Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரையில் ஷவ்வால் நோன்பு - புறக்கனிக்கப்படுகிறதா ? 2

அதிரைநிருபர் பதிப்பகம் | July 17, 2016 | ,

யார் ரமலானில் நோன்பு நோற்று பிறகு அதைத் தொடர்ந்து ஷவ்வால் நோன்பு நோற்கின்றாரோ அவர் (ஆண்டு) காலம் முழுவதும் நோன்பு நோற்றவரைப் போலாவர். (அறிவிப்பவர்: அபூ அய்யூப் அல் அன்சாரி (ரலி) நூல்: முஸ்லிம்)

ஒரு மாத நோன்பு பத்து மாத நோன்புக்குச் சமமானது, அதன் பின்னர் ஆறு நோன்பு இரண்டு மாதங்களுக்குச் சமமானது என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸஃப்வான்(ரலி) நூல்: தாரிமி: 1690)

இந்த ஹதீஸில் ரமளானில் நோன்பு நோற்று, பிறகு அதைத் தொடர்ந்து ஷவ்வாலில் நோன்பு நோற்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து என்ற வார்த்தையிலிருந்து பெருநாளைக்குப் பிறகுள்ள ஆறு நாட்கள் தொடர்ந்து பிடிக்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். இது தவறான வாதமாகும். ஏனெனில் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று ஷவ்வாலிலும் ஆறு நாட்கள் நோன்பைத் தொடர வேண்டும் என்ற கருத்தில்தான் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளதே தவிர, ஆறு நாட்கள் தொடர்ச்சியாகப் பிடிக்க வேண்டும் என்று கூறப்படவில்லை. தொடர்வது என்பதற்கு அத்பஅஹு என்ற அரபுச் சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது. தொடர்ச்சி என்பதற்கு முததாபிஐன் என்ற சொல் பயன்படுத்தப் பட வேண்டும். உதாரணமாக திருக்குர்ஆனில், மனைவியைத் தாய்க்கு ஒப்பிட்டு விடுபவர் அதற்குப் பகரமாக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிக் கூறப்படுகின்றது.

சமீபத்தில், அதிரையில் நிகழ்ந்த திருமணங்களில் சவ்வால் பிறை பிறந்த முதல் ஆறு நாட்களுக்குள் மட்டும் 19 லிருந்து 23க்கு மேற்பட்ட திருமணங்கள் நடந்திருப்பதை நாம் அறிவோம் இவைகள் இன்று அதில் கலந்து கொண்ட / கல்ந்து கொள்ளாதவர்களின் விமர்சனத்திற்கும் ஆளாகியிருப்பதை அறிய முடிகிறது !

நோக்கம், சாடுவதல்ல... ஏன் இப்படி என்ற வினா எழுப்பிக் கேட்டு கொள்ளவும்... இன்னும் அதிரையில் பெருமை பட்டு கொள்ளும் அளவுக்கு இளம் ஹாபிழ்கள், ஆலிம்களின் எண்ணிக்கை அதிகமிருந்தும், இதுநாள்வரை கடைபிடித்து வந்த ஆறுநோன்பு என்றொரு சுன்னத்தான நோன்பின் மான்பை நாமே புறக்கனித்து விட்டோமோ என்ற ஐயமே எழுகிறது !

ஏனிந்த அவசரம், ? 

வற்புறுத்தி அழைக்கப்பட திருமண நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்களின் அனுபவம், விருந்தோம்பலுக்கும், திருமண வரவேற்புக்கும் அழைத்து விட்டு டீயோ / ஜூஸோ கொடுக்கும் முன்னர் நீங்க நோன்பா என்று விபரம் தெரிந்தவர்கள் கேட்கும்போதே அவர்களின் சங்கடங்களும் அறிய முடிந்ததை தெரிவித்தனர்.

ஞாயிறு அல்லது பள்ளி விடுமுறை நாட்கள் அல்லது அரசு விடுமுறை நாட்கள் என்று முன்னுரிமை அளிக்கும் அளவுக்கு கூட இந்த ஆறு நோன்பின் சிறப்பும் மான்பும் அறிந்த மார்க்க அறிஞர்கள் தங்களின் இல்லத் திருமணங்களையும் நடாத்தி இருப்பது விமர்சனத்திற்குள்ளானது.

மார்க்கம் அறிந்த இவர்களே இவற்றில் பிடிப்பு இன்றி இருக்கும்போது பிறரிடம் எப்படி எடுத்துரைத்து ஷவ்வால் நோன்பின் சிறப்பினை சொல்லி சிறப்பிக்க முடியும் ?

நமதூர் பராம்பரியமிக்க சங்கமும் முஹல்லாவில் திருமணங்கள் நிச்சயிக்கப்படும்போது சங்கத்தின் பங்கு முக்கியமானதாக இருப்பதை உணர்ந்து இருப்பவர்கள்தான், மறுப்பதற்கில்லை இனிவரும் காலங்களிலாவது சுதாகரித்துக் கொள்ள வேண்டும்.

இன்னும், திருமண செலவுகளையும் அல்லது கால நேரத்தையும் ஒருங்கிணைத்து ஒவ்வொரு திருமணத்துக்கும் ஒரு வக்து என்று ஒதுக்கி கொடுப்பதற்கு பதிலாக அன்றைய நாள் நடக்க இருக்கும் திருமணங்களை ஒரே குத்பாவில் நடத்தி சிறப்பிக்கலாம்.

சங்கம் சமுதாயத்தின் அங்கமாக இருப்பதை மறந்திருப்பதும் / மறைக்கபட்டிப்பதும் வருத்தத்திற்குரிய விஷயமே !

அதிரைநிருபர் பதிப்பகம்

2 Responses So Far:

aa said...

சுன்னத்தான நோன்பிற்காக, மற்றுமொரு சுன்னத்தான வலிமாவை தவிர்க்கச் சொல்வது சரியாகப் படவில்லை.

இவ்வாறு சுன்னத்தான நோன்புகளுக்காக நீங்கள் விருந்துகளை தவிர்க்கச் சொன்னால் ஒவ்வொருமாதமும் பிறை 13,14 & 15; ஒவ்வொரு வாரமும் திங்கள் & வியாழன் மற்றும் ஷஃபான் மாதத்தின் பெரும்பான்மை பகுதி என்று பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.

மேலும் வெளியூர், வெளிநாடுகளிலிருந்து பெருநாள் விடுமுறையில் வருவர்கள் இன்னும் 6 நாட்கள் கூடுதல் விடுமுறை எடுப்பது என்பது அவ்வளவு எளிதல்ல.

உணவருந்த விருந்திற்காக அழைக்கப்பட்ட ஒருவர் ’நான் நோன்பு’ என்று சொன்னபோது, ”உங்கள் சகோதரர் உங்களை விருந்திற்கு அழைத்திருக்கிறார் மேலும் உங்களுக்காக சிரமப்பட்டு உணவு சமைத்திருக்கிறார். நோன்பை முறித்துவிட்டு மற்றுமொரு நாள் விரும்பினால் நோற்றுக்கொள்ளுங்கள்’ என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறிய செய்தி பைஹகியில் ஹசன் தரத்தில் செய்யப்பட்டுள்ளதை நினைவில் கொள்வோம்.

வெறுமனே இபாதத்களில் மட்டும் கவனம் செலுத்தாமல், சரியான மார்க்க கல்வியை பயில்பவர்களில் உள்ளவராக அல்லாஹ் நம்மை ஆக்குவானாக.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும் அபுஹாஜர்,

இந்த பதிவு நபி ஸல் அவர்கள் நோன்பிற்கு பின் முக்கியத்துவம் கொடுத்த ஓர் இபாதத்தை வலியுறுத்தும் பதிவே தவிர, ஷவ்வால் மாதத்தில் திருமண ஏற்பாடு செய்ய வேண்டாம் என்பதற்கல்ல.

பதிவை முழுமையாக வாசிக்கவும்..

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு