அலைகடல் அரிமா குஞ்ஞாலி மரைக்காயர்... 34

அதிரைநிருபர் பதிப்பகம் | November 23, 2013 | , ,

தொடர் – 7

பொதுவான வார்த்தை பிரயோகங்களில் ஒரு நண்பர் கூட  இன்னொருவர் எதிர்பாராமல் வந்தால், "என்னப்பா குஞ்ஞாலி மரைக்காரும் கூடக் கூடவா?" என்று கேலி தொனிக்க கேட்பது வழக்கம். இந்த குஞ்ஞாலி மரைக்காயர் என்பவர் யார் என்று நாம் தெரிந்து கொண்டால் இப்படி ஒரு கேலியான வார்த்தைப் பிரயோகத்துக்கு இந்தப் பெயரை பயன்படுத்த மாட்டோம். அந்த அளவு வீரமிக்க ஒரு வரலாற்றின் வேந்தர் அவர். ‘அலைகடல் அரிமா’  என்று சரித்திரங்களின் பக்கங்கள் சான்று பகரும் ஒரு பெயராகும் அது. இன்றும் கூட கேரளத்தின் பல மாவட்டங்களில் பிறக்கும் குழந்தைகளுக்குப் பெருமையுடன் சூட்டப்படும் பெயர் அது. குஞ்ஞாலி மரைக்காயர் என்கிற பெயர் சூட்டப்பட்ட  ஆண்மக்கள் நெஞ்சை நிமிர்த்தி நடக்க வைக்கும் மந்திரப் பெயர் அது. ஆனாலும் துரதிஷ்டவசமாக , இந்திய வரலாற்றில் பூனைகளை புலி  என்று கூறி சித்தரித்து உயர்த்துபவர்கள் உண்மையான இந்த ஆண் சிங்கத்தை அவ்வளவாகக்  கண்டு கொள்ளவில்லை. வாருங்கள் தோழர்களே இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முதல் வீரன் ஒரு முஸ்லிம் என்கிற பெருமையுடன் இந்த  உண்மையான மாவீரன் மற்றும் அவரது வம்சங்களின் வரலாற்றை நாம் கண்டு வரலாம். 

ஆரம்பமாக, இந்த வரலாற்று நாயகனின் பெயரில் ஒட்டிக்  கொண்டு இருக்கும் மரைக்காயர் என்கிற பெயர் பற்றி நாம் விளக்கம் பெற வேண்டிய கடமை இருக்கிறது. காரணம், நாம் பிறந்த மண்ணின் வாசம் இந்தப் பெயரின் பிற்பகுதியில் ஒளி  வீசுகிறது. இதைப் பற்றிய விளக்கம் ஓரளவுக்கு உலகறிந்ததே. கடல் வணிகத்தில் கொடிகட்டிப் பறந்த முஸ்லிம்களின் ஒரு பிரிவினருக்கான அடையாளப்  பெயர் இது. மரத்தைக் கொண்டு கப்பல்கள் செய்து அதை உலகெங்கும் ஓட்டிச்சென்று திரைகடலோடி திரவியம் தேடிய ஒரு உழைப்பாளர் கூட்டத்துக்கான பெயரே மரைக்காயர் என்பதாகும். இந்தப் பெயருடைய வர்த்தகப் பிரிவினர் இந்தியாவின் தென் பகுதி கடற்கரை ஓரங்களிலும் இலங்கையின் அனைத்துப் பாகங்களிலும் விரவி வாழ்ந்து வருகின்றனர்.  இதே கடல் வணிகம் செய்து வந்த ஒரு சிறப்பான கேரளக் குடும்பத்தில் பிறந்த தனால்தான் முஹம்மத் குஞ்ஞாலி என்கிற பெயரோடு மரைக்காயர் என்கிற பெயரும் ஒட்டிக்  கொண்டது. அத்துடன் அன்றைய அரசனால் கடற்படைத்தளபதியாக நியமிக்கப் படும்போது வழங்கப் பட்ட பெயர் அது.  

குஞ்ஞாலி மரைக்காயர் அவர்களுடைய வரலாற்றை அறியும் முன்பு நமது கவனத்தை சற்று வரலாற்றின் இரத்தக் கரை படிந்த பக்கங்களை நோக்கி சற்று திருப்ப வேண்டி உள்ளது. வாஸ்கோடகாமா  என்கிற போர்த்துகீசிய வஞ்சகன்,  நடுக்கடலில் வைத்து ஹாஜிகளை குடும்பத்தோடு கொலை செய்து அவர்கள் வந்த கப்பலைக் கொள்ளையடித்த சம்பவம் தான் அது. இதை ஏற்கனவே ஒரு அத்தியாயத்தில் விவரித்து இருக்கிறோம். குஞ்ஞாலி மரைக்காயருடைய சரித்திரம் வாஸ்கோடகாமா என்கிற இந்த வஞ்சகனோடும் அவனுடைய போர்ச்சுகீசிய கொள்ளைக்காரக் கூட்டத்துடனும்  தொடர்புடையது. 

வாஸ்கோடகாமா  கி பி 1498 மே மாதம்  17- ஆம் நாள் இரத்தக் கரை படிந்த கரங்களுடன்  கள்ளிக் கோட்டை என்கிற கோழிக்கோட்டின் கடற்கரையில் வந்து கால்பதித்தான். இந்திய மண்ணில் பதிக்கப் பட்ட முதல் அந்நியனின் காலடித்தடம் அவனுடையது. அந்த நேரம் இந்தியாவில் விஜய நகர சாம்ராஜ்யம் வலுப்பெற்று இருந்தது. விஜய நகரப் பெரிசு வாஸ்கொடகாமாவின் வெள்ளைத் தோல் கண்டு மயங்கி    கொச்சி மற்றும் கண்ணனூர் ஆகிய அரசுகளுடன் சேர்ந்து வாஸ்கோடகாமாவுக்கு வரவேற்பு  வளைவுகள் வைத்து வாசனைத்திரவியங்களுக்கு நல்ல விலைதர வந்த  வணிகன் என்று அவனை அங்கீகரித்து தங்களது வணிக வாசல்களை அவனுக்காக திறந்து வைத்தன. ஆனால் அந்தக் காலக் கட்டத்தில் கள்ளிக் கோட்டை என்கிற கோழிக் கோட்டை ஆண்டு வந்த மன்னரின் பெயர் சாமுத்திரிமான  விக்ரமன் என்பதாகும். இவர்   மட்டுமே ஒற்றை ஆளாக  போர்த்துகீசியரை எதிர்த்து வந்தார். அவர்களை தந்து ஆளுமைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை.   

இந்த சாமுத்திரி  மன்னருக்கு உற்ற  துணையாக அதாவது பின்னாளில் கட்டபொம்மனுக்கு வலதுகரமாகத் திகழ்ந்த வெள்ளையத்தேவன் போல் துணை நின்றவர்தான் இந்த அத்தியாயத்தின் நாயகர்  குஞ்ஞாலி மரைக்காயர். இந்த சாமுத்திரி மன்னுடைய மருமகன் அந்தோணி என்பவனும் கோழிக் கோட்டில் வாசனைத்திரவியங்களை வெளிநாட்டினருக்கு விற்று வந்த வணிகர்களும் வாஸ்கோடாகாமாவின் பொன் பொருளைக் கண்டவுடன் , அவன் வந்த வழி மறந்து விட்டு கண்மூடிப் போகிறவர் போல் போனார்கள்.   சரித்திரம் இப்படிக் குறிப்பிடுகிறது. 

The Portuguese dominated trade in the Malabar after Vasco da Gama set foot in Kozhikode. The Samoodiri of Kozhikode (Premji) opposed the Portuguese. But the foreigners were supported by the local merchants and the Samoodiri's wicked nephew (P. J. Antony). Mohammed (Kottarakkara), a brave warrior and merchant supported the Samoodiri in his fight against the Portuguese. The Samoodiri honoured Mohammed by making him his naval chief and renaming him ‘Kunjali Marakkar'.

கோழிக்கோடு ராஜ்ஜியத்தின் சாமுத்திரி மன்னனின் கடற்படை தலைவர்களுக்கு வழங்கப் பட்ட பெயர் குஞ்ஞாலி மரைக்காயர்  ஆகும். குட்டி முகமது அலி – இவரே முதலாம் குஞ்ஞாலி மரைக்காயர்      ( 1520- 1531) இரண்டாம் குஞ்ஞாலி மரைக்காயர்  ( 1531- 1571) பட்டு குஞ்ஞாலி மரைக்காயர் – மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயர்  ( 1571-1595) முகமது அலி – நான்காம் குஞ்ஞாலி மரைக்காயர் (1595- 1600) ஆகிய மாவீரகளைப் பற்றிய சுருக்கமான ஆனால் இறுக்கமான அறிமுக வரலாற்று நிகழ்வுகளையும் அவர்களின் இந்தியா மண்ணில் அன்னியருக்கெதிரான ஆரம்பகாலப் போராட்டத்தையும் கண்டும் காணாதோர் காணவே இந்தப் பதிவு.  

சாமுத்திரி மன்னனின் கடற்படைத் தளபதியாக முதலாம் குஞ்ஞாலி மரைக்காயர் பதவி ஏற்றுக் கொண்டபோது இப்படி முழங்கினார். "அந்நியரை நமது மண்ணில்  காலூன்ற அனுமதிக்க முடியாது. அதற்காக தரையிலும் கடலிலும் மனித இரத்தம் சிந்தப் பட வேண்டுமென்றாலும் பெருக்கெடுத்து ஓடினாலும் நாம் அதற்குத் தயார்" என்று அந்நியருக்கெதிராக முதன்முதலில் சூளுரைத்தவர் குஞ்ஞாலி மரைக்காயர்.

சொன்னது மட்டுமின்றி செயலிலும் காட்டும் முகமாக அந்நியருக்கெதிரான போரில் கடற்படைக்குத் தலைமை தாங்கினார்.  இக்காலகட்டத்தில்,  கடற்படையைக் குறித்து எவ்வித போர் தொடர்பான அறிவோ திட்டங்களோ சாமுத்திரி மன்னர்  உட்பட பெரும்பாலான இந்திய அரசர்களுக்கு இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

வாஸ்கோட காமா, வலது காலை எடுத்து வைத்து நுழைந்தது முதல் சாமுத்திரி மண்ணுக்கும்    போர்த்துகீசியருக்கும் தொடர்ந்து போர்கள்  நடை பெற்றன. அத்துடன் சனியனுடன் ஒரு “பாரச்சனியன்”   சேர்ந்து கொண்டது. அந்த பாரச்சனியனின் பெயர் அல்புகர்க்கின்  என்பதாகும். இவனே போர்த்துகீசிய கடற்படையின் தளபதியாவான். கிரிக்கெட் விளையாட்டில் ஒபனிங்க்  பேட்ஸ்மேன்கள் முதல் ஓவரில் சிக்சர் அடிப்பதைப் போல் இந்த அல்புகர்க்கின்,   தனது முதல் கொடூரச் செயலாக கோழிக் கோட்டில் இருந்த ஒரு முஸ்லிம்களின் இறை இல்லத்தை இடித்துத் தரைமட்டமாக்கினான். இந்தக்  கொடூரச்செயலைக் கண்டு கொதித்தெழுந்த பொது மக்களை ஈவு இரக்கமின்றி துப்பாக்கியால் சுட்டுப் பொசுக்கினர். இப்படி அந்நியருக்கு எதிராகத் திரண்டு, அவர்களால் வரிசையாக வாங்கப் பட்ட முதல் உயிர்ப் பலிகள்   முஸ்லிம்களுடையது என்பதை குறித்துவைத்துக் கொள்ளுங்கள்.

இந்தக்  கொடுமையான நிலையில்தான் இதை தட்டிக் கேட்க குஞ்ஞாலி மரைக்காயர் உடைய அணி களத்தில் இறங்கியது. கொரில்லாத் தாக்குதல் என்கிற மறைந்திருந்து தாக்குதல் எனும் முறையைப் பயன் படுத்தி அல்புகர்க்கின் என்கிற அரக்கனின் படையை கோழிக்கோட்டின் பகுதிகளில் இருந்து கோவாவுக்கு விரட்டி அடித்தது. குஞ்ஞாலி மரைக்காயரின்  வீரமிக்க இந்த வியூகத்தால் ஐநூறு போர்ச்சுகீசிய வீரர்கள் கொன்று சாய்க்கப் பட்டனர். அல்புகர்க்கின் தனது காலில் குண்டு பாய்ந்து செயல் பட இயலாத சேர்மன் ஆனான். 

குஞ்ஞாலி மரைக்காயாரின் கொரில்லாப் படையால் கோவாவுக்கு விரட்டப் பட்ட போர்ச்சுகீசியர்கள் மரைக்காயருக்கு ஆதரவாக இருந்து ஆக்கமமும் ஊக்கமும்  தந்துகொண்டிருந்த மன்னர் மானவ விக்கிரம சாமுத்ரியைக் கொல்லத் திட்டம் போட்டனர். அதற்காக அவர்களுக்கும் ஒரு எட்டப்பன் கிடைத்தான். அவன் ஒரு நம்பூதிரி பிராமணன். உலக வரலாறுகளின் பக்கங்களில் அரண்மனைகளில் நடந்த சதிகளுக்குப் பஞ்சமில்லை. அப்படி ஒரு சதியில் சாமுத்ரி மன்னன்    அடுத்துக் கெடுத்த நம்பூதிரிப் பிராமணனால் உணவில் விஷம் வைக்கப் பட்டுக் கொல்லப்பட்டார்.  

மன்னரின் மரணத்துக்குப் பிறகு அரசாள  வந்த அடுத்த சாமுத்திரி மன்னனுக்கு போர்த்துகீசியரை எதிர்த்து நிற்க “ தில் “ இல்லை. தான் குடிக்கும் சோமபானத்துக்கும் சுறா பானத்துக்கும் ஆபத்து வந்துவிடக் கூடாதே என்ற கவலையே அரசனுக்கு.   இதனால் போர்ச்சுகீசியருடன் 1513 – ல் ஒரு ஒப்பந்தத்தைப் போட்டு சமாதானமாகிவிட்டான். இதனால் குஞ்ஞாலி மரைக்காயர் அரசின் ஆதவின்றி தனித்து விடப்பட்டார். ஆனால் அவருடைய நெஞ்சில் போர்ச்சுகீசியருக்கு எதிரான நெருப்பு அணையாமல் எரிந்து கொண்டே இருந்தது.  

இப்படி அணையாத அந்த சுதந்திரத் தீ தந்த உத்வேகத்தில்   1523 ஆம் ஆண்டு 200க்கும் மேற்பட்ட கப்பல்களை  போர்ச்சுக்கீசியரை எதிர்க்க தயார் செய்தார்.  போர்ச்சுக்கீசியர்கள் கள்ளிக்கோட்டையில் கிட்டங்கிகளை நிறுவினார்கள். தேவாலயங்களை நிறுவினார்கள். மூன்றாம் முறையாக இந்திய மண்ணில் அடி எடுத்து வைத்த வாஸ்கோடகாமா அவர்களை பாதுகாக்கவும் குஞ்ஞாலி மரைக்காயரை அடக்கிவைக்கவும்  டிசோசா என்ற இன்னொரு பாரச்சநியனை படைத்தளபதியாக  நியமித்தான். 

அவனுக்கு தக்க பதிலடி கொடுக்க எண்ணி குஞ்ஞாலி மரைக்காயர், குட்டி அலியின் தலைமையில் படையை நியமித்தார். குட்டி அலியின் படைக்கும் டிசோசாவின் படைக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டது. இருபுறமும் ஏராளமான தலைகள் உருண்டன. குட்டி அலியின் படையை தாக்குபிடிக்கமுடியாமல் போர்ச்சுக்கீசியர் கவர்னர் மெனிசிஸ் பெரிய கப்பற்படையை குஞ்ஞாலியின் கப்பற்படை முகாமான பொன்னானி துறைமுகத்தை தாக்க 1525 ஆம் ஆண்டு 26ந்தேதி நாள் குறிக்கப்பட்டு பொன்னானி துறைமுகத்தை தாக்குதல் நடத்தினார்கள். இதற்கு பதிலடி கொடுக்க குஞ்ஞாலியின் படை கள்ளிக்கோட்டையில் இருந்த போர்த்துகீசியரின் பொருட்கள் குவித்து வைக்கப்பட்ட கிட்டங்கி மீது தாக்குதல் நடத்தினார்கள். தங்களின் மதிப்புமிக்க விற்பனைப்  பொருள்களின் கிட்டங்கி அழிவை சந்தித்துக் கொண்டு இருப்பதைக்  கண்ட போர்ச்சுக்கீசிய தளபதி மெசினிஸ் மேலும் படைத்தளபதிகளை அனுப்பி, இன்னும்  ஏழு மாதங்கள் கடுமையாக போராடி இறுதியில் 1525 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் நாள் குஞ்ஞாலி  படையை தோற்கடித்தனர். அன்னியருக்கெதிரான குஞ்ஞாலி மரைக்காயரின் படை  முதல் தோல்வியைக் கண்டது. 


கோழிக் கோட்டுக்கு அருகில் அமைக்கப்பட்டு இருக்கும் குஞ்ஞாலி மரைக்காயர் பயன்படுத்திய போர் கருவிகளின் அருங்காட்சியகம்.
தோல்வியடைந்த குஞ்ஞாலி மரைக்காயர் கேரளத்தின் ஏதோ பாக்குத் தோப்புக்குள் தலைமறைவானார். ஆனால் அவரின் நெஞ்சில் மூண்ட சுதந்திரக் கனல் தலைமறைவாகவில்லை. எனவே, மீண்டும் மூன்று ஆண்டுகள் கழித்து படைகளைத் திரட்டி, 1528 ஆம் ஆண்டு பர்கூர் என்ற இடத்தில் வந்த போர்ச்சுக்கீசிய கப்பல்களை அழித்தார். எதிர்த்து வந்த போர்ச்சுகீசியர்களையும் கண்ட துண்டமாக வெட்டினார்.   இதில் பல போர்ச்சுக்கீசிய மாலுமிகள், படைவீரர்கள் அனைவரும் சமாதி ஆனார்கள். அன்றொருநாள் நடுக்கடலில் வைத்து வெட்டப் பட்டு துடிதுடித்து செத்த ஹாஜிகளின் சாவுக்கு இவ்விதம் பழி வாங்கப் பட்டது. இவ்வெற்றிதான் மரைக்காயரின் மாபெரும் வெற்றி என்று சரித்திர ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இந்தப் பழிவாங்கும் கொலை விழா வெற்றி அடைந்த பின்னர் இந்த எதிரிகள் ஆக்கிரமித்துள்ள இதர இடங்களையும் தன்னுடைய கடல் தொடர்பான அறிவால் கண்டு அறிந்து, இவர்களின் வாசம் இலங்கையில் வீசுகிறது என்கிற செய்தி அறிந்து தனது கடற்படையை இலங்கையை நோக்கி செலுத்தினார் ‘அலைகடல் அரிமா’ வான குஞ்ஞாலி மரைக்காயர். 

1537 ஆம் ஆண்டு எஞ்சியுள்ள கப்பல் படைகளுடன் இலங்கையை நோக்கிச் சென்று போர்ச்சுக்கீசியர்களை கண்ட இடத்தில் கொன்று குவித்தார். இலங்கையில் வாங்கிய உதையில் தப்பித்த பலர் தூத்துக்குடியை நோக்கி ஓடினர் . அப்படிப் போகும்போது குஞ்ஞாலி மரைக்காயர்  மீது இருந்த கோபத்தில் தூத்துக் குடியில் முத்துக் குளித்துக் கொண்டு இருந்த 800 க்கும் மேற்பட்ட எண்ணிக்கை உடைய முஸ்லிம்களை  28.1.1538 அன்று தங்களது கட்டாரிகளுக்கு இரையாக்கி இனப் படுகொலை  செய்தனர். இதனை அறிந்த குஞ்ஞாலி மரைக்காயர் தூத்துக்குடி சென்று போர்ச்சுகீசியரை தேடித்தேடி கொன்று குவித்தார்.  (Studies in Missionary History – S. Manickam.).  

துரோகிகளை வெட்டிச் சாய்த்த திருப்தியில் ஓய்வு எடுப்பதற்காக இலங்கையில் உள்ள வேதாளையில் தங்கினார். ஒற்றர்கள் மூலம் இதை அறிந்த பரங்கித் தலையர்கள்  1538 ஆம் ஆண்டு ஜனவரி 30-ந்தேதி, டிசோசா தலைமையில் குஞ்ஞாலியின் படையை திடீரென்று தாக்கினார்கள்.  இதை சற்றும் எதிர்பார்க்காத மரைக்காயர் படை பெரும் பின்னடைவை சந்தித்தது. இறுதியில் மீண்டும் மரைக்காயர் தலைமறைவானார். தலைமறைவான இந்த சிங்கம் உறங்கி ஒய்வு எடுக்கவில்லை. அதன்பின் கொழும்பு சென்று அங்கு போரைத் துவக்கினார். இறைவனின் நாட்டம் வேறுவிதமாக இருந்தது. பரங்கியரின் குண்டு ஒன்று குஞ்ஞாலி மரைக்காயரின் வீர நெஞ்சில் தனக்கும்  ஒரு இடம் வேண்டுமென்று தேடிச் சென்று சேர்ந்தது. கடலின் மூலம் வந்த அந்நியனை விரட்ட கடற்படை அமைத்து தீரமாகப் போராடிய மாவீரர்,  தனது இறுதி மூச்சை இறைவனின் பெயரை சொல்லியவண்ணம் உலக வாழ்வை நீத்தார். 

இந்திய நாட்டின் மீது அந்நியரின் ஆதிக்கத்தை எதிர்த்து போராடிய முதல் போராளியே குஞ்ஞாலி மரைக்காயர். அவரே அந்நிய சக்திகளிடமிருந்து நமது மண்ணைக் காக்க நடந்த வீர இயக்கத்தின் முன்னோடியும் முதல் நபரும் ஆன முஸ்லிம் ஆவார். வேறு எவராக இருந்தாலும் எல்லோரும் இவருக்குப் பின்னால்தான் இந்த சுதந்திர உணர்வைத் தூண்டியவர்கள் ஆவர். இந்தியக் கடல் எல்லையில் ஏறத்தாழ   35 ஆண்டுகள் அந்நியரான  போர்ச்சுக்கீசியரின் கண்களில் தனது வீர விரலை விட்டு ஆட்டிய  முதலாம் குஞ்ஞாலி மரைக்காயரின் வீர சகாப்தம் முடிவுக்கு வந்தது. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன். 

முதலாம் குஞ்ஞாலி மரைக்காயர் புதைக்கப் பட்டார் இனி நிம்மதி என்று என்று போர்ச்சுக்கீசியர் நினைத்தனர். ஆனால் அவர் புதைக்கப் படவில்லை ; மாறாக, அவர் விதைக்கப் பட்ட விபரம் இரண்டாம், மூன்றாம், நான்காம் குஞ்ஞாலி மரைக்காயர்கள் விஸ்வரூபம் எடுத்தபோதுதான் அவர்களுக்கு விளங்கியது. 

அவைகளைப் பற்றி இன்ஷா அல்லாஹ் காணலாம்.

இப்ராஹீம் அன்சாரி

34 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மிகப் பொறுமையாக வாசித்தேன்… மிகச் சிறந்த ஒரு போராளியை உருவாக்க இந்த மாதிரியான மாவீரர்களின் பதிவை அவசியம் புகட்டப்பட வேண்டும் !

அருமை… எழுத்து மட்டுமல்ல எடுத்தாண்ட கோர்வையும் சொல் வளமும் !

பரங்கியரின் குண்டு ஒன்று வீரத் திருமகனின் நெஞ்சில் ஓர் இடத்தை ஆக்கிரமத்ததை சொன்ன விதம் அற்புதம் !

ஜஸாக்கல்லாஹ் ஹைரன் காக்கா..

Unknown said...

மகாத்மா காந்தி என்றும் நேரு என்றும், வல்லபாய் படேல் என்றும் வாய் கிழிய பேசும் இந்த இந்திய போலி வரலாறுகள் உண்மை வரலாற்று போர் சிங்கங்களை ஏன் கண்கொண்டு கொள்ளவில்லை?. காரணம் இவர்கள் முஸ்லிம்கள்.

இந்திய சுதந்திரத்திற்கு முன் வாழ்ந்து வீரத்தை இம்மண்ணிலே விதைத்த
இந்த மாவீரர் குஞ்சாலி மரைக்காயர் போல் ஒரு சிலர் இருந்திருந்தாலே, கடல் மார்க்க அறிவும், போர்த்தந்திரமும் கொண்ட இவர்களின் அறிவும் செயல்பாடும், 200 ஆண்டுகள் வெள்ளையர்கள் இந்தியர்களை அடிமைகளாக்கி ஆட்சி செய்து வந்த அவலம் நிகழ்ந்து இருக்காது.

இப்பேர்ப்பட்ட பெருமைக்குரிய வீரத்திருமகன்களை பெற்ற சமுதாயம் நம் இஸ்லாமிய சமுதாயம் என்பது, இந்த சாவர்க்கர் போன்ற அந்நியனுக்கு காட்டிக்கொடுத்தவர்களை ஆதரிக்கும் இந்த புல்லுருவிகளுக்கு எங்கே தெரியப்போகின்றது ? இஸ்லாமியர்களை எதிர்க்கின்றோம் என்ற பெயரில் நம் முன்னோர்களின் உண்மை வீரத்தையும் மறைக்கப்பார்க்கும் இந்த (பார்ப்பன )அறிவீனர்கள் இந்திய ஜனநாயகத்தின் போலி முகங்களே.

நெஞ்சில் வீரத்தோடு துப்பாக்கிக்குண்டுக்கு இடம் கொடுத்த குஞ்சாலி மரைக்காயரின் அடுத்த வாரிசுகளின் வீர தீர செயல்களை எதிர் பார்த்து.

அபு ஆசிப்.

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

காக்கா,
இந்த அற்புதமானத் தொடர் யாவரும் எழுதும் வழக்கமான ஒன்றாக இல்லாமல் பல வகையிலும் வித்தியாசமானதாகவும் வரலாற்றின் மர்ம முடிச்சுகளை அவிழ்க்க உதவும் குறிப்பேடாகவும் வளர்ந்து வருகிறது.

இதில் மறைக்கப்பட்ட வரலாற்றின் ஏடுகளில் வெளிச்சம் பாய்ச்சப் படுகிறது; காட்டிக் கொடுத்தவர்களின் முகத்திரை கிழிக்கப் படுகிறது; சுதந்திரத்திற்காக போராடியவர்களின் தியாகம் வெளிக்கொணரப் படுகிறது; அந்தப் போலி வரலாற்றுப் பதிவர்களின் தில்லுமுல்லுவும் தகிடுதத்தமும் வெளி உலகுக்கு அறியத் தரப்படுகிறது.

முஸ்லிம் போராளிகளின் உண்மையான வாழ்க்கையையும் போராட்டங்களின் தன்மைகளையும் தெள்ளத் தெளிவாகப் புள்ளி விவரங்களோடு சொல்லிவரும் உங்கள் எழுத்திலும் போராட்டக் குணம் தெறிக்கிறது.

தொடருட்டும் தங்களின் இந்தப் போற்றுதற்குரியப் பணி.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, கா

شركة حراسات الجزيرة الأمنية said...

மரைக்காயர் என்பது " மறக்கலராயர் " என்ற சொல்லில் இருந்து மருவி வந்தது என்று சொல்ல கேள்வி பட்டு இருக்கின்றேன். அரசனுக்கு மரக்கலம் ஒட்டி பிழைப்பு நடத்தி வந்தவர்கள் என்றும் சொல்ல கேள்வி பட்டு இருக்கின்றேன்.

கடல் வணிகத்தில் கொடி கட்டி பரந்தவர்களின் ஒரு பிரிவினருக்கு இந்த பெயர் கொண்டு அழைக்கப்பட்டது என்ற தங்களின் விவரம் இன்னும் ஒரு படி மேலேயே விளக்கமாக இருக்கின்றது. வணிகம் செய்தவர்களை அரசனுக்கு களம் ஒட்டி பிழைப்பு நடத்தியவர்கள் என்று தவறாக சித்தரித்து இருக்கின்றனர்.

எது எப்படியோ தங்களின் ஒவ்வரு ஆக்கத்திலும் ஒவ்வொரு புது விஷயங்கள் தங்கச்சுரங்கத்தில் அல்ல அல்ல தங்கம் வருவதுபோல் வந்து எங்கள் மூளைக்குள் இடம் பிடித்தவண்ணம் இருக்கின்றன.

தங்களின் இந்த வரலாற்று ஆராய்ச்சி உண்மையிலேயே என்னை வியக்க வைக்கின்றது. தாங்களெல்லாம் நாங்கள் படிக்கும் கால கட்டங்களில் ஒரு வரலாற்று ஆசிரியராகவோ, அல்லது, பொருளாதார ஆசிரியராகவோ வந்திருந்தாள் , ஒவ்வொரு பாடத்திலும் 90/100 ம் அதற்க்கு மேலும் எடுத்து எங்கள் அறிவை பலப்படுத்தி இருந்திருப்போம்,

உங்களை புகழ்வதற்காக சொல்லவில்லை. உங்களைபோன்றவர்களை கல்வித்துறையை சார்ந்தவர்கள் பயன்படுத்திக்கொள்ளாதது ஒரு துரதிஷ்டமே.

அபு ஆசிப்.

sabeer.abushahruk said...

சுதந்திரத்திற்காகப் பாடுபட்டத் தியாகச் செம்மல் குஞ்ஜாலி மரைக்காயர் அவர்களுக்கு போர்த்துக்கீசியனைப் போட்டுத்தள்ளுவது அவ்வளவு ஒன்றும் சவாலானதாக இருந்திருக்காது நம் உள்ளூர் நம்பூதிரி பட்டிகள் காட்டிக்கொடுத்தும் கூ…க்கொடுத்தும் வெள்ளையனுக்குச் சேவகம் செய்யாமல் இருந்திருந்தால். சுயநலம் மட்டுமே ரத்தத்தில் ஊறிப்போயிருந்த அக்கால நம்பூதிரி பிராமணன்களைச் சமாளிக்கவே பெரும்பகுதி நேரத்தையும் வீரத்தையும் செலவிட வேண்டி யிருக்குமே!

என்ன ஒரு வேதனை, வெட்கக் கேடு என்றால், அவ்வாறு காட்டிக்கொடுக்கும் நம்பூதிரிகளை நம் போராட்டக் காரர்களாலும் கொல்ல முடிவதில்லை. காரணம், வசமாக மாட்டிக்கொண்டோம் என்பது தெரிந்தவுடனே பட்டென்று காலில் விழுந்துவிடும் உயரிய(1) குணம் கொண்டவர்களாக அல்லவா திகழ்ந்தார்கள்.

(இக்பால் சொன்னானே என்று “உருமி” மலையாளப்படம் பார்த்தேன். அதில் அப்படியொரு நம்பூதிரி வேடத்தில் நடித்திருக்கும் மலையாள நடிகர்(ஜெகதி?) உடல்மொழியாலேயே அந்தப் பாத்திரம் எவ்வளவு கேவலமானது என்பதை உணர்த்துகிறார்)

வீரமும் தீரமும் கூடிய ச்சரித்திரங்ஙலா நம்மட குஞ்ஜாலி மரக்கார்ன்ட ஜீவிதம். காரியங்ஙலொக்கே கேட்டப்பலா நம்மட ச்சோறு கொதிக்கின்னது. நம்பூதிரி பாடுன்னு பறையர ஆ கள்ளப் பட்டிகல்ட கள்ளத்தனன் ஒக்கே காணிச்சித்தரனும் என்ட வல்லியேட்டா.

شركة حراسات الجزيرة الأمنية said...

//முதலாம் குஞ்சாலி மரைக்காயர் புதைக்கப் பட்டார் இனி நிம்மதி என்று என்று போர்ச்சுக்கீசியர் நினைத்தனர். ஆனால் அவர் புதைக்கப் படவில்லை ; மாறாக, அவர் விதைக்கப் பட்ட விபரம் //
வீரத்திருமகன் குஞ்சாலி மரைக்காயர் நெஞ்சில் குண்டு ஏந்தி வீரமரணம் எய்திய ஒரு சோக நிகழ்வை சொல்ல வரும்போது,

அது ஒரு மரண நிகழ்வல்ல, அது பல குஞ்சாலி மறைக்காயர்களை உருவாக்க விதைக்கப்பட்ட விதை என்ற தங்களின் சொல் வீச்சு மிக அருமை.

அபு ஆசிப்.

Yasir said...

கடற்ப்படை கப்பல்களுக்கு பல கச்சடா பெயரை வைக்கும் மத்திய அரசு,இந்தியாவின் முதல் கடற்ப்படையை அமைத்த குஞ்சாலி மரைக்காயரின் பெயரை ஒரு நேவி கப்பலுக்காவது சூட்டி பெருமைப்படுத்த வேண்டும் செய்யுமா இந்த இஸ்லாமிய விரோத அரசுகள்

அல்லாஹ் இந்தத்தியாகியை பொருந்திக்கொள்வானாக ஆமீன்..

உண்மையை உரக்கச்சொல்லும் இந்தொடர் எல்லா மக்களுக்கும் சென்றட்டைய வேண்டும்

KALAM SHAICK ABDUL KADER said...

உருமி என்னும் மலையாளப் படத்தில் கண்ட காட்சிகளில் கூட எனக்குக் கண்ணீர் வரவில்லை காக்கா, ஆனால், தங்களின் வீரம் கொழிக்கும் வார்த்தைக் கோத்த இந்த ஆக்கம் படிக்கப் படிக்க என் உடலின் மயிர்க்கால்களிலிருந்து ஓர் உணர்ச்சி எழும்பிக் குத்திட்டு நினறன; க்ண்கள் தானாகவே குளாமாகி வழிந்தன; இப்படிப்பட்ட ஒரு வீர தீரரை முஸ்லிம் என்பதால் மட்டுமே விடுதலை வீரரரகவே வர்ணிக்க இயலாமற் ஆரியக் கூட்டம் இருட்டடிப்புச் செய்து விட்டது. தங்களின் அரிய பெரிய ஆய்வினால் எங்கட்குப் புதையலாகவே இந்த வரலாற்றுப் பெட்டகம் கிட்டியுள்ளது.

شركة حراسات الجزيرة الأمنية said...

//இந்தியாவின் முதல் கடற்ப்படையை அமைத்த குஞ்சாலி மரைக்காயரின் பெயரை ஒரு நேவி கப்பலுக்காவது சூட்டி பெருமைப்படுத்த வேண்டும் செய்யுமா இந்த இஸ்லாமிய விரோத அரசுகள்//
எப்படி செய்வார்கள் ? இவர்களுக்கு முஸ்லிம்கள் இந்தியாவின் விடுதலைக்காக நெஞ்சு நிமிர்த்தி போர் செய்ததெல்லாம் பெரிதாக தெரியாதே !

இதே ஒரு பாப்பனன் சுதந்திரத்திற்காக ஒரு புல்லை தூக்கி வேறு இடத்தில் வைத்தாலே அது பெரிய தியாகம் என்று பறை சாற்றும் பறங்கிகள், ஆட்சி , அதிகார பீடத்தில் இருக்கும் வரை தாங்கள் நினைக்கும் நியாயமான நேர்மையான கோரிக்கை இவர்கள் காதுகளை சென்றடையாது.

இது விஷயத்தில் இவர்கள் செவி செவிடு.
நம் இந்த நியாயமான கோரிக்கை செவிடன் காதில் ஊதிய சங்கு.

அபு ஆசிப்.


sabeer.abushahruk said...

//பரங்கியரின் குண்டு ஒன்று வீரத் திருமகனின் நெஞ்சில் ஓர் இடத்தை ஆக்கிரமத்ததை சொன்ன விதம் அற்புதம் !//

Ditto

Ebrahim Ansari said...

அன்பான சோதரர்களே!

இந்தத் தொடரை எழுதும்போதும் அதற்கான குறிப்புகளைப் படிக்கும் போதும் நானும் மிகவும் உணர்ச்சி வசப பட்டேன். ஆனாலும் வார்த்தைகளை வரையறைக்குள் வரும்படி பார்த்துக் கொண்டு கண்ணியம் காத்து எழுதினேன். நம்பூதிரியின் பாகத்தை தம்பி சபீர் அவர்கள் வி வரித்து இருக்கிறார்கள். அவர்களின் இரத்த நாளங்களில் ஓடிக கொண்டிருக்கும் இயல்பு அது. பிறவிக் குணம். அதைப் பற்றி விலாவாரியாக எழுதினால் நாறிவிடும்.

தம்பி இக்பால் அவர்கள் சொன்ன உருமி யை நான் இன்னும் பார்க்கவில்லை. பார்க்க வேண்டும்.

Ebrahim Ansari said...

மருமகனார் யாசிர் அவர்களின் அன்பான கருத்து

//கடற்ப்படை கப்பல்களுக்கு பல கச்சடா பெயரை வைக்கும் மத்திய அரசு,இந்தியாவின் முதல் கடற்ப்படையை அமைத்த குஞ்சாலி மரைக்காயரின் பெயரை ஒரு நேவி கப்பலுக்காவது சூட்டி பெருமைப்படுத்த வேண்டும் செய்யுமா இந்த இஸ்லாமிய விரோத அரசுகள்//

மூன்று ரூபாய்க்கு தபால்தலை வெளியிட்டதே பெரிய விஷயம். அது கூட கேரளா மக்களின் கோரிக்கையால். தமிழ்நாடோ அல்லது உ பி யாகவோ இருந்திருந்தால் இந்த மரியாதை கூட கிடைத்து இருக்காது.

ஆனாலும் அருமையான கோரிக்கை. இங்குள்ள இயக்கங்கள் தங்களின் கோரிக்கைகளில் ஒன்றாக வைக்கலாம். பாராளுமன்றத்தில் இருக்கும் முஸ்லிம் உறுப்பினர்கள் இதற்காக பேசலாம். பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் ரகுமான் அவர்களை சந்திக்க நேர்ந்தால் இது பற்றி சொல்லலாம். நானும் முயல்வேன். இன்ஷா அல்லாஹ்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மிகச் சிறந்த ஒரு போராளியை உருவாக்க இந்த மாதிரியான மாவீரர்களின் பதிவை அவசியம் புகட்டப்பட வேண்டும்!

இவ்வளவு காலம் ஆட்சியில் அங்கமும் ஆதரவும் அளித்தவர்கள் (பிறைகொடி கட்சி உட்பட) இஸ்லாமியர்களின் தியாகத்தை மறக்கடிக்க நம்மையும் அவ்வாறே அறியப்படாமல் நீங்கள் சொல்லி தெரியும் அளவுக்கு ஏன் ஒத்துழைத்தார்களோ!

ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா.

ZAKIR HUSSAIN said...

To Brother Ebrahim Ansari

இந்த முறை நீங்கள் எழுதிய விதம் எனக்கு என்னவோ அந்த காலத்துக்கே அழைத்துச்சென்ற மாதிரி இருந்தது. இன்னும் சொல்கிறேன் இந்த வலைத்தளங்களுக்குள் உங்கள் எழுத்து அடங்கி விடக்கூடாது. இவ்வளவு உண்மைகளை எடுத்துச்சொல்லும் ஆட்கள் குறைவு. அது இந்த இந்தியாவுக்கு தெரியவேண்டும்.


எப்படி தெரிவிக்க முடியும் என்பதை அன்பான வாசகர்களின் கருத்தாடலுக்கு விட்டு விடுகிறேன்.


Ebrahim Ansari said...

தம்பி ஜாகிர்!

வரும் பாராளுமன்றத் தேர்தலில் தஞ்சைத் தொகுதியில் நான் சுயேச்சையாக நின்றால் ஓட்டுக் கிடைக்குமா?
ஜாமீன் தொகையே கிடைக்காது.

ஊதுகிற சங்கை ஊதுவோம். விடியும்போது விடியட்டும்.

Anonymous said...

//இந்திய மண்ணில் அந்நியரின் ஆதிக்கத்தை எதிர்த்து சிந்திய முதல் ரத்தம் முஸ்லிம்களின் ரத்தம்// முஸ்லிம்களின் ரத்தமும் சிவப்புத்தான்! ஆனால் இந்திய சரித்திர ஆரியர்களுக்கு இந்த ரத்தம் சிவப்பாக தெரிவதில்லை! கண்ணை மாற்ற வேண்டுமா? கண்ணாடியே மாற்ற வேண்டுமா? இரண்டுமில்லை! அவர்களுக்கு colour-blind வியாதி!

S.முஹம்மது பாரூக். அதிராம்பட்டினம்

Anonymous said...

// குஞ்சாலி மரைக்காயர் புதைக்கப்பட்டார்//

அது புதைத்தால் முளைக்கும் முத்திய நெத்து!.

புதைக்கப்- புதைக்க முளைக்கும்!

S. முஹம்மது பாரூக்,அதிராம்பட்டினம்.

sabeer.abushahruk said...

ஜாகிர் / ஈனா ஆனா காக்கா அவர்கள் கவனத்திற்கு:

இந்தப் பதிவை ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாசகர்கள் இதுவரை வாசித்துள்ளார்கள். இன்னும் 45 விழுக்காடு வழமையான வாசகர்களின் வருகை மெல்ல மெல்ல நடந்தேறுவது வழமை.

அப்படி வாசித்த அனைவரும் தத்தம் மெயில் குழுமம், வளைதளம், முகநூல்பக்கம் என்று கொண்டு சென்றாலே ஒரு பெரும் கூட்டத்தை இந்தப் பதிவு சென்றடைந்துவிடும். காப்பி ரைட் இல்லாததால் நமக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லிவிட்டு தாராளமாக இதைப் பரப்பிக் கொள்ளலாம்.

இதுதான் தற்காலிக லோ பட்ஜட் யுக்தி. மேற்கொண்டு ஆலோசனைகளையும் வழங்கலாம்.

அதிரை நிருபர் அமீர் கவனத்திற்கு: இது அபு இபு தரவேண்டிய பதில்; நான் தந்திருப்பதால் இதற்கான அவர் சம்பளத்தை எனக்கு அனுப்பிவிடவும்)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//இது அபு இபு தரவேண்டிய பதில்; நான் தந்திருப்பதால் இதற்கான அவர் சம்பளத்தை எனக்கு அனுப்பிவிடவும்)//

காக்கா, தாங்களே தெளிவாக சொல்லிட்டீங்களே ! ஏற்கனவே சொன்னதுதான்.... இந்த தொடர் நூல் வடிவம் பெறவேண்டுமென்ற பேரவா அதனால் (வலைப்)பூ(வில்)நூலையும் சுற்றிவர இன்னும் கொஞ்சம் பொருத்திருக்க வேண்டும் !

சட்டென்று வர இயலவில்லை, துல்லியமாக வேவு பார்க்கும் ஐபி கேமராவைக் கொண்டு ஒரு தீவிர ஆராய்சியில் இருக்கிறேன்... எதிர்பார்த்ததை எட்டிக் கொண்டிருக்கிறேன்... (அதிரயரின் அயராத உழைப்பு'ன்னு தலைப்பிட்டு ஏதும் போட்டுடாதீய)...

முகநூலையும் அதிரைநிருபர் பதிப்பகமே... வெளியிடலாம்னு அதன் ஆசிரியர் சொல்லிட்டார் (என்ன ஒரே கொழப்பமா இருக்கா ?)

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சபீர் காக்கா சொன்னபடி அன்னியரை எதிர்த்து சிந்திய முதல் இரத்தம்
இந்த சுட்டியில்
www.facebook.com/photo.php?fbid=354922251319316&set=a.134810456663831.39256.100004046320187&type=1

Anonymous said...

//இந்த வலை தளங்களுக்குள் உங்கள் எழுத்து.........//

மருமகனே ஜாஹிர்! இதுவே என் நீண்டநாளைய எண்ணமும் கூட!.

இந்த எழுத்துகளை புத்தக வடிவாக்கி ஆதாய நோக்கம் இன்றி மலிவான விலைக்கு விற்க்கலாம். இந்தப்பணி செய்ய அற்பணிப்பு உணர்வு கொண்ட முஸ்லிம் தனவந்தர்களை அதிரைநிருபர் தளம் அணுகிப் பார்க்கலாம்... ஊதுற சங்கை ஊதிவோமே!

கேட்க்காத காதுகள் ஆயிரம் இருந்தால் கேட்கின்ற காது ஒன்று இல்லாமலா போகும்?!
.
S. முஹம்மது பாரூக் அதிராம்பட்டினம்

KALAM SHAICK ABDUL KADER said...

//அப்படி வாசித்த அனைவரும் தத்தம் மெயில் குழுமம், வளைதளம், முகநூல்பக்கம் என்று கொண்டு சென்றாலே ஒரு பெரும் கூட்டத்தை இந்தப் பதிவு சென்றடைந்துவிடும். காப்பி ரைட் இல்லாததால் நமக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லிவிட்டு தாராளமாக இதைப் பரப்பிக் கொள்ளலாம்.\\

முகநூலில் பரப்பும் பணியைத் தமியேன் இன்று செய்து விட்டேன். முத்துப்பேட்டைக் கவிஞர் மு.யாகூப் அலி என்னும் என் நண்பர் குவைத்திலிருந்து அனுப்பிய ஒரு பதிவில் “சேரமான் பெருமாள்” என்னும் முதல் இந்திய முஸ்லிம் மன்னர் பற்றி அவர் எழுதிய நூல் தமிழக அரசு நூலகங்களில் இடம்பெற அனுமதிப் பெற்று விட்டதாக எழுதியிருந்தார்கள்; அவர்கட்கு வாழ்த்தும் செய்தியில் என் பின்னூட்டத்தில் இவ்வாறு குறிப்பிட்டேன்:

\\கவியன்பன் கலாம் இதனைக் காவியமாகவும் படைக்கலாம். தீரன் திப்பு சுல்தானைப் பற்றி ஆய்ந்து வரலாற்றை என் யாப்பிலக்கண ஆசான் இலங்கைக் காப்பியக்கோ ஜின்னா ஷரிபுத்தீன் வாப்பா அவர்கள் காவியமாகப் படைத்து துபையில் வெளிய்ட்டார்கள்; நீங்கள் இந்த நூலை எனக்கு அனுப்பி வைத்தால், இன்ஷா அல்லாஹ் அவர்கள் மீண்டும் துபை வந்தால் இந்த நூலை அவர்களிடம் கொடுத்துக் காவியமாகப் படைக்கச் சொல்வேன். அந்நியரை எதிர்த்துக் கடல்வழிப் போர் செய்த முதல் முஸ்லிம் வீரரும் (குஞ்ஞாலி மரைக்கார்) கேரளத்து முஸ்லிம் என்பதை இன்று அறிந்தேன்; இந்த இணைப்பைப் பார்க்கவும்:http://www.adirainirubar.blogspot.ae/.../blog-post_23.html

அலைகடல் அரிமா குஞ்சாலி மரைக்காயர்... ~ அதிரைநிருபர்
adirainirubar.blogspot.com\\

Ebrahim Ansari said...

அனைத்து சகோதரர்களும் காட்டி வரும் அன்புக்கு நன்றி .

ஆனாலும் ஒரு குறை மனதில் இருக்கிறது தம்பி எம் எஸ் எம் நெய்னா இந்த வகுப்புக்கு ஆஜராவதில்லையே ஏன்?

நூல் வடிவ வெளியீடு பற்றி பெரியவர் மச்சான் எஸ் எம் எப் அவர்கள் ஒரு கருத்துத் தெரிவித்து இருக்கிறார்கள.

தற்சமயம் பொருளாதாரச் சிந்தனைகளின் நூல் வடிவ வெளியீட்டைக் கொண்டு வருவதில் இந்தக் குழு முயற்சி செய்து கொண்டு இருக்கிறது. இன்ஷா அல்லாஹ் து ஆச செய்யவேண்டுகிறேன்.

இந்த நூல் வெளியீடுகளில் சுய புகழ், பெயர், இலாபம் என்பதெல்லாம் தள்ளிவைக்கப் பட்டவை. முழுக்க முழுக்க தாவா பணிகளுக்கு இவை பயன்படவேண்டுமேன்பதே நோக்கம். நம்மைப் பற்றி நாமே அறியாத விஷயங்களை அறியச் செய்ய வேண்டுமென்பதே அவசியம்.

அதே போல் வரலாற்றுத் தொடர் இப்போது தான் அரும்பத் தொடங்கி இருக்கிறது. இன்னும் பல மலர்கள் பூக்க வேண்டியுள்ளன. அவைகள் பூத்து மலர்ந்து மணம் வீசத் தொடங்கும்போது நூல் வடிவத்தைப் பற்றி நாம் முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

இப்போது ஏற்கனவே பெற்றுத் தொட்டியில் கிடக்கும் பொருளாதாரத் தொடரை வெளியிட நல் ஆதரவை வேண்டுகிறேன்.

தம்பி சபீர்! நான் சரியாகப் பேசுகிறேனா?

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

Masha Allah, Enna Aanaa kaka's very nice article for a real & brave history of our nation's first & muslim warrior. Sorry for my late reading & comment. The way of exposing here the indian hidden history which should have known every one of the nation done by our author here nicely & prickly to the fascists. There are so many Tippu & Kunzallees' histories have already been hidden in India by crooked minded people. May Allah bless all of us. Aameen.

adiraimansoor said...

///குஞ்ஞாலி மரைக்காயாரின் கொரில்லாப் படையால் கோவாவுக்கு விரட்டப் பட்ட போர்ச்சுகீசியர்கள் மரைக்காயருக்கு ஆதரவாக இருந்து ஆக்கமமும் ஊக்கமும் தந்துகொண்டிருந்த மன்னர் மானவ விக்கிரம சாமுத்ரியைக் கொல்லத் திட்டம் போட்டனர். அதற்காக அவர்களுக்கும் ஒரு எட்டப்பன் கிடைத்தான். அவன் ஒரு நம்பூதிரி பிராமணன். உலக வரலாறுகளின் பக்கங்களில் அரண்மனைகளில் நடந்த சதிகளுக்குப் பஞ்சமில்லை. அப்படி ஒரு சதியில் சாமுத்ரி மன்னன் அடுத்துக் கெடுத்த நம்பூதிரிப் பிராமணனால் உணவில் விஷம் வைக்கப் பட்டுக் கொல்லப்பட்டார்.

மன்னரின் மரணத்துக்குப் பிறகு அரசாள வந்த அடுத்த சாமுத்திரி மன்னனுக்கு போர்த்துகீசியரை எதிர்த்து நிற்க “ தில் “ இல்லை.///

காக்கா

முதல் மன்னனின் பெயரும் சாமுத்திரி அந்த சாமுத்திரி மன்னன் கொல்லப்பட்டதும் இரண்டாவது வந்த மன்னனின் பெயரும் சாமுத்திரியா?

இங்கு எனக்கு கொஞம் குழப்பமாக இருக்கின்றது

அதிரைமன்சூர்
சிரிலன்கா ஏற்போடிலிருந்து

adiraimansoor said...

குஞ்சாலி மரைக்காமார்களுக்கு இருந்த வீரம் போன்று நமக்கெல்லாம் எப்பொழுது வரும்

sabeer.abushahruk said...

//தம்பி சபீர்! நான் சரியாகப் பேசுகிறேனா? //

Of course , kaka.

adiraimansoor said...

//தற்சமயம் பொருளாதாரச் சிந்தனைகளின் நூல் வடிவ வெளியீட்டைக் கொண்டு வருவதில் இந்தக் குழு முயற்சி செய்து கொண்டு இருக்கிறது. இன்ஷா அல்லாஹ் து ஆச செய்யவேண்டுகிறேன். ///

காக்கா
இந்த நூல் மிக சீக்கிரம் பப்லிஷ் பன்னவேண்டிய ஒன்று

adiraimansoor said...

//தற்சமயம் பொருளாதாரச் சிந்தனைகளின் நூல் வடிவ வெளியீட்டைக் கொண்டு வருவதில் இந்தக் குழு முயற்சி செய்து கொண்டு இருக்கிறது. இன்ஷா அல்லாஹ் து ஆச செய்யவேண்டுகிறேன். ///

காக்கா
இந்த நூல் மிக சீக்கிரம் பப்லிஷ் பன்னவேண்டிய ஒன்று

Ebrahim Ansari said...

தம்பி மன்சூர். சாமுத்திரி என்பது அந்த மன்னர்களின் குடும்பப் பெயர். முதலாவதாக நான் குறிப்பிட்டிருக்கிற மன்னனின் பெயரை மானவ விக்கிரம சாமுத்திரி என்று குறிப்பிட்டு இருக்கிறேன்.

இரண்டாவதாக வந்தவர் பெயரிலும் சாமுத்திரி இருக்கிறது. ஆனால் அவர் அவ்வளவாகப் பிரகாசிக்காததோ என்னவோ அவரது முழுப் பெயர் குறிப்புகளில் எனக்குக் கிடைக்கவில்லை. ஆகவேதான் வெறும் சாமுத்திரி என்று குறிப்பிட்டுள்ளேன்.

அப்துல்மாலிக் said...

பள்ளிகளில் கட்டுக்கதை தேவையில்லாத ரா... சீ... ராவ.... வையும் மாங்கு மாங்குனு படிச்சு பரிட்சி எழுதி மார்க் வாங்கியதை நினைத்து இப்போது வெறுக்கிறேன், இது மாதிரியான உண்மை வரலாறுகள் வரையருக்கப்பட்டுவிட்டனவே ...

Shameed said...

நமது வீரத்தை மழுங்கடிக்கவே நமது ஆளுகளின் வீரத்தை மறைத்து வைத்துவிட்டார்கள் கட்டுரையை படிக்கும்போது ரத்தம் முருக்கேருகின்றது

Unknown said...

ZAKIR HUSSAIN சொன்னது…
To Brother Ebrahim Ansari

இந்த முறை நீங்கள் எழுதிய விதம் எனக்கு என்னவோ அந்த காலத்துக்கே அழைத்துச்சென்ற மாதிரி இருந்தது. இன்னும் சொல்கிறேன் இந்த வலைத்தளங்களுக்குள் உங்கள் எழுத்து அடங்கி விடக்கூடாது. இவ்வளவு உண்மைகளை எடுத்துச்சொல்லும் ஆட்கள் குறைவு. அது இந்த இந்தியாவுக்கு தெரியவேண்டும்.

--------------------------------------------------------------
Salam Zahir Kaaka,
Exactly thatswhat I felt several times when I read Ansari Kaakaa's Article.

Salam Ansari Kaaka,
Thanks for your all wonderful messeges...

Indeed ,We need several articles to refresh our hard-core Roots.During this Economical and materialistic dominated Era,we are shrinked by fulfilling our routine needs instead
creating history like our Kunjaali Maraickka.

adiraimansoor said...

ஜசாக்கல்லாஹ் காக்கா

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

OUR YOUTUBE CHANNEL

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Labels

அதிரை (412) கவிதை (353) இபுராஹீம் அன்சாரி (206) Alaudeen.S (195) அதிரை அஹ்மது (180) அதிரை செய்திகள் (143) ஜாஹிர் ஹுசைன் (142) MSM (136) சபீர் (127) சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக் (117) அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து (113) இஸ்லாம் (103) தாஜுதீன் (94) ஷாஹுல் ஹமீது (89) அபுஇபுறாஹிம் (69) நபிமணியும் நகைச்சுவையும் (65) இக்பால் M.ஸாலிஹ் (62) j1 (59) கல்வி விழிப்புணர்வு (57) ரமளான் (55) அதிரைநிருபர் (52) விழிப்புணர்வு (47) கல்வி (45) உமர் தம்பி (43) P.பகுருதீன் (41) அதிரை மன்சூர் (41) அதிரை மெய்சா (40) இன்று (40) படிக்கட்டுகள் (40) அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (39) கண்கள் இரண்டும் (39) a1 (37) crown (37) அரசியல் (37) நாளை (37) நேற்று (37) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (35) அண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம் (34) ADT (33) அதிரை அஹ்மத் (33) பேறு பெற்ற பெண்மணிகள் (33) சாஹுல் ஹமீது (32) S.அலாவுதீன் (31) ie (30) p1 (30) பேசும் படம் (30) மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள் (30) வாவன்னா (28) தேனீ (27) SMF (26) அதிரை முஜீப் (26) மருத்துவம் (26) வரலாறுகள் (26) வழக்குகள் (26) ஹஜ் (26) கவியன்பன் (25) தேர்தல் (24) k1 (22) அதிரை தாருத் தவ்ஹீத் (22) இப்னு அப்துல் ரஜாக் (22) தமிழகம் (22) தமிழ் (22) துபாய் (22) நூருத்தீன் (22) பெண்கள் (22) யுனிகோட் (22) h1 (21) இபுராஹிம் அன்சாரி (21) ஏடு-இட்டோர்-இயல் (21) நினைவுகள் (21) நோன்பாளிகளே (21) பாலஸ்தீனம் (21) அபூஇப்ராஹீம் (20) என் இதயத்தில் இறைத்தூதர் (20) ஜமீல் M.சாலிஹ் (20) Sஹமீது (19) இந்தியா (19) எச்சரிக்கை (19) சேக்கனா M.நிஜாம் (19) மழை (19) adirai (18) editorial (18) loan (18) அதிரை சித்தீக் (18) கந்தூரி (18) அபுல்கலாம் (17) இயற்கை இன்பம் (17) சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக் (17) நோன்பு (17) மரணம் (17) ரமழான் (17) ஹஜ் பெருநாள் (17) ஆசிரியர் தினம் (16) கவிதை ஓர் இஸ்லாமிய பார்வை - ஆய்வு (16) பழகு மொழி (16) புதுசுரபி (16) Zakir Hussain (15) harmys (15) அபு ஈஸா (15) அப்துல் ரஹ்மான் (15) அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா (15) வரலாறு (15) Sabeer (14) ஊடகம் (14) காணொளி (14) படிப்பு (14) பெருநாள் (14) ஷஃபி அஹ்மது (14) M.H.ஜஹபர் சாதிக் (13) shameed (13) அதிரை என்.ஷாஃபாத் (13) அப்பா (13) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும் (13) கடன் (13) சத்தியமார்க்கம்.com (13) சிந்தனை (13) சிந்திக்க (13) MHJ (12) ஆரோக்கியம் (12) ஒற்றுமை (12) சகோதரியே (12) தண்ணீர் (12) தாருல் இஸ்லாம் ஃபேமிலி (12) பேரூராட்சி (12) மரபு (12) மு.செ.மு.சஃபீர் அஹமது (12) யாசிர் (12) ரஃபீக் (12) AM (11) s1 (11) அனுபவம் (11) ஆமினா முஹம்மத் (11) ஒரு புத்தகம் பிறக்கிறது (11) சரிதை (11) சென்னை (11) தொடர் (11) பேசும்படம் (11) மனு நீதி (11) முஹம்மது ஃபாருக் (11) Sabeer AbuShahruk (10) aknk (10) kavithai (10) அதிரை அஹமது (10) அதிரை ஷஃபாத் (10) அதிரைநிருபர் பதிப்பகம் (10) அமீரகம் (10) அமெரிக்கா (10) அலசல் (10) ஆய்வு (10) உதவி (10) ஏக்கம் (10) கலாம் (10) தொழில் முனைவோர் (10) படிகட்டுகள் (10) பெற்றோர் (10) முகம்மது அலி ஐ.பீ.எஸ் (10) முஹம்மது யாசிர் (10) விவாதக்களம் (10) SMS (9) அரும்புப் பாட்டு (9) ஊடக போதை (9) குறுந்தொடர் (9) சிந்திக்கத் தூண்டும் சித்திரங்கள் (9) சுகாதாரம் (9) ஜகாத் (9) துஆ (9) தேடல் (9) நோன்பு பெருநாள் (9) பரீட்சை (9) பிரார்த்தனை (9) பேட்டி (9) பேரன் (9) மனித குலம் (9) ரமழான் சிந்தனை (9) வினாடி வினா (9) வேலை (9) ஹதீஸ் (9) LMS (8) ZAEISA (8) msm rafiya (8) poem (8) அதிரைக்காரன் (8) அபூ ஆசிஃப் (8) அப்துல் காதர் (8) அஹ்மது இர்ஷாத் (8) இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளி (8) இளமை (8) இஸ்லாமியப் பெண்மணி (8) எழுத்துப் பிழைகள் (8) ஏற்றம் (8) கடற்கரைத் தெரு (8) கலைக்களஞ்சியம் (8) காது (8) சத்தியமார்க்கம் (8) செய்தி (8) தக்வா பள்ளி (8) தன்னம்பிக்கை (8) தொழுகை (8) நண்பர்கள் (8) நூல் வெளியீடு (8) பள்ளிவாசல் (8) பழைய நினைவுகள் (8) பாலஸ்தீன் (8) மரபு கவிதை (8) மலேசியா (8) மாணவர்கள் (8) மாலிக் (8) முகமது யாசிர் (8) வாழ்க்கைப் பயணத்தில் உறவுகள் (8) விபத்து (8) விவாதம் (8) வேண்டுகோள் (8) ARH (7) MSM MEERASHA RAFIA (7) SKM ஹாஜா முகைதீன் (7) SKM-H (7) history (7) அப்துர்ரஹ்மான் (7) அப்துல் மாலிக் (7) அம்மா (7) அல்குர்ஆன் (7) அல்லாஹ் (7) உணவு (7) கட்டுரையாளர் (7) கண் (7) கம்பன் (7) கல்வியாளர்கள் (7) காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி (7) கால்பந்து (7) குழந்தை (7) சிந்திப்போம் (7) சின்னகாக்கா (7) சிரியா (7) தொண்டை (7) நன்றி (7) நபிமொழிகள் (7) பயணம் (7) பள்ளிக்கூடம் (7) மின்சாரம் (7) முஸ்லிம் (7) மொழி (7) விளக்கம் (7) ஸஹாபாக்கள் (7) 2012 (6) 2014 (6) A.R.அப்துல் லத்தீஃப் (6) AEAC (6) B. Ahamed Ameen (6) Dubai (6) M H Jahabar Sadik (6) N.ஜமாலுதீன் (6) Shahnaz Sabeer Ahmed (6) UAE (6) ashik (6) m2 (6) u1 (6) அதிரை தென்றல் (Irfan Cmp) (6) அதிரை நிருபர் (6) அலசல் தொடர் (6) ஆதங்கம் (6) இதிகாசங்கள் (6) இத்தியாதி இத்தியாதி (6) இப்ராஹிம் அன்சாரி (6) இப்ராஹீம் அன்சாரி (6) இரத்தம் (6) ஊழல் (6) ஓட்டு (6) கந்தூரி போதை (6) கல்லூரி (6) கிரவ்ன் (6) கோடைகால பயிற்சி (6) தடை (6) திருமணம் (6) நகைச்சுவை (6) நட்பு (6) நண்பன் (6) நானும் ஆஃப்ரிக்காவும் (6) நூலகம் (6) புத்தகம் (6) போதை (6) மக்கா (6) முதுமை (6) முஸ்லீம்கள் (6) முஹம்மத் ஆஷிக் (6) மூக்கு (6) வணக்கம் (6) வளைகுடா (6) விமர்சனம் (6) ஷிஃபா மருத்துவமனை (6) AEM (5) SKM - H (5) Sஹமீத் (5) m1 (5) moon (5) umar history (5) அதிரை ஈத்மிலன் (5) அதிரை ஹாலித் (5) அபூஇப்ராஹிம் (5) அறிவியல் (5) அழகு (5) அழைப்பு (5) ஆங்கிலப் புத்தாண்டு (5) ஆஸ்திரேலியா (5) இடஒதுக்கீடு (5) இயற்கை (5) இரவு (5) இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா (5) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (5) உறவு (5) கணினி (5) கண்டனம் (5) கனவு (5) கவிஞர் (5) கவிதை ஆய்வு (5) காலம் (5) குர்ஆன் (5) குழந்தைகள் (5) சட்டமன்றம் (5) சந்திப்பு (5) சபீர் அஹ்மது அபுஷாரூக் (5) சான்பிரான்சிஸ்கோ முதல் செக்கடி மோடு வரை (5) சேமிப்பு (5) தக்வா (5) தாய் (5) தொட்டால் தொடரும் (5) தொலைக்காட்சி (5) நாசர் மவ்லவி (5) நீதி (5) பழமை (5) பாசம் (5) பாபர் மஸ்ஜித் (5) பாலியலுக்கு பலியாகாதே (5) பெண்ணுரிமை (5) பொருளாதாரம் (5) போட்டி (5) போராட்டம் (5) மண்ணறை (5) மனைவி (5) மற்றும் (5) மாட்டுக்கறி (5) மாற்றி யோசி (5) முஹம்மது பாரூக் (5) மூடநம்பிக்கை (5) மூன்றாம் கண் (5) ரஃபியா (5) ரியல் எஸ்டேட் (5) வட்டார உரையாடல் (5) வாழ்க்கை (5) விருந்து (5) விழி (5) வெற்றி (5) வேலை வழிகாட்டி (5) ஸதக்கதுல்லாஹ் (5) 2013 (4) B. Ahamed Ameen (4) EA (4) M. தாஜுதீன் (4) MSM மீராஷா ரஃபியா (4) MSM(n) (4) adirainirubar (4) eo1 (4) syria (4) v1 (4) அதிரை அறிஞர் (4) அதிரை பைத்துல்மால் (4) அதிரை மீரா (4) அபுஇப்ராஹிம் (4) அபுநூரா (4) அரபி (4) அறிவுரை (4) அவதூறு (4) அஹ்மது ஆரிஃப் (4) ஆங்கிலம் (4) இன்றைய சவால் (4) இபாதத் (4) இபுறாஹீம் நபி (4) இமாம் ஷாஃபி ஸ்கூல் (4) இலக்கியம் (4) இலவசம் விலை போனதே (4) இஸ்லாமிய வங்கி (4) ஈகை (4) ஈகைத் திருநாள் (4) ஈத் பெருநாள் (4) ஊரில் மழையாமே (4) ஊர்வலம் (4) எதிர்ப்பு (4) கடிதம் (4) கட்சிகள் (4) கட்டுரை (4) கலக்கல் (4) கல்வி வழிகாட்டி (4) கா.மு.மே.பள்ளி (4) காது கொடுத்து கேளுங்கள் (4) குடும்பம் (4) குழந்தை வளர்ப்பு (4) குழந்தைகளுக்காக (4) கேமரா (4) கோரிக்கை (4) கோவை அய்யூப் (4) சஹாபாக்கள் (4) சிட்னி (4) சுதந்திரம் (4) செக்கடிக் குளம் (4) டி.வி. (4) டெல்லி (4) தனிமை (4) தமாம் (4) தமிழ்மாமணி (4) தமுமுக (4) திருச்சி (4) தெரு (4) தோல்வி (4) தோழன் (4) நடை (4) நபி முஹம்மது (ஸல்) (4) நம்பிக்கை (4) நிறைவு (4) நிலவு (4) நீர் (4) நேரம் (4) நோன்பு கஞ்சி (4) பயணங்களில் பரவசம் (4) பயன் தரும் பன்மொழித் தொடர்பு (4) பழக்கம் (4) பாங்கு (4) பாதுகாப்பு (4) பிறை (4) புன்னகை (4) புரளி (4) புறம் (4) பெண் (4) பெண்மை (4) பேயோடு ஒரு ஹாய் (4) மகன் (4) மது (4) மலேஷியா (4) மலை (4) மலையேறலாம் (4) மாற்றம் (4) யார் (4) ரமலான் (4) லஞ்சம் (4) லண்டன் (4) லெ.மு.செ.அபுபக்கர் (4) லைலதுல் கத்ர் (4) வரதட்சனை (4) வலைப்பூக்கள் (4) வாப்பா (4) வாழ்கை (4) வாழ்கைப் பயணத்தில் உறவுகள் (4) வாழ்வியல் (4) விலைவாசி (4) விளையாட்டு போட்டிகள் (4) வெளிநாடு (4) வெளிநாட்டு வாழ்க்கை (4) ஷம்சுல் இஸ்லாம் சங்கம் (4) ஷேக் முகைத்தீன் (4) ஹைதர் அலி ஆலிம் (4) -அபூஹாஷிமா (3) 1977 (3) 23 (3) AIM (3) CMN SALEEM (3) Darul Islam Family (3) Dhua (3) TAMS (3) aamf (3) abu easa (3) avnv (3) eye care (3) shafi ahamed (3) sv (3) tmmk (3) ஃபித்ரு (3) அகம் (3) அகல இரயில் பாதை (3) அச்சம் (3) அஜிஜுதீன் (3) அண்ணா (3) அதிராம்பட்டினம் (3) அதிரை வரலாறு (3) அன்புடன் மலிக்கா (3) அபு இஸ்மாயில் (3) அபுஈசா (3) அபுசாருக் (3) அபுபக்கர் (3) அப்துர் ரஹீம் ஜமீல் (3) அமைதி (3) அரஃபா (3) அரஃபாத் (3) அறிக்கை (3) அறிவிப்பு (3) அலாவுதீன் (3) அவசரம் (3) ஆம்புலன்ஸ் (3) ஆய்வுக் கட்டுரை (3) ஆவணப்படம் (3) ஆஷிக் அஹமது (3) இசை (3) இட ஒதுக்கீடு (3) இட ஒதுக்கீடும் (3) இன ஒதுக்கீடும் (3) இனிக்க (3) இன்று ஒரு தகவல் (3) இரயிலடி (3) இரயில் (3) இர்ஷாத் (3) இறைத்தூதர் (3) இலக்கணம் (3) இலங்கை முஸ்லீம்கள் (3) இலவசம் (3) இழப்பு (3) இஸ்மாயில் நபி (3) இஸ்லாமிய ஆட்சி (3) உரையாடல் (3) உலக செய்திகள் (3) உலகம் 2010 (3) உள்ளாட்சி தேர்தல் (3) ஊக்கம் (3) எம்.காம். (3) எம்ஜிஆர் (3) ஒடுக்கு இடர் (3) ஒளரங்கசீப் (3) கடல் (3) கடுதாசி (3) கமிட்டி (3) கருகும் காதல் (3) கருணாநிதி (3) கலந்துரையாடல் (3) கல்வித் தந்தை (3) கா.மு.கல்லூரி (3) காதிர் முகைதீன் (3) குடி (3) குணம் (3) குற்றாலம் (3) குளம் (3) குளிர் (3) குழப்பம் - ஆலோசனை - தீர்வு (3) கூடங்குளம் (3) கேள்விகள் (3) கொடைக்கானல் (3) சபிதா காதர் (3) சமோசா (3) சம்சுல் இஸ்லாம் சங்கம் (3) சவுதிஅரபியா (3) சஹன் (3) சாகுல் ஹமீத் (3) சாப்பாடு (3) சிக்கனம் (3) சிங்கப்பூர் (3) சுத்தம் (3) சுனாமி (3) செக்கடி மோடு (3) செலவு (3) ஜமீல் M.ஸாலிஹ் (3) டாக்டர் (3) த.மு.மு.க. (3) தந்தை (3) தமிழ் வளர்ந்த நினைவுகள் (3) தர்கா (3) தர்பியத் (3) தாய்மை (3) தினசரிகள் (3) திமுக (3) தியாகத் திருநாள் (3) திருக்குர்ஆன் (3) திறன் (3) தீவிரவாதம் (3) தொப்பி (3) தோழர்கள் (3) நடுத்தெரு (3) நபி (3) நாஞ்சிலன் (3) நிஜாம் (3) நினைக்க (3) நிம்மதி (3) நேர்மை (3) நேர்வழி (3) நோய் (3) படிப்பினை (3) பட்ஜெட் (3) பட்டம் (3) பணம் (3) பத்ரு யுத்தம் (3) பயணக் கட்டுரை (3) பயம் (3) பயான் (3) பயிற்சி முகாம் (3) பரிசு (3) பாராளுமன்றம் (3) பாலியல் வன்முறை (3) பினாங்கு (3) பிப்ரவரி 14 (3) புண்ணியவான் (3) பெண் கல்வி (3) பெருநாள் சந்திப்பு (3) பேய் (3) பொய் (3) மகள் (3) மதமாற்றம் (3) மதீனா (3) மதுவிலக்கு (3) மனது (3) மனிதம் (3) மனிதவளம் (3) மன்னிப்பு (3) மலரும் (3) மவுனம் (3) மஹர் (3) மாடு (3) மாட்டுகறி (3) மார்க்க சொற்பொழிவு (3) மார்க்கக் கல்வி (3) மின்னஞ்சல் (3) மு.செ.மு. (3) முகநூல் (3) முத்துப்பேட்டை (3) முன்னாள் மாணவர்கள் (3) முற்போக்கு கூட்டணி (3) முஸ்லிம் சாதனை (3) மூக்கு கண்ணாடி (3) மூளை (3) மெதுவடை (3) மெளனம் பேசியதே (3) மேகம் (3) மோடி (3) ரசனை (3) வட்டி (3) வதந்தி (3) வரவேற்பு (3) வலைக்காட்சி (3) வாக்கு கொடுத்தல் (3) வாங்க (3) வாடா (3) வாழ்த்து (3) வாவன்னாசார் (3) விடுதலை (3) விடுப்பு (3) விண்ணப்பம் (3) வித்தியாசமானவர்கள் (3) வின்வெளி (3) விருந்தோம்பல் (3) விவாதக் களம் (3) வேகம் (3) வேலை வாய்ப்பு (3) ஷேக் ஜலாலுதீன் (3) ஸஹாபிய பெண்கள் (3) ஹராம் (3) +2 தேர்வு முடிவுகள் (2) 06122010 (2) 10 வகுப்பு 2010 (2) 1995 (2) 80/90 (2) ABM (2) AET (2) December-6 (2) ECR சாலை (2) ENT (2) HAJ 2012 (2) IAS தேர்வு (2) IPL (2) KMHSc. (2) KVS. (2) Lives (2) M.Y.முஹம்மத் (2) Motor Bike Riders (2) NAS (2) Rafeeq (2) Risky (2) SELAMAT HARI RAYA (2) Shahnaz (2) Student (2) U.A.E. (2) affa (2) air india (2) alumni (2) an news (2) book (2) broad gauge (2) camera (2) cmp (2) cute (2) decision (2) diabetes (2) do not disturb (2) dua (2) eye (2) facebook (2) flash back (2) food (2) india (2) library (2) live (2) making of படிக்கட்டுகள் (2) marriage (2) mk1 (2) motivation (2) mychoice (2) networking (2) news (2) password (2) peer mohammed (2) politics (2) prayer (2) q12 (2) ramadan (2) shafi (2) silence please (2) tntj (2) walking (2) www.adirainirubar.in (2) yasir (2) youth (2) ஃபெஸ்டிவல் (2) ஃபோட்டோகிராஃபி (2) அ.ர.ஹிதாயத்துல்லாஹ் (2) அஃப்சல் ஹுசைன் (2) அசத்தல் மொழி (2) அசத்தல் மொழிகள் (2) அச்சு (2) அணு உலை (2) அதி அழகு (2) அதிமுக (2) அதிரை உலா (2) அதிரை எக்ஸ்பிரஸ் (2) அதிரை கல்விச் சேவையகம் (2) அதிரை பசுமை 2020 (2) அதிரை மொழி (2) அதிரைகாரன் (2) அதிரைத் தென்றல் (CMP Ifran) (2) அதிரைநிருபரின் நிழல்கள் (2) அதிரைபட்டினம் (2) அதிரைப்பட்டினம் (2) அதிரைமணம் (2) அதிரையின் முத்திரை (2) அது ஒரு அழகிய மழைக்காலம் (2) அநீதி (2) அந்நிய முதலீடு (2) அந்நியர் முதலீடு (2) அனைத்து முஹல்லா (2) அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (2) அபூ முஸ்அப் (2) அபூசுஹைமா (2) அபூஹாமித் (2) அபூஹாஷிமா (2) அப்துல் ரசீத் ஆலிம் (2) அமானிதம் (2) அம்மாபட்டினம் (2) அம்மார்(ரலி. அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (2) அரசியல் ஜெயலலிதா (2) அரசியல்வாதி (2) அரசு (2) அரசு வேலை (2) அர்த்தம் (2) அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (2) அறிந்தும் அறியாமலும் (2) அறிமுகம் (2) அற்புதம் (2) அலங்காரம் (2) அலி (2) அலுவலகம் (2) அலைபேசி (2) அல்மனார் செண்டர் (2) அழுத்தம் (2) அழைப்புப் பணியின் அவசியம் (2) அழைப்புப்பணி (2) அவனா யிராதே (2) ஆகாயம் (2) ஆசிட் (2) ஆசிரியர் பணி (2) ஆசை (2) ஆசைகள் (2) ஆடை (2) ஆட்டோ (2) ஆணாதிக்கம் (2) ஆராய்ச்சி (2) ஆஷிக் முஹம்மத் (2) இணையத்தில் வலைவீச்சு (2) இணையம் (2) இதுதான் இஸ்லாம் (2) இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு (2) இந்திய முஸ்லீம்கள் (2) இபுறாகீம் அன்சாரி (2) இப்போது எல்லோரும் எழுதலாம் (2) இயக்க மயக்கம் (2) இயக்கம் (2) இயற்கை சீற்றம் (2) இருதய சிகிச்சை (2) இறப்பது (2) இறுதி கடமை (2) இறைவனிடம் (2) இறைவன் (2) இறைவழிபாடு (2) இலக்கிய மன்றம் (2) இலங்கை (2) இலைகள் (2) இவனா யிரு (2) இவர்கள் (2) இவ்வுலகம் அழிவை நோக்கி செல்கிறதா? (2) இஸ்லாத்தில் குற்றவியல் சட்டங்கள் (2) இஸ்லாமிய வருடப்பிறப்பு (2) இஸ்லாமியப் பொருளாதரம் (2) ஈத்கா (2) ஈமான் (2) ஈழம் (2) உடற்பயிற்சி (2) உணர்ந்தவை (2) உண்மை வரலாறு (2) உண்மைகள் (2) உதவி திட்டம் (2) உன்னப்பனின் விண்ணப்பம் (2) உம்மா (2) உம்மு சுலைம்(ரலி) (2) உரிமை (2) உருவப்படம் வரைதல் (2) உலகம் 2011 (2) உளவு (2) உழைப்பில்லா உடல்களும் (2) ஊடக தீவிரவாதம் (2) ஊட்டி (2) ஊர் (2) ஊர் நலன் (2) எங்க சார் (2) எங்க டீச்சர் (2) எங்கே அமைதி (2) எண்ணங்கள் (2) எதற்காக? (2) எதிரிப்பு (2) எதில் கஞ்சத்தனம் (2) எத்தி வைப்பு (2) எத்தியோப்பியா (2) எந்தப் பாதை உங்கள் பாதை? (2) எனக்குத் தெரிந்த இஸ்லாம் (2) என்பது (2) எம்.ஃபில். (2) எழுத்து (2) எழுத்தும் (2) ஏன் ஹிஜாப் (2) ஏர் இந்தியா (2) ஏழை (2) ஐரோப்பா (2) ஒப்பந்தம் (2) ஒருங்கிணைந்த (2) ஒருங்குறி (2) ஒழுக்கம் (2) ஓடுகாலி (2) ஓர் இஸ்லாமிய பார்வை (2) கஞ்சி (2) கஞ்சி வருதப்பா (2) கடன் தள்ளுபடி (2) கடன் வாங்கலாம் வாங்க (2) கடற்கரை (2) கடற்கரைத் தெரு கந்தூரி (2) கடற்கரைத்தெரு புளியமரம் (2) கடவுச் சொல் (2) கடை (2) கணவன் (2) கண்டிக்கிறோம் (2) கண்தானம் (2) கதையல்ல நிஜம் (2) கந்தூரி தடை (2) கபுர் (2) கப்ரு (2) கருமையும் (2) கலரி (2) கலைஞன் (2) கல்யாணம் (2) கல்வி முறை (2) கல்வி விருது (2) கல்வியும் கற்போர் கடமையும் (2) கவனம் (2) கவிக்கோ அப்துல் ரகுமான் (2) கா.அப்துல் கபூர் எம்.ஏ. (2) காட்சி (2) காட்டுப் பள்ளி (2) காணொளி உரை (2) காதர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி (2) காமராசர் (2) காற்று (2) காலை (2) காவல்துறை (2) காவேரி (2) கி.பி: 2011 அது ஒரு மழைக்காலம் (2) கிரிக்கெட் (2) குகை (2) குஜராத் (2) குஞ்ஞாலி (2) குடி தண்ணீர் (2) குணக்குன்று (2) குத்துச் சண்டை (2) குப்பை தொட்டி (2) குறை (2) கூட்டணி (2) கேரளா (2) கையேந்துங்கள் (2) கொசு (2) கொடுமை (2) கொண்டாட்டம் (2) கொலை (2) கொழும்பு (2) கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் (2) கோபம் (2) சத்தம் (2) சபுறு (2) சமச்சீர் கல்வி (2) சமரசம் (2) சமுதாய சீர்கேடு (2) சமூக மாற்றங்கள் (2) சம்சுல் இஸ்லாம் (2) சம்பாதித்தால் (2) சர்க்கரை (2) சவால் (2) சவால்கள் (2) சஹர் (2) சாத்தியமா? (2) சான்பிரான்சிஸ்கோ (2) சிகிச்சை (2) சிதறல்கள் (2) சித்தீக் பள்ளி (2) சிந்தனை துளி (2) சின்ன வயசு (2) சிராஜ் உத்-தெலா (2) சிரிப்பு (2) சிறப்பு (2) சிலந்தி வலை (2) சீனி (2) சுயம் அறிக (2) சுர்மா (2) செயற்க்கை கோள் (2) செய்திகள் (2) செய்யுமிடத்தில் (2) செய்வீர் (2) சேவை (2) சொத்து (2) சோதிடம் (2) சோம்பேறி (2) சோறு (2) ஜஃபருல்லாஹ் (2) ஜமாஅத் (2) ஜஹபர் சாதிக் (2) ஜாஃபருல்லாஹ் (2) ஜித்தா (2) ஞாபகம் வருதே (2) டாக்டர் அப்துல்லாஹ் (2) டிசம்பர் (2) தன்னபிக்கை (2) தன்னிலை சுகாதாரம் (2) தமிழ் நாடு (2) தமிழ்நாடு (2) தமிழ்நாட்டில் (2) தலைமை ஆசிரியர் (2) தலையங்கம் (2) தலைவர் (2) தலைவர்கள் (2) தவறு (2) தாகம் (2) தாக்குதல் (2) தான தர்மம் (2) தாய்மொழி (2) திக்ரு (2) திடல் தொழுகை (2) தினம் (2) தியாகப் பெருநாள் சிந்தனை (2) தியாகம் (2) திருட்டு தடுக்க (2) திருவிழா (2) திரை (2) திறமை (2) தீ (2) தீமை (2) துணைத் தலைவர் (2) தூண்கள் (2) தூய்மை (2) தென்றல் (2) தெளிவு (2) தேர்தல் களம் (2) தேர்வு (2) தொந்தரவு (2) தொன்னூறு (2) நடுப்பக்கத்தில் நட்சத்திரம் (2) நடுவுல கொஞ்சம் நட்சத்திரங்களைக் காணோம் (2) நபி(ஸல்) (2) நம்ம ஊர் (2) நம்மளுக்கு (2) நற் குணங்கள் (2) நலமில்லா நவீனமும் (2) நாட்டு நடப்பு (2) நாணம் (2) நாற்காலி (2) நாற்பது (2) நினனவுகள் (2) நினைவூட்டல் (2) நியூயார்க் (2) நிறம் மாறும் மனிதர்கள் (2) நிறைவுரை (2) நிலநடுக்கம் (2) நூருல் இப்னு ஜஹபர் அலி (2) நூல் (2) நெசவுத் தெரு (2) நெனப்பு (2) நேபாளம் (2) நேரலை (2) நேருக்கு நேர் (2) நேர்காணல் (2) பகதூர்ஷா ஜாஃபர் (2) பகுத்தறிவாளர்களின் மதம் (2) பக்கத்து ஊர் செய்திகள் (2) பக்கீர் முஹம்மது (2) பங்கு (2) பசுமை (2) பசுமை அதிரை 2020 (2) பட்டுக்கோட்டை (2) பணி (2) பண்பு (2) பதிவர்கள் (2) பயிற்சி (2) பரிவு (2) பரீட்சை நேரம் (2) பர்ஜ் கலிஃபா (2) பர்மா தேக்கு வீட்டுக்காரர் (2) பள்ளி (2) பஷீர் அஹம்து (2) பாடம் (2) பானு என்றென்றும் (2) பாம்பன் பாலம் (2) பாருக்குள்ளே நல்ல நாடு (2) பிடித்தது (2) பின்னூட்டம் (2) பின்னூட்டவாதி (2) பிரதமர் (2) பிரதர் (2) பிரியமில்லா பிரிவு (2) பிறப்பது (2) பிறமதம் (2) பிலால் (ரலி) (2) பிலிப்பைன்ஸ் (2) புகார் (2) புகைப் பிடித்தல் (2) புகைப்பட பொழுதுகள் (2) புகைப்படம் (2) புதிய பள்ளிவாசல் (2) புதிய மத்திய அரசு (2) புதுக்கிப்படாத திருமணங்கள் (2) புதுமை (2) புரிந்துணர்வு (2) புலவர் (2) பூகம்பம் (2) பெண்ணீயம் (2) பெண்ணுக்கு வீடு (2) பெண்ணுறிமை (2) பெண்ணே (2) பெரியவர்கள் (2) பேருந்து (2) பொட்டிக்கடை (2) பொற்காலம் (2) போடுங்கள் (2) போர் அடிக்குது (2) போஸ்டர் (2) மகளிர் (2) மடமை (2) மணமகன் (2) மணமகள் (2) மணிமாலை (2) மதச்சாயம் (2) மதிப்பு (2) மதிப்புரை (2) மதிப்பெண்கள் (2) மதீனாவில் நோன்பும் பெருநாளும் (2) மந்தி (2) மனசாட்சி (2) மனனம் (2) மனு (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா ? (2) மன்றம் (2) மயக்கம் (2) மரண அறிவிப்பு (2) மரபுக் கவிதை (2) மருதநாயகம் (2) மர்யம் ஜமீலா (2) மறந்தவைகள் (2) மறுமை நாள் (2) மலர் வனம் (2) மலேசியா பெருநாள் (2) மலேஷியாவில் ரமளான் (2) மாணவமணிகளுக்காக (2) மாணவிகள் (2) மாணவியின் (2) மாது (2) மானிடா (2) மாப்புளே (2) மாயை (2) மார்க்கம் (2) மாலை (2) மாவீரன் (2) மின்சாரவாரியம் (2) மீன்கள் (2) மீள்பதிவு (2) மு.செ.மு.நெய்னா முஹம்மது (2) மு.மேக்தா (2) முகமது பாரூக் (2) முசெமு (2) முஜாஹித் (2) முடிவுகள் (2) முத்தம் (2) முன்னோர்கள் (2) மும்பை (2) முஸ்தகீம் (2) முஸ்லிம்கள் (2) முஸ்லீம் (2) முஸ்லீம் குரல் (2) முஹம்மத் அலீய் (2) முஹர்ரம் (2) மூணுக்கு வந்த டவுட்டு (2) மூனாறு (2) மூளைக்கு வேலை (2) மெரினா (2) மை (2) மையம் (2) யா அத்தஹாக் (2) யார்தான் சொல்வது (2) யாவாரம் (2) ரமலான் சிந்தனை (2) ரமளானுக்கு பின் (2) ராமாயணம் (2) ரியாஸ் அஹ்மது (2) ரிலாக்ஸ் ப்ளீஸ் (2) ரேங்க் கார்டு (2) வங்கி (2) வயோதிகம் (2) வரமா (2) வருக (2) வர்த்தகம் (2) வறுமைக்கோடு (2) வலைப்பூ (2) வலைவீச்சு (2) வழமை (2) வழிமுறைகள் (2) வழியனுப்புதல் (2) வா.உ.சிதம்பரனார் (2) வாகனம் (2) வாங்கடா (2) வாநிலை (2) வாய்க்கால் (2) வாவன்னா சார் (2) விஞ்ஞானம் (2) விதை (2) விமான பயணமும் விபரீதமும் (2) விமானப் பயணம் (2) விமானம் (2) விரயம் (2) விளம்பரங்கள் (2) விவேகம் (2) வெண்மையும் (2) வெந்நீர் ஒத்தடம் (2) வெரசன (2) வெளிச்சம் (2) வெள்ளிநிலா (2) ஷஃபான் (2) ஷப்-ஏ-அராஅத்து (2) ஷவ்வால் (2) ஷஹ்லா (2) ஷாஃபி M.I. (2) ஸதக்கத்துல்லாஹ் (2) ஸனது (2) ஸூரத்துல் பகரா (2) ஸ்ரீலங்கா விமானம் (2) ஹசினா அப்துல் பாசித் (2) ஹஜ் 2011 (2) ஹஜ் பெருநாள் சந்திப்பு (2) ஹபீப் முஹம்மத் (2) ஹலால் (2) ஹாஜா முகைதீன் (2) ஹிதாயத்துல்லாஹ் (2) ஹைதர் அலி (2) “பசு” ‘மை’பூசி அடி‘மை’ ஆகும் இந்தியா. (2) 'e'மான் (1) 'மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு (1) .அதிரை (1) 10 வகுப்பு CBSE (1) 100வது நாளில் (1) 10ம் வகுப்பு (1) 1435 (1) 1600 கோடி வழங்கிய வள்ளல் (1) 1930 (1) 1970 (1) 1980 (1) 1984 (1) 1987 (1) 1993 (1) 2002 (1) 2012-13 (1) 2015 (1) 2015-2016. பட்ஜெட் (1) 2050 (1) 25000 அடி (1) 5-ம் (1) 50 வது பதிவு (1) 6 (1) 6-ம் (1) AAF (1) ABC (1) ALM ஆண்டுவிழா (1) ATCO (1) AZHAR HUSSEIN (1) Abdul Rahman (1) Albaqavi.com (1) American Adirai Forum (1) American Adirai Forum [A A F] – இரண்டாவது அமர்வு (1) Any suspended coffee (1) B.ஜமாலுதீன் (1) BBC (1) Beware of killer offers in Dubai (1) Budget 2012 (1) CMN சலீம் (1) CMண் சலீம் (1) Cancer Awareness Program (1) Cataract (1) December (1) ETA (1) Easy life leads to lazy life (1) Engineering career (1) Final Year MBBS (1) GROUP-1 (1) Glaucoma (1) Gulfnews (1) HABIT (1) HAJ 2015 (1) I am the Greatest (1) IAS (1) IFT (1) India is my country (1) Islam (1) J.A.தாஜுதீன் (1) JMC (1) KMHSSc (1) KVS (1) LOGO (1) London (1) M S M(n) (1) M.B.B.S. (1) M.L.A ரெங்கராஜன் (1) M.S.முகமது மீராசாகிப் (1) MANAGEMENT CAREER (1) MBA (1) MEDICINE CAREER (1) MF (1) MKN Trust (1) MMS (1) MOTHER (1) MS அப்துல் கஃபூர் (1) MSM(r) (1) Moinudeen (1) Moorthy (1) Motion Sickness (1) Mujahid Razeen (Srilanka) (1) Munawar (1) Naming and Calling Spiritually and Personally (1) Nizar Ahamed (1) Nursery School (1) PJ (1) PhD (1) Right Understanding (1) S.H.அஸ்லம் (1) S.சித்தீக்.M.Tech (1) SIS (1) SSLC (1) SSLC. (1) School (1) Shahbaz Mohamed (1) Sports Day (1) Stop N Shop (1) Straight line Stationery (1) TNPSC (1) Truly Asia (1) U.Aboobacker (1) UAE National Day (1) Union Budget 2017 - 2018 (1) abdul khader (1) abu hanifa (1) ac (1) activities (1) adco (1) adirai businessman (1) adirai classified (1) adirai educational mission (1) adirai news (1) adirampattinam (1) afghan (1) after ramadan (1) ayda (1) back2School (1) beach street (1) boxer (1) burkhalifa (1) cbse சமச்சீர் கல்வி (1) cc Sabeer appa (1) channel (1) chennai (1) citizen of world (1) cobol (1) computer (1) convert to islam (1) country club (1) credit card (1) cults (1) current affairs (1) dad (1) dare to dream (1) dc (1) demonetization (1) different thinking (1) drop box (1) dynamic cellcom (1) e-தமிழர் (1) ecr (1) editor-choice (1) email (1) emirates ID (1) engineer (1) english (1) family card (1) family tree (1) folder (1) forward (1) friend request (1) friendship (1) gulf (1) haj 0215 (1) haji marra (1) health (1) history of Rasoolullah (1) homework (1) ibraheem ansari (1) incredible (1) indian muslims (1) influences (1) inneram (1) inter school quiz competition (1) islamic bank (1) islamic banking (1) kalaam (1) kaveri (1) kayal (1) lagoon (1) life (1) living (1) m.nainathambi (1) madina (1) magazine (1) makkah (1) media (1) medical (1) mens way (1) mirage (1) mmk (1) mms பஹுருத்தீன் (1) mnt (1) mohamed ali (1) mp (1) mpmv (1) msf (1) msm1 (1) mumbai (1) music (1) national flag (1) notice (1) online (1) our (1) pain worth it (1) parotta (1) peach n berry (1) photography (1) physical (1) picture of play (1) police (1) power (1) programming (1) publisher (1) queenie padilla (1) real estate 1 (1) sabee (1) sad (1) sbeer (1) sha an sha (1) shaficast (1) sham (1) sharing (1) sharjah (1) shirt (1) shirts (1) smart phones (1) son (1) sp பட்டினம் (1) speech (1) srilankan muslim (1) syed abdul hameed (1) syria children (1) tamil (1) thajudeen (1) thamemunansari (1) treatment (1) truly asia (1) tweet (1) update (1) urdu (1) version 4.01 (1) we support (1) welcome Ramadhan (1) wikileaks (1) y1 (1) youtube (1) ஃபஜர் தொழுகை (1) ஃபாரூக் (1) ஃபிலிம் (1) ஃபேக்புக் (1) ஃபேஸ்புக் (1) ஃபோட்டூன் (1) ஃபோட்டோ (1) ஃபோன் (1) ஃபோர்ட்டூன் (1) ஃப்ரெண்டு ரெகுஸ்ட் (1) அ.ர.முஹமது தஸ்தகீர் (1) அஇதிமுக (1) அகத்தின் அழகு (1) அகிலம் (1) அங்கீகாரம் (1) அசத்தல் (1) அசைவு (1) அஜினோமோட்டோ (1) அஜீஸ் (1) அஜ்மான் (1) அஜ்மாஸ் நோன்பு கஞ்சி (1) அட (1) அடப் பாவிங்களா ? (1) அடிக்கல் (1) அடிமை (1) அடிமை வணிகர் அந்-நுஐமான் (ரலி) (1) அடியேனின் அகரம் (1) அட்லாண்டா (1) அணிவகுப்பு (1) அணு (1) அணை (1) அண்ணன் (1) அண்ணன் தம்பி உறவு (1) அண்ணே ! (1) அதிகாரம் (1) அதிகாரி (1) அதிகாலை (1) அதிசயம் (1) அதியற்புதம் (1) அதிராம்பட்டினம் 2011 (1) அதிராம்பட்டினம் 2012 (1) அதிராம்பட்டினம்2011 [2] (1) அதிரை ஃபாரூக் (1) அதிரை அபூபக்கர் (1) அதிரை அஸ்ரப் (1) அதிரை அஸ்லம் (1) அதிரை ஆத்திச்சூடி (1) அதிரை இலக்கிய மாமன்றம் (1) அதிரை இஸ்லாமிக் மிஷன் (1) அதிரை கல்வி CD (1) அதிரை கல்வி அறக்கட்டளை (1) அதிரை கல்வி விழிப்புணர்வு (1) அதிரை கீழத்தெரு (1) அதிரை சித்தீக் பள்ளி (1) அதிரை டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் (1) அதிரை தமுமுக (1) அதிரை பெருநாள் (1) அதிரை பெருமை (1) அதிரை பேரூராட்சி (1) அதிரை பொருட்காட்சி (1) அதிரை போஸ்ட் (1) அதிரை மாடு (1) அதிரை மாணவி (1) அதிரை வரலாற்றில் (1) அதிரை வள்ளல் (1) அதிரை வாசனை (1) அதிரைக் கடல் (1) அதிரைச் செய்தி (1) அதிரைமுஜீப் (1) அதிரையன் (1) அதிரையின் நிய்யத்து (1) அதிரையின் பூர்வ குடிமக்கள் (1) அதிரையின் விருந்து உபசரிப்புகள் (1) அதிரையில் (1) அதிரையில் பரவிவரும் அதிபயங்கர ஆபத்தான நோய் (1) அதிரையில் மழையாமே (1) அதிரையில் ஷவ்வால் நோன்பு - புறக்கனிக்கப்படுகிறதா (1) அதிர்ச்சிகள் (1) அது (1) அது ஒரு பொற்காலம் (1) அது ஒரு ஹஜ்ஜுப்பெருநாள் நேரம் (1) அந்த ஏழு நாட்கள் (1) அந்த திக் திக் நேரங்கள் (1) அந்தக் காலம் (1) அந்தரத்தில் (1) அந்தி (1) அனஸ்(ரலி) (1) அனுபவப் பாடம் (1) அனுமதி (1) அனைத்துத் தெருக்களும் அதிரையின் கருக்கள்.editorial (1) அன்னை (1) அன்னை ஆயிஷா சித்தீக்க(ரலி) (1) அன்னை கதீஜா மகளிர் கல்லூரி (1) அன்னையர் தினம் (1) அன்பளிப்புகள் (1) அன்பு (1) அன்புக் குறிப்புகள் (1) அன்புடன் புகாரி (1) அன்று பெய்தது மழை (1) அன்றைய நோன்பும் (1) அபராதம் (1) அபு பஜ்லு (1) அபு ஹனிஃபா (1) அபுமஹ்மூத் (1) அபுருமானா (1) அபுல் ஹசன் (1) அபுல்கலாம் ஆஷாட் (1) அபூ சுஹைமா (1) அபூ நூரா (1) அபூஇப்றாஹீம் (1) அபூபக்கர் (1) அபூபக்கர் ரழி (1) அபூஹனிஃப (1) அபூஹனிஃபா (1) அப்டேட் (1) அப்துர் ரஷீது ரஹ்மானி (1) அப்துர் ரஷீத் ரஹ்மானி (1) அப்துல் கறீம் (1) அப்துல் கலீம் (1) அப்துல் ஜப்பார் (1) அப்துல் நாசர் மதனி (1) அப்துல் ராஜிக் (1) அப்துல்லாஹ் (1) அப்பர் கோதையர் (1) அப்பா ஏசுவாஹ....(அதிரையின் மண் வாசனை) (1) அப்பாஸ் அலி (1) அமீரக தமிழ் மன்றம் (1) அமீருல் முஃமின் (1) அமெரிக்க அதிரையர்களின் கூட்டமைப்பு (1) அமெரிக்காவில் இறையில்லம் தீக்கிரை (1) அமைதியின் ஆளுமை (1) அமோஜான் (1) அம்மார்(ரலி. (1) அம்மாவைப் பிடித்த பேய் (1) அய்டா (1) அரஃபாத் 1987 (1) அரஅல (1) அரசினர் மேல்நிலை பள்ளி (1) அரசியலல்ல (1) அரசியல் களம் (1) அரசியல் முதல்வர் (1) அரசியல் வியாதிகளா? (1) அரசியல்வாதிகளா? (1) அரசு உதவிகள் (1) அரசு வேலை வாய்ப்பு (1) அரபிக் (1) அரபு நாடுகள் (1) அரபு நாட்டு பயணம் (1) அரபுலகம் (1) அரவணைக்க அருகதையற்றவர்களா அகதிகள் (1) அருட்பேறு (1) அருமறை (1) அரும்பு (1) அரும்பு பாட்டு (1) அரும்புப்பாட்டு (1) அரும்பேறு (1) அருளைச் சுமந்த ஹாஜிகளே...வருக (1) அருவி (1) அரேபியர்கள் (1) அர்-ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (1) அர்ப்பணிப்பு (1) அறிகுறிகள் (1) அறிந்து (1) அறியாமைக் காலம் (1) அறிவிப்பு சம்சுல் இஸ்லாம் சங்கம் (1) அறிவியல் பாங்கு (1) அறிவுக்குப் புலப்படாத ஆழ்கடலே (1) அற்பணிப்பு (1) அலகே ஆயுதம் (1) அலைகள் (1) அலைபாயுதே (1) அல்-கத்ர் (1) அல்ஜஸீரா (1) அல்மாஸ் (1) அல்ல (1) அல்லாஹ் யாரை நேசிக்கிறான் (1) அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் 99 (1) அல்லாஹ்வின் சக்தி (1) அல்லாஹ்வுக்கு நன்றி (1) அழகியல் (1) அழகு மொழி (1) அழகுக் குறிப்புகள் (1) அழிக்க திட்டம் (1) அழுகை (1) அழுவதற்கா (1) அழைப்பு பணி (1) அழைப்பு பணி மதமாற்றம் ஆகுமா (1) அவசர இழப்பு (1) அவசர உலகம் (1) அவன் (1) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும். சஹாபாக்கள் (1) அவலம் (1) அவளைச் சுற்றி (1) அவள் (1) அவஸ்தை (1) அவ்லியா (1) அஸார் (1) அஸ்மா(ரலி) (1) அஸ்மாவுல் ஹுஸ்னா அகவல் (1) அஸ்லம் (1) அஸ்லம் பாஷா (1) அஹமது பாக்கவி (1) அஹமது ஹாஜா (1) அஹமது ஹாஜி (1) அஹமதுல்லா ஷா (1) அஹ்மது (1) அஹ்மது அமீன் (1) அஹ்மது ஷஃபி (1) அஹ்மது ஹாஜா (1) அஹ்மத் தீதத் (1) ஆஃபியா புரூட் (1) ஆஃபீஸ் பாயும் - வெகேஷனும் (1) ஆஃப்பிரிக்கா (1) ஆகஸ்ட் (1) ஆக்ஃபோர்டு (1) ஆக்கமிடு அடுமடையா (1) ஆக்ரா (1) ஆசியாநெட் (1) ஆசிரியர்கள் (1) ஆசிரியைகள் (1) ஆசை கணவுகள் (1) ஆச்சர்யம் (1) ஆஞ்சியோ கிராஃபி (1) ஆடவரும் (1) ஆடு (1) ஆடையகம் (1) ஆட்சியதிகாரம் (1) ஆட்சியிழந்த கட்சி (1) ஆட்டம். (1) ஆட்டு மூளை (1) ஆண் (1) ஆண்கள் (1) ஆண்டவனே ஆள்பவனே (1) ஆண்டு விழா (1) ஆண்டுவிழா (1) ஆதரவு (1) ஆனந்தாவின் அபிநயம் (1) ஆனலைன் (1) ஆபூஇப்ராஹீம் (1) ஆப்பரேஷன் (1) ஆப்பிரிக்க (1) ஆப்பிள் (1) ஆப்ரேஷன் (1) ஆமினா முஹம்மது (1) ஆமை (1) ஆம் ஆத்மி (1) ஆயத்துல் குர்ஸி (1) ஆயிஷா பல் மருத்துவமனை (1) ஆய்ஷா ஃபாத்திமா (1) ஆரசியல் (1) ஆரிஃபா ஆலிமா (1) ஆர்நோத் வான் டோர்ன் (1) ஆர்வம் (1) ஆறிலிருந்து அறுபதுவரை (1) ஆறு (1) ஆலிம்சா (1) ஆளுக்கொரு சட்டம் (1) ஆளும் கட்சி (1) ஆளும் வளரனும் அறிவும் வளரனும் (1) ஆளூர் ஷாநவாஸ் (1) ஆவ்மியாக்கா (1) ஆஷி அஹ்மத் (1) ஆஷிக் அஹ்மத் (1) ஆஹா (1) இஃப்தார் (1) இக்கணம் (1) இக்றா (1) இங்கு எது முடியும் (1) இடர்கள் (1) இடி (1) இடியப்பம் (1) இடியாப்பம் (1) இடைத்த் தேர்தல் (1) இணைவத்தல் (1) இணைவைப்பு (1) இதயதளம் (1) இது எப்படி இருக்கு (1) இந்த வார செய்தி (1) இந்தக் காலம் (1) இந்தப் பாதை (1) இந்தவுளே (1) இந்திய அரசியல் (1) இந்திய ஊடகங்கள் (1) இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லீம்களின் பங்கு (1) இந்திய சுந்தந்திர தினம் (1) இந்திய ரூபாய் (1) இந்தியா சுதந்திர தினம் 1947 (1) இந்து (1) இந்துத்துவா (1) இந்தோனேஷியா (1) இந்நேரம் (1) இனப்படுகொலை (1) இனிக்கிறது (1) இனிமை (1) இனிய (1) இனிய திசைகள் (1) இன்டர்வியூ (1) இன்னுமா தயக்கம் (1) இன்பம் (1) இன்று 10.01.2011 (1) இன்று 18 02 2011 (1) இன்று இரு தகவல் (1) இன்று இரு தகவல்கள் (1) இன்று நாளை (1) இன்றும (1) இன்றைய வீம்பும் (1) இன்ஷூரனஸ் (1) இபுராகீம் அன்சாரி (1) இப்தார் நிகழ்ச்சி (1) இப்னு அப்பாஸ் (1) இப்ராஹீம் (1) இப்றாகிம் அன்சாரி (1) இமாம ஷாஃபி பள்ளி (1) இமாம் (1) இமாம் அபூஹனீஃபா (1) இமாம் புகாரீ (1) இமாம் ஷாஃபி (1) இம்தாதி (1) இயக்க வெறி (1) இயக்கங்கள் (1) இயற்கை இன்பன் (1) இயற்கை எங்கே (1) இரங்கற்பா (1) இரங்கல் (1) இரண்டாம் ஆண்டு (1) இரயில்வே (1) இரவேலர்கள் (1) இராஜமடம் (1) இராணுவம் (1) இராமநாதபுரம் (1) இருட்டு (1) இருதயம் (1) இருளும் ஒளியும் (1) இருவேறு துருவங்கள் (1) இர்ஃபான் (1) இறக்கை (1) இறக்கை கட்டிப் பறக்குதய்யா (1) இறப்பு (1) இறுதி மூச்சு (1) இறுதியாண்டு (1) இறை வசனங்கள் (1) இறைமறை (1) இறைமார்க்கம் (1) இறையச்சமுள்ள தந்தை (1) இறையச்சம் (1) இறையில்லத்தில் யாருடன் மல்லுக் கட்டுகிறார்கள் (1) இறைவனின் கூலிப்படைகள் (1) இறைவனுக்கு நன்றி (1) இறைவேதம் (1) இலக்கு (1) இலங்கை தமிழனின் இதையக் குரல் (1) இலட்சினை (1) இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம் (1) இலவச மருத்துவ முகாம் (1) இலை (1) இல்ம் (1) இல்லறம் (1) இல்லல்லாஹ் (1) இல்லாள் (1) இளம் மனைவின் கடிதம் (1) இஸலாம் (1) இஸ்மாயில் ஸலஃபி (1) இஸ்லாத்திற்காக (1) இஸ்லாத்திற்கு எதிரான (1) இஸ்லாமிய தீவிரவாதம் (1) இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் (1) இஸ்லாமிய வரலாறு (1) இஸ்லாமிய வரலாற்று மின்னொளிகள் (1) இஸ்லாமியப் பாரவை (1) இஸ்லாம் மதத்திற்கு ஐரோப்பாவின் கடன் (1) ஈடிணையற்ற இறைவா (1) ஈத்மிலன் (1) ஈன்ற பொழுதின் (1) ஈமெயில் (1) ஈர நெஞ்சம் (1) ஈராக் (1) ஈர்ப்பு (1) உ.பியில் துவங்கவிருக்கும் போர் (1) உங்கள் ஓட்டு விறபனைக்கு அல்ல (1) உங்கள் வீட்டுத் திருமணத்தில் இது இருக்கா (1) உசுரு (1) உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு (1) உடல் ஆரோக்கியம் (1) உடல் பயிற்சி (1) உணர்வுகள் மூன்று (1) உண்டாயிருக்கேன் (1) உண்ணாவிரதம் (1) உண்மைச் சம்பவம் (1) உதவியது இஸ்லாம் (1) உன்டகலியான் அதிரையரின் உணவு (1) உன்னை அறி (1) உப்பு (1) உமர் (1) உமர் (ரலி) (1) உமர் கையாம் (1) உமர் ஷரீப் முப்தி (1) உமர்தம்பி (1) உம்மா'ன்டா சும்மாவா ? (1) உம்மி மக்தூம் (1) உம்ரா (1) உயர் கல்விக்கு உதவித் தொகை (1) உயிரெழுத்துகள் (1) உயிர் (1) உயிர்க் கொத்திப் பறவை (1) உரிமைகள் (1) உருகிய எதிர்ப்புகள் (1) உருகுதே அதிரை (1) உருக்கம் (1) உரைநடை (1) உர்து (1) உறவின் பிரிவு (1) உறவு வளர்ப்போம் (1) உறவுகள் எங்கே (1) உறவுகள் மேம்பட உன்னத 10 வழிமுறைகள் (1) உறுப்புகளின் நோய் (1) உலக அதிசயம் (1) உலகக் கோப்பை (1) உலகமயம் (1) உலகம் எப்படி உருவானது (1) உலகின் தலைசிறந்த பணக்காரர் (1) உலோகப்பறவை (1) உல்லாசம் (1) உளத்தூய்மை (1) உளவியல் (1) உளுச் செய்வது (1) உள்குத்து (1) உள்ளம் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சி த் தேர்தல் (1) உள்ளாட்சித் தேர்தல் (1) உள்ளே (1) உழை (1) உழைப்பு (1) உஸ்மான்(ரலி) (1) ஊடக (1) ஊடக தேர்தல் பிரச்சாரம் 2016 பதிலடி (1) ஊடக விபச்சாரம் (1) ஊடகங்கள் (1) ஊடங்கள் (1) ஊனம் (1) ஊராட்சி (1) ஊரோடு உறவாடு (1) ஊர் செய்தி (1) ஊர் நடப்பு (1) ஊர் நினைவுகள் (1) ஊர் பார்வை (1) ஊர்க்காரர் (1) ஊர்வன (1) எக்ஸ்க்யூமி (1) எக்ஸ்பிரஸ் (1) எங்க முதலாளி (1) எங்கவூர் மாப்பிள்ளை (1) எங்கே (1) எங்கே நேரம் (1) எங்கே வீழ்ந்தோம் (1) எங்ஙனம்? (1) எச்சில் (1) எஞ்சினியர் (1) எடு-இட்டோர்-இயல் (1) எண்ணமும் (1) எண்ணம் (1) எண்ணிலடங்கா (1) எண்ணெய் (1) எதிரி (1) எதுக்கும் நல்ல மனசு வேணும் (1) எத்தீம்கானா (1) எந்தையே (1) எனக்காக (1) எனதூர் (1) என் ஃப்ரண்டப் போல யாரு மச்சான் (1) என் கண்ணான வாப்பாவே (1) என் கனவு (1) என் கேள்விக்கென்ன பதில் (1) என் பார்வை (1) என் மொழி (1) என் வீட்டுத் தோட்டத்தில் (1) என்.ஷஃபாத் (1) என்கவ்ன்ட்டர் (1) என்ன (1) என்ன கொடுமை (1) என்னாட்டின் (1) என்னால் இயன்ற அறம் (1) என்னைக் கண்டெடுத்தேன் (1) எபிக் வெப் பிரவுசர். (1) எப்படி அவர்களை மன்னிப்பேன் (1) எப்படிப் பிறந்தாய் நீ (1) எப்படியும் மரணம் முடிவாகி விட்டது (1) எப்புடீ (1) எம்.ஃபில் (1) எரிகல் (1) எர்மைல் தவாலும் (1) எறச்சி (1) எலும்பு உறுதிதன்மை (1) எலும்பு கூடு (1) எல்லாப் புகழும் இறைவனுக்கு (1) எல்லை (1) எல்லைக் கோடு (1) எழுதியதல்ல (1) எழுது (1) எழுத்தியல் (1) எழுவதற்கா? (1) ஏகத்துவம் (1) ஏஞ்சலா கொலின்ஸ் (1) ஏனெனில் திமிர் (1) ஏப்ரல் 1 (1) ஏமாற்றமா (1) ஏர்வாடி (1) ஏற்ற நாடு (1) ஏற்றமா (1) ஏழை மாணவர்கள் (1) ஏழ்மை (1) ஐ.ஏ.எஸ். (1) ஐ.பி.எல். கிரிக்கெட் (1) ஐக்கியம் (1) ஐந்து (1) ஐஸிஐ (1) ஐஸ்கிரீம் (1) ஒத்தடம் (1) ஒத்துமை (1) ஒரு உரையாடல் With சீனிவாசன் சார். (1) ஒரு கோணல் பார்வை (1) ஒரு ச்சிக்குபுக்கு பாதை (1) ஒரு பிள்ளையின் ஏக்கம் (1) ஒற்றுமை அழைப்பு (1) ஒற்றுமையே பலம் (1) ஒற்றுமை் (1) ஒற்றையாய் (1) ஒலி (1) ஒளரங்கசீப் நான்மணி மாலை (1) ஒளி (1) ஒளி வீசுமுன் (1) ஓடி விளையாடு (1) ஓடை (1) ஓர் அன்னையால் தன் மகனை எப்படி விற்க முடியும் (1) ஓர் ஆய்வு (1) ஓர் பார்வை (1) ஓலை (1) ஔரங்கசீப் நான்மணி மாலை (1) கசையடி (1) கஜினி முகமது (1) கஜ்ஜாலி (1) கஞ்சத்தனம் (1) கடன் அட்டை (1) கடமை (1) கடமைகள் (1) கடற்படை (1) கடி (1) கடி ஜோக்ஸ் (1) கடைத்தெரு (1) கட்சி (1) கட்சிகளின் தந்திரம் சுதந்திர தினம் (1) கட்டிடம் (1) கட்டுபாடு (1) கட்டுப்பாடு (1) கட்டுரைகள் (1) கணகள் இரண்டும் (1) கணினி தமிழ் (1) கண் தானம் (1) கண் பாதுகாப்பு (1) கண் பார்வை விழிப்புணர்வு (1) கண் மருத்துவம் (1) கண்காட்சி (1) கண்ணீர் (1) கண்பார்வை (1) கண்புரை (1) கண்மணி அன்போடு நான் (1) கதைகள் (1) கத்தனா (1) கந்தவரு (1) கந்தூரி மடமை (1) கந்தூரி வழிகேடு (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கனவும் நனவும் (1) கன்னிப் பதிவு (1) கபுரை இடிக்க வேண்டுமா? (1) கமாலுதீன் மதனி (1) கம்பி (1) கம்பியில்லா தொடர்பு (1) கம்யூனிசம் (1) கம்ளைண்ட் (1) கயவர்கள் (1) கரகரப்பு (1) கரன்ஸிக் களேபரங்கள் (1) கருணை (1) கருத்தாய்வு (1) கருத்து முரண்பாடுகள் (1) கருப்பு எலி (1) கருமையும் வெண்மையும் (1) கரும்புகை (1) கருவளையம் (1) கருவேலமரம் (1) கர்ப்பினி பெண்களுக்கு (1) கர்ழன் ஹஸனா (1) கறி (1) கறை (1) கற்கை (1) கலக்குங்க (1) கலப்படம் (1) கலரிச் சாப்பாடு (1) கலவியின் அவசியம் (1) கலாச்சார (1) கலிஃபா டவர் (1) கலிஃபோர்னியா (1) கலிஃபோர்னியா மாகாணம் (1) கலெக்டர் (1) கலை (1) கலைஞர் (1) கல்ந்துரையாடல் (1) கல்லும் (1) கல்வி நேரமில்லை (1) கல்வி மாநாடு (1) கல்வி வளர்ப்போம் (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு நேரலை. கல்வி விழிப்புணர்வு (1) கல்விக் கூடம் (1) கல்வித்துறை (1) கல்வியாண்டு (1) கல்வியாளார்கள் (1) கல்வியும் கற்போரின் கடமையும் (1) கல்வியும் கற்போர் க்டமையும் (1) களஞ்சியம் (1) கள்ளக்காதல் (1) கழிப்பிடத்தில் (1) கவனமாக கேளுங்கள் (1) கவலை நேரத்திலும் கவிதையா (1) கவிக்கோ (1) கவிஞன் (1) கவிஞர்கள் (1) கவிதை கிரவ்ன் (1) கவிதை சபீர் அஹ்மது (1) கவிதை வாப்புச்சா (1) கவிதைக் காணொளி (1) கவிதைப் பேட்டி (1) கவிதையல்ல (1) கவிதையே தெரியுமா ? (1) கவிநடை (1) கவியனபன் (1) கவியுரையாடல் (1) கவுரவம் (1) காகிதம் (1) காக்கை (1) காசிருந்தால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியுமா (1) காடுகள் (1) காணவில்லை (1) காதலர்கள் (1) காந்தி நாட்டு இஸ்லாமியன் (1) கானல் நீர் (1) கானா (1) கான் அகடமி (1) கான்சல (1) காப்பி அடிக்கிறது (1) காப்பீடு (1) காமெடி (1) காயல்பட்டினம் (1) காரை வீடுகள் (1) காற்றலை (1) காற்றாழையும் (1) காலண்டர் (1) காழ்ப்பு (1) காவந்து பண்ணும் கலை (1) காவல் (1) காவல் நிலையம் (1) காவி தீவிரவாதி (1) காவித்துறை (1) காஷ்மீர் (1) கிரடிட் கார்டு (1) கிரவ்னு (1) கிரஸண்ட் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (1) கிளாஃபத் (1) கிள்ளித் திரிந்த காலம் (1) கிழவி (1) கிழிந்தது. (1) கிஷார் முஹம்மது. (1) கிஸ்ஸாஸ் (1) கீற்று (1) கீழக்கரை (1) குஜராத் கலவரம் (1) குஜாராத் (1) குஞ்சுகளும் (1) குடியரசுதினம் (1) குடும்ப அட்டை (1) குடும்பங்களின் சந்திப்பு (1) குடும்பன் குறிப்புகள் (1) குடைக்குள் மொட்டு (1) குப்பகள் (1) குப்பை (1) குயினி படில்லா (1) குரல் (1) குருதி (1) குருவி (1) குருவியும் (1) குர்ஆன் ஓதுதல் (1) குர்ஆன் சுன்னா (1) குர்பானி (1) குறிக்கோள் (1) குறிப்புகள் (1) குறைபாடுகள் (1) குறைவற்ற செல்வ (1) குற்றாலம் 2011 (1) குல்ல்லா (1) குளச்சல் (1) குளுக்கோமா (1) குழந்தை தொழில் (1) குழப்பம் (1) கூக்குரல்கள் (1) கூட்டணிக் கொட்டகைகள் (1) கூட்டணிக் கொள்கைகள் (1) கூட்டுத் தொழுகை (1) கூறு (1) கேடி (1) கேட்ட நினைத்த'வைகள்' (1) கேன்ஷல்ல அனுப்பிடுங்க (1) கேன்ஸரிலிருந்து தப்புவது எப்படி (1) கேரளம் (1) கேள்வி (1) கைகள் (1) கைகாட்டி கலாசாரம் (1) கைது (1) கொக்கு (1) கொசு ஒரு தொடர்கதை. (1) கொசுத் தொல்லை (1) கொஞ்சூண்டு (1) கொடு (1) கொடுவா மீனு (1) கொண்டாட்டம் கிரவ்ன் (1) கொண்டாட்டம் மட்டுமா பெருநாள் (1) கொல்லைப்புர தட்சனைகள் (1) கோ எஜுகேசன் (1) கோடி (1) கோடு உயர்ந்தது! குன்றம் தாழ்ந்தது (1) கோடை கால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 2016 (1) கோனார் ஹாஜியார் (1) கோப்பு (1) கோலாலம்பூர் (1) கோளாறு (1) கோள் (1) கோழி (1) க்ளாஸிக் (1) ஙே (1) சகக்ரை (1) சகன் (1) சகோதரகள் (1) சகோதரன் (1) சகோதரி (1) சங்கங்கம் (1) சங்கமம் (1) சங்கை மிகு ரமலான் (1) சட்டங்கள் (1) சட்டசபை (1) சட்டப்பேரவை (1) சட்டம் ஒழுங்கு பிரச்சினை (1) சட்டை (1) சதகா (1) சத்துணவு (1) சந்தேகம் (1) சந்தை (1) சந்தோஷம் (1) சன்டிகார் (1) சபிர் (1) சப்பிடலாம் (1) சமச்சீர் (1) சமய நல்லிணக்கம் (1) சமாதானக் கூட்டம் (1) சமாதி (1) சமுதாயம் (1) சமூக பிணைப்பு (1) சமூகம் (1) சரணடைய மறுத்த சண்டமாருதம்- திப்பு சுல்தான் - 1 (1) சரி (1) சரித்திரம் (1) சர்தார்ஜி (1) சர்வீஸ் (1) சலுகை (1) சல்மான் கான் (1) சவுதி (1) சவுதியில் நடப்பது என்னா? (1) சவூதிச் சிறுமி லமா அல்-காமிதி (1) சாக்கடை (1) சாச்சா (1) சாச்சி (1) சாஜிதா புக் செண்டர் (1) சாதனயாளார் (1) சாதனைச் செம்மல் (1) சாதனைப் பெண்மனி (1) சாதி (1) சாதி ஒழிப்பு (1) சாதிக் பாட்சா (1) சான வயல் (1) சானவயல் (1) சாபமா (1) சாபாமா? (1) சாம்பல் (1) சார் (1) சார் பதிவாளர் (1) சார்ஜா (1) சார்ந்திருப்பவர்கள் (1) சாலைகள் (1) சி.எம்.பி.லைன் (1) சிகரம் (1) சிகெரட் (1) சிட்டுக்குருவி (1) சித்தப்பா (1) சிநேகிதிகள் (1) சிந்தனை அபு ஈசா (1) சிந்தனை ஏற்றத் தாழ்வு (1) சிந்தனைக் கோளாறு (1) சிந்தனைத் துறை (1) சிந்தியுங்கள் (1) சினிமா (1) சினிமாவும் முஸ்லீம்களும் (1) சின்னச் சின்ன ஆசைகள் (1) சிப்பி (1) சிப்பிக்குள் சூரியன் (1) சிரித்து (1) சிறப்பு நிகழ்வுகள் (1) சிறப்புரை (1) சிறுகதை (1) சிறுபன்மையினர் கல்லூரி (1) சிறுபான்மை (1) சிறுவர்கள் (1) சிறை (1) சில நேரங்களில் சில மனிதர்கள் (1) சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு (1) சிவகங்கை (1) சீ (1) சீச்சீ இந்த பழம் புளிக்கும் (1) சீதனமும் (1) சீதனம் (1) சீனப் பெண் (1) சீனா (1) சீரியல் (1) சுகங்கள் (1) சுடச்சுட அதிரை (1) சுட்டெரிக்கும் சூடு (1) சுட்டெரிக்கும் பாலையில் (1) சுதந்திர தினம் (1) சுதந்திர தினம் யாருக்கு (1) சுத்தமின்மை (1) சுப்ஹு (1) சுப்ஹு தொழுகை (1) சுமைய தாவூத் (1) சுமையா (1) சுமையாகிப்போனது (1) சும்மாதான் (1) சுய விளக்க உரை (1) சுயநலம் (1) சுரண்டல் (1) சுற்றித் திரியும் வாலிபமே (1) சுற்றுபுற சூழல் பாதுகாப்பு (1) சுவனத்தென்றல் (1) சுவனப்பிரியன் (1) சுவர்க்கம் (1) சூசன் பஷீர் (1) சூடு பறக்கும் விவாதம் (1) சூது சூழ் உலகு (1) சூனியம் (1) சூனியம் வைக்கத் தூண்டியது யார் (1) சூரத்தல் இஃக்லாஸ் (1) சூரத்துல் ஃபாத்திஹா (1) சூரத்துல் பஜ்ர் (1) சூரா லுக்மான் (31:32) (1) சூரியன் (1) செண்டர் (1) சென்சார் (1) சென்னை பல்கலைக்கழகம் (1) சென்ற வாரம் (1) சென்றுவா ரமளானே (1) செப்டம்பர் (1) செம்மல் (1) செயற்கை கண் (1) செய்தி சேனல்கள் (1) செய்தியாளர் (1) செய்முறை (1) செல்போன் டவர் (1) செல்லப் பிராணிகள் (1) செல்லப்பிள்ளை (1) செல்லம் (1) செல்வம் (1) சேது சமுத்திர திட்டம் (1) சேனல்கள் (1) சேய் (1) சேர்மன் (1) சேறு (1) சைலன்ஸ் ப்ளீஸ் (1) சொந்தம் (1) சொர்க்கம் (1) சொல் மந்திரம் (1) சொல்வதொன்றும் செய்வதொன்றுமாய் (1) சோம்பேறித்தனம் (1) சோலை (1) சோலையும் பாலையும் (1) ச‌ம்பாத்திய‌ம் (1) ஜக்காத் (1) ஜக்காத் நிதிப் பங்கீடு (1) ஜனநாயகத்தை விலைக்கு வாங்கிய பணநாயகம் (1) ஜனாதிபதி யார் (1) ஜப்பான் (1) ஜமாத் (1) ஜமால் மதனி (1) ஜமால் முகம்மது கல்லூரி (1) ஜலீலா கமால் (1) ஜாஃபர் (1) ஜாபிர் (ரலி) (1) ஜாமாத் (1) ஜாஸ்மின் (1) ஜாஹிர் (1) ஜும்மா (1) ஜும்மா பள்ளி (1) ஜூஸ் (1) ஜெ (1) ஜெஜெ. சொத்து குவிப்பு (1) ஜெட் (1) ஜெட்லி (1) ஜெய்தைக் காணவில்லை (1) ஜெய்னுல் ஆபிதீன் (1) ஜெர்மனி (1) ஜைனப்(ரலி) (1) ஜ்ஃபருல்லாஹ் (1) ஞானப் பயணம் (1) டாக்கி (1) டாக்டர் சுமையா தாவூத் (1) டாலர் (1) டி.வி. எச்சரிக்கை (1) டிக்கெட் (1) டிஜிட்டடல் (1) டிஜிட்டல் (1) டிஜிட்டல் இந்தியா (1) டியூசன் (1) டிரஸ்ட் (1) டிஸெம்பர் (1) டிஸைன்ஸ் (1) டீக்கடை (1) டீக்கடை குழுமம் (1) டெலஸ்கோப் (1) டேரா (1) ட்விட் (1) த.மு.முக. (1) தஃபீக் சுல்தானா (1) தகப்பன் (1) தகர்ப்பதற்கா? (1) தகவல் (1) தகவல் அறியும் உரிமைச் சட்டம் (1) தகவல் தொடர்பு (1) தகுதிக்கேற்ப தண்டனை (1) தக்பீர் (1) தங்க முதலாளி (1) தங்கச்சி (1) தங்கப் பதக்கம் (1) தங்கை (1) தடசணையும் (1) தடம் (1) தடைகள் (1) தடைக் கல் (1) தண்டனை (1) தண்டவாளம் (1) தண்ணீர் தாகம் தீர்க்கவா (1) ததஜ (1) தந்தி டிவி. (1) தந்தை மகள் (1) தந்தை வழி உறவு (1) தந்தையர் தினம் (1) தந்தையெனும் பாசம் (1) தனித் தன்மை (1) தனித் தூது (1) தனித்தமிழ் (1) தன்னடக்கமும் மரியாதையும் (1) தன்னிலை மேம்படுத்தல் (1) தன்னிலை விளக்கம் (1) தன்னிலை விள்க்கம் (1) தன்மை (1) தப்லீக் (1) தமிழக முதல்வர் (1) தமிழக முஸ்லீம்களின் ஒற்றுமை (1) தமிழர்கள் (1) தமிழும் ஆங்கிலமும் பேசிக்கொண்டால் (1) தமிழ் தாவா (1) தமிழ் தாவா பிரிவு (1) தமிழ்நாடு அரசு (1) தமீமுல் அன்சாரி (1) தயபுள்ளயளுவோ (1) தரகர் தெரு (1) தரமற்ற தாரகை விருப்பம் (1) தரமிழந்து வருகிறதா (1) தரவிரக்கம் (1) தராவிஹ் தொழுகை (1) தரைமட்டம் (1) தர்ஜுமா (1) தர்பியா மையம் (1) தர்பிய்யா (1) தர்மம் (1) தர்ஹா (1) தற்கொலை தீர்வாகுமா (1) தலை (1) தலைசிறந்த சமுதாயம் (1) தலைமை உருவாக்கம் (1) தலைமைத் தேர்வு (1) தலைமைத்துவம் (1) தலைவரின் தகுதிகள் (1) தலைவர் யார்? (1) தலைவியாகி (1) தள விளக்கம் (1) தள்ளி வண்டி (1) தழுவல் (1) தவாப் (1) தவிர்த்திடுங்கள் (1) தவிர்ப்போம் (1) தவ்ஃபீக் (1) தவ்ஹீத் (1) தவ்ஹீத்கான் (1) தஸ்தகீர் (1) தஹ்ஸின் நிலோஃபர் (1) தா.பாண்டியன் (1) தாஃவா (1) தாஜூதீன் (1) தாஜ் மஹால் (1) தாஜ்மஹால் (1) தாத்தா (1) தாம்பத்யம் (1) தாயின் அறிவுரை கேட்போம் (1) தாய் பாசம் (1) தாரூத் தவ்ஹீத் (1) தாரை வார்க்கவா? (1) தாலிச்சா (1) தால் (1) தாவஆ பணி (1) தாவா (1) தாஹா சார் (1) தி ஹிந்து தமிழ் (1) திக் திக் (1) திக்ர் (1) திடீர் கல்லறை (1) திட்ட அறிக்கை (1) திப்பு சுலதான் (1) திப்பு சுல்தான் (1) திமிங்கலச் சாவுகள் (1) தியாகிககள் (1) தியாகிகள் (1) திரட்டி (1) திரவியம் (1) திராம்பட்டினம் (1) திரிபு (1) திரு(தொடண்)டர்) (1) திருடன் (1) திருடாதே (1) திருட்டு (1) திருத்தம் (1) திருப்பூர் to அதிரை (1) திருமணங்கள் (1) திருமணத்திற்கு கவுன்சிலிங் (1) திருமறை (1) திரைகடலோடி திரவியம் தேடு (1) திரைகடல் (1) திரையங்குகள் (1) திரையரங்கம் (1) திரையில் சிறை (1) திறந்த மடல் (1) தில்லு முல்லு (1) தீ தீயனைப்பு நிலையம் (1) தீதும் நன்றும் பிறர்தர வாரா (1) தீன் (1) தீன்குல ஹீரோக்களுக்கு (1) தீரன் திப்பு (1) தீரன் திப்பு சுல்தான் (1) தீர்ப்பு (1) தீவிர (1) தீவு (1) துக்ளக் (1) துடிக்கக் கொன்றனர் (1) துணை போகாதீர் (1) துபாய் - அதிரை (1) துரோகம் (1) துர்நாற்றம் (1) துலங்கும் (1) துளி உலகம் (1) துளியளவு (1) தூக்கமற்ற பொழுதுகளில் (1) தூதரகம் (1) தூரோகம் (1) தென் தமிழகம் (1) தெரு சங்கங்கள் (1) தேச பக்தி (1) தேசிய கொடி (1) தேசிய தினம் (1) தேடுகிறேன் (1) தேத்தண்ணி (1) தேனி (1) தேன் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் கருத்துக் கணிப்புகள் (1) தேர்வு அட்டவனை (1) தேர்வு பள்ளித் தேர்வு முடிவுகள் (1) தேர்வு முடிவுகள் (1) தையல் (1) தொட (1) தொடர் சொற்பொழிவு (1) தொடு (1) தொட்டி (1) தொண்டர் (1) தொனா (1) தொலைக் காட்சி (1) தொலைத்தது (1) தொழிலாளி (1) தொழில் நுட்பம் (1) தொழில்முனைவோருக்கான பயிற்சி முகாம்அ (1) தோழி (1) தோழியர் (1) நகை (1) நக்கப்பா (1) நடிகையாயிருந்து (1) நடை பயிற்சி மேடை (1) நட்சத்திரமாக (1) நட்சத்திரம் (1) நட்புடன் ஜமால் (1) நண்டும் நரியும் (1) நந்தினி (1) நனா (1) நன்கொடை (1) நன்மையே வேண்டி. 4th year (1) நன்றியுரை (1) நன்றே (1) நபி பெருமானார் வரலாறுமுன்னுரை (1) நபி(ஸல்) வரலாறு (1) நபித் தோழர்கள் (1) நபித்தோழர் (1) நபிவழி (1) நமது கல்வி (1) நயவஞ்சத்திற்கு பகிரங்க எச்சரிக்கை (1) நரகம் (1) நலம் (1) நல்ல மனையாள் (1) நல்லது (1) நல்லாருக்கியாம்மா? (1) நல்லிணக்கம் (1) நல்லொழுக்கம் (1) நள்ளிரவு (1) நவீன மவ்லூது (1) நாக்கு (1) நாங்கள் அதிரை நிருபர் (1) நாங்கள்தான் (1) நாடி (1) நாடு (1) நாட்டாமை தீர்ப்பு (1) நானும் ஆஃப்ரிக்காவும் - தொடர்கிறது (1) நான் (1) நான் என்பது (1) நான் மிகச் சிறந்த மனிதன் (1) நான் முஸ்லிமாகிவிட்டேன் (1) நான் ரெடி நீங்க ரெடியா (1) நான்காம் ஆண்டிலும் (1) நான்காவதுத் தமிழ் (1) நான்றி ஆசான்களே (1) நாய்கள் (1) நாற்காலிகள் (1) நாளங்கள் (1) நாளை? (1) நாவு (1) நிகழ்சிகள் (1) நிகழ்வுகள் (1) நிசார் அஹ்மது (1) நிதானமும் (1) நிதி அமைச்சர் (1) நித்தியோன் முன் நான் (1) நினைவலைகள் (1) நினைவிருக்கா (1) நினைவு (1) நிருபர் (1) நிர்வாகம் (1) நிர்வாகிகள் (1) நிர்வாண பாரதம் (1) நிலத்தடி (1) நிலத்தடி நீர் (1) நிழற்பட கருவி (1) நிழலாடும் (1) நிழலின் அருமை (1) நீங்களுமா ஆலிம்ஸா இப்படி செய்தீர்கள் (1) நீங்களும் கிளிக்கலாம் (1) நீடூர் அலி (1) நீதம் (1) நீதித் துறை (1) நீதிமன்றம் (1) நுண்மென் (1) நுனிப்புல் (1) நூதன விளம்பரங்கள் (1) நெஞ்சில் உரமின்றி (1) நெய்னா முஹம்மது (1) நேசம் மாநபி (1) நேரான வழி (1) நேர்கானல் (1) நேறறு (1) நேறு (1) நைஜிரியா (1) நைஜீரியா (1) நொங்கு வண்டி (1) நோக்கம் (1) நோன்பு காலங்கள் (1) நோன்புக் கஞ்சி (1) நோன்புக்கு பிறகு (1) நோம்பு (1) நோம்பு கஞ்சி (1) நோம்பு கஞ்சி அரிசி (1) நோயற்ற வாழ்வு (1) ன் (1) ப.சிதம்பரம் (1) பகல் (1) பகிர்வு (1) பகுருதீன் (1) பகைமை (1) பகையன்று நகை (1) பக்கம் (1) பங்களாதேஷ் (1) பங்கு சந்தை (1) பசி போக்குமா? (1) பசிக்கட்டுகள் (1) பசியாறிட்டு சாப்பிடலாம் (1) பசுமை எங்கே (1) பஜக (1) பஜ்ஜி (1) பஜ்லுர் ரஹ்மான் (1) பஞ்ச் டயலாக் (1) படகு (1) படச் சுருள் (1) படம் சொல்லும் பாடம் (1) படிக்கச் சென்றனர் (1) படித்த (1) படித்தால் மட்டும் போதுமா (1) படை (1) படைத்தவனின் திருக்குர்ஆன் (1) படைத்தவனை நோக்கி (1) படைப்பாளி (1) படைப்பாளிகள் (1) படைப்புகள் (1) பட்ஜெட் 2013 (1) பட்ஜெட் 2013-2014 (1) பட்டதாரி (1) பட்டப்பெயர்கள் (1) பட்டான் (1) பட்டினி (1) பட்டேல் (1) பட்டோலை (1) பணத்தை பிணமாக்கிய மோடி (1) பணம் இங்கே (1) பணம் படுத்தும்பாடு (1) பணி வாழ்வும் பணி ஓய்வும் (1) பணிக்கர் (1) பண்புகள் (1) பதற்றம் (1) பதவி (1) பதவிகள் (1) பதில் (1) பதில் இல்லா கேள்விகள் (1) பதிவது எப்படி (1) பதிவர் உலகம் (1) பதிவிலக்கணம் (1) பதிவேடு (1) பத்தாம் வகுப்பு (1) பத்திரிகை (1) பந்தம் (1) பனி (1) பனிப் பொழிவு (1) பனிப்பொழுது (1) பம்முக்காலே (1) பயங்கரவாதம் (1) பயணிக்கும் பாதை (1) பயிலரங்கம் (1) பரபரப்பு (1) பரமக்குடி (1) பரிசுகள் (1) பரோட்டா (1) பர்ஜ்துபாய் (1) பர்தா (1) பர்மீய முஸ்லீம்கள் (1) பற (1) பறவைகள் (1) பற்றாக்குறை (1) பலம் (1) பல் (1) பல்கிஸ் (1) பல்வலி (1) பள்லிவாசல் நினைவுகள் (1) பள்ளி நினைவுகள் (1) பள்ளி விடுமுறையை எப்படி கழிப்பது (1) பழ மொழி (1) பழ மொழிகள் (1) பழகிய மொழியிலே (1) பழகுமொழி (1) பழைய குருடி கதவைத் திறடி (1) பழைய பேப்பர் (1) பஷீர் ஹாஜியார் (1) பஸ் (1) பஸ்ஸார் (1) பஸ்ஸுப் பயணம் (1) பஹ்ருதீன் அஹ்மது அமீன் (1) பாகிஸ்தான் (1) பாடப் புத்தகம் (1) பாடல் (1) பாட்டி சொன்னது (1) பாட்டி பேரன் உறவு (1) பாட்டு (1) பாபரி மஸ்ஜித் (1) பாரதமணி (1) பார்ட்னர் (1) பார்த்த (1) பார்த்தீனியம் (1) பார்வேர்டு (1) பார்வை (1) பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை (1) பாலைவனம் (1) பால் அருவி (1) பாஸ்வேர்டு (1) பாஸ்வேர்ட் (1) பி (1) பிகார் (1) பிசாசு (1) பிச்சைக்காரர்கள் (1) பிச்சைப் பாத்திரம் (1) பிஜே (1) பிஜேபியை ஆகாதவர்கள் ஆக்கிய பீஹாரிகள் (1) பிடி நழுவிய (1) பித்அத் (1) பித்ரா (1) பினாங்கு சபுறு மாப்புளே (1) பினாங்கு சபுறுமாப்புளே (1) பிரச்சாரம் (1) பிரச்சாரம். (1) பிரயாண வழியில் (1) பிரான்ஸ் (1) பிரி (1) பிரிட்டன் (1) பிரிவு (1) பிரெஞ்சு (1) பிரைல் எழுத்து (1) பிர்ண்டர்ஸ் (1) பிறகு (1) பிறப்பு (1) பிறர் சிரிக்க (1) பிற்பகலும் (1) பிலால் (1) பிலால் (ரழி) (1) பிலால் நகர் (1) பில்கிஸ் (1) பிள்ளைகள் (1) பிழையறப் பிழை (1) பீகார் (1) பீச் (1) பீர் முஹம்மது (1) புகாரி இமாம் (1) புகை (1) புகை வண்டி (1) புகைபப்டம் (1) புகைப்பிடித்தல் (1) புதிய தொடக்கம் (1) புதிய நினைவுகள் (1) புதிய நிர்வாகம் (1) புதிய நூல்கள் (1) புதிய பிரவுசர் (1) புதிய வேலை (1) புதியது (1) புதியதோர் உலகைச் செய்யும் (1) புதிய‌தோர் ஊர் (1) புதுமைப் பெண் (1) புத்தக காட்சி (1) புத்தக வெளியிடு (1) புனித மாதம் (1) புன்சிரிப்பு (1) புராணம் (1) புரிதல் (1) புரை (1) புரோகிதம் (1) புற்றுநோய் (1) புலவர் பஷீர் அஹ்மது (1) புவியீர்ப்பு (1) பூ (1) பூக்கள் (1) பூங்கா (1) பூஜை (1) பூரியான் ஃபாத்திஹா (1) பெங்களூரு (1) பெட்டகம் (1) பெட்ரோல் (1) பெண் இமைக்குள் ஆண்மை (1) பெண் உரிமை (1) பெண்களின் கருத்தென்ன (1) பெண்களுள் பேரறிஞர் (1) பெண்கள்ம் மார்கெட் (1) பெண்சுதந்திரம் (1) பெண்டிரும் (1) பெண்ணாய் பிறப்பதைப் போல்போ ரின்பம் வேறில்லை (1) பெண்ணினம் (1) பெண்ணியம் (1) பெண்மக்கள் (1) பெயரிலித் தோழர் (1) பெயர் கூறுமா..? (1) பெரிய கடிகாரம் (1) பெரியர்வர்கள் (1) பெரியார் (1) பெரியார்தாசன் (1) பெருநாள் ஒளி (1) பெருநாள் தக்பீர் (1) பெருநாள் தொழுகை (1) பெருநாள் வாழ்த்து (1) பெருபான்மை (1) பெருமை (1) பெருமை தீது (1) பெர்னாட்ஷா (1) பேகம் ஹஜரத் மஹல் (1) பேக்கரி (1) பேங்க் (1) பேச்சும் (1) பேச்சுலர் (1) பேப்பர் வேர்ல்டு (1) பேரண்டம் (1) பேரன்பு (1) பேராசிரியர் (1) பேராசிரியர் M H J அவர்களுக்கு (1) பேராவூரணி பலாப்பழம் (1) பேரிடம் (1) பேரிடர் (1) பேருராட்சித் தலைவர் (1) பேரூராட்சி தலைவர் (1) பேரூராட்சி மன்றத் தலைவர் (1) பொக்கிஷம் (1) பொடிசுகளின் த்லை நோன்பு (1) பொது அறிவு (1) பொது சிவில் (1) பொதுக்குழு (1) பொதுமக்கள் (1) பொதுவானவை (1) பொய் வழக்கு (1) பொய் வழக்குகள் (1) பொரிச்ச மீன் (1) பொருட்காட்சி (1) பொறாமை (1) பொறியியல் (1) பொற்காலம் 1977 (1) பொழுதுகள். (1) போக்கு (1) போடாதே தப்பு கணக்கு (1) போட்டி வலைப்பூ (1) போட்டிகள் (1) போதனை (1) போனஸ் (1) போராட்டும் (1) போற்றுவோம் (1) போலி (1) போலி ஆலிம் (1) போலி சான்றிதழ் (1) போலிகள் ஜாக்கிரதை (1) போலிகள் பயிரை மேயும் வேலிகள் (1) போலித் தொப்பிகள் (1) போலீஸ் (1) ப்ராப்ளம் (1) ப்ளஸ் 2 தேர்வு முடிவ்கள (1) ப்ளாக் ஹோல் (1) ப்ளாஸ்டிக் பை (1) ப்ளீஸ் (1) மகத்துவ மருதாணி (1) மகளிருக்கு மட்டும் (1) மகளெனப்படுவள் (1) மகுடம் (1) மக்கட்பேறில்லா மக்கட்கு (1) மக்கள் (1) மக்கள் தொகை (1) மக்கள்தொகையா (1) மக்கா நேரலை (1) மக்தப் மதர்சா (1) மச்சான் (1) மச்சான்ஸ் (1) மடமையிலிருந்து விடுதலை பெறுவோம் (1) மணல் மேடு (1) மண் வாசனை (1) மண்சட்டி (1) மண்டல் கமிஷன் (1) மண்ணறை வாழ்க்கை (1) மண்ணின் மைந்தர்கள் (1) மண்வட்டு (1) மண்வாசனை (1) மதம் (1) மதராஸ் (1) மதவாதம் (1) மதியம் (1) மதீனா நேரலை (1) மதுக்கூர் (1) மதுப் பழக்கம் (1) மதுரை (1) மத்திய அரசு (1) மத்திய கிழக்கு (1) மத்ஹபு (1) மந்திரச் சொல் (1) மந்திரவாதி (1) மனப்பாடம் (1) மனமே தொட்டாசினுங்கிதானே. ஜாகிர் ஹுசைன் (1) மனம் திறந்து (1) மனம் மகிழுங்கள் (1) மனிக்பான் (1) மனித நேயம் (1) மனிதமும் (1) மனிதவளமா (1) மனிதவளமும் மண்ணின் மைந்தர்களும் (1) மனிதா திருடாதே (1) மனு நீதி மனித குலத்திற்கு நீதியா (1) மனுநீதி (1) மனோரா (1) மன்னித்தருள்வாய் இறைவா (1) மமக (1) மரண சிந்தனை (1) மரண தண்டனை (1) மரத்தடி (1) மரபணுக்கள் (1) மரபுகள் (1) மரமும் (1) மரம் வளர்ப்பது ஒரு அறம் (1) மருதாணி (1) மருத்துவ (1) மருத்துவ காப்பீடு (1) மருத்துவ முகாம் (1) மருத்துவக் கல்லூரி (1) மருத்துவமனை (1) மருத்துவர் ஜானகிராமன் (1) மருவண்டி (1) மர்பு கவிதை (1) மறக்க முடியவில்லை (1) மறக்க முடியா மனிதர் (1) மறக்க முடியாத மருத்துவர்கள் (1) மறுப்பு (1) மறுப்பும் (1) மறைந்த (1) மறைந்து வரும் மண்பாண்டப் பாத்திரங்கள் (1) மறைந்து வரும் வளர்ப்பு பிராணிகள் (1) மறைவான அழகே நிறைவானது (1) மலரும் நினைவு மொட்டுக்கள் (1) மலரும் நினைவுகள் (1) மலர்கள் (1) மலாலா (1) மலைமகன் (1) மலையேற்றம் (1) மல்லிபட்ணம் சாலமீது (1) மழலை (1) மழலைகள் (1) மழை இஸ்லாமியப் பெண்கள் (1) மழை வந்தாச்சு (1) மழைக்கு பயந்த மின்சாரம் (1) மவ்லாய (1) மவ்லீது (1) மவ்லூது (1) மவ்லூதுக்கு மகுடமா ? (1) மஸ்ஜிதுகள் (1) மஸ்ஜிதுல் ஹாரமில் (1) மஹ்பூப் அலி (1) மா (1) மாங்காய் (1) மாசு (1) மாடிவீடு (1) மாணவ (1) மாணவப் பருவம் (1) மாணவமணிகள் (1) மாணவராக வாழ்ந்த ஆசிரியர் (1) மாணவர்கள் போரட்டம் (1) மாணவி (1) மாண்பு (1) மாண்புமிகு மந்திருக்கு (1) மாத்தியோசி (1) மாநகர் (1) மாநிலங்கள் (1) மானம் ஒன்றே உயர் ஆயுதமாய் (1) மானிடா... மாடு வருகிறார் (1) மாப்பிள்ளை (1) மாப்பிள்ளைக் கடத்தல் (1) மாமன்னர் (1) மாமரன் (1) மாமழை (1) மாம்பழம் (1) மாயன் இன்னும் சாகவில்லை (1) மார்கெட் (1) மார்க்க அறிஞர்கள் (1) மார்க்க வரம்புக்கு உட்பட்டு (1) மார்க்க விரோதத்துக்கு துணை போகாதீர் (1) மார்க்க விரோதம் (1) மார்க்க(மான) விவாதம் (1) மாறுகண் (1) மாற்று திறனாளி (1) மாலைப் பொழுது (1) மாவு (1) மிக்க மேலானவன் (1) மிதிரிக்கட்டை நினைவிருக்கா? (1) மினா (1) மின் கம்பம் (1) மின் தடை (1) மின்அஞ்சல் குழுமம் (1) மின்சார வாரியம் (1) மின்னல் (1) மின்வாரியம் (1) மின்வெட்டு (1) மியாசி (1) மிருகங்களாகும் மனிதம் (1) மில்லினியர் (1) மிள்பதிவு (1) மீட்பு (1) மீரான் சாஹிப் (1) மீராஷாஹிப் UPSC (1) மீளுதல் (1) மு.செ.மு.சபீர் அஹமது (1) மு.செ.மு.முஹம்மது ஹனீஃபா (1) முஃஆத் (1) முஃப்தி அப்துல் கையூம் (1) முஅத்தின் (1) முஆத் (1) முகத்திரையும் (1) முகப்புத்தகம் (1) முகமது செயினுத்தீன் - திருவிதாங்கோடு (1) முகமூடிகள் (1) முகம்து அலி (1) முகம்மது புஹாரி (1) முகவரிகள் (1) முகாம் (1) முக்காடும் (1) முக்கிய சுட்டிகள் (1) முக்கோணங்கள் (1) முடி (1) முட்டையும் (1) முதற் குழந்தை (1) முதலாம் ஆண்டு (1) முதலீடுகள் (1) முதல் பட்டதாரி (1) முதல் பயணம் (1) முதல் பிறை (1) முதல் மதிப்பெண் (1) முதல் மிடறு (1) முதல் வகுப்பு (1) முதல்வர்கள் (1) முதியோர் (1) முதிர் கன்னி (1) முதிர் நிலா (1) முத்தலாக்கின் மூடுபொருள் (1) முத்து (1) முந்திய சுன்னத் (1) முந்துங்கள் (1) முனாகீனா (1) முனைவர் (1) முன் மாதிரி (1) முன்னேற்றப் பாதை (1) முன்னேற்றம் (1) முன்பதிவு (1) முன்மாதிரி வடிவங்கள் (1) முபாரக் (1) முயலாமை (1) முயலும் (1) முயல் (1) முராத் (1) முற்பகலும் (1) முற்பகல் (1) முல்லைப் பெரியார் (1) முல்லைப் பெரியாறு (1) முள் (1) முள்மகுடம் (1) முழக்கம் (1) முஸ்லி (1) முஸ்லிம்கள் பாகிஸ்தானையும் சவுதியையும் கொண்டாடுவது ஏன் (1) முஸ்லீம் பதிவர்கள் (1) முஸ்லீம் மக்கள் தொகை (1) முஸ்லீம் லீக் (1) முஹம்மது (1) முஹம்மது அபுபக்கர் (1) முஹம்மது அலியார் சார் (1) முஹம்மது ரஃபீக் (1) முஹல்லா (1) முஹல்லா சங்கங்கள் (1) மூன்றாமிடம் (1) மூன்றாம் ஆண்டு (1) மூன்றாம் உலகப்போர் (1) மூர்த்தி (1) மூலதனம் (1) மூவண்ணக் கொடி (1) மெடிக்கல் (1) மெட்ரிக் பள்ளிகள் (1) மெட்ரோ (1) மெய்யெழுத்துகள் (1) மெர்சினா (1) மெளன ஓலம்! (1) மெளலவி அப்துல் பாசித் புஹாரி (1) மெளலித் (1) மெஷின் (1) மேட்டூர் (1) மேலாளர் (1) மேலைநாடுகள் (1) மைக் டைசன் (1) மைக்ரோ (1) மைதா (1) மையல் (1) மையவாடி (1) மைல்கல் (1) மொழிப்பெயர்ப்பு (1) மொழியால் விழிபேசுகிறது (1) மோகம் (1) மோசடி (1) மோடியின் முதுகில் ஏறும் தோல்வி மூட்டைகள் (1) மோதினார் (1) மோமியாக்கா (1) யாசகம் (1) யாசீன் சுஃபியான் (1) யார் அங்கே ? எங்கே போனார்கள் (1) யார் திவிரவாதி (1) யார் வசம்.. (1) யுவான் ரிட்லி - துணிச்சலின் மறு பெயர் (1) யூசுபும் மொம்மாலியாக்காவும் (1) யூசுப் எஸ்டஸ் (1) யூசுப் ரியாஸ் (1) யூனுஸ் (1) யோகம் (1) யோசனை (1) யோசனைகள் (1) யோசி (1) யோசிக்கிறார் (1) ரஃபீக் சுலைமான் (1) ரகசியங்கள் (1) ரசாயன (1) ரஜினி (1) ரமளான் காணொளி (1) ரயிலடி (1) ரயில் (1) ரஷ்யா (1) ரஸூல் (1) ராக்கெட் (1) ராஜா வீட்டு விருந்தும் கறி (1) ராடார் (1) ராணி (1) ராஷித் அலி (1) ரிட்டர்ன் டிக்கெட் (1) ரியர் எஸ்டேட் (1) ரிஸல்ட் (1) ரிஸான நபீக் (1) ருசிக்க மான்பு (1) ரூபாய் (1) ரெடிமேட் (1) ரெட்டைக் கிளவி (1) ரேவடி (1) ரேஷன் கார்டு (1) ரொட்டி (1) ரோடு (1) ரோமாபுரியின் ரோஜா மலர் (1) ரோஷம் (1) லகும் தீனுக்கும் வலியதீன் (1) லகூன் (1) லக்கேஜும் நானும் (1) லஞ்சத்தை ஒழிக்க முடியாதா (1) லட்சம் (1) லண்டடன் (1) லண்டனில் கந்தூரி (1) லலுபிரசாத் (1) லாயிலாஹ (1) லேசர் (1) லைஃப் டைம் - Talk (1) லைசன்ஸ் (1) லைப்ரரி (1) வகிடும் (1) வக்ஃபு வாரியம் (1) வக்ப் வாரியம் (1) வசதி (1) வட இந்திய (1) வடியுது (1) வடிவும் (1) வட்டாட்சியர் முடிவு (1) வட்டார வழக்கு மொழி (1) வட்டியில்லா வங்கிச் சேவையை நோக்கி (1) வட்டிலப்பம் (1) வணங்குவோம் (1) வண்கொடுமை (1) வண்டூருது (1) வண்ணப்படம் (1) வண்ணம் (1) வதந்தியைப் பரப்பாதீர் (1) வன்மம் (1) வன்முறை (1) வன்மையாக கண்டிக்கிறோம் (1) வப்பா (1) வயசு (1) வயது (1) வயர்லெஸ் (1) வயலும் வாழ்வும் (1) வரம்பு (1) வரவுக்கும் செலவுக்கும் (1) வரிவரியாய் (1) வருகம் (1) வருமுன் (1) வருமுன் காப்போம் (1) வரும் முன் காப்போம் (1) வர்த்தக (1) வறட்டி (1) வலக்கரம் (1) வலி வழிச் செய்திகள் (1) வலைஞர்கள் (1) வலைத்தளங்கள் (1) வளம் (1) வளர்க (1) வளர்கிறாய் மகனே (1) வளர்ச்சிப்பாதையில் மோடி அரசு (1) வளைகுட (1) வளைகுடா பாதிப்பு (1) வளைகுடா வெயில் (1) வள்ளுவ (1) வழக்கம் (1) வழக்காடல் (1) வழக்கு (1) வழக்குக் கூண்டில் வறுமைக் கோடு (1) வழிகாட்டி (1) வழிகேடு (1) வழிமுறை (1) வஸ்வாஸ் (1) வா (1) வாகனங்கள் (1) வாகிங்க் (1) வாக்காளப் பெருமக்களே (1) வாக்கி (1) வாசனை (1) வாதம் (1) வாதி (1) வாப்பா பாட்டு (1) வாப்பிச்சா (1) வாயோதிக வலிகள் (1) வாய் (1) வாய் துர்நாற்றம் (1) வாரப் பத்திரிகை (1) வாழப் பழகுங்கள் (1) வாழவேண்டும் (1) வாழ்க சனநாயகம் (1) வாழ்கையின் வலக்கரம் (1) வாழ்க்கைத் தரம் (1) வாழ்க்கையின் பதிவேடுகள் (1) வாழ்ந்திடாதே (1) வாழ்வதற்கா? (1) வாழ்வு (1) வாழ்வு சிதைந்தது! வளம் குறைந்தது (1) வாஸ்கோடகாமா (1) விகடன் (1) விசா (1) விசாலம் (1) விசிட் (1) விடியலை நோக்கி (1) விடிவு (1) விடுமுறைக் காலம் (1) விடைபெறு (1) விண் கல் வீண் பயமா (1) விண்ணுலிருந்து மின்சாரம் (1) விண்வெளி (1) விதவை (1) விதி எண் 110 (1) விதி மீறல் (1) வித்தியாசமான வணிகர் (1) வித்தியாசமானவர்கள்.-பகுதி 3 (1) வித்யா (1) வினிகர் (1) வினோதினி (1) விபரீதம் (1) வியக்க வைக்கும் பயணக் கண்டுபிடிப்புக்கள் (1) வியாதி (1) வியாபாரம் (1) வியாபாரி (1) விரக்தி (1) விருட்சம் (1) விருது (1) விரைவு (1) விரோதம் (1) விலகல் (1) விலங்கினம் (1) விலாசம் (1) விலை (1) விளக்கு (1) விளைநிலங்கள் (1) விழலுக்கு வீணாகும் சிந்தனைகள் (1) விழா (1) விழி மொழி (1) விழிப்புணர்வு பக்கங்கள் (1) விழுஞாயிறு (1) விஷ வாயு (1) விஷுவல் (1) விஸ்வரூபம் (1) வீச்சு (1) வீடு கட்டுபவர்களின் கவனத்திற்கு (1) வீட்டுக்கு ஓர் ஆசான் (1) வீட்டுப் பாடம் (1) வீண் விரயம் செய்யாதீர்கள் (1) வீரர் (1) வீழ்வது (1) வெறியாட்டம் (1) வெற்றிலை (1) வெலக்காத் தெரு (1) வெல்லெஜொ (1) வெளியூர் (1) வெளியூர்காரர் (1) வெளியே (1) வெள்ளம் (1) வெள்ளிக்கிழமை (1) வெள்ளெழுத்து (1) வேங்கை (1) வேட்டு (1) வேட்பாளர்களின் நேர்காணல். நேர்காணல் (1) வேண்டாம் (1) வேண்டாம் கொண்டாட்டம் (1) வேண்டுதல் (1) வேண்டும் (1) வேதம் (1) வேற்றுமை (1) வேலை தேடுவோர்க்கு (1) வேலை வரைகலை (1) வேவு (1) வேவ்ரைடர் விமானம் (1) வேஷம் (1) வைத்தியன் (1) ஷஃபி (1) ஷபான பாஸிஜ் (1) ஷபே பராஅத் (1) ஷமீம் (1) ஷார்ஜா (1) ஷாஹிபா சபீர் அஹ்மது (1) ஷேக் (1) ஷேக் அப்துல் ரஹ்மான் சுதைஸி (1) ஷேக் உசேன் (1) ஷேக்கனா M.நிஜாம் (1) ஷைத்தான் (1) ஸலவாத் (1) ஸாத் பின் முஆத் (1) ஸூரத்துல் அஃலா (1) ஸூரத்துல் கியாமா (1) ஸூரத்துல் ளுஹா (1) ஸ்டாம்ப் (1) ஸ்டேஷனரி (1) ஸ்டேஷன் (1) ஸ்பீடு (1) ஸ்பெஷல் (1) ஸ்மார்ட் (1) ஹஜ் பெருநாள் (1) ஹஜ் 2012 (1) ஹஜ் கமிட்டி (1) ஹஜ்ஜின் மகத்துவம் (1) ஹஜ்ரத் மொஹானி (1) ஹத்தனா (1) ஹந்தூரி (1) ஹனீபா சார் (1) ஹலோ... ஹலோ... நலமா (1) ஹாபிட் (1) ஹாபிழ் (1) ஹாபிழ் பராஆ (1) ஹார்ட் (1) ஹாலித் (1) ஹிஜாப் (1) ஹிஜாப் S.அலாவுதீன் (1) ஹிஜாப் ஒரு கவசம் (1) ஹூமர் (1) ஹைக்கூ (1) ஹைடெக் காலம் (1)