அல்லாஹ்வின் திருப்பெயரால்….
உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக !
அதிரையில் நேற்று இரவு (06-06-2012) யாருமே எதிர்ப்பாராத அளவுக்கு பலத்த சத்தம்கூட்டி காற்றுடன் கூடிய மழை பெய்தது, அன்றைய இரவு சற்றே வானிலையில் மாற்றம் ஏற்பட்டாலும், இன்று காலை (07-ஜூன்-2012) முதல் வெயில் தன் கடமையை வழக்கம்போல் காட்டத் தொடங்கியுள்ளது.
அதிரையில் நேற்று இரவு (06-06-2012) யாருமே எதிர்ப்பாராத அளவுக்கு பலத்த சத்தம்கூட்டி காற்றுடன் கூடிய மழை பெய்தது, அன்றைய இரவு சற்றே வானிலையில் மாற்றம் ஏற்பட்டாலும், இன்று காலை (07-ஜூன்-2012) முதல் வெயில் தன் கடமையை வழக்கம்போல் காட்டத் தொடங்கியுள்ளது.
நேற்று வீசியதோ சூறைக் காற்று அதன் தாக்கம் மரங்கள் ஆங்காங்கே சாய்ந்து கிடந்தது, கடைத்தெரு, மெயின் ரோடு பகுதிகளில் இருந்த ஒரு சில விளம்பர பேனர்கள் தூக்கி வீசப்பட்டன. இது கட்அவுட் மற்றும் வீண் தம்பட்ட விளம்பரங்கள் செய்யும் ஊதாரிகளுக்கு இது ஒரு எச்சரிக்கை என்று சொன்னால் மிகையாகாது.
நேற்றிரவு மின்னல் வெட்டியதும் மின்சாரம் இருட்டுக்குள் ஒழிந்தே விட்டது இதனால் அதிரை மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள் (இது என்ன புதுத் தகவலா என்று முகம் திருப்ப வேண்டாம்) என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை, கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர்தான் கந்தூரி போதையர்களின் 'காட்டு'க்கத்தல் (ஒலிபெருக்கி) சத்தத்திலிருந்து விடுபட்ட மக்களுக்கு, மின்சாரத் தடை ஏற்பட்ட நேற்றைய இரவு கோவில் திருவிழா மற்றும் பிறமத திருமண விழா என்ற பெயரில் சி.எம்.பி. லைன் மற்றும் புதுமனைத் தெரு பகுதியில் விடிய விடிய சினிமா பாட்டுக்களை ஒலிபெருக்கி வாயிலாக சத்தம் எழுப்பி நாங்களும் உங்களைச் சார்ந்த கந்தூரி போதை பார்ட்டிகளுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்தார்கள்.
இரவு முழுவதும் அந்தப் பகுதி பொது மக்களை தூங்கவிடாமல் ஒலிப்பெருக்கிச் சத்தம் மூலம் தொந்தரவு செய்பவர்களை தடுப்பதற்கு நாதியில்லை. கேட்கச் செல்பவனை போதை தலைக்கேறி ஆள்வைத்து அடிப்பவர்களின் வீடுகள் ஊரின் 'நடு'பகுதியில் இருப்பதாலோ என்னவோ !
இந்த இலட்சனத்தில் இசை இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது என்ற இஸ்லாமிய பெயர் தாங்கிய கோமாளிகளின் துண்டு பிரசுரம் ஒன்று அதிரையில் ஊர் பெரியவர்கள் மார்க்க அறிஞர்கள் ஒன்றுகூடும் புகழ்பெற்ற பள்ளிவாசலில் இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்த மாவட்ட ஜமாத்துல் உலமா(!!??) சபை கூட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது போன்ற துண்டு பிரசுரங்களை அனுமதித்த உலமாக்களும், ஊரில் இருக்கும் மார்க்க அறிஞர்களும், பெரும் தலைகளும் எப்படி முன் வருவார்கள் மேற்சொன்ன கேடுகெட்ட போதைப் பார்ட்டிகளின் அலுச்சாட்டியத்தை தடுக்க? முன்னேறவேண்டிய சமுதாயம் பின்னோக்கி போகிறது என்ற வருத்தம் நன்னோக்கு கொண்ட ஒவ்வொருவரின் மனதில் அழுத்தமாக பதிவதை மறுக்க முடியாத உண்மை.
இரவு முழுவதும் அந்தப் பகுதி பொது மக்களை தூங்கவிடாமல் ஒலிப்பெருக்கிச் சத்தம் மூலம் தொந்தரவு செய்பவர்களை தடுப்பதற்கு நாதியில்லை. கேட்கச் செல்பவனை போதை தலைக்கேறி ஆள்வைத்து அடிப்பவர்களின் வீடுகள் ஊரின் 'நடு'பகுதியில் இருப்பதாலோ என்னவோ !
இந்த இலட்சனத்தில் இசை இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது என்ற இஸ்லாமிய பெயர் தாங்கிய கோமாளிகளின் துண்டு பிரசுரம் ஒன்று அதிரையில் ஊர் பெரியவர்கள் மார்க்க அறிஞர்கள் ஒன்றுகூடும் புகழ்பெற்ற பள்ளிவாசலில் இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்த மாவட்ட ஜமாத்துல் உலமா(!!??) சபை கூட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது போன்ற துண்டு பிரசுரங்களை அனுமதித்த உலமாக்களும், ஊரில் இருக்கும் மார்க்க அறிஞர்களும், பெரும் தலைகளும் எப்படி முன் வருவார்கள் மேற்சொன்ன கேடுகெட்ட போதைப் பார்ட்டிகளின் அலுச்சாட்டியத்தை தடுக்க? முன்னேறவேண்டிய சமுதாயம் பின்னோக்கி போகிறது என்ற வருத்தம் நன்னோக்கு கொண்ட ஒவ்வொருவரின் மனதில் அழுத்தமாக பதிவதை மறுக்க முடியாத உண்மை.
ஒரு காலத்தில் பிறமதக் கலாச்சாரமான 'சபரிமலை சீசனில்' மட்டுமே ஒலிப்பெருக்கி சத்தங்கள் காதில் விழுந்த காலம் கரையேறிவிட்டது, ஆனால் இன்றோ ஊரில் நான்கு திசைகளிலும் 50க்கு (!!?) மேற்பட்ட பிறமத வணக்கஸ்தலங்கள் உள்ளது இவைகளில் சில கோவில்கள் மாதக்கணக்கில் ஒலிப்பெருக்கியை வைத்து இரவு நேரங்களில் சினிமா பாடல்களும், அதிகாலை நேரங்களில் அவர்களின் பக்திப்(!!!???) பாடல்களையும் தொடர்ந்து ஒலிபரப்பிக் கொண்டிருப்பதால் சகோதரத்துவத்தை மட்டுமே போதிக்கும் இஸ்லாமியர்களிடமிருந்து நன்மதிப்பை இழக்கிறோம் என்பதும் அம்மக்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் இவைகளின் தாக்கம் போதையாக தலைக்கேறி அவைகளின் பின்விளைவுகள் அறியாது உள்ளார்கள் அக்கம்பக்கத்தில் கோவில்களை கொண்டுள்ள நம் மக்கள்.
“அறிவை மழுங்கடிக்கச் செய்யும் இசைக்கருவிகளை உடைத்தெரியவே நான் வந்துள்ளேன்” என்று சொன்ன நபிகளாரின் வார்த்தைக்கு மதிப்பளிக்கிறோமா இல்லையா என்பதை இசைக்கு கொஞ்சமாகவோ கூடுதலாகவோ அடிமையாகியுள்ள மனசாட்சியுள்ள நற்சிந்தனைகளுக்கு காது கொடுக்கும் ஒவ்வொரு முஸ்லீமும் சிந்திக்க வேண்டும்.
இஸ்லாத்தில் இசை கேட்பது தடுக்கப்பட்டிருக்கின்றது என்பதற்குரிய ஆதாரத்தை பின் வரும் இறைவசனமும் அதற்கான விளக்கமும், மற்றும் தொடர்ந்து வரும் நபிமொழியை நிதானமாக வாசித்து பருங்கள்..
(இவர்கள் தவிர) மனிதர்களில் சிலர் இருக்கின்றார்கள் – அவர்கள் அறிவில்லாமல் வீணான பேச்சுக்களை விலைக்கு வாங்கி, (அவற்றால் மக்களை) அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழி கெடுக்கவும், அல்லாஹ்வின் பாதையைப் பரிகாசமாக்கிக் கொள்ளவும் (முயல்கிறார்கள்) இத்தகையோருக்கு இழிவுதரும் வேதனையுண்டு. 31:6இந்த திருவசனத்தில் வந்திருக்கும், வீணான பேச்சுக்கள் என்பதற்கு, அது இசைக்கருவிகள்தான் என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது (ரலி) அவர்கள் விளக்கம் கூறுகின்றார்கள்.
என்னுடைய உம்மத்தில் சில கூட்டத்தினர் தோன்றுவார்கள், அவர்கள் விபச்சாரத்தையும், பாட்டையும், மதுவையும் இசைக்கருவிகளையும் ஹலால் (ஆகுமானதாக) ஆக்குவார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
மேற்கூறப்பட்ட ஆதாரத்தின் அடிப்படையில், இசை இஸ்லாத்தில் தடுக்கப்பட்டது என்பது தெளிவாகின்றது.
சர்வசாதாரணமாக உலாவரும் இஸ்லாம் வெறுத்த இசை குறிப்பாக சினிமா இசை இன்று ஒவ்வொரு வீடுகளிலும், பள்ளிக்கூடம் செல்லும் வாகனங்களிலும், ஆட்டோக்களிலும், பயனம் செய்யும் பிற வாகனங்களிலும், அலைப்பேசிகளிலும் ஒலிக்கிறதே…. இப்படியிருக்க மலக்குமார்கள் நமக்காக நல்ல பிரார்த்தனைகளை செய்வார்கள் என்று தப்புக்கணக்கு போடுவது தவறு. (இசை தவறு என்று சொன்னால், கோபப்படுவதில் முன்னனியில் இருப்பவர்கள் முஸ்லீம்களே அதிகம். அதற்கு அவர்கள் தவறான விளக்கங்களும், மலுப்பல் பதில்களும் தந்து சமாளிப்பார்கள்).ஒலிப்பெருக்கி வைத்து விடியவிடிய இசைக்கச்சேரி நடத்துவது, கோவில் பாட்டிகளிலிடமிருந்து கந்தூரி பார்ட்டிகள் கற்றுக்கொண்டார்களா? அல்லது கந்தூரி பார்ட்டிகளிடமிருந்து கோவில் பார்ட்டிகள் கற்றுக்கொண்டார்களா?
இவைகளை தடுப்பது யார்?-அதிரைநிருபர் குழு.