Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

உணர்ச்சி வசப்படும் சமுதாயமாகி விட்டோமா? 3

அதிரைநிருபர் பதிப்பகம் | August 27, 2014 | ,

இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா...? - 3 

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

"அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்! 

அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேடியவனாக, அல்லாஹ் நேர்வழி காட்டியவரை கெடுப்பவன் இல்லை. அவன் வழிகேட்டில் விட்டவரை நல்வழிப்படுத்துபவன் இல்லை. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையில்லை என்றும்,  முஹம்மது (ஸல்)அவர்கள் அவனது அடியார் என்றும், அவனது தூதர் என்றும் உறுதி கூறுகின்றேன்”. நம்முடைய வாழ்வின் வழிகாட்டி, நம் உயிரினும் மேலான உத்தம நபி முஹம்மது(ஸல்) அவர்கள் தம்முடைய ஒவ்வொரு உபதேசத்திலும் மக்களுக்கு எடுத்துச் சொன்ன அதே உபதேசத்தை உங்களுக்கும் எனக்கும் நினைவூட்டியவனாக ஆரம்பிக்கிறேன்.

உலக மாந்தர்க்கெல்லாம் முன்மாதிரி நம் அருமை இறைத்தூதர் அண்ணல் நபி(ஸல்) என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்தில்லை, ஏன் பிற மதத்தவர்கள் பலருக்கும் தெரியும் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மட்டும் தான் இந்த மனித இனத்திற்கு முன்மாதிரிகளில் முதன்மையானவர் என்று. ஆனால், முன் மாதிரி, என்று வெறும் பேச்சளவில் மட்டுமே நாம் சொல்லுகிறோமே தவிர அவர்கள் நமக்காக அல்லாஹ்விடமிருந்து கொண்டு வந்த வஹியான திருக்குர்ஆனின் கட்டளைகள், அல்லாஹ்வின் கட்டளைப்படி மார்க்கமாக்கப்பட்ட முஹம்மது (ஸல்) அவர்களின் சொல் செயல் அங்கீகாரம் இவைகளை நம் வாழ்வில் கடைப்பிடித்து இறை மார்க்கமான “இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா ?” என்ற வினாவோடு இந்த அத்தியாயம் தொடர்கிறது.

உணர்ச்சி வசப்படும் சமுதாயமாகி விட்டோமா?

இஸ்லாமிய வரலாற்றில் பொறுமைக்கும், அமைதிக்கும், சகிப்புத்தன்மைக்கும் எடுத்தகாட்டாக வாழ்ந்த அண்ணல் நபி(ஸல்) அவர்களை முன்னுதாரணமாக கொண்ட நம் முஸ்லீம் சமூகம் கண்டதுக்கெல்லாம் உணர்ச்சிவசப்படும் சமூகமாக மாறி வருவதை நாம் அன்றாடம் அவதானிக்க முடிகிறது. உலகலாவிய அளவில் ஒரு சிலர் முஸ்லீம்கள் என்ற போர்வையில் எடுத்ததற்கெல்லாம் உணர்ச்சிவசப்படுவதாக சித்தரிக்கப்பட்டு, நம்மை ஒரு தனிமைப் படுத்தப்பட்ட சமுதாயமாக மாற்ற மிகப்பெரிய சூழ்ச்சி யூத நஸாராக்களால் கட்டவிழ்த்தப்படுகிறது என்ற நிலையை மறுக்க முடியாத உண்மை.

இந்தியா, இலங்கை, ஈராக், ஆப்கானிஸ்தான், செச்சன்யா போன்ற பிரதேசங்களில் முஸ்லீம்கள் தங்கள் உரிமைக்கு போராடினார்கள் என்று வரலாற்று புத்தகத்தை புரட்டினால், அவைகளில் உண்மை சம்பவங்களை மறைத்து, முஸ்லீம்கள் பொறுமை காக்கவில்லை என்பதையே பதிவு செய்யப்படுகிறது யூத நஸாராக்களின் சூழ்ச்சிகளால்.

ஆனால் ஒரு காலத்தில் ரஷ்யாவை அடக்க அல்கயிதா உருவாக காரணமாக இருந்தது அமெரிக்கா, ரஷ்யாவை ஒடுக்கியபின், அல்கயிதா இஸ்லாமியர்களின் மனதில் இடம்பிடிக்க ஆரம்பித்தவுடன், அவர்களின் அதீத வளர்ச்சிக்கு அஞ்சி, ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளின் மேல் போர் தொடுத்து அப்பாவி முஸ்லீம்களை தங்களின் பொட்டைத்தனமான வான்வழி தாக்குதலால் கொன்று குவித்தார்கள். பின் தன்னால் வளர்த்து விடப்பட்டவன் தனக்கு காலம் முழுக்க அடிமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறாத காரணத்தால், அமெரிக்கா அல்கயிதாவை அழிக்க திட்டம் தீட்டி. தான் வைத்திருக்கும் மீடியா பலத்தால், அல்கயிதாவை கொடூர இயக்கமாக சித்தரித்து முஸ்லீம்கள் மத்தியிலும் அல்கயிதாவின் மீது வெறுப்பை உருவாக்கி, பின்னார் அதன் தலைவரையும் கொலை செய்தது. இருப்பினும் அல்கயிதா தலைவரை கொன்றால், அல்கயிதாவையும் அழித்துவிடலாம் என்று கட்டம் கட்டிய அமெரிக்காவுக்கு தற்போது இருக்கும் மிகப்பெரும் சவாலாக உலக அளவில் உருவெடுத்துள்ளது தான் யூ எஸ் ஏ வின் செல்லப்பிள்ளை என்று முதலில் அறிமுகப்படுத்தபட்ட ஐ.எஸ்.ஐ.எஸ்.

இஸ்லாமிய வரலாற்றில், நபி(ஸல்) அவர்களின் காலத்திற்கு பின்னர் சத்திய சஹாபாக்கள், பின்னர் இமாம்கள், ஏராளாமான நல்லாட்சியாளர்கள் இஸ்லாமிய வழி முறையில் தங்களின் ஆட்சியை மிகச் சிறப்பாக செய்து மக்களுக்கு நன்மைகள் பல செய்து உலக மக்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளார்கள். இருப்பினும் சில பெயர் தாங்கி முஸ்லீம்கள் இஸ்லாத்திற்கு அவபெயர் தரும்விதமாக தங்களின் சுய லாபத்திற்காக வழிதவறி ஆட்சி செய்தார்கள். இவ்வாறானவர்களின் ஆட்சி முறைகளை எடுத்துக்காட்டி முஸ்லீம்களை கொடூரக்காரர்கள், கேவலமானவர்கள் என்று சித்தரித்து அல்லாஹ்வின் மார்க்கமான இஸ்லாத்தை இவ்வுலகை விட்டு அழித்தொழிக்க அன்றாடம் திட்டம் தீட்டியவண்ணம் உள்ளனர் காவித் தீவிரவாதிகளும், யூத நஸாராக்கூட்டனியும். அல்லாஹ்வின் மார்க்கத்தை அழிக்க இந்த சுண்டக்காய்கள் செய்யும் சூழ்ச்சியால் ஒன்று செய்ய முடியாது. மாறாக இன்று வளர்ந்து வரும் கொள்கையில் முதன்மையாக இருப்பது இஸ்லாமிய கொள்கையே என்பதை மேற்கத்திய நாடுகள் இன்று அவர்களின் குடிமக்கள் இஸ்லாத்தை அதிகமதிகம் ஏற்கிறார்கள் என்ற அத்தாட்சிகளை கண்டு அதிர்ந்து போய் உள்ளார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

மேற்கத்திய யூத நஸாராக்களின் சூழ்ச்சிகள் ஒரு புறமிருக்க, முஸ்லீம்கள் என்று தங்களை அறிவித்துக் கொண்டுள்ள ஷியாக்களும் தங்களுடைய வழிகெட்ட கொள்கையை சதாகமாக்கிக் கொள்வதற்காக, இஸ்ரேல் பாலஸ்தீனப் பிரச்சினைகளை வைத்து அரசியல் செய்து, அவ்வபோது முஸ்லீம்களை உணர்ச்சிவசப்பட வைத்து வேடிக்கை பார்த்து வருகிறது என்று வரலாற்றில் மறைக்கப்பட்டு வரும் மிகப்பெரும் மோசடியாக கருத்தப்படுகிறது. ஒரு புறம் சிரியாவிலும், ஈராக்கிலும் கொத்து கொத்தாக அப்பாவிகள் கொல்லப்படுகிறார்கள், முஸ்லீம்களை உணர்ச்சி வசப்பட வைத்து வேடிக்கை பார்க்கிறார்கள் ஷியா அடி வருடிகளான பஸ்ஸார் அல் அசத், ஈரானிய அரசு, ஹிச்பல்லா இயக்கம். மேலும் இவர்களின் இந்த இனப்படுகொலை செயலை கண்டிக்கக்கூட துப்பற்றவர்களாக இன்று கிலாபத்தை (ஐ.எஸ்.ஐ.எஸ். அல்லாத)  முன்னிலைப் படுத்தி அரசியல் சாக்கடையில் விழும் இஸ்லாமிய இயக்கங்கள் இருக்கிறார்கள்.

ஐஎஸ்ஐஎஸ் பற்றி பரவலாக தகவல்கள் மீடியாக்களில் அவ்வபோது வெளிவந்த வண்ணம் உள்ளது. அவைகளில் உண்மையும் இருக்கலாம், பொய்யும் இருக்கலாம். இஸ்லாம் எந்த மனிதனையும் அநியாயமாக கொலை செய்யக்கூடாது என்கிறது. ஒருவன் செய்யும் பாவத்தை மற்றவன் ஏற்க வேண்டும் என்ற விதி இஸ்லாத்தில் இல்லை. மேலும் பழிவாங்குவதையே முன்னிலைப்படுத்துவதை விட மன்னிப்பை முன்னிலைப்படுத்தும் அழகிய மார்க்கம் இஸ்லாம். ஐ எஸ் ஐ எஸ் இஸ்லாமிய கிலாபத்தை அறிவித்திருப்பது மார்க்கப்படி சரியா? தவறா? என்பது விவாதிக்கப்பட வேண்டிய விசயம் என்றாலும். இன்று ஈராக்கிலும் சிரியாவிலும் ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகள் அங்குள்ள மக்களுக்கு அன்றாடம் தேவைப்படும் உணவு பொருட்களை, சமையல் எரிவாயு போன்றவைகளை மலிவு விலையில் விநியோகித்து, பசி பட்டினியால் சாகக்கிடக்கும் ஏராளாமான மக்களை அல்லாஹ்வின் உதவியுடன் காப்பாற்றி வருகிறார்கள் என்பதை காணொளிகள், புகைப்படங்களில் காண முடிகிறது. ஆனால் அவர்கள் பெயரில் வரும் மாறுபட்ட சில செய்திகள், அதாவது அப்பாவிகளை கொல்லுவது போன்ற காட்சிகள் முஸ்லீம்களிடம் ஐஎஸ்ஐஎஸ் போராளி இயக்கம் வெறுப்பை சம்பாதிக்கிறது என்பதை யாரும் மறுக்க இயலாது. உண்மையில் ஈராக்கிலும், சிரியாவிலும் என்ன நடக்கிறது என்பது யாருக்கு தெரியாது. ஆனால் ஐஎஸ்ஐஎஸ் பற்றிய செய்திகளை ஆய்வு செய்யாமல் அர்வக் கோளாற்றால் முகநூலில் எதிராகவும் சார்பாகவும் மனதில் தோன்றியதை எழுதி வருகிறார்கள்.

இது போல் காஸாவில் 1000க் கணக்கான அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவதை எந்த ஒரு மனிதாபமான உள்ளவனாலும் சகிக்க முடியாது. இது ஒரு புறமிருக்க, உணர்ச்சிவசப்படும் சில முஸ்லீம்கள் சிரியா, ஈராக்கில் போராளிகள் சில வருடங்களுக்கு முன்பு வெளியிட்ட தாக்குதல் காணொளி காட்சிகளை வெளியிட்டு, இது ஹமாஸ் இஸ்ரேலுக்கு பதிலடி என்று பொய்யான செய்திகளை பரப்பி மனப்பால் குடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

உலகில் பல்வேறு நாடுகளில் அப்பாவி முஸ்லீம்களுக்கு ஏகப்பட்ட இன்னல்கள், தொந்தரவுகள் இருக்கும் இந்நிலையில். தமிழகத்தில் பரபரப்பாக பேசப்படும் செய்து சூனியம். இன்று முஸ்லீம்களுக்கு தேவைப்படும் ஏதோ ஒரு மிகப்பெரும் ஆபத்துப் போன்று பொய்யாக சித்தரித்து மக்களை வழிகெடுத்து வருகிறது ஒரு கூட்டம். இதற்கெல்லாம் காரணம் நம் சமூகத்தில் உணர்ச்சி வசப்படக்கூடிய ஒரு பக்கம் சாயும் தக்லீத் கூட்டம் இருப்பதால்.  குர்ஆனிலும் ஷஹீஹான ஹதீஸ்களிலும் சூனியம் பற்றி வந்துள்ளதால், நபி(ஸல்) காலம் முதல், ஸஹாப்பாக்கள் காலம் தொடர்ந்து இன்று வரை இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எடுத்துச் சொல்லும் அனைத்து மார்க்க அறிஞர்களும் சூனியத்திற்கு தாக்கம் உண்டு, அல்லாஹ் நாடினால் மட்டுமே அதற்கு தாக்கம் ஏற்படும் என்று சொல்லி வருகிறார்கள். மேலும்  சூனியம் செய்யக்கூடாது, சூனியம் கற்கவோ கற்பிக்வோ கூடாது, சூனியக்காரனிடம் சூனியம் வைக்கவோ வெட்டவோ கூடாது.. சூனியம் அவனுக்கு செய், எனக்கு செய் என்று ஒருவனை தூண்டக்கூடாது, அது மிகப் பெரிய பாவம், குப்ரு, ஷிர்க் ஆனால் குர்ஆனிலும் ஷஹீஹான ஹதீஸ்களிலும் சூனியம் பற்றி ஏராளமான சம்வங்கள் வந்திருப்பதால், சூனியத்திற்கு ஒரு தாக்கம் உண்டு அது அல்லாஹ்வின் நாட்டமின்றி அதனால் எந்த தாக்கமும் ஏற்படாது. இது தான் துளி அளவு முரண்பாடுகள் இல்லாத சரியான நிலைபாடு என்பதை குர்ஆன் ஹதீஸ் வழியில் நாம் அறிந்துள்ளோம்.

உணர்ச்சிகளை தூண்டி உலக அளவில் முஸ்லீம்களை இஸ்லாமிய வாழ்க்கையை விட்டு வழிதவற செய்ய மேற்கத்திய சக்திகள் ஒரு புறமும், மற்றொரு புறம் ஸஹாப்பாக்களை சபிக்கும் ஷியாக்கூட்டமும் ஏராளமான சூழ்ச்சிகள் செய்து வெற்றியும் கண்டு வருகிறார்கள். இது போல் தமிழ் முஸ்லீம்களிடமும் உணர்ச்சிகளை தூண்டி, பொய்யான தவறான விளக்கங்களை குர்ஆன் மற்றும் ஷஹீஹான ஹதீஸ்களுக்கு கொடுத்து ஏனைய முஸ்லீம்களை முஷ்ரிக்குகளாக்க மிகப்பெரிய சூழ்ச்சிகளை அறிந்தோ அறியாமலோ ஒரு கூட்டம் செய்து வருகிறது. ஒரு ஆபத்தான காலகட்டத்தில் உலக முஸ்லீம்களும் இந்திய முஸ்லீம்களும் உள்ளனர் என்பதை நாம் எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இஸ்லாமிய வரலாற்றில் வழிகேட்டு சிந்தனைக்கு மிக முக்கிய பங்கு ஒரு தலைவனை தக்லீத் செய்யும் ஒரு கூட்டம் இருந்து வந்ததே. அல்லாஹ் நம் எல்லோரையும் எவனையும் இவ்வுலகில் தக்லீத் செய்து வழிகேட்டுக்கு செல்லாமல் பாதுகாப்பானாக.

நம் உயிரினும் மேலான முஹம்மது நபி(ஸல்) அவர்களும், உத்தம சஹாபாக்கள் செய்த தியாகத்தில், அர்பணிப்பில் நம் வாழ்நாட்களில் இஸ்லாத்திற்காக ஒரு துளியளவு நாம் அர்ப்பணிப்பு செய்திருக்கிறோமா? என்ற வினாவை நமக்குள் ஒவ்வொரு நிமிடமும் நம்மிடம் கேட்டுக் கொள்வோம். நம்மை இஸ்லாத்திற்காக முழுமையாக அர்ப்பணிப்போம். இன்ஷா அல்லாஹ்..

யா அல்லாஹ்! எங்கள் அனைவரையும், சத்திய சஹாபாக்கள் எவ்வாறு குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் வாழ்ந்தார்களோ அதுபோல் எங்கள் அனைவரையும் வாழ அருள் புரிவாயாக.
தொடரும்...
M.தாஜுதீன்

3 Responses So Far:

Unknown said...

Assalamau Alaikkum

Dear Tajudeen,

Good analysis on current pathetic conditions of muslim community all over the world.

Apart from groupism and politics, if practicing Islam by each individual is not surface level but deeper and empowering oneself with spirituality i.e. connection with Allah every moment, there will be true practice of Islam, then no mess in the society. There will be strength and power in the whole muslim community, developments and achievements will reach competitive level universally, no plots of politcs against muslim will work out, nothing can be done against muslims.

May Allah give us such strength and blessings

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai.

sheikdawoodmohamedfarook said...

இஸ்லாத்தில்ஒற்றுமை?அத்தைக்குமீசைமுலைகட்டும்சித்தப்பாஎன்போம்!

Adirai pasanga😎 said...

அருமையான அலசல், சைத்தானின் சதி வலைகள்
இன்றைய கால கட்டத்தில் விரின்து கிடைக்கின்றது.
யா அல்லாஹ் நீ எங்களை நேரான வழியில் செழுத்துவாயக

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு