Wednesday, April 02, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கரன்ஸிக் களேபரங்கள் 0

அதிரைநிருபர் பதிப்பகம் | December 27, 2016 | , ,


கையில் இருந்த
காசை
வெறும்
காகிதம் என்றது
முட்டாள்களின்
முக்கிய அறிவிப்பு

செல்லாத நோட்டுகளைக்
கொடுத்துவிட்டு
இல்லாத நோட்டுகளை
வாங்கிக் கொள்ள
வங்கிச் செல்ல
அங்கோ
வாக்காளப் பெருமக்கள்
போர்க்காலக் கைதிகள்போல்
வரிசையில் நீள்கின்றனர்

பணம் மாற்ற வழி செய்யாமல்
பணம் அற்றப் பரிவர்த்தனைக்கு
பாரதத்தை மாற்றும்
மந்திரப் பிரதமர்
கள்ளநோட்டுக் கனவில்
வில்லனாகிப் போனார்

மேல்ச்சட்டை இல்லாத
மேனி இளைத்தோர்
காசட்டை இல்லாததால்
கஞ்சிக்கு வழியின்றி
காய்ஞ்சித் தவிக்கின்றனர்

பால் வாங்கப் பணமில்லை
பள்ளிப்
பரீட்சைக்குக் கட்டப் பணமில்லை

சில்லறையில்லாத் திண்டாட்டத்தில்
இந்தியா
கல்லறைக்குள் ளானதுபோல்
மூச்சு முட்டுகிறது

கருப்புப் பணம்
காத்து வைத்திருப்போரை
காத்துக் கருப்பும் அண்டாது

வேர்த்துழைத்துச்
சேர்த்தப் பணம்
வெற்றுப் பணம் என்றானதுவே

மோடி
அழைத்துச் செல்லும்
வளர்ச்சிப் பாதை
பாரதத்தைப்
பாதாளத்தை நோக்கி
நகர்த்துகிறது

 சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

0 Responses So Far:

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.