Wednesday, April 02, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பேறு பெற்ற பெண்மணிகள் - அரஃபா நாள் ஸ்பெஷல் ! 2

அதிரைநிருபர் பதிப்பகம் | September 23, 2015 | , , , , ,

மக்களுக்கேற்ற மார்க்கம்

"அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்! கபீரா! லா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்! வ லில்லாஹில் ஹம்து!"

இப்படி, மக்காவின் 'அரஃபாத்' பெருவெளியில் அனைத்துலகக் காப்பாளன் அல்லாஹ்வைப் பெருமைப் படுத்திப் புகழ்ந்தும் அவனது அருள்வேண்டி அபயக்குரல் எழுப்பியும் ஹஜ்ஜுப் பயணிகள் ஒரே குரலில், ஒரே மொழியில் எழுப்பிய ஓசை, மேலை நாட்டுச் சகோதரி ஒருவரின் இதயத்தை உருகச் செய்தது என்றால், அதன் காரணம் யாது?

"இறைவனின் இறுதித்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தை இது நினைவூட்டுகின்றது, ஹஜ் எனும் புனிதப் பயணத்தின் இறுதியும் உச்ச கட்டமுமாகிய 'அரஃபாத்'தில் அனைவரும் ஒன்று கூடும் இத்தருணத்தை விடப் பொருத்தமான வேறு அனைத்துலகச் சமாதான ஒன்றுகூடல் எங்கேனும் உண்டா ?"

"கருப்பர், வெள்ளையர், மஞ்சள் நிறத்தவர், மாநிறங் கொண்டோர், அரசர்கள், ஏழைகள், பணக்காரர்கள் - அனைவருமே ஒரே உடையில், ஒரே குரலில், ஒரே இறைவனைப் புகழ்ந்து இறைஞ்சும் புனிதக் கூட்டமைப்பன்றோ இது?!?

"மனிதர் அனைவரும் அமைதியை, சமாதானத்தை விரும்புகின்றனர். அது உண்மையில் இங்கல்லவா கிடைக்கின்றது?! இதைவிடப் பொருத்தமான தருணம் வேறு என்ன இருக்கிறது?"

இவைதாம், அப்போது பேறு பெற்ற பெண்மணியின் இதயக் குரல்கள்.




அது 1931ஆம் ஆண்டு, இங்கிலாந்தின் அரச பதவி வகிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த செல்வி ஐரீன் ஜேன் வென்டவொர்த் ஃபிட்ஸ்வில்லியம், மதங்களின் ஒப்பீட்டுக் கல்வி (Study of Comparative Religions) பயில்வதற்காக எகிப்துக்குப் பயணமானார்.

அங்கே சென்று படிப்பைத் தொடங்கிய சில நாட்களிலேயே, இஸ்லாம் எனும் உண்மை மார்க்கம் இவரது இதயத்தை ஈர்த்தது. அதே ஆண்டிலேயே முஸ்லிமாக மாறி 'ஆயிஷா' என்ற பெயரைச் சூட்டிக் கொண்டார்!

1935ஆம் ஆண்டு ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றினார் ஆயிஷா, ஹஜ்ஜில் காணப்படும் அனைத்துலக ஒற்றுமை உணர்ச்சியைக் கண்டு வியந்து அடிக்கடி கூறுவார் ஆயிஷா. தன் தங்கை எவலினுக்கு இஸ்லாத்தை பற்றி எடுத்துரைத்து, அவரை இஸ்லாத்தை தழுவச் செய்தார்.

அண்ணல் பெருமானார்(ஸல்) அவர்களின் அழகான அறிவுப் பூர்வமான - துணிவான உண்மை மார்க்கப் பிரச்சாரத்தைப் பற்றி அடிக்கடி வியந்துரைப்பார் ஆயிஷா.

"எனது தாய்நாட்டு மக்களுக்குத் தேவையான அவர்கள் பின்பற்றத் தகுந்த துணிவு, நேர்மை, கழிவிரக்கம், அநீதியிழைத்தோரை அற்புதமாக மன்னிக்கும் தன்மை ஆகிய அனைத்தும் அப்பெருமகனாரிடம் குடிகொண்டிருந்தன. அவர்களிடம் இயல்பாக அமைந்திருந்த துணிவும், வல்ல இறைவன் மீது அசைக்க முடியாத நம்பிக்கையுமே, அவர்களை வெற்றிக் கொடி நாட்டச் செய்தன எனக் கூறினால், அது மிகையாது.

அந்த இறுதித் திருநபி அவர்கள்தாம் முதன்முதலாக எம் பெண்களின் சமூகத் தகுதியையும் மதிப்பையும் உயர்த்தியவர். இன்று கூடச் சில ஐரோப்பிய நாடுகளில் காணக் கிடைக்காத பெண்ணுரிமையினை 1400 ஆண்டுகளுக்கு முன் பெற்றுத் தந்தவர் இந்த நபியவர்கள்தாம்!

அயர்லாந்தின் அரச குடும்பக் கோட்டையைத் துணிவுடன் திறந்து வந்து, இஸ்லாமிய இன்பச் சோலையில் புகுந்த ஆயிஷா வென்டவொர்த் ஃபிட்ஸ்வில்லியம் பேறு பெற்ற பெண்மணிகளுள் ஒருவர்தானே!
இது ஒரு மீள்பதிவு
அதிரை அஹ்மது
புகைப்படங்கள் : Sஹமீது
ஹஜ் - பேசும் படங்கள்









Sஹமீது

2 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

படங்களைபார்ததும் கைவிட்டுப்போன காலங்களைஎண்ணி கணக்கிறது நெஞ்சு! கலங்குகிறது கண்கள்!.நானும் கைநெல்லை விட்டு பொய் நெல்லை குத்தியவன்தான்.

Adirai anbudhasan said...

மிக அழகாக நிகழ்வுகளை கோர்வை செய்கிறீர்கள், படிக்க இனிமையாக உள்ளது.
" பெருமை என்னுடைய மேலங்கி அதனை, யார் என்னிடமிருந்து பறிக்க நினைக்கிறார்களோ, அவர்கள் என்னுடன் போராட தயாராகுங்கள் " என்பது போன்று பொருள் தரும் வசனம் திரு குர்ஆன் வசனம் கேள்விப்பட்டிருக்கலாம்.

/// நானும் பல யாவாரங்கள் செய்தும் ஒன்றும் கை கொடுக்கவில்லை. ஜான் ஏறினால் முழம் வழுக்குது! கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை. ’கை’ முதல் எல்லாம் ’கை’ விட்டு போய்விட்டத ///

இப்படியான ஒரு சூழ் நிலையில், அல்லாஹ்விடம் இறைஞ்சி அழுது, எனக்கு என்ன காரணம் என்று தெரிய வில்லை, நீயே அறிவித்து தா என்று கேட்டதன் பின், அல்லாஹ் தன கிருபையால் , நண்பர்களுடன் பல பேச்சுக்கு இடையில், பெற்றுக்கொண்ட நிஹ்மத்துகளுக்கு சுக்கூர் செய்யாதது என்று உணரவைக்கப்பட்டு, தௌபா செய்து மீண்டேன். அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் இன்று மிக நன்றாக வைத்திருக்கிறான்.
பெருமை, தான் என்ற அகம்பாவம் மிக மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது, அல்லாஹ் காப்பற்றட்டும்.

சகோதரர் ஷைக் தாவூத், இந்த விமர்சனம் உங்களுக்கும் உதவக்கூடும், தௌபாவும் ஷுக்கூரும் செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.