Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 007 0

அதிரைநிருபர் பதிப்பகம் | September 18, 2015 | , , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால் ...

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்.

'நிச்சயமாக உண்மையை பேசுதல், நல்லது செய்வதை ஏற்படுத்தும். நல்லது செய்வது சொர்க்கத்தை பெற்றுத்தரும். நிச்சயமாக! உண்மையை பேசுபவர், இதில் உண்மையாளர் என அல்லாஹ்விடம் பதிவு செய்யப்படுவார். நிச்சயமாக! பொய் பேசுதல், தவறுகள் செய்வதை ஏற்படுத்தும். தவறுகள் நரகைப் பெற்றுத்தரும். நிச்சயமாக ஒருவர் பொய் பேசினால், அல்லாஹ்விடம் பொய்யர் என பதிவு செய்யப்படுவார் என்று நபி(ஸல்) கூறினார்கள்.''  (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்). ரியாளுஸ்ஸாலிஹீன்: 54 )

'உனக்கு சந்தேகம் ஏற்படுத்துவதை விட்டு விடுவீராக! உனக்கு சந்தேகம் ஏற்படாதவை பக்கம் செல்வீராக! நிச்சயமாக உண்மை, அமைதி (அளிக்கும்). பொய் சந்தேக(த்தை வளர்க்கு)ம்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூமுஹம்மத் ஹஸன் இப்னு அலீ(ரலி) அவர்கள். (திர்மிதீ). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 55 )

''இரண்டு வியாபாரிகள், அவர்கள் பிரியும் வரை – (விற்க வாங்க மறுக்கவும்) இஷ்டம் அளிக்கப்பட்டவர்களாவர். அவ்விருவரும் உண்மை பேசி, தெளிவாக பேசிக் கொண்டால் அவ்விருவரின் வியாபாரத்தில் 'பரக்கத்' அளிக்கப்படும். அவ்விருவரும் மறைத்து, பொய் பேசினால், அவ்விருவரின் வியாபாரத்தில் 'பரக்கத்' நீக்கப்படும் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: (அபூகாலித் என்ற)ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்). ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 59 )

'இறைவா! உன்னிடம் நேர்வழியை, இறையச்சத்தை, பத்தினித்தனத்தை மற்றும் செல்வத்தையும் கேட்கின்றேன்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னுமஸ்ஊத்(ரலி) அவர்கள்  (முஸ்லிம்).( ரியாளுஸ்ஸாலிஹீன்: 71)

'ஒருமுறை! நபி(ஸல்) அவர்கள் எங்களிடம், நீங்கள் நடுநிலையாக இருங்கள். நீங்கள் உறுதியாக இருங்கள். உங்களில் ஒருவர் தன் செயலால் தப்பித்துவிட முடியாது என அறிந்து கொள்ளுங்கள்' என்று கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்களும்(தப்பிக்க) முடியாதா?' என்று நபித்தோழர்கள் கேட்டனர். ''அல்லாஹ் தன் அருளால். கருணையால் என்னை அரவணைத்துக் கொண்டாலே தவிர நானும் (தப்பிக்க) முடியாது'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி)  அவர்கள் (முஸ்லிம்).      ரியாளுஸ்ஸாலிஹீன்: 86)

நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால்தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன. (அல்குர்ஆன்: 13:28)

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு நல்வாழ்வும், அழகிய தங்குமிடமும் உண்டு. (அல்குர்ஆன்: 13:29)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் - நபி(ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

அலாவுதீன் S.

0 Responses So Far:

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு