Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நேற்று! இன்று! நாளை! - 24 20

அதிரைநிருபர் பதிப்பகம் | January 09, 2014 | , , , ,

அண்மையில் ஊடகங்கள் ஒரு விஷயத்தைச் சுற்றி தனது கண்ணோட்டத்தை பரபரப்பாக பதிவு செய்தன. இந்தியாவே திடீரென்று மதுரை நகரின் இரவுச் சந்தை போல சுறுசுறுப்பாகிப் போனது. பெரிய தலைவர்கள் முதல் கருத்துக்கள் தெரிவிக்க ஆரம்பித்தனர்; நாகரிகம் படைத்தவர்கள் முகம் சுளித்தார்கள் ; பேசுபொருளோடு தொடர்புடையோருக்கு இன்பமும் துன்பமுமாக இருந்தது. இது எதைப் பற்றி? எழுதவே கைக் கூசும் ஓரினச் சேர்க்கை பற்றி . நடப்பு விஷயங்களைக் கொஞ்சம் அலசலாம் என்கிற முறையில் இதையும் ஒரு அலசு அலசலாம். அலசலின் அடிப்படை இதுவே.

ஓரினச்சேர்க்கை குற்றமல்ல என்று 2009-இல் டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்ததை அண்மையில் தள்ளுபடி செய்துள்ள உச்சநீதிமன்றம், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 377-இன்படி ஓரினச் சேர்க்கை குற்றம் என்று தீர்ப்பளித்திருந்தது. இதைக் கண்டித்து நாடெங்கும் ஓரினச்சேர்க்கையாளர்கள் போராட்டம் நடத்தினார்கள்; நடத்தி வருகிறார்கள். இதை தொடர்ந்து, இந்தவிவகாரத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வர நாடாளுமன்றம் நடவடிக்கை எடுக்கும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும், இதுபோன்ற விவகாரங்கள் தனிமனித சுதந்திரம்சம்பந்தப்பட்டவை என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தியும் கருத்துவெளியிட்டிருந்தனர். ஓரினச்சேர்க்கைக்கு பாஜக, மதிமுக, மஜத உள்ளிட்ட பெரும்பாலான அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார்ஷிண்டேவிடம், ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவாக அவசரச்சட்டம் கொண்டுவரப்படுமா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்,ஓரினச்சேர்க்கை விவகாரத்தில் தற்போதைக்கு அவசரச்சட்டம் கொண்டுவரும் திட்டம் இல்லை. இந்தவிவகாரம் தொடர்பாக எங்கள் கட்சியின் (காங்கிரஸ்)தலைவர், துணைத் தலைவர் கருத்து வெளியிட்டுள்ளனர். அவர்களின் கருத்தை நானும் ஆதரிக்கிறேன் என்றார் அவர்.

இறைவன் ஏற்படுத்திய உணர்வுகளிளேயே மிகவும் ஆபத்தானதும், அவசியமானதும், சுவையூட்டுவதுமான உணர்வு காமம் ஆகும். படைக்கபப்ட்டுள்ள ஈ முதல் ஈசல் வரை ஒவ்வொரு உயிருக்குள்ளும் ஓடும் இயல்பான உணர்வு அது. காலை ஆனாலும் மாலை யானாலும் நடுச் சாமம் ஆனாலும் கண்விழிப்பது காமம். இப்படிப்பட்ட படைக்கப்பட்ட ஜீவராசிகள் சுவைக்க மகிழ சுகம் கொள்ள ஆண் பெண் என்ற இரு இனத்தை இறைவன் படைத்தான். எந்த இறைவன் அந்த உணர்வைப் படைத்தானோ, அந்த உணர்வின் ஆபத்தை அறிந்து அந்த உணர்வுக்கு வடிகால்களை வாழ்க்கை முறைகளை படைத்தவனே வகுத்தும் தந்து இருக்கிறான்.

ஆனால் தனிமனித சுதந்திரம் என்ற சொல்லுக்கு நாகரீகம் என்று அர்த்தநாரிகள் அர்த்தமற்ற வாக்கியங்களை கக்குகின்றன. பண்பாடும், பழம் பெருமையும் வாய்ந்த நாட்டில் இன்று அன்னியக் கலாச்சாரங்கள் ஒலி ஒளி நாடாககளின் மூலம் வளரும் இளைஞர்களை வளைத்துப் போடும் வகையற்ற கலாச்சாரத்துக்கு வித்திட்டு நிற்கின்றன.

ஓரினச் சேர்க்கை என்பது மனித வரலாறு முழுவதுமே அங்கங்கே தலைகாட்டி தன் தொடர்ச்சியைக் கொண்டிருந்தாலும் கூட, பொதுச் சமூகங்களில் வெறுப்பிற்குரிய செயல்பாடாகவே கருதப்படுகிறது. இன்றளவும் பல நாடுகளில் ஓரினச் சேர்க்கை என்பது அவமானகரமான செயலாகவும் சட்ட விரோதமானதாகவும் நடத்தப் படுகிறது. இந்தப் பாலியல் செயலானது 60களில் இடம்பெற்ற ஸ்ரோன்வோல் கலவரங்களைத் தொடர்ந்து பொதுச் சமூகங்களில் தனக்கான அங்கீகாரத்தைப் பெற்று விஷச் செடியாக வளர்ந்து வருகிறது. சில நாடுகள் செய்வதறியாமல் ஓரினச் சேர்க்கையை சட்டபூர்வமானதாய் அங்கீகரித்துள்ளன. இப்போது நாம் இதைப் பற்றி பேசவேண்டிய அவசியம் என்ன? அவசியம் இருக்கிறது.

இந்தியக் குற்றவியல் தண்டனைச் சட்டம் பிரிவு 377 –ன் படி ஓரினச் சேர்க்கை குற்றமாகும். பத்து ஆண்டுகள் வரை தண்டனையைப் பெற்றுத்தந்து களி தின்ன வைக்கும் சட்டம் இன்றும் அமுலில் இருக்கிறது. இதைத் தவறு என்று வாதிடும் சில அறிவுஜீவிகள் தங்களை தனிமனித சுதந்திரத்துன் பாதுகாவலர்கள் என்று எண்ணிக கொண்டு போகாத ஊருக்கு வழி தேடினர். டில்லி உயர் நீதி மன்றத்தில் இந்த சட்டத்தை நீக்கும்படி ஒரு வழக்குப் போட்டனர். வழக்கை விசாரித்த டில்லி உயர் நீதி மன்றம் ஓரினச் சேர்க்கை அப்படி ஒன்றும் தண்டனைக் குரிய குற்றமல்ல என்று தீர்ப்பளித்தது. மானம் படைத்த சில நாகரிக மனிதர்கள் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச இதை விசாரித்து உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறு சட்டப்படி ஓரினச் சேர்க்கை தண்டனைக்கு உரியதே என்று இருவரும் ஒரே நல்ல தீர்ப்பை வழங்கினர்.

இதைச் சொல்ல நாட்டின் தலை நகரில் இருக்கும் உச்ச நீதிமன்றம் தேவைப் பட்டதும் அதன் தேவையை அணுகியதும் ஒரு வெட்ககேடான விஷயம். நாட்டில் எத்தனையோ பிரச்னைகள், வழக்குகள் விசாரிக்க வக்கில்லாமல் வழக்குக் கட்டுகள் தூசு படிந்து தொங்கிக் கொண்டு இருக்கின்றன; தூங்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றை எல்லாம் விட்டுவிட்டு ஒரு உதவாக்கரை விஷயத்துக்காக பல வக்கீல்கள் , நீதிபதிகள், நீதிமன்றங்கள் ஆகியவற்றின் காலமும் பணமும் விரயமாக்கப் பட்டு இருக்கின்றன. இந்த நிலையில் முக்கியம் என்று கருதப் படும் வழக்குகள் தேங்காமல் என்ன செய்யும்? தலைமுறையாகத்தீர்வு காணப்படாத வழக்குகள் குவியாமல் என்ன செய்யும்?

வெட்கக் கேட்டிலும் வெட்கக்கேடு விபரீதத்திலும் விபரீதம் என்ன வென்றால் உச்ச நீதிமன்றம் தந்திருக்கும் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டுமென்று மத்திய அமைச்சரவை மனு செய்து இருப்பதுதான். அங்கிருப்பவர்களுக்கு அப்படி என்ன முக்கியம் என்பதுதான் நாட்டோருக்குப் புரியவில்லை. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் எவ்வளவோ பிரச்னைகள் இருக்க பாராளுமன்றத்துக்குள் புகுந்துவிட்ட பாவிகள் தேவை இல்லாதவைகளை எல்லாம் தோளில் ஏற்றி சுமந்தும் தேவையானவற்றை காலில் போட்டு மிதித்தும் வருகின்றனர். இத்தகைய எண்ணம் கொண்டுள்ள பாராளுமன்ற அரசியல்வாதிகளைப் பார்த்துக் கேட்க விரும்புகிறோம் “ஐயா தலைவரே! உங்கள் வீட்டு பெண்களோ பிள்ளைகளோ இப்படி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டால் அவர்களை உங்கள் வீட்டுக்குள் ஏ/சி அறை கட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்துவீர்களா என்பதுதான். உபதேசம் ஊருக்கு மட்டும்தான் என்பதே இவர்களின் பதிலாக இருக்கும்.

சட்டத்துக்குப் புறம்பான ஆண் பெண் உடல் உறவையே தண்டனைக்கு உள்ளாக்கி இருக்கும் சட்டமும் சமுதாயமும் இயற்கைக்கு மாறான இந்த உணர்வை எப்படி அனுமதிக்கும்? இத்தகைய சட்டத்துக்குப் புறம்பான ஆண் பெண் உறவை அனுமதிக்காத சட்டம் ஓரினச் சேர்க்கையையும் சட்டப்படி அனுமதித்துவிட்டால் பொது இடங்கள் , பஸ் ஸ்டாண்டுகள், பள்ளிக் கூடங்கள், ஓடும ரயில்கள் என்று ஒவ்வொரு இடத்திலும் ஆரம்பித்து விடாதா? அல்லது சிகப்பு விளக்குப் பகுதி என்று சில மாநில அரசுகள் அனுமதித்து இருப்பதைப் போல பச்சை விளக்குப் பகுதி என்றும் ஒன்றை ஆரம்பிக்கத் திட்டமா? பள்ளி ஆண்டுவிழா, கல்விச் சீரமைப்பு விழா, புத்தாண்டு விழா என்பதைப் போல ஓரினச் சேர்க்கைக்கும் அரசு சார்பில் ஒரு விழா நடத்தப் பட்டு இளைஞர்களின் தலைவரோ , கட்சிகளின் இளைஞர் அணிகளோ அவற்றில் கலந்து கொண்டு மத்திய விளையாட்டு கல்வி இளைஞர் நல அமைச்சர் போட்டி நடத்திப் பரிசுகள் வழங்குவாரா? நினைக்கவே வெட்கமாக இல்லையா?

அந்நிய நாகரீகம் கலாச்சாரத்தை ஆக்ரமிப்பு செய்வதன் விளைவுதான் பிறந்த நாள் கலாச்சாரம், காதலர் தின க் கொண்டாட்டம் , பாரம்பரிய மற்றும் கலாச்சார உணவுமுறை மாற்றம் ஆகிய அனைத்து அழிவுகளுக்கும் கால்கோள் விழா நடத்தி இருக்கிறது. இப்போது ஓரினச்சேர்க்கை சிந்தனையும் அரசுக்கு வந்திருப்பதன் அவசியம் என்ன? இதை ஆரம்பத்தில் ஆதரித்த நீதிபதியின் நண்பர்களின் பட்டியலை முதலில் ஆராய அரசு அல்லது தன்னார்வ அமைப்புகள் முனைய வேண்டும்.

ஆணுக்குப் பெண்ணையும் பெண்ணுக்கு ஆணையும் துணையாகப் படைத்து மென்மையான உணர்வுகளுடன் கூடிய தெய்வீகமான புனித உறவுகள் அமைத்துக் கொள்ள ‘தாம்பத்தியம் ஒரு சங்கீதம் ‘ என்ற பண்பாடு வளர்ந்துள்ள நாட்டில் மேலை நாட்டு நாகரீகத்தைப் புகுத்த புறப்பட்டு இருக்கும் புண்ணியவான்களிடம் கேட்க விரும்பும் இன்னொரு கேள்வி, மேல் நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு உண்மையான அப்பன் யாரென்று தெரியுமா என்பது இந்தச் சீரழிவை ஆதரிக்கும் அரைவேக்காடுகளுக்குத் தெரியுமா என்பதுதான். 

அறம், பொருள், இன்பம் என்பது அனைவருக்கும் பொதுவானது. மூன்றையுமே நெறிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் தேடிக் கொள்ள வேண்டும். இந்த நாட்டின் மிகப் பெரும் மக்கள் பின்பற்றும் இந்து மதத்தில் உள்ள ஒரு கதையை விக்கிபீடியா குறிப்பிடுகிறது .

“பாற்கடலில் கிடைக்கப்பெற்ற அமுதத்தினை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பிரித்துத் தருவதற்காக திருமால் மோகினி அவதாரமெடுத்தார். அதனைக் காணாத சிவபெருமான் மீண்டும் திருமாலை மோகினி அவதாரம் எடுக்கச் சொன்னார். அந்த மோகினியின் அழகில் மயங்கிய சிவன் அவளுடன் உறவு கொண்டதாகவும் அதனால் ஐயப்பன் பிறந்ததாகவும் ஒரு தொன்மக் கதை உள்ளது சிலர் இதை கடவுள்களின் ஓரினச் சேர்க்கையாகக் கருதுகிறார்கள். “இது வரிக்கு வரி விக்கி பீடியாவிலிருந்து எடுத்ததே. நமது கருத்தல்ல. ஆனால் நாம் இந்தப் புராணக் கதையில் இருந்து சொல்ல வருவது என்னவென்றால் ஒரு ஆண் கடவுள் கூட பெண் உருவாக மாறிய பிறகுதான் உறவு கொள்ளப் பட்டதை இந்தப் புராணக் கதை சொல்கிறது என்பதை சுட்டிக் காட்டவே. ஆகவே வெளிப்படையில் அல்லது அடிப்படையில் இது ஆணும் ஆணும் கொண்ட உறவுக்கு அத்தாட்சியல்ல. நாகரிகமான முறையிலேயே பெண் உருவம் எடுத்த பிறகு இணைப்பு நடந்ததாகவேப் புராணமும் கூறுகிறது. மேலும் இந்தியாவெங்கும் இருக்கும் கோயில் சிற்பங்களில் ஒரு இடத்தில் கூட ஆணும்ஆணுமோ பெண்ணும் பெண்ணுமோ இச்சையுடன் இணைந்து இருப்பதாக சிற்பங்கள் இல்லை. சிலைகள் இல்லை. 

காப்பியங்களிலும் இலக்கியங்களிலும் காட்டப் படும் காட்சிகளில் காதல் உணர்வின் வேதனைகள் ஆண் பெண் இருபாலருக்கு மட்டுமே ஏற்படுவதாகக் காட்டப் படுகின்றன. எந்த இலக்கியத்திலும் ஒரு ஆணை வேண்டி ஆணோ பெண்ணை வேண்டி பெண்ணோ தவித்ததாகவோ தூதுவிட்டதாகவோ களவு என்கிற உடன் அழைத்து ஓடுதல் செய்வதாகவோ குறிப்பிடப் படவில்லை.

ஆணும் பெண்ணும் தங்களின் சமுதாய வழக்கப் படி ஏற்படுத்திக் கொள்ளும் திருமணம் என்கிற பந்தம் அவர்களின் காம உணர்வை வரைமுறைகளுக்குட்பட்டு தீர்த்துக் கொள்ள வழி வகுப்பதுடன் அந்த இணைப்பால் ஏற்படும் இனவிருத்தியால் பிறக்கும் குழந்தைகளை காலத்துக்கும் பொறுப்பேற்று வளர்த்து ஆளாக்கும் சமூகப் பொறுப்பையும் அவர்களுக்கு வழங்குகிறது. இந்த பந்தமும் சொந்தமும் வாழையடிவாழையாக வளர வேண்டுமென்று வாழ்த்துப் பாவும் இசைக்கிறது. காட்டாறாக பொங்கி வரும் காமப் பிரவாகத்தை கட்டுப் படுத்தி அணை கட்டும் ஆற்றலே திருமண பந்தம். எதிர்மறைப் பாலியல் மீது ஏற்ப்படும் ஈர்ப்பே இயற்கையானதும் இறைவன் வகுத்ததுமாகும். இதற்கு மாறுபாடான ஓரின ஈர்ப்பு இயற்கைக்கு எதிரானது.

தாவரங்கள் கூட காய்களையும் கனிகளையும் தருவது ஆண் பூவும் பெண் பூவும் தங்கள் தங்களின் தன்மைகளை ஒன்றன் மேல் ஒன்றாக விரவச்செயதும் பரவச்செய்தும் மகரந்த சேர்க்கை செய்துதானே. விலங்கினங்களில் நாய்களைத் தவிர ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் மற்ற விலங்குகளை நாமும் கண்டதில்லை. அப்படி விதிவிலக்காக இருக்கும் நாய்கள் எவ்வளவு சிக்கலான முடிச்சுகளில் சிக்கித் தெருவை இரண்டாக்கும் சங்கதிகளை நாம் கண்டு சீ! நாயே! என்று ஒதுங்கிப் போனது இல்லையா? இப்படி நாய்படாத பாடு படும் , இந்நிலை மனித இனத்துக்கும் தேவையா?

“பாலொடு தேன் கலந் தற்றே பணி மொழி 
வாலெயிறு ஊறிய நீர் “ 

என்று வள்ளுவனும் பெண்ணோடு ஆண் கலக்கும் இன்பத்தை எடுத்துக் காட்டுகிறான். இந்தக் குறளை விலாவாரியா விளக்கத் தேவை இல்லை என நினைக்கிறோம்.

“ஓரப்பார்வை வீசுவான் உயிரின் கயிறு அவிழுமே!
செவ்விதழ் வருடும்போது தேகத்தங்கம் உருகுமே!

உலகின் ஓசை அடங்கும்போது உயிரின் ஓசை தொடங்குமே!
வான் நிலா நாணுமே! முகிலேடுத்துக் கண் மூடுமே!

குங்குமம் ஏன் சூடினேன்? கோல முத்தத்தில் கலையத்தான் .
கூரைப்பட்டு ஏன் உடுத்தினேன் ? கூடல் பொழுதில் கசங்கத்தான் .

தீபங்கள் அணைப்பதேன் ? புதிய பொருள் நாம் தேடத்தான்."

(நன்றி: வைரமுத்து)

என்றெல்லாம் கவிஞன் தாம்பத்திய சுகத்தின் ஒவ்வொரு அணுக்களையும் அனுபவித்து சொல்வது போல் ஓரினச் சேர்க்கையில் உளமார ஒன்று சொல்ல முடியுமா? மல்லிகை மணக்குமா? மஞ்சம் கசங்குமா? ஊதுவத்தி ஒரு ஓரத்தில் புகையுமா? பாதாம் பால் பரிமாறப்படுமா? முதலிரவுக்கு நாள் நட்சத்திரம் பார்க்கப் படுமா?

காலையில் கதம்பங்கள் அணிந்திருப்பாள்
மாலையில் மல்லிகை முடிந்திருப்பாள்

திங்களில் சாமந்தி வைத்திருப்பாள்
வெள்ளியில் முல்லைகள் சுமந்திருப்பாள்

கட்டித் தங்கம் இனிமேல் அங்கே என்ன பூவை அணிவாளோ
கட்டிக் கொண்ட கணவன் வந்து சொன்ன பூவை அணிவாளோ

– என்று மனமகிழ் கீதங்கள் இசைக்கப்படுமா?

மாறாக, பட்டைச்சாராயம், பிராந்தி, சிகரெட் ,சுருட்டு , பான் பராக், கஞ்சா, அபின் ஆகியவற்றின் குமட்டும் நாற்றம்தானே வரும்? அடப் பாவிகளின் பாத்ரட்சைகளா! உங்களுக்கு நல்ல அறிவே வராதா? நல்லதை தேர்வு செய்யும் இயற்கை குணம் மறத்துப் போய்விட்டதா அல்லது மறந்தே போய்விட்டதா?

இந்த நவீன சட்ட மேதைகளும் சமூக ஆர்வலர்களும் சொல்வது போல ஓரினச் சேர்க்கையை சட்டப்படி அனுமதித்தால் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களின் உடல் நலத்துக்கு அது ஏற்றதா என்ற கேள்வி எழுப்பப்படும்போது மருத்துவ அறிஞர்கள் தலையை பலமாக ஆட்டி மறுப்புத் தெரிவிக்கின்றனர். இளமையில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு தனது வாழ்வில் இழக்கக் கூடாத ஆண்மையை இளம் வயதில் தவறான  நடத்தைகளால் தொலைத்துவிட்டு சேலம் சிவராஜ் சித்தவைத்தியசாலையை நாடி சிட்டுக் குருவி லேகியம் தேடி ஓடுகின்ற எத்தனை பேரைப் பார்க்கிறோம். 

இளமையில் காமத் தணிப்புக்காக மேற்கொள்ளும் இயற்கைக்கு மாறான பழக்க வழக்கங்கள் காரணமாக , திருமணமான பின்பு மனைவியுடன் தாம்பத்திய உறவை நல்ல முறையில் வைத்துக் கொள்ள இயலாத பலரது குடும்ப வாழ்வு கேள்விக்குறியாகி உள்ளது. பல விவாகரத்து வழக்குகளுக்கு இதுவும் ஒரு காரணமாகிவிட்டதை மறுக்க இயலாது. இப்படி இளமையில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட ஆணும பெண்ணும் திருமணமான பின்னர், தங்களுக்கு வரும் கணவன் அல்லது மனைவியோடு தாம்பத்திய சுகத்தை திருப்திகரமாக பகிர்ந்துகொள்ள மனதார இயலவில்லை என்று ஒரு ஆய்வு கூறுகிறது.

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் ஆண் பெண் இருபாலரின் அழகும் அழிந்துவிடுகிறது. உதாரணத்துக்கு டென்னிஸ் உலகில் தலைமை நிலை பெற்று கொடிகட்டிப் பறந்த ஒரு “நவமணி “ டென்னிஸ் ஆடியபோது அரைகுறை உடையுடன் டென்னிஸ் கோட்டில் நின்றாலே ஒரு கூட்டம் கூடிக் கொண்டு இருந்தது. ஆனால் அவர் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து, அவர்கள் சிலகாலம் குடும்பமும் நடத்தினார்களாம். வெட்கம்! வேதனை! பிற்காலத்தில் முதுமை வர முன்பே “நவமணி “ யின் முகமெல்லாம் சுருக்கம் வந்து , வாடி, வற்றி ,ஓட்டி , உலர்ந்து ஒரு ஆணின் முகம்போல மாறிப் போனது அண்மைக் காலத்தில் அனைவரும் கண்ட உதாரணம்.

அனைத்திலும் மேலாக இன்று உலகை ஆட்டிப் படைத்து வரும் எய்ட்ஸ் நோய்க்கான காரணங்களில் ஒன்றாக ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதும் தலையாய காரணமாக பட்டியலிடப்பட்டு அச்சுறுத்தப் படுகிறது. Lion of the Desert என்கிற புகழ் வாய்ந்த ஹாலிவுட் திரைப் படத்தில் நடித்த அன்டணி க்வின் என்கிற நடிகர் இந்த ஓரினச் சேர்க்கையின் காரணமான எய்ட்ஸ் வியாதியால்தான் இறந்தார் என்று சொல்லப் படுகிறது. இதே குற்றச் சாட்டுக்கு மைக்கேல் ஜாக்சன் என்கிற புகழ்வாய்ந்த பாடகரும் இலக்கானார் என்பதும் மறுக்க இயலாத உண்மையே. இவர்கள் எல்லாம் இறந்த பிறகுதான் எய்ட்ஸ் என்பது எவ்வளவு கொடிய நோய் என்பதையும் அதன் காரணங்களையும் உலகம் உணரத் தொடங்கியது.

இவ்வளவு கொடியவினைகளைத்தரும் ஓரினச் சேர்க்கையை அனுமதிப்பது பற்றிய மறு ஆய்வுக்கு மனுச் செய்வதற்கு மத்திய மந்திரி சபை பரிசீலிக்கிறது என்றால் இது சமூகத்தின் அனைத்துத் தரப்பாலும் எதிர்க்கப் படவேண்டியது ஆகும். நாளை மத்திய மந்திரி சபையின் இரண்டு இளம் மந்திரிகள் தங்களின் துறைகள் தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட்டாலும் கூட வெளியில் கிசுகிசுக்கள் பரவிடக் காரணமாகிவிடும். இப்படிப்பட்ட ஈனச் செயலை இத்தாலியில் இருந்து வந்த இந்தியப் பண்பாட்டை ஏற்றுக் கொண்ட மருமகள் ஆதரிக்கலாமா? உயர் நீதிமன்ற , உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு இந்த இயற்கைக்கு விரோதமான செயலின் விபரீதங்கள் புரியாமல் இந்த ஈன முறை அமுலில் இருக்கும் இன்ன பிற நாடுகளை கை காட்டலாமா? இளம் தலைமுறையின் தலைவர் எனப்படும் ராகுல் காந்தி இந்த அணியின் பின்னணியில் நிற்பது நேரு குடும்பத்துக்கு கேவலம். எதிர்காலத்தில் பிரதமராகப் போகிறவர் என்று கூறப்படும் ஒருவரின் அரசியல் வெளிப்பாடு இப்படி ஒரு அநாகரிக அடையாளத்தோடு வெளிப்படுவது நாட்டுக்கு நல்ல அடையாளம் அல்ல. 

வேண்டுமானால் மத்திய அரசு ஒரு வேலை செய்யலாம். சாமியார் வேஷம் கட்டி துறவறம் பூண்டு சட்டத்துக்கும் தர்மத்துக்கும் புறம்பாக பெண் சுகம் தேடி அலைந்து குற்றச் செயல்களில் ஈடுபாடும் நித்யானந்தா, ஆசாராம் பாபு, கண்ணன் சாமியார் , தேவநாதன் ஆகியோருக்கு மட்டும் இந்த சட்டத்தில் இருந்து விதிவிலக்கு அளிக்கலாம். 

இந்தச் செயலின் பல்வேறு மனித இனத்துக்கு எதிரான விளைவுகளைத் தருமென்று தான் எல்லாம் வல்ல ரப்பில் ஆலமீன் ஆன அல்லாஹ் தனது திருமறையில் ஓரினச் சேர்க்கையை நோக்கி கடும் எச்சரிக்கையை விடுத்து இருக்கிறான்.

"லூத்தையும் நம்முடைய தூதராக அவருடைய மக்களுக்கு நாம் அனுப்பி வைத்தோம். அவர் தம் மக்களை நோக்கி உங்களுக்கு முன்னர் எவருமே செய்திராத மானக் கேடானதொரு காரியத்தையா நீங்கள் செய்கிறீர்கள்?"(7:80)

"நிச்சயமாக நீங்கள் பெண்களை விட்டுவிட்டு ஆண்களிடம் உங்களின் காம இச்சைகளைத் தீர்த்துக் கொள்ளச் செல்கின்றீர்கள். என்னே! நீங்கள் வரம்பு மீறிய மக்களாக இருக்கின்றீர்கள் என்று கூறினார்" ( 7: 81 ).

மேலும் அத்தியாயம் பதினொன்று ஹூத் – ல் வசனம் 77- 83 ல் ஒரு நிகழ்வை இறைவன் சுட்டிக் காட்டுகிறான். அதன்படி லூத் நபி (அலை) அவர்களிடம் இரண்டு வானவர்கள் அழகிய சிறுவர்களின் உருவம் கொண்டு விருந்தினராக வருகிறார்கள். அந்த சிறுவர்களைப் பார்த்துவிட்ட லூத் நபியின் சமுதாயத்தார் லூத் நபிஇடம் வந்து அந்த சிறுவர்களை கெட்ட நோக்கத்துடன் தங்களிடம் ஒப்படைக்கும்படிக் கோருகின்றனர். அதை மறுத்த லூத் நபி ( அலை) அவர்கள் வேண்டுமானால் தன்னுடைய இரு பெண்மக்களை இறைவன் வகுத்த வழியில் ஆகுமான வகையில் தங்கள் உடையவர்களாக ஆக்கிக் கொள்ளும்படியும் சிறுவர்களின் உருவில் இருந்த வானவர்களை விட்டுவிடும்படியும் வேண்டினார். ஆனால் வெறி பிடித்த அந்த மனிதர்கள் அதற்கு சம்மதிக்காததால் இறைவன் அவர்களை சுட்ட களிமண் கற்களால் ஆன மழையைத் தொடர்ந்து பொழியும்படி ஏவி அழித்தான் என்று அந்த நிகழ்வு திரு - குர் ஆனில் சுட்டிக் காட்டப்படுகிறது.

இன்று ஓரினச் சேர்க்கையை ஆதரிக்கும் அனைவரையும் இதே மாதிரி கல்லால்தான் அடிக்க வேண்டுமென்று தோன்றுகிறது.

இன்ஷா அல்லாஹ் இன்னொரு தலைப்புடன் சந்திக்கலாம்.

ஆக்கம் : P. முத்துப் பேட்டை பகுருதீன் B.Sc;
உருவாக்கம்: இப்ராஹீம் அன்சாரி

20 Responses So Far:

Shameed said...

இதுலே ஆர்வம் காட்டும் ! மத்திய மந்திரிகளுக்கு சுட்ட கல்லெடுத்து"அதுலே"சுடனும்

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
தெளிவான அலசல்! லூத் நபி(அலை) கால சமூகத்தார்களுக்கு ஏற்பட்ட துன்பமோ அதை விட பெரிதான துன்பத்தையோ வல்ல அல்லாஹ்விடமிருந்து ஆதரிப்பவர்கள் அனைவரும் எதிர்பார்க்கிறார்கள் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

இவர்களின் ஊழல்களை மறைக்கவும் அடிக்கடி ஏதாவது பிரச்சனை அரசியல் வியாதிகளுக்குத் தேவைப்படுகிறது.

விரைவில் எதிர்பாருங்கள். நிர்வாணமாக வாழ நாங்கள் ஆசைப்படுகிறோம் இது எங்களின் சுதந்திரம் என்று இந்திய நீதிமன்றங்களில் மனு கொடுக்கப்போவதை நாம் காணத்தான் போகிறோம்.

ஏனென்றால் மேலை நாடுகளில் நிர்வாணமாக அலைவதற்கு போராட்டம் நடந்து வருகிறது.

Anonymous said...

என்ன கொடும சார் இது!!!

கனியிருப்பக் காய்க் கவர்ந்தற்று என்கிற அடிப்படைகூட அறியாத தெரு நாய் குணம் இவர்களுக்கு. ‘நாற்றம்’ பிடித்த உறவுக்கு சட்டரீதியிலும் சமூகரீதியிலும் அங்கீகாரம் கொடுத்தால்:

- எயிட்ஸ் நோயின் பாதிப்பு கூடும்
- நோஞ்சான் சந்ததி உருவாகும்
- முதிர் கண்ணிகளின் எண்ணிக்கை கூடும்
- தொலைக்காட்சி மருத்துவர்களின் மவுசு கூடும்

இறைவனின் கோட்பாடுகளுக்கு எதிரான இந்த சாக்கடை பழக்கம் படைத்தவனுக்கு எதிராக போர் தொடுப்பதற்குச் சமமாகும்

இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டது போல, தீயப்பழக்கங்கள் உடலை உருக்குழைத்துவிடும். எனக்கு ஒரு ஜோக் நினைவுக்கு வருகிறது:

வழிப்போக்கன் ஒருவன் தெரு வழியாக நடக்கையில் ஒரு மூதாட்டி வாசல் திண்ணையில் அமர்ந்து செய்தித்தாள் வாசித்துக் கொண்டு சுருட்டுப் பிடித்துக் கொண்டு இருக்க, அருகில் மதுபானப் புட்டிகளும் இருந்தனவாம். அனைத்துத் தீயப் பழக்கங்கள் இருந்தும் இத்தனை வயசாகியும் அந்தம்மா இன்னும் ஆரோக்கியமாக இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்ட வழிப்போக்கன் அந்த கிழவியை அனுகிக் கேட்டான்,

“பாட்டி, தண்ணியடிச்சிக்கிட்டு புகை பிடிச்சிக்கிட்டு இருந்து இந்த வயசிலும் நீங்கள் இவ்வளவு தெளிவான கண்பார்வையோடு பேப்பர் படிச்சிக்கிட்டிருக்கியலே அதெப்படி?”
அந்தப் பாட்டி சொன்னதாம்,

“எலே யாரைப்பார்த்து பாட்டி என்கிறாய். எனக்கு இப்பத்தான் 28 வயசாகிறது”

Sabeer Ahmed

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

பொது இடங்களில் ஆண்கள் பக்கம் பெண்கள் பக்கம் என்று இட ஒதுக்கீடு செய்திருப்பது தப்பு தவறு நடக்கக்கூடாது என்று தானே!

இன உணர்வே இல்லாத அறிவிலிகள் சட்டத்திருத்தம் கொண்டு வந்தால் அங்கே வாட்ச்மேன் போட்டு தப்பு தவறு பண்ணுரவங்களுக்கு சர்டிபிகட் கொடுத்து ரூமும் போட்டு கொடுப்பாங்களோ!

sheikdawoodmohamedfarook said...

பொண்டாட்டி மௌத்தா போனா சோந்தைக்கி மச்சினனை கட்டிக்கோண்டு சொல்லுவாங்களோ?

sheikdawoodmohamedfarook said...
This comment has been removed by the author.
sheikdawoodmohamedfarook said...

// ஓரினச்சேர்க்கையே ஆதரிக்கும்.......// அட்டைபிள்ளாலும் குறிவச்சு ''மூஞ்சிடா! மூஞ்சிடா!'' ன்டுஅடிக்கணும்.

sheikdawoodmohamedfarook said...

சின்ன வீடு ஆணாக இருக்கும் பட்சத்தில்அப்பன் மண்டையே போட்ட பின் சொத்தில் பங்கு கேட்டு கேஸ் போட சின்னவீட்டுக்கு பிள்ளைகள் இ ருக்காது .''தொலஞ்சதுடா சனியன்''என்று பெரிய வீடுநிம்மதியா தூங்கலாம்.

sabeer.abushahruk said...

இந்தத் தனிமனித சுதந்திரம் என்னும் காப்ஸெப்ட்டே நம்ம நாட்ல காமெடி காக்காஸ்.

இப்ப 1 தனி மனிதனும் 2வது தனிமனிதனும் (இப்பவே ரெண்டு மனித சுதந்திரம்) ஹோமோன்னு வச்சுக்குவோம்; அப்புறம் 1வது ஒழுக்க சிகாமணி 3வது தனி மனிதனிடமும் 2வ்து ஒழுக்க மாமணி 4வது தனி மனிதனிடமும் வச்சுப்பாங்க. அப்புறம் 5..6... இப்டியே வளர்ந்தால் தனிமனிதன் காணாப்பூடுவானே???!!!

sabeer.abushahruk said...

India is one of the countries who play fun of "concept of freedom of individuality"

It only ends up in loneliness and left out by the society end of the day.

sheikdawoodmohamedfarook said...

''பொண்டாட்டி செத்தா புது மாப்புளே ! ''ஆடி கழிச்சு ஆவணி மாசம் மச்சினனுக்கு பாக்கு வெத்திலே வச்சுடலாம்.சீக்கிரம் சட்டத்தை பாஸ் பன்னுங்கோப்பா !

Ebrahim Ansari said...

அன்பான சகோதரர் அலாவுதீன் அவர்களுக்கு,

வ அலைக்குமுஸ் ஸலாம். தங்களின் அன்பான கருத்துக்கு ஜசக் அல்லாஹ் ஹைரன் .

மேலும் கருத்திட்டன அனைவருக்கும் நன்றி.

வழக்கம் போல் வருகிற பலரைக் காணவில்லையே. பீறிட்டு வரும் தண்ணீரை அடைக்கப் போய்விட்டார்களா? ஒற்றுமையாக செயல்பட்ட ஊரின் நிலையைப் பார்த்து தண்ணீருக்கே சந்தோசம் தாங்காமல் பிரவாகமெடுத்து வருகிறது. மாஷா அல்லாஹ்.

crown said...

அஸ்ஸலாமுஅலைகும்.
இன்று ஓரினச் சேர்க்கையை ஆதரிக்கும் அனைவரையும் இதே மாதிரி கல்லால்தான் அடிக்க வேண்டுமென்று தோன்றுகிறது
------------------------------------------------------------------------------------------------------

crown said...

உவ்வே!!!கொமட்டல் தரும் ,ச்சீ,சீ இந்த விஷ(ம்)யம் கூடவா அரசுக்குத்தெரியல????

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஓர் இனம் ஒன்றாக சேராதான்னு ஒரு சமுதாயம் ஏங்குது... இந்த பொறம்போக்குங்க... ஓர் ஈனச் சேர்க்கைக்கு ஆதரவு கொடுக்குறாய்ங்களே !

//பிரிவு 377 –ன் படி ஓரினச் சேர்க்கை குற்றமாகும். பத்து ஆண்டுகள் வரை தண்டனையைப் பெற்றுத்தந்து களி தின்ன வைக்கும் சட்டம்// இப்போ கோழி திங்க ஆசைப்பட்டுதான் இந்த குரல் எழுப்புறானுங்க...

//அந்நிய நாகரீகம் கலாச்சாரத்தை ஆக்ரமிப்பு செய்வதன் விளைவுதான் பிறந்த நாள் கலாச்சாரம், காதலர் தின க் கொண்டாட்டம் , பாரம்பரிய மற்றும் கலாச்சார உணவுமுறை மாற்றம் ஆகிய அனைத்து அழிவுகளுக்கும் கால்கோள் விழா நடத்தி இருக்கிறது. இப்போது ஓரினச்சேர்க்கை சிந்தனையும் அரசுக்கு வந்திருப்பதன் அவசியம் என்ன?//

இஸ்லாம் ஒன்றை தடுக்கிறது என்றால் அதில் ஈருலகத்திற்கான வெற்றி இருப்பதை இன்னும் உணராதவரை இவர்களுக்கு இப்படி தீர்ப்புகள் சொல்லிக் கொண்டே இருக்கனும் போல.

//என்றெல்லாம் கவிஞன் தாம்பத்திய சுகத்தின் ஒவ்வொரு அணுக்களையும் அனுபவித்து சொல்வது போல் ஓரினச் சேர்க்கையில் உளமார ஒன்று சொல்ல முடியுமா? மல்லிகை மணக்குமா? மஞ்சம் கசங்குமா? ஊதுவத்தி ஒரு ஓரத்தில் புகையுமா? பாதாம் பால் பரிமாறப்படுமா? முதலிரவுக்கு நாள் நட்சத்திரம் பார்க்கப் படுமா?//

மணவறைக்குப் பதிலாக கழிவறைக்குச் செல்ல வசதி தேடுகிறார்கள் அப்போதுதான்... ஆண்கள் கழிவறையிலிருந்து இருவரும் வெளிவந்தால் கல்லடி விழாது என்ற பாதுகாப்போ என்னவோ ?

ச்ச்ச்சீ !

Ebrahim Ansari said...

அன்பான தம்பி கிரவுன்,

வ அலைக்குமுஸ் ஸலாம்.

நெறியாளர் இந்தப் பதிவில் ஏன் இப்படி ஒரு கல்லை இணைத்து இருக்கிறார் என்று தெரியாமல் இருந்தது. இந்தக் கல்லின சைசைப் பார்த்தால் எடுத்து தூக்கி வீசி அடிக்க முடியுமென்று தோன்றவில்லை. அவர்கள் தலையில் தூக்கிப் போடலாம்.

இப்போது குளங்களில் தண்ணீர் வந்து இருப்பதால் இப்படிப் பட்ட ஆட்களைத் தேடிப் பிடித்து தப்பிக்கவிடாமல் துவைத்துத் தப்பலாம்.

உங்கள் மொழியில் சொன்னால் தண்ணீரில் தப்படித்து தப்பிக்க விடாமல் தப்பவேண்டும்.

Ebrahim Ansari said...

ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.

இதுவரை நாங்கள் இட்ட பதிவுகளில் மிகவும் கனத்த இதயத்துடன் விருப்பமின்றியே பதிந்த பதிவு இது. ஆனால் சொல்லியாக வேண்டிய கட்டாயத்துக்கு அரசு இயந்திரங்கள் ஆளாக்கிவிட்டன.

ஊரும் உலகமும் போகிற போக்கு " புறம்போக்கு. "

Ebrahim Ansari said...

//ஓர் இனம் ஒன்றாக சேராதான்னு ஒரு சமுதாயம் ஏங்குது... //!

ஜசாக் அல்லாஹ் .- அடுத்த வாரப் பதிவுக்குத் தலைப்புத் தந்ததற்கு.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அது கையடக்க கல் தான்... !

இதனால் மண்டை உடைந்து இப்படிச் சிந்திக்கும் மூளை கலங்கினாலும் சரியே ! :)

---------------------

ஏன் காக்கா ! நமக்கு கனத்த இதயம் !?

கழிச்சடைகள் தலையில் இருப்பவர்களுக்கு கல்லால் அடித்துதான் அந்த சாக்கடையை உடைக்கனும் !

என்றும் மெல்லிய இழைகொண்ட இதயமே நம்மிடம்...

crown said...

உங்கள் மொழியில் சொன்னால் தண்ணீரில் தப்படித்து தப்பிக்க விடாமல் தப்பவேண்டும்.
---------------------------------------------------------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.தப்பில்லாமல் சரியாக சொல்லியுள்ளீர்கள் காக்கா! இங்கேயும் தப்படித்து (பறை)சொல்லும் கடமை இருப்பதால் கணத்த இதயம் வேண்டாமே!அது உங்கள் போன்றவர்கள் மூலம் தொடர்ந்து சொல்லபட வேண்டும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு