சுனாமி - அற்புதம்...! அதியற்புதம்...! 4

அதிரைநிருபர் பதிப்பகம் | August 20, 2014 | , , , , ,

அற்புதம்...!  அதியற்புதம்...!

2004 ஆம் ஆண்டு, டிசம்பர் 26 ஆம் தேதி.  உலகத்தைக் குலுக்கிய ஒரு சோக நிகழ்வு,  ‘சுனாமி’ என்று அறியப்படும் பேரழிவு!  தூரக் கிழக்கு நாடான இந்தோனேஷியாவின் கடற்பகுதியில் ஏற்பட்ட ‘சுனாமி’யை இன்றுவரை உலக மக்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர்.  இவர்களுள், படைத்த இறைவனை பயந்து நடப்பவர்கள் பலர்;  ‘யாருக்கோ வந்த சோதனை இது. நமக்கென்ன?’ என்று நினைத்திருப்போர் பலர்.

உலகைப் பாதித்த அந்தச் சோதனை, முஸ்லிம்களுக்கு ‘மஹ்ஷர்’ எனும் யுகமுடிவு நாளை நினைவுபடுத்திய மாபெரும் நிகழ்வாகும் என்பது, இதில் பாதிப்படைந்து மீண்டவர்களுக்கல்லவா தெரியும்?  

“அந்த நாள்! அன்று மனிதன் தன் சகோதரனை விட்டு வெருண்டோடுவான்! தன் தாயையும் தந்தையையும், தன் மனைவி, பிள்ளைகளை விட்டும் (யார் யாரோ என்பது போல்) விரண்டோடுவான்” (80:34-36) என்று குர்ஆன் அந்த நாளை நினைவூட்டுகின்றது. 

இது போன்ற யுக முடிவு நாளின் நிகழ்வுகளை நினைவுபடுத்தியது, அந்தச் சுனாமி. நமது நாட்டைப் பொறுத்த வரையில், மிகப் பாதிப்படைந்த ஊர்களுள், குமரி மாவட்டத்துக் குளச்சல் எனும் கடற்கரைச் சிற்றூர் ஆகும். இக்கிராமத்தில் நுழைந்த கடல் நீர், இவ்வூரின் புராதீனப் பள்ளியான ‘மாலிக் தீனார் பள்ளி’யின் உள்ளே காற்றாடியின் அளவுக்கு அப்பள்ளியை ஆக்கிரமித்திருந்தது என்று அங்குள்ள உறவினர்கள் கூறினர்!

பெற்றெடுத்துச் சில மாதங்களே ஆன தன் பச்சிளங் குழந்தையை மட்டுமாவது காப்பாற்றிவிட வேண்டுமென்று வெள்ளப் பெருக்கில் நீந்திக்கொண்டிருந்தாள் தாயொருத்தி.  ஆழிப்பேரலையோ, அந்தத் தாயைப் பிஞ்சுக் குழந்தையை விட்டுப் பிரித்தது!  தாய் எங்கோ, குழந்தை எங்கோ என்று, இரண்டு உயிர்களும் பிரிந்தன!

பல நாள்கள் சென்று நீர் மட்டம் வடிந்த பின்னர், குழந்தையை இழந்த அந்தத் தாயின் கால்கள் நிலத்தில் பதிந்தன!  ‘குழந்தையைக் காப்பாற்ற முடியவில்லையே’ என்ற கவலையில் மூழ்கியிருந்த அந்தத் தாயின் காதில் ஒரு செய்தி வந்து விழுந்தது!  

பக்கத்துக் கிராமத்தில், உறவினர் யாரென்று அறியப்படாத குழந்தை ஒன்று அழுதுகொண்டு கரையொதுங்கிக் கிடக்கின்றதாம் என்ற செய்தியை அந்த அபலைத் தாயிடம் யாரோ காதில் போட, ‘வளர்ந்த நம்மையே சுனாமி சுற்றி வளைத்துப் போட்டது. என் பிஞ்சுக் குழந்தை அதற்கு எம்மாத்திரம்’ என்று சிந்தித்தவராக,  ‘எதற்கும் அந்தக் குழந்தையைப் போய்ப் பார்த்து வருவோமே’ என்று அந்தத் தாய் விரக்தியுடன் கிளம்பினார்.

என்ன வியப்பு!  அழுத நிலையில் கிடந்த அந்தக் குழந்தை அவருடையதுதான்!  தாயின் அழுகை அற்புதமாகி, அற்புதம் ஆனந்தமாகி, பால்குடி மாறாத அந்தப் பைந்தளிரை வாரி எடுத்துப் பாலமுதை ஊட்டினார் அத்தாய்!  நம்பத்தான் முடியவில்லை பலரால்.  ஆனால், நடந்தது என்னவோ, உண்மை! என் சின்ன மாமியாரின் உறவினர் அந்தப் பெண் என்பதால், நம்பியே ஆகவேண்டிய நிலை!

இதைவிடச் சிறந்த அற்புதம், இந்தோனேஷியாவின்  வடக்கு சுமத்ரா தீவின் Aceh மாவட்டத்தில் நடந்தது.  இச்செய்தியை The Washington Post தனது இம்மாத 8 / 8 / 2014 இதழில் பதிவிட்டிருந்தது.  வியக்க வைக்கும் அச்செய்தியின் சுருக்கம் இதுதான்:

‘சுனாமி’ என்னும் பேரழிவு ஏற்பட்டு, இவ்வாண்டு முடிவில் பத்தாண்டுகள் ஆகின்றன.  அன்று நான்கே வயதான சிறுமி, கடலலைகளால் அடித்துச் செல்லப்பட்டு, இந்தோனேஷியாவின் கடைக்கோடித் தீவான ‘பன்யாக்’ தீவில் கரையொதுங்கினாள்.  அவளுடன் அவளுக்கு மூன்று வயது மூத்த சகோதரன்  ஆரிஃபும் தன் தந்தைக்குரிய உடைந்த படகைப் பற்றிப் பிடித்துக்கொண்டு, அவனும் பெற்றோருமாய் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்தனர்.  அடுத்து வந்த பேரலை ஒன்று பெற்றோரை விட்டு ஆண்  பிள்ளையையும் பிரித்துவிட்டது!        

ரவ்ழத்துல் ஜன்னா என்ற பெயரை உடைய அந்தச் சிறுமி மட்டும் உடைந்து போன படகின் ஒரு பலகையைப் பற்றிப் பிடித்துக்கொண்டாள்.  இறுதியில் அவள் கரையொதுங்கிய ‘பன்யாக்’ தீவின் மீனவர் ஒருவரின் பார்வையில் பட்டுவிட்டாள். உயிருக்குப்  போராடிக்கொண்டிருந்த அச்சிறுமியை எடுத்துச் சென்று, சுமத்ராவில் வசிக்கும் தன் தாயிடம் ஒப்படைத்தார் அந்த மீனவர். அந்தப் புதிய தாய், அச்சிறுமிக்கு ‘வெண்ணி’ என்ற பெயர் வைத்து வளர்த்துவந்தார். 

சிறுமியும் தனக்குக் கிடைத்த மறுவாழ்வாக எண்ணி, கடந்த பத்தாண்டுகளாக அங்கேயே வளர்ந்து வந்தாள்.  இதற்கிடையில், அவளின் பெற்றோர் தாம் இழந்த பிள்ளைகள் இருவரையும் பற்றித் தகவல் அறிந்தவர்கள் தம்மைத் தொடர்பு கொள்ளலாம் என்று அவ்விருவரின் படங்களை இணையத்தில் வெளியிட்டிருந்தனர். 

கடந்த ஜூன் மாதத்தில் ஒரு நாள், சிறுமியின் தாய் மாமா Acehவின் தெருவில் நின்ற சிறுமி தன் மருமகளின் தோற்றத்தில் இருந்ததைக் கண்டு, நின்று நிதானமாக நோக்கினார்.  பத்தாண்டுகளுக்கு முன் இழந்த தன் மருமகள்தான் அவள் என்று உறுதிப்படுத்திக்கொண்டு, அவள் வசிக்கும் வீட்டைக் கேட்டறிந்து, விசாரித்தார்.  முடிவில், தன் மருமகள் ரவ்ழாதான் என்பதை உறுதி செய்துகொண்டு, அவளின் தாயான தன் சகோதரிக்கு அறிவிப்புச் செய்தார்.

உடனே புறப்பட்டு வந்தனர் பெற்றோர் இருவரும்.  தன் உண்மைத் தாயைக் கண்ட ரவ்ழா, தாயை ஆரத் தழுவினாள்!  தாய் ஜமாலியா ஜன்னா அதைவிடப் பன்மடங்கு ஆனந்தத்தில் மூழ்கினார்!



தாம் இழந்திருக்கும் இன்னொரு பிள்ளையான ஆரிஃப் என்றாவது ஒரு நாள் உயிருடன் வருவான் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர் ரவ்ழாவின் பெற்றோர். 

அதிரை அஹ்மது

ஒரு ச்சிக்குபுக்கு பாதை... 27

அதிரைநிருபர் பதிப்பகம் | August 19, 2014 | , , ,


எழும்பூர் இரயில் நிலையம்
எட்டுமணி இராப் பொழுது
எங்களூர் கம்பன் ரயில்
எட்டு பத்துக்கு எடுக்கத்தயார்

வசந்த பவன் தயிர்சாதம்I
வாழையிலைப் பொட்டலத் துள்
வாங்கி வைத்த வார இதழ்
வாசிக்க கை இருப்பில்

மேற்படுக்கைக் கேட்டு வாங்கும்
மாணவப் பருவம் அது
மேற்படி ரயில் பயணம்
மறவாத இன்ப வடு

ரயில் கிளம்பும் முன்னரே
உயிர் போகும் ஊர்நோக்கி
தயிர் சாதம் உண்டபின்னே
துயில் நாடி கண்சொக்கும்

தாள கதி தாலாட்ட
தூக்கம் கனா வந்துசேறும்
பாலச் சத்தம் தட்டியெழுப்ப
பக்கம் புரண்டு படுக்கை தொடரும்

திருத்துறைப்பூண்டி காஃபி ருசி
அடியக்காமங்கலத்தில் எழுப்பிவிடும்
முத்துப்பேட்டை நிலையம் முதல்
வாசலில் நின்றால் வயல் விரியும்

சுந்தரம் தம்பிக்கோட்டை மரவகாடு
அப்பக்கம் உப்பள வெண்மை
இப்பக்கம் தென்னையின் பசுமை
இடையிடையே மாவும் பலாவும்

கேசம் கலைக்கும் எதிர்க்காற்றில்
வாசம் இருக்கும் ஈரமண்ணின்
விரல்கள் துலாவி முடி ஒதுக்க
தலைமுடிக்குள் நிலக்கரி துகள்கள்

சங்கிலிப் பாலம் தொட்டுவிட்டால்
சந்தோஷ பலம் கூடிவிடும்
அதிராம்பட்டினம் நிலையத்துள்
ரயில் நுழைய மனம் மகிழும்

ஊரின் உயிரனங்களில்
ஒன்றாகவே கம்பன் ரயில்
உறவொன்று இறந்ததுபோல்
துக்கம் காக்கிறது ரயில் நிலையம்

நிஜ ரயில் கனவாகிட
பொம்மை ரயில் பிள்ளைகளுக்கு
தடதடக்கும் ஊர் எல்லையோ
தண்டவாளம் புதைந்த மயானமாய்!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

பு'கை பிடி'த்தல் ! - மீள்வதற்கான மீள்பதிவு இது ! 5

அதிரைநிருபர் பதிப்பகம் | August 18, 2014 | , , ,

சிந்திப்போம் !

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அவசரமான உலகம்! தனிமையில் இனிமை தேடும் தலைமுறை! அறிவுரைகளை அதிகம் விரும்பாத இளைஞர்கள்! என்று உலகம் எங்கோ போய்க்கொன்டிருக்க "திரும்பிப் பார்க்கிறேன்" என்று நம் கடந்த கால களியாட்டங்களை, இன்று வாழும் குழந்தைகளுக்குக் கிடைக்காத இயற்கையின் இன்பங்களை, சுதந்திரமாய்ச் சுற்றித் திறிந்து பெற்ற மகிழ்ச்சியை நினைவு கூறும் இவ்வேலையில் இவை அனைத்தையும் இத் தலைமுறையினருக்குக் கேள்விக் குறியாக்கிய நம் செயல்களைச் சற்று சீர்தூக்கிப் பார்த்து நாம் செம்மை படுத்திக்கொள்ளாவிட்டால், நம் இளமைப் பருவத்தை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்த அந்த இயற்கையின் சுவடு கூட இல்லாமல் போய்விடும் அபாயம் உள்ளதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

ஒவ்வொரு மனிதனும் இவ்வுலகில் தன்னுடைய சந்ததிகளை பெற்றெடுப்பதில் அதிகம் ஆர்வம் காட்டுகிறான். அவர்களின் மூலம் தாய் என்றும் தந்தை என்றும் தன்னுடைய நிலை உயர்வதை எண்ணிப் பெருமிதம் கொள்கிறான். இவ்வுலகின் அனைத்தைவிடவும் ஏன் தன்னைவிடவும் அதிகமாக அவர்களை அவன் நேசிக்கின்றான். அவர்களுக்கு காலில் முள் குத்தினால் தன் இதயத்தில் குத்தியதாய் இன்னல்படுகிறான். தான் உண்ணாமல் உடுத்தாமல் ஒறுத்தாவது அவர்களுக்கு உண்ணவும் உடுத்தவும் கொடுக்கிறான். இரவு பகல் பாராமல் உழைத்து கஞ்சன் என்ற பட்டத்தை மாத்திரம் தனதாக்கி மீதமுள்ள அனைத்தையும் தன் பிள்ளைகளுக்காக சேமித்தும் வைக்கிறான்.

இப்படி தன் பிள்ளைகளின் நலனையே சுவாசிக்கும் அவன் சிந்திக்கத் தவறியதன் காரனமாக எந்த பூமியில் தான் வாழ்கின்றானோ, எந்த பூமியில் தன் சந்ததிகளை விட்டுச் செல்ல இருக்கின்றானோ, எந்த பூமியை தவிர்த்து வேறு ஒரு வாழுமிடத்தை இந்த மனித இணத்தால் ஏற்படுத்திக்கொள்ள இயலாதோ அந்த பூமியை வாழத் தகுதியற்றதாக மாற்றிக் கொண்டிருப்பதை அறியாதவனாக இருக்கின்றான்!

இவ்வாறு இவ்வுலகை அழிவின் பக்கம் அழைத்துச் செல்வதில் வீண் விரயத்திற்கு முக்கியப் பங்குண்டு. பேராசிரியர். N A S அவர்கள் மேற்கோல் காட்டியதைப் போல தேவை இவ்வுலகை அழிவின் பக்கம் இழுத்துச் செல்லவில்லை மாறாக பேராசை தான் இவ்வுலை அழிவின் பக்கம் இழுத்துச் செல்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. வீன் விரயம் சம்பந்தமான நமது அனுகுமுறை வேறுபடுவதும் வீன் விரயத்திற்கு ஒரு முக்கிய காரனமாக அமைகிறது. வீன் விரயம் சம்பந்தமாக ஒரு தனிப் பதிவை இறைவன் நாடினால் விரைவில் பதிகிறேன் (சகோதரர் அலாவுதீன் அவர்கள் எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன்)

தவிர, இவ்வுலகை மட்டுமல்லாது ஒவ்வொரு தனி மனிதனுக்கும் புற்று நோய், காச நோய், ஆண்மைக் குறைவு, குடல் புண், வாய் துர்நாற்றம் போன்ற ஏராளமான நோய்களை ஏற்படுத்தி அழிவின் பக்கம் கொண்டுச் செல்வதில் புகைப் பிடித்தல் முக்கியப் பங்கு வகிக்கிறது. முஸ்லிம்களிடத்திலேயும் இத்தீய பழக்கம் பரவலாகக் காணப்படுவதால் அதைப் பற்றிய எனது கண்ணோட்டத்தை இங்கே பதிகிறேன்.

இவ்வுலகில் காணப்படுகிற எந்த ஒரு தீமையை எடுத்துக் கொன்டாலும் அது முஸ்லிம்களிடத்திலே மிக மிகக் குறைவான அளவே இருப்பதை யாரும் மறுக்க முடியாது. அவ்வாறு மிகக் குறைவான குற்றப் பின்னனி கொன்ட முஸ்லிம்களிடத்தில் புகைப் பிடித்தல் பரவலாகக் காணப்படுவதற்கும், மேலும் எந்த உறுத்தலும் இல்லாமல் பொது இடங்களிலும் புகை பிடித்துத் திரிவதற்கும் முஸ்லிம்கள் இதை ஒரு தீமையாக உணராததே காரனம்.

எந்த ஒன்றையும் நாம் ஐயமற, தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டுமென்றால் அதை நாம் சிந்தித்து உணர வேண்டும். அந்த அடிப்படையில் இத்தீய பழக்கமாகிய புகைப் பிடித்தலையும் நாம் சிந்தித்துப் பார்த்தோமானால் அதை விட்டும் தவிர்ந்து வாழக்கூடிய வாய்ப்பு ஏற்படும். அல்லாஹ் அருள் புரிவானாக!.

பொதுவாக மக்களிடத்தில் காணப்படுகிற குடி, சூதாட்டம், விபச்சாரம், என்று எதை எடுத்துக்கொன்டாலும் அது அத்தீமையில் யாரெல்லாம் நேரடியாக ஈடுபடுகிறார்களோ அவர்களையே பாதிப்பதைப் பார்க்கின்றோம். உதாரனத்திற்கு மது அருந்துவதினால் ஏற்படுகிற உடல் நலக் குறைபாடுகள் அதை அருந்துபவருக்கு மட்டுமே ஏற்படுகிறது. ஆனால் புகை பிடிப்பதனால் ஏற்படுகிற உடல் நலக் கோளாறுகள் புகை பிடிப்பவருக்கு மட்டுமல்லாது அப்புகையை சுவாசிக்க நேரிடுகிற மற்றவரையும் பாதிக்கிறது என்பதை எவரும் மறுக்க முடியாது. பொது இடங்களில் புகை பிடிப்பதனால் பெண்கள், குழந்தைகள், புகைப் பழக்கமில்லாத ஆண்கள் என பொதுமக்கள் படும் இன்னல்களை வார்த்தையால் வடிக்க முடியாது. அதுவும் வீடு, அலுவலகம், உணவகம், வாகனம் போன்ற நாலா புறமும் அடைக்கப்பட்ட இடமாக இருந்தால் பாதிப்பின் அளவு மிகவும் அதிகமாகவே இருக்கும்.

எந்த வித நன்மையும் இல்லாமல் அதே சமயம் அதிகமான அளவு தனக்கும், மற்றவருக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிப்பது புகைப் பழக்கமாகும். 50 காசுக்கும், ஒரு ரூபாய்க்கும் புகையிலைப் பொருள்கள் கிடைப்பதாலோ என்னவோ ஏழைகளிடத்திலும் இப்பழக்கம் தாராளமாக இருப்பதைக் காண முடிகிறது.

புகைவண்டிகளெல்லாம் புகையில்லாமல் செல்லும்போது இம்மனிதன் மட்டும் புகையோடு செல்லவது ஏனோ? புகை உனக்குப் பகை என்றும், புகைப் பழக்கம் உடல் நலத்திற்கு கேடு தரும் என்றும் எச்சரிக்கை செய்து புகைப் பிடிப்பவர்களைப் பாதுகாக்க(?) எடுத்த சிறு முயற்சியைக் கூட அப்பாவி பொதுமக்களை பாதுகாக்க அரசாங்கம் எடுக்கவில்லை என்பதை நினைக்கும் போது வியப்பாகவே இருக்கிறது.

புகை பிடிப்பவர்கள் தாங்களுக்கு மட்டும் தீங்கு இழைத்துக் கொள்ளவில்லை. மாறாக அவர்கள் அதிகமாய் நேசிக்கும் அவர்களுடைய குழந்தைகள், மனைவி, பெற்றோர்கள், குடும்பத்தார், அவர்கள் வாழுகிற சமூகம், மற்றும் சுற்றுச் சூழலை மாசுபடுத்துவதன் மூலம் மனித இணத்திற்கு மட்டுமல்லாது இவ்வுலகிற்கும் அதில் இருக்கிற அனைத்திற்கும் தீங்கு விளைவிக்கிறார்கள் என்பதை உணர்ந்தாவது இத் தீமையிலிருந்து அவர்கள் விலகி வாழ வேண்டும்.

பணம் சம்பாதிப்பதற்காக புகையிலைப் பொருட்களை உற்பத்தி செய்பவர்கள், அவர்களிடத்தில் லஞ்சம் வாங்கிக்கொன்டு அதற்கான அனுமதி வழங்குகிற ஆட்சியாளர்கள், அதற்கு உடந்தையாய் இருக்கிற அதிகாரிகள், மேலும் அதை விற்பனை செய்கிற வியாபாரிகள் ஆகியோரின் செயலை தன்னுடைய மனைவி, தான் பெற்ற பிள்ளைகள், தனது பெற்றோர்கள், தான் ஈட்டிய செல்வம் ஆகிய அனைத்தையும் வீட்டினுல் வைத்து தானும் உள்ளே இருந்துகொன்டு வீட்டை தீயிட்டு எரிப்பவனில் செயலுக்கு ஒப்பாகவே கருத முடிகிறது.

மேலும் புகை பிடிப்பது ஹராம் (பாவம்/விலக்கப்பட்டது) என்று ஏராலமான உலமாக்கள் மார்க்கத் தீர்ப்பு வளங்கியுள்ளனர். ஹராம் என்ற நிலையில் இருக்கின்ற ஒன்றை வாங்குவதும், விற்பதும், அதற்காக கடைகளை வாடகைக்குக் கொடுப்பதும், அது தொடர்பான எந்த ஒரு செயலில் ஈடுபடுவதும் ஹராம்.

பல இலட்சங்களை முதலீடு செய்து நடத்துகிற வியாபாரத்தில் சில ஆயிரங்களுக்காக விற்கப்படுகிற புகையிலைப் பொருட்களால் இலாபத்தில் பெரிய மாற்றம் ஒன்றும் வந்துவிடப் போவதில்லை என்பதையும், ஹலாலான வியாபரத்தோடு புகையிலைப் பொருட்களையும் சேர்த்து விறபதனால் அதில் ஹராம் கலக்கின்ற ஆபத்து இருப்பதையும் வியாபரிகள் உணர வேண்டும்.

பொதுவாக சில நிலைகளிலே இருப்பவருடைய பிராத்தனைக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் எந்தத் திரையும் இல்லை, அவர்கள் பிராத்தித்தால் அல்லாஹ் அதை உடனே அங்கீகரிக்கிறான் என்பது இஸ்லாத்தின் நிலைபாடு. அதில் பிரயானியும் ஒருவர். ஒருமுறை மக்காவை நோக்கிப் புனிதப் பயனம் மேற்கொன்டிருந்த ஒருவரின் பிராத்தனையை அல்லாஹ் நிராகரித்துவிட்டான்! காரனம் "ஒருவருடைய உணவு, உடை, வீடு ஆகிய ஏதேனும் ஒன்று ஹராமாக இருந்தாலும் அவருடைய பிராத்தனையை அல்லாஹ் ஏற்க மாட்டான்" என்று அல்லாஹ்-வின் தூதர் தனது தோழர்களுக்கு எச்சரிக்கை செய்ததை ஹதீஸ்களிலே கானமுடிகிறது.

எனவே புகை பிடிப்பது தீமை என்பதையும், அத் தீமையில் ஏதேனும் ஒரு வகையில் சம்மந்தப்பட்டவரையும் நாளை மறுமையில் அல்லாஹ் அத் தீமையில் சம்மந்தப்பட்டதற்காகவும் அதன் மூலம் பிறருக்கு தீங்கிழைத்ததற்காகவும் விசாரிப்பான் என்பதை அஞ்சி இத் தீமையிலிருந்து விலகி வாழ எல்லாம் வல்ல ஏக இறைவன் நம் அனைவருக்கும் அருள்புரிவானாக! மேலும் அனைத்தின் தீங்குகளிலிருந்தும் நம் அனைவரையும் பாதுகாப்பானாக!

அல்லாஹ் மிக்க அறிந்தவன்

ம'அஸ்ஸலாம்

அபு ஈஸா

தண்ணீர்...! 10

அதிரைநிருபர் பதிப்பகம் | August 17, 2014 | , ,

நீ அதிசயம் மட்டுமல்ல ...
ஆச்சரியமான ஆசான் ....
                                                                                                   
உன் நேர்மையான பாதை வழி எங்கும் இன்பமே ....
உன் பாகுபாடில்லாத அனுகுமுறை யால்
நீ போகும், நிற்கும் ,நடக்கும்,ஓடும் இடமெல்லாம் சுகமே ....

நீ பார்க்காத பள்ளம் எங்குமில்லை
அதனால் நீ தளர்வதுமில்லை
பள்ளத்தை நிறைத்து பொங்கி எழும்
உன் வேகம் உணர்த்தும் உத்வேகம், பாய்ச்சிடுமே புத்துணர்ச்சி ....


சுத்தத் தங்கமாக வலம் வந்து
மற்றவர்களின் மாசுக்களை சுமந்து செல்லும்
நீ உண்மையில் ஒரு சீர்திருத்தவாதி .....
அழுத்தமாக நீ செய்யும் தியாகம் ....நன்மையின் உச்சம் ..

நீ பயணித்த பாதையில்தான்
உயிரினம் வாழுமிடம் அமைத்தது ...
உன் வருகையால் அடைந்த தைரியம்...அளவிடற்கரியது ...

உன் சலசலப்பில் நாங்கள்
உன்னை பருகினோம் ,
உன்னில் நீந்தினோம் ,
உன்னில் பயணித்தோம் ,
உன் வரவால் பயிரிட்டோம் ...
உன்னால் நாங்கள் அடையும் சுகம் ...விவரிக்கமுடியதது ...


உன் பருவ காலங்களில் நீ
வரும் வழியெல்லாம் உன்னுடன் நீ
அழைத்து வரும் துள்ளல் தரும் இதம்.... எப்படிச் சொல்வேன் ?...

நீ பாய்ந்த பிரதேசங்களில் எல்லாம்
தரை நிலமாக இருந்தவை எல்லாம்
பூஞ்சோலை யாய் மாறியது ....
உயிரினம் சுவாசிக்க ....புசிக்க .....
மட்டுமல்ல ..ரசிக்க வும் !!!!

ஆனால்..........?

நீ பயணித்த வழியில் வாழுமிடம்
அமைத்த உயிரினம் .....

உன் வழியை ,
உன் பாதையை ,
சில மாதங்கள் நீ தங்குமிடத்தை எல்லாவற்றையும்
உயிரினங்கள் அடைத்து கூடு கட்டிகொண்டன .....

உன் வரவை அவர்களே (உயிரினங்கள் ) தடுத்து கொண்டார்கள் ..
இழப்பு ....யாருக்கு ?...
நீரின்றி அமையாது உலகம் .......

சிந்திப்போமா?.....நாளை விடியலுக்கு .....

அப்துல் ரஹ்மான்
--harmys--
இது ஒரு மீள்பதிவு

வரலாறுகள்! வழக்குகள்! வல்லரசுகள்! வடிக்கப்படும் இரத்தம்!

பாலஸ்தீனம்...

17

அதிரைநிருபர் பதிப்பகம் | August 16, 2014 | , , , , ,

தொடர் பகுதி : நான்கு

அல்ஹம்துலில்லாஹ் ! கலிபா ஹஜரத் உமர் அவர்களுடைய ஆட்சி காலத்தில் தனது எல்லைகளை விரிவுபடுத்தி நிலப்பரப்புக்களை வென்றெடுத்த இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் – நிலபரப்புகளை மட்டும் வென்றெடுக்கவில்லை . மாறாக, அந்த மண்ணில் வாழ்ந்த மக்களின் மனங்களையும் இஸ்லாத்தின்பால் ஈர்த்தெடுத்தது. வஞ்சகர்கள், வரலாற்றின் சில பக்கங்களில் உள்நோக்கங்களுடன் குறிப்பிட்டு இருப்பது போல் வாள்முனையில் இஸ்லாம் பரப்பப் படவில்லை. மாறாக, இஸ்லாத்தை ஏற்கனவே ஏற்றுக் கொண்டோரின் வாழ்க்கையின் நன்னெறி முறைகளைப் பார்த்து இதுவே நமக்கு ஏற்ற வழி என்று தாமாக முன்வந்து ஏற்றுக் கொண்டோரே ஏராளம். 

ஆனாலும், ஹஜரத் உமர் (ரலி) அவர்கள் கொலையுண்டு மறைந்த பின்னர் ஏற்பட்ட குழப்பங்களின் தொடர்ச்சியைத் தொடர்ந்து இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் ஒரு புறம் விரிவடைந்தாலும் தனது வலிமையை சிறுகச் சிறுக இழக்கத் தொடங்கியது என்பதையே வரலாற்றின் வரிகள் மெய்ப்படுத்திக் காட்டுகிறன. 

ஹஜரத் உமர் (ரலி) அவர்களுக்குப் பிறகு ஆளவந்த ஹஜரத் உதுமான் (ரலி) அவர்களும் குழப்பவாதிகளால் கொலை செய்யப்பட்டு உடலைப் புதைக்கக்கூட இடம்தேடி அலைந்த நிகழ்வுகளாகட்டும் அவர்களுக்குப் பின்னால், நான்காம் கலிபாவாக வந்தமர்ந்த ஹஜரத் அலி (ரலி) அவர்களுடைய ஆட்சிகாலமாகட்டும் இவையாவுமே இஸ்லாமிய ஆட்சியின் வரலாற்றில் ஒற்றுமையின்மையால் ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலைகளையே படம் பிடித்துக் காட்டுகின்றன. அவைகள் இன்றைக்கும் நாமெல்லாம் படித்துணரத்தக்க பாடமாவும் அமைந்திருக்கின்றன.

குடிசைக்கொரு கொடி பிடித்துத்திரியும் இந்த சமுதாயத்தின் இன்றைய இயக்கக் குஞ்சுகள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அவை. 

கலிபாக்களின் கட்டளைகள் மீறப்பட்ட வரலாற்று சம்பவங்கள் ஹஜரத் உதுமான் (ரலி) அவர்களின் காலத்திலேயே தொடங்கிவிட்டன. தன்னை நிலைப் படுத்திக் கொள்ள, தனது உத்தரவுகளை நிறைவேற்ற இணையற்ற இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் கலிபா அவர்கள் மற்றவர்களை கெஞ்சும் நிலக்குத் தள்ளப்பட்டதையும் பிறகு அவர்களே கொல்லப்பட்டதையும் நாம் காண்கிறோம். 

ஹஜரத் அலி (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் முஆவியா (ரலி) அவர்களோடு நிகழ்ந்த ஆதிக்கப்போட்டிகள் சாம்ராஜ்ய விரிவு மற்றும் நிர்வாகத்திலும் பல குழப்பங்களை ஏற்படுத்தின என்பதும் மறுக்க முடியாத உண்மைகள். இதனால் பாலஸ்தீனம், சிரியா, எகிப்து, லெபனான், ஜோர்டான் ஆகிய பகுதிகளில் இஸ்லாமிய சாம்ராஜ்யத்துக்கு பின்னடைவை ஏற்படுத்தின என்பது வரலாற்றின் பக்கங்களில் வடுக்கள் நிறைந்த அத்தியாயங்களே ஆகும். ஒற்றுமையின்மையும் தலைமைக்குக் கட்டுப்படாத தன்மைகளும் தனி நபர்களுக்கிடையிலான நீயா நானா போட்டிகளும் ஆணவமும் அகம்பாவமும் சந்தேகமும் ஒரு சாம்ராஜ்யத்தை வலுவிழக்கச் செய்யும் என்பதற்கு அன்று நடந்த நிகழ்ச்சிகள் அனைத்துமே உலகம் உள்ளளவும் நாம் உணரவேண்டிய உதாரணங்கள். 

‘ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்’ என்று சொல்வார்கள். அதே நேரம் அரேபியாவில் தோன்றிய இஸ்லாத்தின் படிப்படியான பரிணாம வளர்ச்சி ரோம சாம்ராஜ்யத்தையே வென்று- பைசாந்தியர்கள் என்று சொல்லப்பட்டவர்களை எல்லாம் பலமிழக்கச் செய்து- யூத மற்றும் கிருத்தவர்களின் புனித நகராகக் கருதப்பட்ட ஜெருசலத்தை எல்லாம் அவர்களிடமிருந்து கைப்பற்றி அங்கும் அல்லாஹ்வின் பாங்கொலியை ஒலிக்கச் செய்து – அங்கு தனது ஆட்சியை நிறுவும் வகையில் கவர்னர்களை நியமித்து – மனம் மாறிய பல கிருத்தவ யூதர்களை இஸ்லாத்தைத் தழுவச் செய்த செயல்பாடுகளை எல்லாம் கிருத்துவ உலகமும், திருச்சபைகளும், அந்தத் திருச்சபைகளின் பாதிரியார்களும் பொறாமைக் கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். ‘தம்பி எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும்’ என்று கழுகுப் பார்வை பார்த்தவர்களுக்கு இஸ்லாமியத் தலைவர்களுக்கிடையே ஏற்பட்ட பாகுபாடுகள் ‘பேய்க்கு சாம்பிராணி போட்டது போல்' ஆகியது.

இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் வரலாற்றின் சம்பவங்களுக்குள் நாம் நுழையப் போனால் இந்தத்தொடரில் நாம் சொல்ல வந்த செய்திகள் முக்கியத்துவம் இழந்துவிடும். ஆகவே சாம்ராஜ்யத்தின் தலைமைப் போட்டியால் வந்த விளைவுகளின் காரணமாக கி.பி 1086 -ல் துருக்கியர்களின் வசம் ஜெருசலம் கைமாறியது என்பதை மட்டும் குறிப்பிட்டு விட்டு தொடரலாம். 

ஹஜரத் உமர் (ரலி) அவர்களின் சகிப்புத் தன்மையையும் சமாதானத்தையும் சாந்தியையும் அதன்பின் சல்லடை போட்டுத் தேட வேண்டியதாயிற்று. துருக்கியர்கள் ஆண்டபோது சகித்தன்மை துருப்பிடித்துப் போனது. ஜெருசலத்தின் புனித திருத்தலங்களுக்கு உலகெங்கிலுமிருந்து வழிபடச் சென்ற கிருத்துவர்கள் துன்புறுத்தப்பட்டார்கள். கிருத்துவ தேவாலயங்கள் தங்களின் மாண்புகளை இழந்தன. எந்த அளவுக்கென்றால் தேவாலயங்கள் குதிரைகளைக் கட்டி வைக்கும் லாயங்களாக பயன்படுத்தப் பட்டன. இத்தகைய செயல்கள் கிருத்துவர்களின் மத உணர்வையும் மன உணர்வுகளையும் புண்படுத்தின. இதனால் உலகெங்கிலும் உள்ள கிருத்துவர்கள் ஒன்று கூடி உரையாட ஆரம்பித்தனர். ஐரோப்பாவில் இருந்த கிருத்தவர்கள் போர் செய்தாயினும் புனித இடங்களை மீட்டாக வேண்டுமென்று தீர்மானித்தனர். இந்தத் தீர்மானத்துக்கு திருச்சபை , ஐரோப்பிய நாட்டின் ஆட்சியின் தலைவர்கள், மன்னர்கள், மதத்தலைவர்கள் அனைவரும் ஆதரவும் கொடுத்து உறுதியும் மேற்கொண்டனர். 

இந்த இடத்தில், கிருத்துவப் பாதிரியாராக இருந்து போபாண்டவரான அர்பன் (Urban 2) என்பவரை நினைவு கொள்ளாமல் இருக்க இயலாது. புனித பூமியான பாலஸ்தீனத்தை முஸ்லிம்களிடமிருந்து மீட்டெடுக்க வேண்டுமென்று இரும்புத் தூணாக நின்றவர் இவர் ஆவார். தனது உணர்ச்சிகளைத் தூண்டும் பேச்சுக்களால் கிருத்தவர்களை ஆயுதம் தாங்கி சிலுவைப் போர்களில் ஈடுபடவைத்தவர்களில் முக்கியமானவர் அர்பன் ஆவார்.

சாதாரணமாக நாடுகளுக்குள் அல்லது அரசுகளுக்குள் ஒரு போர் மூண்டால் அந்தப் போரைத் தூண்டுபவர்களும் அந்தப் போரை முன் நின்று நடத்துபவர்களும் அந்தந்த நாட்டின் அரசர்களாகவோ, அமைச்சர்களாகவோ, ஆலோசகர்களாவோதான் இருப்பார்கள். ஆனால் சிலுவைப் போரைத் தூண்டியவர்களும் ஆலோசனை கூறி முன் நின்று நடத்தியவர்களும் பாதிரிமார்களே என்பதும் தலைமைதாங்கியவர் போப் ஆண்டவரே என்பதும் சிலுவைப் போரின் வித்தியாசமான வியப்பான அம்சம். அவர்களுள் மேற்குறிப்பிட்டுள்ள போப்பாண்டவராக ஆக்கப்பட்ட அர்பன் முக்கியப் பங்காற்றினார். புனித பூமியாக கருதப்பட்ட பாலஸ்தீனத்தையும் ஜெருசலத்தையும் முஸ்லிம்களிடமிருந்து மீண்டும் கைப்பற்றுவதற்காகப் போர் தொடுக்கும்படி கிறிஸ்தவர்களுக்கு ஆணையிட்டவர் அர்பன் ஆவார். 1088 ஆம் ஆண்டு அவர் போப் ஆண்டவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்திலிருந்தே போர் செய்து புனித இடங்களை மீட்க வேண்டுமென்ற வெறியுடன் மக்களைத் தூண்டினார். 

போப் ஆண்டவர் அர்பன் கிருத்துவ நாடெங்கும் சுற்றி உணர்ச்சியைத் தூண்டும் வகையில் உரையாற்றினார். துருக்கியர்கள் புனித பூமியை ஆக்கிரமித்துக் கொண்டு, புனித இடங்களை மாசுபடுத்துவதாகவும் கிறிஸ்தவ யாத்திரிகர்களுக்குத் தொல்லை கொடுப்பதாகவும் கூறி வன்மையாகக் கண்டித்தார். கிறிஸ்தவ உலகம் முழுவம் ஒரு புனிதப் போரில் ஒருங்கிணைந்து, புனித பூமியைக் கிருத்தவர்களே மீண்டும் கைப்பற்றுவதற்குப் பெரும் புனிதப் போரைத் தொடங்க வேண்டுமென்று வலியுறுத்தினார். 

மேலும் தமது உரையில் மிகவும் சாதுர்யமாக போர் செய்வதன் மூலம் வெற்றிகொண்டால் கிருத்தவ உலகத்துக்கு ஏற்படும் பொதுவான நல நோக்கங்களையும் பொருளாதாரக் காரணங்களையும் எடுத்துரைத்தார். புனித பூமி செல்வச் செழிப்புடையது என்பதையும், மக்கள் நெரிசல் மிகுந்த மற்ற கிறிஸ்துவ ஐரோப்பிய நாடுகளைவிட செல்வ வளம் மிக்கது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். இவை பற்றி பைபிளின் வாசகங்களை வாசித்துக் காட்டினார். இறுதியாக, மக்களின் நம்பிக்கையைத் தூண்டுவதற்காக இறைவன் பெயரைச் சொல்லி ஆன்மீகத்திலும் கை வைத்தார். இந்தப் புனிதப் போரில் பங்கு கொள்வதால் கடவுளின் ஆசிகிட்டுமென்றும், புனிதப் போராளிக்கு அவரது பாவங்கள் அனைத்திலிருந்தும் பாவமன்னிப்பு கிடைக்கும் என்றும் மூளைச்சலவை செய்தார். 

சிலுவைப்போரில் கலந்துகொள்ள தயாராகிவரும் வீரர்களுக்கு போப்பாண்டவர் சில சலுகைகளையும் அறிவித்தார். அவைகளில் முக்கியமானவை இந்தப் போரில் பங்கு பெறும் கிறிஸ்துவர்கள் அனைவரும் திருச்சபையின் நிரந்தரப் பாதுகாப்புக்கு உள்ளாவார்கள். அவர்களது உறவினர், வீடு, நிலம், இதர சொத்துக்கள் அனைத்தையும் திருச்சபையே பாதுகாக்கும். ஒவ்வொரு வீரரின் குடும்பத்துக்கும் தேவையான பண உதவிகளுக்கு திருச்சபையே பொறுப்பேற்கும். அதுவரை அவர்கள் யாரிடம் கடன் வாங்கி இருந்தாலும் அதைத் திருப்பிச் செலுத்த வீரர்களுக்குப் பொறுப்பில்லை. கடனை வசூலிக்க யாரும் வீரர்களின் மீது வழக்குத் தொடரக் கூடாது அதற்குரிய பண உதவிகளை திருச்சபையே செய்யும். வீரர்கள் அரசுக்கு செலுத்தவேண்டிய வரி பாக்கிகளை அரசுகள் தள்ளுபடி செய்துவிட வேண்டும். மேலும் வரிகள் கட்டுவதிலிருந்து அவர்களுக்கு வரிவிலக்கும் அளிக்கப்பட்டது.

சிலுவைப் போர்களின் முக்கிய அம்சமாக வரலாற்று ஆசிரியர்கள் காண்பது என்ன வென்றால் அமைதியை போதிக்க வேண்டிய ஒரு போப்பாண்டவரே அதைத் தூண்டிவிட்டதும் ஆயுதங்களைக் கரங்களில் கொடுத்து ஊக்கப்படுத்தியதும்தான். அடுத்து, இதை போப் ஆண்டவர் தலைமை ஏற்று நடத்தியதால் அனைத்து கிருத்தவ நாடுகளும் இந்தப் போரில் பங்கேற்றன. மாறாக , ஏதாவது ஒரு ஐரோப்பிய நாடு இந்தப் போருக்குத் தலைமை வகித்து இருக்குமானால் இன்னொரு ஐரோப்பிய நாடு இதில் கலந்து கொண்டிருக்காது. உதாரணமாக பிரான்சு தலைமை ஏற்றால் ஜெர்மனி கலந்து கொண்டிருக்காது. 

போப்பாண்டவர் அர்பன் ஆற்றிய வெறித்தனமான பேருரைகள் கூடிய கிருத்துவர்கள் மத்தியில் பெரும் உணர்வுக் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவரது உரைகளைக் கேட்ட அவர்கள் , மத உணர்வால் தூண்டப்பட்டுக் குமுறி எழுந்தார்கள். அர்பன் தமது உரையை முடிப்பதற்கு முன்னரே கூட்டத்தினர், "ஆண்டவர் அதை விரும்புகிறார்" என்று முழக்கமிட்டனர். இந்த முழக்கமே சிலுவைப் போர்களின் போர் பிரகடனமாகவும் முழக்கமாகவும் ஆகியது . 

இறைவனால் பரிசாக அளிக்கப்பட்டதாக நம்பப்பட்ட புனிதமான பாலஸ்தீனத்தையும் அதன் பெருமைக்குரிய தலைநகரான ஜெருசலத்தையும் முஸ்லிம்களிடமிருந்து மீட்டெடுக்கும் நோக்கத்துடன்தான் சிலுவைப் போர்கள் தொடங்கபப்ட்டன என்று சொல்லப்பட்டாலும் ஆனால் உண்மையில் இந்தப் போர்களின் நோக்கம், விரைவாகப் பரவிக் கொண்டிருந்த இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தி ஐரோப்பாவின் பக்கமும் முழுக்கப் போகவிடாமல் தடுப்பதுதான். கிருத்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஜென்மங்களுக்கும் பகை இருக்கும் அளவுக்கு ஒரு நிரந்தர இரும்புத்திரையை எற்படுத்திவிடவேண்டுமென்பதும் சிலுவைப்போர்களின் நோக்கம். அதுமட்டுமல்லாமல் இஸ்லாத்துக்கு எதிராக முழு கிருத்தவ உலகையும் திரட்டுவதும் அதன் நோக்கங்களில் மற்றொன்றாகும். அதனால்தான் திருச்சபைகளும் பாதிரியார்களும் இவற்றின் திட்டங்களில் பங்கேற்றனர். 

கி பி. 1096 முதல் 1270 வரை மொத்தம் எட்டு சிலுவைப் போர்கள் நடைபெற்றன. இந்தப் போர்களில் பங்கேற்கச் சென்ற கிருத்துவ வீரர்கள் செந்நிறத் துணியால் செய்யப்பட்ட சிலுவையின் அடையாளங்களை சின்னமாக அணிந்து போரிட்டதால் இப்போர்கள் சிலுவைப் போர்கள் என்று அழைக்கப்பட்டன.

முதலாவது சிலுவைப் போரில் கிருத்துவப்படை தோல்வியையே சந்தித்தது. ஆனால் கூடுதல் வெறித்தனமான உணர்வுடன் திரண்ட இரண்டாம் படையைச் சேர்ந்த வீரர்கள் வரும் வழியில் நடந்துகொண்ட அநாகரிகமான முறைகளால் உலக சரித்திர ஆசிரியர்களின் வெறுப்பான வார்த்தைகளை சம்பாதித்து கொண்டனர். இந்த சிலுவைப்போர் வீரர்களை, வரலாற்றாசிரியர் கிப்பன் (Gibbon), 'மூடர்கள்’, அநாகரிகமானவர்கள்' என்று வருணிக்கிறார்.

முதலாவது தோல்விக்குப் பின் ஏற்பட்ட இரண்டாம் சிலுவைப் போரில் கோட்டையின் படைத்தலைவனாக இருந்த ஃபிரஸ் (Firuz) என்பவன் கிறிஸ்துவ தளபதிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு துருக்கியில் இருந்த ஆண்டியோக் கோட்டைக் கதவுகளை கடைசி நிமிடத்தில் திறந்துவிட்டு விட்டபடியால், கோட்டை கிறிஸ்துவர்களின் வசமாகிப் போனது. சதியாலும் நிதியாலும்அவர்கள் ஜெருசலத்தை நோக்கி முன்னேற வழி வகுத்தது. 

இறுதியாக ஜெருசலம் கிருத்தவர்களால் கைப்பற்றப்பட்டது. இதற்கு இரு வாரங்களுக்குப் பிறகு 1099 ஆம் ஆண்டில் போப்பாண்டவர் அர்பன் காலமானார். இதில் ஒரு வினோதமான செய்தி என்னவென்றால் ஜெருசலத்தின் வெற்றிச் செய்தி அவரை சென்று அடையும் முன்பே அர்பன் அடிக்கடி தனது உரையில் குறிப்பிட்ட அந்த அந்த ஆண்டவர் அவரை அழைத்துக் கொண்டதுதான். ஆனால் போப்பாண்டவர் அர்பன் உயிருடன் இருந்த காலத்தில் உரையாற்றியது போல் அவர் நம்பிய ஆண்டவர் அவரது பாவங்களை மன்னித்தாரா என்று தெரியவில்லை. 

காரணம் சிலுவைப் போரின் நடைமுறைகளின்போது அன்பு மார்க்கம் என்று அடையாளமிட்டுக் கொள்ளும் கிருத்தவ மதத்தின் போர் வீரர்களின் அட்டகாசம் இன்று காசாவில் இஸ்ரேல் அரங்கேற்றும் அட்டூழியங்களுக்கு சற்றும் சளைத்ததல்ல. 

கோட்டைக்குள் இருந்த பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கிறிஸ்துவர்கள் கண்மண் தெரியாமல் வெட்டி வீழ்த்தினார்கள். வெற்றிக்களிப்புடன் எக்காளமிட்டபடி ஜெருசலேத்தை அடைந்து, எதிர்ப்பட்ட அத்தனை பேரையும் கொன்று வீழ்த்தியபடியே முன்னேறிச் சென்றார்கள். முஸ்லிம்களின் வீடுகள், வர்த்தகத் தலங்கள், வழிபாட்டிடங்கள் , அலுவலகங்கள் ஆகியன சூறையாடப்பட்டன.

ஜெருசலேத்தின் வீதிகள் அனைத்தும் பிணங்களால் நிறைந்திருந்தன. பிணம் தின்னும் கழுகள் பெரும் விருந்துண்ண ஏராளமாக வானில் வட்டமிட்டபடி இருந்தன. அதே கழுகளின் வாரிசுகள்தான் இன்று காசாவிலும் வட்டமிடுகின்றன. எங்கு பார்த்தாலும் அழுகுரல்கள், அவல ஓலங்கள். இடிந்த கட்டடங்களில் தீ வைக்கபட்ட்டதால் பெரும்புகை எழுந்து வானை நிரப்பியது. 

சிலுவைப் போர்களில் கிருத்துவ வீரர்கள் நடந்துகொண்ட முறைகள் இன்றளவும் அந்த மதத்தின் மீதான வரலாற்றுக் கரும்புள்ளியாகக் காட்சியளிக்கிறது. வெற்றி கொண்ட பகுதிகளில் இருந்த மாற்று மதத்தவர்களை அவர்கள் காட்டுமிராண்டிகள் போல் வெட்டிச் சாய்த்ததுதான் இன்றளவும் சிலுவைப் போர்களின் முதல் அடையாளமாகச் சொல்லப்பட்டு வருகிறது. 

அந்தச் சம்பவத்தின்போது மட்டும் எழுபதாயிரம் ஜெருசலத்துவாசிகள் கிறிஸ்துவர்களால் கொல்லப்பட்டதாக மிஷட் (Nafed Khaled Mishad) என்கிற சரித்திர ஆசிரியர் எழுதுகிறார். யுத்த நெறிமுறைகளை அவர்கள் காற்றில் பறக்க விட்டார்கள் என்பது அனைவரும் கூறும் ஒரு பொதுவான குற்றச்சாட்டு. 

மேலே நாம் குறிப்பிட்ட மிஸாட் என்கிற வரலாற்றாசிரியர், “கிருத்தவர்களை சும்மா விட்டால் உலகிலுள்ள அத்தனை முஸ்லிம் மற்றும் யூத மதத்தவர்களையும் கொன்று புதைத்து விட்டு, அவர்களைப் புதைத்த இடங்களிலெல்லாம் தேவாலயங்களை எழுப்பி, கொலைபாதக அடையாளங்களை மறைத்து விடும் வெறியில் இருந்தார்கள்” என்று அந்த வெறித்தனமான செயலை சித்திரிக்கிறார். சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சி ஒருவரின் கூற்றை மேற்கோளாகக் கொண்டு எழுதும் மிஸாட், “கொல்லப்பட்டவர்களின் ரத்தம் உமர் மசூதியின் நுழைவு மண்டபத்தில் முழங்கால் அளவு மூழ்கும் ஆழத்தில் நின்றது ” என்றும் குறிப்பிடுகிறார். இவ்வளவு ஒப்பீடாக மற்ற வரலாற்று ஆசிரியர்கள் சொல்லாவிட்டாலும் கிருத்துவ வீரர்களின் அநியாயம் மற்றும் அட்டூழியங்களைப் பற்றிக் கணக்கு வழக்கில்லாத புள்ளிவிவரங்கள் காணக்கிடைக்கின்றன. 

முஸ்லிம்களை மட்டுமல்லாமல், கிருத்துவ வீரர்கள் தாங்கள் முன்னேறும் வழியிலெல்லாம் முதலில் யூதர்கள் கண்ணில் படுகிறார்களா என்று அவர்களையும் தேடித்தேடிக் கொன்று குவிக்கத் தொடங்கினார்கள். பல்லாயிரக்கணக்கான யூதர்களை அவர்கள் ஈவிரக்கமின்றிக் கொன்று குவித்ததை சரித்திர நூல்கள் பக்கம் பக்கமாக வருணிக்கின்றன.

இதில் பரிதாபம் என்னவெனில், யூதர்கள் தம்மை முஸ்லிம்கள் தாக்குவார்களோ என்றுதான் அப்போது பயந்துகொண்டிருந்தார்களே தவிர கிறிஸ்துவர்களிடமிருந்து அப்படி ஒரு தாக்குதலை அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை.நடப்பது கிறிஸ்துவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமான யுத்தம்.

இதில் தங்களுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதுதான் அப்போது யூதர்களின் நிலையாக இருந்தது. ஏனெனில், ஜெருசலேம் அவர்களுக்கும் புனித நகரமே என்றாலும் அப்போது அது முஸ்லிம்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது.

முஸ்லிம்களை எதிர்த்து, கிறிஸ்துவர்கள் போல போரில் இறங்க யூதர்களிடம் பெரிய படைபலமெல்லாம் அப்போது இல்லை. அவர்கள் சந்தேகமில்லாமல் சிறுபான்மையினர். ஆகவே, எத்தரப்புக்கும் சார்பின்றி நடுநிலைமை காக்கலாம் என்றே யூதர்கள் முடிவு செய்திருந்தார்கள். 

ஆனால் வெறிபிடித்த கிருத்தவர்கள் முஸ்லிம்களையும் யூதர்களையும் கிள்ளுக் கீரையாக நடத்தி பாலஸ்தீனத்தில் அக்கிரம ஆட்சி புரிந்தார்கள். ஐரோப்பிய கிருத்தவ நாடுகள் அனைத்தும் இந்த அக்கிரமங்களுக்கு மதத்தின் தலைமையின் துணையோடு துதிபாடி துணை நின்றன. 

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?

ஒரு நூற்றாண்டு இவ்விதம் சென்றது. சலாவுதீன் என்கிற குர்திய இனத்தைச் சேர்ந்த முஸ்லிம் தளபதி கிருத்தவர்களை விரட்டி அடித்து மீண்டும் பாலஸ்தீனத்தைக் கைப்பற்றும் வரை ஒரு நூற்றாண்டு சென்றது. அதன் பின் நடந்தவைகளை அடுத்துக் காணலாம் இன்ஷா அல்லாஹ்.

இபுராஹீம் அன்சாரி

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 82 1

அதிரைநிருபர் பதிப்பகம் | August 15, 2014 | ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்..

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷா அல்லாஹ்!

மனிதனையோ, கால் நடைகளையோ சபிப்பது கூடாது !

''இஸ்லாம் அல்லாத மார்க்கத்தின் பெயரால் வேண்டுமென்றே பொய்யாக ஒருவன் சத்தியம் செய்தால், அவன் அது போலேவே ஆவான். ஒருவன் எதன் மூலம் தற்கொலை செய்து கொள்கிறானோ, அதன் மூலமே மறுமையில் வேதனை செய்யப்படுவான். தனக்கு இயலாத ஒன்றில் நேர்ச்சை செய்வது ஒருவனுக்கு கூடாது. ஒரு மூஃமினை சபிப்பது என்பது, அவனைக் கொல்வது போலாகும் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸைத் என்ற ஸாபித் இப்னு ழஹ்ஹாக் அன்சாரீ (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1551 )

''உண்மையாளனுக்கு மற்றவரை சாபமிட தேவையிருக்காது'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி)  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1552)

''(பிறரை) சாபமிடுபவர்கள் மறுமை நாளில் பரிந்துரை செய்பவர்களாகவோ, சாட்சி கூறுபவர்களாகவோ இருக்க மாட்டார்கள்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூதர்தாஉ (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1553)

''அல்லாஹ்வின் சாபம் மூலமோ, அவனது கோபம் மூலமோ, நரகத்தின் மூலமோ நீங்கள் ஒருவருக்கொருவர் சாபமிட்டுக் கொள்ளாதீர்கள்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸமுரா இப்னு ஜுன்துப் (ரலி)  அவர்கள் (அபூதாவூது, திர்மிதீ) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1554 )

''ஒரு மூஃமின் குத்திக்காட்டி பேசுபவனாக, சாபமிடுபவனாக, கெட்ட வார்த்தை பேசுபவனாக, (அருவருப்பான) பேச்சு பேசுபவனாக இருக்க மாட்டான்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் (திர்மிதீ) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1555 )

''ஓர் அடியான் ஒருவன் ஒன்றை சபித்தால், அந்த சாபம் வானத்தை நோக்கி உயரும்.  அங்கு வானத்தின் வாசல்கள் அடைக்கப்பட்டிருக்கும். பின்பு பூமியை – நோக்கித் தாழ்ந்து வரும். அங்கும் அதன் வாசல்கள் அடைக்கப்பட்டிருக்கும். பின்பு வலது பக்கமும், இடது பக்கமும் செல்லும் . அங்கும் தான் அடையும் இடத்தைப் பெற்றுக் கொள்ளா விட்டால், சபிக்கப்பட்டவரின் பக்கமே திரும்பி விடும். அவன் அதற்கு தகுதியானவனாக இருப்பின், அவனைச் சேரும். (தகுதி வாய்ந்தவனாக அவன்) இல்லையென்றால், அது சொன்னவனிடையே வந்து சேரும்''  என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூதர்தாஉ (ரலி)அவர்கள்   (அபூதாவூது)  ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1556 )

காரணமின்றி முஸ்லிமை திட்டுவது கூடாது!:

அல்லாஹ் கூறுகிறான்:
நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் அவர்கள் செய்யாததைக் கூறி துன்புறுத்துவோர் அவதூறையும்,தெளிவான பாவத்தையும் சுமந்து விட்டனர். (அல்குர்ஆன் : 33:58) 

''முஸ்லிமை திட்டுவது குற்றமாகும் அவனைக் கொல்வது (குப்ர்) இறை மறுப்பாகும் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1559 )

''ஒருவர், மற்றொருவரை பாவத்தின் பெயரால், இறை மறுப்பின் பெயரால் அதற்குரியவராக அவர் இருந்தாலே தவிர குற்றம் சாட்ட வேண்டாம். அதற்குரியவராக அவர் இல்லையென்றால், அது சொன்னவரின் மீதே திரும்பிவிடும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூதர் (ரலி) அவர்கள் (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1560)

''இரண்டு பேர்கள் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டால், (அவ்விருவரில்) அநீதம் இழைக்கப்பட்டவர் வரம்பு மீறும் வரை இருவர் கூறியவைகளும் முதலில் திட்ட ஆரம்பித்தவரையே சேரும்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1561)

''தன் அடிமையைப் பற்றி விபச்சாரம் செய்ததாகக் கூறி ஒருவன் இட்டுக்கட்டினால், அவர் சொன்னது போல் அவர் இல்லாமல் இருந்தால், மறுமை நாளில் சொன்னவருக்கு (விபச்சாரத்திற்குரிய) தண்டனை வழங்கப்படும்'' என்று நபி(ஸல்) கூறக் கேட்டேன். (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1563) (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)  அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1563)

''இறந்தோரை திட்டாதீர்கள். அவர்கள் செய்து, முன்பு அனுப்பி விட்டதின் பக்கம் (செய்த செயல்களின் பக்கம்) அவர்கள் போய் சேர்ந்து விட்டார்கள்'' என நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1564) (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1564 )

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு  வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன் S.

சுதந்திர தினம் - ஆகஸ்ட் 15 - காணொளி உரை…! 0

அதிரைநிருபர் பதிப்பகம் | August 15, 2014 | , , ,


இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் சுதந்திர தினத்தில் ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ளப்பட வேண்டிய வரலாற்றுக்கு சொந்தக்காரர்களான மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு, உண்மைகளை உரக்கச் சொல்லும் இந்த காணொளி உரையை மீள்பதிவாக பகிர்வதில் மகிழ்வடைகிறோம்.


அதிரைநிருபர் பதிப்பகம்
காணொளி பகிர்வு (நன்றி) : ADT

பதவிகள் இல்லாத நாற்காலிகள்... – அச்சம் ! 6

அதிரைநிருபர் | August 14, 2014 | , , , , , ,


பாரம்பரியம் மிக்க அதிரைப்பட்டினம், நம் சமுதாய மக்களின் நன்னெறிகளாலும் அவர்களின் இயல்பான பண்பாலும் அதன் சுற்று வட்டாரத்திலும் கோலோச்சினார்கள், அதிமுக்கியமாக மார்க்க விஷயத்திலும், நல்ல விடயங்களை முன்னெடுத்து செல்வதிலும். காலச் சூழல், இளமையை தொலைத்திட வெளிநாடு/வெளியூர் சென்ற இரண்டு தலைமுறை சமுதாயம், அவரவர்களின் இருப்பிடம் திரும்பி நிம்மதியாக இருக்கலாம் என்று திரும்ப நினைத்தாலும் அச்சமே அவர்களை ஆட்கொள்வதாக பரவலாக இருக்கும் புலம்பல்கள்.

இளமையின் இரகசியம் அறியாதவர்கள் இவ்வுலகில் எவரும் இல்லை, ஆனாலும் இப்படித்தான் வாழவேண்டும் என்று சட்டமாக்கப்படாத சாபத்தின் சஞ்சலங்களை கட்டாய கடமை போன்று பின்பற்றி அதன் போக்கிலேயே கடந்த இரண்டு தலைமுறை தொலைத்தது தனது இளமையை என்று சொன்னால் மறுக்க யாரும் கொடிதூக்க மாட்டார்கள் என்றே நம்புகிறேன்.

அவ்வாறான சூழ்நிலைகள் இனியும் நிகழாவண்ணம், இனிவரும் தலைமுறை / இப்போது தலையெடுக்கும் தலைமுறை என் குடும்பம், என் வீடு, என் ஊர், என் நாடு என்று வட்டங்களிட்டு அவைகளுக்குள் சுழல கற்றவர்களாக எழுந்து வருவது ஆரோக்கியமே, இதனை அவ்வாறே நிலைத்திடவும் உறுதி கொள்ளவேண்டும் இன்ஷா அல்லாஹ் !

மேற்சொன்னவைகள் தலைப்பிற்கு எவ்வித சம்பந்தமில்லாதது போன்று தோன்றினாலும், அன்றைய அல்லது அவைகளை கடந்து வந்த தலைமுறைகள் அனுபவிக்கும் இன்றைய சூழலின் கஷ்ட நஷ்டங்களை சுட்டிக் காட்டாமல் இருக்க முடியவில்லை....

15 வருடங்களுக்கு முன்னால் பள்ளிவாசல்களில் நாற்காலிகள் என்று இருக்கும் அவைகள் தொழுகை அல்லாத நேரங்களில் பயன்படுத்தவும் அல்லது அதில் ஏறி நின்று மோதினார் ஒட்டடை அடிக்கவும், அல்லது கடிகாரத்தின் முட்களை சரியாக நிமிரித்தி வைக்கவும் என்றுதான் இருந்தது. அவைகளில் வெளிப் பள்ளியில் ஒன்றோ இரண்டோ இருக்கும் அல்லது மோதினார் தங்கியிருக்கும் அரையில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும்.

இன்றைய சூழலில், தொழுகைக்கான சஃப்பிலும் மற்றும் இதர காரியங்கள் பள்ளிவாசல்களில் நடைபெற்றால் அங்கேயும் சரி நாற்காலிகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே இருக்கிறது. இதில் வயது பேதமில்லை, இளயவர்களும் முதியவர்களும் என்று அதிகரித்திருப்பது சொல்லாமல் எதனையும் சுட்டிக் காட்டவில்லை, தலையில் அடித்து சொல்வது ஆரோக்கியத்தினை பற்றிதான்.

தொழுகைக்காக பள்ளிக்குள் நாற்காலிகள் ஓரத்தில் வரிசையாக வைக்கப்ப்பட்டிருந்தது, அதன் அருகில் ஒரு நடுத்தர வயதுடையவர் தொழுது கொண்டிருந்தார் ஜமாத்தாக... அதன் பின்னர் இரண்டாவது ரக்காத்தில் இணைந்து கொள்ள மற்றொரு சகோதரர் அங்கே நெருங்கியபோது பின்னால் நின்ற அந்த சகோதரருக்கு முன் சஃப்பில் இருந்த நாற்காலியின் பாதிபாகம் பின் சஃப்பில் இருந்ததால் அதனை எடுத்து ஓரமாக வைத்துவிட்டு தக்பீர் கட்டிவிட்டார் அப்போது அது யாருக்கும் பெரிதாக தெரியவில்லை அனைவரும் தொழுகையில் ஈடுபட்டிருந்த்தால்...

தொழுகை முடிந்ததும், நாற்காலியில் முன்னே தொழுத நடுத்தர வயது சகோதரர் சற்றே கோபத்துடன் ‘யார்ரா இங்கிருந்த நாற்காலியை எடுத்தது’ என்று நாற்காலி(!!?) பறிபோன கோபத்தில் கேட்டார், பின்னால் நின்ற சகோதரர் தொடர்ந்து தொழுது கொண்டிருந்ததால் அவரின் தொழுகையை முடித்ததும், ‘நான் தான் செய்தேன், நீங்கள் நிலையாக நின்று தொழுது கொண்டிருந்தீர்கள் அதோடு பின்னால் இருந்த சஃப்பிற்கு இடமில்லாமல் இருந்தது அதனால்தான் மன்னித்துக் கொள்ளுங்கள்’ என்றார்... அவரும் பரவாயில்லை என்று அமைதியாக சென்று விட்டார்....

அதன் பின்னர் பள்ளியை விட்டு வெளியில் வரும்போது, நாற்காலியில் அமர்ந்து தொழுதவரோடு பேசிக் கொண்டிருந்தவர் அருகில் இருந்தவரிடம் "தரையில் அத்தஹ்யாத்தில் நீண்ட நேரம் உட்கார முடியவில்லை அதனால்தான் சேர் போட்டு தொழுகிறேன் என்றார் அதற்கு அவரின் நண்பர் "உனக்கு எந்த வியாதியும் இல்லையே, வெளிநாட்டிலும் இப்படித்தான் சேர் போட்டு தொழுவியா என்று... ?" அவரோ "அங்கேயெல்லாம் சஃப்பில் நின்றுதான் தொழுவேன் ஊருக்கு வந்ததும் மூட்டு வலி தொடர்ந்து இருக்கிறது....." என்றார்..

இவ்வாறான உரையாடல்களை கேட்டு விட்டு அங்கிருந்து நகரும்போது பழைய நினைவுகளை நோக்கி (MSM-n மற்றும் ஜஸீலா காலத்து அப்பாக்களை) அசைபோட்டேன்.... அதிகமான வயதுடைய மூத்தோர் எவரையும் அப்போது நாற்கலிகளில் அமர்ந்து தொழுகையை நிறைவேற்றியதாகவோ அல்லது, மார்க்க பயான்கள் கேட்டதாகவோ அதிகம் நினைவில் இல்லை... அது அவர்களின் ஆரோக்கியத்தையும் உழைப்பையும், காட்டியது.

எத்தனையோ பெரியவர்கள் தரையில் அமர்ந்தபடியே தொழுவதை கண்டிருக்கிறோம் அன்றும் இன்றும், நாற்காலி போட்டு அமர்வதற்கு ஒரே காரணம் தரையில் அமர்ந்தால் எழுந்திருக்க முடியாத சூழல், கால் மடக்கி உட்கார முடியாத நிலை, நீண்ட நேரம் கால் மடக்கி அமர்ந்தால் எழுந்து நடப்பதில் சிரமம்... ? இவைகள் எதனால் ?

ஏன் இப்படியான நிலை? அச்சமாக இருக்கிறது !

அபூஇப்ராஹீம்
இது ஒரு மீள்பதிவு

அப்பா ஏசுவாஹ....(அதிரையின் மண் வாசனை) 18

அதிரைநிருபர் | August 13, 2014 | , , , , ,

நமதூரில் குறிப்பாக வயதான ஆண்/பெண்களால் இன்றும் தெரிந்தும் தெரியாமலும், மறைந்தும் மறையாமலும் பயன்படுத்தப்பட்டு வரும் சில சொற்கள் இயன்றளவு ஆங்கில மொழிபெயர்ப்புடன் கீழே தரப்பட்டுள்ளன (ஏதோ நம்மனாலெ ஏன்டது). இது போல் இன்னும் நிறைய சொற்கள் மக்களின் புழக்கத்தில் இருந்தும் இங்கு வரிசையில் விடுபட்டிருக்கலாம். அப்படி தங்களுக்கு தெரிந்த சொற்களை தாராளமாக பின்னூட்டங்கள் மூலம் தொடரலாம். 

ஊரில் கடைத்தெருவின் உள்நுழைவு வாயிலில் அமர்ந்திருக்கும் இரண்டு ஆச்சிகளிடம் நல்ல தேர்ன நார்த்தங்காயும், சோளக்கருவும், அவுச்சக்கடலையும், ப்லாச்சொழையும் கொஞ்சம் வாங்கிக்கொண்டு ஒரு ப்ளாஸ்டிக் பையில் (ப்ளாஸ்டிக் மேட்டரை வெளியெ சொல்லிறாதிய) வாங்கிக்கொண்டு செக்கடிபள்ளியின் கீழே உள்ள வழியாக சென்று கொண்டிருந்தேன். அங்கு அமர்ந்திருந்த சில நண்பர்கள் என்னிடம் கேட்டார்கள். என்னா மு.செ.மு. இதைப்போயி வாங்கிக்கிட்டு போரியளே? என்றார்கள். நானும் சொன்னேன் சவுதி சென்றதும் அடிக்கடி நினைவில் கொடுவாப்பிஸுக்கும், வவ்வாமீனும் வருவதில்லை. இது போன்ற கோடை கால சீசன் விலை/விளைபொருட்கள் தான் அடிக்கடி நாக்கு ஊற வைத்து விடுகிறது. எனவே இதை வாங்கி உண்ண நாம் என்றும் தயங்கியதோ, வெட்கப்பட்டதோ இல்லை என்றேன்.

ஊர்ல அடிக்கிற வெயிலுக்கு நல்ல தேர்ன நார்தங்காயை வாங்கி அதை முறையே புழிஞ்சி தேவையான அளவு சீனி போட்டு கலக்கி ஐஸ்பொட்டியில் கொஞ்ச நேரம் வைத்து குளிரூட்டி நல்லா உச்சிஉரும நேரத்துல குடிச்சி பாருங்க..... அப்பொறம் சொல்லுவிய....ம்மடி கலப்பு அடங்குன மாதிரி ஈக்கிதும்மாண்டு...... சுபஹானல்லாஹ்...இறைவன் பருவ கால காய்,கனிகள் மூலம் மானுடத்திற்கு எவ்வளவு சுகத்தையும், ஆரோக்கியத்தையும் தந்தருளியுள்ளான் என நினைத்துப்பார்ப்பீர்கள். இந்த தடவை மாம்பழம், நொங்கு கொஞ்சம் மிஸ்ஸாயிடிச்சி.....

அதையான் கேக்குறிய....திருச்சி ஏர்ப்போர்ட்டுக்கு பயணம் புறப்பட கிழம்பும் பொழுது கூட வீட்டில் தீடீர்ண்டு ஒரு பையில் தண்ணி பாட்டிலும் இன்னொரு பார்சலில் அலுமினியம் ஃபாயிலில் சுற்றப்பட்டு ஒரு பொட்டலமும் தந்தார்கள். அது என்னாண்டு கேட்டா, கொஞ்சம் கொத்து மாங்கா பொடி போட்டு மடிச்சிருக்கு வழியில சாப்ட்டுக்கிடுங்க என்ற அது ஒரு பாசப்பரிமாற்றம் கொத்துமாங்காயாய் பொட்டலத்துக்குள் பதுங்கி இருந்தது. அது சரி கீழே உள்ளதை படிச்சிட்டு கமெண்ட்ஸ் போட மறந்துடாதிய.....

அவுருவொம்                                  - Very Rare
எசவு பண்ணுதல்                            - Repairing
ஆத்தாக்கொலெ                          - Time Being
சீந்தாப்பு/மப்பு மந்தரம்         - Cloudy Weather
ஏசுவாஹ‌                                        - Scolding, Blaming 
ஏந்துக்கிட்டு                                    - Supporting favourly
பொசுக்குண்டு                                - Suddenly Reduced 
குட்டான்                                          - Basket Thatched in Palm tree's leaves
ரோதை                                            - Wheel 
ஒசக்கெ                                            - In the height
ஈசாக்காட்டுதல்                             - Talking negatively to irritate 
வசை சொல்லுதல்                        - Talking openly the timely help
கண்மாசியா                                    - Entirely Disappeared
பொட்டக்கரை                                - Entirely Empty
பொவ்மானம்                                  - Brashness
பொத்தல்                                          - Hole
ஆகாசம்                                           - Sky
மோந்து                                             - To smell
சல்லிசு                                             - Very Cheap
திடுக்கிண்டு                                    - Sudden Shock 
என்னண்டோ                                  - Nothing to explain
வல்லாணாலையிலெ                  - Unnecessarily
எசலுதல்/சலுவுதல்                       - Calling quarrel deliberately 
கசங்கொண்டு                                 - In Ugly 
எதித்தாப்ல‌                                      - Opposite
அலிமாலு                                         - Almirah/Cup-board 
ஏன்சு                                                 - Room 
லேஞ்சி                                            - Towel
லேடுபடியான‌                                 - Weakness
யாபோம்                                          - Remember
ஜெமிலாட்டு மூடி                          - The cap of the bottled soda 
ஊதாங்கொலெ                              - Blowing Pipe in the kitchen
பலவாக்கட்டெ                                - Wooden Plate for sitting
மனுசரு                                            - A man  
இந்தாவுளெ                                     - Hi Lady
இந்தாங்கங்க‌                                  - Hi Gentleman
ம்மடி                                                  - Way of Exclamation
இருட்டு கசம் / மைக்கசம்           - Too Dark
கச்சிக்கசம்                                      - Too Bitter
அழுக்கு கசம்                                  - Too Ugly
ப்லாகொண்ட‌                                 - Very Ugly and offensive smelling
தெகரடி/செரவடி                            - Way of mental distress
சடப்பு                                                 - Getting laziness 
ஓங்காரம்                                        - Vomiting
மசக்கம்                                            - Giddiness
அங்குரு                                           - See there
இங்குரு                                           - See Here
அவ்வொ                                           - That man
இவ்வொ                                           - This man
பத்தாக்கொறெ                                - Scarcity/lack of shortage
எக்கச்சக்கம்/வழுப்பம்              - Plenty/Huge
வெரசன/சுருக்கன/வெள்ளனமே - To be quick/fast/early
மாக்கு கொடுத்தல்                        - Trying without tired
ஒழப்பி போடுதல்                          - indecent behavior in eating 
எசகெட்ட‌                                          - Not in proper way
திடீர்ண்டு/திடுதூரா                    - Suddenly
தவக்கலெ                                       - Frog
வேக்கூரு                                         - Prickly Heat
வட்டி                                                 - Bowl 
தட்டுப்புளா                                       - Basket Plate
சப்பாத்து                                          - Foot wear
விறுக்குவிறுக்குண்டு              - Lonely with fear   
ஒத்தியா                                          - Lonely/Single
உச்சிஉரும நேரம்                         - Noon Time
மாலமதி நேரம்                              - Time of sunset
மெத்தை                                           - Upstairs
தொலை                                          - Too far
செரட்டை                                         - Shell of the coconut
பூக்கமளெ                                       - Spathe of coconut tree
ஆப்பை                                            - Wooden spoon
ஒஹப்பு                                            - Desired Heartily
கோவந்தாவம்                                 - Getting Angry very often 
சும்சுகை                                          - Trunk of the elephant
அக்கச்சியா                                      - Sister
வாப்ச்சா                                           - Mother of the father
சர்சராக்குழி                                    - Hole of the house to eject cleaning water
ஏலலெ                                              - Inability/Sick
சதுர வாழ்வு                                   - Healthy Life
லெக்கு தெரியாமல்                      - Hard to identify
பெரிய மனுச‌                                  - Aged man/woman
ஒதவாது                                          - Can't be suited 
ஊர் முச்சூடும்                                 - Entire Town
மொட்டையன்                                - Young man 
அரிக்களாம்பு                                  - Lamp with covered glass chimney
எரணபரக்கத்து                                - Prosperities from the Almighty
அனத்துது                                        - Too humidity
மாடாக்குழி                                     - Shelf in the wall 
உப்புசப்பு/சூடப்பு - Nothing to highlight
சஞ்ஞீவு/தர்த்திரிப்பு     - In Proper arrangement   
ஆகாது                                             - Prohibited in Islam
நாக்களாம்பூச்சி    - Earthworm
பாச்சே                     - Cockroach
கொரங்குமட்டை   - Back bone of the coconut tree leaves
பெரிம்சாகி                       -  Recently Matured Girl
பொல்லாப்பு                     -  Bad Name with remarks
குடுப்பினை/கொடப்பொசுப்பு       -  Fortune/Good Luck  
ஒமட்டல்/கொமட்டல்             -  Symptom of vomiting
ஒரமோரு                        -  Milk fermented by added bacteria
வலந்து/ஏனம்                    -  Bowl/vessel (home appliance) 
தேத்தனி                        -  Tea
தடுக்கு                          -  Mat
புள்ளைக்கு ஒரம் வுழுந்துடுச்சி    -  Sudden shock to a child by unexpected incident 
கண்ணூறு                       -  Look with jealous 
செய்த்தான்கொணம்              -  Attitude of evils/saitan 
செமியாக்கொணம்               - Symptom of undigested 
பக்கிரிச்சி                        -  Poor woman (miser attitude)
திட்டி அருவாக்கிபுட்டா   -  Adamant lady with blaming others
மொடையா ஈக்கிது               -  Empty situation
ஊட்டுக்காரவொ                 -  Husband/House owner
ஏப்பு காட்டுதல்/வலிப்பு காட்டுதல் -  Cheating to irritate
மொடை - Lack/Tightness of money
நேந்துக்கிட்டு  - Offering
வதுவாப்பேரு     - Curse   
அரீர்ப்பு                - Impropriety/Ugliness
ஏப்பசாப்பெ          - Without any interest & care
கம்சுகை சட்டை - Full hand shirt
குந்தமரி               - Doing something with happy mood
சர்வ சட்டி            - Big vessel for heating water
பூச்சிவட்டெ         - Insects
சுக்குருசான்         - Chinaware
பதூசா                  - Calmly/Silently 
அன்னாத்து          - Fallen down by unbalanced
ஊர்ப்பட்ட            - Huge amount / Plenty
கொதப்பை           - Cheek
பூசை                    - Beat / Hit
வீதல்ரோடு - A Piece of broken glass

மு.செ.மு. நெய்னா முஹம்மது
இது ஒரு மீள்பதிவு


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

OUR YOUTUBE CHANNEL

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Labels

அதிரை (412) கவிதை (353) இபுராஹீம் அன்சாரி (206) Alaudeen.S (195) அதிரை அஹ்மது (180) அதிரை செய்திகள் (143) ஜாஹிர் ஹுசைன் (142) MSM (136) சபீர் (127) சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக் (117) அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து (113) இஸ்லாம் (103) தாஜுதீன் (94) ஷாஹுல் ஹமீது (89) அபுஇபுறாஹிம் (69) நபிமணியும் நகைச்சுவையும் (65) இக்பால் M.ஸாலிஹ் (62) j1 (59) கல்வி விழிப்புணர்வு (57) ரமளான் (55) அதிரைநிருபர் (52) விழிப்புணர்வு (47) கல்வி (45) உமர் தம்பி (43) P.பகுருதீன் (41) அதிரை மன்சூர் (41) அதிரை மெய்சா (40) இன்று (40) படிக்கட்டுகள் (40) அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (39) கண்கள் இரண்டும் (39) a1 (37) crown (37) அரசியல் (37) நாளை (37) நேற்று (37) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (35) அண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம் (34) ADT (33) அதிரை அஹ்மத் (33) பேறு பெற்ற பெண்மணிகள் (33) சாஹுல் ஹமீது (32) S.அலாவுதீன் (31) ie (30) p1 (30) பேசும் படம் (30) மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள் (30) வாவன்னா (28) தேனீ (27) SMF (26) அதிரை முஜீப் (26) மருத்துவம் (26) வரலாறுகள் (26) வழக்குகள் (26) ஹஜ் (26) கவியன்பன் (25) தேர்தல் (24) k1 (22) அதிரை தாருத் தவ்ஹீத் (22) இப்னு அப்துல் ரஜாக் (22) தமிழகம் (22) தமிழ் (22) துபாய் (22) நூருத்தீன் (22) பெண்கள் (22) யுனிகோட் (22) h1 (21) இபுராஹிம் அன்சாரி (21) ஏடு-இட்டோர்-இயல் (21) நினைவுகள் (21) நோன்பாளிகளே (21) பாலஸ்தீனம் (21) அபூஇப்ராஹீம் (20) என் இதயத்தில் இறைத்தூதர் (20) ஜமீல் M.சாலிஹ் (20) Sஹமீது (19) இந்தியா (19) எச்சரிக்கை (19) சேக்கனா M.நிஜாம் (19) மழை (19) adirai (18) editorial (18) loan (18) அதிரை சித்தீக் (18) கந்தூரி (18) அபுல்கலாம் (17) இயற்கை இன்பம் (17) சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக் (17) நோன்பு (17) மரணம் (17) ரமழான் (17) ஹஜ் பெருநாள் (17) ஆசிரியர் தினம் (16) கவிதை ஓர் இஸ்லாமிய பார்வை - ஆய்வு (16) பழகு மொழி (16) புதுசுரபி (16) Zakir Hussain (15) harmys (15) அபு ஈஸா (15) அப்துல் ரஹ்மான் (15) அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா (15) வரலாறு (15) Sabeer (14) ஊடகம் (14) காணொளி (14) படிப்பு (14) பெருநாள் (14) ஷஃபி அஹ்மது (14) M.H.ஜஹபர் சாதிக் (13) shameed (13) அதிரை என்.ஷாஃபாத் (13) அப்பா (13) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும் (13) கடன் (13) சத்தியமார்க்கம்.com (13) சிந்தனை (13) சிந்திக்க (13) MHJ (12) ஆரோக்கியம் (12) ஒற்றுமை (12) சகோதரியே (12) தண்ணீர் (12) தாருல் இஸ்லாம் ஃபேமிலி (12) பேரூராட்சி (12) மரபு (12) மு.செ.மு.சஃபீர் அஹமது (12) யாசிர் (12) ரஃபீக் (12) AM (11) s1 (11) அனுபவம் (11) ஆமினா முஹம்மத் (11) ஒரு புத்தகம் பிறக்கிறது (11) சரிதை (11) சென்னை (11) தொடர் (11) பேசும்படம் (11) மனு நீதி (11) முஹம்மது ஃபாருக் (11) Sabeer AbuShahruk (10) aknk (10) kavithai (10) அதிரை அஹமது (10) அதிரை ஷஃபாத் (10) அதிரைநிருபர் பதிப்பகம் (10) அமீரகம் (10) அமெரிக்கா (10) அலசல் (10) ஆய்வு (10) உதவி (10) ஏக்கம் (10) கலாம் (10) தொழில் முனைவோர் (10) படிகட்டுகள் (10) பெற்றோர் (10) முகம்மது அலி ஐ.பீ.எஸ் (10) முஹம்மது யாசிர் (10) விவாதக்களம் (10) SMS (9) அரும்புப் பாட்டு (9) ஊடக போதை (9) குறுந்தொடர் (9) சிந்திக்கத் தூண்டும் சித்திரங்கள் (9) சுகாதாரம் (9) ஜகாத் (9) துஆ (9) தேடல் (9) நோன்பு பெருநாள் (9) பரீட்சை (9) பிரார்த்தனை (9) பேட்டி (9) பேரன் (9) மனித குலம் (9) ரமழான் சிந்தனை (9) வினாடி வினா (9) வேலை (9) ஹதீஸ் (9) LMS (8) ZAEISA (8) msm rafiya (8) poem (8) அதிரைக்காரன் (8) அபூ ஆசிஃப் (8) அப்துல் காதர் (8) அஹ்மது இர்ஷாத் (8) இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளி (8) இளமை (8) இஸ்லாமியப் பெண்மணி (8) எழுத்துப் பிழைகள் (8) ஏற்றம் (8) கடற்கரைத் தெரு (8) கலைக்களஞ்சியம் (8) காது (8) சத்தியமார்க்கம் (8) செய்தி (8) தக்வா பள்ளி (8) தன்னம்பிக்கை (8) தொழுகை (8) நண்பர்கள் (8) நூல் வெளியீடு (8) பள்ளிவாசல் (8) பழைய நினைவுகள் (8) பாலஸ்தீன் (8) மரபு கவிதை (8) மலேசியா (8) மாணவர்கள் (8) மாலிக் (8) முகமது யாசிர் (8) வாழ்க்கைப் பயணத்தில் உறவுகள் (8) விபத்து (8) விவாதம் (8) வேண்டுகோள் (8) ARH (7) MSM MEERASHA RAFIA (7) SKM ஹாஜா முகைதீன் (7) SKM-H (7) history (7) அப்துர்ரஹ்மான் (7) அப்துல் மாலிக் (7) அம்மா (7) அல்குர்ஆன் (7) அல்லாஹ் (7) உணவு (7) கட்டுரையாளர் (7) கண் (7) கம்பன் (7) கல்வியாளர்கள் (7) காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி (7) கால்பந்து (7) குழந்தை (7) சிந்திப்போம் (7) சின்னகாக்கா (7) சிரியா (7) தொண்டை (7) நன்றி (7) நபிமொழிகள் (7) பயணம் (7) பள்ளிக்கூடம் (7) மின்சாரம் (7) முஸ்லிம் (7) மொழி (7) விளக்கம் (7) ஸஹாபாக்கள் (7) 2012 (6) 2014 (6) A.R.அப்துல் லத்தீஃப் (6) AEAC (6) B. Ahamed Ameen (6) Dubai (6) M H Jahabar Sadik (6) N.ஜமாலுதீன் (6) Shahnaz Sabeer Ahmed (6) UAE (6) ashik (6) m2 (6) u1 (6) அதிரை தென்றல் (Irfan Cmp) (6) அதிரை நிருபர் (6) அலசல் தொடர் (6) ஆதங்கம் (6) இதிகாசங்கள் (6) இத்தியாதி இத்தியாதி (6) இப்ராஹிம் அன்சாரி (6) இப்ராஹீம் அன்சாரி (6) இரத்தம் (6) ஊழல் (6) ஓட்டு (6) கந்தூரி போதை (6) கல்லூரி (6) கிரவ்ன் (6) கோடைகால பயிற்சி (6) தடை (6) திருமணம் (6) நகைச்சுவை (6) நட்பு (6) நண்பன் (6) நானும் ஆஃப்ரிக்காவும் (6) நூலகம் (6) புத்தகம் (6) போதை (6) மக்கா (6) முதுமை (6) முஸ்லீம்கள் (6) முஹம்மத் ஆஷிக் (6) மூக்கு (6) வணக்கம் (6) வளைகுடா (6) விமர்சனம் (6) ஷிஃபா மருத்துவமனை (6) AEM (5) SKM - H (5) Sஹமீத் (5) m1 (5) moon (5) umar history (5) அதிரை ஈத்மிலன் (5) அதிரை ஹாலித் (5) அபூஇப்ராஹிம் (5) அறிவியல் (5) அழகு (5) அழைப்பு (5) ஆங்கிலப் புத்தாண்டு (5) ஆஸ்திரேலியா (5) இடஒதுக்கீடு (5) இயற்கை (5) இரவு (5) இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா (5) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (5) உறவு (5) கணினி (5) கண்டனம் (5) கனவு (5) கவிஞர் (5) கவிதை ஆய்வு (5) காலம் (5) குர்ஆன் (5) குழந்தைகள் (5) சட்டமன்றம் (5) சந்திப்பு (5) சபீர் அஹ்மது அபுஷாரூக் (5) சான்பிரான்சிஸ்கோ முதல் செக்கடி மோடு வரை (5) சேமிப்பு (5) தக்வா (5) தாய் (5) தொட்டால் தொடரும் (5) தொலைக்காட்சி (5) நாசர் மவ்லவி (5) நீதி (5) பழமை (5) பாசம் (5) பாபர் மஸ்ஜித் (5) பாலியலுக்கு பலியாகாதே (5) பெண்ணுரிமை (5) பொருளாதாரம் (5) போட்டி (5) போராட்டம் (5) மண்ணறை (5) மனைவி (5) மற்றும் (5) மாட்டுக்கறி (5) மாற்றி யோசி (5) முஹம்மது பாரூக் (5) மூடநம்பிக்கை (5) மூன்றாம் கண் (5) ரஃபியா (5) ரியல் எஸ்டேட் (5) வட்டார உரையாடல் (5) வாழ்க்கை (5) விருந்து (5) விழி (5) வெற்றி (5) வேலை வழிகாட்டி (5) ஸதக்கதுல்லாஹ் (5) 2013 (4) B. Ahamed Ameen (4) EA (4) M. தாஜுதீன் (4) MSM மீராஷா ரஃபியா (4) MSM(n) (4) adirainirubar (4) eo1 (4) syria (4) v1 (4) அதிரை அறிஞர் (4) அதிரை பைத்துல்மால் (4) அதிரை மீரா (4) அபுஇப்ராஹிம் (4) அபுநூரா (4) அரபி (4) அறிவுரை (4) அவதூறு (4) அஹ்மது ஆரிஃப் (4) ஆங்கிலம் (4) இன்றைய சவால் (4) இபாதத் (4) இபுறாஹீம் நபி (4) இமாம் ஷாஃபி ஸ்கூல் (4) இலக்கியம் (4) இலவசம் விலை போனதே (4) இஸ்லாமிய வங்கி (4) ஈகை (4) ஈகைத் திருநாள் (4) ஈத் பெருநாள் (4) ஊரில் மழையாமே (4) ஊர்வலம் (4) எதிர்ப்பு (4) கடிதம் (4) கட்சிகள் (4) கட்டுரை (4) கலக்கல் (4) கல்வி வழிகாட்டி (4) கா.மு.மே.பள்ளி (4) காது கொடுத்து கேளுங்கள் (4) குடும்பம் (4) குழந்தை வளர்ப்பு (4) குழந்தைகளுக்காக (4) கேமரா (4) கோரிக்கை (4) கோவை அய்யூப் (4) சஹாபாக்கள் (4) சிட்னி (4) சுதந்திரம் (4) செக்கடிக் குளம் (4) டி.வி. (4) டெல்லி (4) தனிமை (4) தமாம் (4) தமிழ்மாமணி (4) தமுமுக (4) திருச்சி (4) தெரு (4) தோல்வி (4) தோழன் (4) நடை (4) நபி முஹம்மது (ஸல்) (4) நம்பிக்கை (4) நிறைவு (4) நிலவு (4) நீர் (4) நேரம் (4) நோன்பு கஞ்சி (4) பயணங்களில் பரவசம் (4) பயன் தரும் பன்மொழித் தொடர்பு (4) பழக்கம் (4) பாங்கு (4) பாதுகாப்பு (4) பிறை (4) புன்னகை (4) புரளி (4) புறம் (4) பெண் (4) பெண்மை (4) பேயோடு ஒரு ஹாய் (4) மகன் (4) மது (4) மலேஷியா (4) மலை (4) மலையேறலாம் (4) மாற்றம் (4) யார் (4) ரமலான் (4) லஞ்சம் (4) லண்டன் (4) லெ.மு.செ.அபுபக்கர் (4) லைலதுல் கத்ர் (4) வரதட்சனை (4) வலைப்பூக்கள் (4) வாப்பா (4) வாழ்கை (4) வாழ்கைப் பயணத்தில் உறவுகள் (4) வாழ்வியல் (4) விலைவாசி (4) விளையாட்டு போட்டிகள் (4) வெளிநாடு (4) வெளிநாட்டு வாழ்க்கை (4) ஷம்சுல் இஸ்லாம் சங்கம் (4) ஷேக் முகைத்தீன் (4) ஹைதர் அலி ஆலிம் (4) -அபூஹாஷிமா (3) 1977 (3) 23 (3) AIM (3) CMN SALEEM (3) Darul Islam Family (3) Dhua (3) TAMS (3) aamf (3) abu easa (3) avnv (3) eye care (3) shafi ahamed (3) sv (3) tmmk (3) ஃபித்ரு (3) அகம் (3) அகல இரயில் பாதை (3) அச்சம் (3) அஜிஜுதீன் (3) அண்ணா (3) அதிராம்பட்டினம் (3) அதிரை வரலாறு (3) அன்புடன் மலிக்கா (3) அபு இஸ்மாயில் (3) அபுஈசா (3) அபுசாருக் (3) அபுபக்கர் (3) அப்துர் ரஹீம் ஜமீல் (3) அமைதி (3) அரஃபா (3) அரஃபாத் (3) அறிக்கை (3) அறிவிப்பு (3) அலாவுதீன் (3) அவசரம் (3) ஆம்புலன்ஸ் (3) ஆய்வுக் கட்டுரை (3) ஆவணப்படம் (3) ஆஷிக் அஹமது (3) இசை (3) இட ஒதுக்கீடு (3) இட ஒதுக்கீடும் (3) இன ஒதுக்கீடும் (3) இனிக்க (3) இன்று ஒரு தகவல் (3) இரயிலடி (3) இரயில் (3) இர்ஷாத் (3) இறைத்தூதர் (3) இலக்கணம் (3) இலங்கை முஸ்லீம்கள் (3) இலவசம் (3) இழப்பு (3) இஸ்மாயில் நபி (3) இஸ்லாமிய ஆட்சி (3) உரையாடல் (3) உலக செய்திகள் (3) உலகம் 2010 (3) உள்ளாட்சி தேர்தல் (3) ஊக்கம் (3) எம்.காம். (3) எம்ஜிஆர் (3) ஒடுக்கு இடர் (3) ஒளரங்கசீப் (3) கடல் (3) கடுதாசி (3) கமிட்டி (3) கருகும் காதல் (3) கருணாநிதி (3) கலந்துரையாடல் (3) கல்வித் தந்தை (3) கா.மு.கல்லூரி (3) காதிர் முகைதீன் (3) குடி (3) குணம் (3) குற்றாலம் (3) குளம் (3) குளிர் (3) குழப்பம் - ஆலோசனை - தீர்வு (3) கூடங்குளம் (3) கேள்விகள் (3) கொடைக்கானல் (3) சபிதா காதர் (3) சமோசா (3) சம்சுல் இஸ்லாம் சங்கம் (3) சவுதிஅரபியா (3) சஹன் (3) சாகுல் ஹமீத் (3) சாப்பாடு (3) சிக்கனம் (3) சிங்கப்பூர் (3) சுத்தம் (3) சுனாமி (3) செக்கடி மோடு (3) செலவு (3) ஜமீல் M.ஸாலிஹ் (3) டாக்டர் (3) த.மு.மு.க. (3) தந்தை (3) தமிழ் வளர்ந்த நினைவுகள் (3) தர்கா (3) தர்பியத் (3) தாய்மை (3) தினசரிகள் (3) திமுக (3) தியாகத் திருநாள் (3) திருக்குர்ஆன் (3) திறன் (3) தீவிரவாதம் (3) தொப்பி (3) தோழர்கள் (3) நடுத்தெரு (3) நபி (3) நாஞ்சிலன் (3) நிஜாம் (3) நினைக்க (3) நிம்மதி (3) நேர்மை (3) நேர்வழி (3) நோய் (3) படிப்பினை (3) பட்ஜெட் (3) பட்டம் (3) பணம் (3) பத்ரு யுத்தம் (3) பயணக் கட்டுரை (3) பயம் (3) பயான் (3) பயிற்சி முகாம் (3) பரிசு (3) பாராளுமன்றம் (3) பாலியல் வன்முறை (3) பினாங்கு (3) பிப்ரவரி 14 (3) புண்ணியவான் (3) பெண் கல்வி (3) பெருநாள் சந்திப்பு (3) பேய் (3) பொய் (3) மகள் (3) மதமாற்றம் (3) மதீனா (3) மதுவிலக்கு (3) மனது (3) மனிதம் (3) மனிதவளம் (3) மன்னிப்பு (3) மலரும் (3) மவுனம் (3) மஹர் (3) மாடு (3) மாட்டுகறி (3) மார்க்க சொற்பொழிவு (3) மார்க்கக் கல்வி (3) மின்னஞ்சல் (3) மு.செ.மு. (3) முகநூல் (3) முத்துப்பேட்டை (3) முன்னாள் மாணவர்கள் (3) முற்போக்கு கூட்டணி (3) முஸ்லிம் சாதனை (3) மூக்கு கண்ணாடி (3) மூளை (3) மெதுவடை (3) மெளனம் பேசியதே (3) மேகம் (3) மோடி (3) ரசனை (3) வட்டி (3) வதந்தி (3) வரவேற்பு (3) வலைக்காட்சி (3) வாக்கு கொடுத்தல் (3) வாங்க (3) வாடா (3) வாழ்த்து (3) வாவன்னாசார் (3) விடுதலை (3) விடுப்பு (3) விண்ணப்பம் (3) வித்தியாசமானவர்கள் (3) வின்வெளி (3) விருந்தோம்பல் (3) விவாதக் களம் (3) வேகம் (3) வேலை வாய்ப்பு (3) ஷேக் ஜலாலுதீன் (3) ஸஹாபிய பெண்கள் (3) ஹராம் (3) +2 தேர்வு முடிவுகள் (2) 06122010 (2) 10 வகுப்பு 2010 (2) 1995 (2) 80/90 (2) ABM (2) AET (2) December-6 (2) ECR சாலை (2) ENT (2) HAJ 2012 (2) IAS தேர்வு (2) IPL (2) KMHSc. (2) KVS. (2) Lives (2) M.Y.முஹம்மத் (2) Motor Bike Riders (2) NAS (2) Rafeeq (2) Risky (2) SELAMAT HARI RAYA (2) Shahnaz (2) Student (2) U.A.E. (2) affa (2) air india (2) alumni (2) an news (2) book (2) broad gauge (2) camera (2) cmp (2) cute (2) decision (2) diabetes (2) do not disturb (2) dua (2) eye (2) facebook (2) flash back (2) food (2) india (2) library (2) live (2) making of படிக்கட்டுகள் (2) marriage (2) mk1 (2) motivation (2) mychoice (2) networking (2) news (2) password (2) peer mohammed (2) politics (2) prayer (2) q12 (2) ramadan (2) shafi (2) silence please (2) tntj (2) walking (2) www.adirainirubar.in (2) yasir (2) youth (2) ஃபெஸ்டிவல் (2) ஃபோட்டோகிராஃபி (2) அ.ர.ஹிதாயத்துல்லாஹ் (2) அஃப்சல் ஹுசைன் (2) அசத்தல் மொழி (2) அசத்தல் மொழிகள் (2) அச்சு (2) அணு உலை (2) அதி அழகு (2) அதிமுக (2) அதிரை உலா (2) அதிரை எக்ஸ்பிரஸ் (2) அதிரை கல்விச் சேவையகம் (2) அதிரை பசுமை 2020 (2) அதிரை மொழி (2) அதிரைகாரன் (2) அதிரைத் தென்றல் (CMP Ifran) (2) அதிரைநிருபரின் நிழல்கள் (2) அதிரைபட்டினம் (2) அதிரைப்பட்டினம் (2) அதிரைமணம் (2) அதிரையின் முத்திரை (2) அது ஒரு அழகிய மழைக்காலம் (2) அநீதி (2) அந்நிய முதலீடு (2) அந்நியர் முதலீடு (2) அனைத்து முஹல்லா (2) அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (2) அபூ முஸ்அப் (2) அபூசுஹைமா (2) அபூஹாமித் (2) அபூஹாஷிமா (2) அப்துல் ரசீத் ஆலிம் (2) அமானிதம் (2) அம்மாபட்டினம் (2) அம்மார்(ரலி. அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (2) அரசியல் ஜெயலலிதா (2) அரசியல்வாதி (2) அரசு (2) அரசு வேலை (2) அர்த்தம் (2) அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (2) அறிந்தும் அறியாமலும் (2) அறிமுகம் (2) அற்புதம் (2) அலங்காரம் (2) அலி (2) அலுவலகம் (2) அலைபேசி (2) அல்மனார் செண்டர் (2) அழுத்தம் (2) அழைப்புப் பணியின் அவசியம் (2) அழைப்புப்பணி (2) அவனா யிராதே (2) ஆகாயம் (2) ஆசிட் (2) ஆசிரியர் பணி (2) ஆசை (2) ஆசைகள் (2) ஆடை (2) ஆட்டோ (2) ஆணாதிக்கம் (2) ஆராய்ச்சி (2) ஆஷிக் முஹம்மத் (2) இணையத்தில் வலைவீச்சு (2) இணையம் (2) இதுதான் இஸ்லாம் (2) இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு (2) இந்திய முஸ்லீம்கள் (2) இபுறாகீம் அன்சாரி (2) இப்போது எல்லோரும் எழுதலாம் (2) இயக்க மயக்கம் (2) இயக்கம் (2) இயற்கை சீற்றம் (2) இருதய சிகிச்சை (2) இறப்பது (2) இறுதி கடமை (2) இறைவனிடம் (2) இறைவன் (2) இறைவழிபாடு (2) இலக்கிய மன்றம் (2) இலங்கை (2) இலைகள் (2) இவனா யிரு (2) இவர்கள் (2) இவ்வுலகம் அழிவை நோக்கி செல்கிறதா? (2) இஸ்லாத்தில் குற்றவியல் சட்டங்கள் (2) இஸ்லாமிய வருடப்பிறப்பு (2) இஸ்லாமியப் பொருளாதரம் (2) ஈத்கா (2) ஈமான் (2) ஈழம் (2) உடற்பயிற்சி (2) உணர்ந்தவை (2) உண்மை வரலாறு (2) உண்மைகள் (2) உதவி திட்டம் (2) உன்னப்பனின் விண்ணப்பம் (2) உம்மா (2) உம்மு சுலைம்(ரலி) (2) உரிமை (2) உருவப்படம் வரைதல் (2) உலகம் 2011 (2) உளவு (2) உழைப்பில்லா உடல்களும் (2) ஊடக தீவிரவாதம் (2) ஊட்டி (2) ஊர் (2) ஊர் நலன் (2) எங்க சார் (2) எங்க டீச்சர் (2) எங்கே அமைதி (2) எண்ணங்கள் (2) எதற்காக? (2) எதிரிப்பு (2) எதில் கஞ்சத்தனம் (2) எத்தி வைப்பு (2) எத்தியோப்பியா (2) எந்தப் பாதை உங்கள் பாதை? (2) எனக்குத் தெரிந்த இஸ்லாம் (2) என்பது (2) எம்.ஃபில். (2) எழுத்து (2) எழுத்தும் (2) ஏன் ஹிஜாப் (2) ஏர் இந்தியா (2) ஏழை (2) ஐரோப்பா (2) ஒப்பந்தம் (2) ஒருங்கிணைந்த (2) ஒருங்குறி (2) ஒழுக்கம் (2) ஓடுகாலி (2) ஓர் இஸ்லாமிய பார்வை (2) கஞ்சி (2) கஞ்சி வருதப்பா (2) கடன் தள்ளுபடி (2) கடன் வாங்கலாம் வாங்க (2) கடற்கரை (2) கடற்கரைத் தெரு கந்தூரி (2) கடற்கரைத்தெரு புளியமரம் (2) கடவுச் சொல் (2) கடை (2) கணவன் (2) கண்டிக்கிறோம் (2) கண்தானம் (2) கதையல்ல நிஜம் (2) கந்தூரி தடை (2) கபுர் (2) கப்ரு (2) கருமையும் (2) கலரி (2) கலைஞன் (2) கல்யாணம் (2) கல்வி முறை (2) கல்வி விருது (2) கல்வியும் கற்போர் கடமையும் (2) கவனம் (2) கவிக்கோ அப்துல் ரகுமான் (2) கா.அப்துல் கபூர் எம்.ஏ. (2) காட்சி (2) காட்டுப் பள்ளி (2) காணொளி உரை (2) காதர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி (2) காமராசர் (2) காற்று (2) காலை (2) காவல்துறை (2) காவேரி (2) கி.பி: 2011 அது ஒரு மழைக்காலம் (2) கிரிக்கெட் (2) குகை (2) குஜராத் (2) குஞ்ஞாலி (2) குடி தண்ணீர் (2) குணக்குன்று (2) குத்துச் சண்டை (2) குப்பை தொட்டி (2) குறை (2) கூட்டணி (2) கேரளா (2) கையேந்துங்கள் (2) கொசு (2) கொடுமை (2) கொண்டாட்டம் (2) கொலை (2) கொழும்பு (2) கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் (2) கோபம் (2) சத்தம் (2) சபுறு (2) சமச்சீர் கல்வி (2) சமரசம் (2) சமுதாய சீர்கேடு (2) சமூக மாற்றங்கள் (2) சம்சுல் இஸ்லாம் (2) சம்பாதித்தால் (2) சர்க்கரை (2) சவால் (2) சவால்கள் (2) சஹர் (2) சாத்தியமா? (2) சான்பிரான்சிஸ்கோ (2) சிகிச்சை (2) சிதறல்கள் (2) சித்தீக் பள்ளி (2) சிந்தனை துளி (2) சின்ன வயசு (2) சிராஜ் உத்-தெலா (2) சிரிப்பு (2) சிறப்பு (2) சிலந்தி வலை (2) சீனி (2) சுயம் அறிக (2) சுர்மா (2) செயற்க்கை கோள் (2) செய்திகள் (2) செய்யுமிடத்தில் (2) செய்வீர் (2) சேவை (2) சொத்து (2) சோதிடம் (2) சோம்பேறி (2) சோறு (2) ஜஃபருல்லாஹ் (2) ஜமாஅத் (2) ஜஹபர் சாதிக் (2) ஜாஃபருல்லாஹ் (2) ஜித்தா (2) ஞாபகம் வருதே (2) டாக்டர் அப்துல்லாஹ் (2) டிசம்பர் (2) தன்னபிக்கை (2) தன்னிலை சுகாதாரம் (2) தமிழ் நாடு (2) தமிழ்நாடு (2) தமிழ்நாட்டில் (2) தலைமை ஆசிரியர் (2) தலையங்கம் (2) தலைவர் (2) தலைவர்கள் (2) தவறு (2) தாகம் (2) தாக்குதல் (2) தான தர்மம் (2) தாய்மொழி (2) திக்ரு (2) திடல் தொழுகை (2) தினம் (2) தியாகப் பெருநாள் சிந்தனை (2) தியாகம் (2) திருட்டு தடுக்க (2) திருவிழா (2) திரை (2) திறமை (2) தீ (2) தீமை (2) துணைத் தலைவர் (2) தூண்கள் (2) தூய்மை (2) தென்றல் (2) தெளிவு (2) தேர்தல் களம் (2) தேர்வு (2) தொந்தரவு (2) தொன்னூறு (2) நடுப்பக்கத்தில் நட்சத்திரம் (2) நடுவுல கொஞ்சம் நட்சத்திரங்களைக் காணோம் (2) நபி(ஸல்) (2) நம்ம ஊர் (2) நம்மளுக்கு (2) நற் குணங்கள் (2) நலமில்லா நவீனமும் (2) நாட்டு நடப்பு (2) நாணம் (2) நாற்காலி (2) நாற்பது (2) நினனவுகள் (2) நினைவூட்டல் (2) நியூயார்க் (2) நிறம் மாறும் மனிதர்கள் (2) நிறைவுரை (2) நிலநடுக்கம் (2) நூருல் இப்னு ஜஹபர் அலி (2) நூல் (2) நெசவுத் தெரு (2) நெனப்பு (2) நேபாளம் (2) நேரலை (2) நேருக்கு நேர் (2) நேர்காணல் (2) பகதூர்ஷா ஜாஃபர் (2) பகுத்தறிவாளர்களின் மதம் (2) பக்கத்து ஊர் செய்திகள் (2) பக்கீர் முஹம்மது (2) பங்கு (2) பசுமை (2) பசுமை அதிரை 2020 (2) பட்டுக்கோட்டை (2) பணி (2) பண்பு (2) பதிவர்கள் (2) பயிற்சி (2) பரிவு (2) பரீட்சை நேரம் (2) பர்ஜ் கலிஃபா (2) பர்மா தேக்கு வீட்டுக்காரர் (2) பள்ளி (2) பஷீர் அஹம்து (2) பாடம் (2) பானு என்றென்றும் (2) பாம்பன் பாலம் (2) பாருக்குள்ளே நல்ல நாடு (2) பிடித்தது (2) பின்னூட்டம் (2) பின்னூட்டவாதி (2) பிரதமர் (2) பிரதர் (2) பிரியமில்லா பிரிவு (2) பிறப்பது (2) பிறமதம் (2) பிலால் (ரலி) (2) பிலிப்பைன்ஸ் (2) புகார் (2) புகைப் பிடித்தல் (2) புகைப்பட பொழுதுகள் (2) புகைப்படம் (2) புதிய பள்ளிவாசல் (2) புதிய மத்திய அரசு (2) புதுக்கிப்படாத திருமணங்கள் (2) புதுமை (2) புரிந்துணர்வு (2) புலவர் (2) பூகம்பம் (2) பெண்ணீயம் (2) பெண்ணுக்கு வீடு (2) பெண்ணுறிமை (2) பெண்ணே (2) பெரியவர்கள் (2) பேருந்து (2) பொட்டிக்கடை (2) பொற்காலம் (2) போடுங்கள் (2) போர் அடிக்குது (2) போஸ்டர் (2) மகளிர் (2) மடமை (2) மணமகன் (2) மணமகள் (2) மணிமாலை (2) மதச்சாயம் (2) மதிப்பு (2) மதிப்புரை (2) மதிப்பெண்கள் (2) மதீனாவில் நோன்பும் பெருநாளும் (2) மந்தி (2) மனசாட்சி (2) மனனம் (2) மனு (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா ? (2) மன்றம் (2) மயக்கம் (2) மரண அறிவிப்பு (2) மரபுக் கவிதை (2) மருதநாயகம் (2) மர்யம் ஜமீலா (2) மறந்தவைகள் (2) மறுமை நாள் (2) மலர் வனம் (2) மலேசியா பெருநாள் (2) மலேஷியாவில் ரமளான் (2) மாணவமணிகளுக்காக (2) மாணவிகள் (2) மாணவியின் (2) மாது (2) மானிடா (2) மாப்புளே (2) மாயை (2) மார்க்கம் (2) மாலை (2) மாவீரன் (2) மின்சாரவாரியம் (2) மீன்கள் (2) மீள்பதிவு (2) மு.செ.மு.நெய்னா முஹம்மது (2) மு.மேக்தா (2) முகமது பாரூக் (2) முசெமு (2) முஜாஹித் (2) முடிவுகள் (2) முத்தம் (2) முன்னோர்கள் (2) மும்பை (2) முஸ்தகீம் (2) முஸ்லிம்கள் (2) முஸ்லீம் (2) முஸ்லீம் குரல் (2) முஹம்மத் அலீய் (2) முஹர்ரம் (2) மூணுக்கு வந்த டவுட்டு (2) மூனாறு (2) மூளைக்கு வேலை (2) மெரினா (2) மை (2) மையம் (2) யா அத்தஹாக் (2) யார்தான் சொல்வது (2) யாவாரம் (2) ரமலான் சிந்தனை (2) ரமளானுக்கு பின் (2) ராமாயணம் (2) ரியாஸ் அஹ்மது (2) ரிலாக்ஸ் ப்ளீஸ் (2) ரேங்க் கார்டு (2) வங்கி (2) வயோதிகம் (2) வரமா (2) வருக (2) வர்த்தகம் (2) வறுமைக்கோடு (2) வலைப்பூ (2) வலைவீச்சு (2) வழமை (2) வழிமுறைகள் (2) வழியனுப்புதல் (2) வா.உ.சிதம்பரனார் (2) வாகனம் (2) வாங்கடா (2) வாநிலை (2) வாய்க்கால் (2) வாவன்னா சார் (2) விஞ்ஞானம் (2) விதை (2) விமான பயணமும் விபரீதமும் (2) விமானப் பயணம் (2) விமானம் (2) விரயம் (2) விளம்பரங்கள் (2) விவேகம் (2) வெண்மையும் (2) வெந்நீர் ஒத்தடம் (2) வெரசன (2) வெளிச்சம் (2) வெள்ளிநிலா (2) ஷஃபான் (2) ஷப்-ஏ-அராஅத்து (2) ஷவ்வால் (2) ஷஹ்லா (2) ஷாஃபி M.I. (2) ஸதக்கத்துல்லாஹ் (2) ஸனது (2) ஸூரத்துல் பகரா (2) ஸ்ரீலங்கா விமானம் (2) ஹசினா அப்துல் பாசித் (2) ஹஜ் 2011 (2) ஹஜ் பெருநாள் சந்திப்பு (2) ஹபீப் முஹம்மத் (2) ஹலால் (2) ஹாஜா முகைதீன் (2) ஹிதாயத்துல்லாஹ் (2) ஹைதர் அலி (2) “பசு” ‘மை’பூசி அடி‘மை’ ஆகும் இந்தியா. (2) 'e'மான் (1) 'மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு (1) .அதிரை (1) 10 வகுப்பு CBSE (1) 100வது நாளில் (1) 10ம் வகுப்பு (1) 1435 (1) 1600 கோடி வழங்கிய வள்ளல் (1) 1930 (1) 1970 (1) 1980 (1) 1984 (1) 1987 (1) 1993 (1) 2002 (1) 2012-13 (1) 2015 (1) 2015-2016. பட்ஜெட் (1) 2050 (1) 25000 அடி (1) 5-ம் (1) 50 வது பதிவு (1) 6 (1) 6-ம் (1) AAF (1) ABC (1) ALM ஆண்டுவிழா (1) ATCO (1) AZHAR HUSSEIN (1) Abdul Rahman (1) Albaqavi.com (1) American Adirai Forum (1) American Adirai Forum [A A F] – இரண்டாவது அமர்வு (1) Any suspended coffee (1) B.ஜமாலுதீன் (1) BBC (1) Beware of killer offers in Dubai (1) Budget 2012 (1) CMN சலீம் (1) CMண் சலீம் (1) Cancer Awareness Program (1) Cataract (1) December (1) ETA (1) Easy life leads to lazy life (1) Engineering career (1) Final Year MBBS (1) GROUP-1 (1) Glaucoma (1) Gulfnews (1) HABIT (1) HAJ 2015 (1) I am the Greatest (1) IAS (1) IFT (1) India is my country (1) Islam (1) J.A.தாஜுதீன் (1) JMC (1) KMHSSc (1) KVS (1) LOGO (1) London (1) M S M(n) (1) M.B.B.S. (1) M.L.A ரெங்கராஜன் (1) M.S.முகமது மீராசாகிப் (1) MANAGEMENT CAREER (1) MBA (1) MEDICINE CAREER (1) MF (1) MKN Trust (1) MMS (1) MOTHER (1) MS அப்துல் கஃபூர் (1) MSM(r) (1) Moinudeen (1) Moorthy (1) Motion Sickness (1) Mujahid Razeen (Srilanka) (1) Munawar (1) Naming and Calling Spiritually and Personally (1) Nizar Ahamed (1) Nursery School (1) PJ (1) PhD (1) Right Understanding (1) S.H.அஸ்லம் (1) S.சித்தீக்.M.Tech (1) SIS (1) SSLC (1) SSLC. (1) School (1) Shahbaz Mohamed (1) Sports Day (1) Stop N Shop (1) Straight line Stationery (1) TNPSC (1) Truly Asia (1) U.Aboobacker (1) UAE National Day (1) Union Budget 2017 - 2018 (1) abdul khader (1) abu hanifa (1) ac (1) activities (1) adco (1) adirai businessman (1) adirai classified (1) adirai educational mission (1) adirai news (1) adirampattinam (1) afghan (1) after ramadan (1) ayda (1) back2School (1) beach street (1) boxer (1) burkhalifa (1) cbse சமச்சீர் கல்வி (1) cc Sabeer appa (1) channel (1) chennai (1) citizen of world (1) cobol (1) computer (1) convert to islam (1) country club (1) credit card (1) cults (1) current affairs (1) dad (1) dare to dream (1) dc (1) demonetization (1) different thinking (1) drop box (1) dynamic cellcom (1) e-தமிழர் (1) ecr (1) editor-choice (1) email (1) emirates ID (1) engineer (1) english (1) family card (1) family tree (1) folder (1) forward (1) friend request (1) friendship (1) gulf (1) haj 0215 (1) haji marra (1) health (1) history of Rasoolullah (1) homework (1) ibraheem ansari (1) incredible (1) indian muslims (1) influences (1) inneram (1) inter school quiz competition (1) islamic bank (1) islamic banking (1) kalaam (1) kaveri (1) kayal (1) lagoon (1) life (1) living (1) m.nainathambi (1) madina (1) magazine (1) makkah (1) media (1) medical (1) mens way (1) mirage (1) mmk (1) mms பஹுருத்தீன் (1) mnt (1) mohamed ali (1) mp (1) mpmv (1) msf (1) msm1 (1) mumbai (1) music (1) national flag (1) notice (1) online (1) our (1) pain worth it (1) parotta (1) peach n berry (1) photography (1) physical (1) picture of play (1) police (1) power (1) programming (1) publisher (1) queenie padilla (1) real estate 1 (1) sabee (1) sad (1) sbeer (1) sha an sha (1) shaficast (1) sham (1) sharing (1) sharjah (1) shirt (1) shirts (1) smart phones (1) son (1) sp பட்டினம் (1) speech (1) srilankan muslim (1) syed abdul hameed (1) syria children (1) tamil (1) thajudeen (1) thamemunansari (1) treatment (1) truly asia (1) tweet (1) update (1) urdu (1) version 4.01 (1) we support (1) welcome Ramadhan (1) wikileaks (1) y1 (1) youtube (1) ஃபஜர் தொழுகை (1) ஃபாரூக் (1) ஃபிலிம் (1) ஃபேக்புக் (1) ஃபேஸ்புக் (1) ஃபோட்டூன் (1) ஃபோட்டோ (1) ஃபோன் (1) ஃபோர்ட்டூன் (1) ஃப்ரெண்டு ரெகுஸ்ட் (1) அ.ர.முஹமது தஸ்தகீர் (1) அஇதிமுக (1) அகத்தின் அழகு (1) அகிலம் (1) அங்கீகாரம் (1) அசத்தல் (1) அசைவு (1) அஜினோமோட்டோ (1) அஜீஸ் (1) அஜ்மான் (1) அஜ்மாஸ் நோன்பு கஞ்சி (1) அட (1) அடப் பாவிங்களா ? (1) அடிக்கல் (1) அடிமை (1) அடிமை வணிகர் அந்-நுஐமான் (ரலி) (1) அடியேனின் அகரம் (1) அட்லாண்டா (1) அணிவகுப்பு (1) அணு (1) அணை (1) அண்ணன் (1) அண்ணன் தம்பி உறவு (1) அண்ணே ! (1) அதிகாரம் (1) அதிகாரி (1) அதிகாலை (1) அதிசயம் (1) அதியற்புதம் (1) அதிராம்பட்டினம் 2011 (1) அதிராம்பட்டினம் 2012 (1) அதிராம்பட்டினம்2011 [2] (1) அதிரை ஃபாரூக் (1) அதிரை அபூபக்கர் (1) அதிரை அஸ்ரப் (1) அதிரை அஸ்லம் (1) அதிரை ஆத்திச்சூடி (1) அதிரை இலக்கிய மாமன்றம் (1) அதிரை இஸ்லாமிக் மிஷன் (1) அதிரை கல்வி CD (1) அதிரை கல்வி அறக்கட்டளை (1) அதிரை கல்வி விழிப்புணர்வு (1) அதிரை கீழத்தெரு (1) அதிரை சித்தீக் பள்ளி (1) அதிரை டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் (1) அதிரை தமுமுக (1) அதிரை பெருநாள் (1) அதிரை பெருமை (1) அதிரை பேரூராட்சி (1) அதிரை பொருட்காட்சி (1) அதிரை போஸ்ட் (1) அதிரை மாடு (1) அதிரை மாணவி (1) அதிரை வரலாற்றில் (1) அதிரை வள்ளல் (1) அதிரை வாசனை (1) அதிரைக் கடல் (1) அதிரைச் செய்தி (1) அதிரைமுஜீப் (1) அதிரையன் (1) அதிரையின் நிய்யத்து (1) அதிரையின் பூர்வ குடிமக்கள் (1) அதிரையின் விருந்து உபசரிப்புகள் (1) அதிரையில் (1) அதிரையில் பரவிவரும் அதிபயங்கர ஆபத்தான நோய் (1) அதிரையில் மழையாமே (1) அதிரையில் ஷவ்வால் நோன்பு - புறக்கனிக்கப்படுகிறதா (1) அதிர்ச்சிகள் (1) அது (1) அது ஒரு பொற்காலம் (1) அது ஒரு ஹஜ்ஜுப்பெருநாள் நேரம் (1) அந்த ஏழு நாட்கள் (1) அந்த திக் திக் நேரங்கள் (1) அந்தக் காலம் (1) அந்தரத்தில் (1) அந்தி (1) அனஸ்(ரலி) (1) அனுபவப் பாடம் (1) அனுமதி (1) அனைத்துத் தெருக்களும் அதிரையின் கருக்கள்.editorial (1) அன்னை (1) அன்னை ஆயிஷா சித்தீக்க(ரலி) (1) அன்னை கதீஜா மகளிர் கல்லூரி (1) அன்னையர் தினம் (1) அன்பளிப்புகள் (1) அன்பு (1) அன்புக் குறிப்புகள் (1) அன்புடன் புகாரி (1) அன்று பெய்தது மழை (1) அன்றைய நோன்பும் (1) அபராதம் (1) அபு பஜ்லு (1) அபு ஹனிஃபா (1) அபுமஹ்மூத் (1) அபுருமானா (1) அபுல் ஹசன் (1) அபுல்கலாம் ஆஷாட் (1) அபூ சுஹைமா (1) அபூ நூரா (1) அபூஇப்றாஹீம் (1) அபூபக்கர் (1) அபூபக்கர் ரழி (1) அபூஹனிஃப (1) அபூஹனிஃபா (1) அப்டேட் (1) அப்துர் ரஷீது ரஹ்மானி (1) அப்துர் ரஷீத் ரஹ்மானி (1) அப்துல் கறீம் (1) அப்துல் கலீம் (1) அப்துல் ஜப்பார் (1) அப்துல் நாசர் மதனி (1) அப்துல் ராஜிக் (1) அப்துல்லாஹ் (1) அப்பர் கோதையர் (1) அப்பா ஏசுவாஹ....(அதிரையின் மண் வாசனை) (1) அப்பாஸ் அலி (1) அமீரக தமிழ் மன்றம் (1) அமீருல் முஃமின் (1) அமெரிக்க அதிரையர்களின் கூட்டமைப்பு (1) அமெரிக்காவில் இறையில்லம் தீக்கிரை (1) அமைதியின் ஆளுமை (1) அமோஜான் (1) அம்மார்(ரலி. (1) அம்மாவைப் பிடித்த பேய் (1) அய்டா (1) அரஃபாத் 1987 (1) அரஅல (1) அரசினர் மேல்நிலை பள்ளி (1) அரசியலல்ல (1) அரசியல் களம் (1) அரசியல் முதல்வர் (1) அரசியல் வியாதிகளா? (1) அரசியல்வாதிகளா? (1) அரசு உதவிகள் (1) அரசு வேலை வாய்ப்பு (1) அரபிக் (1) அரபு நாடுகள் (1) அரபு நாட்டு பயணம் (1) அரபுலகம் (1) அரவணைக்க அருகதையற்றவர்களா அகதிகள் (1) அருட்பேறு (1) அருமறை (1) அரும்பு (1) அரும்பு பாட்டு (1) அரும்புப்பாட்டு (1) அரும்பேறு (1) அருளைச் சுமந்த ஹாஜிகளே...வருக (1) அருவி (1) அரேபியர்கள் (1) அர்-ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (1) அர்ப்பணிப்பு (1) அறிகுறிகள் (1) அறிந்து (1) அறியாமைக் காலம் (1) அறிவிப்பு சம்சுல் இஸ்லாம் சங்கம் (1) அறிவியல் பாங்கு (1) அறிவுக்குப் புலப்படாத ஆழ்கடலே (1) அற்பணிப்பு (1) அலகே ஆயுதம் (1) அலைகள் (1) அலைபாயுதே (1) அல்-கத்ர் (1) அல்ஜஸீரா (1) அல்மாஸ் (1) அல்ல (1) அல்லாஹ் யாரை நேசிக்கிறான் (1) அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் 99 (1) அல்லாஹ்வின் சக்தி (1) அல்லாஹ்வுக்கு நன்றி (1) அழகியல் (1) அழகு மொழி (1) அழகுக் குறிப்புகள் (1) அழிக்க திட்டம் (1) அழுகை (1) அழுவதற்கா (1) அழைப்பு பணி (1) அழைப்பு பணி மதமாற்றம் ஆகுமா (1) அவசர இழப்பு (1) அவசர உலகம் (1) அவன் (1) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும். சஹாபாக்கள் (1) அவலம் (1) அவளைச் சுற்றி (1) அவள் (1) அவஸ்தை (1) அவ்லியா (1) அஸார் (1) அஸ்மா(ரலி) (1) அஸ்மாவுல் ஹுஸ்னா அகவல் (1) அஸ்லம் (1) அஸ்லம் பாஷா (1) அஹமது பாக்கவி (1) அஹமது ஹாஜா (1) அஹமது ஹாஜி (1) அஹமதுல்லா ஷா (1) அஹ்மது (1) அஹ்மது அமீன் (1) அஹ்மது ஷஃபி (1) அஹ்மது ஹாஜா (1) அஹ்மத் தீதத் (1) ஆஃபியா புரூட் (1) ஆஃபீஸ் பாயும் - வெகேஷனும் (1) ஆஃப்பிரிக்கா (1) ஆகஸ்ட் (1) ஆக்ஃபோர்டு (1) ஆக்கமிடு அடுமடையா (1) ஆக்ரா (1) ஆசியாநெட் (1) ஆசிரியர்கள் (1) ஆசிரியைகள் (1) ஆசை கணவுகள் (1) ஆச்சர்யம் (1) ஆஞ்சியோ கிராஃபி (1) ஆடவரும் (1) ஆடு (1) ஆடையகம் (1) ஆட்சியதிகாரம் (1) ஆட்சியிழந்த கட்சி (1) ஆட்டம். (1) ஆட்டு மூளை (1) ஆண் (1) ஆண்கள் (1) ஆண்டவனே ஆள்பவனே (1) ஆண்டு விழா (1) ஆண்டுவிழா (1) ஆதரவு (1) ஆனந்தாவின் அபிநயம் (1) ஆனலைன் (1) ஆபூஇப்ராஹீம் (1) ஆப்பரேஷன் (1) ஆப்பிரிக்க (1) ஆப்பிள் (1) ஆப்ரேஷன் (1) ஆமினா முஹம்மது (1) ஆமை (1) ஆம் ஆத்மி (1) ஆயத்துல் குர்ஸி (1) ஆயிஷா பல் மருத்துவமனை (1) ஆய்ஷா ஃபாத்திமா (1) ஆரசியல் (1) ஆரிஃபா ஆலிமா (1) ஆர்நோத் வான் டோர்ன் (1) ஆர்வம் (1) ஆறிலிருந்து அறுபதுவரை (1) ஆறு (1) ஆலிம்சா (1) ஆளுக்கொரு சட்டம் (1) ஆளும் கட்சி (1) ஆளும் வளரனும் அறிவும் வளரனும் (1) ஆளூர் ஷாநவாஸ் (1) ஆவ்மியாக்கா (1) ஆஷி அஹ்மத் (1) ஆஷிக் அஹ்மத் (1) ஆஹா (1) இஃப்தார் (1) இக்கணம் (1) இக்றா (1) இங்கு எது முடியும் (1) இடர்கள் (1) இடி (1) இடியப்பம் (1) இடியாப்பம் (1) இடைத்த் தேர்தல் (1) இணைவத்தல் (1) இணைவைப்பு (1) இதயதளம் (1) இது எப்படி இருக்கு (1) இந்த வார செய்தி (1) இந்தக் காலம் (1) இந்தப் பாதை (1) இந்தவுளே (1) இந்திய அரசியல் (1) இந்திய ஊடகங்கள் (1) இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லீம்களின் பங்கு (1) இந்திய சுந்தந்திர தினம் (1) இந்திய ரூபாய் (1) இந்தியா சுதந்திர தினம் 1947 (1) இந்து (1) இந்துத்துவா (1) இந்தோனேஷியா (1) இந்நேரம் (1) இனப்படுகொலை (1) இனிக்கிறது (1) இனிமை (1) இனிய (1) இனிய திசைகள் (1) இன்டர்வியூ (1) இன்னுமா தயக்கம் (1) இன்பம் (1) இன்று 10.01.2011 (1) இன்று 18 02 2011 (1) இன்று இரு தகவல் (1) இன்று இரு தகவல்கள் (1) இன்று நாளை (1) இன்றும (1) இன்றைய வீம்பும் (1) இன்ஷூரனஸ் (1) இபுராகீம் அன்சாரி (1) இப்தார் நிகழ்ச்சி (1) இப்னு அப்பாஸ் (1) இப்ராஹீம் (1) இப்றாகிம் அன்சாரி (1) இமாம ஷாஃபி பள்ளி (1) இமாம் (1) இமாம் அபூஹனீஃபா (1) இமாம் புகாரீ (1) இமாம் ஷாஃபி (1) இம்தாதி (1) இயக்க வெறி (1) இயக்கங்கள் (1) இயற்கை இன்பன் (1) இயற்கை எங்கே (1) இரங்கற்பா (1) இரங்கல் (1) இரண்டாம் ஆண்டு (1) இரயில்வே (1) இரவேலர்கள் (1) இராஜமடம் (1) இராணுவம் (1) இராமநாதபுரம் (1) இருட்டு (1) இருதயம் (1) இருளும் ஒளியும் (1) இருவேறு துருவங்கள் (1) இர்ஃபான் (1) இறக்கை (1) இறக்கை கட்டிப் பறக்குதய்யா (1) இறப்பு (1) இறுதி மூச்சு (1) இறுதியாண்டு (1) இறை வசனங்கள் (1) இறைமறை (1) இறைமார்க்கம் (1) இறையச்சமுள்ள தந்தை (1) இறையச்சம் (1) இறையில்லத்தில் யாருடன் மல்லுக் கட்டுகிறார்கள் (1) இறைவனின் கூலிப்படைகள் (1) இறைவனுக்கு நன்றி (1) இறைவேதம் (1) இலக்கு (1) இலங்கை தமிழனின் இதையக் குரல் (1) இலட்சினை (1) இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம் (1) இலவச மருத்துவ முகாம் (1) இலை (1) இல்ம் (1) இல்லறம் (1) இல்லல்லாஹ் (1) இல்லாள் (1) இளம் மனைவின் கடிதம் (1) இஸலாம் (1) இஸ்மாயில் ஸலஃபி (1) இஸ்லாத்திற்காக (1) இஸ்லாத்திற்கு எதிரான (1) இஸ்லாமிய தீவிரவாதம் (1) இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் (1) இஸ்லாமிய வரலாறு (1) இஸ்லாமிய வரலாற்று மின்னொளிகள் (1) இஸ்லாமியப் பாரவை (1) இஸ்லாம் மதத்திற்கு ஐரோப்பாவின் கடன் (1) ஈடிணையற்ற இறைவா (1) ஈத்மிலன் (1) ஈன்ற பொழுதின் (1) ஈமெயில் (1) ஈர நெஞ்சம் (1) ஈராக் (1) ஈர்ப்பு (1) உ.பியில் துவங்கவிருக்கும் போர் (1) உங்கள் ஓட்டு விறபனைக்கு அல்ல (1) உங்கள் வீட்டுத் திருமணத்தில் இது இருக்கா (1) உசுரு (1) உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு (1) உடல் ஆரோக்கியம் (1) உடல் பயிற்சி (1) உணர்வுகள் மூன்று (1) உண்டாயிருக்கேன் (1) உண்ணாவிரதம் (1) உண்மைச் சம்பவம் (1) உதவியது இஸ்லாம் (1) உன்டகலியான் அதிரையரின் உணவு (1) உன்னை அறி (1) உப்பு (1) உமர் (1) உமர் (ரலி) (1) உமர் கையாம் (1) உமர் ஷரீப் முப்தி (1) உமர்தம்பி (1) உம்மா'ன்டா சும்மாவா ? (1) உம்மி மக்தூம் (1) உம்ரா (1) உயர் கல்விக்கு உதவித் தொகை (1) உயிரெழுத்துகள் (1) உயிர் (1) உயிர்க் கொத்திப் பறவை (1) உரிமைகள் (1) உருகிய எதிர்ப்புகள் (1) உருகுதே அதிரை (1) உருக்கம் (1) உரைநடை (1) உர்து (1) உறவின் பிரிவு (1) உறவு வளர்ப்போம் (1) உறவுகள் எங்கே (1) உறவுகள் மேம்பட உன்னத 10 வழிமுறைகள் (1) உறுப்புகளின் நோய் (1) உலக அதிசயம் (1) உலகக் கோப்பை (1) உலகமயம் (1) உலகம் எப்படி உருவானது (1) உலகின் தலைசிறந்த பணக்காரர் (1) உலோகப்பறவை (1) உல்லாசம் (1) உளத்தூய்மை (1) உளவியல் (1) உளுச் செய்வது (1) உள்குத்து (1) உள்ளம் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சி த் தேர்தல் (1) உள்ளாட்சித் தேர்தல் (1) உள்ளே (1) உழை (1) உழைப்பு (1) உஸ்மான்(ரலி) (1) ஊடக (1) ஊடக தேர்தல் பிரச்சாரம் 2016 பதிலடி (1) ஊடக விபச்சாரம் (1) ஊடகங்கள் (1) ஊடங்கள் (1) ஊனம் (1) ஊராட்சி (1) ஊரோடு உறவாடு (1) ஊர் செய்தி (1) ஊர் நடப்பு (1) ஊர் நினைவுகள் (1) ஊர் பார்வை (1) ஊர்க்காரர் (1) ஊர்வன (1) எக்ஸ்க்யூமி (1) எக்ஸ்பிரஸ் (1) எங்க முதலாளி (1) எங்கவூர் மாப்பிள்ளை (1) எங்கே (1) எங்கே நேரம் (1) எங்கே வீழ்ந்தோம் (1) எங்ஙனம்? (1) எச்சில் (1) எஞ்சினியர் (1) எடு-இட்டோர்-இயல் (1) எண்ணமும் (1) எண்ணம் (1) எண்ணிலடங்கா (1) எண்ணெய் (1) எதிரி (1) எதுக்கும் நல்ல மனசு வேணும் (1) எத்தீம்கானா (1) எந்தையே (1) எனக்காக (1) எனதூர் (1) என் ஃப்ரண்டப் போல யாரு மச்சான் (1) என் கண்ணான வாப்பாவே (1) என் கனவு (1) என் கேள்விக்கென்ன பதில் (1) என் பார்வை (1) என் மொழி (1) என் வீட்டுத் தோட்டத்தில் (1) என்.ஷஃபாத் (1) என்கவ்ன்ட்டர் (1) என்ன (1) என்ன கொடுமை (1) என்னாட்டின் (1) என்னால் இயன்ற அறம் (1) என்னைக் கண்டெடுத்தேன் (1) எபிக் வெப் பிரவுசர். (1) எப்படி அவர்களை மன்னிப்பேன் (1) எப்படிப் பிறந்தாய் நீ (1) எப்படியும் மரணம் முடிவாகி விட்டது (1) எப்புடீ (1) எம்.ஃபில் (1) எரிகல் (1) எர்மைல் தவாலும் (1) எறச்சி (1) எலும்பு உறுதிதன்மை (1) எலும்பு கூடு (1) எல்லாப் புகழும் இறைவனுக்கு (1) எல்லை (1) எல்லைக் கோடு (1) எழுதியதல்ல (1) எழுது (1) எழுத்தியல் (1) எழுவதற்கா? (1) ஏகத்துவம் (1) ஏஞ்சலா கொலின்ஸ் (1) ஏனெனில் திமிர் (1) ஏப்ரல் 1 (1) ஏமாற்றமா (1) ஏர்வாடி (1) ஏற்ற நாடு (1) ஏற்றமா (1) ஏழை மாணவர்கள் (1) ஏழ்மை (1) ஐ.ஏ.எஸ். (1) ஐ.பி.எல். கிரிக்கெட் (1) ஐக்கியம் (1) ஐந்து (1) ஐஸிஐ (1) ஐஸ்கிரீம் (1) ஒத்தடம் (1) ஒத்துமை (1) ஒரு உரையாடல் With சீனிவாசன் சார். (1) ஒரு கோணல் பார்வை (1) ஒரு ச்சிக்குபுக்கு பாதை (1) ஒரு பிள்ளையின் ஏக்கம் (1) ஒற்றுமை அழைப்பு (1) ஒற்றுமையே பலம் (1) ஒற்றுமை் (1) ஒற்றையாய் (1) ஒலி (1) ஒளரங்கசீப் நான்மணி மாலை (1) ஒளி (1) ஒளி வீசுமுன் (1) ஓடி விளையாடு (1) ஓடை (1) ஓர் அன்னையால் தன் மகனை எப்படி விற்க முடியும் (1) ஓர் ஆய்வு (1) ஓர் பார்வை (1) ஓலை (1) ஔரங்கசீப் நான்மணி மாலை (1) கசையடி (1) கஜினி முகமது (1) கஜ்ஜாலி (1) கஞ்சத்தனம் (1) கடன் அட்டை (1) கடமை (1) கடமைகள் (1) கடற்படை (1) கடி (1) கடி ஜோக்ஸ் (1) கடைத்தெரு (1) கட்சி (1) கட்சிகளின் தந்திரம் சுதந்திர தினம் (1) கட்டிடம் (1) கட்டுபாடு (1) கட்டுப்பாடு (1) கட்டுரைகள் (1) கணகள் இரண்டும் (1) கணினி தமிழ் (1) கண் தானம் (1) கண் பாதுகாப்பு (1) கண் பார்வை விழிப்புணர்வு (1) கண் மருத்துவம் (1) கண்காட்சி (1) கண்ணீர் (1) கண்பார்வை (1) கண்புரை (1) கண்மணி அன்போடு நான் (1) கதைகள் (1) கத்தனா (1) கந்தவரு (1) கந்தூரி மடமை (1) கந்தூரி வழிகேடு (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கனவும் நனவும் (1) கன்னிப் பதிவு (1) கபுரை இடிக்க வேண்டுமா? (1) கமாலுதீன் மதனி (1) கம்பி (1) கம்பியில்லா தொடர்பு (1) கம்யூனிசம் (1) கம்ளைண்ட் (1) கயவர்கள் (1) கரகரப்பு (1) கரன்ஸிக் களேபரங்கள் (1) கருணை (1) கருத்தாய்வு (1) கருத்து முரண்பாடுகள் (1) கருப்பு எலி (1) கருமையும் வெண்மையும் (1) கரும்புகை (1) கருவளையம் (1) கருவேலமரம் (1) கர்ப்பினி பெண்களுக்கு (1) கர்ழன் ஹஸனா (1) கறி (1) கறை (1) கற்கை (1) கலக்குங்க (1) கலப்படம் (1) கலரிச் சாப்பாடு (1) கலவியின் அவசியம் (1) கலாச்சார (1) கலிஃபா டவர் (1) கலிஃபோர்னியா (1) கலிஃபோர்னியா மாகாணம் (1) கலெக்டர் (1) கலை (1) கலைஞர் (1) கல்ந்துரையாடல் (1) கல்லும் (1) கல்வி நேரமில்லை (1) கல்வி மாநாடு (1) கல்வி வளர்ப்போம் (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு நேரலை. கல்வி விழிப்புணர்வு (1) கல்விக் கூடம் (1) கல்வித்துறை (1) கல்வியாண்டு (1) கல்வியாளார்கள் (1) கல்வியும் கற்போரின் கடமையும் (1) கல்வியும் கற்போர் க்டமையும் (1) களஞ்சியம் (1) கள்ளக்காதல் (1) கழிப்பிடத்தில் (1) கவனமாக கேளுங்கள் (1) கவலை நேரத்திலும் கவிதையா (1) கவிக்கோ (1) கவிஞன் (1) கவிஞர்கள் (1) கவிதை கிரவ்ன் (1) கவிதை சபீர் அஹ்மது (1) கவிதை வாப்புச்சா (1) கவிதைக் காணொளி (1) கவிதைப் பேட்டி (1) கவிதையல்ல (1) கவிதையே தெரியுமா ? (1) கவிநடை (1) கவியனபன் (1) கவியுரையாடல் (1) கவுரவம் (1) காகிதம் (1) காக்கை (1) காசிருந்தால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியுமா (1) காடுகள் (1) காணவில்லை (1) காதலர்கள் (1) காந்தி நாட்டு இஸ்லாமியன் (1) கானல் நீர் (1) கானா (1) கான் அகடமி (1) கான்சல (1) காப்பி அடிக்கிறது (1) காப்பீடு (1) காமெடி (1) காயல்பட்டினம் (1) காரை வீடுகள் (1) காற்றலை (1) காற்றாழையும் (1) காலண்டர் (1) காழ்ப்பு (1) காவந்து பண்ணும் கலை (1) காவல் (1) காவல் நிலையம் (1) காவி தீவிரவாதி (1) காவித்துறை (1) காஷ்மீர் (1) கிரடிட் கார்டு (1) கிரவ்னு (1) கிரஸண்ட் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (1) கிளாஃபத் (1) கிள்ளித் திரிந்த காலம் (1) கிழவி (1) கிழிந்தது. (1) கிஷார் முஹம்மது. (1) கிஸ்ஸாஸ் (1) கீற்று (1) கீழக்கரை (1) குஜராத் கலவரம் (1) குஜாராத் (1) குஞ்சுகளும் (1) குடியரசுதினம் (1) குடும்ப அட்டை (1) குடும்பங்களின் சந்திப்பு (1) குடும்பன் குறிப்புகள் (1) குடைக்குள் மொட்டு (1) குப்பகள் (1) குப்பை (1) குயினி படில்லா (1) குரல் (1) குருதி (1) குருவி (1) குருவியும் (1) குர்ஆன் ஓதுதல் (1) குர்ஆன் சுன்னா (1) குர்பானி (1) குறிக்கோள் (1) குறிப்புகள் (1) குறைபாடுகள் (1) குறைவற்ற செல்வ (1) குற்றாலம் 2011 (1) குல்ல்லா (1) குளச்சல் (1) குளுக்கோமா (1) குழந்தை தொழில் (1) குழப்பம் (1) கூக்குரல்கள் (1) கூட்டணிக் கொட்டகைகள் (1) கூட்டணிக் கொள்கைகள் (1) கூட்டுத் தொழுகை (1) கூறு (1) கேடி (1) கேட்ட நினைத்த'வைகள்' (1) கேன்ஷல்ல அனுப்பிடுங்க (1) கேன்ஸரிலிருந்து தப்புவது எப்படி (1) கேரளம் (1) கேள்வி (1) கைகள் (1) கைகாட்டி கலாசாரம் (1) கைது (1) கொக்கு (1) கொசு ஒரு தொடர்கதை. (1) கொசுத் தொல்லை (1) கொஞ்சூண்டு (1) கொடு (1) கொடுவா மீனு (1) கொண்டாட்டம் கிரவ்ன் (1) கொண்டாட்டம் மட்டுமா பெருநாள் (1) கொல்லைப்புர தட்சனைகள் (1) கோ எஜுகேசன் (1) கோடி (1) கோடு உயர்ந்தது! குன்றம் தாழ்ந்தது (1) கோடை கால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 2016 (1) கோனார் ஹாஜியார் (1) கோப்பு (1) கோலாலம்பூர் (1) கோளாறு (1) கோள் (1) கோழி (1) க்ளாஸிக் (1) ஙே (1) சகக்ரை (1) சகன் (1) சகோதரகள் (1) சகோதரன் (1) சகோதரி (1) சங்கங்கம் (1) சங்கமம் (1) சங்கை மிகு ரமலான் (1) சட்டங்கள் (1) சட்டசபை (1) சட்டப்பேரவை (1) சட்டம் ஒழுங்கு பிரச்சினை (1) சட்டை (1) சதகா (1) சத்துணவு (1) சந்தேகம் (1) சந்தை (1) சந்தோஷம் (1) சன்டிகார் (1) சபிர் (1) சப்பிடலாம் (1) சமச்சீர் (1) சமய நல்லிணக்கம் (1) சமாதானக் கூட்டம் (1) சமாதி (1) சமுதாயம் (1) சமூக பிணைப்பு (1) சமூகம் (1) சரணடைய மறுத்த சண்டமாருதம்- திப்பு சுல்தான் - 1 (1) சரி (1) சரித்திரம் (1) சர்தார்ஜி (1) சர்வீஸ் (1) சலுகை (1) சல்மான் கான் (1) சவுதி (1) சவுதியில் நடப்பது என்னா? (1) சவூதிச் சிறுமி லமா அல்-காமிதி (1) சாக்கடை (1) சாச்சா (1) சாச்சி (1) சாஜிதா புக் செண்டர் (1) சாதனயாளார் (1) சாதனைச் செம்மல் (1) சாதனைப் பெண்மனி (1) சாதி (1) சாதி ஒழிப்பு (1) சாதிக் பாட்சா (1) சான வயல் (1) சானவயல் (1) சாபமா (1) சாபாமா? (1) சாம்பல் (1) சார் (1) சார் பதிவாளர் (1) சார்ஜா (1) சார்ந்திருப்பவர்கள் (1) சாலைகள் (1) சி.எம்.பி.லைன் (1) சிகரம் (1) சிகெரட் (1) சிட்டுக்குருவி (1) சித்தப்பா (1) சிநேகிதிகள் (1) சிந்தனை அபு ஈசா (1) சிந்தனை ஏற்றத் தாழ்வு (1) சிந்தனைக் கோளாறு (1) சிந்தனைத் துறை (1) சிந்தியுங்கள் (1) சினிமா (1) சினிமாவும் முஸ்லீம்களும் (1) சின்னச் சின்ன ஆசைகள் (1) சிப்பி (1) சிப்பிக்குள் சூரியன் (1) சிரித்து (1) சிறப்பு நிகழ்வுகள் (1) சிறப்புரை (1) சிறுகதை (1) சிறுபன்மையினர் கல்லூரி (1) சிறுபான்மை (1) சிறுவர்கள் (1) சிறை (1) சில நேரங்களில் சில மனிதர்கள் (1) சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு (1) சிவகங்கை (1) சீ (1) சீச்சீ இந்த பழம் புளிக்கும் (1) சீதனமும் (1) சீதனம் (1) சீனப் பெண் (1) சீனா (1) சீரியல் (1) சுகங்கள் (1) சுடச்சுட அதிரை (1) சுட்டெரிக்கும் சூடு (1) சுட்டெரிக்கும் பாலையில் (1) சுதந்திர தினம் (1) சுதந்திர தினம் யாருக்கு (1) சுத்தமின்மை (1) சுப்ஹு (1) சுப்ஹு தொழுகை (1) சுமைய தாவூத் (1) சுமையா (1) சுமையாகிப்போனது (1) சும்மாதான் (1) சுய விளக்க உரை (1) சுயநலம் (1) சுரண்டல் (1) சுற்றித் திரியும் வாலிபமே (1) சுற்றுபுற சூழல் பாதுகாப்பு (1) சுவனத்தென்றல் (1) சுவனப்பிரியன் (1) சுவர்க்கம் (1) சூசன் பஷீர் (1) சூடு பறக்கும் விவாதம் (1) சூது சூழ் உலகு (1) சூனியம் (1) சூனியம் வைக்கத் தூண்டியது யார் (1) சூரத்தல் இஃக்லாஸ் (1) சூரத்துல் ஃபாத்திஹா (1) சூரத்துல் பஜ்ர் (1) சூரா லுக்மான் (31:32) (1) சூரியன் (1) செண்டர் (1) சென்சார் (1) சென்னை பல்கலைக்கழகம் (1) சென்ற வாரம் (1) சென்றுவா ரமளானே (1) செப்டம்பர் (1) செம்மல் (1) செயற்கை கண் (1) செய்தி சேனல்கள் (1) செய்தியாளர் (1) செய்முறை (1) செல்போன் டவர் (1) செல்லப் பிராணிகள் (1) செல்லப்பிள்ளை (1) செல்லம் (1) செல்வம் (1) சேது சமுத்திர திட்டம் (1) சேனல்கள் (1) சேய் (1) சேர்மன் (1) சேறு (1) சைலன்ஸ் ப்ளீஸ் (1) சொந்தம் (1) சொர்க்கம் (1) சொல் மந்திரம் (1) சொல்வதொன்றும் செய்வதொன்றுமாய் (1) சோம்பேறித்தனம் (1) சோலை (1) சோலையும் பாலையும் (1) ச‌ம்பாத்திய‌ம் (1) ஜக்காத் (1) ஜக்காத் நிதிப் பங்கீடு (1) ஜனநாயகத்தை விலைக்கு வாங்கிய பணநாயகம் (1) ஜனாதிபதி யார் (1) ஜப்பான் (1) ஜமாத் (1) ஜமால் மதனி (1) ஜமால் முகம்மது கல்லூரி (1) ஜலீலா கமால் (1) ஜாஃபர் (1) ஜாபிர் (ரலி) (1) ஜாமாத் (1) ஜாஸ்மின் (1) ஜாஹிர் (1) ஜும்மா (1) ஜும்மா பள்ளி (1) ஜூஸ் (1) ஜெ (1) ஜெஜெ. சொத்து குவிப்பு (1) ஜெட் (1) ஜெட்லி (1) ஜெய்தைக் காணவில்லை (1) ஜெய்னுல் ஆபிதீன் (1) ஜெர்மனி (1) ஜைனப்(ரலி) (1) ஜ்ஃபருல்லாஹ் (1) ஞானப் பயணம் (1) டாக்கி (1) டாக்டர் சுமையா தாவூத் (1) டாலர் (1) டி.வி. எச்சரிக்கை (1) டிக்கெட் (1) டிஜிட்டடல் (1) டிஜிட்டல் (1) டிஜிட்டல் இந்தியா (1) டியூசன் (1) டிரஸ்ட் (1) டிஸெம்பர் (1) டிஸைன்ஸ் (1) டீக்கடை (1) டீக்கடை குழுமம் (1) டெலஸ்கோப் (1) டேரா (1) ட்விட் (1) த.மு.முக. (1) தஃபீக் சுல்தானா (1) தகப்பன் (1) தகர்ப்பதற்கா? (1) தகவல் (1) தகவல் அறியும் உரிமைச் சட்டம் (1) தகவல் தொடர்பு (1) தகுதிக்கேற்ப தண்டனை (1) தக்பீர் (1) தங்க முதலாளி (1) தங்கச்சி (1) தங்கப் பதக்கம் (1) தங்கை (1) தடசணையும் (1) தடம் (1) தடைகள் (1) தடைக் கல் (1) தண்டனை (1) தண்டவாளம் (1) தண்ணீர் தாகம் தீர்க்கவா (1) ததஜ (1) தந்தி டிவி. (1) தந்தை மகள் (1) தந்தை வழி உறவு (1) தந்தையர் தினம் (1) தந்தையெனும் பாசம் (1) தனித் தன்மை (1) தனித் தூது (1) தனித்தமிழ் (1) தன்னடக்கமும் மரியாதையும் (1) தன்னிலை மேம்படுத்தல் (1) தன்னிலை விளக்கம் (1) தன்னிலை விள்க்கம் (1) தன்மை (1) தப்லீக் (1) தமிழக முதல்வர் (1) தமிழக முஸ்லீம்களின் ஒற்றுமை (1) தமிழர்கள் (1) தமிழும் ஆங்கிலமும் பேசிக்கொண்டால் (1) தமிழ் தாவா (1) தமிழ் தாவா பிரிவு (1) தமிழ்நாடு அரசு (1) தமீமுல் அன்சாரி (1) தயபுள்ளயளுவோ (1) தரகர் தெரு (1) தரமற்ற தாரகை விருப்பம் (1) தரமிழந்து வருகிறதா (1) தரவிரக்கம் (1) தராவிஹ் தொழுகை (1) தரைமட்டம் (1) தர்ஜுமா (1) தர்பியா மையம் (1) தர்பிய்யா (1) தர்மம் (1) தர்ஹா (1) தற்கொலை தீர்வாகுமா (1) தலை (1) தலைசிறந்த சமுதாயம் (1) தலைமை உருவாக்கம் (1) தலைமைத் தேர்வு (1) தலைமைத்துவம் (1) தலைவரின் தகுதிகள் (1) தலைவர் யார்? (1) தலைவியாகி (1) தள விளக்கம் (1) தள்ளி வண்டி (1) தழுவல் (1) தவாப் (1) தவிர்த்திடுங்கள் (1) தவிர்ப்போம் (1) தவ்ஃபீக் (1) தவ்ஹீத் (1) தவ்ஹீத்கான் (1) தஸ்தகீர் (1) தஹ்ஸின் நிலோஃபர் (1) தா.பாண்டியன் (1) தாஃவா (1) தாஜூதீன் (1) தாஜ் மஹால் (1) தாஜ்மஹால் (1) தாத்தா (1) தாம்பத்யம் (1) தாயின் அறிவுரை கேட்போம் (1) தாய் பாசம் (1) தாரூத் தவ்ஹீத் (1) தாரை வார்க்கவா? (1) தாலிச்சா (1) தால் (1) தாவஆ பணி (1) தாவா (1) தாஹா சார் (1) தி ஹிந்து தமிழ் (1) திக் திக் (1) திக்ர் (1) திடீர் கல்லறை (1) திட்ட அறிக்கை (1) திப்பு சுலதான் (1) திப்பு சுல்தான் (1) திமிங்கலச் சாவுகள் (1) தியாகிககள் (1) தியாகிகள் (1) திரட்டி (1) திரவியம் (1) திராம்பட்டினம் (1) திரிபு (1) திரு(தொடண்)டர்) (1) திருடன் (1) திருடாதே (1) திருட்டு (1) திருத்தம் (1) திருப்பூர் to அதிரை (1) திருமணங்கள் (1) திருமணத்திற்கு கவுன்சிலிங் (1) திருமறை (1) திரைகடலோடி திரவியம் தேடு (1) திரைகடல் (1) திரையங்குகள் (1) திரையரங்கம் (1) திரையில் சிறை (1) திறந்த மடல் (1) தில்லு முல்லு (1) தீ தீயனைப்பு நிலையம் (1) தீதும் நன்றும் பிறர்தர வாரா (1) தீன் (1) தீன்குல ஹீரோக்களுக்கு (1) தீரன் திப்பு (1) தீரன் திப்பு சுல்தான் (1) தீர்ப்பு (1) தீவிர (1) தீவு (1) துக்ளக் (1) துடிக்கக் கொன்றனர் (1) துணை போகாதீர் (1) துபாய் - அதிரை (1) துரோகம் (1) துர்நாற்றம் (1) துலங்கும் (1) துளி உலகம் (1) துளியளவு (1) தூக்கமற்ற பொழுதுகளில் (1) தூதரகம் (1) தூரோகம் (1) தென் தமிழகம் (1) தெரு சங்கங்கள் (1) தேச பக்தி (1) தேசிய கொடி (1) தேசிய தினம் (1) தேடுகிறேன் (1) தேத்தண்ணி (1) தேனி (1) தேன் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் கருத்துக் கணிப்புகள் (1) தேர்வு அட்டவனை (1) தேர்வு பள்ளித் தேர்வு முடிவுகள் (1) தேர்வு முடிவுகள் (1) தையல் (1) தொட (1) தொடர் சொற்பொழிவு (1) தொடு (1) தொட்டி (1) தொண்டர் (1) தொனா (1) தொலைக் காட்சி (1) தொலைத்தது (1) தொழிலாளி (1) தொழில் நுட்பம் (1) தொழில்முனைவோருக்கான பயிற்சி முகாம்அ (1) தோழி (1) தோழியர் (1) நகை (1) நக்கப்பா (1) நடிகையாயிருந்து (1) நடை பயிற்சி மேடை (1) நட்சத்திரமாக (1) நட்சத்திரம் (1) நட்புடன் ஜமால் (1) நண்டும் நரியும் (1) நந்தினி (1) நனா (1) நன்கொடை (1) நன்மையே வேண்டி. 4th year (1) நன்றியுரை (1) நன்றே (1) நபி பெருமானார் வரலாறுமுன்னுரை (1) நபி(ஸல்) வரலாறு (1) நபித் தோழர்கள் (1) நபித்தோழர் (1) நபிவழி (1) நமது கல்வி (1) நயவஞ்சத்திற்கு பகிரங்க எச்சரிக்கை (1) நரகம் (1) நலம் (1) நல்ல மனையாள் (1) நல்லது (1) நல்லாருக்கியாம்மா? (1) நல்லிணக்கம் (1) நல்லொழுக்கம் (1) நள்ளிரவு (1) நவீன மவ்லூது (1) நாக்கு (1) நாங்கள் அதிரை நிருபர் (1) நாங்கள்தான் (1) நாடி (1) நாடு (1) நாட்டாமை தீர்ப்பு (1) நானும் ஆஃப்ரிக்காவும் - தொடர்கிறது (1) நான் (1) நான் என்பது (1) நான் மிகச் சிறந்த மனிதன் (1) நான் முஸ்லிமாகிவிட்டேன் (1) நான் ரெடி நீங்க ரெடியா (1) நான்காம் ஆண்டிலும் (1) நான்காவதுத் தமிழ் (1) நான்றி ஆசான்களே (1) நாய்கள் (1) நாற்காலிகள் (1) நாளங்கள் (1) நாளை? (1) நாவு (1) நிகழ்சிகள் (1) நிகழ்வுகள் (1) நிசார் அஹ்மது (1) நிதானமும் (1) நிதி அமைச்சர் (1) நித்தியோன் முன் நான் (1) நினைவலைகள் (1) நினைவிருக்கா (1) நினைவு (1) நிருபர் (1) நிர்வாகம் (1) நிர்வாகிகள் (1) நிர்வாண பாரதம் (1) நிலத்தடி (1) நிலத்தடி நீர் (1) நிழற்பட கருவி (1) நிழலாடும் (1) நிழலின் அருமை (1) நீங்களுமா ஆலிம்ஸா இப்படி செய்தீர்கள் (1) நீங்களும் கிளிக்கலாம் (1) நீடூர் அலி (1) நீதம் (1) நீதித் துறை (1) நீதிமன்றம் (1) நுண்மென் (1) நுனிப்புல் (1) நூதன விளம்பரங்கள் (1) நெஞ்சில் உரமின்றி (1) நெய்னா முஹம்மது (1) நேசம் மாநபி (1) நேரான வழி (1) நேர்கானல் (1) நேறறு (1) நேறு (1) நைஜிரியா (1) நைஜீரியா (1) நொங்கு வண்டி (1) நோக்கம் (1) நோன்பு காலங்கள் (1) நோன்புக் கஞ்சி (1) நோன்புக்கு பிறகு (1) நோம்பு (1) நோம்பு கஞ்சி (1) நோம்பு கஞ்சி அரிசி (1) நோயற்ற வாழ்வு (1) ன் (1) ப.சிதம்பரம் (1) பகல் (1) பகிர்வு (1) பகுருதீன் (1) பகைமை (1) பகையன்று நகை (1) பக்கம் (1) பங்களாதேஷ் (1) பங்கு சந்தை (1) பசி போக்குமா? (1) பசிக்கட்டுகள் (1) பசியாறிட்டு சாப்பிடலாம் (1) பசுமை எங்கே (1) பஜக (1) பஜ்ஜி (1) பஜ்லுர் ரஹ்மான் (1) பஞ்ச் டயலாக் (1) படகு (1) படச் சுருள் (1) படம் சொல்லும் பாடம் (1) படிக்கச் சென்றனர் (1) படித்த (1) படித்தால் மட்டும் போதுமா (1) படை (1) படைத்தவனின் திருக்குர்ஆன் (1) படைத்தவனை நோக்கி (1) படைப்பாளி (1) படைப்பாளிகள் (1) படைப்புகள் (1) பட்ஜெட் 2013 (1) பட்ஜெட் 2013-2014 (1) பட்டதாரி (1) பட்டப்பெயர்கள் (1) பட்டான் (1) பட்டினி (1) பட்டேல் (1) பட்டோலை (1) பணத்தை பிணமாக்கிய மோடி (1) பணம் இங்கே (1) பணம் படுத்தும்பாடு (1) பணி வாழ்வும் பணி ஓய்வும் (1) பணிக்கர் (1) பண்புகள் (1) பதற்றம் (1) பதவி (1) பதவிகள் (1) பதில் (1) பதில் இல்லா கேள்விகள் (1) பதிவது எப்படி (1) பதிவர் உலகம் (1) பதிவிலக்கணம் (1) பதிவேடு (1) பத்தாம் வகுப்பு (1) பத்திரிகை (1) பந்தம் (1) பனி (1) பனிப் பொழிவு (1) பனிப்பொழுது (1) பம்முக்காலே (1) பயங்கரவாதம் (1) பயணிக்கும் பாதை (1) பயிலரங்கம் (1) பரபரப்பு (1) பரமக்குடி (1) பரிசுகள் (1) பரோட்டா (1) பர்ஜ்துபாய் (1) பர்தா (1) பர்மீய முஸ்லீம்கள் (1) பற (1) பறவைகள் (1) பற்றாக்குறை (1) பலம் (1) பல் (1) பல்கிஸ் (1) பல்வலி (1) பள்லிவாசல் நினைவுகள் (1) பள்ளி நினைவுகள் (1) பள்ளி விடுமுறையை எப்படி கழிப்பது (1) பழ மொழி (1) பழ மொழிகள் (1) பழகிய மொழியிலே (1) பழகுமொழி (1) பழைய குருடி கதவைத் திறடி (1) பழைய பேப்பர் (1) பஷீர் ஹாஜியார் (1) பஸ் (1) பஸ்ஸார் (1) பஸ்ஸுப் பயணம் (1) பஹ்ருதீன் அஹ்மது அமீன் (1) பாகிஸ்தான் (1) பாடப் புத்தகம் (1) பாடல் (1) பாட்டி சொன்னது (1) பாட்டி பேரன் உறவு (1) பாட்டு (1) பாபரி மஸ்ஜித் (1) பாரதமணி (1) பார்ட்னர் (1) பார்த்த (1) பார்த்தீனியம் (1) பார்வேர்டு (1) பார்வை (1) பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை (1) பாலைவனம் (1) பால் அருவி (1) பாஸ்வேர்டு (1) பாஸ்வேர்ட் (1) பி (1) பிகார் (1) பிசாசு (1) பிச்சைக்காரர்கள் (1) பிச்சைப் பாத்திரம் (1) பிஜே (1) பிஜேபியை ஆகாதவர்கள் ஆக்கிய பீஹாரிகள் (1) பிடி நழுவிய (1) பித்அத் (1) பித்ரா (1) பினாங்கு சபுறு மாப்புளே (1) பினாங்கு சபுறுமாப்புளே (1) பிரச்சாரம் (1) பிரச்சாரம். (1) பிரயாண வழியில் (1) பிரான்ஸ் (1) பிரி (1) பிரிட்டன் (1) பிரிவு (1) பிரெஞ்சு (1) பிரைல் எழுத்து (1) பிர்ண்டர்ஸ் (1) பிறகு (1) பிறப்பு (1) பிறர் சிரிக்க (1) பிற்பகலும் (1) பிலால் (1) பிலால் (ரழி) (1) பிலால் நகர் (1) பில்கிஸ் (1) பிள்ளைகள் (1) பிழையறப் பிழை (1) பீகார் (1) பீச் (1) பீர் முஹம்மது (1) புகாரி இமாம் (1) புகை (1) புகை வண்டி (1) புகைபப்டம் (1) புகைப்பிடித்தல் (1) புதிய தொடக்கம் (1) புதிய நினைவுகள் (1) புதிய நிர்வாகம் (1) புதிய நூல்கள் (1) புதிய பிரவுசர் (1) புதிய வேலை (1) புதியது (1) புதியதோர் உலகைச் செய்யும் (1) புதிய‌தோர் ஊர் (1) புதுமைப் பெண் (1) புத்தக காட்சி (1) புத்தக வெளியிடு (1) புனித மாதம் (1) புன்சிரிப்பு (1) புராணம் (1) புரிதல் (1) புரை (1) புரோகிதம் (1) புற்றுநோய் (1) புலவர் பஷீர் அஹ்மது (1) புவியீர்ப்பு (1) பூ (1) பூக்கள் (1) பூங்கா (1) பூஜை (1) பூரியான் ஃபாத்திஹா (1) பெங்களூரு (1) பெட்டகம் (1) பெட்ரோல் (1) பெண் இமைக்குள் ஆண்மை (1) பெண் உரிமை (1) பெண்களின் கருத்தென்ன (1) பெண்களுள் பேரறிஞர் (1) பெண்கள்ம் மார்கெட் (1) பெண்சுதந்திரம் (1) பெண்டிரும் (1) பெண்ணாய் பிறப்பதைப் போல்போ ரின்பம் வேறில்லை (1) பெண்ணினம் (1) பெண்ணியம் (1) பெண்மக்கள் (1) பெயரிலித் தோழர் (1) பெயர் கூறுமா..? (1) பெரிய கடிகாரம் (1) பெரியர்வர்கள் (1) பெரியார் (1) பெரியார்தாசன் (1) பெருநாள் ஒளி (1) பெருநாள் தக்பீர் (1) பெருநாள் தொழுகை (1) பெருநாள் வாழ்த்து (1) பெருபான்மை (1) பெருமை (1) பெருமை தீது (1) பெர்னாட்ஷா (1) பேகம் ஹஜரத் மஹல் (1) பேக்கரி (1) பேங்க் (1) பேச்சும் (1) பேச்சுலர் (1) பேப்பர் வேர்ல்டு (1) பேரண்டம் (1) பேரன்பு (1) பேராசிரியர் (1) பேராசிரியர் M H J அவர்களுக்கு (1) பேராவூரணி பலாப்பழம் (1) பேரிடம் (1) பேரிடர் (1) பேருராட்சித் தலைவர் (1) பேரூராட்சி தலைவர் (1) பேரூராட்சி மன்றத் தலைவர் (1) பொக்கிஷம் (1) பொடிசுகளின் த்லை நோன்பு (1) பொது அறிவு (1) பொது சிவில் (1) பொதுக்குழு (1) பொதுமக்கள் (1) பொதுவானவை (1) பொய் வழக்கு (1) பொய் வழக்குகள் (1) பொரிச்ச மீன் (1) பொருட்காட்சி (1) பொறாமை (1) பொறியியல் (1) பொற்காலம் 1977 (1) பொழுதுகள். (1) போக்கு (1) போடாதே தப்பு கணக்கு (1) போட்டி வலைப்பூ (1) போட்டிகள் (1) போதனை (1) போனஸ் (1) போராட்டும் (1) போற்றுவோம் (1) போலி (1) போலி ஆலிம் (1) போலி சான்றிதழ் (1) போலிகள் ஜாக்கிரதை (1) போலிகள் பயிரை மேயும் வேலிகள் (1) போலித் தொப்பிகள் (1) போலீஸ் (1) ப்ராப்ளம் (1) ப்ளஸ் 2 தேர்வு முடிவ்கள (1) ப்ளாக் ஹோல் (1) ப்ளாஸ்டிக் பை (1) ப்ளீஸ் (1) மகத்துவ மருதாணி (1) மகளிருக்கு மட்டும் (1) மகளெனப்படுவள் (1) மகுடம் (1) மக்கட்பேறில்லா மக்கட்கு (1) மக்கள் (1) மக்கள் தொகை (1) மக்கள்தொகையா (1) மக்கா நேரலை (1) மக்தப் மதர்சா (1) மச்சான் (1) மச்சான்ஸ் (1) மடமையிலிருந்து விடுதலை பெறுவோம் (1) மணல் மேடு (1) மண் வாசனை (1) மண்சட்டி (1) மண்டல் கமிஷன் (1) மண்ணறை வாழ்க்கை (1) மண்ணின் மைந்தர்கள் (1) மண்வட்டு (1) மண்வாசனை (1) மதம் (1) மதராஸ் (1) மதவாதம் (1) மதியம் (1) மதீனா நேரலை (1) மதுக்கூர் (1) மதுப் பழக்கம் (1) மதுரை (1) மத்திய அரசு (1) மத்திய கிழக்கு (1) மத்ஹபு (1) மந்திரச் சொல் (1) மந்திரவாதி (1) மனப்பாடம் (1) மனமே தொட்டாசினுங்கிதானே. ஜாகிர் ஹுசைன் (1) மனம் திறந்து (1) மனம் மகிழுங்கள் (1) மனிக்பான் (1) மனித நேயம் (1) மனிதமும் (1) மனிதவளமா (1) மனிதவளமும் மண்ணின் மைந்தர்களும் (1) மனிதா திருடாதே (1) மனு நீதி மனித குலத்திற்கு நீதியா (1) மனுநீதி (1) மனோரா (1) மன்னித்தருள்வாய் இறைவா (1) மமக (1) மரண சிந்தனை (1) மரண தண்டனை (1) மரத்தடி (1) மரபணுக்கள் (1) மரபுகள் (1) மரமும் (1) மரம் வளர்ப்பது ஒரு அறம் (1) மருதாணி (1) மருத்துவ (1) மருத்துவ காப்பீடு (1) மருத்துவ முகாம் (1) மருத்துவக் கல்லூரி (1) மருத்துவமனை (1) மருத்துவர் ஜானகிராமன் (1) மருவண்டி (1) மர்பு கவிதை (1) மறக்க முடியவில்லை (1) மறக்க முடியா மனிதர் (1) மறக்க முடியாத மருத்துவர்கள் (1) மறுப்பு (1) மறுப்பும் (1) மறைந்த (1) மறைந்து வரும் மண்பாண்டப் பாத்திரங்கள் (1) மறைந்து வரும் வளர்ப்பு பிராணிகள் (1) மறைவான அழகே நிறைவானது (1) மலரும் நினைவு மொட்டுக்கள் (1) மலரும் நினைவுகள் (1) மலர்கள் (1) மலாலா (1) மலைமகன் (1) மலையேற்றம் (1) மல்லிபட்ணம் சாலமீது (1) மழலை (1) மழலைகள் (1) மழை இஸ்லாமியப் பெண்கள் (1) மழை வந்தாச்சு (1) மழைக்கு பயந்த மின்சாரம் (1) மவ்லாய (1) மவ்லீது (1) மவ்லூது (1) மவ்லூதுக்கு மகுடமா ? (1) மஸ்ஜிதுகள் (1) மஸ்ஜிதுல் ஹாரமில் (1) மஹ்பூப் அலி (1) மா (1) மாங்காய் (1) மாசு (1) மாடிவீடு (1) மாணவ (1) மாணவப் பருவம் (1) மாணவமணிகள் (1) மாணவராக வாழ்ந்த ஆசிரியர் (1) மாணவர்கள் போரட்டம் (1) மாணவி (1) மாண்பு (1) மாண்புமிகு மந்திருக்கு (1) மாத்தியோசி (1) மாநகர் (1) மாநிலங்கள் (1) மானம் ஒன்றே உயர் ஆயுதமாய் (1) மானிடா... மாடு வருகிறார் (1) மாப்பிள்ளை (1) மாப்பிள்ளைக் கடத்தல் (1) மாமன்னர் (1) மாமரன் (1) மாமழை (1) மாம்பழம் (1) மாயன் இன்னும் சாகவில்லை (1) மார்கெட் (1) மார்க்க அறிஞர்கள் (1) மார்க்க வரம்புக்கு உட்பட்டு (1) மார்க்க விரோதத்துக்கு துணை போகாதீர் (1) மார்க்க விரோதம் (1) மார்க்க(மான) விவாதம் (1) மாறுகண் (1) மாற்று திறனாளி (1) மாலைப் பொழுது (1) மாவு (1) மிக்க மேலானவன் (1) மிதிரிக்கட்டை நினைவிருக்கா? (1) மினா (1) மின் கம்பம் (1) மின் தடை (1) மின்அஞ்சல் குழுமம் (1) மின்சார வாரியம் (1) மின்னல் (1) மின்வாரியம் (1) மின்வெட்டு (1) மியாசி (1) மிருகங்களாகும் மனிதம் (1) மில்லினியர் (1) மிள்பதிவு (1) மீட்பு (1) மீரான் சாஹிப் (1) மீராஷாஹிப் UPSC (1) மீளுதல் (1) மு.செ.மு.சபீர் அஹமது (1) மு.செ.மு.முஹம்மது ஹனீஃபா (1) முஃஆத் (1) முஃப்தி அப்துல் கையூம் (1) முஅத்தின் (1) முஆத் (1) முகத்திரையும் (1) முகப்புத்தகம் (1) முகமது செயினுத்தீன் - திருவிதாங்கோடு (1) முகமூடிகள் (1) முகம்து அலி (1) முகம்மது புஹாரி (1) முகவரிகள் (1) முகாம் (1) முக்காடும் (1) முக்கிய சுட்டிகள் (1) முக்கோணங்கள் (1) முடி (1) முட்டையும் (1) முதற் குழந்தை (1) முதலாம் ஆண்டு (1) முதலீடுகள் (1) முதல் பட்டதாரி (1) முதல் பயணம் (1) முதல் பிறை (1) முதல் மதிப்பெண் (1) முதல் மிடறு (1) முதல் வகுப்பு (1) முதல்வர்கள் (1) முதியோர் (1) முதிர் கன்னி (1) முதிர் நிலா (1) முத்தலாக்கின் மூடுபொருள் (1) முத்து (1) முந்திய சுன்னத் (1) முந்துங்கள் (1) முனாகீனா (1) முனைவர் (1) முன் மாதிரி (1) முன்னேற்றப் பாதை (1) முன்னேற்றம் (1) முன்பதிவு (1) முன்மாதிரி வடிவங்கள் (1) முபாரக் (1) முயலாமை (1) முயலும் (1) முயல் (1) முராத் (1) முற்பகலும் (1) முற்பகல் (1) முல்லைப் பெரியார் (1) முல்லைப் பெரியாறு (1) முள் (1) முள்மகுடம் (1) முழக்கம் (1) முஸ்லி (1) முஸ்லிம்கள் பாகிஸ்தானையும் சவுதியையும் கொண்டாடுவது ஏன் (1) முஸ்லீம் பதிவர்கள் (1) முஸ்லீம் மக்கள் தொகை (1) முஸ்லீம் லீக் (1) முஹம்மது (1) முஹம்மது அபுபக்கர் (1) முஹம்மது அலியார் சார் (1) முஹம்மது ரஃபீக் (1) முஹல்லா (1) முஹல்லா சங்கங்கள் (1) மூன்றாமிடம் (1) மூன்றாம் ஆண்டு (1) மூன்றாம் உலகப்போர் (1) மூர்த்தி (1) மூலதனம் (1) மூவண்ணக் கொடி (1) மெடிக்கல் (1) மெட்ரிக் பள்ளிகள் (1) மெட்ரோ (1) மெய்யெழுத்துகள் (1) மெர்சினா (1) மெளன ஓலம்! (1) மெளலவி அப்துல் பாசித் புஹாரி (1) மெளலித் (1) மெஷின் (1) மேட்டூர் (1) மேலாளர் (1) மேலைநாடுகள் (1) மைக் டைசன் (1) மைக்ரோ (1) மைதா (1) மையல் (1) மையவாடி (1) மைல்கல் (1) மொழிப்பெயர்ப்பு (1) மொழியால் விழிபேசுகிறது (1) மோகம் (1) மோசடி (1) மோடியின் முதுகில் ஏறும் தோல்வி மூட்டைகள் (1) மோதினார் (1) மோமியாக்கா (1) யாசகம் (1) யாசீன் சுஃபியான் (1) யார் அங்கே ? எங்கே போனார்கள் (1) யார் திவிரவாதி (1) யார் வசம்.. (1) யுவான் ரிட்லி - துணிச்சலின் மறு பெயர் (1) யூசுபும் மொம்மாலியாக்காவும் (1) யூசுப் எஸ்டஸ் (1) யூசுப் ரியாஸ் (1) யூனுஸ் (1) யோகம் (1) யோசனை (1) யோசனைகள் (1) யோசி (1) யோசிக்கிறார் (1) ரஃபீக் சுலைமான் (1) ரகசியங்கள் (1) ரசாயன (1) ரஜினி (1) ரமளான் காணொளி (1) ரயிலடி (1) ரயில் (1) ரஷ்யா (1) ரஸூல் (1) ராக்கெட் (1) ராஜா வீட்டு விருந்தும் கறி (1) ராடார் (1) ராணி (1) ராஷித் அலி (1) ரிட்டர்ன் டிக்கெட் (1) ரியர் எஸ்டேட் (1) ரிஸல்ட் (1) ரிஸான நபீக் (1) ருசிக்க மான்பு (1) ரூபாய் (1) ரெடிமேட் (1) ரெட்டைக் கிளவி (1) ரேவடி (1) ரேஷன் கார்டு (1) ரொட்டி (1) ரோடு (1) ரோமாபுரியின் ரோஜா மலர் (1) ரோஷம் (1) லகும் தீனுக்கும் வலியதீன் (1) லகூன் (1) லக்கேஜும் நானும் (1) லஞ்சத்தை ஒழிக்க முடியாதா (1) லட்சம் (1) லண்டடன் (1) லண்டனில் கந்தூரி (1) லலுபிரசாத் (1) லாயிலாஹ (1) லேசர் (1) லைஃப் டைம் - Talk (1) லைசன்ஸ் (1) லைப்ரரி (1) வகிடும் (1) வக்ஃபு வாரியம் (1) வக்ப் வாரியம் (1) வசதி (1) வட இந்திய (1) வடியுது (1) வடிவும் (1) வட்டாட்சியர் முடிவு (1) வட்டார வழக்கு மொழி (1) வட்டியில்லா வங்கிச் சேவையை நோக்கி (1) வட்டிலப்பம் (1) வணங்குவோம் (1) வண்கொடுமை (1) வண்டூருது (1) வண்ணப்படம் (1) வண்ணம் (1) வதந்தியைப் பரப்பாதீர் (1) வன்மம் (1) வன்முறை (1) வன்மையாக கண்டிக்கிறோம் (1) வப்பா (1) வயசு (1) வயது (1) வயர்லெஸ் (1) வயலும் வாழ்வும் (1) வரம்பு (1) வரவுக்கும் செலவுக்கும் (1) வரிவரியாய் (1) வருகம் (1) வருமுன் (1) வருமுன் காப்போம் (1) வரும் முன் காப்போம் (1) வர்த்தக (1) வறட்டி (1) வலக்கரம் (1) வலி வழிச் செய்திகள் (1) வலைஞர்கள் (1) வலைத்தளங்கள் (1) வளம் (1) வளர்க (1) வளர்கிறாய் மகனே (1) வளர்ச்சிப்பாதையில் மோடி அரசு (1) வளைகுட (1) வளைகுடா பாதிப்பு (1) வளைகுடா வெயில் (1) வள்ளுவ (1) வழக்கம் (1) வழக்காடல் (1) வழக்கு (1) வழக்குக் கூண்டில் வறுமைக் கோடு (1) வழிகாட்டி (1) வழிகேடு (1) வழிமுறை (1) வஸ்வாஸ் (1) வா (1) வாகனங்கள் (1) வாகிங்க் (1) வாக்காளப் பெருமக்களே (1) வாக்கி (1) வாசனை (1) வாதம் (1) வாதி (1) வாப்பா பாட்டு (1) வாப்பிச்சா (1) வாயோதிக வலிகள் (1) வாய் (1) வாய் துர்நாற்றம் (1) வாரப் பத்திரிகை (1) வாழப் பழகுங்கள் (1) வாழவேண்டும் (1) வாழ்க சனநாயகம் (1) வாழ்கையின் வலக்கரம் (1) வாழ்க்கைத் தரம் (1) வாழ்க்கையின் பதிவேடுகள் (1) வாழ்ந்திடாதே (1) வாழ்வதற்கா? (1) வாழ்வு (1) வாழ்வு சிதைந்தது! வளம் குறைந்தது (1) வாஸ்கோடகாமா (1) விகடன் (1) விசா (1) விசாலம் (1) விசிட் (1) விடியலை நோக்கி (1) விடிவு (1) விடுமுறைக் காலம் (1) விடைபெறு (1) விண் கல் வீண் பயமா (1) விண்ணுலிருந்து மின்சாரம் (1) விண்வெளி (1) விதவை (1) விதி எண் 110 (1) விதி மீறல் (1) வித்தியாசமான வணிகர் (1) வித்தியாசமானவர்கள்.-பகுதி 3 (1) வித்யா (1) வினிகர் (1) வினோதினி (1) விபரீதம் (1) வியக்க வைக்கும் பயணக் கண்டுபிடிப்புக்கள் (1) வியாதி (1) வியாபாரம் (1) வியாபாரி (1) விரக்தி (1) விருட்சம் (1) விருது (1) விரைவு (1) விரோதம் (1) விலகல் (1) விலங்கினம் (1) விலாசம் (1) விலை (1) விளக்கு (1) விளைநிலங்கள் (1) விழலுக்கு வீணாகும் சிந்தனைகள் (1) விழா (1) விழி மொழி (1) விழிப்புணர்வு பக்கங்கள் (1) விழுஞாயிறு (1) விஷ வாயு (1) விஷுவல் (1) விஸ்வரூபம் (1) வீச்சு (1) வீடு கட்டுபவர்களின் கவனத்திற்கு (1) வீட்டுக்கு ஓர் ஆசான் (1) வீட்டுப் பாடம் (1) வீண் விரயம் செய்யாதீர்கள் (1) வீரர் (1) வீழ்வது (1) வெறியாட்டம் (1) வெற்றிலை (1) வெலக்காத் தெரு (1) வெல்லெஜொ (1) வெளியூர் (1) வெளியூர்காரர் (1) வெளியே (1) வெள்ளம் (1) வெள்ளிக்கிழமை (1) வெள்ளெழுத்து (1) வேங்கை (1) வேட்டு (1) வேட்பாளர்களின் நேர்காணல். நேர்காணல் (1) வேண்டாம் (1) வேண்டாம் கொண்டாட்டம் (1) வேண்டுதல் (1) வேண்டும் (1) வேதம் (1) வேற்றுமை (1) வேலை தேடுவோர்க்கு (1) வேலை வரைகலை (1) வேவு (1) வேவ்ரைடர் விமானம் (1) வேஷம் (1) வைத்தியன் (1) ஷஃபி (1) ஷபான பாஸிஜ் (1) ஷபே பராஅத் (1) ஷமீம் (1) ஷார்ஜா (1) ஷாஹிபா சபீர் அஹ்மது (1) ஷேக் (1) ஷேக் அப்துல் ரஹ்மான் சுதைஸி (1) ஷேக் உசேன் (1) ஷேக்கனா M.நிஜாம் (1) ஷைத்தான் (1) ஸலவாத் (1) ஸாத் பின் முஆத் (1) ஸூரத்துல் அஃலா (1) ஸூரத்துல் கியாமா (1) ஸூரத்துல் ளுஹா (1) ஸ்டாம்ப் (1) ஸ்டேஷனரி (1) ஸ்டேஷன் (1) ஸ்பீடு (1) ஸ்பெஷல் (1) ஸ்மார்ட் (1) ஹஜ் பெருநாள் (1) ஹஜ் 2012 (1) ஹஜ் கமிட்டி (1) ஹஜ்ஜின் மகத்துவம் (1) ஹஜ்ரத் மொஹானி (1) ஹத்தனா (1) ஹந்தூரி (1) ஹனீபா சார் (1) ஹலோ... ஹலோ... நலமா (1) ஹாபிட் (1) ஹாபிழ் (1) ஹாபிழ் பராஆ (1) ஹார்ட் (1) ஹாலித் (1) ஹிஜாப் (1) ஹிஜாப் S.அலாவுதீன் (1) ஹிஜாப் ஒரு கவசம் (1) ஹூமர் (1) ஹைக்கூ (1) ஹைடெக் காலம் (1)