Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

யூசுபும் மொம்மாலியாக்காவும் 6

அதிரைநிருபர் பதிப்பகம் | July 31, 2016 | , ,

“மொம்மாலியாக்கா! என்னாது இன்னக்கி நாக்காலியெத் தூக்கிட்டுவந்து சப்புலே நிக்கிறிய?” 

‘இந்த யூசுபுப் பயல் பாத்துட்டானா?’ என்று நினைத்தவர், “மொழங்கால் வலி, இடுப்பு வலி எல்லாம் சேந்துக்கிட்டு, ஆளே நிண்டு தொலுவ விடமாட்டேங்குதுடா” என்று மெதுவாக பதில் கொடுத்த மொம்மாலியாக்கா, ச்சேரில் அமர்ந்து, ‘அல்லாஹு அக்பர்’ என்று தக்பீர் கட்டினார்.

தொழுகை முடிந்து இருவரும் பள்ளியை விட்டு வெளியில் வந்தனர். 

“இன்னிக்கி ‘நூவன்னா’ ஊட்டுக் கல்யாணமாமே?” யூசுபுதான் மவுனத்தைக் கலைத்தான்.

“ஆமாப்பா. எனக்கிந்தான் பத்திரிக்கெ வந்திச்சு.  கல்யாணம் முடிஞ்ச சீர்க்கு சாப்பாடாம்.  போறதா இல்லையாண்டு யோசிச்சுக்கிட்டு ஈக்கிறேன்” என்றார் மொம்மாலியாக்கா. யூசுபு காரணம் புரியாமல் அவரைப் பார்த்தான்.

“அதாம்பா, அந்த பிரியாணி.  அதெல்லாம் நமக்கு ஒத்துக்காது.  விருந்துக்குப் போனாலும், ‘வெஜிட்டேரியன்’ உண்டானு கேட்டுட்டுத்தான் போகணும்” விளக்கினார் மொம்மாலியாக்கா.

“ஆமா.  கொலஸ்ட்ரால்!  பிரியாணி சாப்டாதியோ.  ஆனா, அதிலே ‘நல்ல கொலஸ்ட்ராலும்’ உண்டுன்னு சொல்லுவாங்க” யூசுபு ‘எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்’ கொடுத்தான்.

“அதென்னப்பா ‘நல்ல கொலஸ்ட்ரால்’?”  ஆர்வத்தோடு கேட்டார் மொம்மாலியாக்கா.

“அதா?  அதெக் கண்டுபிடிக்கிறத்துக்குள்ளே பாதி உஸுர் போய்டும்” என்றான் யூசுபு.

“அப்ப விடு அதை” என்று முற்றுப்புள்ளி வைத்தார் மொம்மாலியாக்கா.  அத்தோடு யூசுபின் வீடு வந்தவுடன், இருவரும் பிரிந்து விட்டனர்.

***  

கல்யாண வீடு களைகட்டி நின்றது.  இடம் போதாமையால், அடுத்த 2 வீடுகள், எதிர்த்த வீடு எல்லாம் நிரம்பி வழிந்தது.  வேகவேகமாக ஒரு வீட்டுக்குள் நுழைந்தார் மொம்மாலியாக்கா.  சஹனுக்கு நாலுபேர் என்று அமர்ந்து எல்லாரும் சஹன் கூடிவிட்டார்கள்.  அதோ ஒரு மூலையில் 3 பேர்! அவசரமாகப் போய் உட்கார்ந்து கொண்டார் மொம்மாலியாக்கா;  அந்த 3 பேர் யார் யார் என்று பார்க்கவில்லை.  

எதிர்த்தாப்லே இருந்து ஒரு வேகமான கனைப்புக் கேட்டது.  ஏறிட்டுப் பார்த்தார்.  யூசுபு!  ‘நம்மலெக் கலாய்க்க இங்கேயும் வந்துட்டானா பயல்?’ என்று நினைத்தவர், தலையைக் கவிழ்ந்து கொண்டார்.  ‘இன்னக்கி ‘சுபு’ தொலுதுட்டு வரும்போதுதானே இவனிடம் மொழங்கால் வலி இடுப்பு வலி, கீலே உக்கார முடியலேண்டு சொன்னோம்!  பிரியாணி, கொலஸ்ட்ரால், வெஜிட்டேரியன் பத்தியெல்லாம் பேசிக்கிட்டு வந்தோம்?  இந்த ஹராமி நம்ம சஹன்லேயே இரிக்கிறானே!” என்று நினைத்தவர், மவுனம் காத்தார். 

ஒருவாறு விருந்து முடிந்தது.  மொம்மாலியாக்கா யூசுபைத் தவிர்த்து விட்டுத் தனியாகப் போக நினைத்தார்.

மறுபடியும் அந்தக் கனைப்பு பின்னால் கேட்டது!  ‘பாவிப் பயல் யூசுபோ?’ என்று நினைத்துத் திரும்பிப் பார்த்தார். சாட்சாத் அவனேதான்!

“என்னாது.....?  எப்டி இருந்திச்சு பிரியாணி?”  கிண்டலாகக் கேட்டான் யூசுபு.

“உம்” மட்டும்தான் பதில் மொம்மாலியாக்காவிடமிருந்து.

“பிரியானிலே, சோத்தைவிடக் கறிதான் கூடுதல்!”  கிண்டினான் யூசுபு. 

“நேத்து சொன்னிய, உங்களுக்கு இனிப்பு நீர் ஈக்கிதுண்டு? பிர்னிச் சட்டியெ வளிச்சு வளிச்சு சாப்டீங்க?  இன்னக்கி, உக்கார முடியலேண்டு சொன்னிய? வேஜிட்டேரியன்லாம் எங்கே போச்சு?” யூசுபு நக்கலாகக் கேட்டான்.

அட சும்மா இருடா.  ஒரு ஆசைக்கி இன்னக்கி மட்டும்” என்று மட்டும் சொல்லி விட்டு, தன் வீட்டை நோக்கி வளைந்து சென்றார் மொம்மாலியாக்கா! 

அதிரை அஹ்மத்

6 Responses So Far:

Muhammad abubacker ( LMS ) said...

அப்போ இனிமேல் ஐந்து வஃத்துக்கும் பள்ளிவாசல்களில் சகன் சாப்பாடு போட்டுட வேண்டியதுதான்

Muhammad abubacker ( LMS ) said...
This comment has been removed by the author.
sabeer.abushahruk said...

ஆஹா...

ஊருக்கு ஒரு ஓஸி ட்ரிப் வாய்த்ததுபோல் வட்டார வழக்கைக் கேட்கும்போது தேன் வந்து பாயுது காதினிலே...

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

சாச்சா,அவன் யூசுபு இல்ல ஈசுபு...நம்ம ஈசுபு...

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

நல்ல வேளெ...இடுப்பு கடுப்புக்கு நெஞ்செலும்பு நல்லதுண்டு சொன்னாங்கெ அதான் களரி சாப்பாட்டுக்கு வந்தேண்டு சொல்லாமெ இருந்தாரே நம்ம மொம்மாலியாக்கா....

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு