Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இயற்கை இன்பம் – நிறைவுக் கவிதை 1

அதிரைநிருபர் பதிப்பகம் | September 03, 2016 | , ,



(பதினாறு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தப் பா.)

இயற்கையிலே  பெரும்படைப்பாய்ச்  சின்னஞ்  சிறிதாய்
                          இருக்கின்ற  அனைத்தையுமே  படைத்த  வல்ல
இறையோனின்  ஆற்றலினை  எண்ணிப்  பார்க்க
                          இயலாதோர்  பகுத்தறிவின்  மாந்தர்  தாமோ?

செயற்கையிலே  வித்தகர்கள்  மதிப்பை  வேண்டிச்
                          செய்கின்ற  கருவிகளை  நின்று  கண்டே
செயற்கரிய  செயலென்று  வியந்து  நின்றே
                          சிந்தையினை  இழந்திடுவார்  அந்தோ!  நல்ல

முயற்சியுடன்  பகுத்தறிவால்  சிந்திக்  காமல்
                          முழுவாழ்வின்  பயனிழந்து  வீணாய்ப்  போக
முதுமையிலே  வாய்ப்பின்றிச்  சாவைக்  கண்டு
                          முடிவினிலே  விலங்குகள்போல்  செத்துப்  போவார்!

பயிற்சியுடன்  அறிவதனை  வினையாய்  ஆக்கிப்
                          பார்வையினைப்  படைப்பினங்கள்  பற்றி  நல்ல
பாதையிலே  சிந்தனையைச்  செலுத்திப்  பார்த்தால்
                          படைப்பினமாம்  இயற்கையிலே  இன்பம்  காண்பார்!

அதிரை அஹ்மத்

1 Responses So Far:

Ebrahim Ansari said...

பயிற்சியுடன் அறிவதனை வினையாய் ஆக்கிப்
பார்வையினைப் படைப்பினங்கள் பற்றி நல்ல
பாதையிலே சிந்தனையைச் செலுத்திப் பார்த்தால்
படைப்பினமாம் இயற்கையிலே இன்பம் காண்பார்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு