Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சூரத்துல் ஃபாத்திஹாவை மனனம் செய்து பொருளுணர்ந்து ஓதுகிறோமா? [காணொளி] 0

அதிரைநிருபர் | July 19, 2016 | , , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

"அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்! 

உலக மாந்தர்க்கெல்லாம் முன்மாதிரி நம் அருமை இறைத்தூதர் அண்ணல் நபி(ஸல்) என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்தில்லை, ஏன் பிற மதத்தவர்கள் பலருக்கும் தெரியும் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மட்டும் தான் இந்த மனித இனத்திற்கு முன்மாதிரிகளில் முதன்மையானவர் என்று. ஆனால், முன் மாதிரி, என்று வெறும் பேச்சளவில் மட்டுமே நாம் சொல்லுகிறோமே தவிர அவர்கள் நமக்காக அல்லாஹ்விடமிருந்து கொண்டு வந்த வஹியான திருக்குர்ஆனின் கட்டளைகள், அல்லாஹ்வின் கட்டளைப்படி மார்க்கமாக்கப்பட்ட முஹம்மது (ஸல்) அவர்களின் சொல் செயல் அங்கீகாரம் இவைகளை நம் வாழ்வில் கடைப்பிடித்து இறை மார்க்கமான “இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா?” என்ற வினாவோடு இந்த பதிவு தொடர்கிறது.

சூரத்துல் ஃபாத்திஹாவை பொருள் மனனம் செய்து உணர்ந்து ஓதுகிறோமா?

திருக்குர்ஆனில்  முக்கிய அத்தியாயம் ‘சூரத்துல் ஃபாத்திஹா‘ எனப்படும் அத்தியாயமாகும். ஏராளமான சிறப்புகளைக் கொண்ட அந்த அத்தியாயத்தை அறியாத – மனனம் செய்யாத முஸ்லிம்கள் யாரும் உலகில் இருக்க முடியாது. ஆனாலும் அதன் மகத்துவத்தை அவர்கள் பெரும்பாலும் அறிவதில்லை. இதன் சிறப்பு குறித்து வந்துள்ள நபிமொழிகளை தமிழறியும் முஸ்லிம்கள் அறிந்து கொள்ள வேண்டும், இதன் சிறப்புகளை பிறருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

நம்மில் எத்தனை பேர் சூரத்துல் ஃபாத்திஹாவை பொருள் உணர்ந்து ஓதியிருக்கிறோம்? 

சூரத்துல் ஃபாத்திஹாவின் முழுமையான அர்த்தத்தை மனனம் செய்திருக்கிறோமா? 

நாம் ஒவ்வொரு தொழுகையின் ரக்காத்துகளில் ஓதும் சூரத்துல் ஃபாத்திஹா சூராவை அழகிய உச்சரிப்புடனும் பிழையின்றியும் ஒதுகிறோமா? இதோ இந்த காணொளியை பாருங்கள்.


காணொளியை கேட்ட உச்சரிப்புகளுடனும் பிழையின்றியும் நாம் ஓதும் சூரத்துல் ஃபாத்திஹா உள்ளதா? என்பதை  நாம் சிந்திக்க வேண்டும். இதன் அர்த்தத்தை முழுமையாக மனனம் செய்து, அதன் பொருள் உணர்ந்து இவ்வுலகை விட்டு மரணிக்கும் வரை அதனை மறக்காமல் இருக்க வல்லமை நிறைந்தன அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக.

யா அல்லாஹ்! எங்கள் அனைவரையும், சத்திய சஹாபாக்கள் எவ்வாறு குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் வாழ்ந்தார்களோ அதுபோல் எங்கள் அனைவரையும் வாழ அருள் புரிவாயாக.
M.தாஜுதீன்

-- மீள் பதிவு

0 Responses So Far:

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு