Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பகிரங்க மன்னிப்பும் தன்னிலை விளக்கமும்!

அதிரைநிருபர் பதிப்பகம் | October 27, 2013 | , ,

அன்புச் சகோதரர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் தேதியில் (1-9-2012) அதிரை நிருபர் தளத்தில் “மார்க்க பிரச்சாரகருக்கு – சம்சுல் இஸ்லாம் சங்கம் அவசரத் தடை ஏன்?” என்றொரு பதிவு வெளியாகி இருந்தது. அதில் பலர் சங்கத்தின் நடவடிக்கையைக் கண்டித்தும் சிலர் சங்கத்தின் நடவடிக்கையை ஆதரித்தும் பின்னூட்டம் இட்டிருந்தனர். என் கருத்தாகப் பின்வருமாறு பின்னூட்டியிருந்தேன்.

அபூ சுஹைமா சொன்னது… 

என்னைப் பொறுத்தவரை தவறான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு.

குச்சிப் பள்ளி விவகாரம் வெளிவந்த பின் இந்த முடிவு எடுக்கப்பட்டதால், ஒரு குடும்பத்துக்கு ஆதரவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகச் சிலர் கருதுகின்றனர்.

ஆயிஷா மகளிர் மன்ற உரிமையாளருக்கும் ஹைதர் அலி ஆலிம் அவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடால், அவர் சங்கத்தின் சில நிர்வாகிகளைத் தூண்டி தன் காரியத்தைச் சாதித்துக் கொண்டார் என அரசியல் கட்சிப் பிரமுகர்கள் கருதுகின்றனர்.

இது தவிர மேலும் சில காரணங்கள் ஓராண்டுக்கு முன்னரே எனக்குத் தெரியும் என்பதால், இந்த முடிவு சரியானது. ஆனால் முடிவு எடுக்கப்பட்ட நேரம் மற்றும் அனைத்து நிர்வாகிகளையும் கலந்து ஆலோசிக்காதது தவறு.

ஹைதர் அலி ஆலிம் அவர்களின் பயானை தடை செய்வதால், அதிரையில் ஏகத்துவப் பிரச்சாரமே தடை செய்யப்படும் என்று நினைப்பதும் தவறு.

இப்போதெல்லாம் அரசியல்வாதிகள் மட்டுமே அரசியல் செய்வதில்லை.

அப்துல் கரீம்
S/o. முஹம்மது அலிய் ஆலிம் 

Reply திங்கள், செப்டம்பர் 03, 2012 7:07:00 AM 

சங்கத்தை மதிக்கவில்லை என்ற காரணம் சரியானாலும் நடவடிக்கை எடுக்கப்பட்ட நேரம் தவறு என சங்கத்தைக் கண்டித்ம் உள்ளேன். ஆனாலும் நான் சங்கத்தின் நிர்வாகிகளுக்கு அடிமைச் சேவகம் செய்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டேன்.

பின்னர், சங்கத்தின் நிர்வாகிகளை அவமரியாதை செய்யும் எண்ணம் தமக்குத் துளியும் இல்லை என அல்லாஹ்வை சாட்சியாக்கி ஹைதர் அலி ஆலிம் சொன்ன பின், இதுதொடர்பாகக் கருத்து எதையும் நான் தெரிவிக்கவில்லை. 

கைர்.

அண்மையில் ஊர் சென்று திரும்பும் நாளன்று மாலையில் ஹைதர் அலிய் ஆலிமை அவர்களது வீட்டில் என் நண்பருடன் சென்று சந்திக்க நேரிட்டது. அப்போது, “உங்களுடைய எழுத்துகள் என்னை மிகவும் காயப்படுத்தியது” என்று கூறினார்கள். சிலபல விளக்கங்கள் / கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின், “நான் எழுதியது உங்களைக் காயப்படுத்தியிருந்தால் அல்லாஹ்வுக்காக மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று கூறி விடை பெற்றுவிட்டேன்.

பின்னர், என் நண்பரைத் தொடர்பு கொண்டு, “அபுசுஹைமாவுடைய கருத்து எரியும் நெருப்பில் எண்ணெய் விட்டது போல் இருந்தது. நான் மிகுந்த மனக்குமுறலுக்கு ஆளானேன். அந்தக் கருத்து உலகம் முழுவதும் உள்ளவர்களால் வாசிக்கப்பட்டது போல் மன்னிப்பும் இடம்பெற வேண்டும்” என்று விரும்புவதாக என் நண்பன் சொன்னார்.

ஹைதர் அலிய் ஆலிமைக் கேவலப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் துளியும் எனக்கு இருக்கவில்லை. அந்தச் சமயத்தில் நான் கேள்விப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எனது கருத்தை முன் வைத்தேன். என் கருத்தால் அவருடைய உள்ளம் காயப்பட்டிருப்பதாகக் கூறியதாலும் என் நண்பனிடமும் தொலைபேசிக் கூறியதாலும் ஹைதர் அலிய் ஆலிம் அவர்களிடம் பகிரங்கமாக எனது மன்னிப்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அல்லாஹ் மன்னிப்பவன்; மன்னிப்புக் கோருபவர்களை விரும்புபவன்.

அப்துல் கரீம்
S/o. முஹம்மது அலிய் ஆலிம்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு