குல்லுஆம் வஅன்த்தும் பின் கைர் !
அல்ஹம்துலில்லாஹ் ! இந்த வருடம் ஹிஜ்ரி 1435 ரமளான் மாதம் மிகச் சிறப்பாக நம்மிடையே ஒன்றி உலாவி நம் அமல்களை வலுப்படுத்தி உள்ளத்தாலும் உணர்வுகளாலும் தூய்மையை நம்மிடையே நிலைத்திருக்கச் செய்துவிட்டு நம்மை விட்டு விடைபெற்றுக் கொண்டது !
இன்று வளைகுடாவில் பெருநாள், ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னர் ஒருமணி நேரத்திற்கு முன்னர் எழுந்து தூய்மையான குளியல் பின்னர் தொழுகை, தொடர்ந்து நபிவழி பெருநாள் தினத் துவக்கம் அதிகாலைப் பொழுது புலரும் அற்புதமான தினம் துபாயில் விடிந்தது !
பெருநாள் தொழுகைக்கும் கூடினோம், தொழுதோம், இறைஞ்சினோம் வல்ல இறைவன் அல்லாஹ்விடமே !
வழியெங்கும் சவால் விடும் போஸ்டர்கள் இல்லை! எங்களோடு இணைந்து தொழும் தொழுகைக்கு சலுகைகள் என்ற தம்பட்டம் இல்லை ! மெளலவிகளைத் தேடும் தேடல் இல்லை!
அடுத்து என்ன !?
வழியெங்கும் சவால் விடும் போஸ்டர்கள் இல்லை! எங்களோடு இணைந்து தொழும் தொழுகைக்கு சலுகைகள் என்ற தம்பட்டம் இல்லை ! மெளலவிகளைத் தேடும் தேடல் இல்லை!
அடுத்து என்ன !?
அதிரையின் வாசம் அமீரகத்தில் வீசாமல் ஒரு பெருநாளா ?
அதிரைப் பெருநாள் என்றாலே நம்மில் பெரும்பாலோர் மூக்கிலும் நாக்கிலும் வேர்க்கும் ! அதுதான் மண்வாசனை தூக்கலுடன் இருக்கும் காலை பசியாறவும் அதனைத் தொடரும் பகல் சாப்பாடும் கலைகட்டும் !
இடியப்பம் இல்லாத இல்லமா ? வீட்டில் செய்யா விடினும் (அன்னபூர்னாவுக்கு) தேடிச் சென்று எங்கே கிடைக்குமோ அங்கே காத்திருந்து விழித்திருந்து வாங்கி வந்து சாப்பிடும் வேகம் நம்மவர்களிடையே அதிகம்.
இன்று பெருநாள் (காலைச்) சாப்பாட்டில் கலந்து சிறப்பித்தவைகள் !
மலேசியா பரோட்டா
அண்ணபூர்னா இடியப்பம்
இந்தியா ஆட்டுக்கறி
ராஸல்கைமா பண்ணைக் கோழி
ராஸல்கைமா பண்ணைக் கோழி
கேரளா சேமியா
சைனா கடப்பாசி
சவுதி வட்டிலப்பம்
பன்னாட்டு இனிப்பு புளிப்பு துணையுடன்...
அதிரையர்களாகிய எங்களை சுவைக்க வைத்தது இன்றைய சிறப்பம்சம். !
அடுத்தென்ன பகல் சாப்பாடு(தான்)...!
பின்னூட்டத்தில் பகல் சாப்பாட்டின் முன்னோட்டம் இன்ஷா அல்லாஹ் தொடரும்... !
அது சரி உங்கள் பெருநாள் எப்படி !? [அதிரையில் நாளைக்காமே !?]
அதிரைநிருபர் பதிப்பகம்






2 Responses So Far:
Assalamu Alaikkum
Kul Aam Wa Anthum B khair !!!.
Wish a happy Eid Mubarak...
May Allah forgive our sins, accept our fasting, prayers, alms and all good deeds.
B. Ahamed Ameen from Adirai.
ஈதுல்பிதர்வாழ்த்துக்கள்.
இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...
பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.