Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தகவல் அறியும் உரிமைச் சட்டம் - பயன் பெறுவது எப்படி? 5

அதிரைநிருபர் பதிப்பகம் | September 12, 2015 | ,

இச்சட்டத்தின் படி, ஒருவர் தகவலை பெற அவர் இந்தியராக இருத்தல் மட்டும் போதுமானது (எங்கிருக்கின்றார் என்பது அவசியமில்லை). மொபைல் நம்பர் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அதே நேரம் தகவல் கேட்பவரின் முகவரியும், மின்னஞ்சல் முகவரியும் அவசியம். 

ஆன்லைன் மூலமாக தகவலை கேட்கலாம். 

1. முதலில் இங்கு செல்லுங்கள்: https://rtionline.gov.in/index.php

2. இதில் "Submit Request" என்பதை சுட்டுங்கள். 

3. வரும் பக்கத்தில் புள்ளிகளை படியுங்கள். அப்பக்கத்திற்கு அடியில் "I have read and understood the above guidelines" என்பதை டிக் செய்து "submit" என்பதை அழுத்துங்கள். 

4. நீங்கள் கேட்க வேண்டிய தகவல் குறித்த படிமம் தோன்றும். IIT குறித்து நீங்கள் கேட்க விரும்பினால், Select Ministry/Department/Apex body என்று கேட்கும் இடத்தில் "Department of Higher Education" என்பதையும், Select Public Authority என்று கேட்கும் இடத்தில், மீண்டும் "Department of Higher Education" என்பதையும் சுட்டுங்கள். 

5. உங்கள் இந்திய முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரியை கொடுங்கள். நீங்கள் வறுமை கோட்டிற்கு கீழுள்ளவரா என்று கேட்கப்படும் இடத்தில் "இல்லை" என்பதை கொடுங்கள். பின்னர் நீங்கள் கேட்க விரும்பும் கேள்வியை "Text for RTI Request application" என்று இருக்கும் இடத்தில் கேளுங்கள். உங்கள் கேள்வி 3000 வார்த்தைகளுக்கு மேலே இருந்தால், கணிப்பொறியில் டைப் செய்து அங்கேயே கொடுக்கப்பட்டு ஆப்ஷனை கொண்டு பதிவேற்றுங்கள். 

6. அவ்வளவு தான். "Make payment" என்பதை சுட்டி ரூபாய் 10-ஐ debit அல்லது credit கார்ட்  மூலமாக செலுத்துங்கள். 

7. முடிந்தது. உங்கள் கேள்விக்காக கொடுக்கப்படும் தனித்துவமான தகவல்களை சேமித்துக்கொள்ளுங்கள். 

8. ஒரு மாதத்திற்குள் பதில் அளிக்கப்பட  வேண்டும். பதில் வராவிட்டால் மீண்டும் "https://rtionline.gov.in/index.php" சென்று Submit First Appeal என்பதை சுட்டி தொடர வேண்டும். 

நான் கூறியுள்ள இவற்றில் ஏதேனும் புரியாவிட்டாலோ அல்லது மேற்கொண்டு எதையும் அறிந்துக் கொள்ள விரும்பினாலோ ஸ்க்ரீன் ஷாட்கள் கொண்ட பின்வரும் pdf உங்களுக்கு பயனளிக்கலாம். 


ஆன்லைன் மூலமாக அல்லாமல் எழுத்து மூலமாகவும் தகவலை கேட்கலாம், அதற்கு சிற்சில மாற்றங்களுடன் நடைமுறை உள்ளது. எல்லாமே அந்த பத்து ரூபாயை எப்படி செலுத்த வேண்டும் என்பதில் தான் :-). 

ஆஷிக் அஹ்மத் அ

5 Responses So Far:

Iqbal M. Salih said...

Really appreciate your efforts in collecting and providing such important legal information.

thanks bro.

அதிரை.மெய்சா said...

பயனுள்ள தகவல். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

sheikdawoodmohamedfarook said...

நல்லதகவல்!கணினிவசதிஇல்லாதவர்கள்எப்படிதகவல்அறிவது?தகவல் அறிவோரின் பெயர்முகவரிரஹசியமாக காக்கப்படுமா?

sabeer.abushahruk said...


பயனுள்ள தகவல். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

Shameed said...

பயனுள்ள தகவல். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
ஊரில் ஒரு சிலர் இந்த தகவல் அறியும் முறையோ தெரியாமல் பிழைப்பை ஓட்டுகின்றனர் அவர் பின்னால் ஒரு சிறு கூட்டமும் ஆமாம்போட்டு திரிகின்றனர் பாவம்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு