Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பகையன்று நகை! 0

அதிரைநிருபர் பதிப்பகம் | November 06, 2016 | , , ,



பகையன்று நகை!

வாழ்க்கை  என்பது  வாய்கெடச்  சிரிப்பதும்,
சீழ்க்கை  யடித்துச்  சிரிப்பை  மூட்டலும்,
சிறப்பாம்  வாழ்வைச்  சிரிப்பாய்  ஆக்கிப்
பொறுப்பாய்  வாழாப்  பொய்மை  மக்களின்
கானல்  வாழ்வைக்  கடைப்பிடித்  தொழுகல்
ஈனம்  அன்றோ!  இதுதான்  வாழ்வா?

மாறாய் –

உளத்திலும்  சொல்லிலும்  உண்மையைத்  தேக்கி,
அளப்பரும்  அருளால்  ஆண்டவன்  தந்த
நல்ல  வாய்ப்பாம்  நகைச்சுவை  தன்னை
மெல்ல  எடுத்து  மிகையிலா  விதத்தில்
சொல்லிடா  திருப்பதும்،  சோகம்  ததும்ப
மல்லிட்  டிருப்பதும்  வாழ்க்கையா?  சொல்வீர்?

உண்மையில் –

நகைச்சுவை  யென்று  நமக்கெலா  முண்டு!
பகைச்சுவை  யன்றது;  பண்பு  நபியார்
பயனுறு  வாழ்வில்  பளிச்சிடச்  செய்த
நயனுடை  நாயன்  நல்கிய  வரமது!
மிகைப்படப்  பேசி  மெய்மறக்  காமல்
நகைச்சுவை  நுகர்வோம்!  நாயனைப்  புகழ்வோம்!

அதிரை அஹ்மத்

0 Responses So Far:

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு