Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அழுவுனாத்தான்....! 12

அதிரைநிருபர் பதிப்பகம் | February 12, 2016 | , , , , , , ,


`உம்ரா` சென்றார்கள்...

தவாப் சுத்தவும், தொழுகைக்கும் ஒன்றாக சென்று வந்தவன் பின்னர் தனியாகத்தான் செல்வேன் என அடம் பிடித்திருக்கிறான்...

ம்ம்ஹும் அனுமதி கிடைக்கவில்லை... பெண்கள் பகுதியில் நின்று தொழமாட்டேன் ஆண்கள் பகுதிக்குதான் செல்வேன் என்ற அவனது வேட்கை... அங்கு சென்ற மூன்று நாட்கள் வரை நிறைவேறவில்லை...

`மக்கா ஹில்டன் டவரில்`தங்கியிருந்தாலும்... அங்கே இருக்கும் ரம்மியமான சூழலைப் பார்த்ததும்... அருகில்தானே இருக்கிறது ஹரம் என்று தனியாக சென்றவன் திரும்பி வர வழி அறியாமல் குழம்பியதால் இரண்டு மணிநேரம் அலைந்து பார்த்து இருக்கிறான்.

அதற்கிடையில் ஹோட்டலில் இருந்த வீட்டினரும் தேட ஆரம்பிக்க... ஹோட்டலை விட்டு ஹரம் நோக்கி ஆளுக்கு ஒருவராக தேட... அவனைக் காணோம்... !

எப்படியும் வந்துவிடுவான் என்று வீட்டினரும் தைரியமாக இருக்க இருந்தாலும் மனதில் பதபதைப்பு அனைவரிடமும் இருந்தது.

அசந்து போய் ஹோட்டலுக்கு திரும்பியவர்களுக்கு அங்கே அவனைக் கண்டதும்தான் நிம்மதியானது...

`எங்கேடா போனே இப்படி கலங்கடிச்சுட்டியே...` என கேட்க

`கரெக்டாதாம்மா போனேன்... அங்கே ஒரு கும்பலா வந்தவங்க கிராஸ் பண்ணி அப்படியே சுத்தி விட்டாங்க ரூட்டை மாத்தி விட்டாங்க... அங்கே தான் மாறிப்போயிட்டேன்...`

`ஏன் இவ்வ்ளோ நேரமாச்சு ?`

`சுத்தி சுத்தி வர்ரேன் எல்லா எண்டரன்சும் ஒன்னாவே இருக்கு... எங்கிட்டு போறதுன்னு தெரியலை யாருமே கண்டுக்கல என்னைய`

`சரி எப்படி இங்கே வந்து சேர்ந்தே !?`

`ஹெ ஹே... நம்ம கிட்டேதான் `மேஜிக்` இருக்கே...`

`என்னடா சொல்றே...?`

`ஒரு இடத்துல நின்னுகிட்டே சத்தமா அழுதேன் அப்போதான் ஒவ்வொருத்தரா வந்து என் முதுகில் தடவிக் கொடுத்துட்டு கேட்க ஆரம்பிச்சாங்க. `அதுல ஒருத்தர்கிட்டே நாம தங்கியிருக்கிற ஹோட்டல் பேரு சொன்னதும் கூட்டிட்டு வந்து ரிசப்சன்ல விட்டுட்டாரு`

`அப்புறம் ?`

`அதான் அழுவுனா தாம்மா வீட்டுல மட்டுமல்ல வெளியிலேயும் எல்லா(மே) ஹெல்ப் கிடைக்குது...`

`ஙே...`

போட்டிருந்த மொட்டையில் வாங்கிய குட்டு `வலி`க்கவும் மீண்டும் `அழுகை`

அபுஇப்ராஹிம்

12 Responses So Far:

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.ஒரே பரவசம் படித்து முடித்ததும் ஒரே சிரிப்பு!மொட்டைக்கும் முளங்காலுக்கும் முடிச்சி போடுவாங்க இவர் மொட்டை மூலம் சிரிப்புக்கும் அழுகைக்கும் முடிச்சி போட்டு திருப்புமுனையோடு முடிப்பதில் முடிசூடா மன்னன் என்பதை நிரூபித்துள்ளார்!.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்... கிரவ்ன் !

//ஒரே பரவசம் // ஆமா... இன்னும் தொடர்கிறது...

sabeer.abushahruk said...

இபுறாகீமின் தேடல் யாதென அவனுக்கு மட்டுமே தெரியும்.

மொட்டையில் குட்டியதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

உண்மைக்கும் நேர்மைக்கும் தண்டனையா?

sheikdawoodmohamedfarook said...

//ஒரு எடத்துலே நின்னுகிட்டு சத்தமா அழுதேன்// சத்தம்போட்டு அழுதபிள்ளைக்கித்தான் பால் கிடைக்கும்.

இப்னு அப்துல் ரஜாக் said...

அது உம்ரா மொட்டை என்பதால் ,முத்தமிட்டிருக்க வேண்டும்.குட்டி விட்டீர்களே?
இப்படி குட்டி , உங்கள் குட்டு வெளிப்பட்டுவிட்டதே?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஒரு `குட்டு`க்கே இத்தனையா ?
அவனி எத்தனையோ Goodக்கு எத்தனை சொட்டோ ! அறிவீரா ? :)

அப்துல்மாலிக் said...

இனி அழுதால் எதுவும் கிடைத்துவிடும் சாதித்துவிடலாம் என்ற அவனுடைய பிடிவாதம் இனி போகப்போக விபரீதத்தில்தான் வந்துவிடும், அதாவது அவனுடைய எதிர்காலம் அப்படியான மனநிலையில் கொண்டுவந்து விட்டுவிடும்... அந்த தன்மையிலிருந்து மனநிலையை மாற்றவேண்டும்

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.குட்டி"கதையில்
சுட்டி'யின் கெட்டி'தனம்
சுட்டி'காட்டபட்டாலும்.
குட்டியதே நல்லது
இளையாதக முள் மரம் வெட்ட'பட வேண்டியதுதான்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அந்த தன்மையிலிருந்து மனநிலையை மாற்றவேண்டும் //

இது அவனிடம் இருக்கும் பல நல்ல விஷயங்களில் சின்ன விஷயம், புரிதலில் போற்றுதலுக்குரிய செயல்களை செய்வதிலும் கில்லாடிதான்... சாச்சா சொன்னா மறு பேச்சா என்பான், உம்மா சொல் சும்மா இல்லைன்னும் தெரிந்தும் வைத்திருக்கிறான்...

அல்லாஹ் அனைத்து வளங்களையும், நிறைவான் அறிவையும், அளந்து பிளக்கு அன்போடு, நீண்ட ஆயுளையும் வழங்குவானாக !

Ebrahim Ansari said...

எனக்குத் தெரியுமே ! பேசிக் கொண்டே என்வீட்டைச் சுற்றி போட்டோ எடுத்த உளவுத்துறையே இவர் . சுட்டி ஆனாலும் கெட்டி. அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ் தனது அருளை வாரி வழங்குவானாக!

Ebrahim Ansari said...

அந்த மண்டையை முகத்துடன் காட்டினால்தான் என்ன?

கண்ணுபடப்போகுதையா சின்னக் கவுண்டரே! என்று பாட்டுப் பாட வசதியாக இருக்குமே!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

வாழ்த்திய, பிரார்த்தித்த, கண்டனங்களை தெரிவித்த... இன்னும் பொடியனோடு பொடி நடை போட்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் ஜஸாக்கல்லாஹும் ஹைர் !

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு