்பு தேர்வில் அதிரை பள்ளி மாணாக்களின் எழுச்சி ! 13

அதிரைநிருபர் பதிப்பகம் | May 31, 2013 | , , , ,

அதிரையின் பிரதான பள்ளிகளான காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி (ஆண்கள், பெண்கள்) மற்றும் இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளி (ஆண்கள் பெண்கள்) மாணாக்கள் பத்தாம் வகுப்பு தேர்வில் சிறப்பான மதிப்பெண்கள் எடுத்து இருக்கிறார்கள்.

வழமைபோல் மாணவிகளின் ஆளுமை வெற்றிப் படிக்கட்டுகளை எட்டிப் பிடிப்பதில் முன்னனியில் இருக்கிறார்கள், இதுபோல் வரும் காலங்களில் மாணவர்களும் தொடர்ந்து தங்களது நிலைகளை மேலும் உயர்த்திக் கொண்டு தங்களின் படிப்பில் கவனம் சிதைக்கும் எக்காரியத்திலும் ஈடுபடாமல் சிறப்பான வெற்றிகளைப் பெற வேண்டும் இன்ஷா அல்லாஹ் !

முதல் மூன்று இடங்களை எடுத்தவர்கள் மட்டுமல்ல பதின்ம பருவத்தின் சவலாக இருக்கும் பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றி கண்ட அனைத்து மாணாக்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

சாதனை படைத்த மாணவ மாணவிகளின் பெற்றொர்களின் மகிழ்ச்சியில் நாங்களும் பங்கெடுத்துக் கொள்கிறோம்.

மேலும் இது போன்று கல்வியில் சாதனைகள் பல பெற்று பெற்றவர்களுக்கும் சமுதாயத்திற்கும் நம் நாட்டிற்கும் நற்பெயர் வாங்கித்தர வேண்டும் என்று வல்ல அல்லாஹ்விடம் து ஆ செய்கிறோம்.

அன்பு மாணவச் செல்வங்களே ! பெற்றோர்க்கு உகந்த பிள்ளைகளாகவும், அவர்களின் உள்ளம் குளிரும் நன்மக்களாகவும் இருந்து அவர்களுக்கு நற்பெயரை என்றென்றும் நிலைத்திருக்க வையுங்கள் இன்ஷா அல்லாஹ் !

அதிரைநிருபர் பதிப்பகம்

13 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

வெற்றியிடங்களைப் பெற்ற அன்புச் செல்வங்களான மாணாக்களுக்கு இனி வெற்றிடங்களே இல்லை என்று சாதனைகள் மேல் சாதனைகள் படைக்க வேண்டும் இன்ஷா அல்லாஹ் !

உங்களுடன் இணைந்து உழைத்த ஒத்துழைத்த பெற்றோர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் வல்லாமி நிறைந்த அல்லாஹ் அருள்புரிவானாக !

மென்மேலும் வெற்றிகளை குவிக்க வேண்டும் இன்ஷா அல்லாஹ் !

தகவல் : இமாம் ஷாஃபி பள்ளி பெண்கள் பிரிவில் முத மதிப்பெண் பெற்ற மருமகள் சுஹைமாவின் உம்மா வீட்டு அப்பா அவர்கள் இன்று காலை ரிஸல்ட் வருவதற்கு முன்னர் அழுத்தமாகச் சொன்னார்கள் 480க்கு மேல் பேத்தி எடுப்பேன் என்று அவ்வளவு உறுதியாக சொன்னதாக சொன்னார்கள் சாதித்து விட்டார் சுஹைமா.

Unknown said...

அண்மைக்காலமாக அதிரையின் கல்வியின் தரம் உயர்ந்தது கொண்டு இருக்கின்றது என்பதற்கு இம்மானாக்கர்களே சாட்சி.

மேலும் மேலும் அதிரையின் கல்வியின் தரம் உயர்ந்து
அதிரை மக்கள் அனைவரும் அதிரையிலே படிக்கும் காலம் வெகு
தொலைவில் இல்லை.

அதிரையின் கல்வியின் தரம் உயரட்டும்
அதை நம் மக்கள் பயன்படுத்தட்டும்

அபு ஆசிப்.

Ebrahim Ansari said...

மிக்க மகிழ்ச்சி தரும் செய்திகள்.

வெற்றி பெற்ற அனைவரையும் பாராட்டுவோம்.

sabeer.abushahruk said...

மிக்க மகிழ்ச்சி தரும் செய்திகள்.

வெற்றி பெற்ற அனைவரையும் பாராட்டுவோம்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

உங்கள் எதிர்காலம் இன்பமாய் பதினாறும் பெற்று அமையட்டுமாக.
உங்களுடன் இணைந்து உழைத்த ஒத்துழைத்த பெற்றோர்கள்,
ஆசிரியர்கள் அனைவருக்கும் எல்லாம் நிறைந்த அல்லாஹ் அருள்புரிவானாக !

அபூ சுஹைமா said...

மிக்க மகிழ்ச்சி. ஈன்ற பொழுதினும் என்ற குறளின் பொருளையும் இன்று உணர்ந்தேன்.

வாழ்த்திய சகோதரர்களுக்கு நன்றி.

Unknown said...

A.K. சுஹைமா என் காக்கா வீட்டு பேத்தி என்பதில் எனக்கு மட்டற்ற
மகிழ்ச்சி.

அபு ஆசிப்.

Aboobakkar, Can. said...

மாஷா அல்லாஹ் ...வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் ......வாழ்க மாணவர்களின் கல்வி ஆர்வம் .எனது இளைய மகள் A ஷபனா ஜமீலா ராணிபேட்டை லிட்டில் பிளவர் காண்வென்டில் -475 மதிப்பெண்கள் பெற்றுள்ளது மேலும் எனது மகள் பகிமா 2009ல் நமதூர் பள்ளியில் 472 மதிப்பெண்கள் பெற்றதையும் மேலும் எனது மருமகள் மரியம் பாத்திமா -480 மதிப்பெண்கள் பெற்றதையும் கண்டு பெருமைப்படுகிறேன் .

தாஜுதீன் (THAJUDEEN ) said...

சாதனை படைத்த மாணவ மாணவிகளின் பெற்றொர்களின் மகிழ்ச்சியில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறோன்.

மேலும் இது போன்று கல்வியில் சாதனைகள் பல பெற்று பெற்றவர்களுக்கும் சமுதாயத்திற்கும் நம் நாட்டிற்கும் நற்பெயர் வாங்கித்தர வேண்டும் என்று வல்ல அல்லாஹ்விடம் து ஆ செய்கிறோன்.

அப்துல்மாலிக் said...

உயர்கல்வியில் சிறந்துவிளங்கி சமுதாயத்துக்கு நற்பனியாற்றிட இன்றே வாழ்த்துகிறேன் இம்மாணாக்களை, இதற்க்காக எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்த பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள்

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

உயர்கல்வியில் சிறந்துவிளங்கி சமுதாயத்துக்கு நற்பனியாற்றிட இன்றே வாழ்த்துகிறேன் இம்மாணாக்களை, இதற்க்காக எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்த பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள்

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

உங்களுடன் இணைந்து உழைத்த ஒத்துழைத்த பெற்றோர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் வல்லாமி நிறைந்த அல்லாஹ் அருள்புரிவானாக!

வெற்றிபெற்ற மாணவச்செல்வங்கள் இனி சாதனைகள் மேல் சாதனைகள் படைத்து வெற்றிகளை குவிக்க வேண்டும் படைத்த நாயன் துணைகொண்டு.

abuhamna said...

Mikka magizhchi...romba mukkiyamaaga maarka vishayangalil gavanam selutha aarva paduthavum....

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு