Wednesday, April 02, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஆளும் வளரனும் அறிவும் வளரனும் !!! 1

அதிரைநிருபர் பதிப்பகம் | May 24, 2016 | ,


ஆள் வளந்த அளவுக்கு இன்னும் அறிவு வளரவில்லை என்று இந்த சொல்லை நாம் நமது ஊர்களில் வசிப்பிடங்களில் பெரியோர்கள் பிறருக்கு புத்திமதி சொல்லும்போது காதில் கேட்டிருப்போம். அதாவது சாதாரணமாக சிலகாரியங்களை செய்யும்போது யோசிக்காமல் தவறுதலாக செய்து விடுவது அல்லது ஒரு செயலின் பின்விளைவுகளை நினைத்துப் பார்க்காமல் செய்துவிட்டு பிறகு வருத்தப்படுவது இதுபோன்ற அறிவைப் பயன்படுத்தாமல் செய்யும் தவறுகளை செய்பவர்களிடத்தில் தான் பெரும்பாலும் இந்த வார்த்தையை உபயோகிப்பார்கள். 

இவ்வுலக வாழ்க்கைக்கு பலவிதத்திலும் அறிவை வளர்த்துக் கொள்வது மிகமிக அவசியமாக இருக்கிறது. அறிவை வளர்த்துக் கொள்வதால் எந்த ஒரு வேலையைச் செய்தாலும் அல்லது ஒரு திட்டத்தை நடைமுறை படுத்தவேண்டுமென்றாலும் அறிவு அவசியப்படுகிறது அறிவோடு யோசித்து செய்யும் காரியங்கள் யாவும் திறம்பட உறுதியாகவும் நிலையானதாகவும் இருக்கும்.

இதற்க்கு உதாரணமாக சொல்லப் போனால் சில இளைஞர்கள் படிப்பில் முதல் மாணவனாக திகழ்ந்து பெரிய படிப்பெல்லாம் படித்து பட்டம் பெற்றவர்களாக இருப்பார்கள். ஆனால் படிக்காத ஒருவர் அவருக்கு அறிவுரை வழங்குவார். இப்படி நடக்கணும் இப்படிச் செய்யணும் என்ன தம்பி நீங்க பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்கீங்க ஆளும் நல்லா வாட்ட சாட்டமா வளர்ந்திருக்கீங்க. ஆனால் ஆளு வளர்ந்த அளவுக்கு அறிவு வளரலையே தம்பி என்று சொல்வார்கள். இந்த இடத்தில் அறிவுதான் முதலிடம் பெறுகிறது. 

அது மட்டுமல்ல சில பிரச்சனைகளும் சில காரியங்களும் அறிவைச் சார்ந்து யோசித்துதான் சுமூகத் தீர்வு காணப்படுகிறது. நாம் நமது வாழ்விலும் அறிவோடு செயல்படாத எத்தனையோ பல விஷயங்களில் தோல்வியை சந்தித்து அனுபவப்பட்டு  இருப்போம். பிறகு உணர்ந்து அறிவோடு செயல்பட்டு வெற்றி கண்டிருப்போம்.

எந்த ஒரு காரியமும் அறிவோடு சிந்தித்து செய்வதால் அதில் பாதிப்போ தோல்வியோ பின்விளைவுகளோ ஏற்பட பெரும்பாலும் வாய்ப்பில்லை.அறிவோடு சேர்ந்து செயல்படும்போது எது நல்லது எது கேட்டது என்று தீர்க்கமாக தெரியமுடிகிறது. பிறகு நல்லமுடிவை நாம் தேர்ந்தெடுத்து பிரச்சனையில்லாமல் மகிழ்வுடன் வாழ வழிவகுக்கிறது.

அறிவோடு சிந்தித்து செயல்படும்போது எல்லாகாரியங்களுக்கும் சுமூகதீர்வு கிடைப்பதுடன்  நமது வாழ்க்கையை முன்னேற்றப் பாதையின்பக்கம் கொண்டு செல்ல பயனுள்ள ஒரு ஆயுதமாக பெரிதும் உதவியாக இருக்கிறது.  
இப்படி பலவகையிலும் அறிவை பயன்படுத்தித் தான் இவ்வுலக வாழ்க்கையை வாழவேண்டி உள்ளது. எனவே ஒவ்வொரு விஷயங்களையும் அறிந்து கொள்ள அதில் தனது திறமையை வெளிப்படுத்த அறிவை தெளிவு படுத்திக் கொள்ளவேண்டும். அப்படி அறிவு தெளிவாகாமல் நாம் இருந்தோமேயானால் நாம் எவ்வளவு நல்லவராக இருந்தாலும் ஆள் வளர்ந்த அளவுக்கு அறிவு இல்லாதவனென்றும் மூளை வளர்ச்சி இல்லாதவனென்றும் சமூகமக்கள் மூளைக்கு மூளை பேசிக் கொண்டிருப்பார்கள்.

அதிரை மெய்சா

1 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

//'ஆள் வளர்ந்த அளவுக்கு மூளைவளர்ச்சி இல்லையே' என்று மூலைக்குமூலைபேசிக்கொண்டிருப்பார்கள்//இப்போதைய இளையை தலைமுறைகளில்பலர் ஏதோ ஒருஇயக்கத்தில் இணைந்து இருப்பதால் ''நமக்குவழிகாட்ட தலைவருக்குதான் மூளை இருக்கிறதே?! பின்நாம் ஏன்அதை வீணே நாம் தலையில் சுமக்கவேண்டும் ?'என்றுசும்மாஇருந்து விட்டார்கள்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.