![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOZiFEEOqHSClWRaRdsz2vfIOyCEusfrgqB0DUneqiuNdgiHNOrCZkmE51icWIwY1BMXD-96qVLECoazTiQuxZX9AmnaGqINX-PM8Wijo2BUNxZR4J-h0Blaq_uFQPgbMWHAdRau9tW0w/s200/AN-Editors-Choice.png)
இந்த வாரம் ஸூரத்துல் அஃலா (மிக்க மேலானவன்) என்ற அத்தியாயத்தின் வசனங்களை அழகிய உச்சரிப்புடன் ஓதுவதை காது கொடுத்து கேட்போம் இன்ஷா அல்லாஹ் !
ஸூரத்துல் அஃலா (மிக்க மேலானவன்)
வசனங்கள்: 19
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.
87:1. (நபியே!) மிக்க மேலானவனான உம்முடைய இறைவனின் திருநாமத்தை(த் தியானித்து) தஸ்பீஹு செய்வீராக.
87:2. அவனே (யாவற்றையும்) படைத்துச் செவ்வையாக்கினான்.
87:3. மேலும், அவனே (அவற்றுக்கு வேண்டிய அனைத்தையும்) அளவுபட நிர்ணயித்து (அவற்றைப் பெறுவதற்கு) நேர்வழி காட்டினான்.
87:4. அன்றியும் அவனே (கால் நடைகளுக்கென) மேய்ச்சலுக்குரியவற்றையும் வெளியாக்கினான்.
87:5. பின்னர் அவற்றை உலர்ந்த கூளங்களாக ஆக்கினான்.
87:6. (நபியே!) நாம் உமக்கு ஓதக்கற்றுக் கொடுப்போம்; அதனால் நீர் அதை மறக்கமாட்டீர்-
87:7. அல்லாஹ் நாடியதை அல்லாமல் - நிச்சயமாக, அவன் வெளிப்படையானதையும் மறைந்திருப்பதையும் அறிகிறான்.
87:8. அன்றியும், இலேசான (மார்க்கத்)தை நாம் உமக்கு எளிதாக்குவோம்.
87:9. ஆகவே, நல்லுபதேசம் பயனளிக்குமாயின், நீர் உபதேசம் செய்வீராக.
87:10. (அல்லாஹ்வுக்கு) அஞ்சுபவன் விரைவில் உபதேசத்தை ஏற்பான்.
87:11. ஆனால் துர்பாக்கியமுடையவனோ, அதை விட்டு விலகிக் கொள்வான்.
87:12. அவன் தான் பெரும் நெருப்பில் புகுவான்.
87:13. பின்னர், அதில் அவன் மரிக்கவும் மாட்டான்; வாழவும் மாட்டான்.
87:14. தூய்மையடைந்தவன், திட்டமாக வெற்றி பெறுகிறான்.
87:15. மேலும், அவன் தன் இறைவனுடைய நாமத்தைத் துதித்துக் கொண்டும், தொழுது கொண்டும் இருப்பான்.
87:16. எனினும், நீங்களோ (மறுமையை விட்டு விட்டு) இவ்வுலக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்.
87:17. ஆனால் மறுமை (வாழ்க்கை)யோ சிறந்ததாகும்; என்றும் நிலைத்திருப்பதும் ஆகும்.
87:18. நிச்சயமாக இது முந்திய ஆகமங்களிலும்-
87:19. இப்றாஹீம், மூஸாவினுடைய ஆகமங்களிலும் (இவ்வாறே அறிவிப்பு) இருக்கிறது.
அதிரைநிருபர் பதிப்பகம்
3 Responses So Far:
இந்த அழுகை நம் அகக்கண்ணை திறக்கட்டும்.
இதே போன்று கானொலிப்பதிவை தொடர்ந்து தாருங்கள்.
அபு ஆசிப்.
தொழுகையில் அன்றாடம் நாம் ஒதக்கூடிய / ஓதுவதைக் கேட்கக்கூடிய இறைவசனங்களின் மொழியாக்கமும் நம் செவிகளை மட்டுமல்ல இதயங்களையும் பதப்படுத்தும் !
மிக்க மேலானவனான அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குத் தகுதியானவன்.
யா அல்லாஹ் உன் வேதத்தை உணர்ந்து அறிந்து அதன்படி செயல்பட நல்லருள் புரிவாயாக!
Post a Comment