Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மறக்க முடியவில்லை ! 2

அதிரைநிருபர் பதிப்பகம் | January 03, 2016 | , ,


நெஞ்சினிலே நித்தமுமாய்
நினைவலைகள்
வந்ததுவே வந்தனமாய் என்மனதில்
வஞ்சித்தவரும் வாழ்த்தியவரும்
நெஞ்சுக்குள்ளே
வனப்புடனே வாழ்ந்தவரோ
மண்ணுக்குள்ளே

தனை ஈன்ற தாய் தந்தையோ
உயிருக்குள்ளே
தாரமாகி எனைக் கவர்ந்தவள்
மனதுக்குள்ளே

கொஞ்சுதழிழை பயில்வித்த ஆசான்
உடலுக்குள்ளே
கொஞ்சிப்பேசும் குழந்தைகளோ
கண்ணுக்குள்ளே

கூவிப்போகும் குயிலினோசை
காதுக்குள்ளே
கூடிக்கூவி பழகிய நட்புக்கள்
உயிர்நாடிக்குள்ளே

அரும்பு மீசையில் விரும்பிய காதல்
ஆன்மாக்குள்ளே
அன்பென நினைத்து வம்பில் முடிந்தது
ஆசைக்குள்ளே

நாகாத்துப் பேசிட்டு நல்லாசி வழங்கியதும்
நாவுக்குள்ளே
முகர்ந்த மணமும் முகம்சுழிக்கும் வாசனையும்
மூக்குக்குள்ளே

பொல்லாரைப் புறந்தள்ளி பகையோரை வசைபாடியது
வாயிக்குள்ளே
படைத்திட்ட இறையோனை வணங்கிய தழும்பு
நெற்றிக்குள்ளே

பாச உறவுகளும் நேச ஊராரும்
உணர்வுக்குள்ளே
பாடிப்பறந்தவர் வெளிநாட்டில் அடைபட்டது
புத்திக்குள்ளே

இத்தனையும் புதைந்தனவே முத்துக்களாய்
மனதுக்குள்ளே
எதைமறப்பேன் எதைநினைப்பேன்
எனக்குள்ளே

இன்னுமுண்டு பல்லாயிரம் வகை
இதயத்துக்குள்ளே
இவையனைத்தையும் நினைத்திடனும்
 இறப்புக்குள்ளே

அதிரை மெய்சா

2 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

வாசிக்க முடிந்தவைகள் அனைத்திலும் அங்கே அமர்ந்து கருத்திடவில்லையே தவிர... ஆனால் உங்கள் கவிதைகளின் கருவோடு வளரும் எண்ணங்களில் கலந்துதான் இருக்கிறேன்... கவிக் காக்காவோடும்... எப்போதும்...

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு