Friday, April 18, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

குஜராத் கலவர வழக்கு ::: நீதிமன்ற தீர்ப்பு ! 1

அதிரைநிருபர் பதிப்பகம் | August 31, 2012 | , , , , ,


அகமதாபாத் (31-08-2012): குஜராத் கலவரம் தொடர்பான வழக்குகளில் ஒன்றான நரோடா பாட்டியா  கலவர வழக்கில்  பா.ஜனதா முன்னாள் அமைச்சர்  மாயா கோட்னானிக்கு 28 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பஜ்ரங்தள் அமைப்பின்  தலைவர் பாபு பஜ்ரங்கிக்கு சாகும் வரை சிறைத் தண்டனையும் விதித்து நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது.

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பின்னர் கடந்த 2002 ம் ஆண்டு குஜராத்தின் பல   இடங்களில் வன்முறை வெடித்தது. பல இடங்களில் நடைபெற்ற கலவரங்களில் ஒன்றாக   நரோடா பாட்டியா என்ற இடத்திலும் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன.இதில் 97  பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இது தொடர்பான வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிமன்றம், பா.ஜனதா  முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானி, பஜ்ரங்தள தலைவர் பாபு பஜ்ரங்கி உள்ளிட்ட  32 பேர் குற்றவாளிகள் என்று அறிவித்தது.அதே  சமயம் 29 பேர்களை விடுவித்து  உத்தரவிட்டது.

குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ள 32 பேருக்கான தண்டனை தீர்ப்பை  வெள்ளிக்கிழமையன்று வழங்க உள்ளதாக நீதிபதி தெரிவித்திருந்தார். 

அதன்படி இன்று குற்றவாளிகளுக்கான தண்டனை தீர்ப்பை வழங்கிய நீதிபதி, நரேந்திர  மோடியின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பா.ஜனதா முன்னாள் அமைச்சர் மாயா  கோட்னானிக்கு ஒட்டு மொத்தமாக 28 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பஜ்ரங்தள்  அமைப்பின் தலைவர் பாபு பஜ்ரங்கிக்கு சாகும் வரை சிறைத் தண்டனையும் விதித்து  உத்தரவிட்டார்.

இவர்கள் உட்பட மற்ற அனைத்து குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனை விதித்து  தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அதிரைநிருபர் குழு

நன்றி : இணையதகவல்

1 Responses So Far:

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அல்லாஹ் அக்பர்,
அல்லாஹ் ஒரு போதும் குற்றவாளிகளை கண்டு கொள்ளாமல் விடமாட்டான்.
அதனுடைய தவணை வரும் வரை தறிகெட்ட நிலையில் குற்றவாளிகளை திரிய விடுவான் .

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.